Saturday, June 30, 2018

ஒரு பல்சுவைப் பதிவு


                                           ஒரு பல்சுவைப்பதிவு
                                            -------------------------------------
 சில அனுமானங்கள் தவறாகின்றன ஆண்டுக்கு ஒருமுறைதான் பூக்கும்
என்று நினைத்திருந்த பிரம்மகமலம் பூச்செடியில் ஒரே நேரத்தில்  பல மொட்டுகள அரும்பி இருந்தன அவற்றில் சில உதிர்ந்து விட்டன  இலையில் இருந்து அரும்பும் மலர்கள் இரவில் பத்து மணிக்குள் பூக்கின்றன என்றுதிருமதி ராமலக்ஷ்மியின் பதிவில்   படித்தேன்  இரவு ஒரு மணிவரை விழித்திருந்தும்  மொட்டு மலரவில்லை  ஏனோ தெரியவில்லை புகைப்படம் வெளிடுவதில் எங்கோ கோளாறு இருந்தது  சரி செய்து விட்டேன்   



                           -----------------------------------
என் வீட்டுக்கு வரும் பள்ளிக் குழந்தைகளுக்கு  என்னை பார்த்தாலேயே பயம் நான்  எதாவது கேள்வி கேட்டு விடுவேன் என்று பயம் பள்ளியில் மதிப்பெண் வாங்கப் படிப்பதன்கூட தெரிந்தும் படிக்க வேண்டும் என்றும் கூறுவேன்   உதாரணத்துக்கு  செண்டிகிரேட் அளவை ஃபாரன் ஹீட் அளவுக்கு மாற்றக் கேட்பேன்  உங்களுக்குஒன்று தெரியுமா செண்டிகிரேட் அளவும் ஃபாரன் ஹீட் அளவும் _40 டிகிரியில் ஒன்றுதான்  equinox  என்றால்  என்ன எப்போதுவரும்  வாசகர்களும்  தெரிந்து கொள்ளலாமே

                          ------------------------------------

Wilbur Sargunaraaj என்னும் பெயரைக் கேட்டிருக்கிறீர்களா யூ ட்யூபில் சென்று பாருங்கள்  சிலௌபயோகமான பதிவுகள் கிடைக்கும்  உதாரந்த்துக்கு இதைப் பாருங்கள் 
                                                 ------------------------------------------

திரை இசைப் பாடல்கள் பல பாட்டுகள் எனக்குத் தெரிவதில்லை ஆனால் தெரிந்த சிலபாடலகளை  உபயோகித்து ஒரு பதிவே எழுதி இருக்கிறேன்சுட்டியில் பாருங்கள்  நிச்சயம் ரசிப்பீர்கள்
                                      ---------------------------------------
சில இலக்கிய வரிகள் நினைவில்
பள்ளியில் கம்பராமாயணப் பாடல்கள் சில வரும்  அவற்றில் நினைவில் நிற்பவற்றுள் சில
கங்கை இரு கரைஉடையான்  கணக்கிறந்த நாவாயான் உங்கள் குலத்தனிநாதற்கு உயிர் துணைவன் உயர் தோளான்  வெங்கரியின்   ஏறனையான்  விற்பிடித்த வேலையினான்   கொங்கலறுந் நறுந்தொண்டார்க்கு  குகனென்னும் குறி உடையான்

 அஞ்சன வண்ணன் , என் ஆர் உயிர் நாயகனாளாமே   வஞ்சனையால் 
அரசெய்திய  மன்னரும் வந்தாரே செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ  உஞ்சிவர் போய் விடின்  நாய்குகன்  என்றென்னை  ஏசாரோ
 
எத்தனை எத்தனை பாடல்கள்  இலக்கண விதிகளுக்குஉட்பட்டு எழுத்யவை  ஹாட்ஸ் ஆஃப் டு கம்பர்   

