பிரிவின் வாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரிவின் வாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

பிரிவின் கொடுமை


                                                          பிரிவின் கொடுமை
                                                          ---------------------------
1965-ம் ஆண்டு நான் சென்னையில் பணியில் இருந்தேன் என் மூத்த மகனின்  பிரசவத்துக்கு  என் மனைவியை ஊருக்கு அனுப்பி இருந்த நேரம் அவளது பிரிவின் வாட்டத்தை இரவு ஷிஃப்ட் முடிந்து வீட்டுக்கு வரும்போது எழும் என்  எண்ணங்களை எழுதி வைத்திருந்தேன்  அது இப்போது  மீள் பதிவாக

 கனவில்தான்   நினைவில்தான்   உன்னைத்தான்
                    எண்ணித்தான்  உருகுவேனோ  |
        இல்லைத்தான்   உன்னைத்தான்  நேரில்தான்
                     கண்டுத்தான்   பேசுவேனோ  |
        இருகண்ணைத்தான்  காட்டித்தான்  என்னைத்தான்
                      கவரத்தான்   ஹுஹும்  நீயும்
        உன்மனசில்தான்  எண்ணித்தான்  என்றுதான்
                       முடிவுந்தான் செய்தாய்  கண்ணே..!



  ஓடிக்களைத்து ஊணுக்கலைந்து தேடிச்சோறு நிதம் தின்று
  வாடி அலையும்நிந்தன் கொழுநன் பாடிப்பகரும் அல்லைக்கேளடி


ஊரடங்கி பேயாடும் நேரம் போரடித்து வளைய வரும் வேலை
சாகடித்து கொல்லாமல் கொல்லும்--உன் பிரிவு  
நோகடிக்குதே எண்ண எண்ண ! 

 
வந்து நோக்கின் நீஇட்ட மஞ்சமில்லை !நானிட்ட பஞ்சணையில்
வீழ்ந்து பட்டால் நித்திரை இல்லை !

 
சோர்ந்து பட்ட உடலுக்கு உயிரூட்ட காப்பி இல்லை  ட் இல்லை சோறில்லை !

 
மாறுபட்ட சுழ்நிலையில்  வாழ்ந்து வரும் எனைக்காண நீயுமில்லை !
என்செய்வேன் ? சொல்லடி !