திங்கள், 6 ஜனவரி, 2014

A MARRIAGE WITH A DIFFERENCE...!


                       A MARRIAGE WITH A DIFFERENCE.
                       -------------------------------------------



வெகுநாட்களாகவே திருமணம் வேண்டாம் என்று சொல்லி வந்த பெண்,- நண்பரின் உறவினர்- கல்யாணத்துக்கு அழைப்பு இருந்தது. டிசம்பர் 26-ம் நாள் காலை 11 மணிக்கு மைசூர் செல்லும் சதாப்தியில் பயணம். மதியம் ஒரு மணிக்கு மைசூர் சேர்ந்தோம். ரயில் நிலையத்துக்கே வந்து எங்களை அழைத்துச் சென்றார்கள். நேரே டைனிங் ஹால்-விருந்து- முடிந்ததும் எங்களுக்காக புக் செய்யப்பட்டிருந்த ஹோட்டல் ரூமுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். திருமண சம்பந்த நிகழ்ச்சிகள் மாலை ஆறு மணி அளவில் துவங்கும் என்றும் அதுவரை ஓய்வெடுக்கலாம் என்றும் கூறினார்கள்.சற்று ஓய்வுக்குப் பிறகு என் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தபடி தத்தாத்த்ரேயர் கோவிலுக்குச் சென்று வந்தோம்.
திருமணத்துக்கு வந்திருந்தவர்களை நோட்டம் விட்ட போது , இந்தத் திருமணம் –it is going to be different –என்று தோன்றியது. பூர்வீகம் கேரளாவிலிருந்து மைசூர் வந்து செட்டில் ஆன தமிழ்க் குடும்பம். கல்யாணப் பத்திரிக்கையே ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் இருந்தது. பத்திரிக்கை பழைய மோஸ்தரில் மஞ்சள் ரோஜா வண்ணத்தில் சமயத் தலைவர்களின் ஆசியுடன் என்று இருந்தது..
மாப்பிள்ளை அழைப்பு , ஜானவாசம் போன்றவை இல்லாமல் அவர்களின் முன்னோர் காலத்தில் இருந்தபடி திருமணத்துக்கு முதல் நாள் மாலையில், 20 .30. வேதவிற்பன்னர்களின் வேத கோஷங்களுடன் தொடங்கியது. சுமார் ஒன்றரை மணிநெரம் நான்கு வேதங்களையும் கோஷித்தார்கள். சற்றே வித்தியாசமான ஒலியுடன் கூடியதை சாமவேதம் என்று அடையாளப் படுத்த முடிந்தது. வேத கோஷங்களொலித்துக் கொண்டிருந்த போது தத்தாத்ரேயர் கோவில் தரிசனம் முடித்து நாங்கள் வந்து சேர்ந்தோம். அதன் பிறகு பிராம்மண சமூக வழக்கப் படி நிச்சயதார்த்தம் ( என்று நினைக்கிறேன் ) நடந்தது.அதன் பின் விருந்து.
மறுநாள் காலை முஹூர்த்தம். காசியாத்திரை , மாலை மாற்றல், ஊஞ்சல் எல்லாம் கிரமப்படி(?) நடந்தது, மணப்பெண்ணையும் மணமகனையும் தோளில் சுமந்து மாலை மாற்றச் செய்தார்கள்...! ஊஞ்சலின் போது கல்யாண வைபோகமே என்று பாட்டெல்லாம் பாடினார்கள். திருஷ்டி சுற்றும்போது எல்லாதிசைகளிலும் போடும் அன்ன உருண்டைகள் சுற்றி இருப்பவர்களைக் கவனிக்காமல் போடப் பட்டன. நல்ல வேளை யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்தத் திருமணத்தின் போது சில நல்ல விஷயங்கள் அனுஷ்டிக்கப் பட்டன. மணமெடையில் நெருங்கிய உறவினர்களே இருந்தனர். மேடை சற்று உயரமாக இருந்தது. வந்திருந்தவர்கள் அமர நாற்காலிகள் போடப் பட்டிருந்தது. மண நிகழ்ச்சிகளை இருந்த இடத்திலிருந்தே காண்முடிந்தது. திருமாங்கல்யம் வந்திருந்தோரின் ஆசிர்வாதத்துக்காக சுற்று வரப்பட்டபோதே ஆசிர்வாத அட்சதைகளும் வினியோகிக்கப் பட்டது. மாங்கல்யதாரணம் நடக்கும் போது அட்சதையை வீசித் தூவாமல் இருக்கும் படி கேட்டுக் கொண்டார்கள். மணமக்களை வாழ்த்தி கொடுக்கப் பட்ட அட்சதையைப் பெற்றுக் கொள்ள வேறு சிலர் வந்தனர். இந்த அட்சதைகளை யாரும் மேடைக்கருகே வராமலேயே மணமக்கள் மேல் தூவ ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மேடையில் நின்று ஒருவர் நிகழ்ச்சிகளுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்டுக் கொண்டிருந்தார். மணமகனுக்கு அவரது வருங்கால மாமனார் பாத பூசை செய்ததை ஆங்கிலத்தில் விளக்கியவர், வயதில் பெரியவர் ஒரு இளைஞனுக்கு பாத பூசை செய்வது சரியா என்று தோன்றலாம். திருமண விரதம் இருக்கும் வரனும் வதுவும் பரமேஸ்வரன் பார்வதிக்குச் சமம் “ என்றொரு விளக்கம் கொடுத்தார்,! அதே போல் மாங்கல்யதாரணம் முடிந்த உடனே வாழ்த்துச் சொல்ல மேடைக்கு வர வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்தார். சப்தபதி சடங்கு முடிந்தபிறகே வாழ்த்துச் சொல்லவும் கை கொடுக்கவும் அனுமதி என்றார்.  ஆக சாதாரணமாகக் காணப்படும் தல்லுமுல்லுகள் தவிர்க்கப் பட்டன,. திருமணம் இனிதே முடிந்தது.
இதில் பதிவிட என்ன இருக்கிறது என்று கேட்கத் தோன்றலாம் இந்தத் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்களில் பலரும் inter-caste inter-religion, inter-state   inter-language  மற்றும் inter-national  திருமணங்கள் செய்து கொண்டவர்கள்போல் தோன்றிையது.ஊஞ்சலின் போது திருஷ்டி சுற்றி அன்ன உருண்டைகள் போட்டவரில் அயல் நாட்டினரும் இருந்தது  added  a colour  to the ceremony. நான் சென்றிருக்கும் திருமணங்களில் ஹிந்து ஆங்கிலேயத் திருமணம் ஆர்ய சமாஜ் நடத்திவைக்கக் கண்டிருக்கிறேன். சாதி மாறிய திருமணங்களும் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரே குடும்பத்தில் இத்தனை வேறுபாடுகளையும் உள்ளடக்கிய உறவினர்கள் கலந்து கொண்ட திருமணம் பார்ப்பது இதுவே முதல் தடவை.  அதுவும் சம்பிரதாயங்கள் அதிகம் மாற்றப்படாமல் நடந்த திருமணம் என்று நினைக்கிறேன் A MARRIAGE WITH A DIFFERENCE.!
திருமணம் முடிந்த கையோடு வெற்றிலை பாக்கு தேங்காய் முதலியவற்றை காகிதப் பைகளில் போட்டுக் கொடுத்தனர். இந்தக் காகிதப் பைகள் ASSOCIATION FOR THE WELFARE OF THE MENTALLY DISABLED ( AWMD )  மூலம் செய்விக்கப் பட்டவை. இந்த சமூக அக்கறை போற்றத்தக்கது. இதல்லாமல் சிறிய கைவினைப் பொருட்களும் வினியோகிக்கப்பட்டது.
முதல் பந்தியில் உணவு உட்கொண்டு மதியம் மைசூரில் இருந்து புறப்படும் சதாப்தி ரயிலில் பெங்களூர் வந்தோம்.

வெள்ளி, 3 ஜனவரி, 2014

சுவாமிகளும் கோவில்களும்


                             சுவாமிகளும் கோவில்களும்
                              ---------------------------------------


காரிய சித்தி ஆஞசனேயர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?அண்மையில் சென்னை சென்றிருந்தபோது என் மகன் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிமீ. தூரத்தில் வேளச்சேரியில் ஒரு ஆஞ்சனேயர் கோவிலுக்கு என் மனைவியும் மச்சினனும் சென்றிருந்தார்கள். மனதில் ஏதாவது குறை இருந்தால் அந்த ஆஞ்சனேயரை வேண்டிக்கொண்டு ஒரு மட்டையுடன்கூடிய தேங்காயை அர்ச்சித்து அதை கோவில் பிரகாரத்தில் கட்ட வேண்டுமாம். அதற்கு ஒரு அடையாளச் சீட்டும் கொடுக்கிறார்கள். குறை நீங்கியபின் மறுபடியும் கோவிலுக்கு வந்து அதே தேங்காயைஅர்ச்சித்து கொண்டு வரலாம். என் மச்சினனின் குறை நீங்கியதால் என் மனைவியுடன் அந்தக் கோவிலுக்குச் சென்று வந்தார்கள். இந்தக் கோவிலை நிறுவியவர் ஸ்ரீ சச்சிதானந்த கணபதி ஸ்வாமிகள் ஆவார்.
டிசம்பர் மாதம் 26-ம் தேதி மைசூருக்குச் சென்றோம் எங்களுடன் என் 47 வருட நண்பன் ( இப்போது அமெரிக்க வாசி) கூட வந்தார். அங்கு ஸ்ரீசச்சிதானந்த கணபதி ஸ்வாமிகள் ஆசிரமம் பார்க்கலாம் என்றார். இந்த ஸ்வாமி அமெரிக்காவில் பிரசித்தமானவராம் அப்போது எனக்குள் ஒரு பொறிதட்டியது, இந்த சுவாமிகளின் சென்னை ஆசிரமத்தில்தானே அந்தக் காரியசித்தி ஆஞ்சனேயர் கோவில் இருக்கிறது.. மேலும் இந்த மைசூர் ஆசிரமத்தில் தத்தாத்ரேயர்கோவிலும் ,  70 அடி உயர ஒரே கல்லால் ஆன ஆஞ்சனேயரும் பிரதிஷ்டை செய்திருப்பதாகவும் கூறினார். எனக்கு எப்போதும் புதிய இடங்களைப் பார்ப்பதில் விருப்பம் அதிகம். இதே 26-ம் தேதி சென்ற வருடத்தில்தான் ஆஞ்சனேயர் சிலை பிரதிஷ்டை ஆகி இருந்தது.
நாங்கள் அன்று மதியம்தான் மைசூர் சென்றதாலும் அடுத்த நாள் ஒரு திருமணத்துக்குச் செல்ல வேண்டி இருந்ததாலும் அன்று மாலையே ஆசிரமம் சென்றோம். ஆசிரமம் ஒரு பெரிய வளாகத்தில் அமைந்திருக்கிறது. ரம்மியமான சூழ்நிலை நேரம் இருட்டத் துவங்கிவிட்டதால் முழு அழகையும் ரசித்துப் பார்க்க முடியவில்லை. அங்கும் ஒரு காரியசித்தி ஆஞ்சனேயர் இருக்கிறார். மட்டைத் தேங்காய் வைத்து வேண்டினால் நினைத்த காரியங்கள் நிறைவேறுமாம். நினைத்தது நடக்க ஒரு மட்டைத்தேங்காய் போதுமென்று நினைப்பவர்களைக் குறை கூறமாட்டேன். எல்லாம் அவரவர் நம்பிக்கை.இந்த நம்பிக்கை இப்போது மேலை நாடுகளிலும் பரவி வருகிறதுபோல் தெரிகிறது. இந்த சுவாமியின் ஆசிரமத்துக்கு அநேக வெளிநாட்டினர் வருகை தருகின்றனர். பணத்துக்குப் பஞ்சமில்லை. அழகான தத்தாத்ரேயரின் கோவில் சுற்றிலும் பொன்சாய் தோட்டம். கருங்கல்லில் செதுக்கிய தூண்கள் சுற்றிலும் வைக்கப் பட்டிருக்கிறது. நாளுக்கு ஒன்று என்று 365 தூண்கள் இருப்பதாகக் கேள்வி. சிற்பங்கள் செதுக்கவும் கற்றுக் கொடுக்கிறார்கள் என்றும் கேள்வி.
அங்கிருக்கும் காரிய சித்தி ஆஞ்சனேயர் கோவிலுக்கு மேல் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் எழுபது அடி உயர ஆஞ்சனேயர் சிலையும் அங்கே உருவானதாம் இருட்டிய பிறகு சென்றதால் படங்கள் எடுக்க முடியவில்லை,இருந்தாலும் என் கைபேசியில் படம் பிடித்தேன். மேலும் வலையிலிருந்து சுட்ட படமும் இங்கே

