Sunday, June 26, 2016

நண்பர்கள் சங்கமம் ( ALUMNI MEET)


                                             நண்பர்கள் சங்கமம்
                                             -------------------------------
AAAA என்னும் Ats Ambernath Alumni Association  Bengaluru chapter –இலிருந்து ஒரு சொவனீர் வந்தது. 9”x11”x 240 பக்கங்கள் அதில் ஒரு காணொளி குறுந்தகடு நிகழ்ச்சிகளின் தொகுப்பு , இன்னொரு குறுந்தகடு  புகைபடங்கள் அடங்கியது அதைப் பார்த்ததும் இந்த ஆண்டு  ஃபெப்ருவரி மாதம் 27, மற்றும் 28-ம் தேதிகளில் நடந்த பழைய மாணவர் கூடல் நினைவுக்கு வந்தது இது குறித்து நான் ஏற்கனவேஒரு பதிவு எழுதி இருக்கிறேன் பார்க்க  பின் இது எதற்கு என்னும்  கேள்வி எழலாம் அதிகார பூர்வமாகச் சில தகவல்கள் கொடுக்கப் பட்டு இருப்பதைப் பகிர்ந்து கொள்கிறேன்  இதை  நம் வலைப் பதிவர் திரு விழாவுடன் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.  ஒப்பிடுவதற்கு பதில் இந்த ஆலும்னி அசோசியேஷன் நடத்திய  திருவிழாவின்  சில தகவல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்  இந்த மீட்டில் கலந்து கொண்டவர்களின் சராசரி வயது74. அனைவரும் வாழ்க்கையின் ஆரம்பகால பணியை இங்கேதான் கற்றுக் கொண்டார்கள் அங்கு சேரும்போது இவர்களின்  சராசரி வயது 18க்கும் கீழ்தான்  இன்று உலகின் பல பாகங்களிலும்   சிறப்பாக வாழ்க்கை நடத்துகிறார்கள்இவர்களின் இந்த நிலைக்குக் காரணம்  அம்பர்நாதில் எடுத்த பயிற்சிதான்  என்று நம்புகிறார்கள் அங்கு படித்த தெரிந்த தெரியாதபலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பாகக் கருதினர்

இந்த AAAAக்குஒரு மைய அமைப்பு இருக்கிறது பழைய மாணவர்களின்  கூடல் இந்தியாவின் பல பகுதிகளில் ஆண்டு தோறும் நடைபெறுகிறது ஆயுள் சந்தாவாக ரூ. 1000-. செலுத்த வேண்டும் ஆனால் அப்படி உறுப்பினர் ஆவது கட்டாயமில்லை. இதுவரை 214 நபர்கள் ஆயுள் உறுப்பினராக இணைந்திருக்கிறார்கள்

