திங்கள், 18 ஏப்ரல், 2016

அரசியல் ஒரு சிறு அலசல்


                           அரசியல் ஒரு சிறு அலசல்
                          --------------------------------------------
அரசியல் பற்றி எழுதக் கூடாது என்றிருந்தேன் ஆனால் நடக்கும் நிகழ்வுகளைக்காணும் போது எழுதாமல் இருக்க முடியவில்லை
நம்மை நாம் ஒரு ஜனநாயக அரசு என்று கூறிக் கொள்கிறோம் அதாவது பெரும்பான்மையான மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகளால் நம் ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்லிக் கொள்கிறோம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்றாலும்  எல்லோரும் அரசாள முடியாது குறிப்பிட்ட கொள்கை உடையவர்கள் ஒன்று சேர்ந்து கட்சி எனும்  பெயரில் போட்டியிட, பாவம், நாமும் நம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறோம் இதிலென்ன தவறு.?நல்லது தானே …!ஆனால் கட்சி என்று சொல்லும் போது ஒரு கட்டுக் கோப்பான கொள்கையும் இருக்க வேண்டும்  நாடு சுதந்திரம்  அடையும் முன்பு அயலானை அகற்றுவதே குறிக்கோளாக இருந்தது நாட்டை அடிமைத் தளையிலிருந்து மீட்டால்  விடுதலை அடைந்த நாடு இன்னவாறு இருக்க வேண்டும் என்னும் ஏகோபித்த கருத்து உருவாகி இருந்தது நம்மை ஆண்ட பிரதிநிதிகள் சுயநலமற்று இருந்தனர்  இருந்தாலும் பிரதி நிதிகளைத் தேர்ந்தெடுக்கும்  முறையைச் செவ்வனே செய்யவில்லையோ என்று தோன்றுகிறது
  நம்மால் தேர்ந்தெடுக்கப் படுபவர் மக்களில் பெரும்பானமையினரின் ஆதரவு பெற்றவராக இருக்க வேண்டும்  . ஆனால் இப்போது இருக்கும் நடைமுறையில் இது சாத்தியமாகத் தோன்றவில்லை. ஓட்டுப்போடும் உரிமை உள்ளவர்களில் 60 சதவிகிதம் பேர் ஓட்டுப் போடுவதாக வைத்துக் கொள்வோம் போட்டிக்கு நான்கு கட்சிகளோ  கூட்டணிகளோ இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம் அறுபது சத வீத ஓட்டுக்கள் 
நான்கு அணிகளுக்கும்  அளிக்கப் படுகிறது அளித்த ஓட்டுகளில் அதிகம் ஒட்டு பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுகிறார்  அதாவது அளிக்கப் பட்டுள்ள ஓட்டுகளில்அதிகம் ஓட்டுகளைப் பெற்றவர் வெற்றி பெறுகிறார். ஆனால் இவர் ஓட்டுப்போடாத 40 சதவிகித்ததோரால் ஏற்றுக் கொள்ளப் பட்டவரா ? எங்கேயோ தவறு தெரியவில்லையா?விழுந்த ஓட்டுகளில் 40 சதம் வாங்கி இருந்தாலும் இவரது ஓட்டு எண்ணிக்கை மற்றவர்களதை விட அதிகமாக இருந்தால் வெற்றி பெறுகிறார் இதையே கணக்குப் போட்டுப்பார்த்தால் இவரை இருக்கும் மொத்த ஓட்டாளர்களில் 24 சதவிகிதம்  பேரே தேர்ந்தெடுக்கின்றனர் மற்ற 76 சதவீதம் ஓட்டாளர்கள் இவரைத் தேர்ந்தெடுக்கவில்லை இதைத்தான் நான் தேர்ந்தெடுக்கும் முறையே சரியில்லையோ என்றேன்
 சரி இதற்குத் தீர்வுதான் என்ன ?ஒன்று தேர்ந்தெடுக்கப்படுபவர் இருக்கும்  மொத்த ஓட்டாளர்களின் 50 சதவிகிதம் பேருடைய ஆதரவாவது பெற்றிருக்க வேண்டும்  என்னும் சட்டம் வர வேண்டும்இல்லை என்றால் அதற்கு ஏற்றபடி சட்டங்கள்திருத்தப்பட வேண்டும்  இப்போது இருக்கும் நிலையில் தேர்வு செய்து வெற்றி பெறுபவரை விடவெற்றி பெற்றவரை அங்கீகரிக்காதவர்களே அதிகம்
 தமிழ் நாட்டில் இன்றிருக்கும் நிலையில்  போட்டி போடுபவர் யாரையுமே தேர்வு செய்ய மக்கள் விரும்புவதில்லை. மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களும் சரியான மாற்றம் செய்ய முடியாததால் இருப்பவரில் யாருக்கோ ஓட்டுப் போடுகிறார்கள்
 எந்தக் கட்சிக்குமே ஒரு கொள்கை கிடையாது திமுக அதிமுக இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் மற்றபடி கூட்டு சேர்ந்திருப்பவர்கள் மக்களின்  அதிருப்தியில் குளிர் காய விரும்புகிறார்கள் ஒரு பாரம் பரியம் மிகுந்த அகில இந்தியக் கட்சியாக இருந்த காங்கிர்சும்  முகவரி தெரியாமல் போய் இருக்கிறது

மதுவிலக்கு அமலில் இருந்தபோது ஒன்றிரண்டு தலைமுறையினருக்கு மதுவின் பழக்கமே இருக்கவில்லை.1970களின்  கடைசியில் மது விலக்கை நீக்கினார்கள் அதன் மூலம் தங்கள் பைகளை நிரப்பத் தொடங்கினார்கள் இன்னும் சிறிது காலத்தில் அரசே மது விற்பனையைக் கைகொண்டு கஜானாவையும் தங்கள் பைகளையும் நிரப்பினார்கள் அண்மையில் மது விலக்குக்கு ஆதரவாக பெண்மணிகள் இறங்கிய போது கட்சிகள் மது விலக்குக் கொள்கையை மீண்டும் அமல் படுத்தலாமா என்று பரிசீலிக்கத்  தொடங்கி விட்டார்கள் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வைக்கப் படும் மதுவிலக்கை நீக்கியதால் ஆதாயம் பெற்றவர்கள் மாற்றுக் கருத்துக்கு செவி சாய்ப்பார்களா என்பதே சந்தேகம் 
 மக்களின் நிலைதான் பரிதாபமானது இருக்கும்  கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்லது என்று தேர்வு செய்ய வேண்டும் இப்போது இருக்கும் நிலையில் அரசியல் வாதிகள் எல்லோருமே அரசியல் வியாதிகளாக இருப்பதே அவலம்
 ேர்ல் நத்ுவு என்பு அருக்கு அிகம் செலு வைக்கிறு இந்நிலையில் அவ்வப்பாவு மிலத்ில் ாவேர்ல் நந்து கொண்டே இருக்கிறுஇை நீக்கத்ிய அருக்கும்  மாநில அருக்கம்  ஒரே நேரத்ில் ேர்ல் வைப்பு சிந்திக்கேண்டியந்தாண்டு காலம் அரு நப்பு என்பிரிநிிகள்  ெரும்பான் ாக்குகள் அாவஐம்பு சத்ுக்கும் மேல் வங்கியர்காக இரந்தால், சத்ியக் கூறுகள் அிகம் அற்கேற்ப ந்தட்ட ிரத்ங்கள் கொண்டுவுவும் பிசீலிக்கேண்டிய
ாசர்கள் பித்ு அவர்கள் மேலானத்க்கை எழுவு மிகுக்கியம்   .              
                   


 

வியாழன், 14 ஏப்ரல், 2016

கதை கதையாம் காரணமாம்


                                         கதை கதையாம் காரணமாம்
                                          ==========================
இது ஒரு கேட்டு வாங்கிப் போடாத கதை இந்தச் சிறுகதையை என் மனம் போன போக்கில் எழுதியது எங்கோ எப்போதோ கேட்ட சில வழக்கங்கள் கதைக்குக் கரு ஆயிற்று. ஆனால் கதை எழுதுவதற்கான உத்தி  சற்றே வித்தியாசம் என்று தெரிகிறது  இது எந்த பத்திரிக்கையிலும் வந்ததல்ல. அப்படி வந்திருந்தால் இது எங்கள் ப்லாகின் பதிவாகி இருக்கலாம்

( என் முதுகில் ஏதோ பாரம் ஏறியது போல் இருக்கிறது)
சேது அன்று மாலை வருவதாகத் தகவல் அனுப்பி இருந்தான்.தங்கமணிக்கு கொஞ்சம் ஆறுதல். ஏதோ இருக்க ஒரு வீடு இருந்தாலும் தினப்படி செலவுக்கு எங்கே போவது.? வயிற்றுப் பாட்டுக்கு கிராமத்தில் ஒன்றிரண்டு பட்டர் (பிராமணர்) வீடுகளில் பாத்திரம் தேய்த்து , முறிகளை அடிச்சு கோரினால்(பெருக்கி எடுத்தால்) அம்மியார் ( பிராம்மண அம்மணி) கொடுக்கும் சோறும் கூட்டானும் கொண்டு அவளும் அவளது தாயாரும் வயிறு நிறைக்கலாம். கூட இருக்கும் சகோதரி தேவானை அவள் வகையில் வீடுகளில் பணி செய்து அவளது வயிற்றுப் பாட்டைக் கவனித்துக் கொள்வாள். வாழ்க்கை என்பது வெறும் வயிற்றோடு முடிவதா என்ன.?இருக்க இடம் உண்ண உணவு மட்டும் போதுமா.?உடுத்தவும் மேனி அலங்கரிக்கவும் இன்னும் எத்தனையோ தேவைகள் இருக்கின்றனவே.. இந்த மாதிரித் தேவைகளைப் பூர்த்திசெய்ய சேது மாதிரியான  புண்ணியவான்கள் இருக்கவே இருக்கிறார்கள்.
தங்கமணிக்கு ஓரோர் சமயம் இந்த வாழ்க்கை சரியா என்ற எண்ணம் தோன்றும் சரியோ தவறோ இதுதான் வாழ்க்கை என்றாகிவிட்டது. கட்டின கணவனுக்கு என்ன காரணத்தாலோ இவளுடன் தொடர்ந்து வாழப் பிடிக்கவில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்றால் இவள் இஷ்டப்படி வாழ்வதிலும் கேள்வி வரக்கூடாது. வயசான அம்மா இருக்கும்வரை தலைக்குக் கூரை நிச்சயம். அம்மா போனாலும் இது தொடரும், கூடப் பிறந்த “ஆங்கள்” ( சகோதரர்கள்) தாயின் வீட்டில் பங்கு கிடைக்காதென்று தெரிந்து (மருமக்கத்தாயம்) அவரவர் வழிகளில் சென்று விட்டனர்.
( இந்த வேதாளம் மறுபடியும் முதுகில் ஏறிவிட்டது போல் தெரிகிறது. நிச்சயமாய் என்னிடம் கேள்வி கேட்டுக் குடையப் போகிறது. நான் எழுதுவதைப் படிக்காமல் இருக்கப் போகிறதா என்ன.?)

தங்கமணியின் வீட்டைப் பற்றிக் கூறவேண்டும். அவளது அம்மா அவரது தரவாடுபற்றி நிறையவே கூறி இருக்கிறார். இப்போது மிஞ்சி இருப்பது பெத்தப்பேர்மட்டும்தான். கூட்டுப்புறத்து வீடு என்றால் தெரியாதவர் கிடையாது. தங்கமணியின் அம்மாவுக்குக்  கூடப் பிறந்த சகோதரிகள் ஆறு பேர். அவரவருக்குக் குடும்பம் குழந்தைகள் என்று ஆனபிறகு இரண்டு கட்டுத் தரவாட்டு வீடு விற்றுப் பணமாக்கப் பட்டு பாகம் பிரிக்கப்பட்டு வந்த பணத்தில் தங்கமணியின் அம்மா இந்தக் குச்சு வீட்டைக் கட்டினாள். இவர்களும் கூட்டுப் புறத்து வீட்டின் பெயரில் அவகாசிகள் ( சொந்தம் )ஆனார்கள். இதே பெயருக்கு சொந்தம் கொண்டாட இவர்களுக்கு சந்தான சம்பத்து இல்லாமல் போயிற்று.


(வேதாளம் முதுகில் நிலை கொள்ளாமல் தவிக்கிறது. இவன் என்ன எழுத வருகிறான் என்று தெரியாமல் குழம்புகிறது என்று தெரிகிறது)
தங்கமணியின் அம்மா திண்ணையே கதி என்றிருப்பாள். திண்ணையை ஒட்டி ஒரு ரேழி . அதை அடுத்து சின்ன மித்தம் ( முற்றம்) அதன் இரு பக்கங்களிலும் இரண்டு முறிகள் ( அறைகள்) ஒன்றில் தங்கமணியும் மற்றதில் அவள் சகோதரி தேவானையும் உறங்குவது வழக்கம்.

