மாறிவரும் காலமும் எழுத்தும்
-------------------------------------------------
நான் எழுதும் போது என்னையும் அறியாமல் அந்தக் காலத்துக்குப் போய் விடுகிறேன் எல்லாம் வயதின் கோளாறு என்றே தோன்றுகிறது. ஒரு முறை நண்பர் ஏகாந்தன் என் வீட்டுக்கு வந்திருந்தார்( ஒரு முறைதான் வந்திருக்கிறார் ) என் பழைய எழுத்துக்களோடு ஒப்பிடும் போது இப்போது எழுதுபவை ஒரு மாற்றுக் குறைவு போல் இருக்கிறது என்றார் அது சரியோ என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது என் பழைய எழுத்துக்கள் சிலவற்றைப் படிக்கும் போது எனக்கு இனி அம்மாதிரி எழுத வராது என்றே தோன்றுகிறது
இதைப் பாருங்களேன்
வெண்ணிற மேனியாள் எனக்கு
மிளிரும் நீலவானம் சரிதுகில்
பன்நிறம் தெரியப பதித்த மணிகள்
மின்னும் தாரகை நல்லணிகலன்
எனக்கு நிகர் யாரே இப்புவிமீதே எனவே
உன்னாது இயம்பும் மதியும் --கிளியே
கறை துடைத்த மதி வதனம் அவள் மேனிக்கணியும்
பட்டோ மற்றோ பொலிவுறும் பேருண்மை ---ஆங்கு
இதழிலோடும் புன்னகையும் நன்னகையாம்
வண்டென விரைந்தாடும் மலர் விழிகளும்
கண்டதும் கவி பாடத்தூண்டும் ---என்
காதல் ஜோதி ! கன்னல் மொழியினள்---அவள்
காண்பார் கண் கூசும் பேரெழில் ---கண்டும்
செருக்கொழிந்தாளிலை -- ஏன் ?
காதல் வயப்பட்டிருக்கும் போது வந்து விழுந்த வார்த்தைகள் இனி அம்மாதிரி காதல் வசப்பட சாத்தியமும் இல்லை எழுதவும் இயலாது
அமர காதல் என்று கூறப்படுபவை எல்லாம் வெற்றி பெறாத காதல்களே ஒரு வேளை காதலில் வெற்றி பெறாமல் இருப்பதே அமர காதல் என்று எண்ணும் அளவுக்கு சிந்தனைகள் இருந்தது அமர காதல்கள் என்று கூறப்படுவதெல்லாம் லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதி போன்ற கதைகளே இதுவே என்னை ஒரு கதை எழுதத் தூண்டிற்று அது இதோ. இந்தக்கதை 1950களின் கடைசியில் எழுதியது கற்பனை என்றாலும் றெக்கை கட்டிப் பறந்த காலம் அது அதிலிருந்து சில பகுதிகள்
அவனுக்கு அவள்மேல் காதல்,
அவளுக்கு அவன்மேல் காதல்
காதலுக்குக் காரணம் என்ன.?
அழகு, அறிவு, படிப்பு, அந்தஸ்து.?
எல்லாவற்றுக்கும் மேம்பட்டது
எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது,
காதல் இருப்பது உண்மைதானா.?
அவனுக்கு வந்தது திடீர் சந்தேகம்.
உயிரினும் மேலான காதலுக்கு அவள்
உயிரையே தருவாளா. ? சோதித்துப்
பார்க்க அவன் துணிந்து விட்டான்.
காதலின் பிரதிபிம்பமே அவர்கள்-இதை வெட்டென விளங்கச்
செய்ய அவர்கள் அமர காதலர்களாவது.. முடிவு தெரியாக்க்
காதலைவிட முடிவு தெரிந்த சாதல் சிறந்தது உண்மைக் காதல்
என்றால் இருவரும் சேர்ந்தே உயிர் விட்ல் வேண்டும்.
இல்லையெனில் ஒருவரை ஒருவர் மறக்க வேண்டும்.
என்னென்னவோ சொல்லிக் குழப்பினான் .கட்டிளங்குமரியவள்
குழம்பித் தெளிந்தாள்.ஒரு நாள் அவகாசம் கேட்டாள்.
இருவரும் சேர்ந்திருந்து மறு நாள் ஊர்ப்புறத்தே இருந்த
ரயில் தண்டவாளத்தில் கையுடன் கையும் மெய்யுடன் மெய்யும்
இணைந்து இருவரும் சேர்ந்தே தலை கொடுக்க முடிவாயிற்று.
ஆண் பெண் ஒருவரை ஒருவர் நாடி ,கண்டு மகிழ்ந்து
அளவிலா அன்பு கொண்டு ,
மட்டற்ற காதல் ஊற்றாய் ஊறி
ஆறாய்ப் பெருக்கெடுத்து பின் சங்கமிப்பதே குடும்ப சாகரம்.
அதில் அமைதியும் இருக்கும் கொந்தளிப்பும் இருக்கும்
அனுபவித்து அறிவதே மனிதகுலக் கடமை. .அவள் அவனது
மனச் சுவற்றில் எழுதிய சித்திரமா இல்லை கடைத்தெரு
கத்தரிக்காயா. ? இவன் வருமுன் காப்பவனா வாழப் பயந்தவனா.
வரும்முன் காப்பது அழித்துக் கொள்வதில்தான் இருக்குமா.?
வாழப்பயந்தவனாகத்தானிருக்க வேண்டும். அணு அணுவாய் பயந்து
சாகும் கோழையுடன் வாழ்வதை விட ....அட வாழ்வாவது ஒன்றாவது.
அதைத்தான் முடித்துக் கொள்ளலாம் என்கிறானே.-மங்கையவள்
மருகினாள் மாய்ந்து மாய்ந்து உருகினாள்.
(பெண்கள் பற்றிய அவனது கற்பனையைப் பாருங்கள்)
பொற்சரிகை
விளிம்பு கோர்த்து, மிளிரும் நிலப் பட்டாடைஉடுத்து,பல வண்ண முழுமணிகள்
அழுத்தி முற்றிய நல்லணிகலன் பல அணிந்து,நறு மணங்கமழும் கூந்தலுடன்,உறுப்புத்
திருத்தி ஒய்யாரங்காட்டி,உவகை பொருத்தி உரிய அன்பின் சில்லுரை இன்புற மொழிந்து,ஒரு
ஆண்மகனை வயப் படுத்தும் நங்கையினும், இயற்கை நலம் பெற்றாள்,கருகி நீண்ட விரிகுழற் கற்றையுடையாள் மொய்க்கும் வண்டென விரைந்தாடும்
விழியுடையாள், கொவ்வைப் ப்ழத்தைப் பழிக்கும் செவ்விய இதழாள்,கடைந்துருட்டியதன்ன
பச்சிளந்தோளுடன்,பூங்கொம்பின் ஒசிவுடையள்,கிள்ளை மொழியாள் மயிலென உலவி, அவள்மேல்
முதிர்ந்த அன்பு கொண்ட அவனுடன்,ஒருமித்து உள்ளம் உருகி,அவனை அவள் வயப் படுத்தும்
மங்கை நல்லாள் அவளே சிறந்தவள் …………….
“உயிர் விடத் துணிந்தவளுக்கு சோதனையில் வெற்றி பெறுபவளுக்கு வாழ்நாளெல்லாம்
இன்பம் தரலாமே. சோதனைதான் என்று தெளிவிக்க இன்னும் சில மணித் துளிகளே உள்ளன. அதோ
அவளும் வருகிறாள். ஊருக்கு வெளியே ஒன்றாய் போக வேண்டும் கடைசி நொடியில்
தெரிவித்தால் வாழ்வில் பற்று இன்னும் கூடக் கூடும்”.
மனதில் தோன்றும் உணர்ச்சிகளை மனதின் அடித்தளத்தில் அழுத்திப் புதைத்தால்
அவ்வுணர்ச்சிகள் வடி வதங்கி இறந்து விடுகின்றன. உணர்ச்சிகளுக்கு அதனால் ஏற்படும்
எண்ணங்களுக்கு வார்த்தைகளால் உயிர் கொடுத்து தெளிவிக்காவிட்டால் உணர்ச்சிகளின்
உண்மைத்தன்மை மறைந்து எதிர்பாராத விபரீதங்கள் விளையலாம்.
ஊரின் வெளிப்புறப் பிரதேசம். அமைதியைக் கிழித்துக் கொண்டு தூரத்தில் புகை வண்டி அசுர வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வினாடிகளில் தண்ட வாளத்தை அடையலாம் அருகில் புஸ்ஸென்ற சப்தம் கேட்டு அவனும் அவளும் திடுக்கிட்டனர். சாகும் தருவாயிலும் ஏனோ அந்த பயம். அவனுக்கு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. அவள் சமாளித்துக் கொள்கிறாள். .பிறகு என்னதான் தோன்றியதோ சீறிவரும் பாம்பிடம் கை கொடுக்கிறாள். அதற்கென்ன. .?கொட்டிவிட்டு ஆத்திரம் தீரச் சென்றுவிட்டது. அவன் அலறுகிறான்,புரளுகிறான்,பிதற்றுகிறான்.புலம்புகிறான். அவள் அவனது விருப்பத்தை நிறைவேற்றி விட்டாள். விபரீதம் விளைந்து விட்டது.!
இந்தமாதிரியான
அதீதக் கற்பனைகள் இவனுக்கு இனிவர வாய்ப்பில்லை
இருந்தாலும் இந்த
ஒப்பிடல் மட்டும் போகவில்லை தலை முறை இடைவெளி என்று தெரிந்தும் மனம் ஏனோ சமாதான
மடைவதில்லை எனக்கு 24 வயதாகிவிட்ட என்
பேரனைப் பார்க்கும்போது சில எண்ணங்கள் எழுவதைத் தடுக்க முடியவில்லை
மூன்றாண்டு முற்றுப் பெறாத இளவயது,
எண்ணமும் சொல்லும் இணையப் பெறாத மழலை,
சொல்வதை, கேட்பதை, கிரகிக்க விழையும் தன்மை,
ஒ , அது அந்தக் காலம் !