 மைய அமைப்பு வரவு செலவு கணக்குகளைக் காட்டி வங்கியில் கையிருப்பாக ரூ 52665-/ காட்டி இருக்கிறார்கள் மேலும் ரூ 225000-/ கார்பஸ் ஃபண்டாக வங்கியில் இருப்பதாகவும் காட்டி இருக்கிறார்கள்  பெங்களூருவில் நடந்த கூட்டத்துக்குமொத்தம் 322 பேர் வருகை தந்திருந்தனர்  இதில் அவரவர் துணையுடன்  வந்தவர்களும் அடக்கம் . இவர்களில் 184 பேர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது
தனி நபர் பங்கேற்க ரூ 1500-/ வசூலிக்கப் பட்டது துணைவியாருடன் வந்தால் ரூ.2500 -/ வசூலிக்கப்பட்டது
27-ம் தேதி காலை 6.30 முதல் 7,30 வரை பிஸ்கட் டீயுடன்தொடங்கியது காலை 8.30 முதல் 9.30 வரை காலை உணவு இட்லி வடை உப்புமாசாம்பார் சட்னியுடன்  பைன் ஆப்பிள் கேசரிபாத், காஃபி அல்லது டீ.
 மதியம் ஒரு மணி முதல் இரண்டு வரை தவா சப்ஜி,கார்ன் மசாலா மலாய், தால் மகானி, வெஜிடபிள் பிரியானி, டொமாடோ கீரா ரைதா (பூண்டு வெங்காயம் தவிர்த்தது),பிசி பேளா பாத், சாதம்  .ரசம் , மாதுளையுடன் கூடிய தயிர் சாதம் தந்தூரி ரோடி, ரசமலாய் இத்தியாதி, மாலை நான்கு மணிக்கு பிஸ்கட்டுடன் டீ, இரவு உணவுக்கு பட்டர் சிக்கன், ஃபிஷ் ஃப்ரை, ஷஹி பன்னீர், மசாலா பிந்தி, , மட்டர் புலவ், மிக்ச்ட் தால், , தஹி பட்டா, தந்தூரி நான், புதினா கல்சா, ஜிலேபி, ஐஸ்க்ரீம்  இத்தியாதி. இவை எல்லாமே பஃப்ஃபே முறையில் வழங்கப்பட்டது  அடுத்த நாள் 28-ம் தேதியும் ஒரு சில மாற்றங்களுடன் உணவு வகைகள்

 சூவனீருக்காக நான் எழுதிக் கொடுத்திருந்த இரண்டு பதிவுகளும் ( ஆங்கிலத்தில்) வெளியாகி இருக்கிறது அதில் ஒன்று நான் தமிழில் எழுதி இருந்த “ செய்யாத குற்றம் “என்னும்  பதிவின் ஆங்கில மொழி பெயர்ப்பு (நன்றி திரு அப்பாதுரை ) இன்னொன்று The lingering memories அம்பர் நாத் நினைவலைகள் 

கூடலுக்கு வந்திருந்தவர்களின்  பெயர்கள் , முகவரி  தொலைபேசி எண்கள் இமெயில் முகவரி , இருப்பிடம் போன்ற அனைத்து தகவல்களும்சுமார் 22 பக்கங்களில் தொகுத்துக் கொடுத்திருக்கின்றனர்

சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர் மைய அமைப்பு பற்றி சில கருத்துக்களை எழுதி இருந்தேன் அது குறித்து மேலும் கருத்துகள் பகிரப் பட்டு வலைப் பதிவர் சங்கமத்தை நடத்தும் வழிமுறைகளை ஆராய முன்னோடிகள் முயற்சிக்கலாம் அந்தப் பதிவின் சுட்டி கீழே மைய அமைப்பு/ l அடுத்த வலைப் பதிவர் திருவிழாவுக்கு இப்பதிவு ஏதேனும் விதத்தில் உதவலாம் என்னும் நம்பிக்கை இருக்கிறது

                         பெங்களூரு சாப்டர் விழாக்குழு 
                     மாஜி எச் ஏ எல்  லிலிருந்து கலந்துகொண்டோர் 

                                   விழா சூவனீர்

 
விழாக் கணக்கு விபரம் 
                           
என் படைப்பு(செய்யாத குற்றம் ) ஆங்கில மொழி பெயர்ப்பு  by அப்பாதுரை
 
                                                                                   
என்படைப்பு நினைவிலாடும் சில நினைவுகள்


   செய்யாத குற்றம்  
   -------------------------------
தொலைகாட்சி   நிகழ்ச்சிகள்
நிறையவே   பார்த்து  விட்டு,
நித்திரை  செல்லப் போகுமுன்,
அன்றைய   நிகழ்வுகள் 
நினைவினில்  நிழலாடும்.

என்னென்னவோ   செய்ய  எண்ணியவை
செய்தே   முடிக்காமல்   மறக்கப்பட்டிருக்கும்.
மறந்தாலும்   பாதகமில்லை
முக்கியமானதாய்   இல்லாதவரை.