சேது வரும் தகவல் தேவானைக்கும் தெரிந்தது. அவளுக்கு ஒரு விஷயம் தெரியாவிட்டால் தலை வெடித்துவிடும் போல் இருந்தது. இப்படி அடிக்கடி வந்து போகும் இந்த சேது அக்கிரகாரத்தில் இருப்பவன். தங்கமணியிடம் சம்பந்தம் வைத்துக் கொள்வானா இல்லை அவளைக் கை கழுவி விடுவானா?அவன் கொஞ்சம் பசையுள்ளவன். தொடர்ந்து வருபவனை வற்புறுத்திக் கல்யாணம் செய்து கொள்ள முடிந்தால் தங்கமணி அதிர்ஷ்டம் செய்தவள் ஆவாள். இல்லையென்றால் ......? இலையென்றால் என்ன.? நாடிவருபவர்கள் எல்லோரையும் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்ன.?
தங்கமணி சேதுவை நம்பி இருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.
( வேதாளத்துக்கு இருப்பே கொள்ளவில்லை. ‘ யோவ், நீ என்னதான் சொல்ல வருகிறாய்.?என்று காதருகே குசுகுசுத்தது. வேதாளத்துக்கு எழுந்த சந்தேகம் எனக்கும் இருந்தது. நான் என்ன எழுதப் போகிறேன், சொல்ல வருகிறேன் என்று எனக்கே தெரியாதே. கணினியின் முன் அமர்ந்து தட்டச்சுகிறேன். எண்ணங்கள் கோர்வையாய் வந்தால் கதையாக்கலாம் எண்ணங்கள் கோர்வையாக வராவிட்டால் என்னும் என் எண்ணம் வேதாளத்துக்குத் தெரிந்து விட்டது. அது சொல்லியது.தோன்றுவதை கொஞ்சம் விலாவாரியாக எழுதிக் கொண்டே போ. முடியும் வரை எழுது. நாளைக்கு வேறு ஏதாவது ஐடியா கிடைக்கும். அப்போது தொடரலாம் வேதாளத்தின் உத்தியை முயன்றுதான் பார்ப்போமே.)
இந்த சேதுவை முத்ன் முதலில் எங்கு கண்டாள் என்று நினைத்துப் பார்த்தாள். ஆம். ஒரு ஆறுமாதமிருக்குமா.?அக்கிரகாரத்தில் பணிமுடிந்தபின் தங்கமணி வந்துகொண்டிருந்தாள். எதிரே சற்று தூரத்தில் ஒரு கையில் குடையுடன் மறுகையால் வேட்டியின் நுனியைத் தூக்கிப் பிடித்தபடி ,ஆஜானுபாகுவாக என்று சொல்ல முடியாது; இருந்தாலும் அந்த சந்தி வேளையில் சற்று தூரத்தில் இருந்தே தெரிந்த பட்டை விபூதி நெற்றியுடன் நல்ல உயரத்துடன் அவன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் தங்கமணிக்கு மேனியெல்லாம் என்னவோ செய்தது. மனசு குறுகுறுத்தது. ;நமக்கும் ஒருவன் வாய்த்தானே என்னும் அலுப்பும் கூடவே வந்தது. இவளைக் கடக்கும் நேரம் அவன் நின்று “ ஆ.. தங்கமணியல்லே.? எவிடெக்கா ? வீட்டிலிக்கா.?என்று ரொம்பவே அறிமுகம் ஆன மாதிரி ‘சம்சாரிக்கத்தொடங்கினான். தங்கமணிக்கு தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. வெட்கப் பட வேண்டுமா, தலையைக் குனிந்து கொள்ள வேண்டுமா ஒன்றும் புரியவில்லை. எல்லாம் கலந்த கலவையான ஒரு பாவம் வந்து போயிற்று. சேது தொடர்ந்தான் “ தங்கமணியக் கெட்டியவன் எவிடெ பணி எடுக்குன்னு.?
“ ஆ செத்தையினக் குறிச்சு ஒன்னும் கேழ்க்கண்டா சாமி என்றாள். இந்த பதில் சேதுவுக்குக் கொஞ்சம் தைரியம் கொடுத்தது..ஒன்னும் விஷமிக்கண்டா தங்கமணி. ஞங்கள் ஒக்க இல்லேஎன்று நூல் விட்டுப் பார்த்தான். தங்கமணி ஏதும் சொல்லாமல் தலையை நிமிர்த்தி பின் சரித்து ஒரு புன்னகையைத் தவழவிட்டாள்.இப்போது சேதுவுக்குத் தான் சொன்னது விளையாட்டுக்கு இல்லை உண்மைதான் என்று நிரூபித்துக்காட்ட வேண்டும் போல் இருந்தது.(கண்ணா லட்டு தின்ன ஆசையா.?)
நேர் எதிர்த் திசையில் போய்க் கொண்டிருந்தவன் இப்போது அவள் செல்லும் திசைக்கே திரும்பினான். அவளது எதிர்பார்ப்புகள் என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அவளது நித்திய ஜீவனம் பற்றியும் அதை அவள் எப்படி சமாளிக்கிறாள் என்றும் கேட்டுத்தெரிந்து கொண்டான். தங்கமணியிடம் பேச்சுக் கொடுத்ததில் அவளைப் போலவே அவள் தங்கை தேவானையும் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டான். அவன் உள்மனது முட்டைகள் பொரியும் முன்பே குஞ்சுகளைக் கணக்குப் போட ஆரம்பித்துவிட்டது.
பேசிப்பேசியே தங்கமணியின் வீட்டுக்கு வந்து விட்டான். வாசலில் நின்றவன்,
‘இன்னால் ஞான் போட்டேஎன்று இழுத்தான்.
“ உள்ளிலிக்கு வரூ. காப்பி குடிச்சிட்டுப் போகாம்என்று அவளும் வலை விரித்தாள்.
“ உன்னுடன் பிறந்தவள் எங்கே “
“எவிடெயெங்கிலும் போயிரிக்கும்
“அம்மை.?
“அது ஒரு பிரஸ்னமில்லா. கண்ணும் சரிக்கி காணில்லா. உள்ளிலிக்கு வரூஎன்று அவன் கையைப் பிடித்துக் கூப்பிட்டாள். சேதுவுக்கு இருந்த கொஞ்சம் நஞ்சமுமான தயக்கமும் போய் விட்டது.
அவளது முறிக்குக் கூட்டிக் கொண்டு போனாள். கதவைத் தாழ்ப்பாளிட்டாள் ஆரம்பத் தடுமாற்றங்கள் ஏதுமில்லாமல் இருவரும் இணைந்தனர். அவனருகே படுத்திருந்தவள் சற்று ஒருக்களித்து படுத்துக் கொண்டு “சாமிக்கு என்னே இஷ்டப் பட்டோ?என்று கேட்டாள். இஷ்டப்படாமலா இவ்வளவு நேரம் நடந்தது என்று நினைத்துக் கொண்டான். “ பின்னே.....என்று ஒரு நமுட்டுச் சிரிப்பினை உதிர்த்தான். சமயமாகி. பின்னெ நாளேக் காணாம் “ என்று கூறியவன் அவள் கையைப் பிடித்து அதில் சில ரூபாய் நோட்டுகளை அழுத்தினான். கதவு திறந்து வெளியே வரும்போது அங்கே தேவானை நின்று கொண்டிருந்தாள்.சேது அவளை ஒரு நமுட்டுச் சிரிப்புடன் கடந்தான்.  
தேவானைக்குத் தடுமாற்றம். தங்கமணியைவிட தான் எந்த விதத்தில் குறைவு என்னும் எண்ணம் எழுந்தது அது என்னவோ தெரியவில்லை. நமக்குத் தெரிந்தவர்கள் ஏறத்தாழ எல்லோருமே “ பர்த்தா இல்லாதவராகவே இருக்கிறார்கள். இது ஆண்களின் பொறுப்பின்மையா, அல்லது பெண்களின் ஆதிக்கக் காரணமா.... என்ன இருந்தாலும் வாழ்க்கை என்ற ஒன்றை வாழ்ந்துதானே ஆகவேண்டி இருக்கு. இந்த சேது ஆள் நன்றாகத்தான் இருக்கிறான். அவன் எதிர்பார்ப்பை தங்க மணி கொடுக்க முடியும் என்றால் தன்னால் முடியாதா என்ன.? எண்ணங்கள் திட்டங்கள்.... ...!
வந்து போன சேதுவுக்கும் தேவானையைப் பார்த்ததும் உடலில் ஒரு சூடு பொங்கி எழுந்து அடங்கியது. தேவானையும் லட்சணமாகப் பாந்தமாகக்கிண்என்று இருந்தாள். தங்கமணியுடன் சேர்ந்தால் தேவானையை ஒதுக்க வேண்டும் என்று ஒன்றும் இல்லையே. எண்ணங்கள்....திட்டங்கள்......
தங்கமணியும் தேவானையும் ஒருவரை ஒருவர் எதிரியாகப் பாவிக்கத் தொடங்கினர். சேதுவோடு இருக்கும்போது “ இந்தப் பெண்ணின் நோட்டமும் பார்வையும் சரியில்லையேஎன்று சற்று உரக்கவே கூறினாள். இவனோ “ பாவம், அவளும் உன்னைமாதிரிதானேஎன்று சொன்னான். அப்படியானால் அவளிடம் சேர்வதுதானேஎன்று கோபத்தில் கூறினாள் ‘ ஆஹா இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று எண்ணியவன் “மாற்றமே வாழ்வின் சுவை
( variety is the spice of life) அனுபவிக்க என்ன செய்யலாம் என்றும் சிந்திக்கத் தொடங்கினான்( கண்ணா இரண்டாவது லட்டு தின்ன ஆசையா.?). இதற்கு ஒரே வழி இருவரும் இருக்கும் நேரத்தை ஒதுக்கிவிட்டு ஒருவர் இல்லாத நேரத்தில் ஒருவர் என்று கணக்குப் போட்டான். தங்கமணியை சந்தித்தபோது நடந்தவற்றை ரிபீட் செய்வதுதான் நல்லது என்று எண்ணி ஒரு நாள் தேவானை வேலை முடிந்து வரும்போது அவளை மடக்கினான்.இந்த சந்தர்ப்பத்துக்குத்தானே அவளும் காத்திருந்தாள். திட்டமிட்டபடி எல்லாம் நடக்க ஒரு நாள் இவன் தேவானையின் அறையில் இருந்து வெளியே வரும்போது தங்கமணி நின்றிருந்தாள். இவனைப் பார்த்ததும் மூஞ்சியை வெடுக்கெனத் திருப்பிக் கொண்டாள்.
இருந்தாலும் இருவருக்குமே வாழ்க்கையை வாழவேண்டுமென்றால் பல நேரங்களில் பல விஷயங்களையும் விட்டுக் கொடுக்க(compromise) வேண்டும் என்று புரிந்தது..
எதையும் கண்டுகாமல் சிவனே என்றிருந்த அவர்களது தாயாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உசுப்பி விட்டனர். கிழவிக்கு தன் மகள்கள் யாருடனாவது சம்பந்தம் வைத்துக் கொள்வதில் தவறு தெரியவில்லை. ஆனால் இருவரும் ஒருவனையே என்று எண்ணிப் பார்ப்பது கஷ்டமாக இருந்தது இதற்கு ஒரு முடிவு கட்டத் தீர்மானித்தாள் கிழவி.
கிழவி திண்ணையில் அரைகுறைத் தூக்கத்தில் படுத்துக் கிடப்பாள். சில நேரங்களில் சேது அவளைத் தாண்டிப்போக வேண்டி இருக்கும். ஒரு நாள் சேதுவுக்கு மகள்களில் யாரோ ஒருவருடன் கூடும் நாளும் நேரமும் பார்த்துக் காத்திருந்தாள் கிழவி. சேதுவும் கிழவிக்குக் கண்சரியாகத் தெரியாதே என்று அவளைத் தாண்டினான் உடனே “ ஐயோ... ஐயோ.. என்று கூக்குரலிட்டு வெளியே ஓடினான் கிழவி மனசுக்குள் நினைத்துக் கொண்டாள்.இனி உனக்கு இன்பம் தரும் உறுப்பின் முக்கியம்தான் இங்கு வரும்போது நினைவுக்கு வரும்தங்கமணியோ தேவானையோ (யாரோ ஒருவர்) ஏன் சேது அப்படி கத்திக் கொண்டு ஓடினான் என்று தெரியாமல் விழித்தாள்.
( உன்னைப் பார்க்கவே பயமாய் இருக்கிறது, எழுதுவதற்கு உத்தி சொன்னால் இப்படியா எழுதுவது,? இனி உன் வழிக்கே நான் இல்லையப்பா..என்று கூறிக்கொண்டேஎன் முதுகில் இருந்து அகன்றுவிட்டது.)  
 