கதை கேட்கும் ஆர்வம்,
கதா பாத்திரமாகும் உற்சாகம்,
ராமனாக , அனுமனாக, அரக்கி சூர்ப்பனையாக,
மாறுவான் நம்மையும் மாற்றுவான்,
ஒ , அது அந்தக் காலம். !
நான்கு மாடுகள் கதையில் அவனே சிங்கம் ,
முதலையும் குரங்கும் கதையில் அவனே குரங்கு,
பீமன் வால நகர்த்த திணறும் கதையில் அவனே அனுமன்,
ஒ , அது அந்தக் காலம், !
ஆறு காண்ட ராமாயணம் அழகாக சொல்லுவான்,
, கலைஞரின் வீரத்தாய் வசனமும் விட்டு வைத்தானில்லை,
ஒ , அது அந்தக் காலம், !
விநாயகர் துதி பாடுவான், வள்ளிக் கணவன் பெயர் பாடுவான்,
கண்ணனின் கீதை சொல்லுவான், காண்பவர் கேட்பவர்
மனம் மகிழ திரை இசையும் பாடுவான்,
ஒ , அது அந்தக் காலம், !
எண்ணமும் சொல்லும் இணையப் பெறாத மழலை,
சொல்வதை, கேட்பதை, கிரகிக்க விழையும் தன்மை,
ஒ , அது அந்தக் காலம் !
கதை கேட்கும் ஆர்வம்,
கதா பாத்திரமாகும் உற்சாகம்,
ராமனாக , அனுமனாக, அரக்கி சூர்ப்பனையாக,
மாறுவான் நம்மையும் மாற்றுவான்,
ஒ , அது அந்தக் காலம். !
நான்கு மாடுகள் கதையில் அவனே சிங்கம் ,
முதலையும் குரங்கும் கதையில் அவனே குரங்கு,
பீமன் வால நகர்த்த திணறும் கதையில் அவனே அனுமன்,
ஒ , அது அந்தக் காலம், !
ஆறு காண்ட ராமாயணம் அழகாக சொல்லுவான்,
, கலைஞரின் வீரத்தாய் வசனமும் விட்டு வைத்தானில்லை,
ஒ , அது அந்தக் காலம், !
விநாயகர் துதி பாடுவான், வள்ளிக் கணவன் பெயர் பாடுவான்,
கண்ணனின் கீதை சொல்லுவான், காண்பவர் கேட்பவர்
மனம் மகிழ திரை இசையும் பாடுவான்,
ஒ , அது அந்தக் காலம், !
கதை சொல்லி மகிழ்ந்தேன் , அவனோடு நானும் நடித்தேன் ,
அவனைப் போல் என்னை நான் மாற்ற , என் வயதொத்தவன் போல்
அவன் மிளிர , எனக்கு அவன், அவனுக்கு நான் என,
ஒ , அது அந்தக் காலம், !
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்,
காலத்தின் முன்னே எல்லாம் மாறும்,
மாற்றங்கள் என்றால் ஏமாற்றங்களா, ?
அவனைப் போல் என்னை நான் மாற்ற , என் வயதொத்தவன் போல்
அவன் மிளிர , எனக்கு அவன், அவனுக்கு நான் என,
ஒ , அது அந்தக் காலம், !
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்,
காலத்தின் முன்னே எல்லாம் மாறும்,
மாற்றங்கள் என்றால் ஏமாற்றங்களா, ?
அன்று போல் இன்றில்லையே
நேற்று இன்றாகவில்லை, இன்று நாளையாகுமா, ?
ஓராறு வயதில் இல்லாத எண்ணம்,
நாலாறு வயதில் வருவது ஏனோ, ?
இதுதான் தலைமுறை இடைவெளியோ, ?
கடந்த நிகழ்வுகள் நினைவுகளாய்த் திகழ,
நடக்கும் நிகழ்வுகள் மகிழ்வாக மாற ,
இன்றும் ஒரு நாள் , ஒ அது அந்தக் காலமாகும், !
நேற்று இன்றாகவில்லை, இன்று நாளையாகுமா, ?
ஓராறு வயதில் இல்லாத எண்ணம்,
நாலாறு வயதில் வருவது ஏனோ, ?
இதுதான் தலைமுறை இடைவெளியோ, ?
கடந்த நிகழ்வுகள் நினைவுகளாய்த் திகழ,
நடக்கும் நிகழ்வுகள் மகிழ்வாக மாற ,
இன்றும் ஒரு நாள் , ஒ அது அந்தக் காலமாகும், !