Thursday, June 21, 2012

ஜீவாத்மாவும் பரமாத்மாவும்....


                                      ஜீவாத்மாவும் பரமாத்மாவும்...
                                      ----------------------------------------


கனவுக்கு நேரக் கணக்கு ஏதும் கிடையாது .அதிகாலையில் எழுந்திருக்கிறேன். என்ன ஆச்சரியம் .! நான் கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கிறேன். என்னால் என்னையும் என் அருகில் படுத்திருந்த மனைவியையும் நன்றாகப் பார்க்க முடிந்தது. உருவமில்லாமல் நான் உயரே சஞ்சரிக்கிறேன். என்னை ஒரு குரல் கூப்பிடுகிறது. எனக்கு ஒரு முறை கனவில் கடவுளிடம் உரையாடிய அனுபவம் இருந்தது.
“ யார் என்னைக் கூப்பிடுவது.?கடவுளாயிருந்தால் முன்பு வந்தது போலென் முன்னே வா “ என்றேன்.
“ எங்கும் வியாபித்திருக்கும் நான் உன் முன்னே வந்தேனா.? என்ன உளறுகிறாய்.? ஏதாவது கனவு கண்டிருப்பாய். “
“ அதுபோல் இது கனவில்லையா.? குரல் மட்டும் கேட்கிறதே.
“ குரல் என்பது உனது பிரமை. உண்மையை உணர்ந்து கொள்ளாமல் நீயே என்னவோ நினைத்துக் கொள்கிறாய். உருவமே இல்லாத எனக்கு ஆயிரம் உருவங்களும் பெயர்களும் கொடுத்து உண்மை என்று நம்பும் கற்பனைத் திறன்தான் உங்களுக்கெல்லாம் இருக்கிறதே. “
“ சரி. உண்மைதான் என்ன.? “
“ உன் ஆழ்மனதில் , ஜீவாத்மா பரமாத்மாவிடம் ஐக்கியமாகத் துடிக்கிறது.உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மனம் விழைகிறது.
ஜீவாத்மா பரமாத்மா என்று ஏதோ புரியாமல் சொன்னால் எப்படி.?
“ பரமாத்மா என்பது எங்கும் வியாபித்திருக்கும் பிராண வாயு.ஜீவாத்மா என்பது ஒருவனை இயக்கும் பிராணவாயு..அது அவனை விட்டு வந்தால் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விடும்.
“ அனாதி காலம் முதல் தேடிவரும் கேள்விக்கு மிக எளிதாகப் பதிலாக ஏதோ கூறுகிறாயே.
“ மக்கள் மத்தியில் ஒரு கதை உலாவுவது தெரியுமா.? ‘ அமாவாசை இரவில் ,விளக்கில்லா அறையில், கருப்புப் பூனையைத் தேடும் குருடன் போல ‘என்று. அதுபோல்தான் அவரவர் கற்பனைக்கு  ஏற்றபடி கதைகள் புனைகிறார்கள். “
“ கொஞ்சம் விளக்கமாகத் தெரியப் படுத்தலாமே.
“ ஒருவன் உயிரோடு இருக்கிறான் என்று எப்போது கூறுகிறாய்.? “
“ அவன் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும்போது.
“ அவன் மூச்சுவிட மறந்தால்.... தவறினால்... ?
“ இறந்தவனாகக் கருதப் படுவான்.
“ மூச்சு என்பது என்ன.?
“ சுவாசம். ஒருவன் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவது சுவாசம். “
“ எந்தக் காற்றையும் உள்ளிழுத்து வெளி விட்டால் சுவாசிப்பதாகுமா.?
“ இல்லை. ஆகாது. காற்றில் இருக்கும் பிராணவாயுவைத்தான் சுவாசிக்கிறான். அது இல்லாத நச்சுக் காற்றை சுவாசித்து ஆயிரக் கணக்கானவர்கள் போபாலில் இறந்திருக்கிறார்களே.
“ ஆக இந்தப் பிராணவாயுதான் உடலின் எல்லா பாகங்களையும் இயங்கச் செய்கிறது. உடலின் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. அது உடலின் எல்லா பகுதிகளுக்கும் பாய்ந்து இயக்குகிறது. உடலில் ஏதாவது பாகம் ரத்தம் இல்லாமலிருக்கிறதா. ? இருப்பது
நகமோ முடியோ ஆக இருக்கலாம். சுத்திகரிக்கப் பட்ட ரத்தம் மூளைக்குச் சேரவில்லையானால் அவனை இறந்தவன் என்றே கூறுகிறார்கள். மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் பிராணவாயு இருக்கிறது.
“ ஜீவாத்மா பரமாத்மா பற்றி விளக்கம் கேட்டால் உடற்கூறு பற்றி விளக்கம் தேவையா.? “
“ அடிப்படை அறிவை கோட்டை விடுவதால் நேராக மூக்கை பிடிக்காமல் தலையைச் சுற்றி அதை அணுகுகிறீர்கள் என்றுகூற வந்தேன்.
”  பிராண வாயு இல்லாமல் இயக்கம் இல்லை என்பது நிச்சயமா.?
“ சந்தேகமில்லாமல். வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இல்லை என்றால் அதற்குக் காரணம் அங்கு பிராணவாயு இல்லை என்பதால்தான். சந்திரனில் நீர் இருக்கிறதா, செவ்வாயில் நீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சிகள் அதைத்தானே கூறு கின்றன. “
“ உலகில் உயிரினங்களை இயக்க பிராணவாயு இருப்பதுபோல வேற்று கிரகங்களை இயக்குவது எது..?
“ வேற்று கிரகங்கள் எங்கே இயங்குகிறது.? அவை இருக்கின்றன அவ்வளவுதான்.
இந்த பேரண்டத்தையே இயக்குபவன் கடவுள் என்கிறார்களே. அதெல்லாம் பொய்யா.?
“ தெரியாதவற்றைப் பொய் என்று கூறமுடியாது. அனுமானங்கள் என்று வேண்டுமானால் கூறலாம். “
“ குழந்தை பிறக்கும் போதே சுவாசித்துக் கொண்டே பிறக்கிறதே . அது எப்படி.? “
“ உயிருடன் இருக்கும் ஆணின் விந்து உயிருள்ளது. பெண்ணின் கரு முட்டை உயிருள்ளது ( மூன்றோ நான்கோ நாட்கள் )இரண்டும் இணையும்போது உயிர்
இருக்கிறது . பின் வளரும்போது தாயின் உடலுடன் தொப்புள் கொடி பிணைப்பால் உயிருடன் இருக்கிறது. வெளிவரும்போது ஒரு ஜீவாத்மாவாகிறது. இறக்கும்போது பரமாத்மாவுடன் இணைகிறது.
“ நான் இப்போது ஜீவாத்மாவாகவும் அல்லாமல் பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்தில் இருக்கிறேனே . இதை என்ன சொல்ல. ? “
ஒவ்வொரு முறையும் சுவாசிக்கும்போது மனிதன் ஒரு மாத்திரையோ, குருவோ (உபயம் சுந்தர்ஜி ) இறக்கிறான். பின் உயிர்க்கிறான்.இந்த மாத்திரையோ குருவோ போதும், கனவு காண. நேரம் கணக்கு எல்லாம் கடந்து நிற்கும். உன் ஜீவாத்மா அனாந்திரத்தில் நிற்காமல் உன் கூட்டுக்குள் செல்லட்டும்.. சிறிது தாமதித்தாலும் உன்னைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள். பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்திலேயே இருக்க வேண்டியதுதான் “

திடுக்கிட்டு விழித்தேன். வியர்த்துக் கொட்டியது. நான் இன்னும் இறக்கவில்லை. பரமாத்மாவுடன் இணையவில்லை இதுவும் கனவா.? கனவில் கற்ற பாடமா.?

( வலைப்பூக்களில் ரமணியின் யாதுமாகி ‘சுந்தர்ஜியின்அமுதுமிழும்மற்றும் அப்பாதுரையின் தைவாதர்சனம் ‘ போன்ற பதிவுகள் படித்த தாக்கமோ என்னவோ கனவும் பதிவுமாகி இருக்கிறது.)
------------------------------------------------------------------------------------           .          .                            





17 comments:

  1. புரிஞ்சது போலவும் இருக்கு புரியாதது போலவும் இருக்கு.

    ReplyDelete
  2. ஜீவாத்மா பரமாத்மா தத்துவத்துக்கு மிக அற்புதமாக எளிமையான வ்யாக்யானம் கொடுத்துவிட்டீர்கள் பாலு சார்.

    இன்று பூராவும் ஊதுவத்தி அணைந்தபின்னும் வெளியெங்கும் கமழும் சுகந்தமாய் உங்கள் சிந்தனையின் வீச்சு என்னைச் சூழ்ந்திருக்கும்.

    நல்ல எழுத்துக்கு ஒரு நமஸ்காரம்.

    ReplyDelete
  3. அருமையான சிந்தனை
    இரண்டில் ஒன்றில் இருந்து ஒன்றை
    பார்ப்பதைவிடஇரண்டுக்கும் இடையில் இருந்து இரண்டையும்
    பார்க்க நிச்சய்ம் இரண்டையும் மிகத் தெளிவாகப் பார்க்க முடியும்
    அபூர்வமான சிந்தனை
    மனம் கவர்ந்த பதிவு

    ReplyDelete
  4. புதிய அனுபவம் தலைப்பே வசீகரமாய் .

    ReplyDelete
  5. ஆஜர் போட்டுக்குறேன்

    ReplyDelete
  6. @ லக்ஷ்மி,
    @ சுந்தர்ஜி,
    @ ரமணி,
    @ சசிகலா,
    @ டாக்டர் கந்தசாமி.
    லக்ஷ்மி சொல்வது போல் நான்
    எழுதியது எனக்கே புரிந்ததுபோலும்
    புரியாதது போலும் இருக்கிறது.
    தேடலின் போது சில தத்துவங்
    களும் வியாக்கியானங்களும்
    என்னையறியாமலே வருகிறது
    போலும். ஊக்கப்படுத்தியதற்கு
    என் நன்றிகள்.

    ReplyDelete
  7. இன்னும் உள்நோக்கிப் போய் தேட வேண்டியது ,தெளிய வேண்டியது நிறைய இருக்கிறது என்கிறது புரிகிறது.

    ReplyDelete
  8. நிச்சயமாக மூன்றாம் சுழி தாக்கம் தான். இதுக்குத் தான் தனியா ப்லாக் படிக்காதெங்கனு சொல்றது :)

    தெரியாதவற்றை பொய்யென்று கூறமுடியாதா, ஏன்?

    ReplyDelete
  9. அய்யா முனைவர் பழனி.கநதசாமி அவர்களது பதிவு ஒன்றனுக்கு நீங்கள் கொடுத்த பின்னூட்டத்தில் இருந்த இணைப்பு வழியே இங்கு வந்தேன். இங்கு ஒரே தத்துவ மயம்.

    // “ பரமாத்மா என்பது எங்கும் வியாபித்திருக்கும் பிராண வாயு.ஜீவாத்மா என்பது ஒருவனை இயக்கும் பிராணவாயு..அது அவனை விட்டு வந்தால் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விடும்.”//

    மிகவும் எளிதான பதில்தான். உடலை விட்டு உயிர் பிரிந்தால் இறைவனடிதான். சுற்றி சுற்றி யோசித்தாலும் சூனியம்தான் மிஞ்சுகிறது.

    இது மரணத்திற்குப் பின் (AFTER DEATH) என்ற தத்துவ விசாரணை என்றாலும், வாழ்வியல் சிந்தனைகளாக, இந்த இப்போதைய மனித வாழ்க்கையைப் பற்றிய உங்கள் எண்ணம் (சாராம்சம்) என்ன என்பதைப் பற்றியும் ஒரு பதிவு எழுதவும்.ஒரு வேண்டுகோள்தான்.

    ReplyDelete

  10. @ தி. தமிழ் இளங்கோ
    சில நேரங்களில் பதிவு எழுத முற்படும்போது இம்மாதிரிசிந்தனைகள் வருவதுண்டு, மேலும் மரணத்துக்குப் பின் எதிர்பார்க்க என்றே பல வியாக்கியானங்கள் சொல்லி பயமுறுத்தப் படுகிறோம் இருக்கும் போது அனைவரையும் நேசித்து வாழ்தலே சாலச் சிறந்தது. மரணத்துக்குப் பின் என்று கூறப்படுபவை அனைத்துமே ஹேஷ்யங்களேவிளக்க் முடியாது விளங்கினாலும் ஏதும் பயனில்லை. இப்போதைய மனித வாழ்வு பற்றி அடிக்க்டி எழுதிக் கொண்டுதானே இருக்கிறேன் என் கருத்து எல்லோரையும் நேசி.டாக்டரின் பின்னூட்டத்தில் கண்ட சுட்டி உங்களை இந்தப் பதிவு வாசிக்க வைத்தது மகிழ்ச்சியே

    ReplyDelete

  11. நல்லதொரு அலசல் ஐயா பிரமிப்பாகவும் இருந்தது.வலைச்சரம் வழியாக வந்தேன்.

    ReplyDelete
  12. ஐயா வணக்கம்.

    இவை பற்றி முன்னோர் பேசியது நிறைய இருக்கிறது.

    சமயம் என்ற பெயரிலும் தத்துவம் என்ற பெயரிலும்.


    அவை குறித்து அறிதல் எனக்குச் சுகமாய் இருந்தது.


    ஆனால் எல்லோர்க்கும் அப்படி இருக்க வேண்டியதில்லை என்பதும் இது பற்றி நான் இட்ட ஒருசில இடுகைகளில் எனக்குப் புரிந்தது.

    நாம் ஏன் முன்னோர் சொன்னதைப் பார்க்க வேண்டும் ? நாமே சுயமாய்ச் சிந்திக்கக் கூடாதா என்றால் இது வரை ஓடியவர்களின் ஓட்டத்தை அறிதல் அவ்விடத்தில் இருந்து அல்லது அதிற் பயனுண்டா இல்லையா என்பதை அறிந்து. அதற்பின்.. இன்னொரு திக்கில் ஓடி அறிந்ததைச் சேர்க்க உதவும் என்பது என் நிலைப்பாடாக இருந்தது.

    அதுவும் நான் அறிந்ததுதான் அறிவாக முடிந்த பொருளாக இருக்க வேண்டும் என்பதும் இல்லை. எனக்குப்பின் அதிலிருந்து இன்னொருவர் தொடரலாம்.

    நீங்கள் நினைப்பதுபோலெல்லாம் முன்பே நினைத்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று அறிவது உங்களுக்கும் வியப்பூட்டும் தானே..?

    தொடர்கிறேன்.
    நன்றி

    ReplyDelete

  13. @ ஊமைக் கனவுகள்.
    நான் அறிந்ததுதான் அறிவாக முடிந்த பொருளாக நான் நினைக்கவில்லை. புதியதோர் கோட்பாட்டை சிருஷ்டிக்கவும் நினைக்கவில்லை. சிந்தனை போன போக்கில் எழுதியது சற்று வித்தையாசமாய் இருந்ததால் இடுகையாக்கினேன் வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  14. @ கில்லர்ஜி
    வலைச்சரத்தில் சுட்டி கொடுத்தது பயன் தந்திருக்கிறது வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  15. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் படித்தேன் ஐயா.

    ReplyDelete
  16. மனிதனை கணினியுடன் ஒப்பிடலாம். "ஹார்ட்வேர்" என்பது உடல். "சாப்ட்வேர்" என்பது மனம் அல்லது எண்ணம்.... உங்கள் நிலையிலிருந்து சொன்னால் ஆன்மா... உயிர் என்பது மின்சாரம்... இந்த மூன்றும் சேர்ந்து இயங்கினால்தான் கணினியிலும் சரி மனிதனிலும் சரி உபயோகமாக எதுவும் பண்ணமுடியும் ... மூன்றில் எது ஒன்று தன்னை மற்றதிலிருந்து விடுவித்துகொண்டாலும் shotdown கோவிந்தா தான். அதுசரி இந்த பரமாத்மா யார் ? ... அது கணினியை முறையாக கட்டுப்படுத்தி வலைபதிவு எழுதும் நானாக இருக்குமோ? ஆஹா யூரேகா ... யூரேகா !! ... நான் கடவுள் !!! நான்கடவுள் !!! ... ஆம் "தத்வம் அஸி". >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete