Sunday, March 22, 2015

சில சிறுகதைகளின் பின்புலம்


                      சில சிறு கதைகளின் பின்புலம்
                     ------------------------------------------------


நான் பல சிறுகதைகள் எழுதி இருக்கிறேன் அப்படி எழுதிய
சிறு கதைகளில் சில வடிவமைந்த விதமும்  சில பின்னூட்டங்களும்.
நான் வாழ்வின் விளிம்பில் என்னும் சிறு கதைத் தொகுப்பை வெளியிட்டது பலரும் அறிந்திருக்கலாம்.பலரும் விமரிசனம் செய்திருக்கிறார்கள். நான் அதில் வரும் கதைகளின் பின்புலத்தை சற்றே அசை போட்டுப் பார்க்கிறேன்
கதைகள் பற்றி ஊமை விழிகள் அவரது பதிவில் கூறி இருக்கும் கருத்துக்கள்
 படைப்பாக்கம் குறித்துப்பேசும் நம் இலக்கணங்கள் நான்கு வழி முறைகளைச் சொல்கின்றன.
உள்ளதை வைத்து உள்ளதைச் சொல்வது, ( நடந்த சம்பவம் )
உள்ளதை வைத்து இல்லாததைச் சொல்வது, ( நடந்த கதை )
இல்லாததை வைத்து உள்ளதைச் சொல்வது, ( புராண வரலாறு ? )
இல்லாததை வைத்து இல்லாததைச் சொல்வது. ( கட்டுக்கதை )
                                                ( தொல்.பொருள். 53. நச்.)
வாழ்வின் விளிம்பில் என்ற என் சிறுகதைத் தொகுப்பில் என்னுரையாக நான் எழுதி இருந்ததுஎண்ணங்கள் கற்பனையோடு கலக்கும்போது கதைகள் உருவாகின்றனஎண்ணங்கள் பல நேரங்களில் அசல் வாழ்வின் பிரதி பலிப்புகளே.கதைக்குக் கரு ஒன்று கிடைத்து அதைச்சொல்ல கதா பாத்திரங்கள் உருவாகலாம்நேரில் கண்டும் பரிச்சயப் பட்டும் உலாவும் கதாமாந்தர்களைச் சுற்றி கதை பின்னலாம் இந்த இருவகையிலும் புனையப் பட்ட சிறு கதைகளே இத்தொகுப்பு. எனக்குப் பிடித்த வார்த்தைகள் உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளால் உரு கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும். இதையொட்டியே என் சிறு கதைகளும் இருக்கின்றன என்று நம்புகிறேன்

குழந்தை இல்லாதவர்கள் பற்றிய மையக் கரு ஒன்று என்னைக் கதை பின்னு என்று கேட்டுக் கொண்டிருந்தது. அதையொட்டி இரு க்தைகள் எழுதி இருந்தேன். ஒன்றில் மக்கள் திசைமாறி கடவுள் சக்தி உள்ளவர்கள்பின்னால் போவது குறித்த எண்ணங்களைக் கதையாக்கினேன்.அப்படி கதையாகச்சொல்லும்போது என் மனதுக்குப் பட்ட கருத்துக்களையும் சேர்த்தேன். கதை ஓரளவு நல்ல பின்னூட்டங்களைப் பெற்றுத் தந்தது. ஆனால் அவை நிச்சயமாக டெம்ப்லேட் பின்னூட்டங்கள் அல்ல. சில சம்பவங்களின் பின்னணிகளால்  முடிவை யூகத்துக்கு விடுவதே பலன் தரும் போலிருந்தது என் கணிப்பு தவறவில்லை என்றே நம்புகிறேன்
இதே கரு கொண்ட இன்னொரு கதை பற்றி அடுத்தபதிவில் இந்தக் கதையை வாசிக்க இங்கே சொடுக்கவும் இக்கதையைப் படித்து முடித்தபின் பின்னூட்டங்களைப் பார்க்க வேண்டுகிறேன்
சில பின்னூட்டங்கள்
-------------------------------
கதை முடியும் இடத்தில்தான் தொடங்கியிருக்கிறது. பாபுவின் மனதில் ஓடும் கேள்விகள் வெளிப்படையானவை அவற்றை நாம் எல்லோருமே அறிந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. தவிரவும் கதை தொய்வில்லாமல் போகிறது. தேர்ந்த தன்மையை உணர முடிகிறது. இருபதாண்டுகளுக்கு முன்பு இதே தன்மையில் வேறு கதைப்பொருண்மையில் எழுதிய என்னுடைய கதையை நினைவுபடுத்திக்கொள்கிறேன். சில நெருடல்களான தருணங்களையும் இக்கதை என்னுடைய மனதில் பதிவு செய்கிறது. உணர்வுகள்தான் இருதரப்பிலும் நின்றுலகிறது காலங்கள்தோறும் பல கேட்கமுடியாத கேள்விகளையும் பெறமுடியாத பதில்களையும் மனதில் நிறுத்தி
உணர்வுக்கும் அறிவுக்குமிடையே போராட்டம் நிகழும்போது உணர்வுதான் கவனிக்கப்படுகிறது.வெல்லவும் செய்கிறது.