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

Just wondering


                                                  Just  wondering
                                                  --------------------

ஒரு விஷயம் என்னை ஆச்சரியத்துடன் சிந்திக்க வைக்கும். இப்பூவுலகில் கோடானுகோடி மக்கள் ஆண் பெண் என்று இருக்கிறார்கள். உயரமானவர்கள், குட்டையானவர்கள்,கட்டையானவர்கள், ஒல்லியானவர்கள், சிவந்தவர்கள், கருத்தவர்கள், மாநிறத்தவர் என்று பல இடங்களில் பலவிதமாக வாழ்பவர்கள். இவர்கள் எல்லோருக்கும் ஆணுக்குப் பெண் என்று ஜோடிகள் இருக்கின்றன. 90% மேலானவர்கள் திருமணம் செய்து கொண்டு அவரவர் வம்ச விருத்தியில் ஈடுபடுகின்றனர். இதில் ஆச்சரியப் படுவதற்கும் சிந்திப்பதற்கும் என்ன இருக்கிறது என்றுதான் தோன்றும். இந்த ஜோடி சேர்வதுதான் என்னை ஆச்சரியப் படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் அவருடைய ஜோடி பற்றிய எண்ணங்கள்/கனவுகள் நிறைவேறுகிறதா.?சமூகத்தில் எத்தனையோ பொருத்தங்கள் பார்க்கப் பட்டு திருமணங்கள் நடைபெறுகின்றன. ஒரு மூன்றாம் மனிதனாய் இருந்து இந்த ஜோடிகளைப் பார்க்கும்போது ,அவரவர் எதிர்பார்ப்புகள்தான் என்ன, அவை எல்லாம் ஈடேறி விடுகிறதா, என்றெல்லாம் சமயங்களில் நான் நினைப்பதுண்டு.

எனக்கு நெருங்கிய ஒரு உறவினர். நன்றாகப் படித்தவர். இப்போது சினிமாக்களில் வரும் ஹீரோக்களை விட லட்சணமாகவும் அழகாகவும் இருப்பார். அவருக்குத் திருமணம் செய்வது குறித்து முயற்சிகள் பல எடுக்கப் பட்டன. அவர் ஒரு விஷயத்தில் தீர்மானமாய் இருந்தார். அவருடைய கனவுக்கன்னியை முடிவாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கே என்றார்.  அவர் குடும்பத்தில் இதற்கு எதிர்ப்பு இருக்கவில்லை. பெரியவர்கள் எல்லாப் பொருத்தங்களும் பார்த்து பெண்ணைக் காண்பிப்பார்கள். இவர் முறைப்படி பெண் காணச் செல்வார். பலதடவை ,பல பெண்களைப் பார்த்தும் எதுவும் தோதாக அமையவில்லை. இவர் ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கப் போகும்போது, பெண்ணுக்கு மதிப்பெண் போடுவார்( male chauvinism ?). குறைந்தது 60 விழுக்காடாவது பெண் எடுக்க வேண்டும் என்பதே இவரது எதிர்பார்ப்பு . உயரம் நிறம், படிப்பு, அழகு என்று பல பிரிவுகளுக்கும் மதிப் பெண் போடுவார். சாதாரணத் தேர்வுக்கான மதிப்பெண்கூட அவரிடமிருந்து பெண்களால் வாங்க முடியவில்லை. அநேகமாக எல்லோரும் சோர்ந்து போனார்கள். இவருக்கும் தன் கட் ஆஃப் மார்க் கூடுதலோ என்று ஐயம் வந்து விட்டது. எட்டு பத்து பெண்களை பார்த்தபிறகு பாஸ் மார்க் வாங்கும் பெண்ணாவது கிடைக்குமா என்று

எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கும்போது, ஒரு பெண்ணைப் பார்த்து இவர் சம்மதம் சொல்லி விட்டார். இவ்வளவு தேர்வுகளுக்குப் பிறகு வந்த பெண்ணை பார்த்தபோது பலரும் ஆச்சரியப் பட்டனர். தேர்வான பெண் மிகச் சாதாரணமாக இருந்தார். சராசரிக்கும் மேலாக அந்தப் பெண்ணிடம் இருந்த ஒரே குவாலிஃபிகேஷன்  அவர் நன்றாகப் பாடுவார்.என்பதுதான். இவருக்கு இவர் என்பது யாருக்குத் தெரியும்.?

இன்னொரு நண்பர் வீட்டில் பெண் பார்த்து அவர் வீட்டுக்கு மருமகளாய் வந்தவர் ஒல்லியாக, கருப்பாக, முன்பல் துருத்திக் கொண்டு எந்த அழகும் இல்லாமல் இருந்தார். கல்யாணப் பையனிடம் என்ன இப்படி என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் எல்லோர் வாயையும் அடைத்து விட்டது. அவர் சொன்னார், எனக்குப் பிடிததது , மணம் செய்து கொண்டேன் .அவ்வளவுதான்.

ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. YOU CAN NOT MARRY ANOTHER MAN’S WIFE.”  உலகில் இருக்கும் அத்தனை மனிதனுக்கும் அவனுக்கென்று ஒரு ஜோடி இருக்கிறது. அவனுக்கென்று ஒரு இல்லற வாழ்வு இருக்கிறது. படிப்பும் பொருளும் அழகும் மட்டுமே ஜோடிகளைத் தீர்மானிப்பதில்லை. இவையெல்லாம் அதிகமாகப் பேசப் பட்டாலும் எல்லோர்க்கும் எல்லாம் அமைவது இல்லை என்று சொல்வது கூடத் தவறாகும். சில நேரங்களில் எனக்குத் தோன்றுவது பலருக்கும் தவறாகத் தோன்றலாம். அந்தந்த வயதின் தேவைகள் மற்ற எல்லா விஷயங்களையும் பின்னுக்குத் தள்ளிவிடலாம். மேலும் அழகு என்பதற்கு எந்த Definition  -ம் கிடையாது. BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER  இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் விடை கிடைக்காது என்று தெரிந்துதான் “ இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று “ என்று அறிய முடியாக் கடவுளிடம் பாரத்தை (பழியை ?) போடுகிறோமோ.? 
நம் கலாச்சாரத்தில் ஒரு திருமணம் நடக்கும் முன்  இருவருக்கும்  உள்ள பொருத்தங்களை ஜாதக மூலமாகப் பார்க்கின்றனர் ஆனால் பண்டைக் காலத்தில் கடி-மணம், கரணம், மன்றல், வதுவை, வரைவு என்று பல பெயர்களில் அறியப் பட்டிருந்தது. அந்தக் காலத்திலேயே பொருத்தம் பார்த்து திருமணங்கள் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன.
பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு, நிறுத்த காமவாயில் ,நிறையே, அருளே உணர்வோடு திருவென முறையுளக் கிளந்த ஒப்பினது வகையே என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

இப்பொழுதும், இளமை ,வனப்பு, வளமை, கல்வி, அறிவு என்று பல பொருத்தங்கள் பார்த்துத்தான் திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன, ஆனால் பல குடும்பங்களில் உறவின் வழியே நிச்சயமாகும் திருமணங்களில் பெரும்பாலும் இதையெல்லாம் கவனிப்பதில்லை.அறிந்த மனிதர் ,இனம் குலம் எல்லாம் ஒத்தது இதையெல்லாம் விட சொத்து பத்துகள் குடும்பத்தைவிட்டு வெளியேறாது என்னும் எண்ணமும்கலந்தெ மணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன. இந்த வகைத் திருமணத்தில் ACCOUNTABILITY ---GUARANTEED  என்று எண்ணுகிறார்கள், இந்த வகைத் திருமணத்தில் பெரும்பாலும் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை இழக்கிறார்கள். இம்மாதிரி உறவில் விளையும் திருமணங்கள் வாயிலாகப் பிறக்கும் சந்ததிகள் உடல் நலம் குன்றி இருக்க வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
என்ன இருந்து என்ன? சில கேள்விகள் மனதில் எழுகின்றன 
பருவ வயசில் ஒரு ஆணைப் பெண்ணிடமோ பெண்ணை ஆணிடமோ ஈர்ப்பது எது. ?காதலா ?பருவ வயதில் காதலுக்குக் கண்ணில்லை என்பது சரியா ? இதற்கு சரியான டெஃபினிஷன்  உண்டா.?இந்த ஈர்ப்பு நாளாக நாளாக ஒரே மாதிரி இருக்கிறதா?வயதானபின் கிழவனையும் கிழவியையும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கச் செய்வது எது?ஒருவரை ஒருவர்ச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயமா? இந்தக் கட்டாயத்தை ஏற்படுத்திச் செல்வது எது?பாரதக் கலாச்சாரமா? இல்லை எல்லாம் தலைவிதி என்று எண்ணமா? அப்படியானால் இது அப்படியே தொடருமா?கேள்விகள் கேள்விகள்..கேள்விகள...............!
 எப்போதெல்லாம் எனக்குச் சந்தேகங்கள் வந்து நான் கேள்விகள் கேட்கிறேனோ அப்போதெல்லாம் வாசகர்களிடமிருந்து பதில்கள் வருவதற்குப் பதில் திசை மாறிப் புரிந்து கொண்ட கருத்துக்களே பின்னூட்டங்களாக வருகிறது ஆனால் இம்முறை பதிவைப் புரிந்து கொள்ள  சந்தர்ப்பம் மிகக் குறைவு/  ஆனால் கேள்விகள் பலதரமான பதில்களைக் கொண்டு வரலாம்  I am prepared .Let us see.         













புதன், 6 ஏப்ரல், 2016

இனி ஒரு விதி செய்வோம்


                                         இனி ஒரு விதி செய்வோம்
                                         -------------------------------------------
 கல்வி
கல்வி பற்றி எழுதிக் கொண்டே போகலாம் முதலில் நம்  இலக்கு என்ன என்னும் புரிதல் வேண்டும் அதன் பின்  அதில் இருக்கும்  சிக்கல்களை ஆராய்ந்து தீர்ப்பு கூற வேண்டும்
இந்தப் பதிவில் கூறப்படும் விஷயங்களில் சில கருத்துக்கள் பற்றி நான் ஏற்கனவே எழுதி இருப்பேன்  நல்ல விஷயங்கள் என்று தோன்றுவதை ரிபீட் செய்வதில் தவறில்லையே நம் கண் முன்னே விரியும், நடக்கும், நமக்கும், ஏன்  சமுதாயத்துக்கும் ஒவ்வாத ஒவ்வொரு நிகழ்வும் மிகப்பெரிய தாக்கத்தை  ஏற்படுத்துகிறது. முடிந்தால்  இந்த  உலகத்தையே  புரட்டிப் போட்டு  மாற்ற வேண்டும்  என்ற வேகமும்  எழுகிறதுநியாயமானதுதானேநியாயத்துக்கும்  தர்மத்துக்கும்  கட்டுப் பட்டு நடக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும்  ஏற்படும்    எண்ணக்குவியலே    அவைஇருந்தாலும் நடப்பவைகள்  எல்லாமே  தவறானவை  அல்ல. வேண்டத்தகாதவைகள்  அல்ல.  இன்னும்  சிறப்பாக இருக்கலாமே, நன்றாக  இருக்குமே என்ற ஆதங்கமும், விருப்பமும்தான் மனதில் தோன்றுகிறது 

முதலில் நூறு சதவீதக் கல்விதான் இலக்கு. இதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லைகல்வி என்பது எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் சமூகத்தில் நிலவும் ஏற்ற தாழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

நம்மை  நாமே  ஆளும்போது ,நாம் எல்லோரும்  சமம்  எனும்போது , வாய்ப்புகளும்  சமமாக  இருக்க வேண்டும். வாய்ப்பு  வேண்டிப்  போராட  கல்வி அறிவு  அவசியம்அதுவும் பரவலான  நூறு   சதவீதக்   கல்வி அவசியம்

