Saturday, November 28, 2015

சென்னைக்கும் எனக்கும் ராசி இல்லை


                                சென்னைக்கும் எனக்கும் ராசி இல்லை.
                                -------------------------------------------------------------



நவம்பர் மாதம் 10-ம் தேதி தீபாவளி  11-ம் தேதி என் பிறந்த நாளும் மண நாளும்ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் இருந்தேன்  தீபாவளி கொண்டாட்டம் எல்லாம் முன்னைப் போல் இல்லை. என் பிள்ளைகள் சிறுவர்களாக  இருந்தபோது காலை எப்போது விடியும் எப்போது வெடிச் சத்தம் கேட்கும் என்னும் நினைப்பில் பாதி நேரம் உறங்காமலேயே இருப்பார்கள். காலை சுமார் நான்கரை  மணிக்கு எங்காவது முதல் வெடிச்சத்தம்  கேட்டால்  என்னை எழுப்பி விடுவார்கள் முதலில் நான் எழுந்து  ஒரு வெடியை வைத்து தீபாவளியை வரவேற்போம்  முதலில் ஐந்து மணிக்குள்ளாக நான்

பிள்ளைகளுக்கு தலையில் எண்ணை  வைத்து விட என் மனைவி அவர்களை வெந்நீர் ஸ்நானம்  செய்விப்பாள்.  புதுத் துணிகள் அணிந்து அவர்கள்  பட்டாசு வெடிக்கக் கிளம்பிவிடுவார்கள் சரவெடிகளைப் பிரித்து ஒவ்வொன்றாக்கி வெடிப்பார்கள் அப்போதுதானே நீண்ட  நேரம் வெடித்துக் கொண்டிருக்க முடியும் பிறகு காலை ஆகாரம் இனிப்புவகைகளுடன்  ஹூம்….! அந்தக் காலம் எல்லாம் மலையேறி விட்டது
இப்போதெல்லாம் தீபாவளி இன்னொரு விடுமுறைநாள். நிதானமாக எழுந்து, எங்காவது பட்டாசுச் சத்தம் கேட்டால் அவர்களை நாய்ஸ் பொல்யூஷனுக்காக வைது கொண்டு / வழக்கம் போல் காலை உணவு அருந்திகொண்டு டீவி முன்னால் நிகழ்த்தப்படும் பட்டி மன்றங்களை ரசித்துக் கொண்டு, என்ன ஆயிற்று இந்த தலை முறையினருக்கு. ?

என்னைப் பொறுத்தவரை தீபாவளி போன்ற தினங்களில் மகன்களும் பேரக் குழந்தைகளும் அருகிருந்து எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தாலேயே போதும் / ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கென்று அவர்களுக்கு ஏதாவது புதுத் துணி வாங்கிக் கொடுப்பது வழக்கம் . அதை அவர்கள் உடுத்துவதைப் பார்ப்பதே மகிழ்ச்சி. ஆனால் அதை உடுத்தி என்னை மகிழ்விக்கும் எண்ணமே இல்லாதது போல் இருப்பார்கள் இந்த முறை என் மச்சினனும் ( எனக்கு அவனும் ஒரு மகன் போல ) வந்திருந்தான்  ஆனால் நான் முழு சந்தோஷமும் அனுபவிக்கக் கூடாதே. என் இரண்டாம் மகன் எட்டாம் தேதி காலை கேரளாவுக்குப் போய் BUDDY ஐ கொண்டு வர இருந்தான் அவன் வந்து சேரவே மாலை மணி மூன்றாகி விட்டது( அவன் வந்தது நாயைக் கொடுக்கப் போனது பற்றி எல்லாம் என் சென்ற பதிவில் எழுதி இருந்தேன் )என் இரண்டாம்
பேரனுக்கு பட்டாசு வெடிக்க ஆசை பத்து வயதுதானே ஆகிறது ஆனால் அது எதுவும் இருக்கவில்லை. விடியலிலிருந்தே மழை தூறிக் கொண்டு இருந்தது. மேலும் பட்டாசுகள் ஏதும் வாங்கவில்லை. ஆக பட்டாசு இல்லாமல் விடியற்காலை எண்ணைக் குளியலும் இல்லாமல்  தீபாவளி கழிந்தது. அடுத்தநாள் 11-ம் தேதி காலையிலேயே சென்னை செல்ல என் மூத்தமகன் திட்ட மிட்டு இருந்ததால்  அன்றைய பிறந்த நாள் கொண்டாட்டங்களும்  ஏதும் இல்லாமல் போயிற்று. ஒரு முறை கில்லர்ஜி உங்கள் 100-வது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புவீர்கள் என்று கேட்டிருந்தார்  என் 77-வது பிறந்தநாளே உப்பு சப்பில்லாமல் போய் விட்டது ஆக தீபாவளியும் பிறந்த நாளும் இன்னொரு நாளாகிப்போனது
வாழ்க்கையின் சில நிகழ்வுகள் திட்டமிடப்படாமலேயே நடந்தேறுகிறது எனக்கு பிரயாணம் பிடிக்கும்/ அதுவும் நாம் செல்லும் வாகனம் நம் கட்டுக்குள் இருக்கும்போது பயணிப்பது இன்னும்  பிடிக்கும்  சுமார் 12- மணி அளவில் கிருஷ்ணகிரி அருகே இருந்த ஏ2பி யில் காஃபி அருந்தினோம்  மதிய உணவை போகும் வழியில் எங்காவது பார்த்துக் கொள்ளலாம்  ஆம்பூரில் என் பேரன் பிரியாணி வாங்கிக் கொண்டான்   சாலை நன்றாக இருந்தாலும் ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருந்ததால் சற்றுநிதானமாகவே போனோம் மாலை ஆறரை மணிவாக்கில் சென்னை சென்றடைந்தோம் சென்னை நெருங்க நெருங்க மழை வலுத்துக் கொண்டிருந்தது. ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.வீடு வந்து சேர்ந்ததும் ஒரு ஃபோன் கால். திரு ரிஷபன் ஸ்ரீநிவாசன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னார்எதிர்பார்க்காத மகிழ்ச்சி.   சற்றே ஆசுவாசப் படுத்திக் கொண்டு என் மகன் கடைக்குப் போய் இட்லி பார்சல் வாங்கி வந்தான்  மழையும் விட்டு விட்டு வந்தது.  12-ம் தேதி என் மருமகள் என் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கேக் செய்தாள் கேக் வெட்டி என் பிறந்தநாள் ஒரு நாள் தாமதமாகக் கொண்டாடப்பட்டது. இந்த முறை சென்னையில் பலரையும்  சந்திக்க வேண்டும் என்றிருந்தேன் வெயிலினால் என் சென்னை வருகை தாமதப் பட்டுக் கொண்டிருந்தது நான் ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் மழையும் கூடவே வருகிறது ஓரிரு நண்பர்களுக்கு நான் வந்து விட்ட செய்தியை தொலைபேசியில் சொன்னேன் சந்தர்ப்பம் சரியானால் சந்திக்கலாம் என்றார்கள்
13-ம் தேதி என் பழைய நண்பரும் அவரது மகனும் மருமகளுடன் என்னைச் சந்திக்க வந்தார்கள் மறு நாள் நண்பரின் வீட்டுக்குவருவதாகச் சொன்னேன் அஷோக்நகரில் அவர்கள் இருந்தார்கள் அங்குதான் திரு ஜீவி இருக்கிறார்  என்று ஸ்ரீராம் சொல்லி இருந்தார்.  அஷோக் நகர் போகும் போது அவரையும் சந்திக்கலாம் என்று நினைத்தேன்  நான் இதுவரை சந்திக்காத நண்பர் அவர்
எங்களை உத்திர மேரூர் என்னும் இடத்துக்குக் கூட்டிப்போவதாகக் கூறினான் மகன் எல்லா திட்டங்களும் மழைமுன் தவிடு பொடியாகிவிட்டதுஅன்று ஃபினிக்ஸ் மாலில் கமலஹாசனின் தூங்காவனம் திரைப்படம் இரவு நேரக் காட்சியாகக்  கண்டோம் கடைசியாக நான் மேஜர் ரவியின் காந்தஹார் படத்தை அவர் அழைப்பின் பேரில்  ப்ரிவியு வாகத் திரை அரங்கில் கண்டது. அதன் பின் இது.  நான் விமரிசனம் ஏதும் எழுதப் போவதில்லைபடம் நன்றாக இருந்தது என்று மட்டுமே கூறுவேன்


மறு நாள் குரு நானக் கல்லூரி அருகே என் இன்னொரு பழைய நண்பர் ஒருவர் இருக்கிறார் என்று தெரியவந்து அவரைப் போய்ப் பார்த்தோம் அப்போதே அவர் வீட்டின் முன் மழை நீர் தேங்கத் துவங்கி இருந்தது. அன்றிரவு மழை விடாமல் பெய்து  ஒரு ரெகார்ட் ஏற்படுத்திவிட்டது. பின் என்ன  எங்கும் மழையும் நீர்த்தேக்கமும்  வீட்டுக்காவலில் இருப்பதாகவே உணர்ந்தோம்  தொலைக்காட்சி செய்திகள் திருப்தி அளிப்பதாய் இல்லை.  ஸ்ரீராம் தண்ணீரால் அவதிப்படுவதாக அறிந்தேன் தில்லையகத்து கீதா திரு செல்லப்பா ஆகியோர் மழை விட்டால் சந்திக்கலாம் என்றார்கள்.  கல்னல் கணேசனுடன் தொலை பேசியில் பேசினேன்  அவரும் மழை பற்றிக் குறை பட்டுக் கொண்டார்.மழை நீர் தேக்கத்துக்குப் பெயர் போன வேளச்சேரியில்  நாங்கள் இருந்த அடுக்குமாடி குடி இருப்பு அருகே 100 அடிச்சாலையில் மழை நீர் அதிகமாகத் தேங்கவில்லை. ஆனால் சுற்றி இருந்த இடங்கள் எல்லாம் நீர்மயம் தான்
மழை குறையும் அறி குறியே இருக்கவில்லை. மேலும் மேலும் மழை நீடிக்கும் என்றே தகவல்

எத்தனை நேரம்தான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்க முடியும்  என் உபயோகத்துக்காகக் கணினி கிடைக்கவில்லை வலை உலகில் நடப்பது ஏதும் தெரியவில்லை.  எப்படா பெங்களூரு போய்ச் சேருவோம் என்றாகி விட்டது புத்தகம் படிக்கலாமென்றால் படிக்கும் போது கண்முன்னே நிழலாடி படிக்க முடியாமல் செய்கிறது இந்த விடுமுறையிலும்  ஒருகைவேலைக் கற்றுக்கொண்டேன். அது பற்றி அடுத்தபதிவில்
இனி சில புகைப்படங்கள் எடுத்த ஓரிரு காணொளிகள் அப்லோடாவது மிகவும் தாமதமாவதால் பதிவிடவில்லை. 

belated birthday cake

finishing touches
friend near guru nanak college

friend' s family who visited us

with my first grandson
a selfie photoo being taken
 குடி இருப்புக்கு முன்னால் 100 அடி சாலை மழையின் போது