கண்ணயர  சில நேரம்   பிடிக்கும்
பின் கண்   மூடி உறங்கிவிட்டால்
கலர்கலராய்க்  கனவுகள், அலை அலையாய்
கதை போல  விரிந்து  பரவும்.

எழுத்தில்   கொண்டு வந்தால்
இனிதே   ரசிக்கலாம்,
இடுகையில்   பதிக்கலாம்
என்றெல்லாம்   கனவினூடே  
நினைவுகளும்   கூடவே   வரும்


விடியலில்   எழுந்து  இனிய   கனவுகளை
அசை   போட  முயன்றால், மசமசவெனத்
தெளிவின்றித்  தோன்றுவதை  எழுத்தில்
வடிக்க  வார்த்தைகளும்  வராது,
கற்பனையும்   கை  கொடுக்காது.
     
அதிகாலை   நடை பயிலுகையில்
எழுதுவதற்கு   விஷயங்கள்  யோசிக்க
நடையினூடே   வார்த்தைகளும்
அழகாக  வந்து   வீழும்.

சற்றே  மலர்ந்து  வீடு  வந்து,
பேனா   பிடித்தால்   என்னதான் 
எழுதுவது,  ஒன்றும்   தோன்றாது
நினைப்பது   ஏன்  மறக்க  வேண்டும்..?

பார்த்த   முகம்  பரிச்சயமானது , பேர்மட்டும்
வேண்டும்போது   நினைவுக்கு   வராது.
ஆடும்   சிறார்  கண்டு  மனம்  மகிழும்
கூடவே   ஓடியாட  உடல்   மறுக்கும்

.
எண்ணங்களில்   இளமை  என்றுமிருக்கும்
உடல் உபாதைகள்  முதுமையை  நினைவூட்டும்.
வேண்டியதை  விரும்பிச்  செய்ய  விழையும் மனமே,
உன்னால்  முடியாது  என்று  கூடவே   கூறும்

.
உலகோரே   உங்களிடம்   கேட்கிறேன்
வயோதிகம்   என்பது  செய்யாத   குற்றத்துக்கு
விதிக்கப்பட்ட   தண்டனையா..?
------------------------------------------------------------------

 பதிவின் ஆங்கில மொழியாக்கம்( திரு. அப்பாதுரை 
1)  IS OLD AGE A PUNISHMENT FOR A CRIME NOT COMMITTED
----------------------------------------------------------------------------------------------------

Eyes drift away from the tube   
as body retires to sleep;
the mind starts to ruminate
all day's events in keep

planned tasks are many; lay forgotten
incomplete, or left in abandon;
omission seems acceptable, if
the important ones are done

slumber isn't imminent; and when
eyes swoon down to sleep
colorful dreams parade in waves
like a story broad and deep.

dreams crafted in words
a thing of pleasant savor;
be posted in blogs - such
thoughts in dreams waver

attempts to translate dreams.
get foggy; lost in reformation
failed by elusive language
let down by own imagination


in early morning strolls - words
that tend to flow in a stream,
when armed with pen on return
why disappear as if in a dream?


faces remain familiar
but names tend to fade
mind desires to play with children
yet body has become a jade.

thoughts remain forever young
bodily discomforts, those bookmarks of age!
mind pursues what it desires; yet
alerts nothing can be done at this stage.

oh, dear world
to you this question is remitted
is dotage a fit retribution
for a crime never committed?