நாம்படித்தறிந்ததை பகுத்தறிந்து   உணர்ந்தால் அறிவுள்ளவர்களாக  ஆவோம்(படித்தவர்கள்  எல்லோரும்றிவுள்ளவர்கள்அல்ல .படிக்காதவர்கள்  னைவரும்  அறிவில்லாதவர்களும்  அல்ல.)
ஆனால் ஒருவனை  அறிவாளியாக்க படிப்பறிவு மிகவும் உதவும்
               எழுத்தறிவும் கல்வியறிவும்   பரவலாக்கப்பட்டால் சுயமாக சிந்திக்கும்   திறனை அவர்கள் வளர்த்துக்கொள்வார்கள்முனிசிபல், கார்ப்பரேஷன்  பள்ளிகளில்  படித்துப்  பெயர் வாங்கும்  சிறார்  சிறுமிகளும்  இருக்கிறார்கள்.,என்பது நமக்குத்  தெரிந்ததேநாம் எந்த   ஒரு விஷயத்தையும்  விவாதிக்கும்போது  மிடில்  கிளாஸ்  மேன்டாலிடியைத்தான் அளவு கோலாகப்  பயன்படுத்துகிறோம்ஏழை பாழைகளின்  கருத்தைக்  கேட்கவோ  எடுத்துச் சொல்லவோ  நம்மில் பலரும்  முன்  வருவதில்லை   இந்நிலையில் நூறு சதவீத எழுத்தறிவும்  படிப்பறிவும்  இருந்தால்  அவர்களை  அவர்களே  மேம்படுத்திக்  கொள்வார்கள்
நூற்றாண்டுகாலமாக இன்னாருக்குத்தான் கல்வி  இன்னாருக்கு அது கூடாது என்னும் ஆதிக்க மனப்பான்மையில் பெரும்பாலோருக்குக் கல்வி செல்லவே முடியாத நிலை இருந்தது இந்த ஆதிக்க மனப் பான்மையே நிலவும் ஏற்ற தாழ்வுகளுக்கான முக்கிய காரணம் கல்வி அறிவு வந்து விட்டால் மக்கள் சிந்திக்கத் துவங்குவார்கள் ஆனால் தற்போதைய கல்விமுறை சிந்திக்க வைக்கும் தன்மையுடையதா?கல்வி கற்றவர்கள் சிந்திக்கத் துவங்கியதும் நாடு அடிமைத் தளையிலிருந்து விடுதலைப் பெற்றதும் உயர்வு தாழ்வுகளே முன்னேற்றத்துக்குத் தடை என்று அறிந்து பிற்படுத்தப் பட்டவர்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துக்கு விதை தூவப்பட்டதும் பலரும் அறிந்ததே

 நாடு சுதந்திரம் அடைந்ததும் பிற்பட்டோருக்கும் தாழ்த்தப் பட்டோருக்கும் இட ஒதுக்கீடு கல்வியிலும் உத்தியோகத்திலும் தேவை என்று உணரப்பட்டு 25% இட ஒதுக்கீடு 25 ஆண்டுகளுக்கு என்று நிர்ணயித்தார்கள் ஆனால் 25 ஆண்டுகளில் பெரிதான முன்னேற்றம் ஏதும் இருக்கவில்ல என்று அறிந்து அதிக ஒதுக்கீட்டுடன் இன்னும் தொடரப் படுகிறது இந்த இட ஒதுக்கீடு சரியான முறையில் பயன்  படுத்தப்பட்டிருக்கிறதா என்பதும் ஒரு கேள்வி. இட ஒதுக்கீடு பெற்றதனால் உயர் நிலைக்கு வந்தவர்கள் தங்களது வாரிசுகளுக்கும் அதைக் கோர பிற்படுத்தப்பட்டோரில் மீதி உள்ளோரின் நிலைமையும்  சீர்படவில்லை. ஒரு காலத்தில் ஆதிக்க சாதியாக பிராமணர்களே கருதப் பட்டனர். ஆனால் இன்றோ பிராமணர்கள் பிற்படுத்தோர் ஆகி மற்றையோர் உயர் சாதியாகக் கருதப்படும்  சாதி இந்துக்களாகவும் தாழ்த்தப்பட்டவர்களாகவும்  தொடர்கின்றனர் பிற்படுத்தப் பட்டோரில் நல்ல நிலைக்கு வந்தவர்கள் (creamy layers) தங்கள் வாரிசுகளுக்கும்  ஒதுக்கீடு கோருவது சரியானதா. ? முன்னேறிய சாதியினர் என்று  கூறப்படுபவர்களில் வாழ்க்கைப் படியில் மிகவும் பின் இறங்கிய நிலையில் இருப்பவர்களும் உண்டு.  பிறந்த சாதியின் காரணமாகவே அவர்கள் முன்னேறியவர்களாகக் கருதப் படுகின்றனர். இதுவும் அல்லாமல் இப்போது ஒரு புதியசாதி உருவெடுத்துள்ளதுஏழை பணக்காரன்  எனக்கு என்னவோ இந்த உயர்வு தாழ்வுகள் ஒழிக்கப் பட வேண்டுமானால் மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும்  தானாக வரவில்லையானால் வருவிக்கப் படவேண்டும்  மனிதருள் அனைவரும் சமமே என்று ஏற்று கொள்ளப் படும் பக்குவம் இன்னும் பலருக்கும் இல்லை. இல்லாததை வருவிக்க மனிதருள் ஏற்ற தாழ்வு இல்லை எனக் காட்ட அதைத் துவங்கும் இடமே கல்விக்கூடமாகத்தான் இருக்கவேண்டும்அதற்கு ஒரே வழி எல்லோரும் சமம் என்று உணர்த்தப்படும் கல்வி வேண்டும்  அது எப்படி உணர்த்தமுடியும் என்னும் கேள்வி எழலாம் பள்ளிக்குச் செல்லும் சிறார்களைப் பள்ளியில் ஒரே மாதிரியாகப் பாவிக்க வேண்டும் அந்த இள வயதில் இந்த பாவனை வந்தால் அடுத்த தலைமுறையிலாவது பேதங்கள் இல்லாமல் போகும்  அதற்கு பள்ளிப் படிப்பு எல்லோருக்கும் கட்டாயப் படுத்தப்பட வேண்டும்  அனைவருக்கும்  சமமான கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் அனைவருக்கும்  இலவச உணவு அளிக்கப்படவேண்டும் அனைவருக்கும் ஒரே சீருடை வழங்கப்பட வேண்டும் இவை அத்தனையும் அரசாங்கச் செலவில் இலவசமாக வழங்கப்பட வேண்டும் படிக்கும்  சிறார் மனதில் உயர்வு தாழ்வு எண்ணம்  மடிந்து போகும் 

ஆனால்............
 இப்படியெல்லாம் நடப்பது சாத்தியமா என்னும்  கேள்வியும்  எழுகிறது கல்வி என்பது மத்திய அரசின் பொறுப்பில் இருக்க வேண்டும் நிதி ஒதுக்கீட்டில் கல்விக்கான நிதியே முதலிடம் வகிக்க வேண்டும்  இது நடக்க இப்போது இருக்கும்  கல்வி வியாபாரிகள்  எதிர்ப்பு தெரிவிப்பார்கள் இருக்கும் நிலை தொடர்ந்தால்தானே இவர்கள் இன்னும்  செழிக்க முடியும்

