சனி, 15 ஜூலை, 2017

இவர்கள் யார் என்று தெரிகிறதா


                                  இவர்கள் யார் என்று தெரிகிறதா
                                   ==============================
1)       கணவன் மனைவி இருவரையும் BERMUDAS-ல் காணலாம். பெரும்பாலும் NIKE ஷூக்கள அணிந்திருப்பர்.
2)      தாபாக்களில் உணவு அருந்திவிட்டு CREDIT கார்டில் பணம் செலுத்த முயல்வார்கள்.
3)      மினெரல் வாட்டர் பாட்டிலுடன் இருப்பார்கள்.
4)      தாராளமாக DEODARENT உபயோகிப்பார்கள்.
5)      யாராவது தும்மினால் GOD BLESS  என்பார்கள்.
6)      ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும்போது HEY அல்லது HI என்பார்கள்.
7)      தயிர் என்பதற்கு யோகர்ட் என்பார்கள்.
8)      டாக்சி என்பதற்கு பதில் CAB என்பார்கள்.
9)      சாக்கலெட் அல்லது மிட்டாய்க்கு CANDY என்பார்கள்
10)  பிஸ்கட் என்பதற்கு குக்கி என்பார்கள்.
11)  HAVE TO GO என்பதற்கு GOTTA GO என்பார்கள்.
12)  ஜீரோ என்று வருமிடங்களை ஓ என்பார்கள். (உ-ம் 204 என்பதை டூஓஃபோர் என்பார்கள்.)
13)  தூரங்களை மைலில் சொல்வார்கள்
14)  எண்களை மில்லியன்களில் சொல்வார்கள்.
15)  சுற்றுப்புறம், வெயில் எல்லாவற்றையும் குறைபட்டுக் கொள்வார்கள்.
16)  பால் கவர்களில் பாலில் எவ்வளவு % FAT இருக்கிறது என்பதை கவனமுடன் பார்ப்பார்கள்.
17)  நாளைக் குறிப்பிடும்போது மாதம் தேதி வருடம் (MM/DD/YYYY) என்றுதான் எழுதுவார்கள். தேதி மாதம் வருடம் என்று குறிப்பது பிரிட்டீஷ் வழக்கம் என்று கேலியாக சொல்வார்கள்.
18)  COKE குடிக்கும்போது கவனமாக DIET COKE தான் குடிப்பார்கள்.
19)  ஊருக்கு வந்து ஒரு மாதம் ஆனாலும் JET LAG பற்றி குறை கூறுவார்கள்.
20)  இந்தியாவின் எல்லாவற்றையும் குறைவாகவே மதிப்பார்கள்.
21)  தங்கள் பயணத்தின்போது சூட்கேசில் கட்டப்படும் விமான சர்வீஸாரின் TAG களை எடுக்கவே மாட்டார்கள்.
22)  SCHEDULE என்பதை SKEJULE என்றும் MODULE என்பதை MOJULEஎன்றும் உச்சரிப்பார்கள். (அமெரிக்கா ரிடர்ண்ட் அமெரிக்க  இந்தியர்கள்)

பாட்டிலில் ஷாம்பூ காலியான பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி இன்னும் ஒரு குளியலுக்கு அதை உபயோகிப்பார்கள் .
பற்பசை காலியானாலும் அதைத் தட்டி தகடாக்கி சுருட்டி எல்லாப் பேஸ்ட்டையும் வெளியில் எடுப்பார்கள்  . 
இருநூறு ரூபாய்க்குக் காய்கறிகள் வாங்கினாலும் கொஞ்சம் கொத்துமல்லித் தழை கொசுராக வாங்குவார்கள்  . 
கிடைத்த பரிசுப் பொருட்களையே மீண்டும் பரிசாகக் கொடுக்க அது பொதிந்து வந்த வண்ணத் தாளையே உபயோகிப்பார்கள் 
வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த bone chjna கோப்பை, தட்டுகளை விருந்தினர் வரும்போதுமட்டும் வெளியில் எடுப்பார்கள் . 
ஒரு பொட்டுத் தங்கம் வாங்கும் எண்ணம் இல்லாவிட்டாலும் கூட அதன் விலை ஏற்றம் பற்றிக் கவலை கொள்வார்கள் . 
TV ரிமோட்டைத் தட்டித் தட்டி அதன் உயிர் எடுப்பார்கள் . புது பாட்டரி வாங்காமல் காலம் கடத்துவார்கள்   
விருந்துக்குப் போகுமுன் பட்டினி கிடந்து வயிற்றைக் காலியாக வைத்துக் கொள்வார்கள்
. T ஷர்ட் பழையதானால் அதை இரவில் உடுத்து வார்கள் . இன்னும் பழையதானால் ஹோலி அன்றைக்கு உடுத்துவார்கள்  இன்னும் பழையதானால் வீடு துடைக்க உபயோகிப்பார்கள் (இந்தியர்கள் )

நாம் இந்தியர்கள்   
ஆண்குழந்தைக்காக வேண்டுவோம். பெண்சிசுக்களை வேண்டோம்.முடிந்தால் கருவிலேயே அழிப்போம். பெரியோர்களின் ஆசியும் ஆண்மகவுக்கே பெண்ணுக்கல்ல. 
ஆனால்
செல்வம் வேண்டுமென்றால் மஹாலக்ஷ்மியை வேண்டுவோம்.
கல்வி வேண்டுமென்றால் சரஸ்வதியை வேண்டுவோம்.
துக்கங்களில் இருந்து நிவாரணம் கிடைக்க  தாய் சக்தியை நாடுவோம்
பேய் பிசாசுகளில் இருந்து பயம் அகல காளிமாதாவை தரிசிப்போம்..
நாம் இந்தியர்கள். WE ARE HYPOCRITES.!

                                       


 காணொளி கண்டு ரசிக்க 

நமக்கு தெரிந்திருக்க வேண்டிய உறவு முறைகள் 

       நாமும் நம் வம்ச விருட்சமும்   
  பரன்                          பரை
  சேயோன்                      சேயோள்
  ஓட்டன்                        ஓட்டி
  பூட்டன்                        பூட்டி
  பாட்டன்                       பாட்டி
  தந்தை                         தாய்
  மகன்                          மகள்
  பெயரன்                        பெயர்த்தி
  கொள்ளுப்பெயரன்              கொள்ளுப் பெயர்த்தி

  எள்ளுப்பெயரன்                 எள்ளுப்பெயர்த்தி 


இதில் காணும் எண்களில் ஏதாவது ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள் காணொளி  மீண்டும்  பார்க்கும் போது நீங்கள் நினைத்த எண் காணாது
இது எப்படி என்று சொல்ல முடிகிறதா பாருங்கள் காணொளி





























செவ்வாய், 11 ஜூலை, 2017

மழை விட்டும் தூவானம்..............


                                  மழை  விட்டும் தூவானம்..............
                                 ---------------------------------------------
மழைவிட்டும் தூவானம்  விடவில்லை என்பார்கள்  அது போல் இருக்கிறது எனக்கும்  மரம்செடி கொடிகள் என்று எழுதி இருந்தேன்  அதில் என் வாழைமரம் விட்டுப்போயிருந்தது வாழை குலைத்துக் காய்க்க சுமார் ஓராண்டுகாலம் ஆகிறது என்  தோட்டத்தில்  மூன்று நான்கு மரங்கள் வைத்திருந்தேன்  வீடு மராமத்து  செய்யும் போது பின் புறம் பாதி இடத்துக்கும்  மேல் கான்க்ரீட் பூசி ஒரு கார் நிறுத்தும் இடமாகச் செய்திருந்தேன் அப்போது பலியானவை வாழைகளே  இருந்தாலும்  ஒரு கன்றை இருக்கும்  இடத்தில்  நட்டேன்  அது இப்போது பூ விட்டிருக்கிறது அந்தக் குலை சாய்ந்து மதில் ஓரம்  இருப்பதால் காய்க்கப் போகும் குலை திருட்டுப் போகலாம் ஒரு நப்பாசையாக அதனை புகைப்படமாக சேமிக்கிறேன் அதுகீழே

 இருக்கும் ஒரே வாழை 
வாழ்வில் ஒரு நாள் என்றுமனைவியின் பிறந்த நாள் குறித்து எழுதி இருந்தேன் பிறந்த நாள் அன்று மாலை  என் இரண்டாம் மகன் குடும்பத்துடன் வந்திருந்தான் வரும்போது ஒருகேக்கும்  வாங்கி வந்தான்   நானும் என்  ஆசைக்கு ஒருகேக் அவனில்லாமல்  பேக்கினேன்  ( செய்முறைக்கு பார்க்க என்  பூவையின்  எண்ணங்கள் பதிவு.. எனக்கு மெழுகு வத்தி ஏற்றி அணைத்துக் கொண்டாடுவதில் விருப்பம்  இல்லை  அதற்குப் பதில் விளக்கேற்றி  வாழ்த்து சொல்வது சிறந்தது  என்று எண்ணுகிறேன்   அது குறித்து ஒரு பதிவும் முன்பே எழுதி இருக்கிறேன்  பார்க்க (பிறந்த நாள் )  (பிறந்த நாள் )
 என் மனைவியின்  பிறந்த நாளன்று எடுத்த புகைப்படங்களும் காணொளியும்  பதிவிடுகிறேன் 

இடப்பாகம் இருப்பது மகன்  வாங்கி வந்த கேக்  வலது புறம் அவனில்லாமல் பேக்கிய கேக் 

     
   
மனைவியுடனும் பிறந்த நாள் கேக்குடனும்    


இட்மிருந்து வலமாக சின்ன பேரன்,  மகனின்  மச்சினன்  மகன்,  மனைவி, நான், பேத்தி 

  
மேலே தெரியும் ஆலிலைக்கண்ணன் நான் என் அண்ணாவுக்குக் கொடுத்தது நான் அப்போது புகைப்படம்  எடுத்துக்  கொள்ளவில்லை தஞ்சாவூர் ஓவியம்   
    
                       

     
                   

வெள்ளி, 7 ஜூலை, 2017

மீண்டும் பெர்செப்ஷனா


                                 மீண்டும்  பெர்செப்ஷனா
                               ------------------------------------------

