Saturday, July 28, 2018

மதுரை மாநாட்டில் என் னுரை

     முகநூலில் வெளியிட்டிருந்த என் உரையை இங்கே பதிவாக்குகிறேன் இதுவும் ஒரு வகையில் நினைவு மீட்டல்தானே கொடுக்கப்பட்ட லிங்கை சொடுக்கிப் படிக்கலாம்/ பார்க்கலாம்

 speech 



மதுரை வலைப் பதிவர்  மாநாட்டில் நான் ஆற்றிய உரையின் காணொளி முகநூலில் 2014ல் பகிர்ந்திருந்தது  இப்போதும் அதில் காணும் செய்திகள் relevant ஆக இருப்பதுபோல் தோன்றியதால் இப்பதிவு 

இதைப்படிக்க அல்லது பார்க்க முத்லில் face book ல் லாக் இன் செய்ய வேண்டி இருக் கும்   

Wednesday, July 25, 2018

FROM ADOLESCENCE TO ADULTHOOD




FROM adolescence to adulthood


அந்த வயதில் 


எழுதுவதற்கு பொருள் தேடும் போது உதித்த ஐடியாதான் இது  வாழ்க்கையில் பல பருவங்கள் உள்ளன. ஓரோர் பருவதிலிருந்தும்   இன்னொரு பருவத்துக்கு மாறுவது இயல்பு ஆனால் எந்தநிகழ்வு அந்த மாற்றங்களை உணர்த்துகிறது  என்பது பெரிதும் சிந்தனையில் இருப்பதில்லை
சரி . நினைவில் இருப்பதை உணர முடிகிறதா
ஏன் இல்லை தவழும்பருவத்திலிருந்து நடக்கும் பருவம்நிகழ்வது நினைவில் இல்லாமல் போகலாம்  ஆனால் பள்ளிக்கு போய் வரும் அனுபவம் நினைவுக்கு வரலாம்  காதலிக்கும் பருவமும் காதல் தோன்றிய கணங்களும்  காதல் மனைவியுடன் தனித்து விடப்பட்ட நேரங்களும்மறக்காது என்று தோன்று  நினவில் நிற்கும்  சில நிகழ்வுகள் பருவ மாற்றத்தை தெரியப்படுத்தலாம் இப்பதிவுக்கு எழுத நான் நினைக்கும் பருவ மாற்றம் பிள்ளைப் பிராயத்திலிருந்து பெரிய மனிதன் ஆகும் பருவமாகும்
உனக்கு அந்தமாதிரி மாற்றம்தெரிவித்த நிகழ்வுகளை அசை போட்டுப் பாரேன்
 இதைப் படிக்கும் போதுசிலருக்கு இது ஏற்கனவே படித்ததாக தோன்றலாம்  எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பற்றி எழுதி வரும் எனக்கு எழுதியதை விட்டு விட்டு  புதியதாகக் கற்பனை செய்துஎழுத முடியுமாசில சம்பவங்கள் அப்படித்தோன்ற வைக்கலாம்
இப்போது என்ன சொல்ல வருகிறாய்
ஒன்றும்சொல்ல வரவில்லை  பருவ மாற்றங்கள் நிகழ வைத்த சில சம்பவங்களைக் கூறப்போகிறேன் அவ்வப்போது கேள்விகளைக் கேள்  ஒரு வேளை அவை ஒரு கோர்வையாகச் சொல்லவைக்கலாம்  பிள்ளைப்
 பருவத்திலிருந்துஆண்மகனாக உணர வைத்த சில சம்பவங்களை எடுத்து விடேன்
நான் முதன் முதலாக வேலைக்குபோனபோது  நான் இன்னும் சிறுவன்தான் வளர்ந்த ஆண்மகனல்ல என்று கூறி எனக்கு வேலை கொடுக்காமல் திருப்பி அனுப்பினார்கள்
ஐயையோ பாவமே
உனக்குத் தெரியாது அந்த வலி எத்தனையோ கனவுகளுடன்   அரை நிஜாரிலிருந்து முழுக்கால் சராய்க்கு மாறி ஷூ அணிந்து  பெரிய மனுஷனாகக் காட்டிக் கொண்டாலும்  எதிரே இருப்பவர் என்னை எளிதில் யூகித்து  சின்னப்பையன் உன்னை  வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாது என்று நிராகரித்தபோது உண்மையிலேயே நான் சின்ன பிள்ளை மாதிரி அழுததே நான் சிறுவன் என்று காட்டிக்கொடுத்துவிட்டது
எப்போதுதான்  பெரிய மனுஷனாய் மாறினாய்
 நான் எங்கே மாறினேன்   என்னை மாற்றினார்கள் அதைத்தான் கூறப்போகிறேன்
பெங்களூரில் முதன்முதலாக  ஒரு வேலை கிடைத்தது உபயம் என் அக்காவின் மாமனார்  ஆனால் அந்தோ பரிதாபம்  ஒரு மாதம்  வெயிலில் நின்று உழைத்ததற்கு  சம்பளம் கிடைக்கவில்லை சின்னப் பையன் தானே என்று நினைத்தார்கள் போலும்  வேலை கேற்ற கூலி இல்லை என்றார்கள்  பார்க்க பூர்வ ஜன்ம கடன்
சின்ன வயதில் நிறையவே  ஏமாந்திருக்கிறாய் போல இருக்கிறது
ஏமாற்றம் என்று சொல்ல மாட்டேன்  எல்லாமே அனுபவ பாடங்கள்
You are digressing too much man தலைப்பை மறந்து விட்டாயா
இல்லை இல்லை ஒரு சேதி சொல்ல சில அடித்தளங்கள் தேவை என்று தோன்றியது
அப்பாவை நச்சரித்து மீண்டும்வேலை தேடத் தொடங்கினேன்
       கூனூரில் ஒரு ஓட்டல். மைசூர் லாட்ஜ் என்று பெயர். அதற்கு ஒரு அன்னெக்ஸ் கூனூர் ரயில் நிலையத்துக்கு எதிரில், சுமார் நூறு அடி உயரத்தில் இருந்தது. அதன் உரிமையாளர் கிருஷ்ண போத்தி. அங்கு வேலை செய்ய ஒரு படித்த , சற்றே ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்கும் இளைஞன் தேவை என்றும் தெரிவித்திருக்க, அப்பா அவரிடம் பேசி இருக்கிறார். என்னையும் அறிமுகப் படுத்தினார். என்னை வேலையில் சேர்த்துக் கொண்டார்கள். வாரம் ஆறு நாட்கள் வேலை. அங்கேயே தங்கி இருக்கவேண்டும். ஞாயிற்றுக் கிழமை வீட்டிற்குப் போய் வரலாம்.என் செலவு போக மாதம் ரூ.25/-சம்பளம். வேலையில் சேர்ந்து விட்டேன். அங்கு நான் தங்கி இருந்த நாட்கள் என்னை சிறிய பையனிலிருந்து, ஒரு இளைஞனாகவும் உலகம் தெரிய வழி செய்யும் வகையிலும் அமைந்தது.

                  காலையில் ஆறரை ஏழு மணிக்குள் நான் தயாராகி, கல்லாவில் இருக்க வேண்டும். சாதாரணமாக உள்ளஓட்டல்களிருந்து, சற்றே வித்தியாசப் பட்டதாக அமைந்திருந்தது. மேசை நாற்காலிகளுக்குப் பதில் சோஃபா.டீபாய்.இருக்கும்.  ஒரே நேரத்தில் இருபது நபர்களுக்கு மேல் சேவை செய்ய முடியாது. அங்கு அறை வசதிகள் இருந்தன. மாத வாடகைக்குத் தங்குபவர்கள் சிலர் இருந்தனர். ஒரு நாள் இரு நாள் தங்கிச் செல்வோரும் இருந்தனர். மொத்தத்தில் சற்றே போஷ்  ஆன இடமாக இருந்தது. என் வேலை கல்லாவைக் கவனித்துக் கொள்வதும், அறையில் தங்குபவரின் தேவைகளை பார்த்துக் கொள்வதுமாக இருந்தது. கூனூரின் மேல்தட்டு மத்தியதர  மக்கள் வந்து போயினர். அதிகக் கூட்டம் இருக்காது. இரவு ஒன்பது மணி வரை வேலையில் இருக்க வேண்டும்.

       வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே என்னிடம் இரண்டு கணக்குப் புத்தகங்களை பராமரிக்கச் சொன்னார்கள். ஒன்றில் சரியான வரவுக் கணக்குகளும், மற்றொன்றில் , அதில் இருபது சதவீதமே வரவாகக் காட்ட வேண்டுமென்றும்                                                                                                                கூறினார்கள். குறைந்த வரவு எழுதிய புத்தகமே விற்பனை வரிக் கணக்குக்குக் காட்டப்படும் என்றும் கூறினார்கள். அது தவறெனப்பட்டு நான் கூறியபோது, “சொன்னதைச் செய்” என்று கட்டாயப் படுத்தினார்கள் அப்போது மது விலக்கு அமலில்
இருந்தது. அறையில் வாடகைக்கு வருபவர்கள் மது பானங்களை உபயோகிக்கக் கூடாது. ஆனால் சில பெரிய மனிதர்கள் விதியை மீறுபவராகவே  இருந்தனர். நான் பார்ப்பதற்கு மிகச் சிறியவனாக இருந்ததால், யாரையும் கேள்வி கேட்க முடியவில்லை.  முதலாளியிடம் கூறினால் கண்டு கொள்ளாமல் இருக்கப் பணித்தார்கள். சில பெரிய மனிதர்கள் அவர்களுடைய மனைவி என்று கூறிக்கொண்டு சில பெண்களுடன் தங்குவார்கள். பகல் நேரங்களில் அந்தப் பெண்கள் காட்டும் அதிகாரம், என் தன்மானத்தை பாதிப்பதாக இருக்கும். மாத வாடகைக்குத் தங்கும் சிலர் அந்தப் பெண்களிடம் பேச முயற்சி செய்து, அவர்களைவசப்படுத்த முயல்வார்கள். அந்தப் பெண்கள் என்னிடம் புகார் கூற, நான் மாத வாடகை அறைவாசிகளிடம் ஏதாவது கேட்கப் போனால், அவர்கள் எனக்குப் பாடம் நடத்துவார்கள் அவர்கள் விலை மாதர்கள் என்றும் அவர்களை நான் மதிக்க வேண்டாம் என்றும் கூறுவார்கள். இந்த மாதிரி அறைகளில் தினமும் படுக்கை விரிப்புகளை மாற்றச் சொல்வார்கள். அந்த விரிப்புகள் காட்டும் கோலம், அங்கு நடந்தவைக்குச் சான்றாக இருக்கும். இந்த நாட்கள் adolescent
ஆக இருந்த நான் அடல்ட்- ஆக மாற பெரிதும் காரணமாக இருந்தன. உலக நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தெரிய வந்தது. இதையெல்லாம் நான் முதலாளியிடம் கூறினால் என்னைக் கடிந்து கொள்வார்கள். காலையில் தொடங்கும் பணி இரவு ஒன்பது வரை ஒரேமாதிரி, காப்பி, இட்லி, வடை தோசை, என்ற சொற்களோடும், அறை சுத்தம், தங்குபவரின் தகாத செயல்கள் இவற்றைப் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை. வாரம் ஆறு நாட்கள் வேலை பார்த்தால்ஞாயிறு ஒரு நாள் மட்டும் வீட்டிற்குப் போய் வரலாம், என்ற நிலை. எல்லாம் சேர்ந்து எனக்கு சலிப்பை உண்டாக்கியது, இருந்தாலும் வீட்டின் நிலை அறிந்தும், எனக்கு வேறு வேலை கிடைக்க வாய்ப்பு குறைவு என்பதாலும் சகித்துக் கொண்டிருந்தேன். இந்த நிலையில், அங்கு வருவோர் சிலரிடம், நல்ல தொடர்பு இருந்தது. அதில் குந்தா ஹைட்ரோ பவர் ஸ்டேஷனில்வேலையிலிருந்த, எக்ஸிக்யூட்டிவ் எஞ்சினேர்,மற்றும், டெல்கோ கம்பெனியில் வேலையிலிருந்த ஒரு மார்கெட்டிங் மானேஜர், பர்மா ஷெல் கம்பெனி இன்ஸ்பெக்டர் ஒருவரும், முக்கியமானவர்கள். குந்தா ப்ராஜெக்ட்டில்  வேலை வாங்கித் தருவதாக ஒரு காண்ட்ராக்டருக்கு, சிபாரிசு கடிதம் ஒன்றை அந்த எஞ்சினீயர் கொடுத்தார். நானும் எங்கெல்லாமோ வேலைக்கு மனு போட்டுக்கொண்டிருந்தேன் .இந்த நிலையில் ஓட்டல் முதலாளியிடம் நான்   என்னுடைய வேலை நேரத்தைக் குறைக்கும் படியும்,,தவறான முறைகளில் கணக்கு வழக்குகள் எழுதுவதை என்னிடம் கட்டாயப் படுத்தாமல் இருக்கவும் முறையிட்டேன். அவர்கள் என்னிடம் எதையுமே பேச விரும்பவில்லை. என்னுடைய தந்தையார் மூலம் நான் வேலைக்கு வந்ததால், அவரை வந்து பேசச் சொல்ல சொன்னார்கள். இதற்கு என் தன்மானம் இடங்கொடுக்கவில்லை.வேலை செய்வது நான், என் தந்தை பெயரைச் சொல்லி மிரட்டுவது சரியல்ல என்று எனக்குத் தோன்றியது.அப்பாவிடம் சொன்னால் வருத்தப் படுவார்கள் என்பதாலும், குடும்ப நிலைமை நான் வேலைக்குப் போவதை தேவைப் படுத்துவதாலும், யாரிடமும் சொல்லாமல் நான் வேலையை விட்டு விலகுவதாக, என் முதலாளியிடம் கூறி எனக்குச் சேர வேண்டிய சம்பளப்பணம்  சுமார் ரூ. 20/- பெற்றுக் கொண்டு, என் பெட்டியுடன் கோயமுத்தூர் சென்றேன்.எங்காவது வேலையில் சேர்ந்து, அப்பாவை சமாதானப் படுத்தலாம் என்று எண்ணிக்கொண்டேன். அந்த முடிவு வாழ்க்கையில் முக்கியமான அனுபவங்களைப் பெற்றுத் தந்தது.
இன்னொரு நிகழ்வு நான்  அம்பர்நாத்தில்  பயிற்சியில் இருந்தேன்  ஓராண்டு காலத்துக்குப் பின் பாலக்காட்டில் இருந்தஎன் சிறிய தாயார்  தம்பிகளைப் பார்க்க விடுப்பில் போய் இருந்தேன்   அப்போது என் தம்பி ஒருவனுக்கு முதுகில் பெரிய கட்டிகள் புறப்பட்டு இருந்தது  அதற்கு மருந்தாக ஒரு எண்ணை  வேண்டும் என்று சொன்னார்கள் அது ஒலவக் கோடு ஜங்ஷனருகே கிடைக்கும்  என்றார்கள் நானொரு வாடகை சைக்கிளில் போனேன்  அவர்கள் குறிப்பிட்டுஇருந்த இடம்  ஒரு பாடத்துக்கு (வயல் வெளிக்கு  ) வெளியேஇருந்தது  எனக்கு வழி காட்டுவதாகஒருவர் முன் வந்தார் நான்  சைக்கிளை தள்ளிக் கொண்டுஅவருடன் சென்றேன்
எண்ணை வாங்கினாயா
அவசரப்படாதே  கோர்வையாக வரும் நினைவுகள் தடை படலாமெனக்கு வழிகாட்டுவதாகக் கூறிவந்தவர்  என்னை ஒரு வீட்டின் முன் நிறுத்தினார்
இங்கு எண்ணை கிடைக்குமா என்றேன்சப்தம் கேட்டு வீட்டிலிருந்து மூன்று நான்கு பெண்கள் வெளியே  வந்தனர் இவர்களில் உனக்கு யாரை பிடித்திருந்தாலும் சொல் அவர்கள் உனக்கு வேண்டிய சுகம் தருவார்கள்
எனக்கு முதன் முதலாக எங்கொ என்னவோ தவறு என்று தெரிந்தது

