.மடேஸ்நானமா இல்லை மடஸ்நானமா.?
----------------------------------------------------------
உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.
.மடேஸ்நானமா இல்லை மடஸ்நானமா.?
----------------------------------------------------------
பொங்கல் வாழ்த்துக்கள்.
----------------------------------
மார்கழிப் பனி விலக
பாவையர் நோன்பு முற்ற,
தையலே தைப் பெண்ணே
உன் வரவால் வழி பிறக்க
முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
பொங்கலாக்கிப் படைத்திடவே
பகலவனும் பாதை மாறிப்
பயணம் செய்யத் துவங்கும்
இந்நாளில் பொங்கும் மங்களம்
எங்கும் தங்க வணங்குகிறோம்
அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
![]() |
அம்மா மூதாட்டியுடன் |
எத்தனையோ வருஷங்களுக்கு முன்னால் ஔவையாரால் எழுதப் பட்ட விநாயகர் அகவலில் வரும் இந்த வரிகள் பொருள் தெரிந்து சிந்திக்கத் தகுந்தது. முதலில் விநாயகப் பெருமானை வர்ணித்துப் பிறகு வேண்டுதல்களை வைக்கிறார்.
“........................................................................................................................
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி,
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கருளி
கருவிகள் ஒடுக்கும் கருத்தறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து....
படிக்கும்போதே ஓரளவுக்குப் புரிகிறது. இனி அவர் கேட்பது தெஇந்து கொள்வதே கடினம். அவரது ஒரு வார்த்தை புரிய என்னென்னவோ தெளிய வைக்கிறார்.
”......தலமொரு நான்குந் தந்தெனக் கருளி ...
நல்வினை தீவினை அதனால் ஏற்படும் மாய இருளை நீக்கி
சாலோகம் சாயுஜ்யம் சாமீபம் சாரூபம் என்னும் நான்கு தலங்களையும் எனக்குத் தந்து.....( இவையெல்லாம் எங்கிருக்கின்றன, அதன் நலங்கள் என்ன
என்று இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன் )
“மலமொரு மூன்றின் மயக்கமறுத்தே.
ஆணவம் கன்மம் மாயை எனும் மூன்று மலங்களினால் ஏற்படும் மயக்கத்தை இறுத்து
” ஒன்பது வாசல் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறாதாரத்து அங்குச நிலையும்
பேரா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே....
உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும் ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி மூலாதாரம் , சுவாதிட்டானம், மணி பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்று ஆறு ஆதாரங்களில் நிறுத்தி
அதன் பயனாய் பேச்சிலா மோன நிலை அருளி ( குறிப்பிட்ட ஆறு ஆதாரங்களும் உடலின் பல்வேறு பாகங்களைக் குறிப்பது என்று எண்ணுகிறேன் )
”இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்தி
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்த்றிவித்து
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3)
சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி,
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக்கரத்தின் உறுப்பையுங் காட்டி
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
என் முகமாக இனிதெனக் கருளி
புரியட்ட காயம் புலப்படஎனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினிற் கபால வாயில் காட்டி,
இருத்திமுத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கிய எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் என்றிடமென்ன
அருள்தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்து அருள்வழி காட்டி,
சத்ததினுள்ளே சதாசிவம் காட்டி,
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி,
அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி,
வேடமும் நீறும் விளங்க நிறுத்தி,
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி,
அஞ்சக் கருத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்து
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட
வித்தக விநாயக விரை கழல் சரணே.
இடையிலிருக்கும் சக்கரத்தின் பதினாறு நிலையையும் உடலின் எல்லா சக்கரங்களின் அமைப்புகளையும் காட்டி உருவமான தூலமும் ,அருவமான சூட்சுகமும் எனக்கு எளிதில் புரியும்படி விளக்கி, மூலாதாரம் முதல் சகஸ்ர தளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி
எனக்குக் காட்டித்தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்கருளி, நான் யார் என்பதை எனக்குத் தெளிவித்து,பூர்வ ஜன்ம வினையை நீக்கி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கருளி, அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி ,இருள் ஒளி இரண்டுக்கும் அடிப்படை ஒன்றே என்பதை உணர்த்தி
அருள் நிறைந்த ஆனந்தத்தை என் காதுகளில் அழுத்தமாகக் கூறி, அளவில்லாத ஆனந்தம் தந்து துன்பங்கள் அகற்றி அருள்வழி எது எனக்காட்டி, உள்ளும் புறமும் சிவனைக்காட்டி, சிறியவற்றுக்கு சிறியது பெரியவற்றில் பெரியது எதுவோ அதை கணு முற்றி உள்ள கரும்பு போல எனக்குள் காட்டி , உண்மையான தொண்டர்களுடன் என்னைச் சேர்த்து ,அஞ்சக் கரத்தினுள்ள உண்மையான பொருளை என் மனதில் நிலை நிறுத்தி எனை ஆட்கொண்ட விநாயகப் பெருமானே உன் பாதார விந்தங்கள் சரணம்
உடற்கூறு பற்றி ஒரு பெரிய பாடமே அகவலில் இருக்கிறது. .
தலமொரு நான்கு, , மலமொரு மூன்று, ஆறாதாரம் , இட பிங்கலை, கழுமுனை , மூன்று மண்டலம், நான்றெழு பாம்பு,,குண்டலிதனிற் கூடிய அசபை, உடற்சக்கரம், சண்முக தூலம் சதுர்முக சூக்கம் .....இன்னபிற வார்த்தைகளுக்கு பொருள் முழுவதும் தெரிந்தது என்று சொல்ல முடியவில்லை. பல நூறாண்டுகளுக்கு முன்பே இதை எழுதி இருந்தார் என்றால் , எல்லாம் அறிந்ததன் பயனாய்த் தான் இருக்கும்.
நம் கண் முன்னே விரியும், நடக்கும், நமக்கும், ஏன் சமுதாயத்துக்கும் ஒவ்வாத ஒவ்வொரு நிகழ்வும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முடிந்தால் இந்த உலகத்தையே புரட்டிப் போட்டு மாற்ற வேண்டும் என்ற y எழுகிறது.
இருந்தாலும் நடப்பவைகள் எல்லாமே தவறானவ வேண்டத்தகாதவைகள் அல்ல. இன்னும் சிறப்பாக இருக்கலாமே, நன்றாக இருக்குமே என்ற ஆதங்கமும், விருப்பமும்தான் மனதில் தோன்றுவ⁸து . இந்த வேகம் மட்டும் போதாது..இன்னும் சிறப்பாக இருக்க என்ன செய்யலாம், என்று எண்ணும்போது, கூடவே இருப்பதில் எதெல்லாம் நல்லது ,நன்மை பயப்பது என்றும் நாம் சிந்திக்கவேண்டும்.
நூறு சதவீதக் கல்விதான் இலக்கு. ஆனால் அது இன்னும் எட்டப்படவில்லை. ஆனால் அது செயல்படுவதற்கு ஆங்காங்கே விதைகள் தூவப் பட்டுள்ளன.,என்பதை மறுக்க முடியாது. நூற்றாண்டுகாலமாக இன்னாருக்குத்தான் படிப்பு, இன்னாருக்கு அது கூடாது, என்ற ஆதிக்க மனப்பான்மையில் பெரும்பாலோருக்கு எழுத்தறிவே செல்ல இயலாத நிலை இருந்தது. எல்லோரும் படித்து முன்னுக்கு வந்துவிட்டால், சிலருடைய ஆதிக்கத்துக்கு முற்றுப் புள்ளி வந்துவிடும் என்ற நிலையில் ஒடுக்கி வைக்கப்பட்ட மக்கள் தொகை மிகவும் அதிகமாக இருந்தது. ஆயிரங்காரணங்களை
கூறி அடிமைப் படுத்தப்பட்டிருந்தனர் .காரணங்களை நான் விவரிக்க விரும்பவில்லை. ஆனால் எல்லோரும் படிப்பறிவு பெற்றால் சுயமாக சிந்திக்க துவங்குவார்கள் என்ற பயம் ஆண்டைகளிடம் இருந்தது. அடிமைத்தளை இறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அஸ்திவாரம் பலப்பட,
அவர்களது அலுவலகப் பணிகளுக்கு குமாஸ்தாக்கள் தேவைப்பட மெகாலே கல்வி நடைமுறைப் படுத்தப்பட்டது. இதெல்லாம் சரித்திரம்.
நாம் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது சிந்திக்கத் தூண்டும் கல்வி மறுக்கப் பட்டதே. கல்வி கற்றவர்கள் சிந்திக்கத் துவங்கி நாடு அடிமைத் தளையிலிருந்து விடுபட்டதும் வரலாறு.
நம்மை நாமே ஆளும்போது ,நாம் எல்லோரும் சமம் எனும்போது , வாய்ப்புகளும் சமமாக இருக்க வேண்டும். வாய்ப்பு வேண்டிப் போராட கல்வி அறிவு அவசியம். அதுவும் பரவலான நூறு சதவீதக் கல்வி அவசியம். நாம் படித்தவற்றை
பகுத்தறிந்து உணர்ந்தால் அறிவுள்ளவர்களாக ஆவோம். படித்தவர்கள் எல்லோரும்
அறிவுள்ளவர்கள் அல்ல. படிக்காதவர்கள் அனைவரும் அறிவில்லாதவர்களும் அல்ல.
ஆனால் ஒருவனை அறிவாளியாகக படிப்பறிவு மிகவும் உதவும்.
எந்த ஒரு உந்து சக்தியும் இல்லாமல் படித்துயர்ந்து வந்தவர்களும் ஏராளம் உண்டு. நகரங்களில் வசிக்கும் நம் கண் முன்னே படுவது கான்வென்ட் படிப்பும் கூடவே வரும் அதிக செலவினங்களும்தான் .இல்லாதவன் தன தலைமுறைக்குப் பிறகு தன பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்று பாடுபடுவதையும் பார்க்கிறோம். இயற்கைதானே. ஆனால் கான்வென்ட் படிப்பும் ஆங்கிலப் படிப்பும்தான் மேலானது என்ற ஒரு மாயத் தோற்றத்துக்கு அடிமையாகும்போதுதான் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம்
எழுத்தறிவும் கல்வியறிவும் பரவலாக்கப்பட்டால் சுயமாக சிந்திக்கும் திறனை அவர்கள் வளர்த்துக்கொள்வார்கள். முனிசிபல், கார்ப்பரேஷன் பள்ளிகளில் படித்துப் பெயர் வாங்கும் சிறார் சிறுமிகளும் இருக்கிறார்கள்.,என்பது நமக்குத் தெரிந்ததே. நாம் எந்த ஒரு விஷயத்தையும் விவாதிக்கும்போது மிடில் கிளாஸ் மேன்டாலிடியைத்தான் அளவு கோலாகப் பயன்படுத்துகிறோம். ஏழை பாழைகளின் கருத்தைக் கேட்கவோ எடுத்துச் சொல்லவோ நம்மில் பலரும் முன் வருவதில்லை இந்நிலையில் நூறு சதவீத எழுத்தறிவும் படிப்பறிவும் இருநதால் அவர்களை அவர்களே மேம்படுத்திக் கொள்வார்கள்
.
பசியாற மதிய உணவு, சீருடை, மற்றும் சென்றுவர இலவச சைக்கிள் இவை எல்லாம் கல்வியறிவு பரவலாகச் செய்யும் உந்து சக்திகள்தானே. மேலும் தற்போது
கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள் . இதன்படி எல்லாப் பள்ளிகளிலும் ( தனியார் உட்பட ) 25% இடங்கள் ஏழைகளுக்கு ஒதுக்கப்படவேண்டும் .
கல்வி போதிக்கும் முறையில் ஏற்ற தாழ்வு குறைந்து சம வாய்ப்பு கிடைக்கும் ஒரு திட்டம் .ஆனால் இதை நடைமுறைப்படுத்த ஏகப்பட்ட எதிர்ப்புகள். இந்த எதிர்ப்புகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்.
சாதாரணமாகவே இந்தியக் குடிமகன் லேசுப்பட்டவன் அல்ல. அவனை இன்னும் சக்தி உள்ளவன் ஆக்க பரவலான கல்வியறிவு அடிப்படை அவசியம்.
கல்வியை வியாபாரமாக்கும் கும்பலுக்கு நாம்தான் துணை போகிறோம். அரசு பள்ளிகளை ஆதரித்து ,அதன் தரம் உயர நாம் ஏன் பாடுபடக்கூடாது.
இன்று கல்வி ஒருவனின் பொருளாதரத்தை ஆட்டிபடைக்க கூடியதாக இருக்கிறது என்பதில் யாருக்கும் அய்யம் இல்லை. ஆனால் அதை எதிர்த்துக் குரல் கொடுக்க யாருக்கும் துணிவும் இல்லை. சமச்சீர் கல்வி எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு இங்கு இலவசக் கல்வியும் அவசியம். கல்வியை இலவசம் ஆக்க முடியுமா என்பது அனைவருக்கும் எழக்கூடிய கேள்வியே. எல்லாம் சாத்தியாமே, சுலபம் இல்லை எனினும். தனியார் பள்ளிகளை நம்பாமால் அரசுப் பள்ளிகளை நம்பி தங்கள் குழந்தைகளை அனுப்ப வேண்டும். ). ஆனால் அதற்கு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.முந்தைய நூற்றாண்டில் மக்களுக்காக தலைவன் போராடுவான். ஆனால் இப்பொழுதோ ஒவ்வொருவரும் தலைவர்களாகஇன்று கல்வி ஒருவனின் பொருளாதரத்தை ஆட்டிபடைக்க கூடியதாக இருக்கிறது என்பதில் யாருக்கும் அய்யம் இல்லை. ஆனால் அதை எதிர்த்துக் குரல் கொடுக்க யாருக்கும் துணிவும் இல்லை. சமச்சீர் கல்வி எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு இங்கு இலவசக் கல்வியும் அவசியம். கல்வியை இலவசம் ஆக்க முடியுமா என்பது அனைவருக்கும் எழக்கூடிய கேள்வியே. எல்லாம் சாத்தியாமே, சுலபம் இல்லை எனினும். தனியார் பள்ளிகளை நம்பாமால் அரசுப் பள்ளிகளை நம்பி தங்கள் குழந்தைகளை அனுப்ப வேண்டும். (தனியார் பள்ளியில் படித்துக்கொண்டே டியூஷன் போகும் அவலம் வேறு நம் ஊரில் உண்டு). ஆனால் அதற்கு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.முந்தைய நூற்றாண்டில் மக்களுக்காக தலைவன் போராடுவான். ஒவ்வொருவரும் தலைவர்களாக ஆனால் இப்பொழுதோ ஒவ்வொருவரும் தலைவர்களாக தங்களுக்கு தானே போராட வேண்டியுள்ளது!