கைபேசியில் எடுத்த ஆஞ்சனேயர் சிலை
.
காரியசித்தி ஹனுமான் தத்தபீடம் மைசூர்



வலையில் இருந்து எடுத்த 70 அடி ஆஞ்சனேயர்



கோவில் பற்றிச் சொல்வதானால் கூடவே ஒரு கதையும் இருக்கும்தானே, அப்போதுதானே சுவைக்கும். அத்ரி முனிவர்-அனுசூயா தம்பதியினருக்கு அந்த பிரம்மா விஷ்ணு மகேசனே குழந்தைகளாய்ப் பிறக்க வேண்டும் என்று வேண்டி நின்றனர். அந்த மும்மூர்த்திகளும்
அவர்களது பக்தியைச் சோதிக்க முடிவெடுத்தனர். துறவிகள் போல் வடிவெடுத்து, அத்திரியின் குடில் முன் வந்தனர். அத்திரி அப்போது வீட்டில் இல்லை. அவர் மனைவி அனுசூயா தர்மபத்தினி. கணவருக்கு தினமும் பாதபூஜை செய்து, அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்த பின்பே பணிகளைத் துவங்குவாள். அந்த தீர்த்தம் எப்போதும் வீட்டில் இருக்கும்.அனுசூயா வந்தவர்களை வரவேற்றாள்.அவர்கள் தங்களுக்குப் பசி என்றதும் உணவு எடுக்கச் சென்றவரிடம் உணவு கொடுப்பவர் நிர்வாண நிலையிலேயே அதைப் பறிமாறவேண்டும் என்று கேட்டனர். இந்த அசாதாரண கோரிக்கை ஏதோ தெய்வ சங்கல்பம் என்று நினைத்த அனுசூயா அவ்விதமே பறிமாறுவதாகக் கூறினாள்.ஆண்டவனே நான் உண்மையான பதிவிரதை. எனக்கு இப்படி ஒரு சோதனையா “ என்று நினைத்து, , கணவருக்குப் பாதபூஜை செய்த நீரை வந்த மூவரின் மேல் தெளித்து  அவர்கள் குழந்தைகளாக மாற வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அதன் படியே பிரம்மா விஷ்ணு மகேசன் மூவரும் குழந்தைகளாக மாற  அவர்களுக்கு பாலூட்டிப் பசி தீர்த்தாள். சற்று நேரத்தில் அத்திரி முனிவரும் வந்து நடந்ததைக் கேட்டுத் தெரிந்து கொண்டார், வந்தவர்கள் மும்மூர்த்திகளேஎன்று தன் ஞான திருஷ்டியால் அறிந்த முனிவர் அம்மூன்று குழந்தைகளையும் ஒரு சேர அணைத்தார். அந்த மூன்று குழந்தைகளும் ஓருடல் மூன்று முகம் ஆறு கைக்கள் கொண்டதாக மாறின. நாரதர் மூலம் நடந்ததை அறிந்த முத்தேவியரும் தங்களது கணவர்களைத் திருப்பித் தர வேண்டி நின்றனர். தேவியரே இந்தக் குழந்தை எங்களிடம் வளர வேண்டும் என்பது எங்கள் விருப்பம் அதை நிறைவேற்றிவைத்தால் உங்கள் கணவர்கள் உங்களுக்குத் திருப்பிக் கிடைப்பார்கள் “ என்றனர், அதற்கு அவர்களொப்புதல் அளிக்கவே அனுசூயா மும்மூர்த்திகளை வேண்டி நின்றாள். மும்மூர்த்திகளும் காட்சியளித்து தங்கள் சக்தியாக அக்குழந்தை விளங்கும் என்றும் அதற்கு  தத்தாத்ரேயன் என்று பெயர் சூட்டி ஆசியளித்தனர். தத்தாத்ரேயன் என்றால் மும்மூர்த்திகளுக்கும் சமமானவர் என்று பொருள்.
மும்மூர்த்திகளும் மகனாகப் பிறந்தமையால் த்(3)த்தஎன்று பெயர் வந்ததாகவும் கூறுவர். அத்திரி முனிவருக்குப் பிறந்ததால் ஆத்ரேயர் என்ற பெயரும் சேர்ந்து தத்த*ஆத்ரேயர் = தத்தாத்தரேயர் என்று வந்ததாகவும் கூறுவர். தத்தாத்ரேயரின் கோவிலுக்கு சென்றபோது இந்தக் கதையும் மனதில் விரிந்தது, ஏன் என்றால் அந்தக் கோவிலில் பிரதிஷ்டையாகி இருக்கும் தெய்வம் தத்தாத்ரேய வெங்கடேஷ்வரர். மும்மூர்த்திகளும் சேர்ந்த ஒரு தெய்வம் அதில் ஒருவரான விஷ்ணுவின் கோவிலாக இருப்பது ஏன் என்னும் கேள்வி என்னை வலையில் காரணம் கிடைக்குமா என்று தேட வைத்தது.  இந்த தத்த பீடம் ஸ்ரீ சச்சிதாநந்த கணபதி ஸ்வாமிகளால் நிறுவப் பட்டது.தகவல்கள் தேடும்போது கிடைத்ததைப் பகிர்கிறேன், 


Sri Nrusimha Saraswati Incarnation

Lord Dattatreya is incarnation of Lord Vishnu, Lord Shiva and Lord Brahma (The Trio or Trimurthi). Swami Dattatreya is one among the Immortals (‘Chiranjeevi’) – there is no end to this Incarnation. Depending on the state of the world from time to time Lord Dattatreya incarnates himself in various forms for the well being of human beings and for establishing Sanatana Dharma. This is the distinguishing aspect of this Incarnation. During 15th Century A.D. – which was the era of the Incarnation of Lord Dattatreya as Sri Nrusimha Saraswati -India was evolving with rapid changes in social and political fabric of the society. Recognizing this – Sri Nrusimha Saraswati decided to give up his form and advised his disciples that he will very soon continue his journey in ‘new form’. In presence of thousands of disciples and devotees – he disappeared in banks of River Krishna near Sri Sailam.

Sri Ganapathi Sachchidananda Incarnation

After nearly five centuries, In 1942 he re-incarnated as Sri Sri Sri Ganapathi Sachchidananda Swamiji with Datta Peetham, Mysore as the main centre, started to give new lease of life to Sanatana Dharma following modern methodology in line with the global evolution and modern era. To prove this to his new disciples – In 1966 when Sri Ganapathi Sachchidananda Swamiji visited Koti Lingala Ghat in Sri Sailam, the previous incarnation Sri Nrusimha Saraswati gave darshan and Initiated Sri Ganapathi Sachchidananda Swamiji into Avadhoota lineage (‘Shona Vastra Deeksha’).




கோவிலைப் பற்றி சொல்லிவரும்போது ஆரம்பித்த கதை எங்கெங்கோ இழுத்து வந்துவிட்டது.சநாதன தர்மத்துக்கு புத்துயிர் அளிக்க நவீன வசதிகளைப் பயன் படுத்தி உலகளாவச் செய்ய ஒரு ஸ்வாமி வந்துவிட்டார். இவர் ஒரு ஹனுமான் பக்தர். ஆகவே தத்த பீடத்தோடு காரியசித்தி ஆஞ்சனேயரையும் உலகெலாம் பிரதிஷ்டை செய்து வருகிறார் இந்த ஹைடெக் ஸ்வாமிஜி. விட்டில் பூச்சிகளென அயல்நாட்டினரும் இவரை மொய்க்கின்றனர்.
மைசூரில் இவரது தத்தபீடம் வெகு நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டு இருக்கிறது. டெரக்கோட்டாவால் ஆன ஒரு பெரிய மூலிகேஷ்வரரும் உண்டு நாங்கள் சென்றபோது நன்கு இருட்டிவிட்டதாலும் முக்கியமாகச் செல்ல வேண்டிய திருமண் நிகழ்ச்சிகளைக் காண வேண்டி இருந்ததாலும் எல்லாம் பார்த்த திருப்தி இருக்கவில்லை. அடுத்தமுறை , அப்படி என்று ஒன்று இருந்தால் இன்னும் ஆழ்ந்த நோக்குடன் விஜயம் செய்ய வேண்டும்.தத்த வெங்கடேஷ்வரா படம் வலைத்தளத்தில் இருந்து எடுத்தது கீழே.


அடுத்தபதிவு ஒரு திருமணம் பற்றியது. 






செவ்வாய், 31 டிசம்பர், 2013

புத்தாண்டுச் சிந்தனைகள்


                               புத்தாண்டுச் சிந்தனைகள்.
                               ------------------------------------



புத்தாண்டு பிறக்கிறது

நாளும்தான் இரவுக்குப் பின் பகல் விடிகிறது.
இன்று மட்டும் இது என்ன புதிதா.?
பல்லெல்லாம் தெரியக் காட்டி முகமெல்லாம்
புன்னகை கூட்டி கைகுலுக்கி வரும் ஆண்டு
பிரகாசிக்க வாழ்த்துக்கள் கூறுகிறோம்
சற்றே சிந்தித்துப்  பார்க்கிறோமா.
சம்பிரதாய முகமன்கள் ஒரு புறம் இருக்கட்டும்
புத்தாண்டு வாழ்த்துக் கூறுமுன் கடந்து சென்ற
ஆண்டை நினைத்துப் பார்க்க வேண்டாமா.
கடந்த ஆண்டு என்ன செய்ய நினைத்தோம்
நினைத்ததெல்லாம் செய்து முடித்தோமா?

நம்பிக்கைகள் வாழ்வின் கட்டாய ஊன்றுகோல்
ஆண்டொன்று போக அகவை ஒன்று கூடுகிறது.
அனுபவங்களும் கூடத்தானே வேண்டும்
அனுபவங்கள் தரும் படிப்பினைகள் சிந்திக்கிறோமா,
வினாடி நிமிடம் மணி நாள் வாரம் மாதம் வருடம்
எல்லாம் காலத்தின் குறியீடுகள் இவற்றின்
ஒவ்வொரு நொடியும் புதிதாய்ப் பிறப்பதே-அதேபோல்
நாளும் நொடியும் நாமும் புதிதாய்ப் பிறக்கிறோம்
இந்நொடியில் நிகழ்வதே நிதரிசனம் . அடுத்து நிகழப்
போவது யாரே அறிவார். யாரும் யாரையும்
காணவோ முகமன் கூறவோ உறுதி சொல்ல முடியுமா

புத்தாண்டை எப்படி வரவேற்கிறோம்--முன் இரவு
கூடிக்களித்து சோமபானம் அருந்தி சீயர்ஸ் சொல்லி
வாழ்த்துதல் ஒரு சம்பிரதாயமாகே மாறுகிறது......
பிரதிக்ஞைகள் பல பலரும் எடுக்கிறார்கள்-( இருமுடி
எடுக்கும் ஐயப்ப பகதர்கள் பலரும் விரதம் இருத்தல்போல்
விரதகாலம் முடிந்ததும் தொடரும் பழைய பலவீனங்கள் ).
பிரதிக்ஞைகள் பெயரளவில்மட்டும் இருந்தால் போதுமா.?.
கடந்து வந்தபாதை கற்பித்தது என்ன, பட்டியல் வேண்டாமா.?.
இன்று நாம் காண்பவரை அடுத்த நாள்---நாளென்ன அடுதத் நொடி
காண்பதே நிச்சயமில்லை....காணும்போதும் பழகும்போதும்
அன்பு செய்வோம், ஆறுதல் அளிப்போம், தோள்கொடுப்போம்
ஆக என்றும் நல்லவராக வாழ பிரதிக்ஞை எடுப்போம்
இன்றுபோல் என்றும் மனித நேயம் பழக  அன்பர்களே
என் மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

கோவிலும் கோவிலைச் சார்ந்தும்


                     கோவிலும் கோவிலைச் சார்ந்தும். .....
                     --------------------------------------------------




வலைப் பக்கம் வந்து சில நாட்கள் ஆகிவிட்டது. இடைவெளிக்குப் பின் எழுதும் போது கடவுள் பற்றியும் கோவில் பற்றியும் எழுதினால் பலரும் படிப்பார்கள் என்று தோன்றுகிறது. நாங்கள் வசிக்கும் பகுதி ஏறத்தாழ ஒரு மினி கேரளா என்று சொல்லலாம்.மலையாளிகளுக்கு பகவதிக்கு அடுத்தது ஐயப்பன் வழிபாடு பிரதானம் நாங்கள் வசிக்கும் பகுதியில் ஒரு ஐயப்பன் கோவில் உண்டு.பெங்களூரில் சற்று பிரசித்தியானது. ஜலஹள்ளி ஸ்ரீஐயப்பன் கோவில் என்று பெயர். வழக்கம் போல் இந்த வருடமும் கார்த்திகை மாதம் முதல் ஐயப்ப சீசன் களை கட்டி விட்டது. ஏராளமான ஐயப்ப பக்தர்களின் கூட்டம் எப்பொழுதும் கோவிலில் மாலை போடுவதும் இருமுடி கட்டுவதும் சபரிமலைக்குப் பயணம் செய்வதுமாக இவற்றையெல்லாம் பார்க்கும் போது என் குதர்க்க புத்தி மீண்டும் எனக்குள் கேள்விகள் கேட்கிறது.
பொதுவாக சபரிமலைக்குப் போகிறவர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதியிலிருந்து ஒரு மண்டல காலம் விரதம் இருந்து  இருமுடிகட்டி சபரிமலைக்கு பயணம் செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்த ஒரு மண்டல கால விரதம் அவர்களை மனசும் உடலும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வைக்க உதவும் உடல் தூய்மை, மனக் கட்டுப்பாடு. இந்திரியங்களை கட்டுக்குள் வைத்தல் ஆண்டவன் நாமஸ்மரணம் போன்றவை அனுஷ்டிக்கப் பட்டால் மற்ற காலங்களிலும் அது நம்மை நாமே அடக்கியாள உதவும் என்பது பொதுவாக அறிந்து கொண்டது. மலைப் பயணம் கடினமாக இருக்கும் என்பதால் காலணி இன்றியும், மிதமாக உணவருந்தியும் , மற்றவர்களுக்கு இந்த மாதிரி விரதம் இருப்பவர்  என்பதைத் தெரியப் படுத்தவும் வேண்டி  கருப்பு உடை அணிந்து முக ஷவரம் செய்யாமல் இருப்பது என்ற கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் தற்காலத்தில் மாலை அணிந்து மறுநாளே மலைக்குப் பயணிக்கிறார்கள். சபரிமலை ஐயப்ப தரிசனம் என்பது ஒரு சீசனல் டூர் ஆகிவிட்டது.  விரதமிருப்பது என்பது போயே போச். ஒரு மண்டல விரதம் என்றால் கார்த்திகை முதல் நாள் தொடங்கினால் மார்கழி மாதம் பத்தாம் தேதிவாக்கில்தான்  முடிவடையும் பயணம்  மேற்கொள்ள முடியும். சபரி மலை ஐயப்பதரிசனத்தில்  practically , everything  is compromised.  எது எப்படியோ இருக்கட்டும் , இதனால் சபரிமலைக்குப் போவோர் எண்ணிக்கை அபரிமிதமாகக் கூடிவிட்டது. பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் ஆனால் பலன் பலருக்கும் போய்ச் சேருகிறதே. அது போதாதா. ?
ஜலஹள்ளி ஐயப்பன் கோவில் விழாவுக்கு வருவோம். டிசம்பர் மாதம் பதினாறாம் நாள் எங்கள் ஏரியா பூஜையுடன் கொடி ஏற்றப்பட்டது.அருகில் இருக்கும் கருமாரியம்மன் கோவிலிலிருந்து ஊர்வலம். வாணவேடிக்கைகள் சூழ கேரளத்தின் பாரம்பரிய கலைகள் ,  காட்சிகளுடன் பஞ்ச வாத்தியங்களுடன் கொட்டு மேளம் முழங்க பெண்குழந்தைகள் தாலத்தில் விளக்கு வைத்து ஏந்திவர ஸ்ரீஅயப்பன் தேரிலும்  யானை மீதும் வருவதைப் பார்க்கும் போது ஒருபுறம் இப்படியாவது பாரம்பரியக் கலைகள் பாதுகாக்கப் படுவது மனசுக்கு இதமளிக்கிறது. , நகரங்களில் வசிக்கும் இளைய தலைமுறையினர் கண்டு உணர ஒரு வாய்ப்பு, என் கைபேசியில் எடுத்த சிலகாணொளிகளை இத்துடன் வெளியிடுகிறேன். தரமாக இல்லை என்றாலும் ஒரு ஐடியா கிடைக்கும். முதலில் ஏரியா பூஜை முடிந்து கொடி யெற்றம் . அதன் பிறகு தினமும் சுற்றுவட்டார மக்களின் பூஜைகள் தினமும் நடக்கும். 16-ம் தேதி துவங்கிய விழா  22-ம் தேதி பள்ளிவேட்டை, 23-ம் தேதி ஆராட்டு என்று நடந்து 26-ம் தேதி மண்டல விளக்கு பூஜையுடன் நிறைவு பெற்றது.
இப்பொழுதெல்லாம் கோவிலில் மதியம் தினமும் அன்னதானம் நடக்கிறது, விழாக்காலங்களில் தினமும் விருந்தே படைக்கின்றனர்.
மலைக்கு போவோர் வசதிக்காக கோவிலிலேயே எல்லாவிதப் பொருட்களும் கிடைக்கும் படியாக ஒரு கடையும் இயங்குகிறது. சபரிமலைக்குப் போவோர் வசதி கருதி கட்டு நிறைத்தலுக்காகவும் வசதிகள் இருக்கின்றன. கோவில் ட்ரஸ்டின் மேற்பார்வையில் சகல வசதிகளுடன் கூடிய பள்ளி இறுதிவரை படிக்க வசதியாக கல்விக்கூடங்களும் இருக்கிறது. ஒரு திருமண மண்டபம் ஒரு மருத்துவமனை எல்லாம் இருக்கிறது. இப்போது கோவிலை விஸ்தரிக்க ஒரு அடி நிலம் அளிக்க வேண்டியும் கோரிக்கை இருக்கிறது. கோவிலை அடுத்துள்ள இடத்தை வாங்கும் முயற்சியே இது. ஒரு அடி நிலம் ரூ.7000-/ ஆகிறது
முன் காலத்தில் கோவிலைச் சுற்றியே எல்லா வளர்ச்சிகளும் இருந்ததாக அறிகிறோம்  அதேபோல் இங்கும் கோவிலை மைய்யமாகக் கொண்டு பல நல்ல விஷயங்கள் நிறைவேறுவது மனசுக்கு இதமாய் இருக்கிறது. தனிப்பட்ட மனிதர்கள் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். சில நல்ல காரியங்கள் கோவிலின் அடிப்படையில் நிகழ்வது நிறைவாய் இருக்கிறது. 

 .    


(மேற்கண்ட காணொளிகள் 2010-ம் ஆண்டைய விழாவின் போது எடுத்த்து இந்த ஆண்டு யானை வரவில்லை. ஆனால் இன்னும் சிறப்பான ஊர்வலம் நடந்தது.)

வெள்ளி, 20 டிசம்பர், 2013

கடந்து வந்த பாதை -திரும்பிப் பார்க்கிறேன்


                 கடந்து வந்த பாதை-திரும்பிப் பார்க்கிறேன்.
                 ----------------------------------------------------------


சில நாட்களாக நான் எழுதிய பதிவுகளையே திரும்பிப் பார்க்கிறேன் ஆகஸ்ட் மாதம் 2010-ல் தொடங்கிய என் பதிவுலகப் பிரவேசம்இன்று வரை தடையேதுமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.என்றால் அதற்கு முக்கிய காரணம் என் எழுத்துக்கு மதிப்பு கொடுத்து வந்து என்னை உற்சாகப் படுத்தியவர்களின் பங்கும் அதிகம் உண்டு என்று தெரிகிறது. புதுத் துடைப்பம் நன்கு சுத்தம் செய்யும் என்பது போல என் ஆரம்பகால எழுத்தும் சுமாராக இருந்திருக்கிறது. மேன் மேலும் அப்படி எழுதுவதற்கு ஊக்கம் அளித்த பதிவுலக வாசக நண்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனம். நானும் எழுத முடியும் என்று நம்பவைத்து ஊக்கப் படுத்திய நண்பர்களை நன்றியுடன் திரும்பிப் பார்க்கிறேன் உங்களிடமும் பகிர்கிறேன் ( என் எழுத்துக்கான பின்னூட்டங்கள்--எனக்கானது அல்ல.) பதிவுக்குத் தலைப்பைச் சொடுக்கவும்.பதிவுகளைத் தேடிச் செல்ல வேண்டாம் உ-ம்
தலைப்பு -சில சந்தேகங்கள். இது அண்மையில் என் பதிவுகளைப் படிக்கத் தொடங்கி இருக்கும் நண்பர்களுக்கு உதவும். எனக்கும் உதவும்...! 

"அவர்கள் மனம் ஏற்கும் விஷயங்கள் முதலில் காரணம் கேட்பதில்லை.காரணம் காணத் துவங்குகையில் விரும்பிய பொருளிலோ கருத்திலோ முரண்படத் துவங்குகிறோம் என நினைக்கிறேன்"
"தூரத்தில் நின்று கடவுளின் உருவை யூகிக்க வேண்டியுள்ளது"....

I can't help but smile! :) light or no light-- aren't we all doing the same?

.

எண்ணத் தறியில் எட்டு மணி நேரம் 

மகிழ்ச்சி..வியப்பு..எண்ணங்களின் அதிர்வுகள் என உறைந்துபோய் நிற்கிறேன். ஒரு கைதேர்ந்த சிற்பியின் கைவண்ணத்தில் உருவாகும் கலைநயம் மிளிரும் சிலையைப்போல இந்தக் கட்டுரையைக் காண்கிறேன். உங்களின் அபாரமான எழுத்தாற்றலை உங்கள் பணி விழுங்கி செரித்திருக்கிறது பல்லாண்டுகளாக என்று உணர்ந்துகொள்கிறேன். எரிமலைபோல மனதுக்குள்ளே கனன்றுகனன்று இன்று வெடித்து பரவுகிறது. அருமையான சுய அனுபவத்தில் அனுபவித்த பொருண்மையை அல்லது அருகிருந்து பார்த்த பொருண்மையை இத்தனை சுவாரஸ்யமாக சொல்லியிருப்பது அருமை. நல்ல கலைநயத்தோடு உண்மை பொறுப்புணர்ச்சியோடும் அலசப்பட்ட கட்டுரை இது.


எழுத்தை எழுத்தாகக் கொண்டு படித்தால் மனம் புண்படாது படிக்கலாம் என்பது என் எண்ணம். முகந்தெரியாதவரை காரணமில்லாமல் தாக்குவதில் எழுதுகிறவருக்கும் motive இல்லை என்பதை நம்புகிறவன் நான். எழுத்தின் வெளிப்பாடு பலசமயம் பலவித புரிதல்களை ஏற்படுத்தக்கூடியதால் படிப்பவரும் திறந்த மனதோடு, அடிப்படை நம்பிக்கையோடு படித்தால், இணையத்தில் அருமையான கலந்தெழுத்தாடல்களில் கலந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.



வயோதிகம் குற்றமும் இல்லை. தண்டனையும் இல்லை. என் போன்ற சிறியவர்களுக்கு முன் ஏர் பிடித்துச் செல்லும் உங்களின் அனுபவம் கொடையும் வேண்டாத போது கிடைத்த வரமும்.

>>>கிளிக்கு ஒரு நெல்
ஆகா!
 
வாழ்வின் விளிம்பில் 

இருத்தலையும் இல்லாதிருத்தலையும் இவ்விரண்டையும் மனமெனும் குறளி பார்ர்க்கும் பார்வையையும் எத்தனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள் பாலு சார்?

இறுதியாக ஒன்று சொல்ல வேண்டும். இதெல்லாம் படிக்கிற நேரத்துப் பார்வையில் பட்ட கருத்துக்களே தவிர, இப்படித் தான் இந்தக் கதையைப் பார்க்க வேண்டும் என்றில்லை.
இன்னொரு நேரத்துப் படிக்கும் பொழுது வேறு வகையான எண்ணங்கள் தோன்றலாம். இப்படியெல்லாம் சிந்திக்க வைப்பதே நல்ல கதைகளுக்கு அடையாளம். வெறும் பொழுது போக்கு கதைகளுக்கில்லாத சிறப்பும் கூட. அதனால் தான் எழுதுகிற எழுத்தின் மூலம் ஏதாவது ஒரு செய்தியைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்ற நினைப்புகளே எக்காலத்தும் போற்றுதலுக்குள்ளாகிறது.






அறிவியலையும், ஆன்மீகத்தையும் கேள்வி கேட்டு, அந்த இரண்டையும் குழைத்து கொடுத்திருக்கிறீர்கள். விடை தெரியா வினாக்களை எழுப்பியிருக்கிறீர்கள்.

இதெல்லாம் கேள்வி கேட்டு பதில் சொல்வதில்லை, ஜிஎம்பீ சார்! அது இதுவோ என்று சலனமாக உணரப் படுவது.. உணர்ந்ததும் போக்குக் காட்டி இதுவில்லையோ என்று மயங்க வைப்பது. வார்த்தைகளால் விவரித்து இன்னொருத்தருக்குச் சொல்லமுடியாது, வியக்க வைப்பது. தானே தன்னுள் தோண்டி தானின் தரிசனம் காண்பது.

கேள்விக்குள் பதிலை மறைத்து பதிலுக்குள் கேள்வியை விதைத்துச் செல்லும் உங்கள் பதிவு அருமை

தன்னுள் தோண்டி தானிiன் தரிசனம் காண விழையும்போது, தன்னுள் ஒரு தான் இருப்பதாக எண்ணிக்கொண்டே தேடுகிறோமோ?இதுவோ அதுவோ என்று போக்கு காட்டும் ஒன்றை தன்னுள் தேடுதல், இந்த வாழ்வில் இயலாதது. மனிதாலயத்தில் அரனாயிருந்த எனும்போது, ஏதோ ஒன்றை முடிவாய் நினைத்து தேடுதல் போலாகும் . என் கூற்றை சற்றே கவனமாய்ப் பாருங்கள் அண்டமே ஒன்றின் , இருட்டின் வியாபிப்பு என்ற மெய்ஞானப்படி தேடுவதும், உயிரென்பதும் ஆன்மா என்பதும் எண்ணிக்கையில் மாற்றமில்லாதிருக்க வேண்டும் என விஞ்ஞானப்படி அறிவதும், வரைந்து முடித்த வட்டத்தின் துவக்கப் புள்ளியை தேடுவது போன்ற பலன் தராத ஒன்று. ஆகவே இருளில் இருப்பதே சுகம், நம்பிக்கையே ஞாயிறின் ஒளி என்று கூறி என்னை நானே தேற்றிக் கொண்டு அந்த விடியலுக்காக காத்திருக்கிறேன் என்றே கூறியுள்ளேன்.
 
தேடலின் நிழல் நீண்டு செல்கிறது ஒளி தேடி.பின் ஒளி மங்கி நிழல் மடிந்து ம்ற்றொரு விடியலுக்காய்க் காத்திருக்கிறது.

அது எதுவென நினைக்கிறோமோ அது அதுவில்லை.

புதிரும் விடையும் ஒன்றில் ஒன்றெனப் பிணைந்து படரும் இவ்வாழ்க்கையின் சக்கரத்தை நான் என் மகனிடம் கொடுத்துச் செல்வேன்.அவன் கேள்விகள் மேலும் தொடர அவன் மகனிடம் கொடுத்துச் செல்ல மெல்ல உருளும் நில்லாச் சக்கரம்.
 

மற்றெல்லா உணர்ச்சிகளையும் போலத்தான் காதலும்.

காத்திருத்தல்-விட்டுக்கொடுத்தல்-பரஸ்பர நம்பிக்கை-வெளிப்படையான தன்மை-மரியாதையாய் நடத்துதல்-இவையெல்லாம் இருந்தால் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் மட்டுமல்ல,எல்லா இரு பந்தக்களுக்குமிடையில் சொர்க்கம் பிறக்கும்.

இந்த மாதிரியான குணங்கள் கொண்ட இருவரில் ஒருவர் பேசினால்-ஒருவர் சிந்தித்தால்-போதும் என்ற அளவில் ஒத்த சிந்தனை நிலவும்.

ஆதலினால் மானிடரே எல்லாவற்ரையும் காதல் செய்வீர்.காதல் என்ற வார்த்தைக்குள் அடைபடாத காதல் செய்வீர்.

நல்ல பதிவு. "காதல்" என்ற வார்த்தையைக் கண்டதும் உங்கள் பதிவின் பக்கம் வராமல் இருக்க முடியவில்லை..காதல் என்ற வார்த்தைக்கே அத்தனை வலிமை இருக்காக்கும் :))
 
//குறைகளையும் அரவணைத்து விட்டுக்கொடுக்கும் சுபாவம்தான் காதல் வாழ்வில் வெற்றிக்கு வழி வகுக்கும்.//

இது உண்மை ஐயா...ஜெமினி கணேஷன் முதல் மனைவி பாப்ஜி அவர்கள் கிட்டே அவங்க பெரிய பொண்ணு கமலா கேட்டு இருக்காங்க..."எப்படியம்மா ...இந்த அப்பாகிட்டே சகிச்சுட்டு குடும்பம் நடத்தின...உன் காதலை துச்சமாக்கிட்டு எத்தனை பொண்ணுங்களை கட்டிக்கிட்டு வரார் னு"...அதுக்கு பாப்ஜியம்மா சொல்லி இருக்காங்க..." நான் அவரை மிகவும் காதலிக்கிறேன்...காதல் என்பது குறைகளையும் தாண்டி நேசிப்பது தான்....பெண்களிடம் சபலப்படுவது அவர் குறை...ஆனால் அந்த குறையவும் தாண்டி அவரை காதலிக்கிறேன்..." அப்படி னு சொல்லி இருக்காங்க...(இதை நான் ஒரு புத்தகத்தில் படிச்சேன் பாலு ஐயா...நீங்க அந்த வரிகளை சொல்லும்போது இந்த சம்பவம் தான் மனதில்.

ஐயா... கொட்டியிருக்கிறீர்கள். அன்பின் வழியது உயர்நிலை என்பார்கள் ஆன்றோர்கள். அன்புதான் அழியாக் காதல். அது மனதின் ஊடாட்டத்தால் வருவது. யாயும் யாயும் யாராகியரோ...குறுந்தொகைப் பாடல் அற்புதமாய் காதலுக்கு விளக்கம் கூறும். இப்போது அதிக விழுக்காடு மெய்யின் புணர்ச்சிக்காகவே அலைபாய்கிறது காதல் எனும் பெயர் சூட்டி. இதுதான் இப்போது காணும் மெய். பள்ளிக்கூடம் செல்லும் சிறு பெண் பிள்ளைகளை ரவுடிகள் காதல் கொள்வதுபோல பல படங்கள் இந்த மண்ணில் காதலைக் குழிதோண்டிப் புதைக்க வழி செய்துகொண்டிருக்கின்றன. திரைப்படங்கள் எனும் பெயரால் அவை சீரழிவைத் தொடங்கி வைத்துவிட்டன கேவலமாய் பணத்தை ஈட்டிக்கொண்டு.
 
அன்பே சிவம் என்று திருமூலர் இன்னும் உயர்வாக உயர்த்தி வைத்தார். 47 வருட உங்கள் காதல்வாழ்விற்கு என்னுடைய பெருமைமிகு பணிவான வணக்கங்கள் வாழ்த்துக்கள். காதல் இல்லாமல் காதலின் பொருண்மை புரியாமல் காதலை பெருமைப்படுத்தாமல் கௌரவப்படுத்தால் உயர்த்திப் பிடிக்காமல் அந்தப் பெயரை பலிபீடமாக வைத்துக்கொண்டு பல உயிர்கள் வதைபடுகின்றன நாள்தோறும். வருத்தம். மிக வருத்தம். சரியான நேரத்தில் சரியான பதிவு. இளையவர்கள் படிக்கவேண்டும். அனுபவம் நல்ல இலக்கைக் காட்டும் பாதையாகும்.
---------------------------------------------------------

..


 



 


 



 

செவ்வாய், 17 டிசம்பர், 2013

கவிதை எழுதலாமே


                   கவிதை எழுதலாமே
                   ------------------------------
 சில மாதங்களுக்கு முன் சில படங்களை வெளியிட்டுக் கவிதை எழுதலாமே என்று அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் என் துரதிர்ஷ்டம் படங்கள் தெரிய வில்லை என்று பலரும் பின்னூட்டமிட்டிருந்தார்கள். அப்போது படங்களை வெளியிடும் நுணுக்கம் எனக்குத் தெரியவில்லை. இப்போது அதே படங்களை வெளியிடுகிறேன். மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். இது போட்டி ஏதுமில்லை. பொருள் கிடைத்து படமும் இருக்க எழுதுவது சிரமமிருக்காது. கவிதைப் பதிவுகளை எதிர்நோக்கி. எழுதுகிறவர்கள் என் பின்னூட்டத்தில் தெரியப் படுத்தினால் நலமாயிருக்கும்.

மரத்தில் மயில்
 
தோகைவிரித்த மயில்
பறக்கும்மயில்-1
பறக்கும் மயில்-2
பறக்கும் மயில்-3
பறக்கும் மயில்-4
படங்கள் தெரியாததால் கவிதைகள் ஏதும் வரவில்லை. பிறிதொரு பதிவில் நான் மயில் குறித்த கவிதை எழுதிப் பதிவிட்டிருந்தேன். அதையே இப்போது இங்கு மீண்டும் பகிர்கிறேன். 

                        சூரா உன் சதியா.?
                      --------------------------


தோகை விரித்துக் களிநடம் புரியும் கான மயிலினைக் கண்டதுண்டு.
செறுக்குடன் சிறு நடை பயிலும் மயிலினைக் கண்டதுண்டு.
கர்ண கொடூரமாய் அகவும் மயிலினைக் கண்டதுண்டு.
பறவை எனப் பெயர் இருப்பினும் அதிகம் பறக்காத மயிலே
உன் மீதேறியா ஞாலம் வலம் வந்தான் கந்தன்,ஏதும் அறியாப் பையன். !

மரமாய் மாறி அலைக்கழித்தவனை சக்திவேலால் இரு கூறாய்ப்
பிளந்து சூரா உன்னை ஆட்கொளவேண்டி பாலகன் மாயன் மருகன் 
உன்னை ஒரு பாதி சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தினான்
மறுபாதியுனை  வாகனமாக்கி மயில்வாகனன் ஆனான்.
முருகன் என்றால் அழகன் என்பர் அதற்கொப்ப அவன்
வாகனமாய் நீயும்  அழகு மயிலாய் நின்றாய்.. .
முருகனை அன்றொருநாள் அப்பாவியா எனக் கேட்டேன்.
என் எண்ணம் வலுக்கிறது. பறக்காத பறவையாகிய உன்னை வாகனமாக்கி
ஞாலம் வலம் வரத் துணிந்தவனை நேரம் பார்த்துத்
தோற்கடிக்கத் துணிந்தாயோ சூரா  பறந்து தூரம் கடக்க
இயலாதவன்,நீ சற்றே பறந்து காட்டி  அவனை ஏமாற்றிக்
காலை வாரி கனி இழக்கச் செய்தது என்ன நியாயம். ? .           
.