மனம்போன போக்கில் எழுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனம்போன போக்கில் எழுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 டிசம்பர், 2018

பெர்செப்ஷனே எழுத்தாக


                                 பெர்செப்ஷனே  எழுத்தாக
                                   -----------------------------------------
    யாருடி அவன்

2011ம்  ஆண்டு  ஐந்தும் இரண்டும்  என்னும் பதிவு எழுதி இருந்தேன் அதில் பின்னூட்டமாகதிருஜீவி சார் /நன்றாகவே இருக்கிறது, ஜிஎம்பி சார்!
அதை இன்னும் நன்றாகச் செய்வதற்காக சொல்ல வந்தேன்.

'ஹாலில் நான் சேரில் அமர்ந்திருந்தேன், பேருக்காக பேப்பர் பக்கங்களைப் புரட்டியபடி

வாசல் பக்கம் யாரோ நிற்கிற மாதிரி இருந்தது. சடாரென்று எழுந்து போய்ப்பார்த்தால்..' என்று கதையை ஆரம்பித்துப் பாருங்கள்.. அழுத்தமாக ஒரு சிறுகதை உரு கிடைக்கும் /  என்று பின்னூட்டமெழுதி இருந்தார்  அப்போது நானொருகற்றுக்குட்டி வலைப் பதிவர்
ஜீவியோ பழம்தின்று   கொட்டைப் போட்டவர்அவர் சொல்படிமுடிகிறதா  என்று பார்ப்போமே  என்று ஒருசிறுகதை எழுதினேன்  அதுவே ஏறி வந்தஏணி 
 அதற்கு பின்னூட்டமாக ஜீவி  /  ஹாலில்நான் சேரில் அமர்ந்திருந்தேன்.. என்று அந்த 'ஐந்தும் இரண்டும்' கதையை ஆரம்பித்து எழுதலாம் என்றால், ஒரு புதுக்கதையையே பிரமாதமாக எழுதிவிட்டீர்களே\ என்று எழுதி இருந்தார்
அண்மையில்  திருஜீவி/ 
இன்றைய உலக அரசியலில் மோடியின் பங்கு வியக்கத் தக்கதாயும் துணிச்சலாயும் நம் தேசத்திற்கு உலக அரங்கில் பெருமை தெடித் தருவதாகவும் இருக்கிறது.

பதிவு எழுத அருமையான காலத்திற்கு தேவையான டாபிக்.
முடிந்தால் முயற்சித்துப் பாருங்கள்./ என்று ஒரு பின்னூட்டமிட்டிருந்தார் ஆனால்கதை எழுதுவது கற்பனையில் விளைவது அரசியல் பிரமுகர் பற்றி எழுதுவது அது போலல்ல
 அரசியல்  எண்ணங்கள்  பெரும்பாலும்  ஏதோ பெர்செப்ஷனின்  அடிப்படையில் உருவாவது என் பெர்செப்ஷன் மோடியைப்பற்றி முற்றிலும்   வேறானது என் எழுத்தில் என் கருத்துகள் இடம்பெறும் 
மனதுக்கு ஒவ்வாததைஎன்னால் எழுத முடியாது இருந்தாலும்  மோடியைப் பற்றின என் எண்ணங்களைப் பகிரலாம் என்றிருக்கிறேன்
உலக அரசியலில் மோடியின் பங்கு வியக்கத்தக்கதாயும்   துணிச்சலாயும்  நம்  தேசத்திற்குபெருமை தேடித்தருவதாயும் இருக்கிறது  எனக்குத் தெரிந்தவரை  இதே மோடிக்கு உலக அரசுகள் வீசா மறுத்திருக்கின்றன இப்போதைய வரவேற்பு  அவர் இந்தியா என்னும்  பரமசிவன்கழுத்தில் இருக்கும்  பாம்பாக இருக்கிறார் என்பதாலேயே
சென்ற பிரதமரைப்பற்றி மோடி  மௌன்மோஹன்  சிங் என்பார்  ஆனால்மோடி நிறைய பேசுகிறார்  எல்லாமே ஒன் வே தான்  மன்கி பாத்  என்னும் நிகழ்ச்சி மூலம்   அவரிடம்யாரும்கேள்வி கேட்கக் கூடாது இதனாலேயே  பத்திரிகையாளர்களை  அவர் சந்திப்பதுஇல்லை அவர் பிரதமரான பிறகு ஒரு முறை கூட பத்திரிக்கையாளர்களை சந்தித்தது  கிடையாது 
2007ல்  என்று நினைவு மோடி குஜராதின்முதலமைச்சராக  இருந்த  நேரம்  கரன் தாப்பர் என்னும்  பத்திரிக்கையாளரின் பேட்டி மோடிக்கு கோபம் வந்து  பாதியிலேயே  எழுந்து விட்டாராம்

கோத்ரா கலவரத்தின்போது  அதைஅடக்க எந்தமுயற்சியும்   மோடி எடுக்க வில்லையாம்  மாறாக  ரயிலில் எரிக்கப்பட்ட கர் சேவக்குகளின்  சடலங்களை ஊர்வலமாகஎடுத்துச்செல்ல அனுமதித்தாராம்இந்தச் செய்தியை ஊர்ஜிதப்படுத்தும்விதம் எந்த  செய்தியும் கிடைக்கவில்லை சென்ற அரசு ஊழலில் சிக்கித் தவித்ததையே  சொல்லிக் காட்டப்படுகிறதுஅரசு மாறினால் இவர்கள்செய்த ஊழல்கள் அம்பலத்துக்கு வரும்  

தகவல் அறியும்   சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்தில் 80%அதிகமான தகவல்கள்  மறுக்கப்படுகின்றதாம்  ஆண்டு தோறும் ஏழைகளுக்கு  நூறு நாள் வருமானம்  வரும்படி தரும் MGNREG  இப்போது  செயல் படுகிறமாதிரி இல்லை  திட்டக் கமிஷன் என்னும் பெயரை  மாற்றி NITI AYOG  என்னும்  புதுப்பெயரில் அழைக்கப்படுகிறது மாற்றம் புதுபொலிவுடன் இயங்க என்னும் எண்ணத்தில் செயல் படுகிறதாம்   இதன் சொந்தக்காரர் மோடியேவாம் இம்மாதிரி பலபெயர்களை மாற்றி டிங்கெரிங்  செய்வதில் வல்லமை படைத்து விட்டார்கள் உ-ம் ஆதார்  எண் முதலில்மறுத்தவர்கள் இப்போது  நடை முறைப் படுத்துவதில் தீவிரம்காட்டுகிறார்கள் இப்போது எது செய்தாலும் அதன்  க்ரெடிட்  மோடிக்கே  ஆனால் அஸ்திவாரம் எழுப்பப்பட்டு இருந்ததை இருட்டடிப்பு செய்கிறார்கள் GSTயும்  அம்மதிரிதான்    பெரும்பான்மை பலத்தில்  இருப்பதால் எதையும் செய்யலாமென்று நினைக்கிறார்கள்
பெரும்பான்மையின்ர்  ஒரு கழுதையை குதிரை என்று சொன்னால் ஏற்கமுடியுமா இதைஎல்லாம்  எனக்கே இருக்கும் பெர்செப்ஷனில்தான் எழுதுகிறேன்
நிற்க  மேலே துவக்கத்தில்எழுதி இருக்கும்   யாருடி அவன் என்னும் தலைப்பில் ஒருசிறுகதை எழுதுவேன்  என்றுவாசகர்களை எச்சரிக்கிறேன் வாசகர்களும் முயற்சிக்கலாமே