ஞாயிறு, 18 ஜூன், 2017

திருமணங்களும் சில நினைவுகளும்

நான் வரைந்த முருகன்  கண்ணாடி ஓவியம் 
வெண்ணை தின்னும்  கண்ணன் 
ராதா கிருஷ்ணன் கண்ணாடி ஓவியம்  முதன் முதலில் முயன்றது
சமயபுரம் மாரியம்மன்

இந்த ஓவியங்கள் ஒரு சாம்பிளுக்கே  இப்போதெல்லாம் கண்களும்  கைகளும் ஓவியம் வரைய ஒத்துழைப்பதில்லை
பதிவுக்கு முன்  வாசகர்கள் பார்வைக்கு 

திருமணங்கள்  சில எண்ணங்களும்  நினைவுகளும்

சில அனுபவ வரிகள் வலையில் எழுதப்படும்போது ரசிக்கப் படுகின்றன; சில உதாசீனப் படுத்தப் படுகின்றன; சில வழி காட்டும் படிப்பினைகளாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. ஒருவராவது ரசிக்கிறார் என்றாலும் தொடர்ந்து எழுதும்படி எனக்கு ஆலோசனைகளும் வந்திருக்கிறது. திருமணம் பற்றி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் இருந்தது. பதிவு எழுத பொருள் தேடிக் கொண்டிருந்தபோது வந்ததால் இந்தத் தலைப்பிலேயே எழுதுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வம்ச விருத்தி செய்ய ஊரும் உலகமும் அளிக்கும் அனுமதியே. அனைத்து ஜீவராசிகளும் தங்கள் இனப் பெருக்கத்துக்கென்றே வாழுகின்றன என்று நான் கருத்து சொன்னால் அநேகம் பேர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.அதன் தாக்கத்தை சிறிது குறைக்க உண்ணவும் உறங்கவும் என்றும் சேர்த்துக் கொள்கிறேன். ஆறறிவு படைத்த மனிதன் தன் பரிணாம வளர்ச்சியில் தனக்கு விதித்துக் கொண்ட கட்டுப் பாடுகளில் திருமண பந்தமும் ஒன்றாகிறது.

திருமணம் பண்டைக்காலத்தில் கடி-மணம், கரணம், மன்றல், வதுவை, வரைவு என்று பல பெயர்களில் அறியப் பட்டிருந்தது. அந்தக் காலத்திலேயே பொருத்தம் பார்த்து திருமணங்கள் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன.

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு, நிறுத்த காமவாயில் ,நிறையே, அருளே உணர்வோடு திருவென முறையுளக் கிளந்த ஒப்பினது வகையே என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

இப்பொழுதும், இளமை ,வனப்பு, வளமை, கல்வி, அறிவு என்று பல பொருத்தங்கள் பார்த்துத்தான் திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன, ஆனால் பல குடும்பங்களில் உறவின் வழியே நிச்சயமாகும் திருமணங்களில் பெரும்பாலும் இதையெல்லாம் கவனிப்பதில்லை.அறிந்த மனிதர் ,இனம் குலம் எல்லாம் ஒத்தது இதையெல்லாம் விட சொத்து பத்துகள் குடும்பத்தைவிட்டு வெளியேறாது என்னும் எண்ணமும்கலந்தெ மணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன. இந்த வகைத் திருமணத்தில்ACCOUNTABILITY ---GUARANTEED  என்று எண்ணுகிறார்கள், இந்த வகைத் திருமணத்தில் பெரும்பாலும் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை இழக்கிறார்கள். இம்மாதிரி உறவில் விளையும் திருமணங்கள் வாயிலாகப் பிறக்கும் சந்ததிகள் உடல் நலம் குன்றி இருக்க வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஜாதகப் பொருத்தம் சரியாக அமையாததால் பல ஆண்டுகளாக திருமணம் நடக்காமல் முதிர் கன்னிகளாக இருக்கும் சில பெண்களையும் எனக்குத்தெரியும்.