எண்ணை கேட்டு வந்தாலென்னவெல்லாமோ சொல்கிறாயே என்றேன்  எண்ணை எங்கே போகிறது இந்தப்பெண்களில் யார் உனக்குப்பிடித்திருக்கிறது
எனக்கு பயம் ஏற்பட்டு சைக்கிளைத் தள்ளிக் கொண்டுபோக முயற்சித்தேன் அந்த ஆள்  சைக்கிளை கெட்டியாகப் பற்றிக் கொண்டு நீ ஆண்பிள்ளையாடா  உனக்கு ----------------எல்லாம்  இல்லையாடா  என்று பேச ஆரம்பித்தான் நீ போகமுடியாது உன்னை இங்கே கூட்டி வந்திருக்கிறேன்  எனக்கு கொடுக்க வேண்டிய காசைக் கொடு என்று மிரட்டினான்  அவன் சற்றே ஏமாந்த நேரத்தில்  சைக்கிளுடன் ஓடினேன்  என் பின்னால் பல கெட்ட வார்த்தைகளுடன் சிறிதுதூரம்தொடர்ந்தான்  அப்போது தான்  நான் உணர்ந்தேன்   எப்பேர்ப்பட்ட சங்கடத்திலிருந்துமீண்டேன் என்று  நான் சிறுவனாக இல்லாமல் தோற்றத்திலும்   வளர்ந்து விட்டென்  என்று புரிந்தது


