Monday, March 30, 2020

ஊரடங்கும் கொரோனா வைரசும்



                                ஊரடங்கும்   கொரோனா வைரசும்
                               -------------------------------------------------------------
ஊரடங்கும்
கொரோனா வைரசும்
இந்த தலைப்பில் எழுத  எனக்கு  தயக்க்ம்   இருந்தது பொதுவாகஒரு விஷயம் பற்றி எழுத சில நிச்சயமான தக்வல்கள் தேவை ஆறுகுருடர்கள்  யானையை அடையாளம்  காண முயல்வது போலிருக்க கூஊடாது  ஆனல் ஆரம்பத்திலேயே  எனக்கு இதுபற்றிய தகவல்கள் இருக்கவில்லை  கிடைத்ததகவல்களும்  பீதி ஊட்டுவதாகவே  இருந்தது  130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் ஊரடங்கு சட்டம் போர் இல்லாத நேரம்  கடைபிடிக்க  ஓரளவு பீதி ஏற்படுத்தினால் மட்டுமே முடியும்முதலில் கொரோனா வைரஸ்தாக்கியவர்யாரென்று  அடையாள்ம்  தெரிய வேண் டும் வெளிநாடுகளில்  இருந்து வருவோரையும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களையும் கண்காணிக்க துவங்கினார்கள் அதனால் நம்மக்களுக்கு இவையே ஒரு நகைச்சுவைக்கு ஏற்ற தலைப்பாயிற்றுஎங்கும் எங்கும் எதிலும்  நகைச்சுவையை கண்டவர்கள் உள்ளுக்குள் பீதியுடன் பயத்ததைபோக்கநகைச்சுவை மூலம்   விசில் அடிப்பவர்கள் ஆனார்கள்  சிலர் எதுவும் கடந்து போகும் என்று இருக்கவும் முடியாமல் எல்லாம் அவன் செயல் என்று நினைக்கத் தொடங்கினார்கள் சமூகவலைத்தளங்களோ பூஜை புனஸ்காரமே மருந்துஎன்று கூறத்தொடங்கின நம்பாரம்பரியமருந்துகளே இவற்றை எதிர்கொள்ளுமென்றும்  நினைக்கத்தொடங்கினார்க்சள் இன்னும் சிலர்ச் சோதிடர்கள் ஆனார்கள் கிரக நிலைமை  கோள்களின்  தாக்கமென்று கூறிசமாளிக்க நினைக்கிறார்கள்ஆனால் அடிப்படையில்பீதியில் உழல்கிறார்கள்  பிறந்தவன் ஒரு நாள் இறக்கத்தானே வேண்டும் ஆனால் தினம்தினம் செத்துக் கொண்டிருக்கிறர்கள்ஏன் தெரியுமா  இந்த வைரசால்  நுரையீரல் பாதிக்கப்பட்டுமூச்சுத் திணறி சாவுவருமோ என்னும் பயம்தான்     தைரியசாலிக்கு வாழ்வில் ஒருசாவு  கோழைக்கு தினம் தினம் சாவு என்றுபடித்ததே அடிக்கடிநினைவுக்கு வருகிறது
தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால் இந்நோயை தடுக்கலாம் என்கிறார்கள் ஊரடங்கோடு நிறுத்தமுடியுமா அதை நடை முறைப்படுத்த வேண்டாமா  அதற்கு
மக்களை தயார் படுத்தவேண்டாமாமுகக்கவசமும் அடிக்கடி கைகழுவுவதையும் பிரசாரம்செய்கிறார்கள்முகக்கவசம் கிடைப்பதே அரிதாய் இருக்கிறது ஒருநாளில் எத்தனை முறை கைகழுவுவதுபின்பற்றப்படுவதை விடமீறப்படுவதே  அதிகம்நடக்கிறது  நகைச் சுவைக்கு நல்ல தீனி யாகிறது வாட்ஸாப்பில் வரும் கும்மிகளில் இதுவே முக்கிய அங்கம் வகிக்கிறது நானும் என்பங்குக்கு  அவற்றை ஃபார்வார்ட் செய்திருக்கிறேன்   ஒரு வேளை இடுக்கண் வ்ருங்கால் நகுகஎன்பது இதைத்தானோ

கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களில் கோவிட் வைரஸானது 12 மணி நேரம் உயிருடன் இருக்குமாம். எனவே நோய் தாக்கப்பட்டவர்களுடன் கைக் குலுக்கினாலோ அருகில் நின்று பேசினாலோ கூட எளிதில் ஒரு மனிதனிடமிருந்து மற்றவர்களுக்கு இந்த வைரஸ் பரவிவிடும்.அந்தஸ்டேஜ் வந்தால்  கட்டுப்புத்துவதுசிரமமாம் அடை தவிர்கவே சோஷ்யல் டிஸ்டன்சிங்இதை வைத்தும் ஒரு நகைச்சுவை வாட்ஸாப்பில் வந்தது

 அரசு என்ன வெல்லாமோ சலுகைகள்  தருகிறர்கள் சீனிய சிடிசன்களுக்கு  மாதம் ரூ ஆயிரமுண்டாமே  எப்படி எங்கு பெறுவது என்று  தெரியவில்லை இந்த  ஊரடங்கு  வந்தபி எங்கள் சாலையில்போக்கு வரத்து குறைந்து  இருக்கிறதுநிமிஷத்துக்கு முன்னூறு வண்டிகள் போல் இருந்த இடத்தில் இப்போது ந்மிஷத்துக்கு  இருபது முப்பது வண்டிகள் ஓடுகின்றன 


நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிகிறேன்(8)  பகவத் கீதையில்  க்ண்ண்ன்  சொன்னது கெட்டவர்கள் என்பது மாற்றி  கெட்டவைஎன்று  இருந்தால்  ஒரு வேளை  கண்ணனே அவதரித்து இந்தகொரோனாவை வெற்றி கொள்ளலாமே என்றும்  தோன்று  கிறது 
இப்போதெல்லாம்   அடுத்தவரைக் கண்டாலே இவர் மூலம் தொற்றுநமக்கும் வருமொஎன்னும் அச்சமெழுகிறது அயல்நாட்ட்லிருந்து வருவோரை  சற்றே அதிகம் கண்காணிக்க தொடங்கினார்கள்ஸ்ரீ லங்கவில் சென்னையில் இருந்து வருவோரால்  தொற்று வருமோ எறு அச்சப்படுகிறார்களாம் 
இந்த தொற்று இப்போது  இரண்டாம் கட்டத்தில் இங்கு இருக்கிறதாம்  மூன்றாம் கட்டம்போனால் அது சமூக தொற்றாகலாம்   கண்காணிக்கும் வேலை மிகவும்சிரமமாகலாம் 
வுஹான் சீனாவில் ஆரம்பித்த இந்த தொற்று அங்கு கட்டுக்குள் இருக்கிறதாம் எகனாமிக் ஆக்டிவிடி கள் சீரடைந்து  வருகிறதாம் 
எனக்கு இந்தமாதிரி  எழுதும்போது  சில குண்டக்கா மண்டக்கா  எண்ணங்கள் தோன்றும் அதையும் வலையில் பகிர்கிறேன்  இந்த சோஷியல் டிஸ்டன்சிங்  என்பது க்ணவன்மனைவிக்கும் பொருந்தினால்  ஒரு கணக்குப் படி இதுவே மக்கட் தொகையைக் கட்டுப்படுத்தலாம் இப்போதைடையகட்டுப்பாடு நீடித்தால் இந்தியாவில்எதிர்ப் வரும் நவம்பெரில் குழந்தைகள் பேறு மிகவும் குறையலாம் ,,,!!!  



iஇந்த பாட்டுகளை  கேட்டிருக்கிறீர்களா


        
  

Friday, March 27, 2020

பல்சுவை பதிவு


                                  பல்சுவைப்பதிவு
                                 ---------------------------0



பழ மொழிகள் பலகேள்விப்பட்டு இருக்கிறோம் பலதும்பொருள்  மாறியே  அர்த்தம்  கொள்ளப்படுகிறது  உ-ம் ஆயிரம்பேரைக் கொன்றவன்  அரை வைத்தியன்   ஆனால் உண்மையிலேயே  அது ஆயிரம்  வேரைக் கொண்டவன்   என்னும்பொருளில்தான் சொல்லப்பட்டது எனக்கு இன்னும்  இரண்டு மூன்று பழமொழிகள்நினைவுக்கு வருகிறதுது வாசகர்கள் இதற்கு இன்னும் காண்ட்ரி ப்யூட் செய்யலாம் 
1 )  ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம நடத்தலாம்
அது இப்படி இருக்குமோ  ஆயிரம்  முறை போய்ச் சொல்லி அதாவது பலமுறை  அங்கும் இங்கும்  போய்ச்சொல்லி திருமணம்   நடத்துவது என்றிருக்குமோ
2) ஆடிக்காற்றில்  அம்மியும் நகரும் 
 அதாவது சித்திரை வைகாசி ஆனி  எல்லாம் போய்  ஆடி வருகிறது  ஆடிமாசம்  காற்றடிக்கும் அந்தக்காற்றில் அம்மையும்  நகரும்  என்றால் அந்ஹக் காற்றில்  வேப்பங் காற்றில்அமை நோயும்  போய் விடும் என்று இருக்குமோ
3)அற்பனுக்கு காலம் வந்தால்  அர்த்த ராத்திரியிலும் குடைபிடிப்பான் 
அதுஇப்படி இருக்குமோ  அறப்பணிக்கு  காலம் வந்தால் பாதி ராத்திதிரியிலும்கொடை கொடுப்பான்  

ஒரு ஜாலி காணொளி 

 
             
கேரள பாரம்பரிய கலைகளில் முக்கியமானது ஓட்டந்துள்ளல் என்  சிறிய தாயார் பாடியதுதான்  ந்னைவுக்கு வருகிறது ஓட்டந்துள்ளல்  துள்ள ல்  துள்ளி வரும்போள்  வீட்டில் கஞ்சி குடிக்கானில்லா  நண்பர் துளசிதரனின் மகளும் இக்கலையில் வல்லவராமே  


வயதாகும் போது சில நேரங்களில்  தனிமை  தவிர்க்க முடியாது கீழே  தனிமையிலும் இனிமை காண்பவன்   இவன்

/The longest word in any of the major English language dictionaries is pneumonoultramicroscopicsilicovolcanoconiosis

we jokingly used to say  "smiles"
that is mile between two s  



கொரொனா வைரஸிலிருந்து காத்துக் கொள்ளும் முறை டாக்டர் பவித்ரா விளக்கம்



யூ ட்யூபில்  திருமதி ரேவதி சங்கரன்  அவர்களின் சில காணொளி களைப்பார்த்துக் கொண்டிருந்தேன் வாட் எ  வெர்சடைல் லேடி  என்ற நினைப்பை தவிர்க்க முடியவில்லைஅவர் எம் எஸ் சுப்புல்க்ஷ்மி பற்றிக் கூறிய  சிலதகவல்கள்  இதுவரை தெரியாததுஅவருக்கு கிடைத்த  வருமானங்கள்  எல்லாவற்றையும்  தனக்கென ஏதும்  வைத்துக் கொள்ளாமல் பல நிறுவனங்களுக்கு  கொடையாய்க் கொடுத்து விடுவாராம் ஒருகாலகட்டத்தில் நூல் புடவையுடனும்  நகைகள் ஏதும்  இல்லாமலும் இருந்தாராம்   அப்போதுஅன்னமாசாரியரின் கீர்ததனைகளை ரெகார்ட் செய்யவேண்டி வந்தார்களாம்   இவருக்கு தெலுங்கு தெரியாமல் இருந்தாலும்  அம்மொழியைக்கற்று பாட்டுகளை ரெகார்ட் செய்தாராம்
சுமார் இரண்டு மணி நேரத்த்துக்கும்அதிகமான காணொளி  என்பதால். பதிவு செய்யவில்லை  விருப்பம் இருப்பவ்ர்கள் கீழ்காணும் சுட்டிக்குச் சென்று காணலாம் 

