Friday, May 15, 2015

காணொளிக் கதம்பம்



                                       காணொளிக்கதம்பம்
                                       --------------------------------

 இதோ ஒரு பகீர் காணொளி. மனசில் பயம் கொண்டவர்கள் பார்க்காமல் இருக்கலாம் என்று பயமுறுத்த மாட்டேன் திரு ஹரணியின்  வேண்டுகோளுக்கு இணங்கி இந்தக் காணொளி அகற்றப் படுகிறது



தமிழன் என்றோர் இனமுண்டு அவர்க்கே தனியே ஓர் குணமுண்டு, காணொளி கண்டு மகிழுங்கள் பாரம்ப்ரியப் புகழ் பாடியே மகிழ்ந்திருப்போம்



 அந்தரத்தில் மனிதன் மேஜிக்  கா,>




24 comments:


  1. முதல் காணொளி வேதனை
    இரண்டாவது காணொளி அனைவரும் பார்க்க பயனுள்ளது
    மூன்றாவது காணொளி முதன்முறையாக காண்கிறேன் நம்பவே முடியவில்லை ஆச்சர்யமாக இருக்கிறது.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. முதல் வீடியோவைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு இருந்ததால் நான் பார்க்க விரும்பவில்லை.

    இரண்டாவது வீடியோவில் தமிழ், தமிழர்,குமரிக்கண்டம் என்று, நாம் இன்னும் நமது பழமையையே பேசிக் கொண்டே இருக்கிறோம் என்பதனைக் காட்டுகிறது. ஜாதிப் பெருமைகளை நிலை நிறுத்திக் கொண்டு, ஒற்றுமையில்லாமல் காலத்தை ஓட்டும் தமிழர்கள் என்றுமே இப்படியே இருக்க வேண்டியதுதான்.

    மூன்றாவது வீடியோவை என்னால் நம்பமுடியவில்லை. வீடியோ காட்சியில் ஏதேனும் தந்திரம் இருக்கலாம்.

    பகிர்வுக்கு நன்றி. உங்கள் பதில்களில் இந்த வீடியோ காட்சிகளுக்கான விளக்கத்தை எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete

  3. @ கில்லர்ஜி
    முதல் காணொளி டெல்லியில் என நினைக்கிறேன் ஒரு வன இயல் பூங்காவில் நிகழ்ந்த அசம்பாவிதம் இதைப் பதிவிடவா வேண்டாமா என்றே சில மாதங்களோடிவிட்டது. நான் பதிவிடும் அநேக காணொளிகள் என் மக்கள் எனக்கு அனுப்புவதே. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  4. @ தி.தமிழ் இளங்கோ
    வருகைக்கு நன்றி ஐயா. உங்களுக்கான மறு மொழியை கில்லர்ஜிக்கு எழுதிவிட்டேன்
    நிஜ வாழ்வில் பல மேஜிக்குகளைப் பார்க்கிறோம் . அது போல் இதுவும் என நினைக்கிறேன் என் சிறிய வயதில் பெங்களூருவில் இப்போது சிவாஜி நகர் பேரூந்து நிலையம் இருக்கும் இடத்தில் சாலையில் வித்தை செய்வோர் உடலை எந்த பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தூக்குவதைப் பார்த்திருக்கிறேன் ஆனால் இதில் உடல் எங்கெல்லாமோ பயணிக்கிறது.....! வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  5. மூன்று காணொளிகளில் முதல் மற்றும் மூன்றாவது காணொளிகளை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். இரண்டாவது காணொளி நமது பழம்பெருமையை பேசினாலும் கடைசியில் அது தரும் செய்தி ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

    ReplyDelete
  6. அந்தரத்தில் மனிதன் இப்படிப் பறக்கவே முடியாது. இது ஒரு பொய் விடியோ.

    ReplyDelete
  7. முதல் வீடியோ ரொம்பப் பழசு. கனமான பதிவுகளுக்கு நடுவில் ரிலாக்ஸ் செய்ய இந்த வீடியோ உதவுமா, தெரியவில்லை!

    இரண்டாவது வீடியோ திரு தமிழ் இளங்கோ அவர்கள் கருத்தை வழி மொழிகிறேன்.

    மூன்றாவது வீடியோ ஏற்கெனவே வாட்சப்பில் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. முதல் காணொளி முன்னரே பார்த்தது, வேதனையைத் தந்தது.
    இரண்டாவது காணொளி தமிழனின் பெருமை கூறுவது. மூன்றாவது காணொளி வியப்பைத் தந்தது. (முதல் காணொளியைத் தவிர்த்திருக்கலாமே ஐயா?)

    ReplyDelete

  9. @ வெ நடனசபாபதி
    இம்மாதிரிகாணொளிகளைப் பதிவாக்க யோசிக்க வேண்டி உள்ளது. பலரும் பார்த்து இருக்கிறார்கள் என்பது தெரிவதில்லை வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  10. @ டாக்டர் கந்தசாமி
    வீடியோ பொய்யா மெய்யா என்பது அதை எடுத்தவருக்கே வெளிச்சம்/ பி/ சி சர்க்காரின் மேஜிக்கில் ஒருவர் மெடையில் இருந்து மறைவார். சில நொடிகளில் அரங்கத்தின் பின்னிருந்து வருவார். அது போல்தான் இதுவும் என்று நினைக்கிறேன் நன்றி சார்.

