சனி, 12 மார்ச், 2016

யார் யாரென்று தெரிகிறதா? சில அனுமானங்கள்


                                  சில அனுமானங்கள்
                                  --------------------------------
எனக்கு  மனிதர்களைப்  படிப்பதில்  ஒரு ஆர்வம் உண்டு. நாம் காண்பவர்கள் , பேசுபவர்கள்பழகுபவர்கள்  என்று  பலரது  குணாதிசயங்களை  ஆராயும்போது  இன்னின்ன  பேர்  இப்படியிப்படி  இருநதால்  இன்னின்ன  குணங்களைக்  கொண்டிருப்பார்கள்  என்று ஓரளவு  சரியாகக்  கணிக்க  முடிந்தது  கண்டு எனக்கு என் மேலேயே  கொஞ்சம்  பெருமிதம்  தோன்றுவதுண்டு. முகம்  பார்த்து  மனிதர்களைப்  படிப்பதில் ஏற்பட்ட  நம்பிக்கை  முகம்  காணாதவர்களை  ஏதாவது  முறையில்  கணித்துப்  பார்க்க  வேண்டும் என்ற ஆவல்  உந்தியதன்  விளைவே  இந்தப்  பதிவு. வலையுலக  நண்பர்களை, அவர்களின்  எழுத்தின்  மூலம்  கணிக்க  முயற்சிக்கிறேன். பெயர்  கூறாமல் அவர்களைப்  பற்றிய  என் அநுமானங்கள், படிப்பவர்களுக்குப்  புரிந்து, சரியாக  இருப்பதாகத் தோன்றினால் நான் ஓரளவு  வெற்றி  பெற்றவனாவேன். ஆனால்  அறிந்து  கொள்வதுதான்  எப்படி.? எப்படியானாலும்  ஒரு பதிவுக்கு  விஷயம்  கிடைத்து  விட்டது. இவர்களின்  எழுத்தின்  மூலம், நான்  இவர்களைப்  பற்றி  கொண்டுள்ள  அனுமானங்களே
இதே தலைப்பில் 2011-ன் ஆரம்பத்திலேயே எழுதி இருக்கிறேன்  ஆனால் அதில் அனுமானிக்கப்பட்டவர்கள் சிலர் வலை உலகில் எழுதுவதை நிறுத்தி இருக்கிறார்கள் இன்னும் தொடர்ந்து எழுதுபவர்களைப் பற்றிய கணிப்பை மாற்றாமல் அப்படியே பதிவிடுகிறேன் எழுதியதை நிறுத்தியவர்களுக்குப் பதில் இப்போது எழுதும் சிலரைச் சேர்த்து எழுதுகிறேன் யார் பற்றிய அனுமானம் எது என்று கண்டு பிடிக்க முடிகிறதா பாருங்களேன்

1)       இவர்  எப்படியோ.. .. ஆனால்  தான்  மிகவும்  முக்கியத்துவம்  வாய்ந்தவர் என்று  எண்ணுபவர். இவர்  செய்வதற்கும்  சொல்வதற்கும், எதிர்ப்பு  இருநதால்  விரும்பாதவர். தனக்குத்  தெரியாத விஷயங்கள்  மிகவும்  குறைந்ததே  என்ற  எண்ணம்  கொண்டவர். ஒருவரை  முன்னிலைப்  படுத்தவோ  கீழிறக்கவோ தன்னால்  முடியும் என்று நம்புபவர். கஷ்ட  நஷ்டங்கள்  அதிகம்  அறியாதவர்.முகஸ்துதிக்கு  மயங்குபவர் (மயங்காதவர்  அநேகமாக  யாருமில்லை.)மொத்தத்தில்  வாழ்க்கையை  அனுபவிக்கத்  தெரிந்தவர். இப்போதும்  அனுபவித்துக்கொண்டிருக்க  வேண்டும்.

2) 
இவர்  குழந்தை  உள்ளம்  கொண்டவர். மிக  எளிதில்  உணர்ச்சி  வசப்படக்  கூடியவர். வெளுத்ததெல்லாம்  பால்  என்று  நம்பக்கூடியவர். எல்லோருடைய  குணத்திலும்  நல்லதையே  காண்பவர். யார்  மனமும்  புண்படாமல்  இருக்க பிரத்தியேக  முயற்சிகள்  எடுக்கக்கூடியவர். நிறையத்  தெரிந்தவர். இருந்தாலும்  கொஞ்சம்  தாழ்வு  மனப்பான்மை  கொண்டவராயிருப்பாரோ  என்ற  சந்தேகம்  எனக்குண்டு. நான்  தவறாக  இருக்கலாம்தவறாக  இருக்க வேண்டும்.

