Tuesday, February 27, 2018

வாசமில்லா மலரிது


                             வாசமில்லா மலரிது
                            ----------------------------------





ஆசிரியர்… ஜயந்தா இந்தியா கேட் என்பது என்ன
ஜயந்தன் ……சார் இந்தியா  கேட்  நல்ல தரமுள்ள பாசுமதி அரிசி
ஆசிரியர் ….சார்மினார் என்பது என்ன
ஜயந்தன்  சார் சார்மினார் ஒரு பெயர் பெற்ற சிகரெட் குறைந்தவிலையால்  யாரும்  உபயோகிக்கூடியது
ஆசிரியர் .. தாஜ்மஹல் என்பது என்ன
ஜயந்தன்  தாஜ்மஹல் பாக்கெட் தேயிலைத்தூள்
ஆசிரியர்… இந்த மாதிரி முட்டாள் தனமான பதில் தர உனக்கு என்னதைரியம் தேசியப் பொக்கிஷங்களின்   பெயரைக் கெடுக்கிறாய்  நாளை  உன்னை வகுப்பில் அனுமதிக்க மாட்டேன் வரும்போது உன் தந்தையின் சிக்னேசரோடு வா
ஜயந்தன் ..சரி சார்

அடுத்த நாள்

 ஆசிரியர் ..ஜயந்த்த்த்த்த்தா என்ன தைரியம் இருந்தா விஸ்கி பாட்டிலை  வகுப்புக்கு  கொண்டு வருவாய்
 ஜயந்தன் சார் இது ரொம்பமோசம்  நீங்கள் தானே தந்தையின்  சிக்னேசரைக் கொண்டு வரச்சொன்னீர்கள் சொன்னபடி செய்ததற்கு கோபம்கொள்கிறீர்களே  இது நியாயமில்லை சார்                       =====================
LOL IS OLD THNG  NEW THING IS LLRC IT MEANS LAUGH  LIKE RENUKA CHAUDHRI
              =================
ஒரு மாற்றத்துக்கு  எங்கள் பெரிய பேரன் தங்லீஷில் எழுதிய கவிதை தமிழாக்கி தருகிறேன்
 -------------------------------------------------------------------------------------------------------------------



இருவரையும் பார்த்தால் கமல் ஸ்ரீதேவி போல இருக்கு
நடிப்பில் அல்ல. .
ஆனால் அவ்வளவு காதல் பொருத்தம் தெரியுது.
அவ்வளவு ப்ரேம், இஷ்டம், காதல், லவ், ப்யார்
எல்லாமே ஒரே அர்த்தம்தானே
இவர்கள் காதல் பற்றிச் சொல்ல நான் படிக்கணும் Phd; 
இருவர் காதலிலும் உண்மை இருக்கிறது
அக்குவா கார்ட் தண்ணி போல ப்யூரா இருக்கும்.
இவர்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமை
ஏன் என்றால் என்னைப் பார்த்து என் பேரன் இப்படிச் சொல்வானா?
சான்ஸே இல்லை, ஏன் என்றால் நான் இன்னும் காதலிக்வே
இல்லையே.!
இவர்கள் சண்டையைப் பார்த்தால் ஒரே போர்தான்.
நோ எண்டர்டைன்மெண்ட். அங்கேயும் லவ் தான் தெரிகிறது
சிங்கம் பூனையாக முடியுமா?ஒரு உண்மை தெரியுமா.?
எங்க வீட்டு சிங்கத்தை குட்டிப் பாப்பா 
மாதிரியாக்கிய பெருமை எங்க பாட்டிக்குத்தான் சேரும்.
இவர்கள் கெமிஸ்ட்ரி பார்த்தால் வேர்ல்ட் ஃபிஸிக்ஸ்
ஆச்சரியம் இல்லை

 இப்போ நான் டீயாரு
இவங்க ரெண்டு பேரும் செம பெயரு
எனக்குத் தராங்க டூ மச் கேரு
அதைப் பெற்றால் கிடைக்கும் கிக்கு 
அப்புறம் எதுக்கடா பாரு?
ஹாய் ண்டணக்கா டணக்குணக்கா.
டண்டணக்கா, டணக்குணக்கா. !
                                                          ========================
அயல்நாடு ஒன்றில் ஒருவர் தன் காரில் பயணித்துக் கொண்டிருந்தாராம்  திடீரென அவருக்கு உடல் நலமில்லாமல் போகவே ஹரிஓம்  ஹரி ஓம் என்று பிரர்த்தனை செய்தாராம்  சற்று நெரத்தில் அவரதுவீட்டுக்கு வந்த ட்ரைவரிடம்  ஏன் இங்கேயே கொண்டு வந்தாய் என்று கேட்டாராம்  அதற்கு ட்ரைவர்  நீங்கள்தானே ஹரி ஹோம் என்றீர்கள் என்றானாம்....!