ஆனால் தற்காலத்தில் நடைபெறும் பல திருமணங்களில் பெற்றோருக்கு எந்த உரிமையும் கொடுக்கப் படுவதில்லை. ஆணும் பெண்ணும் சந்திக்கிறார்கள். ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப் படுகிறார்கள் (பெரும்பாலும் இனக் கவர்ச்சியால்) திருமணமும் செய்து கொள்கிறார்கள். ஆனால் சில நாட்களிலேயே தவறான முடிவால் பிரிகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தருபவரும் இல்லாமல் போகிறார்கள்

இதைக் கூறும்போது ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது

 நண்பர் ஒருவரின் மகள் வேற்று மொழி. சாதிப்பையனை விரும்பி காதலித்து இருக்கிறாள் பெற்றோர் வழக்கம் போல் அதை ஏற்கவில்லை. பிற்காலத்தில்  கஷ்டப்படுவாய் என்று கூறி இருக்கிறார்கள்  அதற்கு அந்தப் பெண் ஜீஎம்பி அங்கிள் அப்படித்தானே கல்யாணம் செய்து இருக்கிறார் அவர்கள் இத்தனை ஆண்டுகளாக  மகிழ்ச்சியாக இல்லையா என்று வாதாடி  சம்மதம் வாங்கினாளாம்  நண்பர் என்னிடம் கூறியது இது
எது எப்படி இருந்தாலும் திருமணங்கள் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட வேண்டும். பதிவு செய்யப் பட வேண்டும். இல்லையென்றால் திருமணத்தால் கிடைக்கும் உரிமைகள் இழக்க நேரலாம்.

இருமனம் இணைந்து நடக்கும் திருமணங்களில் கணவனும் மனைவியும் இரட்டை மாட்டு வண்டி போல் வாழ்க்கை சுமையையும் சுகங்களையும் இழுக்க வேண்டும். உற்றாரும் உறவினரும் கூடி நின்று வாழ்த்தி நடத்தும் திருமணங்கள் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகமே.
 

 திருமண நிகழ்வுகள் பல நினைவலைகளை மீட்டுச் செல்கின்றன

பல நண்பர்களது திருமணத்துக்குச் சென்று வந்திருக்கிறேன்..அவற்றில் சில மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் திருச்சியில் இருந்த காலம். நண்பர் ஒருவருக்கு வடுகூரில் ( வழுதூர் ?) திருமணம். நானும் இன்னொரு நண்பரும் முதல் நாள் மாலையே திருமணத்துக்குப் போக திட்டமிட்டிருந்தோம். அலுவலகப் பணி முடிந்து மாலை ஐந்து மணி அளவில் அவருடைய ஷெர்பா மோட்டார் சைக்கிளில் கிளம்பினோம். இரண்டு மணி நேரப் பயணம் இருக்கும் என்று கணக்கிட்டோம். போகும் வழியில் மழை பிடித்துக் கொண்டது. மழை நிற்கக் காத்திருக்கும்போதே இருட்ட ஆரம்பித்து விட்டது. எங்களுக்கு வழியும் சரியாகத் தெரியாது. சமயம் பார்த்து வண்டியின் ஹெட் லைட் எரியாமல் மக்கர் செய்தது. நான் பில்லியனில் அமர்ந்து கையில் ஒரு டார்ச் விளக்கைப் பிடித்துக் கொண்டு முன்னால் அடிக்க நண்பன் வண்டி ஓட்டிக் கொண்டு போனான். எதிரில் வரும் லாரிகளின் வெளிச்சம் கண்கூச வைத்து  மேலே போக முடியாமல் அவன் வண்டியை நிறுத்தினான். நல்ல வேளை.! மேலே சென்றிருந்தால் அருகிலேயே ஓடிக் கொண்டிருந்த ஆற்றுக்குள் போயிருப்போம்.கையில் டார்ச்சுடன் நான் ஒளிகாட்ட அதிர்ஷ்ட வசமாக  விபத்து நேராமல் தப்பித்த அந்த நிகழ்ச்சி மறக்க முடியாதது, அன்று ஒரு வழியாக திருமண வீட்டை அடைந்த போது இரவு பத்து மணியாகிவிட்டது. மழையில் சகதியான சாலையில் இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமாக தள்ளிக் கொண்டே சென்றோம்
.
திருவனந்தபுரத்தில் ஒரு நண்பருக்குக் கலியாணம். ஒரு பேரூந்து ஏற்பாடு செய்து நாங்கள் சென்றோம். நண்பன் வீடு நாகர்கோயிலில் இருந்தது என் இரண்டாம் மகன் பிறந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை. போகும் வழியில் குற்றாலத்தில் குளித்துவிட்டுப் போனோம். முதன்முதல் குற்றாலக் குளியல் அனுபவம் கைக் குழந்தை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டு குளித்தது மறக்க முடியாத அனுபவம். திருமணச் சடங்காக மாப்பிள்ளைக்கு உறவினர் தலைப்பாகை கட்டுகின்றனர் கட்டுகின்றனர் கட்டிக் கொண்டே இருக்கின்றனர் . அதுவே சுமார் முப்பது நாற்பது பேர்கள் கட்டி முடிப்பதற்குள் பசியில் பாதி உயிர் போய்விட்டது. ஒரு வழியாய் இந்த சடங்கெல்லாம் முடிந்து பந்தியில் உட்காரப் போகும் நேரம் நாங்கள் தடுத்து நிறுத்தப் பட்டோம். முதலில் பெண்கள் என்றனர்.பெண்ணுரிமை , முன்னுரிமை என்ன என்று அப்போது தெரிந்து கொண்டோம்