Sunday, July 22, 2018

ஒரு பகிர்வு


                                                ஒரு பகிர்வு
                                                 ----------------


-
 கிராமமென்று சொன்னால்  பலருக்கும் பல நினைவுகள் வரலாம் ஆனால் எனக்கு ஒரு தெருவே நினைவுக்கு  வரும் பாலக் காட்டில் இம்மாதிரி பல கிராமங்கள் ஒற்றைத்  தெருவுடன் இருக்கும்    ஆனால் பிரசித்திபெற்ற கல்பாத்தி கிராமம் என்றால் பாலக் காட்டில் அறியாதோர் இருக்க மாட்டார்கள்  கல்பாத்தி விசுவநாதர் கோவிலை  காசியில் பாதி கல்பாத்தி என்று அடைமொழியுடன்  நினவு படுத்துவார்கள்  அதை ஒரு ஹெரிடேஜ்  கிராமமாக அறிவித்திருக்கிறார்கள் இந்த கல்பாத்தி கிராமத்தை ஒட்டியே இருக்கும்  கோவிந்தராஜபுரம் எங்கள் கிராமம்  என்பெயரில் இருக்கும்  ஜீ அதனால்தான் வந்தது ஆனால் அங்கு இப்போது எங்களது என்று சொல்லிக் கொள்ள ஏதுமில்லை என்பெயரின்  இனிஷியலின் முதலெழுத்தை தவிர
. இருந்தாலும்  அந்த கிராம சமூகத்தினர் ஒரு முறை  என் வீடு தேடி பெங்களூர்  வந்தபோது ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்  எந்த மூரிங்கும்( mooring )  இல்லாதஎன் விலாசம் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பெங்களூர் விலாசம் எப்படி கிடைத்ததுஎன்பது இன்னும் எனக்கு ஆச்சரியம்தான்  என்னைத் தேடி வந்தவர்களுக்கே சொல்லத் தெரியவில்ல நான்  என் பத்து பதினொன்றாம் வயதில்  என் தந்தை வழிபாட்டியுடன் கிராமத்தில் இருந்திருக்கிறேன்  சில நினைவுகளைப்பதிவிலும்   அசை போட்டிருக்கிறேன்  எங்கள் கிராமக் கோவிலுக்கு  கும்பாபிஷேகம் என்றும் அதற்கு நாங்கள்  வர வேண்டுமென்றும் ஒரு கணிசமான தொகயைஎன்னிடம் எதிர்பார்ப்பதும்  தெரிந்தது என் மனைவிஎங்கள் கிராமத்து கோவில்பணிக்காக அவளால் முடிந்த தொகையைத் திரட்டினாள்  என்மூத்தமகன் அப்போது ஹை எனர்ஜி பாட்டரிஸ் எனும்கம்பனியில் இருந்தான்  கம்பனி சார்பாக ரூ 10000/- விளம்பரம் என்னும் பெயரில் டொனேட் செய்தான் இந்த சமயத்தை நான் என்மக்களுக்கு அவர்களது வேரையும் ஊரையும் காட்ட உபயோகித்தேன்  அதெல்லாம்பழங்கதைகள்
 சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு அஞ்சல் வந்தது அதைப் புகைப்படமாகப் பகிர்கிறேன்
எனக்கு வந்த நோட்டீஸ்