பனிரெண்டு நாட்கள் பதிவுகள் ஏதும்  எழுதாமல் (எழுத முடியாமல் ) இருந்தேன் நேற்றிரவு யதாஸ்தானத்துக்கு  வந்ததும்   சில பதிவுகளை மேய்ந்தேன் எங்கள் ப்ளாகில் நௌஷட் எம் எஸ் வி பற்றிய பதிவு படித்ததும் ஆச்சரியப்பட்டேன்  ஒரு முகம் காட்ட விரும்பாதவரின்  பதிவில் முகவரியும்  முகமும் காட்டாத ஒருவரின்  படம்தான் என்னை ஆச்சரியப்பட  வைத்தது  திருமதி அதிராவுக்கு பெலேட்டெட்  பிறந்த நாள் வாழ்த்துகள் அவரது புகைப்படத்தை சுட்டு இங்கு பதிவிடுகிறேன் தவறு இல்லை என்று நினைக்கிறேன் ஒருமுறை வெளியான படம்தானே அதுவும் ஒரு பொதுபதிவில் வெளியானது சும்மா சொல்லக் கூடாது கன கம்பீரமாக இருக்கிறார் 

பலரும்பதிவுகள் எழுதி ஷெட்யூல் செய்து வெளியிடுவதாக அறிகிறேன் ஆனால் நான் ஷெட்யூல் செய்வது  பப்லிஷ் ஆக மாட்டேன்  என்கிறது  ஏதாவது சூஷ்மம் இருந்தால் நண்பர்கள் தெரியப்படுத்தலாமே 

 முன்பொரு முறை நான் கற்பனையாக எழுதி இருந்த எதுவும் நிகழவில்லை நான் எழுதாததை ஒரு இருவர் தவிர யாரும் கண்டு கொள்ள வில்லை  எல்லாம் நன்மைக்கே     










Tuesday, February 13, 2018

நம்பிக்கை சில கருத்துகள்


                                                நம்பிக்கை சில கருத்துகள்
                                               ------------------------------------------
                                                      சிவராத்திரி ஸ்பெஷல் 
                                                      ------------------------------------


வசந்த் தொலைக்காட்சியில் நம்பிக்கை என்றொரு  தொடர் மறு ஒளிபரப்பாகிறது அதில் வரும் முகப்புப் பாடல் நம்பிக்கைபற்றியது  அதுவே எனக்கு நம்பிக்கைகள் எனும் இப்பதிவை  எழுதத் தூண்டியது
கோவிலுக்குப் போகிறோம்   நம் துயரங்களைச் சொல்லி வேண்டுகிறோம்  அது வரை சரிதான் ஆனால் என் துயரங்களைத் தீர்த்திடு உனக்கு நானிது செய்கிறேன்  அது செய்கிறேன்  என்றுவேண்டுவதுநமது கணிப்பில் கடவுளிடம் ஒப்பந்தம்போடுவதுபோல் இருக்கிறதே இதை ஏதோ நம்பிக்கை என்று கூறுதல் சரியா பெரும்பாலோர்  கணிப்பில் கடவுள் என்பவர் இத்தகைய ஒப்பந்தங்களுக்கு ஒப்புக்கொள்கிற அடிமுட்டாளாக இருப்பவரா . இதற்குப் பெயர் பக்தியல்ல, ஏமாற்று வேலை.

பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறீர்களென்றால் அது உளவியல் ரீதியாக வேண்டுமானால் ஆறுதல் தரலாம். ஆனால், இதை நம்பிக்கையென்று சொல்லாதீர்கள்
விசுவாசம் அடிமைகளுக்கும்  முட்டாள்களுக்கும் உரிமையானது
சற்றும் அசையாத கவனக்குவிப்பை வழங்குவதுதான் நம்பிக்கை.    இதற்கு இரு கதைகள்
ஒருவன் மல உச்சிக்குப் போகிறான்  கால் தவறி கீழே விழும் நிலையில் இருக்கிறான்  விழும்போது ஒரு மரத்தின் வேரைப் பிடித்துக் கொள்கிறான் கடவுளே என்னை காப்பாற்று என வேண்டுகிறான் அப்போதுஒரு அசரீரியின் குரல் கேட்டது
அசரீரி : ‘நீ என்னை நம்ப மாட்டாய்!.
மனிதன் : கடவுளே, என்னைக் கை விட்டு விடாதே. நிச்சயம் நம்புகிறேன்.
அசரீரி : எனக்கு நம்பிக்கை இல்லை.
மனிதன் : கடவுளே, உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ தான் காப்பாற்ற வேண்டும்.
அசரீரி : சரி, உன்னைக் காப்பாற்றுகிறேன். முதலில் நீ பிடித்திருக்கும் வேரை விட்டு விடு.
மனிதன் : வேரை விட்டு விட்டால் கீழே விழுந்து இறந்து விடுவேனே?
அதன்பின் வானத்தில் இருந்து எந்தக் குரலும்கேட்கவில்லை
முன்பு ஒரு திரைப்படம் பார்த்தேன்  மாமன்மகள் என்று நினைக்கிறேன்  ஜெமினி கணேசன்  நடித்தது அதில் அவர் மிகவும் கோழையாக சித்தரிக்கப்பட்டிருந்தார் அவருக்கு வீர உணர்வு ஊட்ட அவரது பாட்டி ஒரு தாயத்து கொடுத்து அது அவரது தாத்தாவுடையது என்றும்  அதை அணிந்தால் வீரனாகி விடலாம் என்றும் கூறு வார் ஜெமினி கணேசனும் அதை அணியும் போது மிகவும்வீர உணர்ச்சி வருவதுபோல் தோன்றி எதிரிகளை துவம்சம் செய்துவிடுவார்  ஒரு முறை சண்டையிடும்போதுதாயத்து தவறி கீழே விழவும் அவரது வீரமும்  போய்விட்டு நன்கு உதைபடுவார்   நம்பிக்கைக்கு ஒருகதை இது
 அவரிடம்  உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது. கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ, எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும்.  அவரது  நம்பிக்கை, ஒரு முயற்சி. உண்மையான நம்பிக்கை ஒரு முயற்சியாக இருக்க முடியாது.





ஒரு ஊரில் மழையே பெய்யாமல் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்களாம் மழை வேண்டி ஒரு யாகம் செய்தால்மழைவரும் என்றார்கள்பலரும்  யாகம்காண வந்திருந்தார்களாம் யாக முடிவில் மழை பெய்தது  எல்லோரும் மழைக்குப்பயந்து ஓடினார்களாம் ஒரே ஒருவன் மட்டும்தான்  கொண்டு வந்திருந்த குடையை விரித்து நின்றானாம் யாகத்தில் இருந்த நம்பிக்கை குடைகொண்டு வரச் செய்தது
  
மரக்கிளையில் அமரும் #பறவை #கிளை உடைந்துவிடும் என அஞ்சுவதில்லை ஏனெனில் அதன் #நம்பிக்கை கிளையில் இல்லை அதன் #சிறகுகளில் உள்ளது உன்னில் #நம்பிக்கை வை #வெற்றி உன்னை தேடி வரும்
எதை வேண்டுமானாலும் இழக்கலாம் ஆனால் #நம்பிக்கை தவிர!
நம்பிக்கை குறித்து நிறைய எழுதி இருக்கிறேன்  நம்பிக்கை  வெறும் எண்ணங்க்களினால் ஏற்படுவதுஅல்ல நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும்
 என்  நம்பிக்கை நான் எழுதுவதைப் பலரும் படிப்பார்கள் என்பதில் இருக்கிறதுதொடர்ந்து எழுதுவேன் என்பதிலும் இருக்கிறது பெரும்பாலும் நம்பிக்கைகள் பக்தி சார்ந்ததாக நினைக்கப் படுகிறது அதில் மாறுபட்டு எழுதியதுஇது
  நிலந்திருத்தி  விதைக்கும் விதை கிளர்ந்தெழு  மரமாகி  கனி கொடுக்கும்  என்பது  நம்பிக்கை

மெய்   சோர்ந்து  உழைத்து  உறங்கி  எழும் புலரியில்  உயிர்த்து  எழுவோம்  என்பது  நம்பிக்கை 
 பயண  சீட்டெடுத்து  பஸ்ஸோ ரயிலோ  ஏறி சேருமிடம்  சேதமின்றி  சேருவோம்  என்பது நம்பிக்கை
 பாலூட்டி சீராட்டிப  பெற்றெடுத்த  பிள்ளை  பிற்காலத்தில்  நம்மைப்  பேணுவான்  என்பது நம்பிக்கை
நோயுற்ற  உடல்  நலம் பேண நாடும்  மருத்துவர் பிணி  தீர்ப்பார்  என்பது நம்பிக்கை  நல்ல படிப்பும்  கடின உழைப்பும்  வாழ்க்கையில்  வெற்றி  பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை
வாழ்வின்  ஆதாரமே நம்பிக்கை
நம்பிக்கைகள் பல விதம் . இருப்பினும் ,
 தாய் சொல்லி  தந்தை  என்றறியப்படுவதே  தலையாய  நம்பிக்கை.
  


Saturday, February 10, 2018

புரிந்து கொள்ளவும் செயல் படவும் (Transactional analysis )


                                   புரிந்து கொள்ளவும்  செயல் படவும்(Transactional  analysis )
                                   -------------------------------------------------------
(ஒரு எச்சரிக்கை . பதிவு நீளம்  கருதி  தாண்டிப் போனால் ஒரு ஆய்வு பற்றிய விஷயங்கள் தெரியாமலேயே போகலாம் )

ஒரு பதிவு எழுதும் முன் நிறையவே ஹோம்  வர்க் செய்ய வேண்டி இருக்கிறது   இருந்தும் முயற்சிக்கிறேன் வாழ்வியல் பரிமாற்றங்கள் என்னும் தலைப்பில் முன்பே ஒரு பதிவு எழுதி இருந்தேன்  அது ஆங்கிலத்தில்Thomas . A .Harris  அவர்கள் எழுதி இருந்த I AM OK YOU ARE OK என்னும் நூலைத் தழுவி இருந்தது
மனோதத்துவ நிபுணர்களால் ஆராயப்பட்ட முடிவுகள் தெளிவுகள் எல்லாம்  புத்தகத்தில் விரவிக் கிடக்கின்றன அதில் காணப்பட்டுள்ள விஷயங்களை சுருக்கமாகத் தொகுத்து இப்பதிவில் வெளி இடுகிறேன்  

 MY BASIC IDEA WAS TO JUST NARRATE HOW WHY TRANSACTIONS WE COME ACROSS TAKE PLACE. I HAVE KEFT IT TO THE READERS TO DWELVE ON THAT AND MAKE THEIR OWN CONCLUSIONS. IF YOUNG PROSPECTIVE PARENTS UNDERSTAND THIS THIS MIGHT HELP THEM BRING UP THEIR CHILDREN. ADULT -ADULT TRANSACTION IS DIFFICULT FOR WHICH YOU NEED TWO PEOPLE. THAT IS ASKING FOR THE MOON ,I FEEL. HOWEVER ADULT TRANSACTION FROM OUR SIDE WILL HELP BETTER UNDERSTANDING


        
விவசாயப் பட்டதாரி ஒருவன் விவசாயம் பற்றிய விவரங்கள்  அடங்கிய புத்தகம் ஒன்றை  அவர் வாங்குவாரா என்று விசாரித்தான் . அதற்கு அவர் படிப்பதை  எல்லாம்செயல்படுத்துதல் இயலாதது  “தம்பி எனக்கு விவசாயம் பற்றித் தெரிந்ததில் பாதி விவரங்களைக் கூட என்னால் சரியாக உபயோகிக்க முடிவதில்லை புத்தகம் பற்றி அறிந்தா  இனி” என்றாராம்  இதை எழுதுவதன் நோக்கமும் ஏன் மக்களுக்கு நல்லது அல்லாதது  என்று தெரிந்த விஷயங்கள் அடிப்படையில் அவர்களின்  வாழ்க்கை  சிறப்பாக அமைவது இல்லை என்பதை   தெரியப் படுதவும் தான்
   
 வாழ்க்கைமுறை  அமைவது அவரவர் குணாதிசயங்களைப் பொறுத்தது. இந்த குணாதிசயங்கள்  அமைவதன்  காரணம் என்ன. இந்த குணாதிசயங்கள்தான் என்ன அதை மாற்றமுடியுமா எனப் பல கேள்விகள் எழுகின்றன வலுனர்களின்  ஆராய்ச்சிகளின்  முடிவின் படி மனிதன் அவனது வாழ்வியல் பரிமாற்றங்களை (TRANSACTIONS) நான்கு  விதமாக வெளிப்படுத்திக் கொள்கிறான்  பரிமாற்றம் (transaction ) எனப்படுவது ஒருவரை ஒருவர் எதிர் கொள்ளும் போது உபயோகிக்கும் வார்த்தைகள் மற்றும்  செய்கைகள் மூலம் புரிந்துகொள்வதாகும்  இந்த நான்கு வித வெளிப்பாடுகளை 1) நான் சரியில்லை –நீ சரி (IAM NOT OK –YOU ARE OK 2)நான்  சரி இல்லை –நீசரி இல்லை (I AM NOT OK – YOU ARE NOT OK 3)நான் சரி –நீ சரி இல்லை (I AM OK  YOU ARE NOT OK ) 4) நான் சரி –நீ சரி (I am ok  you are ok ) என்ற விதமாக உளக்கூறு நிபுணர்கள் பிரித்து இருக்கிறார்கள் 


      இந்த மாதிரி பரிமாற்ற வெளிப்பாடுகள்ஒருவனின் குணாதிசயத்தைப் பொறுத்தே அமைகிறது இந்த குணாதிசயங்களொருவனது மூன்று வயது பிராயத்துக்குள்ளேயேஅவனதுமூளையிலும் ஆழ்மனதிலும்பதிவாகி விடுகின்றன இந்த்(parent)வளர்ந்தவன் (adult)என்ற முறையில் பதிவாகி வெளிப்படுகிறது இந்த  குணாதிசயங்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்குழந்தை (child )பெற்றோன்  (parent)வளர்ந்தவன் (adult)என்ற முறையில் பதிவாகி வெளிப்படுகிறது


 குழந்தை பிறந்தவுடன் அதன் உயிருக்கும் ,உடலுக்கும்வாழ்வுக்கும் அது பிறருடைய உதவியையே நம்பி இருக்கிறது பெற்றோருடையவும்  மற்றோருடையவும்  அணைப்பு பாசம் ஊக்கம்கண்டிப்பு பரிசு தண்டனை எல்லாமே குழந்தையின் மூளையில் பதிவாகி விடுகிறது இந்தப் பிராயத்தில்பதிவாகும் அனுபவங்களை  வார்த்தைகளால் விவரிக்க இயலாதுவெறும் உணர்வுகளாகத்தான் (feelings) இருக்கும் உணர்வுகளாகப் பதிவாகும் விவரங்கள்பிற்காலத்தில் காணப்படும்  குணாதிசயங்களுள் முக்கிய பங்கு வகிக்கும்  எதையுமே தன்னால் செய்ய முடியாத குழந்தையிடம் . உணர்வுகளால் உந்தப்பட்டு நான் சரியில்லை (I am not ok )என்ற உணர்வே மேலோங்கி நிற்கும் இந்த குணாதிசயத்தின் வெளிப்பாடுபிற்பாடு வளர்ந்த வாழ்விலும் அவர்களிடம் குழந்தயாக(child) தலை காட்டும்

        
மூன்று வயதுக்குள் பதிவாகும் உணர்வுகளால் நான் சரி  இல்லை என்று எண்ணும் குழந்தை தன்னைச் சுற்றி இருப்பவர் பற்றிய அனுபவங்களையும் மூளையில் பதிவாக்கிக் கொள்கிறது இப்படிப்பதிவாகும் உணர்வுகள் சுற்றி இருப்பவர்களின் மொழி செய்கை முதலியவற்றால் உணரப்படுகிறது குழந்தையை அரவணைப்பவர்கள்  அதன் ஆதாரத் தேவையான உணவு உடை போன்றவற்றைக் கொடுப்பதும் கொஞ்சுதல் பரிவு கண்டிப்பு பரிசு தண்டனை போன்றவற்றின் வெளிப்பாடுகள் அவர்களது எதிர்பார்ப்புகளைத் தெரியப்படுத்துவது எல்லாம் அவர்களைப்பற்றிய உணர்வுகளாக குழந்தையின் மூளையில் பெற்றோரின் (parent) அம்சமாக பதிவாகிறது     

      குழந்தைகள்பிறந்துவாழ்க்கையில்சிலகாரியங்களை தானாகச் செய்யத் துவங்குகின்றன மல்லாக்கப் படுக்க வைத்த குழந்தைகள் உருளவும் தவிழவும் எழவும்  நடக்கவும் செய்யத் தொடங்கும் போது தன்னால் முடியும்  என்ற உணர்வு குழந்தையிடம் பதிவாகும்  கண்ணில் கண்ட பொருட்களை எடுத்தும்  பிடித்தும் சுவைத்தும் தானாகவே சில முடிவுகளை எடுக்கும் உணர்வுகளும் குழந்தை யிடம்  பதிவாகும் இந்தகுணதிசயம் வளர்ந்தவன்(adult) என்று அறியப்படும்    

பிறந்து வளர்ந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் குழந்தை பெற்றோன்  வளர்ந்தவன்
(child parent adult )என்ற எல்லோருடைய குணாதிசயங்களும் இருக்கும்  இந்த உணர்வுகள் பெற்றோரால் கற்பிக்கப்பட்டதும் குழந்தையாக உணரப் பட்டதும்   அல்லாமல் தானாகவே அறிந்து கொண்டதுமாகும்   உதாரணமாகதொடாதே சுடுமென்பதை தொட்டுப்பார்த்து  சுட்டுக் கொள்வது போலவும் விழுவாய்  என்பதை போய் விழுந்து அறிந்து கொள்வது போலுமாகும் 



        
பெரும்பாலும் புற உலகத் தொடர்பாக குழந்தைகள் வார்த்தைகளாக இல்லாமல் செய்கைகளாலேயே  தெரிவிக்கின்றன பிற்கால வாழ்வியல் பரிமாற்றங்களில் ஒரு குழந்தையாக வெளிப்படுவதுகண்ணீர் . உதடுகள் துடிப்பது  முகம் கோணுவது  திடீர்க் கோபம் காட்டுவது. கண்களை உருட்டுவது, கீழ்நோக்கிப் பார்ப்பது கேலி செய்வது நகம் கடிப்பதுசிரிப்பது போன்ற உணர்வுகளே வார்த்தைகளாக வெளிப்படுவது எனக்குத் தெரியாது நான் நினைக்கிறேன்   எனக்குக் கவலை இல்லை நான் செய்யப் போகிறேன் போன்றவையே


        குழந்தைகளின் உணர்வுகளில் பெரியவர்களின் குணங்களாக நெரித்த புருவம் கடித்த உதடு .சுட்டிக் காட்டும் விரல், தலை ஆட்டல் கோபக் கண்கள்  இடுப்பில் கை, மார்பில் கட்டிய கைகள் பெருமூச்சுவிடல் , சப்புக் கொட்டுதல் போன்றவை சைகைகளாகப் பதிவாகி இருக்கும்குழந்தைகளின்  உணர்வுகளில் பெற்றோரின் குணங்களாக அவர்கள் உபயோகிக்கும்  வார்த்தைகளில் முக்கியமாக முட்டாள் . போக்கிரி, உபயோகமில்லாதவன்சோம்பேறி ஐயோ பாவம் , எத்தனை முறை கூறுவது. என்ன தைரியம்  ஒரேயடியாய்நிறுத்துவேன்   கட்டாயம் போன்றவைகளும்  பதிவாகி இருக்கும்     

      மேற்கூறிய குழந்தை  மற்றும் பெற்றோர்  குணாதிசயங்கள் வாழ்வியல் பரிமாற்றங்களில்  நான்  சரியில்லை நீ சரி நான் சரியில்லை  நீ சரியில்லை  என்ற முறையில் வெளிப்படுகிறது 

 
       வாழ்வியலின் மூன்றாவது பரிமாற்ற நிலையான நான் சரி-நீ சரியில்லை  (I AM OK . YOU ARE NOT OK) என்பதற்கான உணர்வு மூன்றுவயதுக்குள்ளேயே எப்படிப் பதிவாகி இருக்க முடியும்பொதுவாக இந்தப்பதிவு குழந்தைகளை எடுப்பதுகொஞ்சுவதுதட்டிக் கொடுத்து ஊக்கப் படுத்துவது குறைந்து அடி உதை தண்டனை கண்டிப்பு போன்று குழந்தைகளலைக்கழிக்கப் படும்போது அவர்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப் படும்போதும் , அந்தத் துன்பங்களில் இருந்து மீளும்போதும் நான் சரி . என்னை விடு நீ சரி இல்லை என்ற உணர்வைப்பெறு கிறார்கள். இந்த நிலையில் இருந்தவன்  பிற்காலத்தில் எல்லோருமே சரியில்லாதவர்கள் என்ற நிலையில் நீடிக்கவே  விரும்புகிறான் அவனுள் பதிவாகி இருக்கும்  பெற்றோர் பற்றிய உணர்வு அவனுடைய செயல்களுக்கு  அனுமதி அளிப்பது போல் இருக்கும் 

\     இனி  வாழ்வியல் பரிமாற்றத்தில் (TRANSACTION)நான்காவது  நான் சரி –நீசரி(IAMOK YOU ARE OK )என்ற நிலைக்கு வருவோம் இந்த நிலை மற்ற மூன்று நிலைகளில் இருந்து மாறு பட்டது மற்ற மூன்று நிலைகளும் அறியாப் பருவத்தில் அறியாமலேயே ஊன்றப்பட்டது பெரும்பாலோர் குணம் முதல் நிலையையே நான் சரி இல்லை  நீ சரி என்பதை ஒத்தே இருக்கிறதுபெரும்பாலும் மாறுவதில்லை துரதிர்ஷ்டவசமாக சிலர் இரண்டாம் நிலைக்கும்  மூன்றாம் நிலைக்கும்  மாறுகிறார்களிந்த வாழ்க்கையின்  பரிமாற்ற நிலைகள் மூன்றாவது வயதுக்குள்ளாகவே தீர்மானிக்கப்படுவதாக வல்லுனர்கள் கருதுகிறார்கள்



       இந்த நிலைகள் குழந்தையில் உள்ள வளர்ந்தவன் (ADULT) வாழ்க்கையின் அர்த்தத்தை அறிந்து கொள்ள எடுக்கும்  முயற்சியின் முடிவைத் தீர்மானிக்கிறது முதல் மூன்று நிலைகளும் உணர்வுகளால் தீர்மானிக்கப் படுகிறது நான்காவது நிலை எண்ணம் நம்பிக்கை செயல்கள் மூலம் உருவாகிறது முதல் மூன்று நிலைகள் ஏன் என்பதன் விடையாக இருக்கும்  நான்காம் நிலை ஏன்  கூடாது என்பதை செயல்படுத்துவதில் இருக்கும்  ஆரம்பகட்டத்தில் அவர்கள் சரி என்ற நிலைக்கு உட்படுத்தப்பட்டு , அதை அவர்கள் காண்பிக்க வழிமுறைகளும் கொடுக்கப்பட்டு
வாழ்க்கையின் அர்த்தத்தை அறிந்து கொள்ள எடுக்கும் முயற்சியின் முடிவைத் தீர்மானிக்கிறது முதல் மூன்றுநிலைகளும் உணர்வுகளால்  தீர்மானிக்கப் படுகிறது
 நான்காவது நிலை எண்ணம் நம்பிக்கை செயல்கள்மூலம்  உருவாகிறதுமுதல் மூன்று நிலைகள் ஏன்  என்பதன் விடையாக இருக்கும்  நான்காம் நிலை ஏன் கூடாதுஎன்பதை செயல் படுத்துவதில் இருக்கும் ஆரம்பகட்டத்தில் அவர்கள் சரிஎன்ற உட்படுத்தப்பட்டு , அதை அவர்கள் காண்பிக்க வ்ழிமுறைகளும் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படும்  குழந்தைகள் அதிர்ஷ்ட சாலிகளே

நான்  சரி –நீசரி என்றநிலை உணர்வுகளால் ஏற்படுவதுஅல்ல எண்ணங்களினாலும் சோதனைகளாலும் எடுக்கப் படுவது

 பரிமாற்றங்களில்  குழந்தை  (CHILD) குணாதிசயம் ,பெற்றோர் (PARENT)குணாதிசயம்
வெளிப்படும்போது சாதாரணமாகத் தெரிய வரும்  செய்கைகளையும்  வார்த்தைகளையும்  ஏற்கனவே பார்த்தோம்  அதுபோல் வளர்ந்தவன் (ADULT) குணாதிசயம் அவன் கண்களிலும்  காணலாம் ஆழ்ந்த தீர்க்கமான படபடப்பில்லாத
நேரான பார்வை . வார்த்தைகளில் ஏன் என்ன எங்கு எதற்கு யார் எப்படி போன்றவற்ற்ன் வெளிப்பாடாகவும் உண்மை பொய், தவறு தெரியாது நான் நினைக்கிறேன் என்பனவற்றின் மூலமும் வெளிப்படுத்தப் படுகிறது ஏற்கனவே பெற்றோனில் (PARENT )பதிவாகி இருக்கும்  விவரங்களின் (DATA)அடிப்படையில் வளர்ந்தவன் (ADULT ) பிரித்து எடுக்கிறான் 

      மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் கடந்து வந்திருந்தாலும்  நம்மில் பலர் சரியில்லைஎன்ற நிலைப்பாட்டுடன் கூடியஏதுமே செய்ய இயலாத குழந்தையின் நிலையிலேயே  வாழ்க்கையைக்  கழிக்கிறோம் உணர்வுகளால் பாதிக்கப்பட்ட நிலை பாடுகளில்   நான்  சரியில்லை என்ற குழந்தையின் 
(CH ILD)  அணுகு முறையை   ஏற்பவர்கள் நான் சரி  என்ற நிலைப்பாடுடைய வளர்ந்தவனின்  (ADULT)பரிமாற்றத்தை  சாதாரணமாகத்   தவிர்க்கிறார்கள்
   
      பரிமாற்ற அலசலில் மனிதர்களின் குணாதிசயங்களின் காரணங்கள் தெரிய வரும்போது புரிதலும்  அதிகரிக்கும்
 
இப்படியும்  ஒரு பின்னூட்டம்  மனதில் பட்டதைச் சொல்லலாம் என்று காண்பிக்க
இங்கும் ஒரு கேள்விப்ப‌ட்ட‌ செய்தி. அண்ண‌ன் மிக நல்ல‌வ‌ன் எந்த கெட்ட‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளும் இல்லாத‌ பெர்பெக்ட் ஜென்டில்மேன். த‌ம்பியோ த‌லைகீழ் ப‌கை, புகை, ம‌து, மாது, சூது என் அன‌த்தும் அணைப்ப‌வ‌ர். இருவ‌ருக்குமே ரோல் மாட‌ல் அவ‌ர்க‌ள‌து த‌ந்தைதான். அவ‌ரும் த‌ம்பியைப் போன்று எல்ல‌ ப‌ழக்க‌மும் வ‌ழ‌க்க‌மாய் கொண்ட‌வர். தம்பி அவ‌ர் வ‌ழியிலும், அண்ண‌ன் எதிர் வ‌ழியிலும் வாழ்வதாய் முடியும்.

ன்ன‌ளவில் ஒவ்வொருக்குள்ளும் இந்த‌ நான்கு (1.நான் சரியில்லை-நீ சரி (I AM NOT OK. -
YOU ARE OK.) 2. நான் சரியில்லை- நீ சரியில்லை (I AM NOT OK -
YOU ARE NOT OK.) 3.நான் சரி- நீ சரியில்லை.(I AM OK. -YOU ARE 
NOT OK) 4.நான் சரி- நீ சரி (I AM OK YOU ARE ஓக் )) இருந்து ச‌ம‌ய சூழ‌லுக்கு ஏற்ப‌ ஒரு குறிப்பிட்ட‌ க‌லவையில் அல்ல‌து த‌னித்து வெளிப்படுகிற‌து என்ப‌தே இந்த‌ச் சூழ‌லில் என் வெளிப்பாடு. உங்க‌ளைப் போன்ற‌வ‌ர் ப‌திவில் தான் ம‌ன‌ம் திற‌ந்து எழுத‌ முடியும், ரெம்ப‌ உறுத்தான‌வ‌ர் வீடுக‌ளில்  வெறும் சார‌த்துட‌ன் இருத்த‌ல் போல.