நீங்களே சொன்னதுபோல கதையோ கவிதையோ வாசகனின் மனதில் சிறிய வெற்றிடத்தை உண்டுபண்ணினால் அதை கதாசிரியனின் வெற்றி அல்லது அந்தக் கதையின் வெற்றியெனச் சொல்லலாம்.

தவிர கதைகள் எப்போதும் முடிவதில்லை எனும் ஜாதி நான்
.சில நேரங்களில் சில கேள்விகளுக்கான பதில்கள் அது பற்றி நாம் உருவாக்கிக் கொள்ளும் ஊகங்களாக இருக்கவே விரும்புகிறோம். நம் ஊகத்திற்கேற்ப பதில் கிடைக்காத பட்சத்தில் கிடைத்த பதிலை உண்மையென்று நம்பப் போவதும் இல்லை. இந்த மாதிரி சமயங்களில் அதுபற்றிக் கேட்கப்படும் கேள்விகளும் ஒப்புக்குத்தான் என்று ஆகிப்போகிறது. ஊகங்கள் அந்த அளவுக்கு உண்மை போலவே மனத்தை பலமாக ஆக்கிரமித்துக் கொண்டு உண்மை என்றே நம்மை நம்பச் செய்து விடுகிறது.. சில நேரங்களில் உண்மையாகவே ஊகங்கள் இருப்பினும் அதை மனம் நம்ப மறுக்கும். அது பொய்யாக இருக்கக் கூடாதா என்று ஏற்றுக் கொள்ள மறுக்கும்
கேள்விகளுக்கு பதில் காண விழைந்த பாபுவுக்கு மேலும்
கேள்விகளே பதிலாக அவன் மனதில் ஓடியது.



.
வித்தியாசமாக கதையை முடித்து விட்டீர்கள். இதுவும் நல்லா இருக்குது.
கதை நல்ல விறுவிறுப்பாகச் சென்றது. கடைசியில் என்ன ஆகுமோ என்ற ஆவலையும் தூண்டியது.

கேள்விகளுக்கு பதில் காண விழைந்த பாபுவுக்கு மேலும் கேள்விகளே பதிலாக அவன் மனதில் ஓடியது.//

ஆனால் கடைசியில், பாபு போலவே நாங்களும் !
பாராட்டுக்கள்
சுந்தர்ஜி சொல்வதுபோல் கதைகள் முடிவதில்லை. நீங்கள் முடித்து விட்டீர்கள். ஆனாலும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது கதை எங்கள் மனதிலும், கண்ணனின் அக்கம்பக்கத்து இல்லங்களிலும் .

கதை வெகு அருமை சார்

there have been many things, happening to people all around you- that leaves you with lots of questions. the theme here- is one such. it fits exactly into that description that you've mentioned in your story. 'rationalizing'- as you say, sure does leave people with notions of being an 'atheist'. there are many places where the tale you've woven here, strikes a chord... the clash between the brain and heart... questions being answers (yes, the very title...). Took me for a while, back to my own experience in writing out something called 'Spatika Lingam', long time back-- in last june... my first attempt at writing a tamil story...
As we still stand, heads held high, questioning beliefs- when asked- 'why question'? we proudly answer- 'we seek answers- the truth'-- but alas! truth is, but-- questions!