அதிரப்பள்ளி  நீர் வீழ்ச்சி 

 கேரளத்தில்  சாலக்குடியில் என் சம்பந்தி இருக்கிறார்  அவர் எங்களை  அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி காண ஒரு முறை கூட்டிச்சென்றார்   வாழச்சால் எனும்  நீர்ப்பகுதியே (சாலக்குடி  ஆற்றின்   பகுதி) அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியாகிறது  வாழச்சால்நீர்  அதிரப் பள்ளி நீர்வீழ்ச்சியாக சுமார்  100 அடி உயரத்தில் இருந்து விழுகிறது பலரும்  வாழச்சாலில் இருந்தே  அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியைக் காணுகின்றனர் எனக்கு கீழே இருந்து  நீர் வீழ்ச்சியைக் காண் விருப்பம்   செங்குத்தான மலைப்பகுதியில் இறங்குவது மிகவும் கஷ்டம்  அதுவும்   வயதானவர் செய்யக் கூடாத ஒன்று என்று பயமுறுத்தினார்கள் நான் அடம்பிடித்துக் கீழே இறங்கி நீர் விழுவதைக்கண்டேன் புகைப்படங்கள் ஏதும்  எடுக்க வில்லை  இருந்தால் என்ன  கூகிளார்  இருக்கிறாரே  காணொளியைக் கண்டு ரசியுங்கள்  
                                              -----------------------------------------------------------  




 

    

Wednesday, June 27, 2018

SEARCH FOR TRUTH



                                              SEARCH  FOR TRUTH
                                              -------------------------------
(பதிவு சற்றே நீண்டு விட்டது  அதனால்  பொறுமை காத்து வாசிக்க வேண்டுகிறேன்  )

 பொழுதுபோகாதபோது நான் எழுதி இருந்த பழைய பதிவுகளையும்  பின்னூட்டங்களையும் படிப்பது வழக்கம் ஒரு பதிவுக்குபின்னூட்டமாக வந்திருந்த வரிகளே இப்பதிவுக்கு  காரணி
THE SOLE JUSTIFICATION FOR EXISTENSE IS THE SEARCH FOR TRUTH என்று காந்தியார் சொன்னதாக எழுதி இருந்தீர்கள்.
இதற்கான விடையை யாராவது கண்டு சொல்லி உள்ளார்களா?இது ஒரு முடிவான கருத்தா?
நீங்கள் இது பற்றி ஒரு பதிவு போட்டால் உங்கள் அனுபவம் பலருக்கு உதவும்.

