விழாக்காலங்கள்
----------------------------
 |
| குருவாயூரில் ஓணம் |
எல்லாப்
பண்டிகைகளும் மக்கள் உறவுகளோடு கூடி மகிழ்ச்சியாய் இருக்கவே கொண்டாடப் படுகின்றன.
அதை ஏதோ அவதாரக் கதையின் மிச்சம் என்று
சொல்லும்போதுதான் மனம் கேட்பதில்லை நல் ஆட்சி கொடுத்த பரிபாலனம் செய்து வந்த
மகாபலிச் சக்ரவர்த்தி அசுர குலத்தில் பிறந்து விட்டான் அவன்
தான தர்மங்கள் செய்து சொன்ன சொல் தவறாமல் ஆட்சி புரிந்து வந்தான் அவனை
துஷ்ட நிக்ரஹம் என்று சொல்லி அவதாரம் எடுத்து மூன்றடி நிலம் கேட்டு வஞ்சித்துக்
கொன்றார் மஹாவிஷ்ணு இது கர்ண பரம்பரைக்கதை அல்ல ஒரு அவதாரக் கதை இதுபற்றி முன்பே எழுதி இருக்கிறேன் பார்க்க
இதெல்லாம்
பக்தர்களுக்குச் சொன்னால் பிடிக்காது அவர்கள் நம்பிக்கை அப்படியானால் நான் யார்
எடுத்துச் சொல்ல.- இருந்தாலும் நெருடலைத் தெரிவிக்கிறேன்
கேரளத்தில் சாதி மதம்பார்க்காமல் கொண்டாடப்படும்
பண்டிகை ஓணம் அதன் முக்கிய நோக்கமே
உறவுகளுடனும் நட்புகளுடனும் மகிழ்ச்சியாய்
இருப்பதே
நான்
சிறுவனாக இருந்தபோது வீட்டு வாசலில்
மாதேறு என்னும் உருவம் களிமண்ணால் செய்து தினம் வழிபடுவார்கள் அதைச் சுற்றி ஆட்டமும்பாட்டமும்
மிகுதியாய் இருக்கும் அந்தப் பண்டிகை வெகுவாக
மாறி இருக்கிறது மாதேறுவுக்குப் பதில் பூக்களங்கள் இடப்பட்டு ரசிக்கப் படுகின்றன.புள்ளினங்கள்
கூடுகளுக்குப் போவதுபோல் மலையாளிகள்
தத்தம் ஊருக்குச் செல்கிறார்கள்
என் இளைய மகன். அவனது மனைவியின் ஊரான சாலக் குடிக்குச் சென்றிருக்கிறான்
 |
| சாலக்குடியில் மருமகள் தாயாருடன் |
 |
| சென்னையில் மகன் வீட்டுப் பூக்களம் |
மகளுக்கு பட்டமளிப்பு விழா இருந்ததால் அவள்
செல்ல வில்லை ஓணம்பண்டிகை எங்களுடன் கழித்தாள்
 |
| எங்கள் வீட்டில் பேத்தி |
 |
| தாத்தாவுடன் பேத்தி |
 |
| சாலக் குடியில் பேரன் |
அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் என் நண்பரும் அவர் மனைவியும் அவர்கள் பணி நிமித்தம் சென்னை சென்று விட்டார்கள் எல்லோரும் ஓணாஷ்ம்சகள் என்று வாழ்த்துகள் பரிமாரிக்கொண்டோம்
இனிதாக பண்டிகை கழிகிறது
இது
ஒரு விழாக்காலம் விநாயகச் சதுர்த்தி முடிந்து முஹரம் ஓணம் இன்னும்
சில நாட்களில் நவராத்திரி. கலகல வெண்ரிருக்கும் எங்கள் தெரு பொழுது போக்க
உதவும் சில புகைப்படங்களை பகிர்கிறேன்
 |
| விநாயகர் எங்கள் தெருவில் விசர்ஜனத்துக்குப் போகிறார் n |