Sunday, September 19, 2021

மீண்டும் நினைவுகள்

 

 

83 வயதாகும் எனக்குகற்பனையை விட  நிஜமே சொல்ல வருகிறதுஅவை ஏராளமக இருக்கும்போது எதற்கு கற்பனையின் துணை நாடவேண்டும் 1946ம் வருஷம் என்று  நினைவு  அப்போது அரக்கோணத்தில் இருந்தோம்திரைப்ப்ப்டங்கள் பலவும் டெண்ட் கொட்டைகையில் பார்த்ட நேரம் வீட்டின்  அருகே டெண்ட் கொட்டக்சை ருந்தததால் படங்களை பார்த்ததை விட கேட்டதே அதிகம்கொட்டகையி சுற்றி காவல் இருப்ப ர்

ஒரு முறை என் தம்பி காவலர்களுக்கு      
 
டிமிக்கி கொடுத்து உள்ளே போய்விட்டான்   அவனைக்காணாமல்என் பெற்றோருக்கு கவலை ஆகிவிட்டது எனக்கு தெரியும் அவன் கொட்டகை உள்ளே இருக்கிறான் என்று ஆனால் ஊர்ஜிதம்செய்ய முடிய வில்லை என் சின்ன அண்ணா  தான் பார்த்துவருகிறேன் ந்று கிளம்பினான்ஆனால் அவனை உள்ளே விடவில்லை கதை சொல்லி  உள்ளே நுழையும் திட்டம்என்றுதடுத்தனர்காவலர் என்சின்ன அண்ணவும் சளைக்காமழ்ல் கெட்டு பார்த்தார் கடைசியில்தன் சொக்காயை பணையமாக வைத்து உள்ளெ போய்  தமியை மீட்டு வந்தார்அப்போது அவர் என்  கண்களுக்கு ஒரு ஹிரோவாகத் தெரிந்தார்

நான் அப்போது  எச் ஏ எல்லில் இருந்தேன்நண்பர் ஒருவர்  இனிப்பு கொடுத்துக் கொண்டி ருந்தர்ர் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததற்குதன் சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டிருந்தார் ஆண்குழந்தை செக்கச் சேவேலென்று  வெள்ளைக் காரன் போலவேஇருக்க்றது தென்று சொல்லி மாள வில்லை ஒரு சமயம்  நண்பரை கண்டித்தனர் ‘”சும்மா சொல்லாதே ஐயா குழந்த்தை உனக்குப் பிறந்ததா என்றுசந்தேக்ம்  வ்ருது என்று கூறியதும் அதன்   அர்த்தம் புரிந்ததும்ம்  கொல் என்னும் சிரிப்பு எழுந்த்து

 

போர் முழக்கம்

நான்மூன்றாம் வ்குப்பில் ப்டித்த நினைவு  நாந்தான் முதல் இரண்டு வகுப்புகள் படிக்கவே இல்லையே அப்போது ப்டிததது

ஒன்றிரண்டு ஒன்றிரண்டு என்றே ஏகுவோம்

என்றுமென்றும்  வெற்றீ   பெற்று நாங்கள் மீளுவோம்

கொடிய பகைவர் குலை நடுங்க கொற்ற்ம்வீழ்த்துவோம்

நெடிய வாள்கள் பளபளவெஅ  நெருங்கி தாக்குவோம்

வந்தோம் வந்தொமென்று சொல்லி  விறைந்து தாக்குவோம்  

அதற்கு மேல் ந்னைவில்லை    

                       

 

 
       

 

 

 

18 comments:

  1. அனுபவம் பழசுதான். ரொம்பவே சுவாரசியம்.

    எழுதுவதை நிறுத்த வேண்டாமே.

    ReplyDelete
    Replies
    1. போர் முழக்கம் பற்றி எதும் சொல்லவில்லையே

      Delete
  2. சட்டை உத்திரவாதம்..சுவாரஸ்யமான தகவல்..

    ReplyDelete
  3. அனுபவ அலைகள் இனிமையானவை
    தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. பதிவு பற்றி ஏதுமில்லையா

      Delete
  4. Replies
    1. பதிவாவதன் காரணமே அதுதானே

      Delete
  5. டென்ட் கொட்டகை நினைவு சுவாரசியம் என்றால் மூன்றாம் வகுப்பில் படித்தது நினைவில் இருப்பது ஆச்சரியம் சார். நல்ல நினைவுத்திறன். இது அப்போது சுதந்திரப் போர் முழக்கம் பாட்டு இல்லையா சார்?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இது அப்போதைய சுதந்திர [போர் முழக்கப் பாடல் என்று சொல்ல மாட்டேன்படித்தது நினைவில் வந்த்சது அவ்வளக்வுதான்

      Delete
  6. சொக்காய்ப் பணயத்தை தியேட்டர்க்காரன்  ஏற்றுக்கொண்டானே..  அதைச் சொல்லவேண்டும்!  டிக்கெட் வாங்காமல் உள்ளே சென்ற தம்பியை அவர்கள் ஒன்றும் சொல்லவில்லையா?!!

    ReplyDelete
    Replies
    1. ஏமாற்ற அல்ல என்று தெரிய ஒரு ப்ணயம்

      Delete
  7. ஆஹா..    உங்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை!  நானும் முதலிரண்டு வகுப்புகள் படித்ததில்லை.  நேராய் மூன்றாம் வகுப்புதான்!

    ReplyDelete
    Replies
    1. நான் முதல் இரண்டு வகுப்புஜள் மடுமல்ல ஐந்து ஆறு எழாம் வகுப்புகளும் படிக்கவில்லை பார்க்க படிதிவு இது லஞ்சமா

      Delete
  8. நான் மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்துக்குப் பாய்ந்தவன்! அந்தக்கால அருஞ்சாதனை.. அப்புறம் கல்லூரிவரை வண்டி மெதுவாகத்தான் போயிற்று. பின்னர் சில சமயங்களில் எல்லைதாண்டியும் ஓடலாயிற்று.. எங்கெங்கோ சென்று திரும்பியது. நிறைய எழுதலாம் நினைவிலிருந்து.

    கற்பனை செய்துதான் எழுதவேண்டும் என உங்களை யார் வற்புறுத்துவது? எழுதுங்கள் நினைவுக்கு வந்தபடி!

    ReplyDelete
  9. எனக்கு மொத்தமாக பள்ளி படிப்பே ஆறு வருடஙகள் தான்

    ReplyDelete
  10. பல்வேறு நினைவுகள். நல்லாத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  11. எல்லோருக்கும் நினைவுகளிருக்கும் சில சுவாரசியமானவை

    ReplyDelete