 https://www.youtube.com/watch?v=PexAtz6A2J4          










Tuesday, March 24, 2020

வீடு மகாத்மியம்



                                                               வீடு மகாத்மியம்
                                                               --------------------------

 வீடுகட்டல் பற்றி  இரண்டு பதிவுகள் எழுதி அவற்றின்  சுருக்கம் கீழே
 நான் வீடு கட்டியகதையை ஏற்கனவே பதிவில் பகிர்ந்துள்ளேன் 1979/ ல் இடம் வாங்கி 1986-ல் வீடு கட்டி முடிக்கப்பட்டவுடன் வாடகைக்கு விட்டேன் அப்போது நான் திருச்சியில் இருந்தேன் 1991-ம் ஆண்டின்  கடைசியில் என் மூத்த மகனை குடி யிருத்துவதற்கு வாடகைக்கு இருந்தவரைக் காலி செய்யச் சொன்னேன்  அவரும்  எந்தப்பிரச்சனையும்  தராமல் காலி செய்ய என் மகனும் மருமகளும் குடி வந்தனர் நானும் என் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று என் மகனுடன் வந்து விட்டேன் என் இளைய மகனுக்கும் இங்கே வேலை கிடைக்கவும் .அவனுக்கும் மணமுடித்தால் இந்த வீடு சிறியதாய் இருக்கும் என்று எண்ணி மாடியில் இன்னொரு வீடு கட்டினேன் 1992-ம் ஆண்டு. வீடு கட்டி முடித்தவுடன்  நாங்கள் மேல் தளத்துக்குச் சென்று கீழ் வீட்டை வாடகைக்கு விட்டோம் அதில் ஒரு டாக்டரும் அவர் கணவரும்   குடி வந்தனர்
சுமார் ஏழு ஆண்டுகள் அவர்கள் இங்கிருந்தனர் பின் சொந்தவீடு கட்டி குடிபோயினர்  அத்ற்குபின்  பலரும்வந்துபோனார்கள் சிலர் என் கதை மாந்தர்கள் ஆனார்கள்மெல் வீடு சற்றே பெரியது  அங்கு போனபின்  என் இளையமகன் திருமணம்  நடந்ததுஅதன் பின் சில நாட்களில் நாங்கள்கீழே வந்து விட்டோம்

முன்பே சொன்னது போல்  எனக்கும் ஏதும் வரவு இருக்கவில்லை வீட்டை வாடகைக்கு விட்டுஅதில் வரும் வாடகையே எங்கள்  வருவாயாயிற்று வாடகைக்கு வருபவர்களுக்காக வீட்டை புதுப்பித்து அதன் வால்யூவை அதிகரித்தேன் என்வீட்டில்டி குடி வருபவர் ஒரு ரிச்நெஸை  உணர்வார்கள் 
வீடு கட்டிய செலவை விட புதுப்பிக்கும்போது செலவு   அதிகமாயிற்று வருத்தமில்லை 
சில நினைவோட்டங்கள்  வீடு கட்டுவதே வேஸ்ட் என்று நினைத்துக் கொண்டிருந்தவன்  விட்டின் வாடகையே சோறு போடுகிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போது எண்ணங்கள் நிலையானது அல்ல என்பது புரிகிறது  முதலில் வீடு கட்டும்போது  செலவு செய்ததை விட புதுப்ப்பிக்கவும்   அதன் மதிப்பை உயர்த்தவும்செய்த செலவு அதிகம்  விட்டின் உள்ளிருந்தே  டைல்ஸ் மாற்றிய அனுபவம் முதலில்  நமக்கு வேண்டியது  தெரிந்திருக்க வேண்டியதுஅவசியம் நம்பிக்கையான ஒப்ப்ந்ததாரர் கிடைக்கவேண்டும் சிலரைநம்பவேண்டும் இல்லைஎன்றால் நாமே எல்லாவற்றுக்கும் அலையவேண்டும் எனக்கு கிடைட்தவர்கள் நம்பிக்கையானவர்கள்   
  
    

என் வீட்டி சில புகைப்படங்கள்முதலிலேயே செலவுபற்றி பேசிவிட வேண்டும்என் வீட்டி சில புகைப்படங்கள் பொறிஇயல் பற்றிய தெளிவு இருக்கவேண்டும்முதலில் காண்டி லிவெர் போர்டிகோ டிசைன் செய் திருந்தாலும்மேல்மாடி கட்டும்போதுசப்போர்டிங்  தூண்கள் கூடுதலாக  கட்டினோம் 


வீட்டின் முன்புற தோற்றம்  


பக்க வாட்டும்  மாடிக்கு போகும் படிகளும் 


மாடியிலிருந்து போர்டிகோ மேல் பாகம்
இதுபோல் இரு படுக்கை அறைகள்
  






    