நான் ஒரு சராசரி இந்தியன்  செய்திகள் பார்க்கிறேன்  தொலைக்காட்சிகள் பார்க்கிறேன்   நாட்டு நடப்புகளை அறிந்து கொள்கிறேன்  ஆனால் இவை எல்லாம் என்புரிதலை விரிவு படுத்துகிறதா என்றால் இல்லை  என்றே கூற வேண்டும் சராசரி இந்தியனைப் போல் எல்லாம்  தெரிந்ததாக நினைத்து எதையுமே சரியாகப் புரிந்துகொள்ள முடியாத ஒரு பாமரன்  சற்றே சிந்தித்துப் பார்த்தால் உதரணத்துக்கு இந்த டிமானிடைசேஷனை எடுத்துக் கொள் வோம்  என்னை உடனடியாக பாதிக்காதவரை  அது குறித்த என் எண்ணண்ங்கள் எல்லாமே சரியானதா தெரியவில்லை. முதலாவதாக இதன்  காரணமே ஊழல் ஒழிப்பும் கள்ளப் பணம் வெளிக்கொண்ர்வும்  என்றார்கள் இதுகுறித்து இரண்டுவகையான அபிப்பிராயங்கள் இருக்க முடியாது ஆனால் எந்த அளவு இவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்னும் புள்ளி விவரங்கள் எனக்குத் தெரியாது  வித விதமாகவிவரிக்கப்பட்டது அவை எல்லாம் அவரவர் சார்ந்த கட்சிக் கொள்கையை ஒட்டியே இருக்கின்றன மீடியாக்கள் சொல்வதெல்லாம் நம்புகிறமாதிரி இல்லை ஒரு விஷயம்  புரியவில்லை. பணமில்லாப் பரிவர்த்தனை என்றார்கள்  ஆனால் சின்னசின்ன விஷயங்களுக்கு  பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமா எல்லோரும்  மாலிலும்  டிபார்ட்மன்டல் ஸ்டோரிலுமா வாங்குகிறர்கள் அதுசாத்தியமா  ஓரளவு கல்வி கற்று இந்தச் சூழலைப்புரிந்து கொள்ள முடியும்  எனக்கே பலவிஷயங்கள் பிடிபடுவதில்லை சில நாட்களுக்கு முன்  நம் பிரதமர் கூறி இருந்ததாகச் செய்திஒன்றுவாசித்தேன்  அதில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பள்ளி யிறுதி படித்தவரோ + 2 படிதவரோ இருக்கிறார்கள் அவர்களது உதவி கொண்டு இந்த புதிய மாற்றங்களைப் புரிந்து கொண்டுசெயல் படலாம் என்றிருக்கிறார் இது எத்தனை தூரம்  சாத்தியம் என்பதே விளங்காத ஒன்று  இப்போதும்  ஏடிஎம்களில் பணம் எடுப்பது எல்லா நேரத்திலும்  சாத்தியமில்லை  எங்கள் தெருவில் ஐந்தாறு ஏடிஎம் கள் இருக்கின்றன இன்றைக்கும் அவற்றில் காஷ் இல்லை என்னும் போர்ட் தொங்குவதைக் காண்கிறேன்   இந்த ஏடிஎம் மே நாம் வங்கிக்குப் போகாமல் பணம் எடுக்க உதவுவதுதானே
 அடுத்த விஷயத்துக்கு வருவோம்
இப்போது இந்த ஜீஎஸ்டி வரி . இது என்னைப் போன்றவரை உடனடியாக பாதிக்குமா தெரியவில்லை ஆனால் சின்ன மருந்துகடைகளில் மருந்துகள் கிடைப்பதில் சங்கடம்  இருக்கிறது கேட்டால் ஜீஎஸ்டி என்கிறார்கள் இதன்  பாதிப்பு பலருக்கும்  பிடிபடாத  ஒன்று வரி செலுத்துபவர்கள் அதற்கான  வரிகளைச் செலுத்துகிறார்கள் என்று தெரிந்து கொள்ள அவர்கள்விற்பனை செய்யும்  பொருட்களின் ரசீதுகள் மூலம் தெரிந்து கொள்ளலாமாம் வரி செலுத்தும்  வியாபாரிகள் வேண்டுமானால் இதைக் கட்டாயம் கடை பிடித்து  தாங்கள் வரி செலுத்துகிறோமென்று நிரூபிக்கலாம்   ஆனால் மார்ஜினல் வியாபாரிகள் சில்லறைக் கடைகள் எங்கும்  ரசீதுகள் கொடுக்கப்படுகிறதா  அல்லது அவர்களும் கட்டாயம்ரசீதுகள் கொடுக்க வேண்டுமா  அப்படிக் கொடுக்காதவர்களை சந்தேகம் என்னும்பெயரிலும்  விசாரணை என்னும்  பெயரிலும்  இந்த வரி வசூல் செய்யும்  அதிகாரிகள் துன்பப்படுத்தலாம் அல்லவா  அதாவது குட்டி ராஜாக்களின்  தர்பார் நடக்க வழி உண்டுஎன்பது போல் இருக்கிறதே இது பிற்காலத்தில் ஊழலுக்கு வழிவகுக்கும்  என்றே தோன்றுகிறது  எது எப்படி ஆனால் என்ன  உனக்கு பாதிப்பு இல்லாதவரை அரசின் புகழ் பாடிவிட்டுச் செல்வதே மேல் எனக் கூறலாம்தானே இந்த வரிகளிலும்  இவை சரியல்ல என்பதைச் சொல்ல  சில  விஷயங்கள் கண்முன்னே தெரிகிறதே  எல்லாப் பொது மக்களும் உபயோகப்படுத்தும் பீசாவுக்கு 6% வரி/ போகப் பொருளான கடலை மிட்டாய்க்கு 18% வரி ........... !!  கடலை மிட்டாய் விற்பவர்கள் இதுவரை வரி கட்டவில்லை  ஆகவே இது தவறல்ல என்று ஒரு நண்பர் என்னிடம்  கூறினார்  இந்த ஜீஎஸ்டி வரியினால்  உயர சாத்தியமாகும்  பொருட்களின் விலை எல்லாம் பொது மக்கள் தலையில்தானே விடியும்  அப்படி இருக்கையில் வியாபாரிகளின்  எதிர்ப்பும்  விளங்கவில்லை,  ஜவுளி உற்பத்தியாளர்கள் பலரது செயல்களும் முடங்கிப் போவது போல் காட்டப்படுகிறது இந்த வரிமாற்றங்களால்  கிடைக்கப் போகும் லாபம் பொது மக்களுக்குப் போகுமா