கல்வியை  வியாபாரமாக்கும் கும்பலுக்கு  நாம்தான்   துணை போகிறோம். அரசு  பள்ளிகளை  ஆதரித்து ,அதன்  தரம்  உயர  நாம் ஏன்  பாடுபடக்கூடாது. ?
எனக்குத் தெரிந்த ஒருவர் பழைய சாமன்களை வாங்கி விற்றுப் பிழைப்பு நடத்துபவர் எதிர் வரும் ஆண்டில் அவரது பிள்ளைகளுக்கான பள்ளிக் கட்டணத்துக்கு என்ன செய்வது என்னும் கவலை அவருக்கு அவரது குழந்தைகளை ஆங்கில வழிப் போதனை செய்யும் பள்ளிகளுக்கு அனுப்புகிறார் ஆங்கிலவழிக்கல்வி பெற்றால் பெருமை சிறந்தது என்னும்  எண்ணம் அவருக்கு. என்னதான்  அரசாங்க இலவசக் கல்வி அளித்தாலும் இவர் ஆங்கிலவழிப் பள்ளிக்குத்தான் தன்  பிள்ளைகளை அனுப்புவார் இந்த வித்தியாசம் எதுவும் இல்லாமல் இருந்துவிட்டால் உன்கல்வி நல்லது என்  கல்வி மோசம் என்னும்  எண்ணமே இருக்காதல்லவா
 இரண்டரை வயதுக்கும் கீழான குழந்தைகளை ப்ளே ஸ்கூலுக்கு  அனுப்புகிறார்கள்  குழந்தைகளை வள்ர்க்கும் பொறுப்பில் இருந்து விலகுகிறோமோ பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும் போது நிலைமை இன்னும்  மோசம் மழலை மாறாத குழந்தைகளுக்கு  அபத்தமான ரெயின்  ரெயின் கோஅவே என்னும் ரைம்ஸ் கற்பிக்கப் படுகிறது சிறார்களுக்கு ஐந்து ஆறு வயதில்தான் விரல்களை வசப்படுத்தும்  சக்தி இருக்கும்  ஆனால் இம்மாதிரி பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை எழுத வைக்கிறார்கள் இதுதான்  சரி என்று பெற்றோரும்  எண்ணுகின்றனர்இவை எல்லாம் சீரான சிந்தனை இல்லாததை உணர்த்துகிறது
குறிப்பிட்ட பள்ளிகளில் மழலைமாறாத குழந்தைகளைச் சேர்க்க முன்னிரவு முதலே வரிசையில் நிற்கும் பெற்றோர்களை என்ன சொல்வது?முண்டி அடித்து ரூபாய் 50000 வரை கல்விக் கட்டணமாகச் செலுத்தி அதை பெருமையுடன் பறை சாற்றும் பலரே இன்றையக் கல்வியைச் சாடுகின்றனர் இதைஎல்லாம் மாற்ற ஒரே வழி அனைத்துக் கல்விநிலையங்களும் அரசுடைமை ஆக்க வேண்டும்  வங்கிகளை அரசுடமை ஆக்கிய போதும்தான் குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டனர். இன்று நிலை சீராயிருக்கவில்லையா. மாற்றம் ஒன்றே மாறாதது என்று முழங்குகிறோம் .  ஆனால் நல்ல மாற்றங்களை எதிர்க்கிறோம்
பொறியியல் மருத்துவம் போன்ற மேல் படிப்புக்குப் பெரும்பாலும் பெற்றோரின்  உந்துதலே காரணம் இப்போது பெற்றோரின் தூண்டுதல் ஐடி படிப்பின் பால்  நிற்கிறதுஇதற்கு பெற்றோரை மட்டும் குறை சொல்ல மாட்டேன் இதெல்லாமே ஒரு மனமயக்கம்தான் பொறி இயலும் மருத்துவமும் ஐடி படிப்பும்தான் படிப்பு என்னும் மாயத் தோற்றம் இருக்கிறது நான் பொறீயல் பட்டதாரி அல்ல . இருந்தாலும்  பயிற்சியால்  பொறி இயலில் ஏற்றம் கண்டேன்  என் கீழே பல பட்டதாரிகளும்  பணி புரிந்தனர்  இருந்தாலும் என்னிடம் அவர்கள் மதிப்புக் குறையவில்லை.  நான் என்னைப் பற்றிக் கூற வேண்டிய அவசியம் இல்லை.  இருந்தாலும் எல்லாமே பட்டப்படிப்பால்தான்  முடியும் என்பது நேரான கருத்து அல்ல என்பதைக் காட்டவே கூறினேன்

அடிப்படையில் இப்போது இருக்கும்  கல்வி நிலை மாற வேண்டும் . மாற்ற வேண்டும் இனி ஒரு விதி செய்வோம்  உயர்வு தாழ்வு எண்ணங்களைப் போக்க சீரான சமகல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப் படவேண்டும்  பலருக்கும்  இது நடைபெற முடியாத ஒன்று என்றும்,  பள்ளிகளில் இருந்து வெளியே வருவோரின்  தரம் குறைந்து விடும்  என்றும் எண்ணலாம்ஒரு உதாரணம் கூறி முடிக்கிறேன் இரண்டாம் உலகப் போர் முடிந்த போது ஜப்பான் அநேகமாக தரை மட்டமாக்கப் பட்டது. இருந்தாலும் இன்று அவர்கள் உற்பத்தியிலும் தரத்திலும்  உலகின் முன்னோடிகள். அப்போதெல்லாம் ஜப்பானியப் பென்(pen) கள் விலை மிகவும் சலிசாக இருக்கும் / ஆனால் அவற்றின் தரம் சொல்லும்படியாக இருக்காது. முதலில் அவர்கள் நோக்கம்  அதிக எண்ணிக்கை  மலிவாகக் கொடுப்பது. பின் போகப்போக அவற்றிலேயே தரத்தைப் புகுத்துவது 
அது போல் நாம் முதலில் அனைவருக்கும்  கல்வி வழங்குவோம்  போகப்போக தரமும் உயரும் / ஏற்றதாழ்வும்  மறையும்          
                   

 

                       



சனி, 2 ஏப்ரல், 2016

வீடு வாடகைக்கு


                                          வீடு வாடகைக்கு
                                          -----------------------------
நான் வீடு கட்டியகதையை ஏற்கனவே பதிவில் பகிர்ந்துள்ளேன் 1979/ ல் இடம் வாங்கி 1986-ல் வீடு கட்டி முடிக்கப்பட்டவுடன் வாடகைக்கு விட்டேன் அப்போது நான் திருச்சியில் இருந்தேன் 1991-ம் ஆண்டின்  கடைசியில் என் மூத்த மகனை குடி யிருத்துவதற்கு வாடகைக்கு இருந்தவரைக் காலி செய்யச் சொன்னேன்  அவரும்  எந்தப்பிரச்சனையும்  தராமல் காலி செய்ய என் மகனும் மருமகளும் குடி வந்தனர் நானும் என் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று என் மகனுடன் வந்து விட்டேன் என் இளைய மகனுக்கும் இங்கே வேலை கிடைக்கவும் .அவனுக்கும் மணமுடித்தால் இந்த வீடு சிறியதாய் இருக்கும் என்று எண்ணி மாடியில் இன்னொரு வீடு கட்டினேன் 1992-ம் ஆண்டு. வீடு கட்டி முடித்தவுடன்  நாங்கள் மேல் தளத்துக்குச் சென்று கீழ் வீட்டை வாடகைக்கு விட்டோம் அதில் ஒரு டாக்டரும் அவர் கணவனும் குடி வந்தனர் சுமார் ஏழு ஆண்டுகள் அங்கே தங்கி இருந்தனர். .நாங்கள் மேல் வீட்டில் இருக்கும் போது என் இளைய மகன்  திருமணமும் நடந்தது  லேடி டாக்டரும் அவள் கணவரும் சொந்த வீடு கட்டிக் கொண்டு போய் விட்டனர். என் மக்களுக்கும் வேலை மாற்றல் இருந்ததால் சென்னை சென்றனர். நானும் மனைவியும்   கீழ் வீட்டுக்கு வந்து மேல் வீட்டை வாடகைக்கு விட்டோம் அதுவிட்டு ஆகிறது பதினாறு வருடங்கள் இத்தனை வருடங்களில் ஆறு குடித்தனங்கள் வந்து போய் இருக்கிறார்கள். சில பதிவுகளில் இவர்களில் சிலரையே கதாமாந்தராகவும்  மாற்றி இருக்கிறேன் என் வீட்டுக்கு குடி வந்து போனவர்களுடன் நான் இன்னும் சுமூகத் தொடர்பில்தான் இருக்கிறேன் சிலர் சொந்த வீடு  கட்டிக்கொண்டு போய் விட்டார்கள்திருமணம் செய்ய வேண்டுமென்றே என் வீட்டுக்குக் குடி வந்தவர்களும் உண்டு.பெங்களூரில் வீட்டுக்குக் குடி வருபவர்களைக் காலி செய்யச் சொல்வது மிகவும் கடினம்  என்னைப் பொறுத்தவரை நான் ஒரு ஸ்ட்ரிக்ட்டான பேர்வழி என்றே அறியப் பட்டிருக்கிறேன் அனாவசியமாக யார் குடும்பவாழ்விலும் தலை இடுவது இல்லை. நானே ஒரு குடும்பத் தலைவனுக்கு அறிவுரை கொடுக்க வேண்டிய கதையும்  உண்டு
அவர்கள் ஒரு கணவன் மனைவி ஒரு குழந்தை. வீடு பார்க்க வரும்போதே தனக்கு ஏகப்பட்ட சொத்து உள்ளது என்றும்  அவற்றில் சில கோர்ட் கேசாக நிலுவையில் இருப்பதாகவும் இன்னும்  என்னவெல்லாமோ கூறிக் கொண்டு ஓவர் பில்ட் அப்புடன்  வீடு பார்க்க வந்தார் அவர். அவரது மனைவி ஒரு பல் மருத்துவர் அவரது க்லினிக்  எங்கள் வீட்டுக்கு அருகில் இருப்பதால் எங்கள் வீடு சௌகரியப்படும் என்றும் அவரது மனைவி கூறினாள் காதலித்து மணந்தவர்கள் ஒரே பெண்குழந்தை அதுவும் ஏழுமாதத்திலேயே பிறந்து இன்குபேட்டரில் வைத்துப் பராமரிக்கப் பட்ட குழந்தை. ஹைபர் ஆக்டிவ் என்று கூறலாம் என் வீட்டு ஹாலில் படுக்கவைத்துத் திரும்புவதற்குள் குழந்தை திரும்பி நீந்தி அறையின் மறு கோடிக்கு  வந்து விடும் எனக்கு அந்தக் குழந்தையையும்  அந்த டாக்டரையும் பிடித்து விட்டது  வழக்கம் போல் வாடகை போன்ற சில நிபந்தனைகளைக் கூறிய பின்  வீட்டை வாடகைக்கு விட்டோம் எப்படியும் மாதத்தில் ஐந்தாம் தேதிக்குள் வாடகை கொடுக்க வேண்டும் என்பது ஒப்பந்தம் கணவன் வெறும் பந்தாவுடன் சுற்றிக் கொண்டிருந்தான்  வேலை எதற்கும் போகவில்லை.  பல் மருத்துவரே குடும்பத்தைப் பராமரித்துக் கொண்டு வந்தார் எனக்கு வாடகை கேட்டுக் கொண்டு போவதுபிடிக்காது. அவர்களே சொன்ன தேதிக்குள் தரவேண்டும் என்பதும் கூறப்படாத விதி. ஒரு முறை வாடகைதர தாமதமாகி விட்டது அவரிடம் சொல்லிக் கேட்டேன்  அன்று இரவுக்குள் தருவதாகக் கூறினார் அன்று இரவு ஏழு மணி ஆகியும் வாடகை தரவில்லை. நான் போய்க் கேட்டேன் அன்றைய பொழுது இன்னும்  முடியவில்லை என்று தெனாவட்டாகப் பதில் சொன்னார்நான் அவர்கள் விட்டைக் காலி செய்ய வேண்டும் என்று கூறினேன்  
 மறு நாள் காலையில் பல் மருத்துவர் என் வீட்டுக்கு வந்து வாடகையைக் கொடுத்துவிட்டு அது அவர் கணவருக்குத் தெரிய வேண்டாம்  என்றும் வாடகை இன்னும் வரவில்லை என்று அவரது கணவரிடமே கேட்கும் படியும் என்னிடம் கேட்டுக் கொண்டார்  கணவர் வாடகை கொடுத்ததும் அந்தப் பணத்தை தன்னிடம் தருமாறும் மனைவி கேட்டுக் கொண்டாள் இரண்டு மூன்று நாட்கள் கழித்து  தனக்கு வர வேண்டிய பணம்  வரத் தாமதமானதால்  கெடு தவறியதாகவும் பொறுத்துக் கொள்ள வேண்டியும் கேட்டுக் கொண்டு வாடகைப் பணத்தைத் தந்தார்  நானும் பெரிய மனது பண்ணி அதைப் பொறுத்துக் கொண்டேன் . அவர் சென்றவுடன் அவரது மனைவியிடம் அந்தப் பணத்தைக் கொடுத்தேன் அவரும் ஏதும் நடக்காததுபோல் இருந்து விட்டார்(எப்படி எல்லாம் அட்ஜஸ்ட்மெண்ட்?)
ஒரு நாள் அவரது கணவரைக் கூப்பிட்டு என் இளைய மகனை விடச் சின்னவர் அவருக்கு ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து  வெறும் பந்தாவை விட்டு விட்டுப் பணிக்குப் போக வேண்டி அறிவுறுத்தினேன்  என்ன ஆச்சரியம் ஒரு நல்ல மகனைப் போல் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார் ஓரிரு நாளில் ஒரு ரியல் எஸ்டேட் கம்பனியில் வேலைக்கும் சேர்ந்தார்  சில மாதங்களில் கோர்ட்டில் நிலுவையில் இருந்த கேசில்  இவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்ததாகவும்  இனி நல்ல நிலைக்குப் போவேன் என்றும் கூறினார் இரண்டு ஆண்டுகள் சுமார் என் வீட்டில் குடித்தனம் இருந்தனர் அதன் பின் ஒரு வீட்டை வாடகைக்கு வேறு இடத்தில் எடுத்துக் கொண்டனர்  ஒரு நாள் நானும் மனைவியும் சாலையில் செல்லும் போது காரில் எதிரில் வந்தவர் எங்களை நாங்கள் போகுமிடத்துக்குக் கொண்டு செல்வதாகக் கூறி லிஃப்ட் கொடுத்தார். இன்னொரு முறை கணவனும் மனைவியும் ஒன்றாக என் வீட்டுக்கு வந்து அவர்களது சொந்த வீட்டுக் கிருகப் பிரவேசதுக்குவர பத்திரிக்கை கொடுத்தனர் என் வீட்டில் குடி வந்தவர்கள் நல்ல நிலைக்கே போய் இருக்கின்றனர் என்பது திருப்தி தருகிறது 
சுமார் நான்காண்டுகள்  வீட்டில் குடி இருந்தவரை அண்மையில் காலி செய்யச் சொன்னேன்  வீட்டைப் புதுப்பிக்க வேண்டி இருந்ததாலும் சில மராமத்து வேலைகள் செய்யவும் வேண்டி இருந்தது.
 இப்போது என் மாடி வீடு புதுப் பொலிவுடன் மீண்டும் வாடகைக்கு. வீடு கட்டிய செலவை விட புதுப்பிக்கவும் பின் புறம் ஒரு கார் பார்கிங் செய்யவும்அதிகமாகி விட்டது ஒரு நல்ல குடித்தனக் காரரைத் தேடவேண்டும் 
புதுப்பிக்கப்பட்ட வீட்டின் சில புகைப்படங்கள்
படுக்கை அறை( இது போல் இரண்டு )
   
உள்ஹாலும்  வாசலும் 
                 
ஹாலின் இன்னொரு புறம்

சமையல் அறை
  
குளியல் அறை  டாய்லெட்
              
  
இது தவிர இன்னொரு ஹால் பூஜை அறை ஒரு ஸ்டோர் ரூம்  எல்லாம் உண்டு. கீழே வீட்டின் பின்புறம் கார் பார்க் செய்ய வசதி உண்டு