Friday, October 30, 2015

ஓலா..ஓலா...


                                                 ஓலா ஓலா
                                                 ------------------
    முகநூலில் ஸ்ரீராம் அவர்கள்சென்னையில் ஃபாஸ்ட் ட்ராக் காரில் பயணம் செய்தது பற்றி எழுதி இருந்தார்  பெங்களூரின்  ஓலா செர்வீஸ் பற்றி எழுதலாம் என்று தோன்றியது அதுவே இந்தப்பதிவு


ஒரு இடத்துக்குப் போக வேண்டும் என்றால் நீங்கள் புறப்படும் இடத்துக்கே  வந்து உங்களைப் பிக் அப் செய்து நீங்கள் போகுமிடத்துக்கு கொண்டு விடும் வசதி இந்த ஓலா வாடகைக்காரில் கிடைக்கிறது தொலை பேசி அழைப்பெல்லாம் கிடையாது  ஓலா ஆப்ஸை  நீங்கள்  டௌன் லொட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் நீங்கள் எங்காவது பயணிக்க விரும்பினால் அந்த தரவிறக்கப்பட்ட  ஆப்ஸைச் சொடுக்கினால்  ஒரு மாப் வருகிறது. அதில் நீங்கள் இருக்குமிடம் காட்டப்படுகிறது
உங்களுக்குத் தேவையான கார் , செடான் போன்றவை எவ்வளவு நிமிஷத்தில் வரும் என்று காட்டப்படுகிறதுஎப்பொழுது தேவை . உடனேயா பிற்பாடா  என்று குறிப்பிடவேண்டும் உடன் என்று குறிப்பிட்டால்  சற்று நேரத்தில் ஒரு குறுஞ்செய்தி வருகிறது வண்டி ஓட்டியின் தொலைபேசி எண்வருகிறது நாம் அவரைத் தொடர்பு கொண்டு நாம் இருக்குமிடம்  அவரது வண்டி எண் அவர் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அவரை நம் இருப்பிடத்து எந்த சிரமமும் இல்லாமல்  வரவழைக்கலாம்
பெங்களூரில்  ஓலாவில் பயணம் செய்ய காருக்கு வாடகையாக  முதல் நான்கு கிமீ/ -க்கு ரூ80-/ ம்  அதன் பின் ஒவ்வொரு கி.மீ.க்கும்  ரூ 10-ம் சார்ஜ் என்கிறார்கள். உதாரணத்துக்கு 20 கிமீ தூரத்துக்கு ரூ240 ஆகும்  இது அப்படியே என்றால் பரவாயில்லை. ஆனால் நாம் செல்லும் இடத்தை அடைந்தபின்  ரூ 300க்கும் மேல் வாடகை காட்டுகிறது  எப்படி என்றால்  பயணம் செய்யும் நேரத்துக்கும் பணம் வசூலிக்கப் படுகிறது  20 கி மீ தூரத்துக்கு பெங்களூரில் ஒரு மணிநேரத்துக்கும் மேல் ஆகும்  பயணம் செய்யும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரூ ஒன்று என்று வசூலிக்கிறார்கள் இது எல்லாம் பீக் அவர்ஸ் க்கு ஒத்துவராது  பீக் அவர்ஸில் பயணம் செய்தால்  வாடகை கூடும்  அது பற்றி ஆப்ஸில் எந்த செய்தியுமில்லை.  வாடகைக் காரில் ஏறி அமர்ந்தால் எவ்வளவு பணம் கொடுக்கப்படவேண்டும் என்பது தெரியாத ஒன்று
ஓலா கம்பனியினர்  நமக்கு அடிக்கடி மெயில் அனுப்பி சலுகைகளை அறிவிக்கின்றனர்  ஆனால் நம் மெயில் எதுவும் அவர்களுக்குப் போகாது
அது ஒரு ஒன் வே ட்ராஃபிக் நாம் மெயில் அனுப்பினால் டெலிவரி ஃபெய்ல்ட் என்று வரும் பெங்களூரில் ஆட்டோவுக்கு ஒரு கிமீக்கு  ரூ13 வாங்குகிறார்கள்   மூன்று பேர் போகலாம் பொதுவாக பிரச்சனை இல்லை. சில ட்ரைவர்கள் மட்டும் வரத் தயங்குவார்கள் அல்லது அதிக கட்டணம் கேட்பார்கள் பணம் பற்றிய கவலை இல்லாமல் நம்மிடத்துக்கே வந்து நாம் போகுமிடத்துக்குக்  கூட்டிப்போகும் வசதி ஓலாவில் உண்டு. ஆனால்  இதே சேவையை இவர்கள் இன்னும் திறந்த மனத்துடன் செய்தால் நன்றாக இருக்கும்    
   