நமக்கென்று தெரிந்துகொள்ள முடியாத  பல செய்திகளிலும் நாம் நமது பெர்செப்ஷன் மூலமே செயல் படுகிறோம் அப்படித்தானே நமது பிரதி நிதிகளைத் தேர்ந்தெடுக்கிறோம் பெரும்பான்மை உள்ளவர்கள் சொன்னால் கழுதையும் குதிரை ஆகும் அதே பெர்செப்ஷன் மூலமே கட்சிக்காரர்களும்  செயல் படுகிறார்கள்  கோ ரக்‌ஷக் என்னும்பெயரில் மனிதர்களைக்  கொலை செய்கிறார்கள் தங்களுக்கு ஆதரவான அரசு இருக்கிறதுஎன்னும் தைரியம்தானே  ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை என்று இச்செயல்கள் தவறு என்று மோடி போன்றதலைவர்கள் கூறுகிறார்கள்  அதைக் கூறவும்  சபர்மதி ஆசிரமம்  போன்ற இடங்க;ளைத் தேர்ந்தெடுக்கின்றனர்
அயல் நாட்டுப் பயணங்கள் போது நமது சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றிப் பேசிக் கொள்(ல்) கிறார்கள் இதனால் எல்லைப் பூசல்கள் குறைந்து இருக்கிறதா  நமதுஜவான்களும்  வீரர்களும் முன்பு எப்போதையும் விட அதிக அளவில் காவு கொடுக்கப் படுகிறார்கள் மக்களின் நாடித்துடிப்பை அறிய முயலாதவர்கள் அவர்களது  பெரும்பான்மை பலத்தால்  அவர்களுக்குத் தோன்றியதைச் செய்கிறார்கள்
அண்மையில் இந்த நீட் தேர்வு பற்றியது  உண்மையில் எனக்கு அதுபற்றிய ஞானமே இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் இருக்கிறது என்று தெரிகிறது
தங்களது ஆட்சியின்  மகிமை பற்றிப் பேசாமல் செத்த பாம்புபோல் இருக்கும்  காங்கிரஸ் ஆட்சி பற்றியே குறை சொல்லிப் பேசுகிறார்கள்  காங்கிரஸ்தலைமையில் நடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களுக்கு இவர்கள் பாத்தியதை கொண்டாடுகிறார்கள் அண்மையில் மதுரைத் தமிழ்னின்  பதிவைப் படித்தேன்  அவர்மாதிரி சொல்லிச் செல்ல  எனக்கு இயலவில்லை  மொத்தத்தில்  என்னை நான்  சாமாதானப்படுத்திக் கொள்வது We get what we deserve  என்று சொல்லித்தான்   இருந்தாலும்  சொல்லமலிருக்க முடியவில்லை
நமது பிரதமர் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன்  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பை சந்தித்தார்  அந்த சந்திப்பால்  பலன் அடைந்தது அமெரிக்காவே ஏரா;ளமான  போர் விமானங்கள் வாங்கப்படும்  அதனால் அமெரிக்கர்கள் நிறையவே  வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள் இங்கிருக்கும் ஐடி கம்பனிகள்  அமெரிக்கர்களை  வேலைக் கமர்த்தவேண்டும்  வீசாக்கள் கிடைப்பதில் பிரச்சனைகள் தீராது  நிறையவே உள்ளூர் எதிர்ப்புகள் இருந்தாலும்   அமெரிக்க அதிபர் அவர்களின் நலனுக்காக பணி புரிகிறார்/ ஆனால்  அதிக மெஜாரிடியுடன் ஆட்சியில் இருக்கும்  மோடி அங்கிருக்கும்  இந்தியர்களைப்   பார்த்து சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றிப் பீற்றிப் பேசுகிறார் அணு ஒப்பந்தம்  பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டது ஆனால் இதுவரை அமெரிக்கக் கம்பனி யிடமிருந்து எந்த உதவியும் இல்லை. அது நஷ்டத்தில் ஓடுவதால்  சில ஒப்பந்தங்கள் நிலுவையில் இருக்கிறது இதை எல்லாம் நான்  எழுதுவது எனது பெர்செப்ஷ்ன் மூலமே  ஆனால் இந்நாட்டில் பெரும்பான்மையினரின்  ஆதரவால் யாரும்  யாரையும் கொல்ல முடியும்  கேட்கப் போனால் அது தவறு என்று அவர்களும் சொல்வார்கள் ஆனால் தடுப்பு நடவடிக்கை ஏதும் இருக்காது
கடைசியாக தமிழ்நாட்டில் பாஜகவினரின்  பெனாமி ஆட்சி நடை பெறுகிறது என்கிறது எனது பெர்செப்ஷன் 
கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கிறார்களென்பதும் ஒரு அனுமானம்  லாலு பிரசாத் யாதவ் ரயில்வே மந்திரியாய் இருந்தபோது விட்ட டெண்டர்களில் ஊழல் என்று  இப்போது சிபிஐ வழக்கு பதிவு செய்கிறார்கள் லாலு பற்றி எனக்கு ஏதும்    உயர் அபிப்பிராயமில்லை  இருந்தாலும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்  சிபிஐ வழக்கு தொடுப்பதுஏதோ உந்துதல் மேல் என்று சந்தேகம்  அவர் ரயில்வே மந்திரியாக இருந்த சமயம் அவரது காலத்தில் ரயில்வே மிக்க சாதனைகள் புரிந்து முன்னேறியது  என்று மீடியாக்கள் வானளாவப் புகழ்ந்தது  நினைவுக்கு வருகிறது நீதி வழக்கு போன்றவை நாள்பட்டால் சரியாக இருக்காது என்பது அனுபவப் புரிதல்   இங்கு நான்  கூறியதை எல்லாம் நேர் எதிர் மறையாக எண்ணுவோருமிருக்கலாம் அது அவர்களது பெர்செப்ஷன் என்றே நினைக்க நேரும்     
                       
     
                   















              .
     
                   















              .






              
                   















              .






         











                          




                          




         











                          

திங்கள், 3 ஜூலை, 2017

வாழ்விலே ஒரு நாள்

                         
                                         வாழ்விலே  ஒரு நாள்
                                            ------------------------------------

       ---------------------------------------               
  இன்று ஜூலை மாதம் மூன்றாம் தேதி  என் மனைவியின் பிறந்தநாள் பிறந்த நாள் பரிசாக நான் என்ன கொடுப்பது? என்னையே அர்ப்பணித்துக் கொண்டு இருக்கிறேன்  சில ஆண்டுகளுக்கு முன்  வரை அவளதுபிறந்த  நாளன்று ஏதாவதுஒரு கோவிலில் இருப்போம்  இதை அவளுக்காகவே நான்செய்வது வழக்கம் கடந்த முறை பயணம் சென்றபோது  என் உடல் நலம் கருதி பாதியிலேயே திரும்பி விட்டோம் கோவில் தரிசனங்களில் சமயபுரம் கோவிலும் சிதம்பரம்  கோவிலும்  வைத்தீஸ்வரன் கோவிலும் இடம் பெறும்  கூடவே சௌகரியப்பட்ட மாதிரி மதுரை ராமேஸ்வரம்  போன்ற கோவில்களுக்கும் செல்வதுண்டு  இந்த விஷயத்தில் அவளுக்குப் பிடித்ததைச்செய்ய நான் தயங்குவதில்லை  ஆனால் இந்த பிறந்த நாளுக்கு  என்  பழைய பதிவுகளில் அவளைப்பற்றி  எழுதி இருந்ததை மீண்டும் வாசித்து சில பகுதிகளை மீள்பதிவாக்குகிறேன்
 
                        கைத்தலம்    பற்ற    வா.
                       --------------------------------------
பாவாடை   தாவணியில்   பதினாறு   வயசுப்   பாவை   நீ,
ஓரடி  ஈரடி  சீரடி  வைத்தென்முன் நாலடி  நடந்து  வர,
உன் வலை வீசும்  கண்கள்   கண்டு,
நாலாறு வயசு நிரம்பப்  பெறாத என்
மனசும்  அலைபாயும், மெய்  விதிர்க்கும் ,
வாய்  உலரும் , தட்டுத் தடுமாறும்   நெஞ்சும்.

ஆடிவரும்  தேரினை  யாரும்  காணாதிருக்க
செய்தல்  கூடுமோ ..?
அயலவர்  உன்னை    ஆராதிப்பதை
தடுக்கவும்  இயலுமோ ...?

எங்கும்  நிறைந்தவன் ஈசன்  என்றால்
என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ ...?
என்னுள் நிறைந்த உனை என் கண்ணுள் நிறுத்தி
நீ வரும் வழி நோக்கித  தவமிருக்கும்
நானும்  ஒரு   பித்தனன்றோ...?

யாருனைக்  காணினும்   யாதே  நேரினும் ,
நிலம்  நோக்கி  என் முன்னே  மட்டும்
என்கண்  நோக்கி என்னுள் பட்டாம்பூச்சி
பறக்கச்செய்யும்  வித்தை   அறிந்தவளே ...!

உன் விழி  பேசும்  மொழியறிந்து
உனைக் கண்ட   நாள்  முதல்  கணக்கிட்டு  விட்டேன்
எனக்கு  நீ , உனக்கு  நான் , எனவே ,
கைத்தலம்  பற்ற காலமும்  நேரமும்  குறித்து  விட்டேன், .
                              ---------
--------------------------
 என் அன்பிற்குரியவள் என்றும் நீதானே. ஓ...! எத்தனை வருடங்கள் ஓடி விட்டன. இருந்தாலென்ன.? என்றும் என் மனதில் இருப்பது உன் அன்றைய முகம்தான். உனக்கு நினைவிருக்கிறதா? அன்று ஒரு நாள் நீ கேட்டாயே என் மனதில் வேறு யாராவது இருந்தார்களா என்று. அன்று நான் சொன்னதை இன்று நினைத்துப் பார்க்கிறேன். என் மனம் புகைப்படக் கருவியில் பொறுத்தப்பட்ட நெகடிவ் ஃபில்ம் சுருளைப் போன்றது. ஒரு முறைதான் எக்ஸ்போஸ் செய்யமுடியும். உன் உருவம்தான் என் மனதில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாயிற்றே.!

நீ அவ்வாறு அமர்ந்த நேரம் கூட எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது.
எனக்கு உன்மேல் காதல் என்று உணர்ந்த சமயம்  அதை இவ்வாறு எழுதி இருந்தேன்

காதல் உணர்ந்தது, கண்வழி புகுந்து கருத்தினில்
கலந்து வித்தை செய்யும் விந்தை கண்டோ.?
அருகில் இருந்தவன் யாரந்த அழகி எனக்
கேட்டதும் கொண்ட கோபம் உணர்ந்தோ.?

உணர்ந்தவன் அப்போது அறிந்திலேன்
ஆடிவரும் தேரை யாரும் காணாதிருக்கச்
செய்தல் கூடுமோ.? அயலவன் உன்னை
ஆராதிருத்தல் தடுக்கவும் இயலுமோ.?

வாலிபத்தில் நினைத்தை  எழுதிய படி அசை போடும்போது கிடைக்கும் இன்பமே அலாதி. காலம் கடந்தும் காதல் மாறவில்லையடி...!.உன் நடை,குரல், அதரங் கண்டும் தோகை மயிலின் களிநடம் குறைந்திலை, கானக் குயிலின் இன்னிசை குறைந்திலை, கொவ்வைக்கனியதன் செம்மையும் குறைதிலை; இருந்தாலென்.? நானும் செறுக்கொழிந்திலேன் என்றல்லவோ இறுமாப்புடன் இருந்தேன்.

வாலிபத்தில் காதல் உணர்வில் உடலின் சூடும் இருந்தது..காலம் கடக்கக் கடக்க நீயோ

பொன்காட்டும் நிறங் காட்டி
மொழி பேசும் விழி காட்டி
மின் காட்டும் இடை காட்டி
முகில் காட்டும் குழல் காட்டி,
இசை காட்டும் மொழிகாட்டி
இணைந்தனை என்னுடன்.

ஆனால் நானோ

ஈன்றெடுத்தவள் முகமேனும் நினைவின்றி
தாரமாய் வந்தவள் உனைத் தாயினும்
மேலாக எண்ணி என் நெஞ்சமெலாம்  நிரப்பி
வாழ் நாளெல்லாம் சேயாய் வாழ்ந்து விட்டேன்

.        
பிள்ளையாய்ப் பிறந்து பாலனாய் வளர்ந்து காளையாய்க் காமுற்று உன் கரம் பிடித்தேன். இளமை ஒழிந்து நரைகூடிக் கிழப்பருவம் எய்தி,  எல்லாம் செத்துக் காலன் வரவை எதிர் நோக்கும் வேளை  எனக்கு நானே அழாதிருக்க என் உள்ளம் திறந்து கொட்டி.எழுதும் இது காதல் கடிதமா, கவிதையா ..... எதுவானாலும் உனக்குப்புரிதால் சரி.

என் தாய் முகம் கூட எனக்கு நினைவில்லை   அந்த நினைவு வரும்போது என்னையே நான் தேற்றிக் கொள்ள

இருக்கின்ற  ஒரு மருந்தை அறியாமல் 
இன்னலுற்றேன்  இடர் படவேண்டும்..?

அருமருந்தே  அன்னை  என்றால் 
அவதி போக்க வந்த  இவளை  என் 
அன்னை எனக் கொளல்  தவறோ. ?

அன்னை அவளைத் தேடி நான் அலைந்தபோது
சுந்தரி  இவளைக் கண்டேன் என் சிந்தையுள்ளே ,
நிறுத்தினேன்  இவளை என் அகத்தினுள்ளே.,
தொலைந்ததே என் துயரங்கள் என்னை விட்டே.