அதன் சாராம்சம்  கோவிலில் ஒரு உப தேவதையின் (நாக சுப்பிரமணிய சுவாமி) நெற்றிப்பகுதி சேதமடைந்ததால் தாம்பூலப் பிரச்நம் பார்த்ததில்  சிலையை அது நல்ல சக்தி உள்ளதால்  மாற்ற வேண்டாமென்றும் கடு சர்க்கரப் பிரயோகம் மூலம்  ரிப்பேர் செய்து  பூஜைகாரியங்களை செய்து விடலாமென்றும்   முடிவெடுத்து  இருக்கின்றனர்
 மேலும் கிராமமக்களின் மேலும்பக்தர்களின்  மேலும்  தர்ம சாஸ்தா  அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்   நேர்ந்த சில நிகழ்வுளுக்குமன்னிப்பு கோராததால் கோபம்கொண்டிருப்பதாகவும் அவர் கோபத்தைத்  தணிக்க ”க்ஷமாபானம்”  செய்து  அவரிடம்மன்னிப்பு வேண்டிப் பூஜைகள் செய்ய வேண்டும்   என்றும் முடிவெடுத்து இருக்கின்றனர்  இன்னும் ஒரு முக்கிய  தகவலாக பக்தகோடிகள்தினசரி மற்றும்விசேஷ காலநிகழ்ச்சிகளில்  சரியாகக் கலந்துகொள்ளாததையும் குறிப்பிட்டுஅனைவரும் உத்சவ காரியங்களில் பங்கு  வகிக்க வேண்டுமென்றும் கூறி இதன் படி நடக்க இருக்கும் பூஜா காரியங்களில் கலந்து கொள்ள வேண்டியும்  அதற்காகும் செலவுகளுக்கு பண உதவியும்கோரி இருந்தனர்
இதெல்லாம்சரிதான்  ஒரு கிராமக் கோவிலுக்கு  செலவு செய்வதும்  பூஜைபுனஸ்காரங்ளில் மக்கள் பங்கு பெற வேண்டியும்கோருதல் தவறாகப்படவில்லை
 ஆனால் அதற்காக மக்களின் GULLIBILITY  யை பயன்படுத்தி( உம்மாச்சி கோச்சுண்டிருக்கார் ) அவர்களைக் கட்டாயப்படுத்துவதுபோல்  ஒருநிலையை ஏற்படுத்துவதும் சரியா என்று கேட்கத்தோன்றுகிறது  இதையெல்லாம் கேட்டால் நான் கெட்டவனாகி விடுவேன்  என்மனைவி சொல்வதுசரிஎன்று தோன்றுகிறது மனம்விரும்பினால் இதுவரைசெய்ததுபோல்  ஒருதொகையை அனுப்பலாம் இல்லையென்றால் பேசாமல் இருக்கலாம் இருந்தாலும்என் மன நிலையைப் பகிராமல் இருக்க முடியவில்லை     

Thursday, July 19, 2018

அங்கதன்


                                                   அங்கதன்
                                                     ----------------


 இலக்கியச் சுவை (அங்கதன்  குறித்து)

ராமனின்  கதையை ஒரே வாக்கியத்தில் எழுதி பதிவிட்டிருந்தேன்  பலரும் பாராட்டி கருத்துரை தந்தனர்  அதில் ஒருபின்னூட்டம் என்னைக் கவர்ந்தது

(அங்கதனைக் காணோம் - என் பேவரிட் கேரக்டர்களுள் ஒன்று. 'தன் தந்தையை வஞ்சகமாகக் கொன்றவனை தினம் பார்த்தபடி அவனால் எப்படி பணிவிடை செய்யமுடிந்தது?' என்பதற்கான motivation இன்று வரைக் கிடைக்கவில்லை.) இந்தக் கருத்து திரு அப்பாதுரை எழுதியது நானும் எவ்வாறு அங்கதனை  மிஸ்செய்தென் என்று தெரியவில்லை ஒரு வேளை அங்கதன்பாத்திரப்படைப்புஎன்னைக் கவராது இருந்திருக்கலாம்  எனக்கு ராமாயணக்கதை புகட்டியவர்கள் அங்கதனைப்பற்றி அதிகம் அறியாதிருந்திருக்கலாம் வால்மீகி ராமயணத்தை அடிப்படையாகக்கதை சொன்னதாலும் இருக்கலாம்
ஆனால் கம்பன் அங்கதனுக்கு ஒருமுக்கிய இடமே கொடுத்திருந்தான் அங்கதன் பற்றி கம்பனில் நுழைந்து தேடியபோது ஒரு இலக்கியச்சுவையை நான் சுவைத்திருக்கவில்லை என்றே தோன்றியது
அங்கதனைப் பற்றி அறிய புகுந்தபோது வாலி பற்றியும்  இன்னும் சில விஷயங்கள் கிடைத்தது
ராமனுக்கு அனுமன் வாலி பற்றிக் கூறுவதாக வரும் இருபாடல்களைக் கூறுகிறேன்
நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி
வேலி அன்னவன் மலையின் மேலுளான்
சூலிதன் அருள் துறையின் முற்றினான்
வாலி என்று உளான்வரம்பு இல் ஆற்றலான்.
(
நான்கு வேதமாகிய பயிர்கள் வளர்வதற்கு வேலி போன்றவன். சூலப்படையுடைய சிவபெருமான் மீது.அளவற்ற பக்தி உடையவன்.அப்பெருமானின் இன்னருள் பெற்றவன்.எல்லை இல்லா ஆற்றல் பெற்றவன்.)

கழறு தேவரோடுஅவுணர் கண்ணின் நின்று
உழலும் மந்தரத்து உருவு தேய முன்
அழலும் கோள் அரா அகடு தீ விட
சுழலும் வேலையைக் கடையும் தோளினான்.

 ( வாலியின் ஆற்றலுக்கு எல்லை எது என்றால், அது அவன் கடலைக் கடைந்ததே ஆகும். தேவரும் அவுணரும் பாற்கடலைக் கடைந்து களைத்த போது, இவன் ஒருவனே மந்தார மலை என்னும் மத்தின் அகடு தேயக் கடைந்து காட்டினான் )
இந்தக் குறிப்பு அதிகம் அறியப் படாததோ, இல்லை கூறப் படாததோ ஆகும்.
வாலி உயிர் துறக்கும்  போதுராமனிடம் வேண்டினானாம்

“ என் தம்பி சுக்கிரீவன் மலர்களில் உண்டான மதுவைக் குடித்து அறிவு  மாறுபடும் போது அவன் மீது சினம் கொண்டு இப்போது என் மீது செலுத்திய அம்பாகிய யமனை செலுத்தாதிருக்க வேண்டும்” எனும் பொருள் படும் இப்பாடலும் என்னைக் கவர்ந்தது.
.
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில்
தீவினை இயற்றுமேனும் எம்பிமேல் சீறி என் மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான்.

வாலி இறக்கும் தருவாயில் தன் மகன் அங்கதனை அழைத்து வரக் கூறுகிறான்.சந்திர மண்டலம் வானிலிருந்து கீழே விழுந்து கிடக்க , அச்சந்திரன் மீது விண்ணிலிருந்து ஒரு விண் மீன் விழுந்தது போல தரையின் மீது விழுந்து கிடக்கும் வாலியின் மேல் அவன் விழுந்தான்”.எட்டு திக்கு யானைகளுக்கும் தோல்வியை உண்டாக்கியவன் இராவணன்.அவன் உள்ளம் உன் வாலின் தன்மையை நினைக்கும் போதெல்லாம்பட படவென அடிக்கும் அச்சம் ,இன்று நீ இறப்பதால் நீங்கி விடும் அல்லவா...” என்றெல்லாம் கூறிக் கலங்க,அதற்கு வாலி, இராவணனை வென்ற தன்னை வென்றதால் அது ராமன் செய்த நல்வினை என்று கூறி , ராமனிடம் அடைக்கலம் என்று அங்கதனை சேர்க்கிறான்.

இலங்கையின் மீது படை யெடுத்துச் செல்லும் முன் இராவணனிடம் அங்கதனைத் தூது அனுப்புகிறான் ராமன்..வாயுவின் மகனான அனுமன் இராவணனிடம் தூதனாகச் சென்றால்,அனுமன் அல்லாது இலங்கைக்குள் வந்து திரும்பும் வல்லமை உடையவர் வேறொருவர் இங்கில்லை என்று ராவணன் நினைக்கலாம் அல்லவா. அங்கதனே தக்கவன் என்று தேர்ந்தெடுக்கப் படுகிறான். தூது சொல்லாக சீதையை விடுவித்து உயிர் பிழைப்பதா இல்லை ராமன் அம்புகளால் பத்து தலைகளும் துண்டாவதா இதில் ஒன்றை ஏற்கக் கூறுமாறு இராவணனிடம் அங்கதன் கேட்க வேண்டும்
.. இராவணன் முன் தூதுவனாக வந்த அங்கதனைப் பார்த்துஇன்று இப்போது இங்கு வந்த நீ யார்.?வந்த காரணம் யாது. ?என் ஏவலாட்கள் கொன்று தின்பதன் முன் நானறியத் தெரிவிப்பாயாக,என்று வினவ அங்கதனும் பற்கள் வெளியே விளங்கச் சிரித்தான்.
நின்றவன் தன்னை யன்னான் நெருப்பு எழ நிமிரப் பார்த்து இங்கு
இன்று இவண் வந்த நீ யார் எய்திய கருமம் என்னை
கொன்று இவர் தின்னா முன்னம் கூறுதி தெரிய என்றான்.
வன் திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான்.

இந்திரனின் மகனும்,முன் காலத்தில் ஒப்பிலா இராவணன் என்பவனை,அவனது தோள்களுடனே வாலில் தொங்குமாறு கட்டி எல்லா திசைகளிலும் பாய்ந்து திரிந்தவனும் ,தேவர்கள் உண்ண மந்தார மலையாலே பாற்கடலைக் கடைந்தவனுமான வாலியின் மைந்தன் நான் என்று அறிமுகப் படுத்திக் கொண்டான்
.
இந்திரன் செம்மல் பண்டு ஓர் இராவணன் என்பான் தன்னை
சுந்தரத் தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றி,
சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன்.தேவருண்ண
மந்தாரப் பொருப்பால் வேலைக் கலக்கினான் மைந்தன் என்றான்.

என்நண்பனின் மகன் நீ
உன் தந்தையைக் கொன்றவனுக்கு நீ ஏவல் செய்யல் வேண்டாம் உனக்கு குரங்கினத் தலைவன் பதவி நான் தருகிறேன் என்று அங்கதனைத் தன் வசம் ஈர்க்க முயன்ற ராவணனிடம்
 
வாய் தரத் தக்க சொல்லி என்னையுன் வசஞ்செய்வாயேல்
ஆய்தரத் தக்கது அன்றோ தூது வந்து அரசது ஆள்கை
நீ தரக் கொள்வேன் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின்
நாய் தரக் கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான்.

 இவ்விடமொன்று கூற வேண்டும் கம்பராமாயணப் பாடல்களில் பல இடங்களில் ஒருவரை தாழ்வாகஎண்ண  நாய் என்னும் சொல்லை உபயோகித்த்ருக்கிறார்  கம்பன்   அதை குற்ப்பிடப்போனால் தனிபதிவாகி விடும் 
ராவணனை வென்று சீதையை மீட்டு அயோத்தி  சென்று மகுடம்சூடும்போதுபலராலுமெடுத்தாளப்படும்பாடல் இதோ

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெம் குடை கவிக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத்தாள் சேர் வெண்ணையூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி.

 கம்ப ராமாயணம் ஒரு இலக்கியச் சோலை
 இப்போதெல்லாம்  பதிவெழுதபல விஷயங்கள் உள்ளடக்கியது  கம்பனை முழுவதும் கற்று அறிய ஆவல்  ஆனால்  என்ன படித்தாலும்  கடல் நீரை பூனை நக்கி குடிப்பது போல்தான் இருக்கிறது