ஆம் பதிவு எழுத  ஒரு விஷயம்கிடைத்து விட்டது கருத்திட்டவரின் கேள்வி என்னுள்ளும்   ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது  உண்மை  இதைப் படிக்கும்போது ஒரு குறளும்நினைவுக்கு வருகிறது
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின்  தோன்றாமை நன்று
SEARCH FOR TRUTH  முடிவு பெறக்கூடியதா ஆனால் பல கேள்விகளுக்கு விடை காண விழைந்திருக்கிறேன் என்பது மட்டும் நிஜம் எந்த கேள்விக்கும் விடைகள்தானாக வருவதில்லை ஒரு தேடல் இருக்க வேண்டும்  தேடும்போதே தெரியாததால்தான் தேடுகிறோம்என்னும் உணர்வு வேண்டும்   ஒருவர் தேடிக் கண்ட விடைempirical ஆக இருப்பதில்லை இருக்க வேண்டிய அவசியமும் இல்லை ஆனால் தேடிக்கண்டவிடைகளுக்கு ஒரு தனி மதிப்பு உண்டு
இந்த தேடலின் விளைவாக எழும் கருத்துகளை நான் அவ்வப்போதுபகிர்ந்துகொண்டிருக்கிறேன்  ஆனால் என்  அனுபவப்படி நான்  தேடிக் கண்ட விஷயங்கள் நான்பகிர்ந்தபடி புரிந்துகொள்ளப்படுவதில்லைஎன்றே தோன்று கிறது எழுதியதை விட யாரெழுதி இருக்கிறார் என்பதே புரிதலை திசை மாற்றிவிடுகிறதோ என்னும் சந்தேகமெனக்குண்டு  உதாரணத்துக்கு  வள்ளுவர்  தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின்  தோன்றாமை நன்று  என்று கூறி இருக்கிறார் பல அறிஞர்களும் உரை எழுதி இருக்கிறார்கள் ஆனால் படித்தவுடன் நினைவுக்குஅதில் கண்டபடி வரும் உரை 
 பிறந்தால் புகழுடன்  பிறக்க வேண்டும்  இல்லையென்றால் பிறக்காமல் இருத்தல் வேண்டும் புகழ்பெற முயற்சி செய்தல் அவசியம் ஆனால் பிறக்கும் போது புகழுடன் பிறப்பது நம் கையிலா இருக்கிறது இதை நான்  எழுதினால் தர்க்கம்  செய்கிறேன் என்பர்  நான் இவ்வாறு கூறுவதே என்தேடலின் படியாகும்  எதையும்  எப்படியும்  ஏற்றுக் கொள்ளும்  மனோபாவம் எனக்கில்லை ஆனால் பொதுவாக கேள்வி கேட்காமல் வழக்கத்தில் நிலவி வருவதை ஏற்றுக் கொண்டால்  தேடல் எங்கிருந்துவரும் உண்மையைத் தேடும்போது அது மனம் கேட்கும் கேள்விகளுக்கு  பதில் சொல்ல வேண்டும்  அப்போதுதான் அந்த தேடல் முற்றுப் பெறும்
பொதுவாக ஜீவாத்மா என்றும் பரமாத்மா என்றும் சொல்கிறார்கள் என்ன என்று தெரியாமலேயே  நாமும்  வழிமொழிகிறோம்   எனக்குள் அது வேறு கேள்விகளை எழுப்பியதுஅதுவே என்னை ஜீவாத்மாவும் பரமாத்மாவும் என்னும் பதிவைஎழுத வைத்தது      
சுட்டி இதோ ஜீவாத்மா  வலையில் படிப்பவர்களுக்கு பொறுமை இருப்பதில்லை  சுட்டி தேடிப் போகமாட்டார்கள் அவர்களுக்காக அந்தப் பதிவ்ன் சாராம்சம்
உருவமே இல்லாத எனக்கு ஆயிரம் உருவங்களும் பெயர்களும் கொடுத்து உண்மை என்று நம்பும் கற்பனைத் திறன்தான் உங்களுக்கெல்லாம் இருக்கிறதே. “
“ சரி. உண்மைதான் என்ன.? “
“ உன் ஆழ்மனதில் , ஜீவாத்மா பரமாத்மாவிடம் ஐக்கியமாகத் துடிக்கிறது.உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மனம் விழைகிறது.
ஜீவாத்மா பரமாத்மா என்று ஏதோ புரியாமல் சொன்னால் எப்படி.? 
“ பரமாத்மா என்பது எங்கும் வியாபித்திருக்கும் பிராண வாயு.ஜீவாத்மா என்பது ஒருவனை இயக்கும் பிராணவாயு..அது அவனை விட்டு வந்தால் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விடும்.
“ அனாதி காலம் முதல் தேடிவரும் கேள்விக்கு மிக எளிதாகப் பதிலாக ஏதோ கூறுகிறாயே.
 மக்கள் மத்தியில் ஒரு கதை உலாவுவது தெரியுமா.? ‘ அமாவாசை இரவில் ,விளக்கில்லா அறையில், கருப்புப் பூனையைத் தேடும் குருடன் போல ‘என்று. அதுபோல்தான் அவரவர் கற்பனைக்கு  ஏற்றபடி கதைகள் புனைகிறார்கள்.
நான் தேடியபோது மனதில் பட்டதைக் கூறினேன் ஒரு பின்னூட்டம் ரசிக்க வைத்தது

ஜீ“வாத்மா பரமாத்மா தத்துவத்துக்கு மிக அற்புதமாக எளிமையான வியாக்யானம் கொடுத்துவிட்டீர்கள் பாலு சார்.

இன்று பூராவும் ஊதுவத்தி அணைந்தபின்னும் வெளியெங்கும் கமழும் சுகந்தமாய் உங்கள் சிந்தனையின் வீச்சு என்னைச் சூழ்ந்திருக்கும்.

நல்ல எழுத்துக்கு ஒரு நமஸ்காரம்.
என் எண்ணங்கள் பலருக்கும்  ஒவ்வாமல்  போகலாம்  ஏன்  என்றால் அவர்களால் சுயமாக சிந்திக்க முடியவில்லை  காந்திஜியின்  search  for truth  என்பதற்கு என் வழியில் தேடிகண்டது
 என் சிந்தனைகள் சற்று வித்தியாசமாய் இருக்கும்  பொதுவான பீட்டென் ட்ராக்கில் இல்லாமல் வேறு மாதிரி இருக்கும்  என்று சிலருக்குப் புரியும் மரணத்துக்குப்பின்   என்ன என்னும்  விதத்தில் ஒரு நண்பர் கேட்டிருந்தார்
 சாதாரணமாக வயதானவர்கள் எல்லோரும் ' நான் போய்ச்சேரகாத்திருக்கிறேன் ' என்று கூறுகிறார்கள் .what do you know about that ..place/living..?Do you expect to meet/see those who predeceased you..what else do you know about post-mortam status...As you are a man of deep thoughts , i am sure what you share on this subject 
இதற்கு பதிலாக நானும் ஏதாவது எழுதி மழுப்பி இருக்கலாம்  ஆனால் என்னுள் உறையும்   சில கேள்விகளுக்கு விடை காண முயலும் பதிவாக உரதத சிந்தனை சில தேடல்கள்  என்று பதிவு  எழுதினேன்  பொதுவாகவே  தேடல் என்றாலேயே உண்டா இல்லையா என்று தெரியாத ஒருகடவுளைப் பற்றிய தேடலாகதான்   பலரும்  எண்ணுவார்கள்  சுட்டிகள் தருகிறேன்   படித்துப் பாருங்கள் உரத்த சிந்தனைகள்  
   தொடரும்    பதிவில் வரும் சில வரிகள் உங்களுக்காக

          எப்பொருளையும் ஆக்கவோ அழிக்கவோ இயலாது.
          ஆக்கலும்  அழித்தலும் வெறும் தோற்றமே.,
           உண்மையோ முன்பிருந்த நிலையின் மாற்றமே.
           இது விஞ்ஞானம்  கூறும் தேற்றமே. 

இருளும் ஞாயிறும் விடியலும் 
மாற்றமிலா நிகழ்ச்சி போல் தோன்றினும்
நேற்று போல் இன்றில்லைஇன்று போல் 
நாளையில்லை,இது நாமறியும் உண்மையே. 

           விஞ்ஞானக் கூற்று உண்மையாயின்
            நேற்றிருந்த என் அப்பன் என்னானான்.?
            யாதாக மாறினான்.?உடலம் வெந்து 
            சாம்பலாயிருக்கலாம்இல்லை மண்ணில் 
            மக்கிக் காணாதிருக்கலாம்.ஆனால்,
           அப்பனாக எனக்குத் தெரிந்த அவன் 

            எங்கே என்னவாக மாறினான்,?


இன்று  நானாக அறியப்படும் நான் நாளை 
என்னாவேன்சாம்பலோ மண்ணோ  அல்லாமல்.
உயிர் என்ற ஒன்று இருந்ததால்தானே 
என் அப்பன்  அப்பனாகவும்நான் 
நானாகவும் அறியப்படுகிறோம்.?



அந்த உயிரென்று அறியப்படுவது எங்கே உள்ளது.?
ஆன்மா என்றழைப்பின்  அதுவும் எங்கே  உள்ளது. ?
யுகயுகமாய் உலவி வந்த உயிர்களின் ஆன்மாக்கள் 
எண்ணிக்கையில் மாற்றம் இருக்கக் கூடாதே
விஞ்ஞானக் கூற்றுப்படிவிஞ்ஞானம்  விளங்க வில்லை

            ஊனென்றும் உயிரென்றும் ஆன்மா என்றும்
            ஆயிரம்தான் கூறினாலும்அதெல்லாம் ஒன்றின் 
            வியாபிப்பே என்று மெய்ஞானம் கூறுகிறது. 