    ReplyDelete

  11. @ ஸ்ரீராம்
    ஒரு மாற்றம் என்பதற்கு ரிகாக்ஸ் என்று தவறாக எழுதி விட்டேன். உங்கள் பின்னூட்டங்களைப் பார்க்கும் போது பல வீடியோக்கள் நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பது தெரிகிறது/ நீங்கள் பார்க்காதது எப்படித் தெரிவது? வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  12. @ சோழ நாட்டில் பௌத்தம்
    நீங்கள் முன்பே பார்த்து விட்ட்தால் இப்படித் தோன்று கிறதோ. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  13. @ திண்டுக்கல் தனபாலன்
    வருகைக்கு நன்றி டிடி.

    ReplyDelete
  14. புலி கிடக்கும் குழிக்குள் மனிதனைக் கண்டதுமே மனம் என்னவோ போலாகி விட்டது..

    அதை நான் தொடர்ந்து பார்ப்பதற்கு விரும்பவில்லை..

    சக மனிதனை - சகோதரனாக நினைக்கத் தவறிய அற்ப பதர்கள்..

    புலியை விடக் கொடியவர்கள்.

    மனிதனின் பெருமை பேசத் தவறிய நிமிடங்கள் அவை!..

    மனிதம் குழியில் விழுந்த நாள் அது!..

    ReplyDelete

  15. @ துரை செல்வராஜு
    நிகழ்ந்தது ஒரு விபத்து. யாராலும் ஏதும் செய்ய முடியாதநிலை. யாரோ ஒரு மகானுபாவன் படமாக்கி விட்டார். ஆயிரம் வார்த்தைகள் எழுப்பமுடியாத வேதனைகளை அந்தக் காணொளி கூட்டிக்காட்டுகிறது. உங்கள் உணர்வுகளைத் தூண்டி விட்டதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

    ReplyDelete
  16. தொலைக்காட்சிகளில் பார்த்ததே முதல் காணொளி இரண்டாவதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கும் என்பது தெரியவில்லை. இதை மறுத்தும் பல செய்திகள், ஆய்வுக் கட்டுரைகள் வருகின்றன. மூன்றாவது அந்தரத்தில் பயணம் செய்யும் மனிதன் என்ன தந்திர வேலை என்பது புரியவில்லை. :)

    ReplyDelete

  17. @ கீதா சாம்பசிவம்
    தொலைக் காட்சியில் காணொளி கண்ட நினைவில்லை. இருந்திருந்தால் பகிர்ந்திருக்க மாட்டேன். ஒவ்வொரு ஆய்வுக்கும் எதிர்மறைக் குரல் எழும்புவது சகஜமாய்விட்டது. தந்திர வேலைகள் புரிபட்டால் அது மேஜிக் ஆக இருக்காதே. வருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  18. எல்லாத் தொலைக்காட்சிகளிலும் இந்த நிகழ்வைத் திரும்பத் திரும்பப் போட்டுக் காட்டினார்கள் ஐயா. :( ரொம்பவே வேதனையாக இருந்தது.

    ReplyDelete

  19. @ கீதா சாம்பசிவம்
    பத்திரிக்கைகளில் படித்தது நினைவிருக்கிறது. தொலைக்காட்சியில் . நோ, நினைவில்லை.

    ReplyDelete
  20. அன்புள்ள ஐயா..

    தயவு செய்து அன்புகூர்ந்து முதல் காணொளியை அகற்றிவிடுங்கள். அதைப் பார்க்கமுடியவில்லை. ஏற்கெனவே ஒருமுறை பார்த்தே அதை மறப்பதற்குப் படாத பாடு பட்டேன்.

    ReplyDelete

  21. @ ஹரணி
    ஐயா வணக்கம். நாம் விரும்பாததையும் சில நேரங்களில் காண நேர்கிறது. முதல் காணொளி அவ்வகையைச் சேர்ந்தது. தொலைக்காட்சியில் இது பல முறை ஒளிபரப்பப் பட்டதாகத் தெரிகிறது. நிகழ்வுகளைப் பதிவு செய்ததே நோக்கம் . யார் ம்னதும் வேதனைப் படுத்துவது நோக்கம் அல்ல. நீங்கள் அகற்றி விடுங்கள் என்று கூறி விட்டீர்கள். அகற்றி விடுகிறேன்

    ReplyDelete
  22. முதல் வீடியோ னாங்கள் வரும் போது இல்லை என்றாலும் அது என்ன என்று தெரிந்துவிட்டது.....அது பார்த்ததுதான்...

    இரண்டாவது காலி பெருங்காய டப்பா....

    மூன்றாவது மேஜிக்....நம்ப முடியவில்லை. ஒரு வேளை டெட் சீயில் ஒரு பெண்மணி மிதந்து கொண்டே புத்தகம் படிப்பது போலவும், சாப்பிடுவது போலவும் விஞ்ஞான விளக்கங்களுடன் பல வருடங்களுக்கு முன் வெளியானது அது போல இருக்குமோ என்றும் கூடத் தோன்றுகின்றது....அனுமார் பறந்தார் என்று புராணம் சொல்லவில்லையா அது போல? அவரது உடல் ரீதியாக....உண்மையோ இல்லை மேஜிக்கோ...நமக்கும் அப்படிப் பறக்க்க முடிந்தால், டிக்கெட் எதுவும் இல்லாமல் எல்லா ஊர்களுக்கும் பறக்கலாமோ?!!!! ட்ராஃபிக் ஜாம் அங்கும் ஏற்படும்....முட்டி மோதாமல் பறக்க வேண்டுமே இருக்கும் மக்கள் தொகைக்கு.....

    ReplyDelete

  23. @ துளசிதரன் தில்லையகத்து
    எனக்கு நிறையவே இம்மாதிரி மேஜிக் காணொளிகள் வருகிறது. அவற்றை ரசித்து விட்டுப் போய் விடுவேன் மூலம் பற்றி ஆராய்ச்சி எல்லாம் செய்வதில்லை. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete