Friday, July 21, 2023

அவதாரக்கதை சில புரிதல்கள்

  அவதாரக் கதைகள்

-----------------------------------------------
          நான்   அவதாரக் கதைகள் 
எழுத துவங்கிஇருக்கிறேன். இவற்றை எழுதும் போது எனக்கு எல்லாம் தெரிந்து
எழுதுவதாக யாரும் எண்ணவேண்டாம்.ஆனால் எழுதுவது பற்றி
பல இடங்களில் கேட்டும் படித்தும் எழுதுகிறேன். கிருஷ்ணாவதார
கதை எழுதுமுன் மீதி உள்ளதைப் பற்றி எழுத முயலும்போது,
வழக்கம்போல் எனக்கே உள்ள சந்தேகங்கள் எழுந்து ,எழுதுவதற்கு
தடைபோடுகின்றன.

       நாம், பகவான் ஒன்பது அவதாரங்கள் எடுத்திருக்கிறார் என்றும்
இன்னும் எடுக்கப்போகும் கல்கி அவதாரத்துடன் சேர்த்து பத்து
அவதாரம் என்றும் கேள்விப்பட்டும் சொல்லிக் கொண்டும் வந்தி
ருக்கிறோம். சில நாட்களுக்கு முன் “சோ”-வின் “ எங்கே”
பிராமணன் என்னும் தொலைக் காட்சி நிகழ்ச்சியில்
“)மொத்தம் பகவானின் 22-/                  அவதாரங்கள் குறித்து சோஅவர்கள் விளக்கம் கூறி, ( 22- அவதாரங்       களையும் பெயர்களுடன் குறிப்பிட்டார்.) சாதாரணமாகப் பத்து          அவதாரங்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாக தெரிவித்தார். இவற்றைப் பற்றிய ஆராய்ச்சிக்குள் புகுந்து தெளிய தற்சமயம் எனக்கு வழியுமில்லை,
வசதியுமில்லை. ஆனால் அவதாரக் கதைகள் எழுதுவது என்று
முடிவெடுத்து எழுதி வந்தவன் முன்னேற முடியாமல் தவிக்கக்
காரணம் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரம் குறித்த தெளிவு
இல்லாததனால்தான்.

           பக்திமாலை என்ற ஒரு தியான ஸ்லோகத் தொகுப்பில்
தசாவதாரஸ்துதி என்று ஒரு ஸ்லோகம். பத்து அவதாரங்களின்
பெயர்களும் அந்தத் துதியில் வருகிறது.

           “மத்ஸ்ய கூர்ம வராக நரஹரி
            வாமன பார்கவ நமோ நமோ
            வாசுதேவ ரகுராம புத்த ஜய
            கல்கியவதாரா நமோ நமோ
            தசவித ரூபா நமோ நமோ “

என்று வருகிறது, இதன்படி புத்தன் ஒரு அவதாரமாகக் கருதப்
படுகிறார்.ஆனால் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு
ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அருளாசியுடன் வெளியிடப்பட்ட
ஸ்ரீ தசாவதாரக் கதைகளில் பலராமனை ஒரு அவதாரமாகக்
கூறப்படுகிறது. நான் எழுதியெதெல்லாlம் பெரும்பாலும் இதில்
கூறியுள்ள செய்திகளின் அடிப்படையில் அமைந்ததே.

          ” இதில் திருமால் உழு தொழிலின் மேன்மையை உலகுக்கு
உணர்த்த எண்ணினார். எனவே கலப்பையை படைக்கலமாகக்
கொண்ட பலராமர் வடிவெடுக்க நினைத்தார்” என்று கூறப்பட்டு
இருக்கிறது திருமால் தேவகியின் வயிற்றில் ஏழாவது கருக்
கொண்டதாகவும் , அக்குழந்தையைக் காப்பாற்றும் பொருட்டு,
மகா காளிதேவி தேவகியின் வயிற்றில் இருந்த கருவை நந்த
கோபனின் இரண்டாம் மனைவி ரோகிணியின் வயிற்றில்
மாற்றி அமைத்தாள் என்றும் ,திருமால் ரோகிணியின் வயிற்றில்
பிறந்து பலராமர் என்ற பெயருடன் விளங்கினார் என்றும் கூறப்
பட்டுள்ளது.

           ஒரே நேரத்தில் திருமால் இரண்டு அவதார புருஷராக
விளங்கினாரா என்ற சந்தேகம் எனக்கெழ, அதைத் தீர்த்துக்
கொள்ளும் அவசியம் உணர்ந்தேன்.

          ஸ்ரீ நாராயண பட்டத்திரியின் ஸ்ரீ நாராயணீயம் படித்துக்
கொண்டு வரும்போது , முப்பத்தேழாவது தசகத்தில் பத்தாம்
பாடலில் “ மாதவனே, உன் ஏவலினால் பாம்பரசனான ஆதி
சேஷன் ஏழாவது கருவாய் இருக்கும் தன்மையை அடைந்தான்.
பின், மாயை அவனை ரோகிணியிடம் சேர்த்தாள். அப்போது
சச்சிதானந்த வடிவமாகிய நீயும் தேவகியின் வயிற்றினுள்
புகுந்தாய்” என்ற ரீதியில் செல்கிறது.

         இப்போது பலராமனை அவதார புருஷ்னாக எடுத்துக்
கொள்வதா, புத்தனை அவதார புருஷனாக ஏற்பதா என்ற
சந்தேகம் வலுக்கிறது. பலராமர் ஆதிசேஷனின் பிறப்பா
பரந்தாமனின் அவதாரமா என்னும் கேள்விகள் எழும்போதும்
பலராமரின் அவதார நோக்கம் நான் படித்த வரையில் சரியாக
விளக்கப்படாத நிலையில் அது பற்றி எழுதுவது உசிதமாகப்
படவில்லை.

           பதிவர்களில் பல விஷயங்கள் தெரிந்தவர் இருப்பர்.
அவர்கள் இவற்றுக்கு விளக்கம் கூறினால் அதையும் சேர்த்துப்
படிக்கும்போது தெளிவுகள் பல உண்டாகலாம். ஆக, அடுத்து
கிருஷ்ணாவதாரக் கதை கூடிய சீக்கிரம் எழுதுவேன் என்று
கூறி முடிக்கிறேன்.
----------------------------------------------------------------


        

6 comments:

  1. கதை தானே... எப்படியும் கதை விடலாம்...

    ReplyDelete
  2. கிட்டத்தட்ட எல்லா மதங்களும் கடவுளின் தூதர் அல்லது அவதாரம் அல்லது பிரவாசகர் என்று ஒருவரை முன்னிறுத்தி அவர் கூறிய வாக்குகளின் அடிப்படையில் வாழ்க்கையில் வாழ வழி வகுக்கிறது.

    இநது மதத்திலும் வைணவத்தில் அவதாரங்களை பற்றி கூறி அவதார நோக்கங்களை விளக்கியுள்ளனர். சைவத்தில் அவதாரங்கள் என்று கூறாமல் திருவிளையாடல்கள் என்று கூறுகின்றனர்.

    புத்தமதத்தில் கடவுள் பற்றிய விவரங்கள் இல்லை. புத்தர் தலைமுறை தலைமுறையாக உலகில் பிறந்து மக்களை நல்வழிப்படுத்துவதாக நம்புகின்றனர். ஆக கடவுளின் அவதாரம் என்று சொல்லவில்லை.

    இந்து மதம் புத்த மதத்தை காட்டிலும் பழையது என்று கூறவே புத்தரை ஒரு அவதாரமாகி விட்டனர் என்று தோன்றுகிறது.

    எதுவானாலும் புராணங்கள் கூறுவது உண்மை, பொய் என்பது அவரவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது. ஆராய்ந்து பிரயோஜனமில்லை.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. எதுவானாலும் புராணங்கள் கூறுவது உண்மை, பொய் என்பது அவரவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது. ஆராய்ந்து பிரயோஜனமில்லை.//

      அதே...

      கீதா

      Delete
  3. JKC சாரின் பின்னூட்டத்தில் கடைசி வரிகளை ஆதரித்து வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  4. ஏன், அவர்கள் எல்லாம் மட்டும்தான் அவதாரம் ஆகமுடியுமா?  குப்பனும் சுப்பனும் ஆக முடியாதா?  என்றும், 

    இதில் ஏன் இயேசுவை சேர்க்கவில்லை?  இஸ்லாத்திலிருந்து யாரையும்  சேர்க்கவில்லை?  கூப்பிடு அவர்களையும் என்று சிலரும் ஆரம்பிப்பார்களோ...

    ReplyDelete
  5. புராணங்களப் பற்றிய விஷயங்கள் எல்லாமே ஒவ்வொருவரது தனிப்பட்ட புரிதலிலும் பார்வையிலும் இருக்கிறது. இதில் ஆராய்ச்சி அதுவும் தனிப்பட்ட விருப்பங்கள். மற்றபடி இப்படியான விவாதங்கள் பொதுவில் தேவையா என்றும் நினைப்பதுண்டு.

    கீதா

    ReplyDelete