2) THOSE  LINGERING  MEMORIES ( G.M.Balasubramaniam)
----------------------------------------------------------
It was on 22nd  March 1957 that we fifty of us  , boarded the train from Bangalore  to go to Ambarnath.If my memory is right we reached Ambarnath late in the evening the next  day , and we were surprised to see some of the boys of ATS who were there to receive us. That was a pleasant surprise. Because some of us were expecting to be subjected to ragging…!On the other hand we were warmly received  to start our life in the hostel We were the first batch of trainees from HAL to be trained there.  I am at a loss for words to describe our life there for next  two years. I will just touch a few incidents.
 Almost all of us were south  Indians, The food served to us were chappathis and subjis. We were not used to it. We demanded to be served rice sambar rasam etc. They refused the same. .And like true gandhians we refused to partake the food. And any amount of cajoling went into our deaf ears. The boycott went on. Our  training manager from Bangalore came down . We were not in a position to listen. They gave an argument that their cook did not know to prepare sambar or rasam. Our boys gave a suggestion that they will teach the cook. .Finally our unity won  and we were promised south Indian food.
There were five  buildings to accommodate the trainees. Each building could accommodate 100 trainees, 50 on the ground floor and fifty on the first floor. There used to be anthakshari singing competitions against  each building. Oh … it was quite enjoyable
There was a Lahore shed which housed indoor game facilities. People with varied interests  made use of the facilities like gymnasium, badminton , table tennis etc..One night the whole Lahore shed  burnt down may be because  somebody threw a burning cigarette or something like that. .All the regular users were summoned by the warden and house master,Mr Patwardhan and Mr,Paradkar. No body could throw light on the accident. Later on a new facility was built.
And there were unforgettable practical and theory teachers. One Mr,  Thomas a theory teacher, used to refer his perod when he was in England, Our boys used to taunt him by often saying” When we were in Bangalore……”And therewas this practical teacher MrPendse if my memory is right, who used to “Call all” when someone made  mistakes like switching the machine on with one’s leg..There wasMr. Anbu who used to say , there was no language like English, where you can address a stranger with a “Hello.!”
I can never forget the first Holi we spent there. Very early in the morning many north Indian friends barged into our rooms and splashed colours.


We spent two years there,a place which was virtually a mini India. Oh those lingering  memories still haunt me.
                                                    -----------------------------------------

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

30 comments:

  1. பழைய நினைவுகளை ஆசை போடுவது ஒரு தனி சுகம்

    ReplyDelete
  2. வாழ்த்துகள் ஐயா. பழைய நினைவுகள் என்றுமே சொர்க்கமாகவே தெரியும்.

    ReplyDelete
  3. திட்டமிட்டு செய்யப்பட்ட நிகழ்வானதால் நிகழ்வில் குறைகள் குறைவாய் இருந்திருக்கலாம். வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  4. மலரும் நினைவுகள் - என்றும் மகிழ்ச்சிக்குரியவை தான்!..

    ஒருநிலைக்கு மேல் - மகிழ்ச்சி தான் மனதை வாழ வைக்கின்றது..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  5. கடந்த நினைவுகளின் சுரங்கம் நீங்கள்.GMB!

    ReplyDelete

  6. @ அபயா அருணா
    மேடம் இது பழைய நினைவுகளை அசை போடும் பதிவல்ல.அது குறித்து முன்பே எழுதி இருக்கிறேன் அதன் சுட்டியும் கொடுத்துள்ளேன் இதன் முக்கிய நோக்கம் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்து நிகழ்த்திக் காட்டியவிதம் என்னை வலைப் பதிவர் சந்திப்போடு ஒப்பிட வைத்தது எனிவே வருகைக்கு நன்றி

    ReplyDelete

  7. @ கீதா சாம்பசிவம்
    வாழ்த்துகள் எனக்கு அல்ல. ஆலும்னி மீட் நடத்தியவர்களுக்குத்தான் சேரும் அருணாவுக்குக் கொடுத்த மறு மொழியினையும் படிக்க வேண்டுகிறேன். வருகைக்கு நன்றி

    ReplyDelete

  8. @ தளிர் சுரேஷ்
    பதிவை ஓரளவுக்கு உள் வாங்கியமைக்கு நன்றி சார் ஆலும்னி மீட் நிறையவே திட்டமிடலுடன் செய்து முடிக்கப் பட்டது வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  9. @ துரை செல்வராஜு
    மகிழ்ச்சி தரும் நிலையில் எழுதிய பதிவல்லைது. எந்த சங்கமத்துக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் மென்னும் நினைவே எழுத வைத்தது. வருகைக்கு நன்றி

