Wednesday, April 29, 2015

தேவன் மஹாதேவன்


                                       தேவன் மஹாதேவன்
                                       ------------------------------------


VINGHIP   POTTIYA  HIRUTHAYAMUMAI   ஆங்கில  எழுத்துக்களில் எழுதப்பட்ட மலையாள  கடிதத்தின்  ஆரம்பம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது.
பழைய கடிதங்களைப் பாதுகாத்து அதைப் படித்து அந்தக் கடிதங்களின் பின்னணிகளை நினைத்து , அந்தப் பழைய வாழ்க்கையில் சில மணி நேரம் வாழ்வது வாசுவின் பொழுது  போக்கு .இந்தக் கடிதத்தை எழுதிய  தேவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது  வாசுவுக்கு.  தேவனும் வாசுவும் பழகிய நாட்கள்  என்னவோ கொஞ்சம்தான்.இரண்டு  மாதத்துக்கும் சற்று ஏறத்தாழத்தான் இருக்கும். இருந்தாலும் அந்த நாட்கள் .....ஐம்பது வருடங்களுக்குப் பிறகு இரண்டு மாத நட்பை ஞாபகப்படுத்திப் பார்க்க முடியுமா.. ?ஏன்  முடியாமல் ..? பழைய கடிதங்களைப   பாதுகாத்து  வைத்திருக்கிறானே ... ஆனால் தேவனோ  ...?
பெங்களூரில்  வேலைக்குச் சேர்ந்த  அந்தக் காலத்தில் தங்க நேர்ந்த அந்த லாட்ஜில் "த்ரீ மஸ்கிடீர்ஸ் "என்று தங்களைத் தாங்களே கூறிக்கொண்டனர்  வாசுவும் தேவனும் சந்துருவும் , இதில் சந்துரு எல்லோரையும் விட மூத்தவன். ஏதோ ஒரு கம்பனியில்  குமாஸ்தாவாக  இருந்தான். தேவன் வேலை தேடி  கேரளத்திலிருந்து  வந்தவன். வாசு  அப்போதுதான்  ஒரு தொழிலகத்தில்  பயிற்சியாளனாகச சேர்ந்திருந்தான் . மற்றவரை விட  இளையவன்.
"
இப்போது தேவன் என்ன செய்து கொண்டிருப்பான்..? எப்படி இருப்பான்..பார்க்க வேண்டும்   போல் தோன்றுகிறதே..! " எண்ணியதை  சொல்லில் கூறி செயலில் காட்டாவிட்டால்  வாசுவுக்கு  தலை  வெடித்துவிடும்போல்  தோன்றியது.
"
இந்த பழைய குப்பைகளையெல்லாம்  மாய்ந்து  மாய்ந்து படிப்பதில் அப்படி என்ன சுகமோ "--வாசுவின் மனைவி  தங்கம் அவன் நினைவுகளைக் கலைத்தாள்
"இந்தக் கடிதத்தைப்  படித்துப்  பாரேன் தங்கம் .முடிகிறதா  புரிகிறதா  சொல். "

"
உங்களுக்குத்தான்  வேறு வேலை இல்லை என்றால் .. சரி  சரி ..காட்டுங்கள்   VINGHIP   POTTIYA  ...ஐயே .என்ன இது..?இங்கிலீஷில்  இங்கிலீஷுமல்லாமல்  எனக்கு முடியலைப்பா "
"
இங்கே  கொண்டா .நான் படித்துக்காட்டுகிரேன்.  விங்கிப  பொட்டிய ஹிருதயமுமாய்  நிங்களை  விட்டுப் போரேண்டி  வன்னதில் எனிக்கி  கூடுதல்  விஷமிச்சு. ..தேவனுக்குத  தமிழ்  தெரியாது.எனிக்கி மலையாளம்  கொறச்சு  அறியும். அதனால்தான் இந்த முறை.
தேவனைப்  பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது தங்கம். அவன் இந்த விலாசத்தில் இருப்பானா.. ? போய்ப்  பார்க்கலாம்... நீயும் வாயேன் ".