அறிந்தவர்கள் என்று அறிந்தவர்கள் கூறும் 
மெய்ஞான சூக்குமம் வசப்படும் முன் நானும் 
மண்ணோடு மண்ணாய்  மக்கிப் போவேன். 
அறிய முற்படுவோர் நிலையும்  அதுதான்.அதுவரை ஹேஷ்யங்கள்தான் 

            என்றோ எவனோ வரைந்து முடித்த வட்டத்தின் 
            தொடக்கப்புள்ளி தேடி ஏன் சோர்வுற வேண்டும்.?
            அறியாமை இருளில் இருப்பதே சுகம். 

அண்ட வெளியே இருட்டின் வியாபிப்பு 
அதில்  ஒளி  தருவதே ஞாயிறின் ஜொலிப்பு 
அறியாமையும் அவலங்களுமாய் இருண்டிருக்கும்
வாழ்வியலில் நம்பிக்கையே ஞாயிறின் ஒளி.


             ஹேஷ்யங்களும் கேள்விகளும் எனைத் துளைக்க 
             ஞாயிறின்  விடியலுக்காகக் காத்திருக்கிறேன்.
மேலே நான் குறிப்பிட்டு  இருக்கும் நம்பிக்கைக்கு  வெகு ஜனப் புரிதல்   வித்தியாசப் படுகிறது

தேடல் இன்னும்  முற்றுப்பெறவில்லை ஆனால் ஏன்  நாம் ஒரு வட்டத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறோம்   என்னும் கேள்விக்கு பதில் காண முயலுகையில் நாம் நம்மை அறியாமலேயே சின்ன வயதிலேயே மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை திரு அப்பாதுரை அவர்களின் ஒருபதிவின் மூல்ம்தெரிந்துகொண்டேன்
மனதளவில் நாம் அடிமைகள் ஆகி விட்டோம்   காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் செய்திகளுக்கு நம்மை அறியாமலேயே அடிமையாய் இருக்கிறோம்

"அடிமைத்தனம் என்பது.. ஏன் செய்கிறோம் என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப ஈடுபடுவது.."

"
எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"

"
ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"

"
ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"

"
விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."

"
தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளைஇனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."

"பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"

"
மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."

"
அறியாமல் செய்த தவறைஅறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."

பதிவின் நீளம் அதிகமாகிப்போகிறதுவாசிக்க மாட்டார்கள் என்னும் பயமும்  உண்டு  இருந்தாலும்  ஒரு செய்தியோடு முடிக்கிறேன்  செர்ச்  ஃபர் ட்ருத்  என்பது தொடர்ந்து செய்யப்பட வேண்டிய ஒன்று  அதற்கு

When trying to create new ideas ,and thoughts we always get into the trap of what we have learnt and known. To chart new territories and new ideas the most important thing is to unlearn what we have known.Otherwise we will never be able to chart new path. Staying focused and being conscious of unlearning things is essential Realising and working hard on that--very difficult though.






Sunday, June 24, 2018

இன்னும் இன்னும்

         
                                இன்னும்  இன்னும் 
                              ------------------------------------


பெண்களைப் பற்றி நிறையவே எழுதி இருக்கிறேன்  இர்ந்தாலும் முற்றிலு புரிதல் இல்லையோ என்னும் சந்தேகம்  எழுகிறது இப்போதுபெண்களைப் பற்றிய  இன்னொரு கோணம்  இதை எழுதும்போது வியப்புதான் மேலிடுகிறதுபெண்ணே நீ ஒரு புதிர் பல பெண்களுக்கு  ஒப்புதல் இருந்தாலும்   இப்பதிவின் கருத்தோடு ஒத்துப்போக மனம்  சொன்னாலும் வெளிப்படையாக  ஒத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள் என்றே தோன்றுகிறது ஒருவேளைஅதுவும் பெண்களின் குணதிசயங்களில் ஒன்றோ  இதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் எப்போதோ எனக்கு வந்த மின்னஞ்சலின்  அடிப்படையில் கூறப்பட்டவை

நியூ யார்க்கில் புதிதாக ஒரு விற்பனையகம் தொடங்கப் பட்டது
அங்கு கணவர்கள் விற்பனைக்கு என்று அறிவிக்கப்பட்ட பலகை
யில் கணவரைத் தேர்ந்தெடுக்க சில விவரங்கள் இருந்தது.

நீங்கள் ஒரு முறைதான் கடைக்கு வருகை தரலாம்


ஆறு மாடிகள் உள்ள இக்கட்டிடத்தில் கணவர்களின் தகுதிகள்
ஒவ்வொரு மாடியின் நுழைவாயிலில் எழுதப்பட்டு இருக்கும்
அங்கிருந்து ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.அல்லது
அடுத்த மாடிக்குச் சென்று அங்கிருந்து தேர்ந்தெடுக்கலாம். ஒரு 
மாடியிலோ அல்லது அடுத்த மாடியிலோ கணவரை வாங்கலாம்.
ஆனால் ஒரு விதி.! ஒரு தளத்தை விட்டு வெளியே வந்தால் 
மீண்டும் அத்தளத்துக்கு வர அனுமதி கிடையாது 


ஒரு பெண் கணவனை வாங்க அக்கடைக்குச் சென்றார். முதல் 
தளத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது


தளம்..1.:-இதிலுள்ள ஆண்கள் பணியிலிருப்பவர்கள். கடவுளை 
                   நேசிப்பவர்கள்.
                  (இதை விட்டு அடுத்த தளம் சென்றாள்)

தளம் 2:- இதிலுள்ள ஆண்கள் பணியிலிருப்பவர்கள் கடவுளை 
                  நேசிப்பவர்கள். குழந்தைகளிடம் அன்பாயிருப்பார்கள் 
                  (இதையும் விட்டு அடுத்த மாடிக்குச் சென்றாள். )


தளம் 3:-இதிலிருக்கும் ஆண்கள் பணியிலிருப்பவர்கள்.கடவுளை 
                 நேசிப்பவர்கள் குழந்தைகளிடம் அன்பாயிருப்பார்கள்.
                 அழகாயிருப்பார்கள்


வாவ்.  மேலே பார்க்கலாம் . எப்படி என்றுஎன நினைத்துக்
கொண்டே நான்காவது மாடிக்கு வருகிறாள்.

தளம் 4:-இதிலுள்ள ஆண்கள் பணியிலிருப்பவர்கள்.கடவுளை 
                நேசிப்பவர்கள்.குழந்தைகளிடம் அன்புள்ளவர்கள்.
                வசீகரிக்கும் ஆணழகர்கள். வீட்டுப் பணிகளில் உதவி
                செய்வார்கள்.


ஆர்வம் மேலிட அடுத்த தளத்தில் என்ன சிறப்பு என்றறிய
ஐந்தாவது மாடிக்கு வருகிறாள். விழிகள் விரியப் படிக்கிறாள்.


தளம் 5:-இதிலுள்ள ஆண்கள் பணியில் இருப்பவர்கள். கடவுள் 
                 பக்தி உள்ளவர்கள். குழந்தைகளிடம் பிரியமாய் இருப்
                 பவர்கள். வசீகரிக்கும் ஆணழகர்கள் விட்டு வேலை
                 களில் ஒத்தாசை செய்பவர்கள். சிறந்த காதலர்களாக
                 இருக்கும் தகுதி பெற்றவர்கள்



அடுத்த மாடியில் இன்னும் சிறந்த கணவன் கிடைக்கலாம் ,
என்னும் எதிர்பார்ப்புடன் ஆறாவது தளத்துக்குச் செல்கிறாள்.
அங்கே....


தளம் 6:-நீங்கள் இத்தளத்துக்கு வரும் 4,363,012-ஆவது நபர்
                இந்தத் தளத்தில் கணவர்கள் விற்பனைக்கு இல்லை
                பெண்களை திருப்தி செய்ய முடியாது என்று நிரூபிக்
                கவே இந்த மாடி.


                கணவர்களை விற்பனை செய்யும் கடைக்கு நீங்கள் 
                வருகை புரிந்ததற்கு நன்றி. படிகளில் இறங்கும் போது
                கவனமாயிருங்கள். இது நல்ல நாளாயிருக்கட்டும்.
                 -------------------------------------------------------------------------------