உள் ஹாலும்  வாசலும் 


ஹாலின் இன்னொரு புறம் 


அடுக்களை n


பாத் ரூம் 


வீட்டின் எல்லா படங்களும்  பதிவிடவில்லை

வீடு மகாத்மியம் முற்றும்







Saturday, March 21, 2020

மஹாதேவ் ஐஸ் வர்யா வரலாறு


                                         மஹாதேவ் ஐஸ்வர்யா வரலாறு
                                         ------------------------------------------------------



                                               
 எழுத துவங்கியபோது  சுருக்கி எழுதவா இல்லை விரிவாக எழுதவா  என்னும்  சந்தேகம் எழுந்தது இதுவரை நான் எழுதிய பதிவுகள் எல்லாமே எழுத்தின் போக்கில் அமையு,ம்   அதுபோலவே இதுவும் இருக்கட்டும்  என்று நினைத்து எழுதுகிறேன்வீடு கட்ட துவங்கும்போது  இருந்த மனநிலையும் இப்போது இருக்கும் மனநிலையும் வேறுதான்என்னைப்போல் இருப்பவருக்கு  ஓய்வு பெறும்போது பென்ஷன் ஏதும்  கிடையாது அதாவது கிடைக்கும்  க்ராட்யுடிடி போன்ற சேமிப்புகள வைத்து வாழவேண்டும் சராசரிவயது  60 க்கு பக்கம் இருக்கும் என்று எண்னியவன்  80 வயதுக்கும் மேல் இருக்கிறேன்  என்னைவிடு கட்ட தூண்டிய நண்பனுக்கு நன்றி
 
செய்யாத குற்றத்துக்கு தண்டனையா
என்றே கேள்வி கேட்ட எனக்கு உருவம்
அன்றி முதுமை அளிக்கும் பரிசு-வாழ்வில்
நான் நானாக இருக்க ஒரு வாய்ப்பல்லவா

பெற்றோருக்காக வாழ்ந்ததும்- நான்
பெற்றவற்றுக்காக வாழ்ந்ததும்- நான்
பெற்ற கூலிக்காக உழைத்ததும் போதுமடா
சாமி. இது எனக்காக நான் வாழும் வாழ்க்கை.

 இந்த நினைப்பே என்னை விருப்ப ஓய்வு பெறச்செய்தது வம்படியாக ஓய்வுகேட்டுவந்து விட்டேன் இனி என்ன செய்வது இருக்க  இடமாக வீடு  அமைந்துவிட்டது மற்ற செலவுகளுக்காகஎன்னசெய்வது  என்னால் யாரையும் அண்டி வாழமுடியாதுஅதுஎன்  குறையாயிருக்கலாம் வரவுக்கும் பூவாவுக்கும் என்ன செய்ய  கிடைத்த பணத்தில் வீட்டில் மேல்மாடி அமைத்தேன் கிடைக்கும் வாடகை என் வருவாயாக இருக்கும்
என் மூத்த மகன் பெங்களூரில் என் வீட்டில் தங்க நானும்  வந்து விட்டேன் என் வாழ்வின்  சுருக்கத்தை எட்டெட்டாக என்று எழுதி  இருக்கிறேன் பார்க்க சுட்டி
இப்படித்தான்   எதையோ எழுதத் துவங்கி  எங்கோ போய் விடுகிறேன்


நான்வீடு கட்டும்போது  இரு படுக்கைஅறை  கொண்ட சிறிய வீடாக கட்டினேன்  சுற்றிலும்  இருப்பதற்குள்  முடிந்தவரை திற்ந்த வெளி  விட்டே கட்டினேன் நாங்கள் திருச்சியிலும் வீடு பெங்களூரிலும்  இருந்ததால் வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தோம்நல்லகுடித்தனக் காரர் வேண்டி காத்திருந்தபோது  ஒரு சிறியகம்பனி  நடத்துபவர் வந்தார் எனக்கோ அவரைத் தெரியாது ஆனால் இங்கிருந்தவர்கள் அவர் ஒரு குடிகாரர் என்று  பயமுறுத்தினர்  ஆனால் எனக்கு ஒருவரைப் பார்த்தவுடன்எடை போடு என் குணத்தில்  நம்பிக்கை உண்டு அவரை எனக்குப் பிடித்து விட்டதுநம்பிகையானவர் போல் மதிப்பிட்டேன்   என் நம்பிக்கை வீண்போக வில்லை  ஐந்து ஆண்டுசள்இருந்தார்  என் மகனுக்காக  வீடு தேவை என்றபோது  எந்த தொந்தரவும்  தராமல் காலி செய்தார் சுற்றிலும் இருந்தகாலி இடங்களில் இரு தென்னை மரம்  ஒரு கொய்யா மரம் ஒரு பாம்க்ரனேட்  மரம் ஒரு கறு வேப்பிலைமரம்   ஒரு மாமரம் மற்றும் சிலபூச்செடிகள் வைத்து பராமரித்து வந்தார்  எங்கள்வீட்டை சுற்றி இருந்தவருக்கெல்லாம்  போரிலிருநு  தாராளாமாய் தண்ணீர் வழங்கினார் நானே இருந்தால் கூட அப்படி செய்திருப்பேனா தெரியாது 

  
ஆனால் வாட் எ பிட்டி வீட்டின் முன்புறம்   இருந்த கொய்யா மரம்  நிறைய கல் அடி வாங்கியது  வெட்ட வேண்டியதாகி விட்டது இந்தவீட்டில்தான்   என் முதல் பேரன்  உண்டாகி பிறந்தான் நான் வீடு கட்டும்போது வாஸ்து ஏதும் பார்க்கவில்லைஎன் இரண்டாம்  மகனது  திருமணம்  நடந்தது  என்பேத்தி பிறந்தாள்  மொத்தத்தில் ராசியான வீடாக அமைந்தது ஐஸ்வர்யா  என்று பெயரிட்டோம்
  
பிற்காலத்தில் என் இரண்டாம்  பேரன்  வந்து  வீட்டுக்குஏ  அவன் அக்காவி பெயர் அதைமாற்றி தன் பெயரை வைக்க வழக்காடினான்அவன் அக்கா பிறக்கும் முன்பேவீட்டுக்கு பெயர் வைத்தாகி  இருந்தது  என்றுசொல்லி சமாதானப்படுத்தினோம் 


மேல் மாடி எழும்பும் முன்
முன்னால் கொய்யா மரம்  காண்டிலிவெர்  போர்டிகோ
                          
மேல்மாடி மோல்டிங்

மோல்டிங்தயார் 
மோல்டிங் ப்ரோக்ரெஸ்


மகனும் மருமகளும்  




          

Tuesday, March 17, 2020

உதய கீதம்





                                     உதய கீதம்
                                      ------------------


பொழுது புலர்ந்தது மெல்லன எழுவீர்
 புள்ளினங்கள்சிறுகாலைப் பொழுதில் பறந்துதம் இரைதனை தேடவே
நாற்திசையும் பறந்து திரிகின்ற்ன
மானிடர்கள்தம் பாபம்போக்கவே   உன்சன்னதியில்
 காத்திருக்கின்றனர் உந்திரு நாமம் சொல்லியே புண்ணியம் விழைகின்றனர் உன் திருக்கண் அருள் பொழிய எழுந்தருள்வாய்  ராமா கிருஷ்ணா கோவிந்தாஎன
நாமங்களில்லா பெரும்பேரைஏதோ அழைத்தே ஏத்துகின்றனர்
நின் திருப்பெயர் பலசொல்லி  நின்னடியார் மெய் மறக்க
நின் செவியால் கேட்டருளி அவர்தம்   குறைநீக்க
எழுந்தருள்வாய
உன்னை      உறங்க விடாமல் குருவாயூர்
நிர்மால்ய தரிசனம்  காணஏங்கும்  பக்தர்க்கு  அருள
மெல்லென எழுவீர் ஆதவன் குணதிசை எழுமுன்

நீர் எழுந்தருள்வீர் ஐயா 
நேற்று   என்பது அனுபவமானால் 
இன்றைய தினம்நம்பிக்கை ஆகட்டும்
பொழுது புலர்கிறது  மெல்லென எழுவீர்

இத்துடனொரு பாடல் பகிர்வு



இன்னுமொரு பாடல் பகிர்வு 




  

Saturday, March 14, 2020

வீடு கட்டிய வரலாறு


                                           வீடு  கட்டிய வரலாறு 



 நான் பப்லிக்  செக்டர் கம்பனியில்வேலையிலிருந்ததாலும் பணியில்  இருக்கும்போது  குவார்டார்ஸ்  இருக்கும் என்பதாலும் சொந்த வீடு பற்றி நான்    நினைக்கவே இல்லை
 விஜய வாடாவில் இருந்தபோது என்மாமியார் மாமனார் தொந்தரவு தாங்காமல்  1979 ல் ஒரு மனை வாங்கிப்போட்டென்   என் எண்ண அலைகளே வேறு மாதிரி இருந்து இந்தியரின்  சராசரி வயது  60 க்கும்  குறைவு  என்பதாலும்   வீடுகட்டுமளவுக்கு என்னிடம் பணம்  இல்லாததாலும் கடன்  வாங்குவது உடன் பாடாக  இல்லாததாலும்   வீடு  அனாவசியமென்னும் நினைப்பே இருந்ததுசொந்த வீடு உள்ளவனுக்கு அது ஒன்றே இருக்கும் இல்லாதவனுக்கு  எங்கும் வசிக்கமுடியும் என்றெல்லாம்  நினைத்தேன் மீண்டும்   திருச்சி வந்த போது நண்பன் ஒருவன்   நான்நினைப்பதுதவறு  என்று என்னவெல்லாமோ கூறிஎன்னை சொந்த வீடு கட்ட வைத்தான்முதலுக்கு  எங்கே போவது  நான் இருந்ததோ திருச்சியில்  மனையோ பெங்களூரில்அப்போது மனை இருந்த இடம் சிடிக்கு வெளியில் சுற்றி இருந்தஇடம் ஒரே பொட்டல்வெளி
அப்போது தண்ணீர் வசதியு இருக்கவில்லை  ஆகவே முதலிலொரு ஆழ்கிணறு தோண்ட வேடிய அவசியம் நேர்ந்தது இருக்கும் மனையில் எங்கு தோண்டுவது  எங்கு தண்ணீர்  வரும் என்று எதுவும் தெரியாது மனையின்  ஓர் ஓரத்தில் தோண்டு வதே சரியாய் இருக்கும்   வாட்டர் டிவைனர்  உத்வி நாடலாம்  என்றார்கள் நான்குளிக்கும் போதுவேண்டு நீர் நிலைகள் நான்  குறிக்கும் இடத்தில் பிரவாகிக்கட்டும் என்றுவேண்டி ஓர் இட்த்தை என்மனைவி காட்டினாள் அது மனையில்  வீடுகட்டதொந்தரவு இல்லாமல் இருந்தது சுமர் 90 அடி ஆழத்தில் பாறை தென்பட்டது  இன்னு சிறிது ஆழத்தில் நீர் வந்தது 150 அடி ஆழம் வரை தோண்டச் சொன்னோம் நீர் நல்ல இனிப்பாக இருந்தது60 அடிக்கு 30 அடி மனை  அத ந்நடுவே ஒரு சின்ன வீடு  என் வடிவமைப்பில்  வளர்ந்தது  நாங்கள் இருந்ததோதிருச்சி வீடோ பெங்களூரில்  மாதம் ஒரு முறை வருவோம் வீடு படிப்படியாக உருவாவதை கண்டோம்வீடு கட்டின் காண்ட்ராக்டர்நம்பக மானவராய் இருந்தார்

எப்படியோ 1979 ல் வாங்கிய மனையில்  1985ல்  வீடு வந்தது வீட்டை வாடகைகு விட்டுச் செல்லலாம்  என்று முடிவு செய்தோம்வீட்டின்  ஸ்பெஷாலிடியே  கார் போட்டிகோ தான் கான்டி லிவெர் டைப் போர்டிகோ நீண்டு தொங்குவது போல் இருக்கும்  வீட்டுக்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமே  தந்தையின் பெயரோடு  ஐஸ்வர்யமாகவும் இருக்க  மஹாதேவ்ஐஸ்வர்யா  என்று பெயர்சூட்டினோம்
பின்என் மூத்தமகனுக்கு  திருமணம்  1991ல் நடந்தது  வேலையும் பெங்களூரில் இருந்ததால்  சொந்த வீட்டுக்கே குடி வந்தனர்



வீட்டில் போர் போடும்போது  எடுத்த  படங்கள்

(தொடரும் )






                                       

Wednesday, March 11, 2020

மார்ச் 2ம் தேதி



                                                   மார்ச்  2 ம் தேதி
                                                    ==============

 மார்ச் 2ம் தேதி மறக்க முடியாத நாள்என் நினைவு  பெட்டகம்  என் தந்தை மறைந்த தினம்   அது ஆயிற்று 63 ஆண்டுகள் ஒவ்வோராண்டும்  சிலநினைவுகளைப்பகிர்வதுண்டு என் பதிவுகளைப் படிப்பவர்கள்   என் தந்தைபற்றி அறிந்திருக்க வாய்ப்புண்டு
 என் தந்தை மறைந்தபோது அவரது அலுவலகத்தில்  இருந்து கொஞ்சம்பணம்  கலெக்ட்செய்து கொடுத்தார்கள் என்நண்பர்களும் ஒரு தொகையைக் கொடுத்தார்கள் அதை ஏதோ பிச்சைக்காசு என்னும் விதத்தில் உறவுகள் பேசினார்கள்அதை  நான் வாங்காவிட்டால்  உறவுகள் உதவுவார்களா என்ற என்கேள்விக்கு அனைவரும் கப் சிப்பாகி விட்டார்கள்
 என் தந்தைக்கு நானே கொள்ளி போட்டேன்  அது எனக்கு கிடைத்த் பேறா  தெரியவில்லை  இப்போது போல்  மின்  எரி வசதி அப்போதில்லை  இருந்தால் தெரியவும் இல்லை
 விறகு கரி என்று கலந்து ஒரு சூளை மாதிரி செய்தார்கள்உடல் தகனம் செய்தபோது மண்ணால் குழைத்த அடுப்புக்குள்  உடலிருந்தது  கொழுந்து விட்டு எரியுமென்றில்லை புகை என்பதே இல்லாமல் இருந்தது எனக்கு அது ஒரு சூளை மாதிரியே இருந்தது இத்தனைஆண்டுகளுக்குப் பின்  அதெல்லாம்யார் ஏற்பாடு செய்தார்கள் என்று   நினைவில்லை
 என் அப்பா இறக்கும்    முன்  எழுதிய கடைசிகடிதம் என்  அண்ணா என்னிடம் சேர்ப்பித்தார்  அதில் நான் அம்பர்நாத் உயர் பயிற்சிக்கு  தேர்வாகி இருந்ததை  மகிழ்ச்சியுடன்  குறிப்பிட்டு இருந்தார் அதைநான் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன் 


jஜீவிக்கு பிடித்த பாட்டு  என் சி வசந்த கோகிலம் பாடியது 





  

Sunday, March 8, 2020

மகளிர் தினம்



                                                                      மகளிர் தினம்
                                                                       ----------------------
 இன்று 8-3- 2020  மகளிர் தினம் இன்று காலை  என்  மனைவிக்கு happy womens day என்று வாட்ஸ் ஆப்பில்  செய்திகள்வந்திருந்தது  அவள் same to you என்று  பதில் அனுப்பினாள் இதில்  தமாஷ் என்னவென்றால்  அனுப்பியவர்களில் ஆண்களும் இருந்தனர் jokes apart நான் விழித்ததும்  அவளுக்கு வாழ்த்து சொன்னேன்  மகளிர்  தினத்தில்  வலைப்பதிவுகளில்  இருக்கும் தாய்க்குலங்களைப் பற்றி எழுதலாம் என்னும் எண்ணமும் வ்ந்தது
தமிழ் வலை உலகில்  எனக்கு தெரிந்த  என்னை அறிந்த பெண் பதிவர்களுக்கு  இப்பதிவு சமர்ப்பணம் நான்  அறியும்பெண்வலைப்பதிவர்கள் பலர் இப்போதெல்லாம் என்பக்கமே வருவதில்லை  வலைக்கு வருவது  டூ வே  ட்ராஃப்ஃபிக்  அல்லவா முன்பெல்லாம் பலரும் என்தளம் வருவார்கள்
பலரையும்நினைவு கூர இது  ஒருசந்தர்ப்பம் அல்லவா இப்பொது என் பதிவுகளில்  காணும் பெண்பதிவர்கள்  அவர்களைப் பற்றிந எழுதும்போது என்னையும் மீறி அவ்ர்கள் பற்றிய கருத்துகளூம்  வந்து விழலாம் no offence  meant  அது என்சுபாவம்   பாணி என்பதைப்பலரும் அறிவார்கள் குடத்திலிட்ட விளக்காய்  இருப்பவரை  குன்றின்   மேல் ஏற்றும்என் முயற்சி

மகளிர் தினத்தில் பேரும் புகழும் பெற்ற மகளிரைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் வழக்கமாகிவிட, எனக்கு மனசில் தோன்றியதைப் பதிவிடுகிறேன். ஆண்டவன் படைப்பில் ஆணும் பெண்ணும் சமம் என்று உரக்கக் கூறினாலும், எங்கோ  உள்ளத்தின் அடியில் பெண்களை சமமாக நினைக்கவும், நடத்தவும் இந்த ஆணாதிக்க சமுதாயம் தயாராயில்லை என்பதையே அண்மைய நிகழ்வுகள் தெளிவு படுத்துகின்றன. பெண் எனப் படுபவள் ஒரு உடைமைப் பொருள் என்றே கருதப் படுகிறாள். இல்லை என்று காட்டத்தானோ என்னவோ இந்த மாதிரி மகளிர் தின நினைவுகள் ஒரு பிராயச்சித்தமாக அனுஷ்டிக்கப் படுகின்றன.எடுத்துக்காட்டாக புகழ் பெற்ற மகளிரைப் பற்றி பேசுகிறோம். பெண்களின் பெருமையைப் பற்றிப் எழுத நான் எடுத்துக்கொள்ளப் போவது எனக்கு நன்கு பரிச்சயமான, என்னைத்தெரிந்த பெண்களில் சிலரைத்தான். பெண் என்றாலேயே எனக்கு நினைவுக்கு வருவது என் மனைவியைத்தான்.அவள் பட்டம் பெற்றவள் அல்ல. பணிக்குச் செல்பவளும் அல்ல. எனக்காக செய்து வந்த பணியையும் துறந்து எனக்காகவே வாழ்பவள். என்னை விட அவளை நான் நேசிக்கிறேன். இது எல்லாக் கணவர்களும் சொல்வது தான் என்பதுபோல் தோன்றினாலும், நான் எழுதுவது ‘அக்மார்க்’ உண்மை. நான் பார்த்துப் பொறாமைப் படும் பெண்களும் இருக்கிறார்கள்.பதிவுலகில் என்னை பிரமிக்க வைக்கும் பெண்மணிகளின் ஒரு பட்டியலையே தருகிறேன்
1)கீதா சம்பசிவம் நான்நேரம் எடுத்துசந்தித்தபதிவ்ர் ஸ்ரீரங்கவாசிதுறை போகியவர் என்று பெயரெடுத்தவர் பழங்கதைகளை  இண்டர்ப்ரெட் செய்யும்விதமே அலாதி  எதையுமே அவருக்கு நேர்ஃந்த அனுபவம்போல் சொல்வார்ஒரு முறை திருமணம்  பற்றிய கருத்து தெர்விக்கும்போது  ஆண்பெண் திருமண்மே  இருவர் இணைவதற்கு மட்டுமான லைசென்ஸ் மட்டுமல்ல அதை யும்  தாண்டி புனிதமானதுஎன்பது போல்கருத்து தெரிவித்திருந்தார்அவரிடம் என்க்குப் பிடித்த விஷயமே ஒரு அதாரிடி  போல் சொல்வதுதான் வெகுகாலமாக  பதிவு எழுதி வருபவர் சமையல்விஷயங்களில் அவருக்கு இல்லாத  அனுபவமே இல்லை போல் இருக்கும்
செல்வி மாதங்கி மஹாலிங்கம்   சென்னையில் இரு முறை என்னை சந்திக்க வந்தவர் ஐ டி பணியில் இருந்தவர் இப்போது அடைவங்கிப்பணியில் இருப்பவர் முன்பெல்லம் என் தளட்துக்கு தவறாமல் வருவார்  வர மறந்தாலு அப்பா வரவழைப்பாராம்  முகநுலில் த லோன்  லி பேர்ட் என்னும்கவிதை எழுதி இருந்தார்  அதை நான் தமிழ்ப்படுத்தி எழுதியதை மிகவும்சிலாகித்து  எழுதி இருந்தார் என்ன இருந்தாலும்  தனக்கென ஒரு வழியில் செல்பவர்
 செல்வி அருணாசெல்வம் கவிதையில் மட்டுமே எழுதுகிறார் ஆரம்ப காலத்தில் இவர் ஆணா பெண்ணா என்னும்  கேள்வி இருந்திருக்கும்போல நான் அவரதுஆரம்பகாலத்தில் இருந்தே  தொடர்கிறேன் ஃப்ரான்ஸ் தேச  வாசி என்று  நினைக்கிறேன்
தேனம்மை லக்ஷ்மண்ன் இப்போது போட்டி போட்டு  நூல்களை மின் பதிவாக்குகிறார்என்னைக் காணவருவதாக்  எழுதி இருந்தார்  பலமுறை பெங்களூர் வந்தும் இன்னும் சந்தித்தபாடில்லைநாட்டுக் கோட்டை பற்றியும் அவர்கள்கோவில்கள்பற்றியும் எழுதி இருக்கிறார்  என்னிடம்  அவருடையசாட்டர்டே போஸ்டுக்காக எழுதக் கேட்டுஇருந்தார் கொடுத்திருந்தேன் திருமதி துளசி கோபால் நியூசி யில் இருப்பவர் ஆனால் பெரும்பாலும் க்ஷேத்ராடனம்தான் எனக்கு அவர் தேர்ந்ஹெடுக்கும்கோவில்கள் பெரும்பாலுவிஷ்ணு கோவில்களாக  இருப்பதால் அவருக்கு வைணவ bias   இருக்குமோ என்னும்  எண்ண்ம் வருவதுண்டு எல்லாமேநம்பிக்கைதான் என்று எண்ணுபவர்டீச்சர் என்று அறியப்படுகிறார் ஏன் என்றுஇன்னும் தெரியவில்லை இவரை ஒரு முறை என் வீட்டிலும் இன்னொருமுறை மதுரை பதிவர் விழாவிலும் சந்தித்து  இருக்கிறேன்பழக இனிமையானவர்என் வீட்டுக்கு  வந்ததை சிங்கத்தின்  குகையில்  என்று  எழுதி இருந்தார்
அதிரா ஏஞ்செல்  இருவரும் எனக்கு அறி முகமானதே தமாஷாகதான்   என் மீசையே என் அடையாளம்  அதைப்பார்த்துன் என்னோடு தொடபு கொள்ள தயங்கினார்களாம்அவர்களதுபடமோ முகவரியோ என்னிடம் கிடையாது நகைச்சுவை என்று நினைத்து எழுதுவதை ரசிக்கபலருண்டு  
இன்னொரு ஆதிரா உண்டு  கல்லூரியில்  ஆசிரியை சென்னையி ல் என்னை  சந்திப்பதாக  இருந்தார்  ஏனோ முடியவில்லை  சாதனைகள் பல புரிந்து அதனால்பேரும்  புகழும்பெற்றவர்  இயற்பெயர்பானுமதி