காக்கின்ற  கண்களால்  கருணை வெள்ளம்
கரைபுரள, பூக்கின்ற  புன்னகையால் ,
ஆறாத  மனப் புண்ணின்  அசைவலைகள் 
அடங்கவே  அளித்தருளி அன்னையே,என்னை ஆட் கொண்டது போல்  என்னை அடைந்தவளே

என்று எழுதி இருந்தேன் 

பிறந்த நாள் பரிசாக இந்த நினைவுகளை என் மனைவிக்கு  சமர்ப்பிக்கிறேன்  





               
     
                   



ஞாயிறு, 2 ஜூலை, 2017

எனக்கும் சமையல் செய்யத் தெரியுமே மம்மி .!


                    எனக்கும்  சமையல் செய்யத் தெரியுமே மம்மி......!                   ------------------------------------------------------------------                 
2014 ஆம் ஆண்டு ஜூன்  மாதம் ஒரு பதிவு எழுதி இருந்தேன் ஒரு நாள் பொழுது என்னைவிட்டு என்  மனைவி கோவிலுக்குப் போய் இருந்தாள் முதலில் ஒரு திரைப்படத்தில் ஜனக ராஜ் கூறியது போல் :தங்கமணி ஊருக்குப் போயிட்டா என்று நினைத்து மகிழச் செய்தாலும் தனிமை என்னை வாட்டுவதை எழுதி இருந்தேன் அதைத் தவிர்க்கும்படி சில ஆலோசனைகளை பின்னூட்டத்தில் ஜீவி எழுதிய நினைவு
இந்த முறை என்னை விட்டு என் மனைவி ஒரு வாரகாலம் அவளது உடன் பிறப்புகளுடன் ஒரு நிலரெஜிஸ்ட்ரேஷன்  விஷயமாகக் கேரளம்  சென்றிருந்தாள்  எனக்கும்  ஒரு பாகேஜ் மாதிரி கூடப் போக விருப்பமிருக்கவில்லை.  நான் தனியே இருந்து கொண்டு மேனேஜ் செய்து கொள்கிறேன்   என்று சொல்லி அனுப்பி விட்டேன் அவளும்  அவளது உடன்பிறப்புகளும்  சேர்ந்து மகிழ்ச்சியாய் இருக்க நான் தடையாய் இருக்கக் கூடாதல்லவா  நான் தனியே இருக்கக் கூடாதாம்  மகன்களிடம் போயிருக்கச் சொன்னாள்  எனக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை என் பேரன் சென்னையில் இருந்து வந்திருந்தான்   என் கூட இருக்க,   இரண்டு மூன்று நாட்களுக்கு  என் இளைய மகன்  வந்திருந்து கூடத்தங்கினான் மொத்தத்தில் தனியே நான் விடப்படவே இல்லை  என்ன எதுவாயிருந்தாலும் மனைவி அருகாமையில் இல்லாதது வெறுமை உணர்ச்சியையே தந்தது  என் மனைவிக்கு நேரத்துக்கு நேரம்  அவள் செய்து தருவது போலாகாது என்னும் எண்ணம்  ஒரு கவலைஉணர்வைத் தந்திருக்கும் ஆனால் எனக்கோ நான்  ஃபியர்ஸ்லி இண்டிபெண்டெண்ட் என்னும்  எண்ணமே. மேலும் என் தீரடிகல்  குக்கிங் எக்ஸ்பெர்டைசை  வெளிக்கொண்ர இது ஒரு வாய்ப்பு என்றும் நினைத்தேன்   என்மேல் எனக்கு அளவுகடந்த நம்பிக்கை உண்டு ஆனால் இந்தப் பாழாய்ப் போன உடல் ஒத்துழைக்குமா என்றும்  சந்தேகமெழுந்தது
என் மனைவி ஊருக்குப் போய் இருந்தநேரம்  என்நண்பனின் மனைவி  அமெரிக்காவில் இருந்து வந்திருந்தாள் மைசூரில் ஏதோ பூஜை என்று வந்தவள் இரண்டு நாட்கள் இருந்துமைசூர் போனாள்  பிறகு என் மனைவி வந்தபின்பே வந்து  சில நாட்கள் தங்கினாள்
ஊருக்குப் போகும் முன்  மகராசி இட்லி தோசைக்கு மாவு அரைத்து வைத்திருந்தாள் அடுக்களையில் எனக்குப் பணி செய்ய எந்தப் பொருள் எங்கிருக்கிறது என்று தெரியாதது சிரமம்கொடுத்தது எந்த வேலையிலும் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும்  என்று நினைப்பவன் நான் அந்தந்த பொருளுக்குஅந்தந்த இடமென்று இருக்க வேண்டும் இதில் எனக்கும்  என்  மனைவிக்கும்  நிறையவே வித்தியாசங்கள் இருக்கும்  என்பதாலேயே கிச்சனுக்குள் நான் போவதை அவளும்  விரும்புவதில்லை எனக்கும் ஒத்து வராது. ஆனால் இப்போது வேறு வழி இருக்கவில்லை  காலையில் எழும்போதே இன்றைக்கு இன்னின்ன  வேலை என்று திட்டமிட்டுக் கொள்வேன் முதல் நாள்காலையில்  காப்பிக்கு