Brilliant!
கேள்விகளை எழுப்பிகொண்டே
ஒரு தீர்க்கமான விடை தராத
வாழ்க்கை தரும் ஒரு துன்பமான
இன்பத்தைப்போலவே
விடைதராது மீண்டும் கேள்விகளை
வாசகனிடத்தில் விதைத்துப்போகும்
படைப்பே மிகச் சிறந்த படைப்பு என்பதில்
இரண்டுவித கருத்துக்கள் இல்லை
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
PS: I was kind of away from blogging... Due to work and other such unimportant things that usually build up my already lazy schedule... But it was my dad., who had read this post of yours and recommended to me that I read it right away-- saying it was a 'must-read' for me and that I'd really like it! :) His taste never falters. So, a special thanks to him too...!

 


24 comments:

  1. வைகோ ஸார் பின்னூட்டங்கள் பற்றிய அலசலைத் தொடங்கியிருப்பது போல நீங்களும் 'திரும்பிப் பார்த்தி'ருக்கிறீர்கள் போலும்.

    சுட்டியைச் சுட்டி அங்கு சென்று பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  2. வைகோ ஸார் பின்னூட்டங்கள் பற்றிய அலசலைத் தொடங்கியிருப்பது போல நீங்களும் 'திரும்பிப் பார்த்தி'ருக்கிறீர்கள் போலும்.

    சுட்டியைச் சுட்டி அங்கு சென்று பார்க்க வேண்டும்.

    ReplyDelete

  3. @ ஸ்ரீ ராம்
    அவர் வேறு நான் வேறு. நான் கதை எழுதியதின் பின் புலத்தைப் பார்க்கிறேன் அவர் பூச்செண்டுகளைப் பார்க்கிறார். ஒப்பிடல் வேண்டாமே.

    ReplyDelete
  4. ரசித்தேன். கனமான கருத்துகள். மேலோட்டமாகப் படிக்க முடியவில்லை. ஆழமாகப் படிக்கத் தேவையான மன நிலை வரவேண்டும்.

    ReplyDelete

  5. ரசித்தேன் ஐயா சுட்டிக்கு செல்கிறேன்.

    ReplyDelete
  6. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    ReplyDelete
  7. சார் வணக்கம்.
    என்னைப் போன்று புதிதாய் வலைத்தளத்தில் வந்திருப்பவர்களுக்கு இது போன்ற தேர்வுகளால் அமையும் பின்னோக்கிய பயணம் பெருந்துணை புரியும். தொடரட்டும்.

    தாங்கள் பகிர்ந்து என் பதிவில் ( ஊமைக்கனவுகள் என்றிருக்க வேண்டுமோ ) நான் குறிப்பி்ட்ட நான்கில்,

    இல்லாததை வைத்துச் செய்யப்படும் படைப்புகளை உரையாசிரியர்கள் நிராகரிக்கிறார்கள்.

    அவர்கள் சொல்வது,

    “ஆகாயத்தில் பூத்த மலரின் மணம் எவ்வளவு அருமையாக இருக்கிறது“

    என்று ஒருவன் சொன்னால் அதை வாசிப்பவனுக்கு அப்படி ஒரு அனுபவமே இல்லாமல் இருக்கும் போது அதை எப்படி அவனால் ரசிக்கமுடியும்?

    எனவே முற்றிலும் இல்லாதவற்றைக் கொண்டு படைக்கப்படும் படைப்பு மதிப்பிழக்கும் என்பது ஒன்று.

    இன்னொன்று இருப்பதை அப்படியே காட்டவும் முடியாது.

    எனது தனிப்பட்ட விடயங்களைச் சொல்ல அல்லது பொதுவில் பகிர நீ யார் என்கிற பிரச்சினை வந்துவிடும்.

    எனவே படைப்பாளி சமுதாயத்தில் இருந்து எடுக்கப்படும் பிரதிக்கு தன் மனதிற்கு உகந்த நிறத்தைத் தீட்டுகிறான்.

    அவன் கைவாகிற்குத் தக்க பாத்திரங்கள் உருக்கொள்கின்றன.

    தான் கண்ட நிகழ்வின் முடிவு எதுவாக இருந்தபோதும், தன் மனதிற்குகந்த, தன் அனுமானத்திற்கேற்ப, தீர்ப்பொன்றை எழுதும் உரிமை அவனுக்கிருக்கிறது.

