உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.
ஒரு பதிவின் தாக்கம் நான் எழுதியதுதான் ஒரு பதிவும்சில பின்னூட்டங்களும்
என்னை நானே உணர வை.
-------------------------------------
ஆண்டொன்று கூட அகவை ஒன்று கூடுகிறது.
அதோடு சில வேண்டாத குணங்களும் கூடுகிறது..
ஆண்டவனே, நான்வேண்டுவதெல்லாம்-என் பேச்சைஅடக்கு
எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்
என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இடு.
மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
நீக்க முயலும் என் முனைப்புகளை உடை.
எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிடு.
வட்டமாய் சிறகடித்து மேலிருந்து கீழே நேராய்
இரையை நாடும் பறவையைப் போல் சொல்ல
நினைக்கும் புள்ளியை நானடையக் கற்றுக்கொடு.
நான் படும் வேதனைகளை, வலிகளை
அடுத்தவன் முன் கொட்டித் தீர்க்க நான் வாய்
திறந்தால் அதனை அக்கணமே மூடிவிடு.
அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வை கூடவே
நானும் தவறிழைக்கலாம் என என்னையும் எண்ண வை.
நான் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.
அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்.
இவ்வையகம் விட்டு நான் அகலும்போது என்னை
நண்பனாய், நல்லவனாய் நினைக்க நால்வர் வேண்டும்.
பின்னூட்டஙள்
முத்தாய்ப்பான நிதர்சன பகிர்வுக்கு பாராட்டுக்கள்..
நான் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.//
அனுபவங்கள் என்பன நிகழ்வுகள் என்றால், அவற்றின் பயன் படிப்பினைகள் அல்லவா?.. செயல்களின் விளைவு அவற்றின் விளைச்சலான படிப்பினைகளே. ஓர்ந்து பார்த்தால் ஒவ்வொரு புதிய அனுபவமும் இதுவரைத் தெரிந்திராத
ஒரு புதிய பாடத்தைச் சுமந்து கொண்டிருப்பது தெரியும்.
தனிநபர்களுக்கு அவை கிடைப்பதும் கிடைக்காததும் அவற்றை அவரவர் உணரும் பாங்கு பொருத்து இருக்கிறது.
//அவரவர் வாழ்க்கை அவரவரே வாழவேண்டும்.//
இத்தனைக்கும் நடுவே முத்தான இரத்தின வரி.
//மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
நீக்க முயலும் என் முனைப்புகளை உடை.
எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிடு//
மேலே கேட்டது நடந்தால்;
கீழே கேட்டது நடக்காது!!!
//அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வை கூடவே
இவ்வையகம் விட்டு நான் அகலும்போது என்னை
நண்பனாய், நல்லவனாய் நினைக்க நால்வர் வேண்டும்.//
ஐயா...
படிக்கும்போதே மன வேதனையாக உணர்கிறேன். வயது தளரும்போது நம்மின் சிந்தனைகளும் மாறுபட்ட திசையில் பயணிக்கத்தொடங்கிவிடுகின்றன. நம்முடைய பேச்சைக் கேட்பவர்கள் கேட்காத சூழலில்..அறிவுரைகள் அலுக்கும் சூழலில்.. வலிய உதவப் போய் அவமானப்படுகையில்..ஏதேனும் நன்மை கருதிய சொற்களைப் பேசினால் அதைக் கண்டும் காணாமல் அலட்சியப்படுத்துவது இவையெல்லாம் வயதின் தளர்வில் ஒவ்வொருவருக்கும் நிகழ்கிறது. ஆனால் இளையபருவம் இவற்றைத் தாங்களம் அனுபவிக்க நேரும் என்று உணர்வதில்லை.
நான் சிலசமயம் பலருக்கு நானே வலியப் போய் உதவிசெய்து அதனால் பெருத்த அவமானத்திற்கு உள்ளாகியிருக்கிறேன்(உறவுகளிடம்).
காரியத்திற்காக நம்மைப் பயன்படுத்தி பின் காரியம் முடிந்ததும் கறிவேப்பிலை உதறிய கூட்டத்தையும் நான் அனுபவித்திருக்கிறேன்.
ஒரு மனிதன் சாதாரண பணியில் இருக்கும்போது அலட்சியப்படுத்தும் சூழலும் அவனே உயர்பதவிக்கு வந்து பணம் நிறைந்திருக்கையில் அவனிடம் நடிக்கும் கூட்டத்தையும் நான் கண்டு அனுபவித்திருக்கிறேன்.
வயது ஏறஏற மௌனத்தை அதிகம் கடைப்பிடிப்பது வாழ்வின் இறுதிவரை நம்முடைய மரியாதையை மீட்டெடுக்கும் என்பது என்னுடைய பணிவான கருத்துரை.
நீண்ட மனப்பகிர்விற்கு உள்ளாக்கிய உங்கள் பதிவிற்கு நன்றிகள்
நம்மில் சிலர்
ஆவிகள் உலகம்........ஒரு சிறுகதை(மீள் பதிவு)
------------------------ -----------------------
( சிறுகதை எழுதுவது என்பது சிலநேரங்களில் சிக்கலாய் இருக்கிறது. புனைவுதான் என்றாலும் உண்மைபோல் இருகக வேண்டும் அதற்கான கருவாக நான் தேர்ந்தெடுத்தது நம்பமுடியாத , நம்ப விரும்பாத ஒன்று. படித்துப் பாருங்களேன் )
அன்பெனப்படுவது யாதெனில் என்று
அண்மையில் ஒரு பதிவு படித்தேன். அதில் அத்வைதம்,
துவைதம், விசிஷ்டாத்வைதம் போன்ற விஷயங்களை எடுத்து
அலசியிருந்தார். அந்தப் பதிவர். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மா
வுக்குமுள்ள சமன்பாடுகள் குறித்த அலசல். அதைப் பற்றி நான்
எதுவும் எழுதப் பொவதில்லை. அடிக்கடி எழும் இந்த ஜீவன்
ஆத்மாபோன்றவற்றின் பொருள் விளங்காமலேயெ அல்லது,
விளங்கிக் கொள்ளும் புத்தி இல்லாமலேயே காலம் கழிந்து
விடுகிறது. இன்று நேற்று எழுந்த கேள்விகள் அல்ல இவை.
இருந்தும் அனைவரும் புரிந்து கொள்ளும் ,அல்லது ஒப்புக்
கொள்ளும் விளக்கங்கள் இருக்கிறதா.? இல்லை என்று சொல்
வதைவிடத் தெரியவில்லை என்று சொல்வதே சரியாகும். தினம்
இறந்து ,தினம் பிழைக்கும் நாம் இருக்கிறோம் என்று சொல்வதே
உயிர் என்று ஒன்று இருப்பதால்தானே. அதுதான் என்ன.?எளிதாக
சொன்னால் காற்று எனலாமா.? அதுவும் தவறாக இருக்கும்.
பிராணவாயு ( ஆக்சிஜன் ) என்பது கூடுதல் சரியாக இருக்கும்.
மூச்சுக் காற்று உடலுக்குள்ளேயும் உடலை விட்டு வெளியும்
சென்று கொண்டிருந்தால் உயிருடன் இருக்கிறோம் என்று
புரிகிறது.ஐம்புலன்களின் செயல் இழந்து விட்டாலும் மூச்சுக்
காற்று வந்து போய்க் கொண்டிருந்தால் உயிருடன் இருக்கிறோம்
என்று உணர்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தில் வாயு மண்டலத்தில்
இருக்கும் அநேக வாயுக்களில் பிராணவாயு மட்டுமே உயிருக்கு
உத்தரவாதம் அளிக்கிறது. இந்தப் பிராண வாயுவை மின்சாரத்
துக்குஒப்பானதாக எடுத்துக் கொள்ளலாம். வாஷிங் மெஷின்,
ஃப்ரிட்ஜ்,ஹீட்டர், லேத், பல்ப், போன்றவை மின்சாரம் என்ற
சக்தி செலுத்தப் பட்டால் வேலை செய்கிறது. அதேபோல இந்த
உடல் என்னும் மெஷினும் பிராணவாயு செலுத்தப் பட்டால்தான்
இயங்கும்.கேள்வி அதுவல்ல. உயிர்தான் ஆத்மாவா.? உயிர் உள்ள
உடலில் வந்து போகும் பிராணவாயுதான் ஜீவாத்மாவா.?பிரபஞ்சத்
தில் ஊடுருவி இருக்கும் வாயுமண்டலத்திலுள்ள பிராணவாயு
தான் பரமாத்மவா?ஜீவாத்மாவால் இயங்குவது இந்த உடல் என்பது
போல பரமாத்மாவால் இயங்குவதுதான் இந்த பிரபஞ்சமா.? இப்படி
எண்ணிக் கொண்டால் இந்த ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும்
உள்ளசமன்பாடு, ஒரு FINITE NUMBER-ஆ எது.எப்படியாயினும்
இரண்டையும் இயக்குவது என்ன, யார்.?மீண்டும் BACK TO SQUARE
ONE. இதைத்தானே நான் ஒருமுறை எழுதியிருந்தேன்.,
அறியாமை இருளிலிருப்பதே சுகம் என்று.
முடிவு காணமுடியாத,அல்லது முடிவு காணத் தெரியாத
எண்ணங்களை விட்டு விடு மனமே.அதெப்படி விட முடியும்.?
அநாதி காலந்தொட்டு கற்பிக்கப் பட்டும், நம்பப் பட்டும் வருகிற
விஷயங்கள் எல்லாம் மனதுக்கு ஒப்புவதில்லையே.கேள்வி
கேட்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதவர் மத்தியில்
சந்தேகமே வரக் கூடாது.!
**********************************
இந்த அவதாரக் கதைகளை எடுத்துக் கொள்வோம். அவதாரங்
களைக் கதைகள் என்று சொல்லுவது ஆட்சேபிக்கப்படலாம்.
என்ன செய்ய. ..கதைகளையும் கற்பனைகளையும் உண்மை
என்று நம்ப இந்தப் பாழாய்ப் போன புத்தி மறுக்கிறதே. இந்தக்
கதைகள் கற்பனைகள் என்று ஒரேயடியாய் ஒதுக்கி விட்டு அதில்
கூறப்பட்டிருக்கும் கருத்துக்களையும் போதனைகளயும் தள்ளி
சுவாரஸ்யமான துணுக்குகள்...
ReplyDelete