   


                              


Thursday, October 29, 2015

எனக்கு விடையை விற்கவும் -ஒரு கேம் ஷோ


                        எனக்கு விடையை விற்கவும்
                        -------------------------------------------------
                   SELL ME THE ANSWER - A GAME SHOW
                   --------------------------------------------------------

பொதுவாக தொலைக்காட்சிகளில் திரைப்படம்  தவிர்த்த சில நிகழ்ச்சிகளை அவ்வப்போது பார்ப்பதுண்டு. என்ன நிகழ்ச்சி பார்க்கலாம் என்று ஒரு முறை தொலைக்காட்சி தளங்களில் மேயும்போது ஒரு நிகழ்ச்சியை ஏஷியா நெட் தொலைக்காட்சியில் கண்டேன்  சற்று வித்தியாசமாக இருந்ததால் தொடர ஆரம்பித்தேன்  நிகழ்ச்சி பெயர் செல் மி த ஆன்ஸர்( விடையை எனக்கு விற்கவும்) வார நாட்களில் மாலை நான்கரை மணிமுதல் ஒரு மணி நேரம் நடக்கிறது. மலையாள நடிகர் முகேஷ் நடத்துகிறார்  நான் கண்ட அன்று ஒரு சிறுமி விஸ்மயா என்று பெயர் வயது பத்து இருக்கலாம் ஒரு கூலித் தொழிலாளியின் மகள்  சம்ஸ்கிருதம் படிப்பதாகக் கூறினாள்அவள் போட்டியாளராகப் பங்கு ஏற்றிருந்தாள். பார்வையாளர்களில் பெரும்பாலோர் பள்ளி மாணவ மாணவிகளே.
போட்டி துவங்கும்  முன்  போட்டியாளருக்கு ரூ. 1000/ -மனி பாக் என்று வழங்கப் படுகிறது. முகேஷ் இரண்டாயிரம் ரூபாய்க்கான  ஒரு கேள்வி கேட்கிறார் அதற்கு பங்கேற்பவர் விடை அளிக்க வேண்டும்  விடை தெரியாவிட்டால் பார்வையாளரிடம் செல் மி த ஆன்ஸர் என்று கேட்கலாம்  பார்வையாளர்களில் பலரும் முன் வர போட்டியாளர் இருவரைத் தேர்ந்தெடுக்கிறார்  தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும்  தங்களைப் பற்றி அறிவித்து விட்டு தான் எவ்வாறு அப்போட்டியாளருக்கு  உதவமுடியும்  என்று கூறி தன்னைத் தேர்ந்தெடுக்க அப்பீல் செய்கிறார் இருவருடைய அப்பீலையும் கேட்டு போட்டியாளர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார்  பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தன் பதிலை விற்பதற்கு விலை பேசுகிறார்  போட்டியாளருக்கும்  இவருக்கும் பேரம்  நடக்கிறது விலை பேச என்று இவரிடம் இருக்கும் தொகையில் எவ்வளவு அதிகத் தொகைக்கு  விற்பனை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்  பேரம்பேச  போட்டியாளர் எவ்வளவு குறைந்த விலைக்கு விடையை வாங்க முடியுமோ அந்த அளவு பேரம் பேசுகிறார் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு பேரம் படிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பதிலை போட்டியாளர் ஏற்றுக் கொண்டு பதிலைப் பக்காவாக்குகிறார்  விடை சரியாய் இருந்தால் தேர்ந்தெடுத்தவருக்கு பேரம் பேசப்பட்ட தொகை கிடைக்கிறது போட்டியாளர் அறிவிக்கப்பட்ட தொகையை வெல்கிறார்  இப்படியே போட்டித்தொகை கூடிக்கொண்டே போகிறது
 நான்  அன்று பார்த்த போட்டியில்  தேர்ந்தெடுக்கப்பட்ட பையன் தனக்கு பதிலில் ஐம்பது சதவீதமே நம்பிக்கை என்று கூறினான்  பதில் சரி என்று தெரிந்ததும் அழுதே விட்டான் ஏன் என்று கேட்டதற்கு  ஒரு வேளை தன் பதிலால் அச்சிறுமி தோல்வி அடைந்தால் தன்னால் ஒரு ஏழைச் சிறுமியின் வெற்றி வாய்ப்பு போயிருக்குமே  என்று நினைத்ததால் அழுதேன் என்றான்  அவனும்  ஒரு கூலித் தொழிலாளியின் ,மகன்
அங்கே மனிதாபிமானம் வென்றது கண்டு மகிழ்ச்சியாய் இருந்தது அப்போட்டியில் அச்சிறுமி ரூ 80,000/ -க்குமேல் வென்றாள்.  விடையை விற்க வந்திருக்கும் பலரும் பள்ளிச் சிறுவர் சிறுமியரே  எந்தக் கேள்விக்கும் பதில் தெரியாமலேயே போட்டிக்கு வந்திருந்த பெண் ஒரு கணிசமான பரிசுத்தொகையை வென்றது குறிப்பிடத்தக்கது
 இந்த கேம்  ஷோ எனக்குப் பிடித்திருந்தது . நீங்களும் பாருங்களேன் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாவது மறு நாள் மாலை நான்கரை மணிக்கு  மறு ஒளிபரப்பாகிறதுஎனக்கு இந்த கேம் ஷோவில் பிடித்தது என்னவென்றால் பங்கு பெறுபவரும் அவருக்கு விடையை விற்பவரும் வெறுங்கையுடன் போவதில்லை சிறார்களின் பங்கேற்பு மகிழ்வு தருகிறது. நடிகர் முகேஷ் அதிக ஆரவாரமில்லாமல் நடத்துகிறார்   .   
   

