Wednesday, October 13, 2021

முருகனிடம் ஒரு கேள்வி



முருகா நீ அப்பாவியா
 


ஈசானம், தத்புருஷம், வாமனம்,

அகோரம், சத்யோஜாதம், அதோமுகம்-எனும்

ஈசனின் ஆறுமுக நுதல் கண்களீன்

தீப்பொறிகளாய் வெளியான ஆறுமுகனே

எனை ஆளும் ஐயனே, உனைக் குறித்து

எனக்கொரு ஐயம் எழுகிறது.

 

அஞ்சு முகம் தோறும், ஆறுமுகம் காட்டி,

அஞ்சாதே என வேலுடன் அபயமளிப்பவனே,

கனி கொணர்ந்த நாரதன் ஈசனே ஞாலம் என ஓத

விரும்ப ,அது உணர்ந்த ஆனைமுகன், அம்மை

அப்பனை வலம் வந்து கனி கொண்டான்.

நீயோ மயிலேறி பூவுலகை வலம் வந்து ,

கனிகிட்டாக் கோபத்தில் மலையேறி நின்றனை.

பரமனுக்கே ப்ரணவப் பொருளுரைத்திய

தகப்பன்சாமி நீயென்ன அப்பாவியா.?

 

ஈசன் சக்தியல்லால் வேறெதாலும் அழிக்கமுடியாத

சூரன், ஆணவம் மிகக் கொண்டு இந்திராதி தேவர்களுடன்

ஈரேழு உலகையும் கட்டுக்குள் வைக்க, அவனை அடக்கி

தேவர்கள் விடுதலை பெற அத்தனின் சக்திகள் அத்தனையும்

பெற்று , அருள் அன்னையின் சக்தி வேலையும் பெற்று,

போரில் அண்டமும் ஆகாசமாய் ஆர்பரித்து மரமாய் நின்ற

சூரனைசக்திவேலால் இரு பிள வாக்கினை.. அழித்தவனை

சேவலாய் மயிலாய் ஆட்கொண்ட நீயென்ன அப்பாவியா.?

 

மாயை உபதேசம் கொண்டு ஈசனிடம் வரம் பெற்ற சூரனை

ஆட்கொண்ட சரவணா, பரிசிலாக இந்திரன் தன் மகள்

கரம் பிடித்துக் கொடுக்க, அதனை மனமுவந்து ஏற்ற நீ அப்பாவியா

இல்லை சரவணப் பொய்கையில் உன் கரம் பிடிக்கத் தவம்

செய்த அவள்தான் இவள் என்றுணர்ந்து மணந்த மணவாளா,

ஏதுமறியாப் அப்பாவியாக இருக்கும் என் நாவில் வந்தமர்ந்து

ஆட்டுவிக்கும் நீ நிச்சயமாக அப்பாவி  அல்ல

 

எமக்காக வேஷம் போடுகிறாயோ   அதிகம்பறக்க        இயலாதமயிலேறீஞா லம்   வரத் துணிநத  உன்  செயல் என்னைக்  கேட்க  வை க்க்றது 

 

 

 

          

                       

 

 

10 comments:

  1. அப்பாவியா நீ - எனக் கேட்டு, அப்பாவியல்ல என இறுதியில் தெளிவுபெறுகிறீர்கள்..
    பொழுது நன்றாக விடிந்தது!

    ReplyDelete
    Replies
    1. பொழுது விடிந்து ச்ந்தேகம் திர்ந்ததா

      Delete
  2. அவன் அப்பாவியல்ல, குறும்புக்காரன்.  அடியார்கள் மனதில் நிற்கும் அழகன்.

    ReplyDelete
    Replies
    1. அழகன் வித்யசமாக சிதரிக்கப்பட்டுஇருக்கிறான்

      Delete
  3. முருகன் கோபித்துக்கொள்ளப் போகிறான்.

    ReplyDelete
  4. இப்படியே பயப்படுகிறோம்

    ReplyDelete