. நண்பனின் உறவினர்கள்பெண்ணு கொள்ளாமோஎன்று கேட்டனர். எங்கள் குழுவில் இருந்த பெண்கள்சேச்சே.. நாங்கள் இங்கிருந்தெல்லாம் பெண்கள் கொள்வதில்லைஎன்று பதில் கூறினர். அவர்கள் மலையாள வழக்கில் பெண் அழகாய் இருக்கிறாளா எனக் கேட்க அது புரியாமல் பெண் எடுப்பதில்லை என்று பதில் கூறி இருக்கின்றனர்.நாங்கள் மணம் முடிந்த பிறகுதிருச்சி’ போவோம் என்றதை நாங்கள் கோபித்துக் கொண்டு திரும்பிப் போவோம் என்று புரிந்து கொண்டு பரிதவித்தது மறக்க முடியாத அனுபவம்.

கும்பகோணத்தில் ஒரு நண்பன் திருமணத்தில் ஒரு சடங்காக ஆர்த்தி எடுக்க வேண்டும் என்று கூறி சுமார் அரை மணிநேரம் அவனை வீதியில் காக்க வைத்தசம்பவம் இன்றும் அவனைப் பார்க்கும் போது கேலி செய்ய உதவும்
.
கோவையில் ஒரு நண்பன் திருமணத்தில் அவனை கோயில் கோயிலாக அழைத்துச் சென்று வந்ததும் இப்படியெல்லாம் வழக்கங்களா என்று நினைக்க வைத்தது.

மனைவியின் உறவினர் மகளுக்கு மும்பையில் திருமணம். என் மனைவி அதற்கு முன் மும்பை பார்த்ததில்லை. என் நெருங்கிய உறவினர் மும்பையில் இருந்தார். அவருக்குக் கடிதம் எழுதி நாங்கள் அவர் வீட்டுக்கு வந்து இருக்கலாமா என்று கேட்டிருந்தேன். அவரும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் எங்களை எதிர்பார்பதாகவும் பதிலளித்தார். பெண் வீடு உல்லாஸ்நகர். அங்கு இறங்கி மாதுங்காவில் திருமணம் முடிந்த பிறகு என் உறவினர் வீட்டுக்குப் போவதாக ஏற்பாடு. திருமண வைபவங்கள் முடிந்து உணவு அருந்தப் போகும் சமயம் என் உறவினர் அங்கு வந்தார். எங்களை அழைத்துக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறார் என்று மகிழ்ந்து அவரையும் விருந்துக்குக் கூட்டிச் சென்றேன் அவர் நாங்கள் அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்தவே வந்திருந்தார். அவருடைய சம்பந்திகள்  அவர் வீட்டுக்கு வந்திருப்பதால் நாங்கள் அங்கு வருவது உசிதமல்ல என்று சொல்லவே வந்திருந்தார். முன் பின் தெரியாத இடத்தில் எதிர்பாராத விதத்தில் சங்கடப் படுத்தப் பட்டோம். நல்ல வேளை என் நண்பன் ஒருவன் விலாசம் என்னிடம் இருக்க சமாளித்து விட்டோம். மூன்று நாட்கள் மும்பையில் தங்கி எல்லா இடங்களையும் பார்த்துப் பின் அந்த உறவினர் வீட்டையும் விசிட் செய்தோம்
.
உறவினர் ஒருவருடைய மகள் ஒரு ஆங்கிலேயரைத் திருமணம் செய்து கொண்டார். எல்லாருடைய சம்மதத்துடன் நடந்த திருமணம் ஆர்ய சமாஜ் குழுவினரால் நடத்தி வைக்கப் பட்டது. இந்திய முறைப்படி மந்திரங்கள் ஓதி மங்கல நாண் கட்டப்பட்டது. ஒவ்வொரு மந்திரம் உச்சரிக்கப் பட்டதும் அதன் பொருள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு திருமணம் நடத்தப் பட்டது. அது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது

                 ஒவ்வொரு திருமணமும் ஒவ்வொரு அனுபவம்.மன்னார்குடியில் நண்பன் ஒருவன் திருமணம். திருமணம் முடிந்து என்னை அவன் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்தான். பெண் கிராமத்தில் இருந்து வந்தவள். என்று தெரியும். அறிமுகம் ஆனவுடன் கை கூப்பி வணக்கம் தெரிவித்தேன். ஆனால் அந்தப் பெண் கை குலுக்கக் கை நீட்ட , அது கண்டு நானும் நீட்ட, அவள் கை கூப்ப ஒரே  தமாஷாகி  விட்டது.

ஒரு திருமண விழாவுக்குச் சென்றபோது , முதலில் எனக்கு ஏதுமே விளங்கவில்லை. திருமணம் நடத்திவைக்கும் புரோகிதர் கழுத்தில் மாலையுடன் நின்றிருந்தார். கூட்டத்தில் நாங்கள் பின்னால் நின்றிருந்தோம். பிறகு பார்த்தால் புரோகிதரே பெண்ணுக்குத் தாலியும் கட்டினார். அப்புறம்தான் தெரிந்தது. அவர் புரோகிதர் அல்ல. அவர்தான் மாப்பிள்ளை என்று. .அந்த மாப்பிள்ளை இன்றைய ( அல்ல நாளைய ) சமுதாயத்தின் பிரதிநிதி என்று, குடுமி வைத்து, தாடியுடன் கடுக்கன் எல்லா அணிந்திருந்த அவர் ஒரு MNC-ல் ஒரு உயர்ந்த பதவியில் இருக்கிறார் என்று.Appearances can be deceptive  என்று விளங்குகிறது.நேற்றைய வழக்கங்கள் இன்றைய ஃபாஷனோ.?

 எது எப்படி இருந்தாலும்  திருமணங்களில் தான் உறவுகளை சந்திக்க முடிகிறது  பழைய தலைமுறையின்  எச்சங்களாக இருக்கும் நம்மை அறிமுகப்படுத்தும்போது அவர்களின் ரியாக்‌ஷன்   நான் ரசிப்பது  அதன் பிறகு அவர்கள் நம்மைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள்  இன்னும்  என்னென்னவோ நினைவுகள் நீளம்கருதி முடிக்கிறேன்  

ஒரு திருமணப்படமில்லாமலா  நன்றி விக்கி பீடியா 

 
                   















              .










செவ்வாய், 13 ஜூன், 2017

கோவில்களும் சில நம்பிக்கைகளும்


                             கோவில்களும் சில நம்பிக்கைகளும்
                              --------------------------------------------------------
 என் அண்மைய பதிவு ஒன்றுக்குப் பின்னூட்டமிட்ட நண்பர்  ஒருவர் என் பீ எச் இ எல்  அனுபவனகளைப் பற்றி எழுதலாமே என்றிருந்தார்  அலுவலக அனுபவங்களை விட  நாங்கள் இருந்த குடியிருப்பின் சில செய்திகளைப் பகிரலாமென்று தோன்றுகிறது
இந்த மனிதர்களின் அறியாமை மற்றும் மூட நம்பிக்கை குறித்து கவலைப் படுவதே எனக்கு வாடிக்கையாகி விட்டது. நான் நடைபயிலும்   பூங்காவில் ஒரு சிறிய மண்மேட்டுக்கு பலரும் வந்து பூவிட்டு. பொட்டு வைத்து தூப தீபங்காட்டி வழிபடுவதை கண்டு மனம் வருந்தியதுண்டு. அவர்களிடம் அவர்களது அறியாமை பற்றிக் கூற வேண்டும் என்னும் ஆவலை மிகவும் பிரயாசையுடன் அடக்கி வருகிறேன். நான் மூடப் பழக்கம் என்பது அவர்களது நம்பிக்கை. அதில் தலையிட எனக்கு உரிமை இல்லை. அதுவே அவர்களுக்கு நிம்மதி என்றால் எனக்கென்ன.?
எனக்கு இந்த நம்பிக்கைகள் பழக்கங்கள் பற்றி யெல்லாம் எழுதத் தூண்டுவது எனது சில அனுபவங்களே நாட்டில் பல கோவில்களின் கதைகளைக் கேட்கும் போதுஅவை யாவும்  சுயம்பு மூர்த்திகள் என்றும்  அவை யாருடைய கனவிலாவது வந்து அவைகளுக்குக் கோவில் எழுப்ப கட்டளை இட்டிருக்கும்  
நான் இங்கு நடை பயிலும் பூங்காவில் சில நாகர்களின் சிலைகள் பிரடிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது காண்கிறேன்  அதற்கு சிலர் பால் அபிஷேகம் செய்வதையும் பார்த்திருக்கிறேன்   அந்தச் சிலைகளின் மேல் அங்கிருக்கும்  சில நாய்கள் உச்சா பொழிவதை   கண்டிருக்கிறேன்   நாய்களுக்குத் தெரியுமா நம் நம்பிக்கை எது என்று?

திருச்சியில் குடியிருப்பு வளாகத்தில்  எழுப்பப் பட்டிருக்கும்  சில கோவில்கள் பற்றி நான் அறிந்ததைப் பகிர்கிறேன்  1966 வருட வாக்கில் குடியிருப்பில் கோவில் கிடையாது  ஆனால் கோவில் இல்லா ஊரில் குடியிருக்கலாமா ? சில சத் சங்க நண்பர்கள் ஒரு மரத்தடியில் இருந்த பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்து கோவில் கட்டினார்கள் பாலகணபதி என்றும் அழைக்கத் துவங்கினார்கள்  ஒரு சில ஆண்டுகளுக்கு முன்  அந்தவளாகத்துக்குச் சென்றபோது  அங்கே வேப்பமரமும்  அரசமரமும்  இணைந்திருக்கும் இடத்தில்  ஒருபிள்ளையாரைக் கண்டேன் ஆனால் அதுதான் அந்த இடத்தில் இருந்தஒரிஜினல் பிள்ளையாரா என்று தெரியவில்லை.
 நமக்குத்தான்  ஒருகடவுள் போதாதே ஆண்டவனை பல ரூபங்களில்  வணங்க வேண்டும்  அதே வளாகத்தில் ஒரு ஐயப்பன் கோவில் உள்ளது மலையாளிகளுக்கு  ஐயப்பன்  இல்லாமால் இருக்க முடியாதேஇது மட்டும் போதுமா மருவத்தூர் ஆதி பராசக்தி பக்தர்கள் ஒரு சக்தி கோவிலைக் கட்டி மருவத்தூர் பாணியிலேயே வழிபாடும்  நடக்கிறது முருகனுக்கு கோவில் இல்லாமல் இருக்கலாமா. அருள் நெறித் திருக்கூட்டத்தார் ஒரு கோவிலை முருகனுக்கு எழுப்பினார்கள் அந்தக் கோவில் வளாகத்தில் இன்னொரு கோவில் எழுப்ப இடமிருக்கவில்லை. விஷ்ணுபக்தர்கள்  பெரும்பாலான  ஐயங்கார்கள்குடியிருப்பின்  ஒரு கோடியில் விஷ்ணுவுக்குக் கோவில் எழுப்பி இருக்கிறார்கள் இதிலெல்லாம்  ஒரு redeeming  feature   என்னவென்றால் எல்லாக் கோயில்களுக்கும் எல்லோரும் செல்வார்கள். ஆனால் இவையெல்லாம் மேற்கூறப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.. எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதாய் கருதப் படும் ஆண்டவனுக்கு இருக்கும் போஷகர்கள் சாதாரண பக்தர்கள் அல்ல.இதுதான் UNITY IN DIVERSITY யோ. சர்ச்சும் மசூதியும் கோருமளவுக்கு அவர்கள் எண்ணிக்கை இல்லை என்றே நினைக்கிறேன்.
இந்த விஷயங்களை சிந்தித்து எழுதிக் கொண்டிருந்த எனக்கு இன்னொரு  சம்பவம் நினைவுக்கு வருகிறது.தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்த ஒருவர் வீட்டில் ஒரு எறும்புப் புற்று இருக்க . ஒரு நாள் அவர் மனைவியின் கனவில் அது ஏதோ அம்மனின் இருப்பிடம் என்றும் முறையாக வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கட்டளை வந்ததாம். அது அரசல் புரசலாகத் தெரிய வர ஒரு சில நாட்களில் அந்த வீட்டுக்கு பக்தர்களின்
எண்ணிக்கை வருகை கூடிக்கொண்டே போயிற்று. ஏறத்தாழ அந்த வீட்டுக்கு ஒரு கோயிலின் அந்தஸ்து வந்துவிட ஏராளமாகக் கூட்டம் மொய்க்க ஆரம்பித்து. கட்டுப் படுத்த செக்யூரிடி தேவைப் பட்டது. இதற்குள் அந்த வீட்டு அம்மாவுக்கு அம்மனின் அருள் வந்து பல்லைக் காட்டி நாக்கைத் துருத்தி பயங்கரமாகக் காட்சி அளிக்கத் தொடங்கினார். வேப்பிலையை கடித்து உமிழ்ந்து அதை சிலர் பிரசாதமாகப் பெறுவதும் தொடங்கியது. சமயபுரம் கோயிலுக்குக் காணிக்கை செலுத்துவோர் இங்கு வந்தால் போதும் என்ற நிலை உருவாகி விட்டது. என் மனைவி ஒரு முறை அங்கு சென்று வந்தவர், அதையெல்லாம் கண்டு பயந்தது தெரிந்து அங்கு போகத் தடை விதித்தேன். இதற்கு மத்தியில் அந்த எறும்புப் புற்றை  செக்யூரிடி துறையினர் அகற்ற நினைத்த முயற்சிகளுக்கு எதிர்ப்பும் இருந்தது. ஒரு கட்டத்தில் அந்தப் புற்றை அகற்றி அங்கு வருவதற்குத் தடை விதித்தனர்.. நாளாவட்டத்தில் அவர்கள் அந்த வீட்டைக் காலிசெய்து வேறெங்கோ சென்று விட்டனர். எல்லா நம்பிக்கைகளும்
  அவநம்பிக்கைகளும் அவரவர்க்குள் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.
என் எழுத்துகளைப் படிப்போர் சிலருக்கு இந்தச் செய்திகள் எல்லாம்  பொருட்டாகவே தெரியாதுநான் முன்பே எழுதி இருக்கும் படி எனக்கென்ன  அவரவர் நம்பிக்கை அவரவருக்கு இருந்தாலும்  நிகழ்வுகள் சில் அவர்களையும் சிந்திக்கத் தூண்டாதா  என்னும் நப்பாசையுமிருக்கிறதே





              .

  

சனி, 10 ஜூன், 2017

இவரைத் தெரியுமா ...4......5


                                இவரைத் தெரியுமா....4.....5
                                --------------------------------------------




இவரைத் தெரியுமா  ----4


 யார்யாரைக் கண்டோ இத்தொடரை எழுதினேன்   என்னைக் கண்டு யார் என்ன என்ன எழுதுவார்களோ இருந்தால் என்ன ? என்னை ஒரு கம்யூனிஸ்டாகப் பார்த்தவர்

 “அப்பா, உங்களைப் பார்க்க விரும்புவதாகஒருவர் இவரிடம்
   சொல்லியிருக்கிறார்.தயாராக இருங்கள். காதில் ரத்தம் வரும்
   
அளவுக்குப் பேசியே அறுத்திடுவார்”, என் மருமகள் என்னை
   
ஏற்கெனவே தயார்படுத்தி இருந்தாள்.நானும் அறுபடக் காத்து
   
இருந்தேன். வந்தவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும். என் மகன்
   
என்னைப் பற்றி அவரிடம் பல தடவைப் பேசியிருக்க வேண்டும்.
   
அவரும் என்னைப் பார்க்க விருப்பம் தெரிவித்து வந்திருந்தார்.
   
நன்கு படித்த மனிதர்;நல்ல வசதி உள்ளவர். தொழிற்சாலையில்
   
பணி புரிந்து தன் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்துக்
   
கொண்டவர் என்றும், அவர் இல்லையென்றால் அத்தொழிற்
   
சாலையே விலாசம் இல்லாமல் போயிருக்கும் என்றும், தன்னால்
   
பல குடும்பங்கள் வாழ்வதாகவும், அதிலிருந்து தனக்கு எதுவும்
   
பலனாகக் கிடைக்கவில்லை என்றும் சொல்லிப் போனார்.
   
இப்போது ஏதோ சில லட்சங்கள் வருமானம் இருப்பதாகவும்,
   
இரண்டு மூன்று பங்களாக்கள் தனக்கு இருப்பதாகவும் அவர்
   
சொல்லக் கேட்டுக் கொண்டேன். அவர் ஒரு ஆசாரமான குடும்
     
பத்தில் இருந்து வருவதாகவும், வாழ்வில் எல்லாம் இருந்தும்
     
நிம்மதி இல்லையென்றும் புலம்பித் தீர்த்தார். அவருக்கு அவரது
     
சஞ்சலங்களைக் கொட்டித் தீர்க்க நான் ஒரு WAILING WALL-ஆக
     
என்னை எண்ணிக் கொண்டேன். எல்லாவற்றையும் கேட்டுக்
     
கொண்ட நான்,தெரியாத்தனமாக அவர் குடும்பம் பற்றிக் கேட்டு
     
விட்டேன்.

 “
நான் இப்போது தனியாகத்தான் இருக்கிறேன்”- என்றார்.

நான்:-” பெற்றோர், மனைவி மக்கள் என்று.......

அவர்:-”வயதான அம்மா இருக்கிறாள்;மனைவி இருக்கிறாள்; ஒரு
               
மகன் இருக்கிறான்.

நான்:- ” இவ்வளவு பேர் இருந்தும் தனியாக இருக்கிறேன்
               
என்கிறீர்களே.

அவர் :-”என் அம்மா என்னுடன் இருக்கிறாள். என் மகன் அவன்
               
அம்மாவுடன் இருக்கிறான்.
நான்:- “புரியவில்லை.

அவர்:-” நான் செய்த ஒரே தவறு,கொஞ்சம் வயசு வித்தியாசத்தில்
               
வேற்று மதப் பெண்ணைக் காதலித்துக் கலியாணம்
               
செய்து கொண்டதுதான். மகன் பிறந்ததும் ,அவளுக்கு
               
நான் என் அம்மாவை விட்டு அவளுடனேயே இருக்க
               
வேண்டும் என்று விருப்பம்.அதற்காக அம்மாவை விட்டுக்
               
கொடுக்க முடியுமா.? நீ வேண்டுமானால் உன் மகனுடன்
               
இருந்துகொள் என்று கூறிவிட்டேன்

நான்:- ”பேசித் தீர்க்க வேண்டிய விஷயம். அவசரப்பட்டு முடிவு
               
எடுத்து விட்டீர்களோ.?

அவர்:-”அவளுக்கு நான் எப்படியும் அவளுடன் வருவேன் என்று
               
நம்பிக்கை. எனக்கு என் அம்மா முக்கியம். விட்டுக்
               
கொடுக்க முடியாது.  அப்படி இப்படி என்று பதினெட்டு
               
வருடங்கள் ஓடிவிட்டது.

நான்:  ”பலத்தைக் காட்டி பயமுறுத்தும் நாடுகளே பரஸ்பரம்
             
பேசித் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கும்போது ,பேசாமலே
             
பிரச்சனை தீரும் என்று எப்படி எண்ணுகிறீர்கள்.?

அவர்:-”நான் எப்பேர்ப்பட்ட மனிதன். எப்படி விட்டுக் கொடுப்பது..
               
ஒரு சின்ன சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி, எந்த
               
பலனையும் எதிர்பாராமல்,எத்தனை பேரை வாழ
               
வைத்திருக்கிறேன்.

நான்:- ”பலனில்லாமலா இருந்த இடத்திலிருந்து லட்சங்களுக்கு
               
மேல் வரும்படியும், சொத்துக்களுக்கு சொந்தக்காரராய்
               
இருப்பதும்? உங்கள் நிலைக்கு எத்தனையோ பேரின்
               
உழைப்பும் ஒரு முக்கிய காரணம் அல்லவா,?

அவர்:- “என்ன.. நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் போலப் பேசுகிறீர்கள் ?

நான்:- “உள்ளதைச் சொன்னேன். நான் எனது என்று நாம் அதிகம்
               
நினைக்கும்போது, புரிதல் குறைகிறது. EGO வளர்கிறது.
               
பிரச்சனைகள் முடிவு பெறுவதில்லை. உங்கள் மகனிடம்
               
பேசினீர்களா.?

அவர்:-“அவன் அம்மாவைவிட மோசம் சொன்ன பேச்சைக் கேட்க
               
மாட்டான். ஊதாரித்தனமாக செலவு செய்வான். எல்லாம்
            
அவள் கொடுக்கும் இடம்.
நான்:-”உங்கள் மனைவி என்ன செய்கிறார்கள் ?

அவர்:-”அவள் ஒரு டாக்டர். எல்லோருடைய பிணிக்கும் மருந்து
               
கொடுப்பவள்.அவளுக்குள்ள வியாதியே தெரியாதவள்.

பேசப் பேச மனிதர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வசம் இழந்து
கொண்டிருந்தார். இந்தப் பேச்சு முற்றுப் பெற வாய்ப்பில்லை
என்று தோன்றியபோதுஎல்லாம் நல்ல படியாக முடியும் மனசை
தளர விடாதீர்கள். தைரியமாக இருங்கள் “,என்று ஒருவாறு
தேற்றி அனுப்பினேன்.
                                         ========================
இவரைத் தெரியுமா….5

தான் சொல்வதை எல்லாம் பிறர் நம்பிவிடுவார்கள் என்னும்  ஒரு மமதை  இவருக்கு

நான் போனவாரம் FRANKFURT-ல் இருந்து LONDON-க்கு FLIGHT-ல்
வரும்போது டாக்டர் கிருஸ்டியன் பார்னார்ட் அவர்களை
சந்தித்தேன்.

யாரு..? உலகிலேயே முதன் முதலில் இருதய மாற்றுச் சிகிச்சை
செய்தாரே அவரா.?

ஆம் .அவரேதான். நான் BHEL-ல் வால்வ் டிவிஷனில் முதன்மைப்
பொறுப்பில் பதவியிலிருக்கிறேன் என்று சொன்ன போது
அவருக்கு இருதய சிகிச்சைக்கு வால்வ் தயாரித்துக் கொடுக்க
முடியுமா என்று கேட்டார். நானும் இப்போது BUSY SCHEDULE-ல்
இருப்பதால் கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கிறேன்
                                          ============================