                              


                   

Sunday, October 25, 2015

நவராத்திரி துதி



                                                 நவராத்திரி துதி
                                                --------------------------

சமயபுரம் மாரியம்மன் தஞ்சாவூர் ஓவியம் 



ணு அண்டம் பேரண்டம் அனைத்தையும்

இயக்கும் சக்தியே உருவமும் பெயரும் ஏதுமில்லா
உன்னை என்ன சொல்லிப் போற்றுவேன்
.மலையத் துவசன் பெற்ற பெரு வாழ்வென்பேனா-

புவி மடந்தை- நாமருவிய கலை மடந்தை-
ஜெய மடந்தை என்பேனா-சர்வசக்தி பொருந்திய
சர்வாங்க சுந்தரி என்பேனா--நான்அவலத்தில்
அழுந்தும்போது என் நாவினில் வந்தமரும்

முருகனும் நீயே,- கண்ணனும் நீயே- என்னுள்
இருப்போனும் ஏனையோர் துதிக்கும் எல்லா
நாமங்களும் கொண்டவளு(னு)ம் நீயல்லவா- நீ என்
அப்பனல்லவா, அம்மையல்லவா, கண் துஞ்சாது எனைக்

காக்கும் தாரமல்லவா.- யாதுமாகி நிற்கும் எல்லாமே
கலை மகளே, அலை மகளே, மலைமகளே

உயிருள்ள,உயிரற்ற, அனைத்திலும் இருப்பவளே,

எனை ஈன்ற தாயின் தாயே- எல்லாம் நீயே

உன்னை வணங்குகிறேன்
( அண்மையில்  நவராத்திரி பதிவுகளாக திருமதி கீதா சாம்பசிவம் நவராத்திரியின் போது வழிபடும் தேவியர்களின் பெயர்களை ஒவ்வோரு நாளுக்கொன்றாகக்  கூறி எழுதி வந்தார். எனக்கு ஒரே கன்ஃப்யூஷன்  நான் ஒரு துதிப்பாடல் எழுத முயற்சித்தேன்  அதன் விளைவே மேல் கண்ட பதிவு) 

      
மூன்றாண்டுகளுக்கு முந்தைய கொலு





Thursday, October 22, 2015

புதுக் கோட்டை VIA மலைக்கோட்டை ( 6)


                              புதுக் கோட்டைvia மலைக் கோட்டை (6)
                              ------------------------------------------------------------

                                  பதிவுக்கும் காணொளிக்கும் சம்பந்தமில்லை


எண்ணங்கள் ( தொடர்ச்சி)

இன்னும் சொல்லப் போவது தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக்கழகமும் புதுக் கோட்டை வலைப்பதிவர் குழுவும் இணைந்து நடத்திய ஐந்து பிரிவுகளில் ஆன மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் ஐந்து வகைப் பிரிவுகளில் கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரைகள்வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டிவகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டிவகை-(4) புதுக்கவிதைப் போட்டிவகை-(5) மரபுக்கவிதைப் போட்டி



இதில் கவனிக்க வேண்டிய அம்சங்களாக
முதல் வகையில்
கணினியில் தமிழ், அறிவியல் தமிழ், இணையத்தில் தமிழ், கையடக்கக் கருவியில் தமிழ் (கணினி பற்றியவை மட்டுமல்ல நவீனகாலத்தில் தமிழ் வளர்ந்துள்ள அனைத்துப் புதிய துறையும் அடக்கம்) போன்ற வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வமான யோசனைகள் - 4 பக்க அளவில் 4 பக்கம் - இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.
 இரண்டாம் வகையில்
சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள் - 4 பக்க அளவில் 4 பக்கம் - பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.
மூன்றாம் வகையில்
பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - 4 பக்க அளவில் 4 பக்கம் - தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்
.நான்காம் வகையில்
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25 வரிகளில் - அழகியல் மிளிரும் தலைப்போடு.
ஐந்தாம் வகையில் .
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் - அழகியல் ஒளிரும் தலைப்போடு...
போட்டிக்கான பதிவுகள் இருக்க வேண்டும் என்பது மாகும் பரிசுத் தொகையாகமொத்தம் ரூ 50000 அறிவிக்கப் பட்டிருந்தது.

இதெல்லாம் தெரிந்தது தானே என்பவர்கள் சிந்திக்க வேண்டியது  வந்த பதிவுகள் கொடுக்கப்பட்டிருந்த தலைப்புகளில்  கொடுக்கப்பட்டிருந்ததா என்பதாகும் எனக்கென்னவோ போட்டிக்கு வந்தபதிவுகள் இந்தக் கட்டுக்குள் இருந்ததா என்னும் சந்தேகமே அதிலும் பெண்கள் முன்னேற்றம் என்னும் வகைக்கு வந்த போட்டிக் கட்டுரைகள் பல இதில் அடங்கியதாகத் தெரியவில்லை. போட்டி என்று வந்தால் யாராவது ஒரு சிலர்தான் வெற்றி பெற முடியும் ஆனால் அவற்றைத் தேர்ந்தெடுக்கும் நடுவர்கள் போட்டியாளர்களுக்கு அறிமுகமாகி இருக்கக் கூடாது என்று முன்பே ஆலோசனைக் கூறினேன் ஏன் என்றால் தேர்வில் bias  வர வாய்ப்பு உள்ளதென்று  நினைவுப்படுத்தி பதிவும் எழுதி இருந்தேன்  இதை நான் ஏன்  சொன்னேன் என்றால்  எல்லாம் முடிந்தபின் குறைகளைக் கூறுவதை விட அவை வராமலிருப்பதைச் சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான்
 ஆனால் நடந்தது நடுவர்களில் அநேகம் பேர்  ஒருவரை ஒருவர் அறிந்த வலைப் பதிவர்கள்  கொடுத்திருந்த நிபந்தனைகளுக்குள்போட்டிக்கு வந்திருந்தபதிவுகள் இருந்தனவா என்று கூட கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது சுய இன்பம் தவறில்லை அதுவே பெண்கள் முன்னேற்றம்  என்பது போல் வந்திருந்த போட்டிக்கட்டுரைக்கு முதல் பரிசு.  இதெல்லாம் பரிசு கிடைக்காதவனின் புலம்பல் என்று ஒதுக்கி விடுதல் தவறாகும் சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருத்தல் வேண்டும் என்பார்கள்எதிலும் ஒரு ட்ரான்ஸ்பெரன்சி இருக்க வேண்டும் போட்டிக்கு வந்த பதிவுகளைத் தேர்ந்தெடுக்கும் போது  என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப் பட்டிருக்கின்றன  என்பதும்  தெரியவில்லை.போட்டி என்று இருந்தால் வெற்றியும் இருக்கலாம் தோல்வியும் இருக்கலாம் அதை நன்கறிந்தவன் நான் போட்டிகள் எல்லாம் முடிந்தபிறகாவது பின்பற்றப்பட்ட வழிமுறைகள் குறித்து விளக்கம் இருக்கலாம்
 இதல்லாமல்  விமரிசனப் போட்டி என்று ஒன்று.  அதில் யாராவது வெற்றிபெறும் வாய்ப்பே மிகவும் குறைவு என்று முன்பே எழுதினேன்  அதைக வாசகர்களையும் பதிவர்களையும்  பங்கு பெறச்செய்யும் உத்தி என்றார்கள் இதற்கு வந்த போட்டியாளர்களின்  எண்ணிக்கையே 20க்கும் குறைவு.  அதிலும் இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு என்பது முடிவானது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை
தயை கூர்ந்து இதைப் படிப்பவர்களெந்த உள்நோக்கமும் கற்பிக்க வேண்டாம்  நான் பயந்தபடி முடிவுகள் இருப்பதால் இதை எழுதுகிறேன் என் பதிவு ஒன்றுக்கு வந்த பின்னூட்டமொன்றில்
தமிழ் வலைப்பதிவுலகை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல 'இனி செய்ய வேண்டுவது என்ன?' என்று ஓர் அமர்வு உடகார்ந்து கருத்துப் பகிர்தல்கள் நடந்தால் அது ஒரு ஆக்கபூர்வமான முயற்சியாக அமையும் என்பது திண்ணம்-- ஜீவி
என்னும் கருத்து இருந்தது சிந்தித்து செயல்படவேண்டிய ஆலோசனை இது.