பெர்கொலேட்டரில் எவ்வளவு தண்ணீர்  எவ்வளவு காஃபிப் பொடி என்பதிலேயே சந்தேகம் தொடங்கியது இருந்தாலும் எல்லாம் ஒரு உத்தேசமாக செய்யத் தொடங்கினேன்  சும்மா சொல்லக் கூடாது காப்பி அருமையாக வந்தது என்பேரனும்  மகனும்  அமெரிக்க நண்பியும்  செர்டிஃபிகேட் கொடுத்தனர் பிறகென்ன இட்லியும் மிளகாய்ப்பொடியும் தக்காளி கொத்சும்  என அமளி துமளிஆயிற்று. ஒரு நாள் பொங்கல். ஒருநாள் உப்புமா எனக் காலை உணவும்  வெண்டைக்காய் சாம்பார் முருங்கைக்காய் சாம்பார் தால் உருளைக்கிழங்கு ஃப்ரை பீட்ரூட் பொறியல் காரட் பொறியல்  என்று நாள் தோறும் வித்தியாசமாய் சமைத்துப் பார்த்தேன் சும்மா சொல்லக் கூடாது எல்லாமே நன்றாய் வந்தது ஆனால் பதிவுலகில் சமையல் ஜாம்பவான்களுக்கு இது பெரிதாகத் தெரியாது
சின்ன வயதில் கேட்ட பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது
(ஒருவன் )   ABCD படிக்கிறேன்   EFGH எழுதறேன்  ஒரு ஆஃபிசர் போல நடிக்கிறேன்   என்  ஹஸ்பண்ட் சொன்னது போலச் செய்யறேன்
(மற்றவன் ) ஏன் இந்த படிப்பு நமக்கு  அதனால் என்னபலன்  இருக்கு ஆம்பளை பொம்பளைப் பேச்சைக் கேட்பதால் அவமானமாக இருக்கு
என்னும் ரீதியில் போகும்  அந்தப்பாட்டு அது ஏன் இப்போதுநினைவுக்குவரவேண்டும்?
     இன்ன வேலைக்கு இவ்வளவு நேரம்  என்பதே தெரியவில்லை. சமையல் செய்வது சொப்பு வைத்து விளையாடுவது போல் என  மனைவியைக் கேலி செய்திருக்கிறேன் சமையல் வேலை எல்லாம் முடிந்து வெளியே வர ஒன்றரை மணிநேரம்  ஆகிறது,  வாஷிங் மெஷினில் துணி போட்டு எடுத்துக் காயப்போடல் மேலே தண்ணீர் தொட்டியில் நீர் ஏற்றி  நிரைத்தல்  என
நேரம்போனதே தெரியவில்லை  எல்லா வேலைசெய்வதிலும் ஒரு திருப்தி இருந்தது ஆனால் இதேகதியில் ஏழு நாட்கள் என்பதும் மலைப்பாய் இருந்ததுதொலைக்காட்சி சீரியல் என்கணினி வேலைகள் என்று பொழுது போவதே தெரியவில்லை. அப்போதே என் தளத்துக்கு ஒரு பதிவு என்னும் எண்ணமும்  வந்தது ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு மெனு என்று திட்டத்துடன்  செயல்பட்டேன்   என் அமெரிக்க நண்பிக்கு ஒரே ஆதங்கம் அவரை சமையலறையில் நான் விடவில்லை. என் மகன் எனக்கு உதவுகிறேன்  பேர்வழிஎன்று எடுத்தபொருட்களை இடம் மாற்றி வைத்துவிடுவான் 23 ம் தேதி போன மனைவி 29ம்தேதி திரும்பினாள்  அவளோடு தொலைபேசியில் உரையாட முடியாதபடி அங்கு சிக்னல் ப்ராப்ளம் 28ம் நாள் நான்  வைத்திருந்த  சாம்பார் பொறியலில்  சிறிது எடுத்து வைத்திருந்தேன்  மறு நாள் வந்ததும்  சுவை பார்க்கட்டுமே என்றுதான்   நன்றாக இருக்கிறது  என்று சொன்னாள் ஆனால் இதையெல்லாம் டாப் செய்வதுபோல் இருந்தது அடுத்த நாள்  நான் எவ்வளவு புளி உபயோகிக்கிறேன்  பருப்பு போடுகிறேன்  என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தது நான் செய்து வைத்திருந்த சாம்பாரும் பொறியலும்  நன்றாக இருந்ததே காரணம்
இதையெல்லாம் ஒரு மாற்றுக்குச் செய்யலாம்  ஆனால் இதுவே வாழ்க்கை என்று இருக்கும்  மனைவியிடம்  என் மதிப்பும் அன்பும் கூடுகிறது என் மனைவிக்கு நான்  எந்த வேலையும்  செய்யக் கூடாது என்னும் எண்ணம் தீவிரமானது  அப்படிப்பட்டவள் நான்  தனியே ஒரு வாரகாலம்மானேஜ்  செய்ததை சிலாகித்துப்பேசி இருக்கிறாள்
 அதெல்லாம்போகட்டும்   இதில் நான் கற்றுக்கொண்டதுஎன்ன? ஒரு வேளை god forbid  நான் தனியே இருக்கும்  நிலை வந்தால் சமாளித்து விடுவேன்  என்று எனக்குப்   புரிந்திருக்கும்  என்றும் என் மனைவிக்குத் தெரிந்திருக்கும்   என்றும்  தோன்றுகிறது