தான்  உண்டு  தன்  பணி  உண்டு ,தன்  உலகுண்டு  என்று ஒரு  வட்டத்துக்குள்  இருப்பவர்  இவர். இவருக்கு  யாரையாவது  பிடித்துப்  போனால்  அவர்களுக்காக  ஏதாவது  செய்ய வேண்டும்  என்று  எண்ணுபவர். செய்கிறாரோ  இல்லையோ  என்பது  வேறு  விஷயம். சின்னச்சின்ன  விஷயங்கள்  கூட  இவருக்குப்  பிரமாதமாகத் தெரியலாம். மொத்தத்தில் ஒரு  QUIET AND GOOD MAN. இவரால் யாருக்கும்  எந்தத்  தொந்தரவும்  இருக்காது
4)  இவருக்குத்  தெரிந்த விஷயங்களில்  ஈடுபாடு  அதிகம்  கொண்டவர். தெரிந்ததை  நன்றாக  அறிந்தவர். தெரியாததை  சில  சமயம்  தெரிந்ததுபோல்  காட்டிக்  கொள்ளத்துடிக்கும்  குணம் ,மற்றவரிடம்  அதைக்  காணும்போது  அடிபணியும்  தன்மையும்  கொண்டவராக  இருப்பாரோ  என்ற சந்தேகம்  எனக்குள்ளது. குடத்திலிட்ட  விளக்குபோல்  பிரகாசிக்கும்  இவர்  குன்றின்  மேல்  வைத்தால்  அணைந்து  விடக்  கூடாதே  என்ற  பரிதவிப்பு  எனக்குண்டு. தன்  திறன்  தானறிந்து  பிறரை அறியும்  குணத்தையும்  இவர்  வளர்த்துக்கொண்டால்  இவர் வெகு  தூரம்  செல்ல  வாய்ப்புள்ளது.
5 சுருங்கச் சொல்வது என்றால் என்ன என்றே தெரியாதவர் எப்படிப்பதிவிட்டாலும் குறை என்று சொல்ல மாட்டார் அதேபோல் குறை சொன்னாலும் மசியாதவர் பல துறைகள் பற்றியும் எழுதுவார் அதற்காக ஆராய்ச்சி எல்லாம் செய்வார்எனக்கு என்னவோ இவர் பலருக்கும் ஓவர் மரியாதை தருகிறாரோ என்னும் சந்தேகம் உண்டு.  அது உண்மையிலேயே மரியாதைதானா என்றும் புரிவதில்லை
6. சில எண்ணங்களை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர் சிலரை வெகுவாக சிலாகிப்பார் மறதி அதிகம் அல்லது மறதிஎன்று கூறுவது ஆதாயமாக இருக்கலாம் சில நேரங்களில் நினைத்துப் பார்க்க இயலாதவரை பிரமாதமாக எழுதுவார் இவருக்கு என்று சில சித்தாந்தங்கள் இருந்தாலும் அதை தெரிவிக்காதவர்
7. பல விஷயங்களில் துறைபோகியவர் என்று கருதப்படுபவர்இவர் எழுதாத விஷயங்களே இல்லை எனலாம் இவர் எழுதுவன எல்லாம் எல்லோருக்கும் புரியும் என்று எண்ணுவார். சில விஷயங்களில் விட்டுக் கொடுக்காதவர். எந்த விஷயம் கூறினாலும் அதில் அவருக்கும் அனுபவம் உண்டு என்று கூற முயல்பவர் பொதுவாக ஒரு பிள்ளைப் பூச்சி எனலாம்
8 இவர் என்ன எழுதினாலும் சிலாகிக்கவே ஒரு கூட்டம் உண்டு இன்னதுதான் எழுதுவார் என்று சொல்ல இயலாதுசில விஷயங்களில் அதீதப் பற்றும் சில விஷயங்களில் அதீத வெறுப்பும் காட்டுவார் ஏனோ ஒரு தாழ்வு மனப்பான்மை என்று கூடத் தோன்றுகிறதுஅவர் எழுதுவது எல்லாம் எல்லோரும் படிக்க வேண்டும் என்னும் விருப்பம் உள்ளவர் ( எல்லோருக்கும்  அப்படித்தானே)
9.ஒரு புத்தகப் பிரியர். தனக்கென ஒரு இடம் வகுத்துக் கொள்ள முயன்றால் நிச்சயம் முடியும் ஆனால் இவர் மட்டும் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டாலும் தன் கருத்து இதுதான் என்று சொல்லத் தயங்குபவர்( வலையுலகில் பெரும்பாலோர் அப்படித்தானே இருக்கிறார்கள்) எனக்கென்னவோ ஏதோ ஒரு தாழ்வுணர்ச்சியே அவரை முன்னிலைப் படுத்திக் கொள்ளதயங்க வைக்கிறது என்று தோன்றுகிறது
10 ஒரு தனிக்காட்டு ராஜா என்னும்  எண்ணமே இவரை நினைத்தால் எழுகிறதுஇவரது மதிப்பீடுகள்தான் சரி என்று எண்ணம் கொண்டவரோ என்றும்தோன்றுகிறதுநிறையவே தனித்திறமைகள் உள்ளவர் என்றாலும் அதுவே இவரது சுபீரியர் காம்ப்லெக்ஸுக்கு வழி வகுக்கிறதோ என்றும் தோன்றுகிறது தான்  செய்வதே சரி என்றும் அதை ஆமோதிக்க பலரும் இருக்கிறார்கள் என்னும்  எண்ணமும் உள்ளவர்
சிலரைப் பற்றி எழுதி இருப்பது குறைகள் போலத் தோன்றினாலும் குறைகளே இல்லாத மனிதரே இல்லை என்று திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டுகிறேன்
  
 என்ன வாசகர்களே இந்தமட்டும் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?இது ஒருவகையான குத்துமதிப்பீடுதான் யாரையும் நோகடிக்கும் எண்ணம் இல்லை. இதில் கூறப்பட்டவர்கள் யார் யார் என்று அனுமானிக்க முடிகிறதா. முயற்சி செய்துபாருங்களேன் ஒரு க்லூ. முதல் நான்குபேர் முதலில்எழுதிய பதிவிலேயே இடம் பிடித்தவர்கள் ஏனையோர் பற்றிய கணிப்பு புதிது.          

 


                              


                   

 




வியாழன், 10 மார்ச், 2016

அம்பர்நாத் பயிற்சி பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு


                                   ATS AMBERNATH ALUMNI MEET
                                   -------------------------------------------------
முன்னைய பயிற்சி மாணவர் சந்திப்புஃபெப். 27-ம் தேதி காலை எட்டரை மணியிலிருந்து துவங்கும்  என்று நிகழ்ச்சி நிரல் கூறியது நானும் மனைவியும் போய்ச் சேரும்போது மணி ஒன்பது ஆகி இருந்தது போனவுடன் வருகைப்பதிவு செய்யச் சொன்னார்கள்பெயரைச் சொன்னவுடன்  ஒரு எண்ணைக் கொடுத்தார்கள் அந்த எண்ணை இன்னொரு கவுண்டரில் கொடுத்தபோது எங்கள்  பெயர் கொண்ட அடையாள அட்டையும் ஒரு ஹாண்ட் பாகும் கொடுத்தார்கள் அடுத்துக் காலை உணவாக இட்லி வடை பொங்கல் போன்றவை பஃப்ஃபே முறையில் எடுத்துக் கொண்டோம்  அதன் பின் சில புகைப்படங்களைக் க்லிக்கினேன் முதலில் அடையாளம் தெரிந்தவர்கள் . பிறகு வந்த கூட்டத்தின்  ஒரு பகுதி என்று 
  சந்திப்பு விழாவில் வழக்கம் போல் கடவுள் துதி குத்து விளக்கு ஏற்றல், வரவேற்புரை, பிரதம விருந்தினராக NTTF ன்  டைரெக்டர் திரு வேணுகோபால் அவர்களின் சின்ன உரை ( நீண்ட உரைகளைக் கேட்டு வெறுத்துபோன எனக்கு அது பெரிய ரிலீஃப் )   பின் பயிற்சிப் பள்ளியின்  anthem   என்று நிகழ்ச்சிகள் நடந்தேறின
 வெரைட்டி எண்டர்டெயின்மெண்ட்  என்று துவங்கும்  முன் முன்னாள் மாணவர்களில்  எண்பது வயதைத் தாண்டியவர்களுக்கு  கர்நாடகத்தின் வழக்கப்படி பேட்டா என்னும் தலைப் பாகை அணிவித்து கௌரவித்தனர் அவர்களின் துணைவியருக்கு ஷால் போர்த்தினர்.
Spastic society of Bangalore –லிருந்து  சிறார்களும்  சிறுமிகளும் விழாவில் அவர்களது  திறமைகளை காட்டினர்  வாய்ப்பாட்டு வாத்திய இசை நாட்டியம் என்று அசத்திவிட்டார்கள் ஒரு சிறுவன் பாட ஒரு சிறுவன் படம் வரைய என்று நெகிழ்த்தி விட்டார்கள் அந்த சொசைட்டிக்காக  நிதி வசூல் என்றதும் ஒரு மனதாக கூடி இருந்தோர் பணத்தை  அள்ளிக் கொடுத்தார்கள் அவ்விடத்திலேயே அந்த சிறுவன் வரைந்த படமும் விலை போயிற்று. இன்னும் மக்கள் மனதில் ஈரம் இருக்கிறது என்பது புலப்பட்டது சில நிமிடங்களில் ரூ 30,000/-க்கும் மேல் வசூலாயிற்று. என் மனைவியும் ரூ ஆயிரம் கொடுத்தாள்
 இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மதிய உணவுக்காக நேரம் அறிவிக்கப்பட்டது பஃப்ஃபே முறையில் உணவு. அனுமார் வால் போல் நீண்ட வரிசை. பூரி புலவ் நான் குருமா கட்லெட்  சாம்பார் ரசம் தயிர் சாதம்  என்று வகை வகை நினைவுக்கு வரவில்லை. இனிப்பாக பாசந்தி ஐஸ்க்ரீம்  பப்பட் சலாட்  வகையறா வகையறா எல்லோர் சுவைக்கு ஈடாக அமைந்திருந்த உணவு
உணவு முடிந்தபின் பிசினஸ் மீட் என்று பொறுப்பாளர்கள் கூடிப் பேசினர்  அதே நேரம் பெண்களுக்காக தம்போலா விளையாட்டு நடந்தது என் மனைவிக்கு அதிர்ஷ்டம் இருக்கவில்லை
 முடியும் நேரத்தில் தேனீர் இடைவேளையும் வர அவரவர்கள் அறிந்த நண்பர்களைத் தேடி உரையாடினர்  நாங்கள் தேனீர் முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து விட்டோம் இப்படியாக முதல் நாள் சந்திப்பு இனிதே நடந்தது                                  