    உண்மையில் கதைக்கு மட்டுமல்ல.. இங்கு எழுதப்படுகின்ற இந்த எழுத்துருக்கள் கூட வெறும் சொற்கூட்டைக் கடந்தொரு அனுபவத்தை வாசகர்க்குத் தருமெனில் அதுவே படைப்பின் வெற்றி என்றாகிறது.

    உங்களின் கதையைப் படித்து அங்குப் பின்னூட்டம் இட்டுவிட்டேன்.

    ஊர் கொண்டு சேர்க்காமல் பயணத்தின் ஒரு கட்டத்தில் பலவழிகளை விரித்து வைத்து வாசகன் விரும்பிய வழியைத் தேர்ந்தெடுக்கச் செய்திருப்பது சிறப்பு.
    அனுபவம் இல்லாது எங்குச் செல்வது என மலைத்து அங்கேயே நிற்பவர்களையும் நீங்கள் எதிர் கொண்டாக வேண்டும். அவர்கள் அங்கேயே நிற்கட்டும்.

    நன்றி!

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா

    எங்களின் ஆளுமையை வளர்க்க ஒரு வழி... அருமையாக சொல்லியுள்ளீர்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. பின்னூட்டங்கள் அடுத்த பதிவுக்கு உதவுதவும் உண்டு... படிகளாகவும்...

    எப்போதும் முடிவுகளை யூகத்துக்கு விட்டாலும் ஆபத்து... அந்த யூகங்களே என்னை அடுத்த பதிவை எழுதவும் வைக்கின்றன...

    ReplyDelete
  10. எதுக்கு இந்தப் பதிவுனு புரியலை. மற்றபடி பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. குழந்தை இல்லாத தம்பதிகளின் மனநிலையை ,பெருமாள் முருகனுக்கு முன்பே நீங்கள் சிந்தித்து எழுதி இருக்கிறதை ,சுட்டிக்கு பின்னால் சென்று படித்து மகிழ்கிறேன் :)

    ReplyDelete
  12. தங்களுடைய சிறுகதை - கேள்விகளே பதிலாய்..

    கேள்விகளே பதிலாய்.. - தங்களுடைய சிறுகதை!..

    நிறைய விஷயங்களைத் தருகின்றது..

    ReplyDelete

  13. @ டாக்டர் கந்தசாமி
    என் பதிவிலேயே கதையைப் படித்து விட்டு பின்னூட்டங்களைப் பார்க்க கோரி எழுதியிருந்தெனேகதை சற்று கனமாகைருப்பதால் பின்னூட்டங்களும் அம்மாதிரியே என்று நினைக்கிறேன் வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  14. @ கில்லர் ஜி
    சுட்டியில் உள்ள கதை நீங்கள் ஏற்கனவே என் சிறுகதைத் தொகுப்பில் வாசித்திருப்பீர்கள். வருகைக்கு நன்றி ஜீஒவ்வொரு கதைக்கும் ஒரு பின் புலமுண்டு ஜி. அவையே என்னை எழுதத் தூண்டுவது.

    ReplyDelete

  15. @ யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
    இலக்கியம் இலக்கணம் ஏதும் தெரியாதையா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  16. @ ஊமைக்கனவுகள்
    உங்கள் பதிவில் கூறி இருந்த நான்கு முறைகளைச் சுட்டிவிட்டு, என் முறையையும் எழுதி இருந்தேன் ஒரு கரு கிடைத்து அதற்காக சம்பவங்கள் கதா மாந்தர்கள் என எழுதுவது ஒரு முறை. விஷயங்களைச் சொல்லும் போது நானும் என் எண்ணங்களும் அதில் வருவது தவிர்க்க முடியாதது
    /ஊர் கொண்டு சேர்க்காமல் பயணத்தின் ஒரு கட்டத்தில் பலவழிகளை விரித்து வைத்து வாசகன் விரும்பிய வழியைத் தேர்ந்தெடுக்கச் செய்திருப்பது சிறப்பு.
    அனுபவம் இல்லாது எங்குச் செல்வது என மலைத்து அங்கேயே நிற்பவர்களையும் நீங்கள் எதிர் கொண்டாக வேண்டும். அவர்கள் அங்கேயே நிற்கட்டும்/அப்படியும் எதிர் கொண்டேனே. பின்னூட்டங்கள் எல்லாம் வசித்தால் எப்படி என்று தெரியும் கதையில் உங்கள் பின்னூட்டம் கண்டேன். சில கதா மாந்தர்கள் என்னைப் போல் சிந்திப்பதுவும் செயல் படுவதும் சரியே. வருகைக்கு நன்றி. பதிவை உள்வாங்கிக் கொண்டு பின்னூட்டம் இடும் உங்கள் பாங்கினை ரசிக்கிறேன்
    .

    ReplyDelete

  17. @ ரூபன்
    ஐயா வருக. என் கதை எந்த ஒரு கட்டமைப்புக்குள்ளும் வருவதில்லை எனும் குற்றச் சாட்டுக்கு ஆளாகி இருக்கிறேன். என் பதிவுகள் ஆளுமையை வளர்க்கும் என்பது கேட்க நன்றாக இருக்கிறது. நன்றி.

    ReplyDelete

  18. @ திண்டுக்கல் தனபாலன்
    உங்கள் மேலான கருத்துப் பகிர்வுக்கு நன்றி. எல்லாக் கதைகளையும் யூகத்துக்கு விட முடியாது. விடுவதும் இல்லை.

    ReplyDelete

  19. @ கீதா சாம்பசிவம்
    /எதுக்கு இந்த பதிவுனு புரியல/ மில்லியன் டாலர் கேள்வி. இதுவே நான் ஏன் எழுதுகிறேன் எனக் கேட்பது போல் இருக்கிறது. தெரியலியே அம்மா.வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  20. @ பகவான் ஜி
    பெருமாள் முருகன் பருந்து. நான் ஊர்க்குருவி. ஆனால் நான் அவரைப் பார்த்து பறக்க முயலவில்லை.நான் பெரும்பாலோர் நாடும் அருள் வாக்கு சில நேரங்களில் எப்படி பாதையை மாற்றி விடும் என்பதை கோடி காட்டி விட்டு விட்டேன் அவர் ஒரு சமூகத்தின் நிவர்த்தி தோஷத்தைக் கூறி இருக்கிறார். கட்டமைப்பே வேறு வேறு. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  21. @ துரை செல்வராஜு
    வருகை தந்து ரசித்ததற்கு நன்றி ஐயா

    ReplyDelete
  22. சார் முதலில் உங்கள் இந்தப் பதிவை முழுவதும் வாசிக்கும் முன் "இங்கே" சுட்டிக்குச் சென்று கதையை வாசித்து பின்னூட்டம் இட்டுவிட்டு இங்கு வந்ந்தோம். இன்னும் அதற்கான பின்னூட்டங்கள் வாசிக்கவில்லை. இங்கே வந்தால் நீங்களே பின்னூட்டங்கள் சிலவற்றைக் கொடுத்துள்ளீர்கள்.

    கேள்விகளே பதிலாய் தலைப்பு இப்போது அந்தப் பதில்களே கேள்விகளாய்த் தொக்கி நிற்கின்றனவே! அதற்குத் தாங்கள் தொடரலாமே பதில்களுடன்.....ஏன் சிறுகதைகள் தொடர்ந்து தொடராய்/குறுந்தொடராய் மாறக் கூடாதா?

    ReplyDelete

  23. @ துளசிதரன்
    பதிவைப் படித்துக் கதையைப் படித்துவிட்டு பின்னூட்டம் போகலாம் என்று எழுதி இருந்தேன் ஒரு சிலரே கதையை சுட்டி வழியே சென்று படித்திருப்பார்கள் என்று தோன்றுகிறதுஇந்தக் கதையை எவராவது தொடர நினைத்தால் எனக்கு ஆட்சேபணை இல்லை. என் சிறுகதைத் தொகுப்பில் பல கதைகள் ஆய்வு செய்யும்படி இருக்கும் இதைப் போல் அல்லாமல் வேறு விதமாக, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  24. தங்களுடைய எழுத்துக்கள் எங்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தைத் தருகின்றன. நன்றி.

    ReplyDelete