இரண்டு கொலை வழக்குகள்
------------------------------------------
பொதுவாக
என்பதிவுகளில் பரபரப்பான செய்திகளையோ, திரைப்படங்கள் மற்றும் அரசியல் பற்றியொ
எழுதுவதில்லை. ஆனால் அண்மையில் இரண்டு கொலை வழக்குகளின் தீர்ப்பு பற்றி பதிவர்களின்
கருத்தறிய இப்பதிவினை எழுதுகிறேன். ஒரு 14 வயதுச் சிறுமியும் அவர்கள் வீட்டில் பணியில் இருந்த ஒரு வாலிபரும்
கொல்லப் பட்டு பல ஆண்டுகளாக நீதி மன்றத்தில் நிலுவையில் இருந்த கொலை வழக்கில்
அச்சிறுமியின் பெற்றோர்கள் , (இருவரும் பல் மருத்துவர்கள்) குற்றவாளிகளாக
விசாரிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டிருக்கிறார்கள். நேரில் பார்த்த
சாட்சிகளோ, எந்த சந்தேகத்துக்கும் இடமளிக்காத உறுதியான சாட்சியங்களோ இல்லாத
நிலையிலும் தண்டனை வழங்கப் பட்டிருக்கிறது தீர்ப்பினைக் குறைசொல்லியும் ஆதரித்தும்
கருத்துக்கள் பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் வந்த வண்ணம் இருக்கின்றன. கொலைக்கான
காரணமாகப் பேசப்படுவதுஅந்தச் சிறுமிக்கும் அவர்கள் வீட்டில் பணியில் இருந்த
வனுக்கும் இருந்த தகாத தொடர்பு கண்டு பிடிக்கப் பட்டு நடந்த ஒரு “கௌரவக் கொலை” என்பதாகும் .கூடவே இருந்திருக்கும் பெற்றோர்களுக்கு அவர்கள் தொடர்பு
தெரியக்கூட முடியாத படி நடத்திய வாழ்க்கையையா இல்லை தலைமுறை இடைவெளி காரணமாக
புரிதல் போதாத காரணமா, எதுவாயிருந்தாலும் வருத்தம் அளிக்கிறது. பெற்று சீராட்டி
வளர்த்த ஒரே பெண்ணைக் கொலை செய்யும் அளவுக்கு தகுதி அந்தஸ்து போன்றவைகளுக்கு அதிக
முக்கியத்துவம் கொடுத்ததால் வந்த விளைவா.?.மறுக்க முடியாத சந்தர்ப்ப
சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப் பட்டிருப்பதாகச் சொல்லப் படுகிறது
குற்றவாளிகள் தப்பித்தாலும் நிரபராதிகள் தண்டிக்கப் படக் கூடாது என்னும் நீதியின் கொள்கை
இருந்தும் பெற்றோர்களே தண்டனைக்குள்ளாகின்றனர் என்றால் .......நீதி தேவதைக்கு பாரபட்சம்
கிடையாது என்று நிலைநாட்டப் படுகிறதா.?
ஆனால் இன்னொரு கொலை
வழக்கில் சட்சியங்கள் பிறழ்ந்து விட்டனர் என்னும் காரணத்தால் குற்றம் சாட்டப்பட்ட
அனைவருமே விடுதலை ஆகி விட்டார்கள்.. ஒருவர் மீது குற்றம் சாட்டும்போது அவர்களுக்கெதிராக
தடயங்களும் சாட்சிகளும் இருக்கின்றனர் என்றுதானே பொருள்.? காவல் துறையினர்
யாரையாவது கைது செய்து குற்றம் சாட்டி வழக்குப் பதிவு செய்கிறார்கள் என்றால் என்ன
தெரிகிறது.? ஏதாவது முன் விரோதமா....?, இல்லையென்று சொல்வதானால் குற்றம் சாட்டப்
பட்டவர்கள் எதற்கு வேறு மாநிலத்துக்கு வழக்கை மாற்றக் கோரி மனு செய்து அதற்கு
ஒப்புதல் பெறுவதும் நடக்கிறது. குற்றம் சாட்டப் பட்டவரில் ஒருவர் கொலையுண்டு
சாவதும் , இன்னொருவர் அப்ரூவராக மாறி வழக்கின் போது பிற்ழ்சாட்சியம் கூறுவதும்
திரை மறைவில் என்னென்னவோ நடக்கிறது என்பதை உறுதி செய்கிறது. கொலை நடந்த சில
நாட்களில் சிலர் குற்றத்தைச் செய்ததாகக் கூறி சரண்டர் ஆவதும் பின் அந்த நேரத்தில்
அவர்கள் அங்கே இருக்கவில்லை என்று தெரியவருவதும் , கொலையுண்டவரின் உறவுகளே
சாட்சியளிக்கத் தடுமாறுவதும் கற்பனை
செய்துகூட பார்க்க முடியாதபடி இருக்கிறது. பட்டப் பகலில் கோவில் வளாகத்தில் ஒருவர்
படுகொலை செய்யப் படுகிறார். கொலைக்கான காரணம் என்ன.?கொலையாளிகள் கூலிப்
படையினரா.....அப்படியானால் ஏவியது யார் ... என்றெல்லாம் கண்டுபிடிக்கப் படாமலேயே
போய் விடுமானால் மக்களுக்கு குற்றவியல் நீதியில் நம்பிக்கை குறைந்து விடும்.