  
                              
வருகைப்பதிவு
காலை உணவு
விழாமேடை
நிகழ்ச்சி நிரல் 
வருகை தந்தோரில் ஒரு பகுதி


நண்பர்கள்

சிலநண்பர்களுடன் நான் 



விழா பொறுப்பாளர்களில் சிலர்

கௌரவிக்கப்பட்ட மூத்தவர் ஒருவர் 

                                         மூத்தவர்களுக்கு மரியாதை (காணொளி)
ஸ்பாஸ்டிக்  சொசைட்டிஆஃப் பெங்களூருவின் வித்தகர்கள் சிலர் 
வாத்திய இசை
நடனமாடிய சிலர் 

பாடல் ஒலி கேட்டுக் கொண்டே படம் வரைபவர் 

ஆன் த ஸ்பாட்டில்  வரைந்த படம் 



அடுத்த நாள் 28-ம் தேதி நாங்கள் காலையிலேயே வந்து விட்டோம்காலை உணவாக ப்ரெட் ஜாம் ஆம்லெட் இட்லி வடை பூரி  இருந்தது மதிய உணவுக்குப் பின் என் பேரனின் பிறந்த நாளுக்குச் செல்லதிட்டம் அன்று பொதுவாக எந்த நிகழ்ச்சியும் வரையறுக்கப் படவில்லை அந்தநேரத்தை முகமறியா  பள்ளி முன்னாள் மாணவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ள உபயோகித்தோம்எங்களைப் பார்க்கவென்றே ஒரு அழையா விருந்தாளியும் கண்ணாடி தடுப்புக்கு வெளியே  வந்திருந்தார் புகைப்படம் என் மனைவி எடுத்தது என் ஹாண்டி காமிராவை எடுத்துவர மறந்து விட்டேன்
அந்தக் கூட்டத்தில் இருவர் ஒரே மாதிரி உடை உடுத்து அங்கும் இங்கும் உலவுவதைப் பார்த்து பரிச்சயப்பட்டோம் கொல்கத்தாவிலிருந்து வந்தவர்கள் எங்களுக்கு மிகவும் ஜூனியர்கள் ஒருவர் பெயரும் மற்றவர் பெயரும் கூட ஒரே மாதிரி ஒலித்தது இரட்டையர்கள் அதே பள்ளியில் பயின்றவர்கள் ஒருவர் டிபேஷ்  இன்னொருவர் தேபஷ்  (DIPESH DEBASH)
 சும்மா தமாஷுக்கு இருவரும் இரட்டையர்களை மணந்தார்களா என்று கேட்டோம் மிகவும்பலமாகச் சிரித்து இல்லை என்றனர்
 என் நண்பர் ஒருவரும் என் மகன் வீடு வழியே போக இருந்ததால் அவரையும் கூட்டிக் கொண்டு சீக்கிரமே கிளம்பி விட்டோம்  இடையே வந்திருந்தோரை குரூப் குரூப்பாகப் புகைப் படம் எடுத்தார்கள்

 ஒருவழியாய் இரண்டு நாள் ஆலும்னி மீட் முடித்துக் கொண்டோம்
ஆந்தயார் தெரிகிறதா
 
கொல்கத்தா இரட்டையர்கள்
 
மகன் வீட்டில் ஆலிலைக் கண்ணனா?