"
அவ்வளவு  தூரம்  பணம்  செலவு  செய்து  போய  அவர்  அங்கே  இல்லாவிட்டால்  எல்லாம்  விரயமாகும்."

"
ஏன்  விரயமாக  வேண்டும் .? நமக்கும் பொழுது  சற்று  மாறுதலாகப்  போகும். ஏற்பாடு  செய்கிறேன். ரெடியாக  இரு. "

பெருங்கோட்டுகா ... வழி திருச்சூர்  என்று  விலாசமிருக்கிறது. எப்படியும் திருச்சூர்  போய  அங்கிருந்து  விசாரித்துப்  போய்க்  கொள்ளலாம். திருச்சூருக்கு  டிக்கெட் புக்  செய்ய வேண்டும்  என்று  எண்ணியவாறே   வாசு  ரெயில்வே   ஸ்டேஷனுக்குப  புறப்பட்டுச்  சென்றான்.
 
"
நீளமாய  கழுத்துள்ள  பெண்கள்  சந்தமாய்  இருக்கும்....அறியோ   வாசு. ?"தேவனின்  குரல்  இப்போதும்  கேட்கிறது.

"
வேலை  தேடி  ஊர்  விட்டு  ஊர் வந்து  பெண்களின்  கழுத்தைப்  பற்றி ஆராய்ச்சி  செய்யாதே. முதலில்  வேலை."

"
ஆமாம், இவன்  பேசற  பாஷை  யாருக்கும்  புரியாது.
இவனுக்கெல்லாம்  எவன்  வேலை  கொடுப்பான் ", சந்துருவுக்கு  தேவன் சொல்வது   புரியாததால்  வரும் கோபத்தில்  சபிப்பான்.

"
அது  எந்தா.. ஆரும்   பணி  தரில்லே..இன்னால்   வேண்டா. ..சந்துரு  எனிக்கி  வேண்டி  ஒன்னும் செய்யண்டா.  ஞான   எங்கனே  எங்கிலும்   ஜீவிக்கும் ".

எப்படியாவது  பிழைத்துக்கொள்வேன்   என்று  சொன்ன தேவனுக்கு  அதை நிரூபிக்க   வேண்டிய  நிர்பந்தம்  கூடிய  சீக்கிரத்திலேயே  ஏற்பட்டது. ஊரிலிருந்து  செலவுக்குப்  பணம்  வரவில்லை. லாட்ஜில்  நெருக்கினார்கள். இல்லை என்றால்  காலி  செய்யச்  சொன்னார்கள்.
தேவனும்  வேறு  வழி இல்லாமல்  அவனுடையப்  பெட்டியை  வாசுவிடம்   கொடுத்து   பத்திரமாக  வைத்துக்கொள்ளும்படியும் , பணம்  கிடைத்ததும்  அதைத்  திரும்பப்  பெற்றுக்  கொண்டு  போவதாகவும்  கூறினான்.

"
தேவா, உனக்கு  நன்றாகத்தெரியும், எங்களுடைய நிலை. சந்துருவின்  பின்னால்  அவன் சம்பாதிப்பதைக்  கொண்டு  வாழ   ஒரு பட்டாளமே   இருக்கிறது. எனக்கோ  பயிற்சி  நேரத்தில் ரூபாய்  முப்பதுதான்  ஒரு  மாதத்துக்குக்  கிடைப்பது. ..இதில் என்னதான்  செய்ய  முடியும்..?"

"
ஏய்ய் .. வாசு  விஷமிக்கண்டா.. எனிக்கி  அறியும். .என்டே  சமயம்  இங்கனேயுண்டு .எந்து  செய்யாம்..?"

அடுத்தநாள்   தேவனின் பெட்டியைப்  பறிமுதல்  செய்ய , லாட்ஜ்  முதலாளி  முயன்றதும் வாசு  அதைக்  கொடுக்காமல்  தகராறு  எழுந்து, போலீஸ்  ஸ்டேஷன்  வரை   தகராறு   போனதும்  வேறு  கதை.
 ரயிலில்  இடம்  பிடித்து   அமர்ந்து, பயணம்  செய்யும்போது அந்த  வாலிப   நாட்களே  வந்தது  போலவும்  நிகழ்ச்சிகள்  எல்லாம்  நேற்று   நடந்தது  போலவும்   வாசுவுக்குத்   தோன்றியது.

”தங்கம் , உன்னைக்  காதலித்துக்  கலியாணம்  செய்து   கொள்ளும்   முன்பே   எனக்கு   ஒரு    காதலி   இருந்தாள்   தெரியுமா  உனக்கு,?"

"
நீங்கள்   ஆயிரம்   பெண்களைப்   பார்த்திருப்பீர்கள் எல்லோரையும்   மனசால்   காதலிக்கவும்  செய்திருப்பீர்கள். ஆனால்  யாராவது  உங்களை  காதலித்து  இருக்கிறார்களா?”

  "என்னைக்  காதலிக்க  எந்தப்  பெண்ணுக்குத்தான்  கசக்கும்.? ஆனால்  நான்  சொல்லும்  இந்தக்  காதல்  தேவனால்  தடம்  புரண்டு  விட்டது..நாங்கள்  தங்கியிருந்த   லாட்ஜுக்கு  அருகே  ஒரு பால்  கடை   இருந்தது. அங்கு  பால்  வாங்க  ஒரு பெண்   தினமும்  வருவாள். நாங்கள்  இரவு   உண்ட  பிறகு  சில நாட்களில்  பால்  அருந்த  அங்கு   செல்
வோம். அவளை அங்கு   அடிக்கடி   பார்ப்போம் .ஹூம் .!  பார்த்தால்   எனக்கு உடம்பு  ஒரு  மாதிரியாய்  படபடக்கும் , நாக்கு  வறண்டு   பேச்சு  சரியாக  வராது. இதெல்லாம்   காதலின்   வெளிப்பாடுகள்   என்று தேவன்   விளக்கம்  சொல்லுவான். நானும்  அதை   நம்ப   ஆரம்பித்தேன். ஆனால்   அவளிடம்   எப்படிப்   பேசுவது, எங்கு   பேசுவதுஅவள்  பேசுவாளா   ஒன்றும்  புரியவில்லை. தேவன்   இதற்கு  ஒரு  வழி  செய்வதாகக்   கூறி   அபயமளித்தான். "--வாசு  கதைபோல்  விவரிக்க   தங்கத்துக்கும்    சற்றே   உற்சாகம்  பற்றிக்கொண்டது.

"
ஆமாம்.. அப்போது  உங்களுக்கு  என்ன  வயசிருக்கும், ?"
“பதினேழு பதினெட்டு இருக்கலாம்”
“அடப்பாவி...! பிஞ்சிலேயே பழுத்த கேசா.? “  
"இல்லை   தங்கம் ,.உலகத்தையே   புதிசாகப்   பார்க்கும்   வயசு.  எல்லாவற்றையும்   சோதனை   செய்து   பார்க்கும்   வயசு. யாரையும்   உடனே   நம்பும்   வயசு. சந்தர்பபங்கள்   அமைந்திருந்தால் , யார்  கண்டது, ..ஒரு சமயம்  பிஞ்சிலேயே  பழுத்திருக்கலாம்"

"
அது சரி . .அந்தப்பெண்ணுக்கு எவ்வளவு  வயசிருக்கும்   என்ன  பேர்  ஏதாவது   தெரியுமா?”
”அவளுக்கு பதினெட்டு இருபதுவயசிருக்கலாம்.பெயர் தெரியாது,ஆனால் என் மனசுகுள்நான் அவளுக்கு வைத்த பெயர் அகிலா. எனக்கு எல்லாமே இந்த அகிலமேஅவள்தான் என்று தோன்றும் “
“ சீ..! நீங்கள் இப்படிப் பட்டவர் என்று தெரிந்திருந்தால்.....”
“ ஏன்...என்னைக் காதலித்து இருக்கமாட்டாயா....கலியாணம் செய்திருக்க மாட்டாயா..?”
இப்போது அதைப் பற்றி நினைப்பது டூ லேட்.தவிர்க்க முடியாததை அனுபவிக்கத்தானே வேண்டும் . இருந்தாலும் இப்போது நோ ரிக்ரெட்ஸ். வருத்தமேதும் இல்லை”  
”எனக்கு  அதுவும்  தெரியும். தேவனைப்  பற்றி  சொல்லிக்கொண்டிருந்தேன் . எப்படியாவது  அந்தப்  பெண்ணைப்  பற்றிய  செய்திகளை  சேகரிக்கப போவதாகக்  கூறினான். வேலை  இல்லாதவனுக்கு  நல்ல வேலை  என்று சந்துரு  கிண்டல்  பேசினான். அடுத்த  நாள் பயிற்சி  முடிந்து  அறைக்குத்  திரும்பும்போது  தேவன்  அங்கு  பொறுமையில்லமல்    எனக்காகக்   காத்திருப்பது   தெரிந்தது. வாசு ..ஆ  பெண்ணின்டே  ஸ்தலம் அறிஞ்சு என்று  கூவினான். பிறகு  அந்த  வீட்டையும்  காட்டினான். வீடு  தெரிந்தவுடன் அந்தப்  பெண்ணைப்  பார்க்காவிட்டால்  தலை  தெறித்து விடும்  போல்  தோன்றும் .அந்த  வீட்டின்  முன்பாக அங்குமிங்கும்  அடிக்கடி  நடப்பேன் வீட்டு  முன்னால்  ஷூவுக்கு  லேஸ்  கட்டும்  சாக்கில்  உள்ளே  ஆராய்ந்து  பார்ப்பேன். ஆனால் என்  கண்ணில்  மட்டும்  அவள் தென்பட  மாட்டாள்

தேவன்  என்னைத்  தமாஷ்  செய்கிறான்  என்று அவனிடம்  கோபித்துக்  கொண்டேன். தேவன்  சொன்னான் , நான்  அங்கு  போகும்  நேரத்தில்  அவள்  எங்கோ  தட்டெழுத்துப்  பயிலச் செல்கிறாளோ   என்னவோ என்று. அதன் பிறகு  அடுத்துள்ள  தட்டெழுத்துப்  பயில்விக்கும்  இடங்களுக்கு  முன்பு  நின்று  நோட்டம்  விட   ரம்பித்தேன். அவள் என்  கண்களில் படவே இல்லை. பிறகுதான் அது  நடந்தது. " என்றஒரு  சஸ்பென்ஸ்  கொடுத்து  நிறுத்தினான்  வாசு.

"என்ன  பெரிய சஸ்பென்ஸ் ...ஒரு  நாள்  அவளைப்  பார்த்தீர்கள் , பல்  இளித்தீர்கள்   அவள்  உங்களைக் கண்டு   கொள்ளவே இல்லை .பிறகு  சேச்சே ...இந்தப் பழம்  புளிக்கும்    என்று  வந்து  விட்டீர்கள் ..அவ்வளவுதானே "  என்று கிண்டல் செய்தாள்   தங்கம்.
 
"
அதுதான்  இல்லை. அவளுடைய  பெயரை  அறிந்து   வருகிறேன்  என்று  சொன்ன  தேவன் , அவர்கள்  வீட்டின்  அருகே  விளையாடிக்  கொண்டிருந்த  ஒரு   சிறுவனைக்  கூப்பிட்டு ,நிறைய  மிட்டாய்களைக்  கொடுத்து   அந்தச் சேச்சியின்  பெயரைக்  கேட்டு   வா --என்று  அனுப்பி   இருக்கிறான். அந்தப்  பையன்  வீட்டிற்குள்  சென்ற   சற்று   நேரத்
தில்  அந்தப்  பெண்  வெளியே  வந்திருக்கிறாள் .அந்தப்  பையன்  தூரத்தில்  இருந்த  தேவனைக்  காட்டி  ஏதோ சொல்ல , அந்தப் பெண்  உள்ளே சென்று  மறுபடியும்  வெளியே  வந்தபோது, பெரிய  மீசை  வைத்த  இரண்டு  ஆட்களும்  கூட  இருந்தனர். தூரத்தில்   நின்று  பார்த்துக்  கொண்டிருந்த  தேவன்   மெல்ல  நழுவப்  பார்க்க    ஓடி  வந்து  அவனை
பிடித்து  நன்றாக  தர்ம  அடி  கொடுத்து  அனுப்பி  இருக்கிறார்கள் . பாவம், தேவன்  முகமெல்லாம்  வீங்கி  உதடு  காயப்பட்டு  ரத்தம்  தெரிய  வந்ததை  நிறையப்  பேர்   பார்த்திருக்கிறார்கள் . அவமானமாக  இருந்ததுஎன்று  சொல்லிச் சொல்லி   மாய்ந்தான்  பாவம், என் காதலுக்காக  அடி  வாங்கினான் " --என்று  பெருமூச்சுடன்  கூறி  நிறுத்தினான் வாசு.

“அவர் உங்களைக் காட்டிக் கொடுத்து, உங்களையும் அவர்கள் புடைக்கவில்லையா?”
“அந்த மட்டில் தேவனுக்கு நன்றி சொல்லவேண்டும்” 
 "
திருச்சூர்  சென்று  அங்கு  ஒரு  ஹோட்டலில்  தங்கி , ஒரு நாள் இருந்து  பிறகு , பெருங் கோட்டுக்கா  என்ற இடம்  எங்கு  இருக்கிறது  என்று  விசாரித்து  அங்கு  சென்றால்  வாசுவிற்கு  முதலில்  ஒன்றுமே  புரிய வில்லை. அந்த  இடத்தில் ஒரே  கூட்டமாக  இருந்தது. அது  ஒரு ஆசிரமமாம். அதன்  தலைவர்  பிரம்ம  தேவ  சுவாமிகள்  அன்று  காலையில்தான்  இந்த  பூத  உடலை விட்டு உயிர்  நீத்தாராம்.  அவருக்கு  மரியாதை  செய்ய  கூட்டம்   கூட்டமாக  மக்கள்  சென்று  கொண்டிருந்தனர்.  வாசுவுக்கு   சற்றே  ஏமாற்றமாக  இருந்தது.  சரி  வந்ததுதான்  வந்தோம்  அந்த ச்வாமிகளையாவது  வணங்கி செல்லலாம்  என்று  அருகே  சென்றால்......
 
வயதான  தேவன்தான்  பிரம்மதேவ  சுவாமிகள்.  அருகில்  இருந்தது  யார்..? வயதான  தோற்றத்தில்  அகிலாவா..?   வாசுவின்  அகிலாவா...?!





என்ன நண்பர்களே கதையைப் படித்தீர்கள் இல்லையா. இதே கதையை சற்றே நீட்டி இரு பாகங்களாகவும் எழுதி இருக்கிறேன் நேரமும் ஆர்வமும் இருந்தால் சுட்டியைச் சொடுக்கிப்பாருங்களேன்
கதை கட்டுரை பாகம் 1 
கதை கட்டுரை பாகம் 2.







'
"


45 comments:

  1. இது ஏற்கெனவே படிச்ச நினைவு இருக்கே! !!!!!!!!!!!!!!!!!!!!!1

    ReplyDelete
  2. ஏற்கெனவே படித்துப் பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். படித்துக் கொண்டு வரும்போதே படித்த நினைவு வந்து விட்டது.

    :))))

    ReplyDelete
  3. கதை வித்தியாசமாக சொல்லப்பட்டிருக்கிறது. படித்துப் புரிந்து கொள்ள அதிக முயற்சி தேவைப்பட்து. இருந்தும் முழுவதுமாகப் புரிந்தது என்று சொல்ல முடியவில்லை. ஒரு Abstract பெயின்டிங்கைப் பார்த்த அனுபவம் கிடைத்தது.

    ReplyDelete

  4. கதையை படித்தேன் ஐயா அருமை மனம் கணக்க வைத்தது முடிவில் இணைப்புகளுக்கு போய் விட்டு மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  5. ***"அவ்வளவு தூரம் பணம் செலவு செய்து போய அவர் அங்கே இல்லாவிட்டால் எல்லாம் விரயமாகும்."

    " ஏன் விரயமாக வேண்டும் .? நமக்கும் பொழுது சற்று மாறுதலாகப் போகும். ஏற்பாடு செய்கிறேன். ரெடியாக இரு. "***

    I think we all use such excuses to visit places! :-)

    ReplyDelete
  6. ***தேவனுக்குத தமிழ் தெரியாது.எனிக்கி மலையாளம் கொறச்சு அறியும்.***

    இங்கே எதார்த்தம் (இரண்டு மொழிக் கலவை) அழகாக வந்துள்ளது, சார்.

    ReplyDelete
  7. ***வயதான தேவன்தான் பிரம்மதேவ சுவாமிகள். அருகில் இருந்தது யார்..? வயதான தோற்றத்தில் அகிலாவா..? வாசுவின் அகிலாவா...?!***

    மன்னிக்கணும், அது தேவனின் அகிலா சார். :) எல்லாம் பகவான் செயல் சார்.

    ஆனால் கதை பிரமாதமாக இருக்கிறது. எங்கேயும் பிரசுரிக்கவில்லையா சார்? :)

    ReplyDelete
  8. மூன்றையும் வாசித்தேன். நீட்டிமுழக்கியதை விட இந்த சுருக் நல்லா இருக்கு!

    பாவம்.... ப்ரம்மதேவனுக்கு எதுக்கு எய்ட்ஸ்?

    பழைய கடிதங்களை எப்பவாவது எடுத்துப்படிக்கும் வழக்கம் எனக்கும் உண்டு. எங்க கோமளா மாமி நான் எழுதும் கடிதம் கிடைத்தவுடன், அவருக்குப் படிக்கத்தெரியாது என்பதால் மருமகளைவிட்டு வாசிக்கச் சொல்லிக் கேட்பாராம்.

    அப்புறம் கிணத்தடி வெயிலில் போய் கடிதத்தைச் சும்மாவேனும் பிரிச்சு வச்சு பார்த்துக்கொண்டிருப்பாராம்.. மருமகள் ஒருமுறை என்னிடம் சொன்னதும் எனக்கு மனசுக்குப் பாரமாப்போச்சு. மாமி எனக்கு ஒரு அம்மா மாதிரிதான் என் பூனா வாழ்க்கையில்.

    ReplyDelete
  9. வணக்கம்
    ஐயா
    கதை அருமையாக உள்ளது இரசித்தேன்.. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. கதையையும் இதற்கு முன்பு எழுதிய இரண்டு பாகங்களையும் படித்தேன். கதையும் அருமை. கருத்தும் அருமை. பழைய கடிதங்கள் படிக்கும்போது ஏற்படும் மன ஓட்டம் பற்றி அருமையாய் விவரித்திருக்கிறீர்கள். இந்த கதையின் இறுதியில் ‘’அருகில் இருந்தது யார்..? வயதான தோற்றத்தில் அகிலாவா..? வாசுவின் அகிலாவா...? ‘’ என்று முடித்திருக்கிறீர்கள். ஆனால் முன்பு எழுதிய கதையில் இதைப்பற்றி சொல்லவே இல்லையே.

    ReplyDelete
  11. பழைய கடிதங்களைப் படிக்கும்போது கிடைக்கும் மனஎழுச்சி இருக்கிறதே
    அதனை அருமையான விவரித்துள்ளீர்கள் ஐயா
    இன்றைய தலைமுறைதான் கடிதத்தையே மறந்து விட்டதே

    ReplyDelete
  12. //அருகில் இருந்தது யார்?.. வயதான தோற்றத்தில் அகிலாவா?.. வாசுவின் அகிலாவா?..//

    கதை சுற்றிச் சுழன்று திரும்புகின்றது..

    நல்ல நடை..

    ReplyDelete

  13. @ கீதா சாம்பசிவம்
    இந்தக்கதையைப் படித்திருக்கிறீர்கள் ஆனால் இதே கதையை சற்றே மாற்றி கதை கட்டுரை என்று இரு பாகமாக மாற்றி எழுதியதைப் படித்தீர்களா.வருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete

  14. @ ஸ்ரீராம்
    கதை கட்டுரை பாகம் ஒன்றை வாசித்து தேவ ரகசியம் அறிய ஆவல் என்று கருத்திட்டிருக்றீர்கள். ஆனால் தேவ ரகசியத்தை அறிய இரண்டாம் பாகத்தை வாசிக்கவில்லை. ஏதோவாசித்த நினைவுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இரண்டாம் பாகமும் வாசித்து பின்னூட்டம் தந்திருக்கிறேன் ஸார்!

      Delete
    2. இரண்டாம் பாகமும் வாசித்து பின்னூட்டம் தந்திருக்கிறேன் ஸார்!

      Delete

  15. @ டாக்டர் கந்தசாமி
    அப்ஸ்ட்ராக்ட் பெயிண்டிங்கா.?முடிந்த அளவு சுருக்கமாக விளக்கமாக எழுதி இருப்பதாய் நினைக்கிறேன் வருகைக்கும் புரிந்து கொள்ள முயன்றதற்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  16. @ கில்லர்ஜி
    இணைப்புகளில் இதே கதையை வித்தியாசமாக எழுதி இருக்கிறேன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  17. @ வருண்
    இடங்களைப்பார்க்கவும் ஒரு எக்ஸ்க்யூஸ் வேண்டுமே
    வருகைக்கு நன்றி

    ReplyDelete

  18. @ வருண்
    இருமொழிக்கலவை நன்றாக வந்துள்ளதைப் பாராட்டியதற்கு நன்றி சார்

    ReplyDelete

  19. @ வருண்
    வாசுவின் மனதில் அவனது அகிலாவாகத் தோன்றி இருக்கும் எழுதும் கதைகளை பிரசுரிக்கஎந்தப் பத்திரிக்கைக்கும் அனுப்புவது இல்லை என் சிறு கதைத் தொகுப்பு ஒன்றை நானே மணிமேகலைப் பிரசுரம் வழியே வெளியிட்டிருக்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். இந்தக் கதை அதில் இல்லை

    ReplyDelete

  20. @ துளசி கோபால்
    ஒரு கதைக்கருவை இரு விதமாக எழுதி இருக்கிறேன் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுக்காக பிரம்ம தேவனுக்கு எய்ட்ஸ் என்று சற்று நீட்டி முழக்கினேன் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி மேடம்இரண்டாவ்தை கதை கட்டுரை என்று எழுதி இருப்பதைக் கவனிக்கவில்லையா

    ReplyDelete

  21. @ ரூபன்
    வருகை தந்து ரசித்ததற்கு நன்றி சார்

    ReplyDelete

  22. @ திண்டுக்கல் தனபாலன்
    சுட்டிகளில் இருக்கும் கதையின் முடிவும் வித்தியாசமானது. வாசிக்கவில்லையா வருகைக்கு நன்றி டிடி.

    ReplyDelete

  23. @ வே.நடன சபாபதி
    முதலில் இதைத்தான் எழுதினேன் சுட்டியில் இருக்கும் கதை பிறகு எழுதியது ஒரு கதையின் கருவை இரு வேறு விதமாக எழுதி இருக்கிறேன் தனித்தனியே படித்தால் இரண்டும் வேறு வேறு கதைகள். வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete

  24. @ கரந்தை ஜெயக்குமார்
    பழைய கடிதங்கள் பல நினைவுகளைமீட்டெடுக்கும் .இந்தத் தலைமுறையினருக்கு அது கிடைக்காது வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  25. @ துரை செல்வராஜு
    இப்போதெல்லாம் கற்பனை ஊற்றெடுக்க மாட்டேன் என்கிறது. பாராட்டுக்கு நன்றி சார்

    ReplyDelete

  26. @ ஸ்ரீராம்
    நாந்தான் சரியாக கவனிக்கவில்லை ஸ்ரீ. மன்னிக்கவும் மீள்வருகைதந்து நேர் செய்ததற்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete
  27. இரண்டாம் பாகம் இப்போது தான் படித்தேன்.

    ReplyDelete

  28. @ கீதா சாம்பசிவம்
    ஒரு வித்தியாசமான அணுகு முறை என்பதாலேயே மீள் பதிவாக்கினேன் வருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  29. என் வாழக்கையிலும் , ஒரு அகிலா வந்தது நினைவுக்கு வந்தது :)
    கதையை சொல்லிச் சென்ற களம் அருமை !

    ReplyDelete
  30. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  31. கடைசி வரிகள் மனதில் நின்றுவிட்டன. தினமணி கதிரில் கல்லூரி நாள்களில் படித்த என் பெயர் கமலா, இப்போது கமலா தொடர்கள் நினைவிற்கு வந்தன.

    ReplyDelete

  32. @ பகவான் ஜி
    பதின்ம வயதுகளில் பல அகிலாக்கள் இருக்க வாய்ப்புண்டு. கதையைப் பாராட்டியதற்கு நன்றி ஜி

    ReplyDelete

  33. @ யாதவன் நம்பி.
    மேதின வாழ்த்துக்கள் கூடவே பதிவு பற்றிய இரு வரிகளாவது இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

    ReplyDelete

  34. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    நல்ல வேளை என் பெயர் அகிலா என்று வந்திருக்கவில்லை. உங்கள் நினைவுகளை என் கதை மீட்டி விட்டதில் மகிழ்ச்சியே வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  35. உங்கள் இரண்டாவது சிறுகதை தொகுதியைக் கொண்டுவரும் பொழுது இந்தக் கதை அதில் கட்டாயம் இடம்பெறும் என்று எண்ணுகிறேன்....வித்தியாசமாகக் கதை எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே. - இராய செல்லப்பா

    ReplyDelete

  36. @ செல்லப்பா யக்ஞசாமி
    வித்தியாசமாக எழுதுவதைப் பாராட்டுவதற்கு நன்றி சார்.

    ReplyDelete
  37. இரண்டே மாதங்கள் பழகிய ஒருவரை ஐம்பது வருடங்கள் கழித்து பார்க்க வேண்டிய ஆவலைத் தூண்டுவது எது? பத்திரப்படுத்தப்பட்ட கடிதத்தால் எழுந்த அந்நாளைய நினைவுகளா? அந்நாளைய நினைவுகளைப் பத்திரப்படுத்த கருவியாய் கடிதமா? விடை பின்னோக்கிய நினைவுகளில் பிடிபட்டுவிடுகிறது. எப்போதுமே கிட்டாத ஒன்றின்மேல்தான் ஈர்ப்பு இருந்துகொண்டே இருக்கும். அதனால்தான் இறுதியில் அந்த வாசுவின் அகிலா என்ற வரிகள் போலும்.

    மற்ற இணைப்புகளையும் வாசித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete

  38. ஐயா இரண்டு பாகத்தையும் இன்றுதான் படித்து கருத்துரை இட்டேன் இதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் எயிட்சைப்பற்றி விளிப்புணர்வை கொடுக்கும் 80 உண்மையே.

    ReplyDelete

  39. @ கீதமஞ்சரி
    பல சிறுகதைகளுக்கு விமரிசனம் எழுதியே உங்கள் பார்வை கதைகளின் உட்கருத்துக்களை சிந்திக்கவைக்கிறது என்று நினைக்கிறேன் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேடம்

    ReplyDelete

  40. @ கில்லர்ஜி
    சுட்டிகளைப் படித்து மீண்டும் வந்து கருத்திட்டதற்கு நன்றி ஜி

    ReplyDelete
  41. மூன்று பதிவுகளையும் ஒன்றாக படித்தேன்.

    பல வருடங்களுக்குப் பிறகு ஒருவரை சந்திப்பதில் ஒரு ஆர்வம் - அங்கே சென்ற பிறகு அவர்களுக்கு கிடைத்த அனுபவம் என சிறப்பாகச் சொல்லி இருக்கீங்க....

    பாராட்டுகள்.

    ReplyDelete
  42. @ வெங்கட நாகராஜ்
    இரண்டு கதைகளும் வேறு வேறு என்று புரிதிருக்குமே. ஒரு கதையில் சந்திப்பு பற்றி எழுதவே இல்லையே. பாராட்டுக்கு நன்றி சார்.

    ReplyDelete