    ReplyDelete

  10. @ வெங்கட் நாகராஜ்
    இனிய நினைவுகள் என்னெனவோ நினைக்கச் செய்தது வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  11. @ மோகன் ஜி
    நீங்களுமா சார். பதிவின் உட்கருத்தை உள்வாங்காமல் பின்னூட்டம் இடுவது ? நினைவுகளின் சுரங்கமல்ல இப்பதிவு. ஆதங்கத்தின் வெளிப்பாடே. நினைவுகளைத் தாங்கிய பதிவின் சுட்டியும் கொடுத்திருக்கிறேனே வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  12. ஒரு அமைப்பை எப்படிக் கொண்டு போகவேண்டும் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டு தந்து இருக்கின்றீர்கள் தொடரட்டும் அமைப்பின் செயல்பாடுகள் இவைகளை நினைவுக்கு கொண்டு வந்து பதிவிட்டமைக்கு நன்றி முந்தைய பதிவுகளுக்கு ஏற்கனவே சென்று இருக்கின்றேன் மீண்டும் ஆலிலைக் கண்ணனைக் கண்டேன்

    செய்யாத குற்றம் கவிதை வடிவில் நன்று ஐயா.

    ReplyDelete
  13. வயதும் அனுபவமும் எப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்பதைச் சரியாக திட்டமிடட் கற்றுக் கொடுத்தன என்று நினைக்கிறேன். மொழிபெயர்ப்புக்கு கவிதை அபாரம். அப்பாதுரையின் கைவண்ணம். அப்பாதுரை எங்கே?

    ReplyDelete
  14. முன்கூட்டிய அனைத்தையும் திட்டமிட்டு செய்யப்படும்
    நிகழ்வுகள் மகத்தான் வெற்றியைப் பெறும்
    தங்களின் மொழிபெயர்ப்புக் கவிதை அருமை
    நன்றி ஐயா

    ReplyDelete
  15. வயோதிகத்தை குற்றமாகவும் தண்டனையாகவும் ஏன் நினைக்கிறீர்கள்?

    -- இந்தக் கேள்வியை பலமுறை உங்களிடம் கேட்டு விட்டேன்.. நிறைவான பதில் மட்டும் தந்தபாடில்லை.

    ReplyDelete

  16. @ கில்லர் ஜி
    வலைப் பதிவர் சங்கமமும் ஆண்டு தோறும் நடந்து கொண்டுதான் இருக்கிறதுஒரு மைய அமைப்பு பற்றி நான் முன்பே எழுதி இருந்தேன் ஏனோ அதுபற்றிய கருத்துகள் வரவில்லை. ஆகவே தான் அப்படி இருந்து நடைபெறும் சங்கமம் பற்றி எழுதுகிறேன் வருகைக்கு நன்றி. ஜி

