Monday, September 28, 2020

கற்பனை விரிகிறது

 கற்பனை விரிகிறது

அருண கிரியாருக்கு அடியெடுத்துக் கொடுத்து பாட வைத்தாராம் முருகப்பெருமான்  அதுபோல் இல்லாவிட்டாலும்   அடியெடுத்துக் கொடுத்து என்னை கதை எழுத வைத்தார் நம் மூத்தவாசகர் ஒருவர் காதல் கதை ஒன்று கேட்டு  நான்  எழுதியதை கேட்டவர்  பாராட்டியதும் உண்டு இதெல்லாம்  இப்போது  ஏன் என்றால் இப்போதெல்லாம்  நினைத்தமாதிரி எழுத வருவதில்லை நான் விடாக்கண்டன்  அல்லவா

அவதாரமே தொற்றா  என்னும் என்பதிவு  வெளியான போதிலும் ட்ராஃப்ட்  என்றே இருந்தது ”உங்கள் வித்தியாசமான சிந்தனை வியக்க வைக்கிறது இந்தகற்பனையை மேலும் விரித்தால்  அட்டகாசமான சயன்ஸ்  ஃபிக்‌ஷன்  கிடைக்கலாம்” என்னும் பின்னூட்டமொன்றும் இருந்தது பதிவுக்கு பொருள் தேடி  இருந்தவனுக்கு இது போதாதா கற்பனை விரிய வந்ததே இப்பதிவு பக்த ஜனங்களுக்கு  இம்மாதிரி  கற்பனை பிடிக்காமல் போகலாம்  இது கற்பனை தானே என்று தேற்றிக்  கொள்ளலாம்

அவதாரக்கதைகளில் முன்பானது  மீன் அவதாரக்கதையாகும் சத்திய விரதன் என்னும் அரசனுக்கு பகவானின்   ஊழிக்கால  திருவிளையாடல்களை காண ஆசை வந்ததாம்பார்க்கசுட்டி நான்மறைகளுக்கு  உரியவன் நான்முகன் ஆணவம்
அடக்கவும், ,அவன் பறிகொடுத்த மறைகளை
பரிமுக  அரக்கனிடம் இருந்து மீட்கவும்
மீன் உரு எடுத்ததே திருமாலின் ஆதி அவதாரம்

இப்போது இருக்கு கொரோனா தொற்றின் காரண்ம்சீனர்களென்று ஒரு கருத்து  இருக்கிறது அந்த  ஈன சீனர்களுக்குஉழிக்காலம் பற்றி படம்புகட்ட  தொற்றே அவதாரமாய்  தன் திருவிளையாடல்களைக் காட்ட பரந்தாமன்  எண்ணினான் சீனன் கதை பஸ்மாசுரன்  கதைஆகிப்போகும்  வாய்ப்புமிருக்கிறது

 

 நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிக்கிறேன்(8)(பகவத் கீதை )

 

இது பரந்தாமனின்   வாக்கு தொற்றினால் நல்லவர்களூம் மடிய நேருகிறதே? இது தவிர்க்கமுடியாது இவ்வுலகு ஒரு போர்க்களம் நிகழ்வுகளுக்கு  எல்லோருமே பொறுப்பு நல்லவர்களுக்கு இருககவே இருக்கிறது  பகவன் நாமா  பிரார்த்னையில் நம்பிக்கை பெறட்டும் கர்மவினையால்  நமது மீள் பிறப்பில்நம்பிக்கை கொள்வோம்     

          .

   

9 comments:

  1. என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை .சயன்ஸ் ஃபிக்சன் என்றீர்கள்: மீன் அவதாரக் கதை எதற்கு வருகிறது என்று தெரியவில்லை .

    ReplyDelete
  2. சயன்ஸ் ஃபிக்‌ஷன் என்று சொல்ல வில்லையே அது ஒரு பின்னூடத்தில்வந்த சஜெஸ்சன் தொற்று ஊழிக்காலத்தில்நடக்கும் இறப்புகளோ என்பதன் கற்பனையே

    ReplyDelete
  3. கன்செர்வேடிவ் வாசகர்கள் விரும்பமாட்டார்கள் என்பதும் தெரியும்

    ReplyDelete
  4. அவரவர் வினைப்பயனை அவரவர் அனுபவிக்கவேண்டும் என்ற நிலையில் இந்த காலகட்டத்தில் இதனை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டிய சூழல் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. எதையவது சொல்லி சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்

      Delete
  5. வினை விதைத்தவர் அதையே அறுப்பர்.

    ReplyDelete
  6. தொற்றில் மாள்பவரெல்லாம் ஒரெ வினையையை யா விதைத்தார்கள்

    ReplyDelete
  7. ஒரு கிராம் கூட இல்லை தீநுண்மி... அது செய்யும் வேலையோ அபாரம்...!

    ReplyDelete
  8. தீநுண்மி அட இதுவும்உபயோகத்தில் உள்ளதா தெரிந்து கொள்கிறேன்

    ReplyDelete