புத்தாண்டு வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தாண்டு வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஜனவரி, 2018

புத்தாண்டு வாழ்த்தும் பிரமாணங்களும்



                  புத்தாண்டு வாழ்த்தும்  பிரமாணங்களும்
                -----------------------------------------------------------------
ஆண்டு பிறப்பதும் பிரமாணங்கள் எடுப்பதும் 
தொன்று தொட்டு வரும் வழக்கங்களாகி விட்டன
ஏதும்  செய்ய இயலாது என்று அறிந்தும் வாழ்த்துவது
தொடர்கிறது . எல்லாமே ஒரு நம்பிக்கைதான்  எதிர்பார்ப்புதான்
என் வயதொத்தவர்க்கு வேண்டல் எல்லாமே
பிறர் நன்மை கருதுவதும்  அவர்களுக்கு
இன்னல்கள் ஏதும்  தராமல் போவதும்தானே   

      ஆண்டொன்று   போக  அகவை ஒன்று  கூட
         
நடந்ததை  எண்ணி  அசை போட
         
நன்கே  வாய்த்த  புத்தாண்டே
         
உன்  வரவு  நல்வரவாகுக..

வேண்டத்தான்  முடியும்,  எண்ணியபடி
மாற்றத்தான்  முடியுமா.?
நடைபயிலும்  அருணோதயத்தில்
வந்துதித்த   ஞானோதயமா .?

          
வேடிக்கை மனிதர்போல் வீழ்வேனென்று
          
நினைத்தாயோ   என்றவனே
          
வாடிக்கை மனிதர்போல்தானே மாண்டுபட்டான்.
          
அவன் பாட்டின் தாக்கம் அது இது
          
என்றே கூறி பலன் பல பெறுவதே
          
பலரது நோக்கம் என்றானபின்
         
இருந்தபோது இல்லாத பெயரும்  புகழும்
          
இறந்தபின்  வந்தார்க்கென்ன  லாபம்.?

எனக்கொரு  நூறு  இளைஞர்கள்  தாரீர்
மாற்றிக்காட்டுகிறேன்   இவ்வுலகை, -உள்ளப்
பிணியிலிருந்து அதை மீட்டுத்தருகிரேன்
என்றே சூளுரைத்த விவேகானந்தன்
கேட்டதனைப்   பெற்றானாஇல்லை
சொன்னததனை செய்தானா.?

          
அக்கினிக் குஞ்சான  அவர்தம் வார்த்தைகள்
          
வையத்து   மாந்தரின்  உள்ளத்தே
          
ஆங்காங்கே  கணப்பேற்றி இருக்கலாம்
           
சில  கணங்கள்  உள்ளத்து  உணர்வுகளை
           
உசுப்பேற்றி  இருக்கலாம் - என்றாவது
          
அவனிதன்னை  சுட்டுத்தான்  எரித்ததா.?

நன்மையையும்  தீமையும்இரவும் பகலும்,
நாளும்  நடக்கும் நிகழ்வுகள்  எல்லாம்
இயற்கையின்  நியதி.
கூடிப் புலம்பலாம்,  ஒப்பாரி  வைக்கலாம்,
நடப்பதென்னவோ  நடந்தே  தீரும்.
நீயும்  நானும்  மாற்றவா  முடியும்.?
எண்ணி மருகினும் இயலாத  ஒன்று.

    புத்தாண்டுப்   பிரமாணம் ஏற்க
          
எண்ணித் துணிந்து விட்டேன்.
          
நாமென்ன  செய்ய  என்றே
          
துவண்டாலும்- நலந்தரும்
          
சிந்தனைகள்  நம்மில்  வளர்க்க
          
செய்யும் செயல்கள் நலமாய்  இருக்கும்
.
          
ஊரைத்  திருத்த  உன்னால் முடியாது,
          
முடியும்  உன்னை  நீயே  மாற்ற
          (நீ  ஏமாற்ற  அல்ல.)
          
எண்ணில்  சொல்லில் செயலில்
         
நான்வேண்டுவதெல்லாம்-என் பேச்சைஅடக்
 
எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்
என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இ

மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
நீக்க முயலும் என் முனைப்புகளை உடைக்க.

எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிட.

வட்டமாய் சிறகடித்து மேலிருந்து கீழே நேராய்
இரையை நாடும் பறவையைப் போல் சொல்ல
நினைக்கும் புள்ளியை நானடையக் கற்றுக்கொள்ள.

நான் படும் வேதனைகளைவலிகளை
அடுத்தவன் முன் கொட்டித் தீர்க்க நான் வாய்
திறந்தால், அதனை அக்கணமே மூடிவிட
அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வைக்க - கூடவே
 
நானும் தவறிழைக்கலாம் என என்னையும் எண்ண வைக்க
புத்தாண்டுப் பிரமாணம் எடுக்கிறேன்.

நான்  பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.
அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்.

இவ்வையகம் விட்டு நாம் அகலும்போது நம்மை
நண்பனாய்நல்லவனாய் நினைக்க நால்வர் வேண்டும்.அல்லவா?

(வருகை தருவோர் அனைவருக்கும் என்  மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்)