நான் பெங்களூர் எச் ஏ எல்  நிறுவனத்தில் பயிற்சியாளனாகச் சேர்ந்ததும் பாம்பே அருகிலுள்ள அம்பர்நாத் என்னுமிடத்தில்  மேற்பயிற்சிக்காக  அனுப்பப் பட்டிருந்தேன் எனவும் வலையில் ஏற்கனவே எழுதி இருக்கிறேன் அந்தப் பயிற்சிப் பள்ளியில்  1957 முதல் இரண்டாண்டுகள்  பயிற்சியில் இருந்தேன்  அந்த இடம்  ஒரு மினி இந்தியா   ஒரே நேரத்தில் 500 பேர்  பயிற்சியில் இருந்த இடம் ஆண்டொன்று போக  பழையவர்கள் சிலர் போவதும் புதியவர்கள் சிலர் வருவதும்  வழக்கமாக நடக்கும் அங்கு பயிற்சி பெற்ற பலரும் உலகின் பல இடங்களில் நல்ல நிலையில் இருக்கின்றனர்  இம்மாதிரி பயிற்சி பெற்றவர்கள் ஒன்று கூடலாமே என்னும் எண்ணம் சிலருக்கு வந்து  2010-ம் ஆண்டு ஜனவரி மாதம்  சென்னையில் முதல் சந்திப்பு நிகழ்ந்தது  வந்திருந்தவர்களில் பெரும் பான்மையோர் அவர்களது எழுபதுகளில் இருந்தனர்  சென்னை நேரு விளையாட்டரங்கில்  இந்தக் கூடல் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.  அதில் பங்கு பெறுபவர் ஆளுக்கு ரூ 600=/ செலுத்த வேண்டும்(மனைவியும் வரலாம்)  ஒரு நாள் நிகழ்ச்சி உலகின்  பல பகுதிகளிலும் இருந்து பலரும் வந்திருந்தனார்  ஒரு சிலரே தொடர்பில் இருந்தனர் என்றாலும்  பங்கு பெறுவதில் குறைச்சல் இருக்கவில்லை.  பங்கு பெற்ற அனைவருக்கும்  ஒரு ஷர்ட் ATS  முத்திரையுடன் நினைவுப் பரிசாக வழங்கப் பட்டது. விழாவுக்காக ஒரு சூவநீர்  தயாரிக்கப்பட்டது  வந்திருந்தோர் அனைவருக்கும் மதிய உணவும்  மாலை தேநீரும் வழங்கப்பட்டது.  இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வோர் இடத்தில் சந்திப்பு நிகழ்கிறது 2016-ல் ஃபெப்ருவரி மாதம்  27 அல்லது 28 தேதியில்  பெங்களூரில் நடக்க இருக்கிறது. பெங்களூர் சந்திப்பில் கலந்து கொள்பவர்   தம்பதியர் இருவரானால் ரூ2500ம் ஒருவரானால் ரூ1500  வசூலிக்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது முன்பே பணம் அனுப்பிப் பதிவு செய்து கொள்ள வேண்டும் இதை எல்லாம் நான் பதிவிடக் காரணம்  புதுகையில் நிதிப் பற்றாக்குறை என்று எழுதி இருப்பதுதான் மதுரைப் பதிவர் சந்திப்பிலேயே வருவதாகக் கூறி வராதவர்கள் அதிகம் புதுகையில் 400 பேர் எதிர்பார்க்கப்பட்டு நூறுக்கும் குறைவானவர்களே வருகை தந்திருந்தனர்  ஒரு திருமண அழைப்புக்கே நூறு பேர் எதிர்பார்க்கப் படும் இடத்தில்  எண்பது பேருக்கே உணவுக்குச் சொல்வார்கள் இங்கு கிடைக்கும் தகவல்படி நிறையவே பண விரயம் நேர்ந்திருக்கும்  போலிருக்கிறது.  மேலும் இந்தக் கையேடு விஷயம்  சரியாகச் சிந்திக்கப் படவில்லையோ என்று தோன்றுகிறது ரூபாய் 30000-/  குறைகிறது என்றும்  கையேடு விற்று சரிசெய்யலாம் என்றும் எண்ணுவது சரியா தெரியவில்லை நன்கொடை ஏதும் வேண்டாம் என்பதும் புரியவில்லை.கஷ்டப்பட்டு விழா நடத்தி கைகாசும் போட வேண்டும் என்றால் அது சரியில்லை என்றே தோன்றுகிறது இப்போது கொள்வாரில்லையே என்று ஆதங்கப்பட்டு என்ன லாபம் வருகைக்கான கட்டணம் முன்பே வசூலித்திருந்தால் வராதவர்கள் எண்ணிக்கை கஷ்டம் கொடுத்திருக்காது அடுத்த பதிவர் சந்திப்பு எங்கு என்று முடிவாகாத நிலையில்  அடுத்து விழா நடத்துபவர்கள் கவனமாக இருக்கவேண்டும் இதைத்தான்  முன்பே நண்பர் ஒருவர் என் பதிவு ஒன்றுக்கு இட்ட பின்னூட்டத்தைக் குறிப்பிட்டிருந்தேன்  அதையே  மீண்டும் சொல்கிறேன்
  
தமிழ் வலைப்பதிவுலகை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல 'இனி செய்ய வேண்டுவது என்ன?' என்று ஓர் அமர்வு உடகார்ந்து கருத்துப் பகிர்தல்கள் நடந்தால் அது ஒரு ஆக்கபூர்வமான முயற்சியாக அமையும் என்பது திண்ணம்-ஜீவி 

நினைவுப் பரிசாகக் கொடுக்கப்பட்ட ஷர்ட்டின் பின் பக்கம்

அம்பர்நாத் ஆலும்னி மீட்டில் கொடுத்த நினைவுப் பரிசு  முன் புறம் 

   

              
                


                   

 



   

Tuesday, October 20, 2015

புதுக்கோட்டை via மலைக் கோட்டை(5)


                                புதுக் கோட்டை via மலைக் கோட்டை (5)
                                  ------------------------------------------------------------------
புதுக் கோட்டைvia மலைக்கோட்டை  என் எண்ணங்கள்
இப்பதிவை எழுதுவதா வேண்டாமா என்ற பலத்த சிந்தனைக்குப் பின் எழுதுகிறேன் 11-10-2015  நடை பெற்ற  பதிவர் விழா நிகழ்வுகள் குறித்துப் பலரும் எழுதுகிறார்கள் எழுதுவார்கள் நானும் கடந்த நான்கு பகுதிகளில் பதிவர் விழாவுக்கு நான் வந்ததையும்  சந்தித்தவர் பற்றியும் எழுதி விட்டேன் எல்லாமே MUNDANE பதிவுகள்ஆகவே இந்தப் பதிவு விழா பற்றியது அல்லi மனதில் பட்டதைச் சொல்வது என் குணம்தானே அதை நான் ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும்  ஆனால் இதில் சொல்லப் போகும் விஷயங்கள் யார் மனதையும் நோகடிக்க அல்ல. பலருக்கும் தோன்றி இருக்கலாம்  சொல்லி ஏன் பொல்லாப்பை கட்டிக் கொள்ள வேண்டும் எனவே நினைப்பவர்களே பதிவுலகில் அதிகம் என்பது என் அனுபவப் பாடம்
பொது வாக இம்மாதிரி சந்திப்புகளை ஆர்கனைஸ்  செய்து நடத்துவது மிகவும் சிரமமான ஒன்று. அர்ப்பணிப்பும் மனோபலமும் தேவை. அது நம் புதுக் கோட்டை வலைப்பதிவர் சந்திப்பினர் குழுவுக்கு இருந்ததுஅதனைத் திறம்பட நடத்திச்சென்ற திரு முத்து நிலவனுக்கு நிறையவே இருந்தது. கிரிக்கட் விளையாட்டில்  காப்டனைப் போல் வீரர்களா  வீரர்களை போல் காப்டனா என்னும் கேள்வி அவ்வப்போது எழும்  அதுவும் தோல்விகளைச் சந்திக்கும் குழுவில் அதிகமாகவே இருக்கும் எந்தக் குறையும் இல்லாமல் விழா நடை பெற்றிருக்கலாம் ஏன் என்றால் நான் முன்பே சொன்னதுபோல் காப்டனும் வீரர்களும் ஒருங்கே இணைந்து நடந்தனர். இருந்தாலும் எனக்குத் தோன்றுவது எந்த ஆலோசனை வந்தாலும்  அதை ஏற்காமல் அதே சமயம் உதாசீனப்படுத்துவது போலும் அல்லாமல் செயல் பட்டனர். ஓரிரு விஷயங்களை குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்  முதலில் கவிதைக்கு ஓவியம் என்று அறிவித்தார்கள்  எந்த பதிவருக்கும் இருக்கும் ஆசைதானே தன் கவிதைக்கு ஓவியம் வரையப் படுவது எனக்கும் இருந்தது தெரிந்த உடன் இரு கவிதைகள் அனுப்பினேன் உடனே மறுபடி வந்தது. கவிதைகள்பத்து வரிகளுக்குள் இருக்க வேண்டும் என்று. இதை முதலிலேயே அறிவித்திருக்கலாம் ஏனோ செய்ய வில்லை. பதிவர்கள் அவர்கள் ஒருவேளை ஆங்கிலத்தில் சொல்வது போல் taken  for granted  இருந்தும்  நான் பத்து வரிகளுக்குள்ளான  இன்னொரு கவிதையைஎழுதி அனுப்பினேன்  அது ஏற்கப்பட்டதா என்று அறியாத நிலையில்  பதிவர் விழாவுக்கு ஆர்வத்துடன் சென்றபோது ஏதும் இல்லாமல் ஏமாற்ற மடைந்தேன் ஓவியம் வரைய என்ன  criteria  என்பது கூறப்படவில்லை  இந்தப் பத்து வரிக் கண்டிஷன் தவிர  நான் எழுதி அனுப்பி நிராகரிக்கப்பட்ட கவிதை கீழே
 . அய்யா வணக்கம்
தங்களின் ஆர்வத்திற்கும் ஆற்றலுக்கும் எங்கள் வணக்கம்.
ஓவியத்திற்கான கவிதை 10 வரிகளுக்குள் இருந்தால்தான் படம் வரைய இடம் கிடைக்கும் (பெரிய கார்டு போர்டில் பாதி கவிதை, மீதி இடம் ஓவியத்திற்கு)
தாங்களே சுருக்கித்தந்தாலும் சரி, அல்லது வேறு சிறிய கவிதை இருந்தால் அனுப்பினாலும் சரி.
நன்றி வணக்கம்.

அன்புடையீர் எனக்கு இந்த விதி தெரிந்திருக்கவில்லை. இருந்தால் என்ன.?கவிச் சோலையில் ஒரு போட்டிக்காக நான் எழுதிய கவிதை கீழே. முத்தொள்ளாயிரப் பாடல் ஒன்றுக்குப் புதுக்கவிதை  ஒன்றுக்கு இரண்டாக எழுதி இருந்தேன் அது சரியாகுமா பாருங்கள்
முத்தொள்ளாயிரப் பாடல்
---------------------------------------
வீறுசால்  மன்னர் விருதாம் வெண்குடையை
பாற்  எறிந்த பரிச்சயத்தால் -தேறாது
செங்கண்மாக  கோதை  சின வெங்களி  யானை
திங்கள் மேல் நீட்டுந்தன்  கை.
என் கவிதை -1
----------------------
சேர மன்னன் வீர மறியாது,
வெற்றி கொள்ளும்  ஆவலில்,
செருக்கோடு  செருக்களம்  புகுந்த
வீரர்தம் தேர்க் குடைகளை
சென்றங்கு  செருமுனையில்  இழுத்து,
மிதித்துப் பழகிய  வெங்கரியின்  ஏறோன்று
 
நீல வானில்  ஒளி வீசும்
முழு வெண்ணிலவை மாற்றானின் தேர்க்
குடை என்றெண்ணித தன துதிக்கை
கொண்டிழுக்க முயன்றது (  தாம். )  ,
========================================
என் கவிதை -2
     சேர  ராசாவ  சண்டைல  சுளுவா
     
கெலிக்க  லாம்னு  தேரோட வர
     
சிப்பாய்ங்க  தேர்மேல கீற கொடைங்கள
     
சும்மா இசுத்து மெதிச்சு காலி பண்ணிப் பளகின
     
சேரனோட  யானே ,வட்ட நெலாவப் பாத்து,
     
தேர்க் கொடேன்னு நெனச்சு இசுக்க
     
அதோட தும்பிக்கைய  நீட்டிச்சாம்.
( ஹையா இரண்டுமே பத்து வரிகளுக்குள்)

இப்படிக்கு அன்புடன் ஜீஎம்பி
                      --------------------
பதிவர் கையேடு என்பது மிகச் சிறந்த விஷயம் அறிந்தவர் அறியாதவர் எல்லோரது விவரங்களும் விரல் நுனியில் கிடைக்கப் பெறுவது நல்ல விஷயம்தானே  பதிவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க பதிவர்களை அவர்களது தளப் பெயர் , அவர் பெயர் தள முகவரி.  புகைப்படம்  தொலைபேசி எண், மற்றும் அவர்கள் பற்றி அவர்களே கையேட்டில் பார்க்க விரும்பும் விஷயங்கள்  என்று கேட்டிருந்தனர். எனக்கென்னவோ இவ்விஷயத்தில் பதிவர்கள் சில விஷயங்களைக் கொடுத்து பல விஷயங்களை கொடுக்காமல் மறைத்திருக்கின்றனர் என்றே தோன்றுகிறது கொடுக்கப்பட்ட விஷயங்களாவது கொடுத்தபடி கோர்க்கப் பட்டிருந்தால் யார் யார் எப்படி எப்படி விஷயங்களைக் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியும்  வாசகர்களது மெத்தனமே கையேடு சரியாக வர விடவில்லையோ என்றும் தோன்றுகிறதுபதிவர் பற்றிய விவரங்களை  அறிந்து கொள்ள  தேடும் முறை கொடுக்கப்படவில்லை. பதிவர்களை அவர்களின் இருப்பிட(ஊர்) வரிசையில் கொடுக்கப் பட்டிருக்கிறது. அதுவும் பல இடங்களில் மாறி இருக்கிறது. பதிவர்கள் பெயர்படி வரிசைப் படுத்தி இருக்கலாம் வலைத்தளமோ பெயரோதான் பலராலும் அறியப் படுகிறது சில இடங்களில் வெறும் பெயர் மற்றும் தள முகவரி மட்டுமே இருக்கிறது பதிவர்கள் விவரங்களைக் கொடுக்காவிட்டால் எப்படித் திரட்ட முடியும்?
போகட்டும் பிரபல எழுத்தாளர்களின்  பெயர்களுடன் அவர்களது தள முகவரியும் கொடுத்திருக்கிறார்கள்
(பத்திரிக்கைகளில் இவர்கள் படைப்பு வருவதால் பிரபல எழுத்தாளர்களாகிறார்களா) அதேபோல் பதிவர்கள் அனைவரது பெயர்களையும்  வலைத்தள முகவரியையும் கொடுத்திருக்கலாம் அல்லவா. இல்லையே ஏன் என்றால் பதிவர்கள் பிரபல எழுத்தாளர்கள் அல்லவே. எதற்கு இந்த தாழ்வு உணர்ச்சி. இன்னும் ஒன்று .கையேட்டில் எழுத்தாளர்கள் படிக்க வேண்டிய வலைத் தளங்கள் என்று சிலரது வலைப்பக்கங்களைப் பரிந்துரை செய்திருக்கிறார்கள்  அதற்கு என்ன தகுதியைக் கருத்தில் கொண்டிருக்கிறார்கள் கொடுக்கப்பட்டிருக்கும் வலைப் பக்கங்கள் எந்த விதத்தில் இந்த உரிமை பெறுகிறது மற்ற வலைப்பக்கங்கள்  மாற்றாந்தாய் பிள்ளைகள் இல்லையே  பதிவர் கையேட்டில் பதிய புகைப்படங்களைக் கேட்டிருந்தார்கள் பலர் அனுப்பி இருக்காமல் இருக்கலாம் ஆனால் அனுப்பியவர்களது படங்களையாவது வெளியிட்டிருக்கலாமே  ஒரு வரவேற்கத்தக்க விஷயமாக பதிவர் கையேடு சிந்திக்கப் பட்டது ஆனால் இன்னும்  சிறப்பாக இருந்திருக்கலாம் என்னும் ஆதங்கமே என் எழுத்து. யாரையும் குறை கூற அல்ல
புதுகை வலைப் பதிவர்  குழுவைச் சேர்ந்தவர்கள் ( தனபாலன் தவிர)சந்திப்பின் HOSTS போன்றவர்கள் வருகைதருபவர்களிடம் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளவோ அறிமுகப் படுத்திிக் கொள்ளவோ இன்னும் முயற்சி எடுத்திிருக்கலாம் ( என்னிடம் எம் கீதாவும் வைகறையும் அறிமுகப் படுத்திக் கொண்டனர்) ஏனென்றால் புதுகைப் பதிவர்களின் எண்ணிக்கைதான்  அதிகம் இருந்தது சீருடையில் இருந்தோரை விழாக்குழுவினர்  என்று நினைக்கிறேன்  சில பதிவர்கள் வந்திருக்கின்றனரா  என்று கேட்டபோது  வருகைப் பதிவில் இருந்தோர் பட்டியல் பார்த்துப் பதில் சொன்னது மகிழ்ச்சியை அளித்தது           

தருமி கந்தசாமி. சீனா
  
என்மனைவி, நான் செல்லப்பா வைகறை?
  
 
பரிசு வழங்கள் Add caption
விழாமேடை
திருமதி ருக்மிணி சேஷாசாயி திருமதி ரஞ்சனி  நாராயணனுக்கான பரிசு பெறுகிறார்