தென்றல் சசிகலாவை நான்  புதுகை  பதிவர்சந்திப்பில்பார்த்தேன்   என்னை அறி முக்ப்படுத்தி தெரிகிறதா என்று கேட்டபோது  எங்கும் நிறைந்தவன்  ஈசன் என்றால் என்னுள் நிறைந்தவள் நீயே  யன்றோ  என்னும் நான்  எழுதிய வரிகளைச்  சொல்லி என்னைபிரமிக்க வைத்தார்
 திருமதி உமாமோஹன்   பதிவுகள் ஒன்றாக வராது ஒருகாஸ்கேட்போலவரும்                    
அவர் எழுத்டி லெவலே வேறு  இதுவரை நான் கருத்திட்டது இல்லை
 திருமதி பவள  சங்கரி  நித்திலம் தளத்துக்குஉரிமையாளர்  திருஅப்பாதுரை மூலம் தெரிந்தவர் இவர்கள்தவிரான்புடன்  ம்ல்லிகா  சாகம்பரி போனறோரை பதிவுகளில்  நான் பார்க்கவில்லை  அவ்சரவருக்கு ஒரோர் பாணி
திருமதி கோமதி அரசுநான்  மயிலாடுதுறையில் சந்தித்தேன்   மல்லிகைப் பூ பொல் இட்லி கொடுத்து  அசத்தி விட்டார் நான் தமாஷாக இவரை ஒரு ஆர்நிதாலஜிஸ்ட்  என்பேன் பறவைகள் மேல் அவ்வளவுபாசம்    வேதாத்திரி சுவாமிகள் மேல் அத்தனை அபிமானம் அதென்னவோ தெரிய வில்லை  நான் சந்தித்த  பதிவர்கள்பல்ரும் என்னிலும் மிகவும் மாறு பட்டவர்கள் இதைதான்  opposite poles attract  என்கிறார்களோ  
  பானுமதி வெங்கடேஸ் வரன்   இப்போதெல்லாம்  காணொளி  மூலம்   அவ்வப்போது பதிவிடுகிறார் திரைப்படசெய்திகள்விரல் நுனியில்

 தில்லையகத்து கீதா  துளசிதரனுடன் சேர்ந்து  இயங்கு கிறார்    தற்போது  பெங்களூர் வாசி  பதிவு பக்கமே வருவதில்லைஎதையும் சுருங்கச் சொல்ல மாட்டார்
                                            

Saturday, March 7, 2020

ஒரே நாளில் இருவர் பிறந்த தினம்





                                                 ஒரே நாளில்  இருவர் பிறந்த  தினம்
                                                 -------------------------------------------------------


ஃபெப்ருவரி 28ம்  நாள் எங்கள்வீட்டில் இருவருக்குப் பிறந்த தினம் என் மருமகள்மற்றும் பெயரன்இருவரின் பிறந்த தினமும்  ஒன்றே சிரமம்  இருந்தாலும்  நானும்  மனைவியும் சென்றோம் சிறுவனுக்குமகிழ்ச்சிதான்  அவன் பிறந்த நாளுக்கு  அவன் புகைப் படங்கள்  அடக்கிய collage  ஒன்று பரிசாககொடுக்கப்பட்டதுகவனமுடன் வைத்து இருந்தால் பிற்கால்த்தில் நினைப்பெட்டகமாக விளங்கலாம் பிறத நாள் கேக் என்  மூத்தபேரன் வாங்கி  இருந்தான்  C என்றால்  சித்தி   A என்றால் அபிஷேக் அவன் பிறக்கும் போது அறுவை சிகிச்சை  தேவைப்பட்டது கடைசி நேரத்தில்கொடிசுற்றி இருந்தது தெரிந்தது பிறகு ஒரு நாள் கர்ப்பரட்சகாம்பிகை கோவில் போனது குறித்துஎழுதி இருக்கிறேன் 
collage   புகைப்படங்கள் 


பேரன்  மருமகளுடன்  

பிறந்த நாள்  கேக்
நான் என் உற்றார் சுற்றமுடன்   விசெஷ நாட்களைக் கழிக்க விரும்புவதுபொல்  என் பேரனும்  நினைக்கலாம் இல்லையா ஆகவேதான்  சிரமம் பார்க்காமல் சென்று  வந்தேன்


ஒரு வாக்கியம் முடியும்முன் வேறு ஒரு வாக்கியம் துவங்குவதை நான் ரசிப்பேன்