    ReplyDelete
  17. @ ஸ்ரீராம்
    நிச்சயமாய் திட்டமிட்டுச் செய்யும் செயல் சிறப்பாக அமையும் வலைப் பதிவர் விழாவும் நன்றே நடைபெறுகிறது. இன்னும் சிறப்பாகச் செய்யலாமோ என்று எண்ணத் தோன்றுகிறதுவருகைகு நன்றி ஸ்ரீ என் பதிவு செய்யாத குற்றம் -அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கக் கேட்டு பதிவிட்டிருந்தேன் திரு அப்பாதுரையின் மொழி பெயர்ப்பு மிக நன்றாக இருந்தது அதையே சூவனீருக்குக் கொடுத்தேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  18. @ கரந்தை ஜெயக்குமார்
    நிச்சயமாய் திட்டமிட்டசெயல் சிறக்கும் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  19. @ ஜீவி
    வயோதிகத்தைக் குற்றமாகவும் தண்டனையாகவும் நான் எங்கே நினைக்கிறேன் பதிவில் கொடுத்துள்ள செய்திகள் அப்படி இருக்கலாமோ என்று கேள்வி கேட்க வைக்கிறது பதிவைக் கவனித்து வாசியுங்கள் மேலும் இன்னொரு பதிவும் எழுதி இருக்கிறேனே . படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அதில் முதுமையை வரமாகச் சொல்லி இருக்கிறேனே .கேள்வியாக இந்த முறைதான் கேட்டிருக்கிறீர்கள் பதிலும் கொடுத்து விட்டேன் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  20. விழா நிகழ்வு பற்றிய அழகான பதிவு. அத்துடன் விழா மலரைப் பற்றிய அருமையான மதிப்புரை. நன்றி ஐயா.

    ReplyDelete

  21. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    இந்தப்பதிவில் பதிவர் சங்கமமும் இதைவிடச் சிறப்பாக நடக்க வேண்டும் என்னும் ஆதங்கம் தெரியவில்லையா வருகைக்கௌ நன்றி ஐயா

    ReplyDelete


  22. //உலகோரே உங்களிடம் கேட்கிறேன்
    வயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்கு
    விதிக்கப்பட்ட தண்டனையா..?//

    அருமையான வரிகள் ஐயா! ஆனாலும் இந்த தண்டனையை எல்லோரும் அனுபவிப்பதால் யாரையையும் குறை சொல்ல இயலாது.

    அம்பர்நாத்தில் தங்களது பயிற்சி கால நினைவலைகளைப் படிக்கும்போது எனக்கும் எனது பயிற்சி காலாம் நினைவுக்கு வந்தது. அழகாக சுருக்கமாக தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  23. @ வேநடனசபாபதி
    வயோதிகம் செய்யாத குற்றத்துக்குத் தண்டனையா என்று கேட்ட நானே முதுமையின் பரிசு என்றும் எழுதி இருகிறேன் வாசித்தீர்களா சுட்டி இதோ http://gmbat1649.blogspot.in/2012/07/blog-post_29.html

    ReplyDelete
  24. சார் இனிய நினைவுகள் இல்லையா. அருமையான கவிதை. அதற்கு அப்பாதுரை சாரின் மொழிபெயர்ப்பும் மிக நன்றாக இருக்கிறது சார்.

    ReplyDelete

  25. @ துளசிதரன் தில்லையகத்து
    இன்ய நினைவுகளூடே பதிவர் சங்கமமும் இதைவிட நன்றாக நடக்க வேண்டும் என்னும் ஆதங்கமும் தொக்கி நிற்பது தெரியவில்லையா வருகைக்கு நன்றி

    ReplyDelete
  26. எல்லோரும் எதிர்கொள்ள பயப்படுவது வயோதிகம்...
    நிலையற்ற வாழ்வுன் யதார்த்ததை விளக்கும் பாடம்

    ReplyDelete

  27. @ சக்திப் பிரபா
    இந்தப்- பதிவின் நோக்கமே அது அல்ல வலைப்பதிவர்கள் சங்கமமும் நன்கு நடக்க வேண்டும் விருப்பமே மறைந்து நிற்கும் பொருள் முதுமையும் ஒரு பரிசு பதிவிட்டிருக்கிறேன் சுட்டி இதோ http://gmbat1649.blogspot.in/2012/07/blog-post_29.html வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  28. ரொம்பவே அருமையாக நடத்தி இருக்கிறார்கள். சாப்பாட்டு மெனு.... சூப்பர்!!!!

    ReplyDelete

  29. @ துளசி கோபால்
    ஒரு குறாஐயாகச் சொல்லவேண்டுமானால் அது பஃப்ஃபே சிஸ்டம் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete