அரசியல் ஆதங்கங்கள்
----------------------------------
எனக்குப்
புரியாத ஒன்று இந்த பணமில்லாப் பரிவர்த்தனை என்று சொல்லப்படுவது . 56 அங்குல
மார்புடைய பிரதம மந்திரி அவருடைக மார்பை
தட்டிக் கொண்டு காய்களை நன்றாகவே நகர்த்துகிறார் இவர் கூறும் காசில்லாப் பரிவர்தனை
ஒரு சராசரி இந்தியனுக்கு விளங்க, அவனுக்கு ஓரளவாவது இந்த நுட்பங்கள் தெரிய, அதிகம்
படிப்பறிவில்லவர்கள் புரிந்து கொள்ள இன்னும்
பல நாட்களாகும் இல்லை மாதங்களாகும் முன்னேறிய நாடுகளில் கூட முழுவதுமாக
இந்த காஷ்லெஸ் ட்ரான்ஸாக்ஷன்ஸ்
புழக்கத்தில் இல்லை. அதிகப் பணம் கொடுக்க வேண்டிய இடங்களில் இது
நடக்கலாம் தினசரி வாழ்க்கையில் எண்ணிப்பார்க்க முடியாத
ஒன்று. பிரதமரின் பழைய பண விலக்கலை சாதாரணன மனிதன் ஏற்றுக் கொண்டாலும் அது ஊழலையும் கருப்புப்பணத்தையும்
கள்ளப் பணத்தையும் ஒழிக்க என்று
கூறும்போது அதற்கு எதிராகக் கூற
மாட்டார்கள் என்பது தெரிந்ததுதானே பழைய ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விலக்கிக் கொள்ள
முடிவு செய்தபோது இன்னும் முன் எச்சரிக்கையுடன்
இருந்திருக்கவேண்டும் 86% பணப்புழக்கத்தில் இருந்த இந்த நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டால் அதற்கு ஈடாக புதிய நோட்டுகள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் படி ஏற்பாடுகள் செய்திருக்க
வேண்டும் இப்போதெல்லாம்2000 ரூபாய் நோட்டுகளே வங்கிகளில் கொடுக்கிறார்கள் 500
ரூபாய் நோட்டுகளை நான் இன்னும்
காணவில்லை. மனதோடு உறவாடும் நம் பிரதமர்
அவர் நாட்டில் கருப்புப் பணத்தையும்
கள்ள பணத்தையும் ஒழித்து விட்டதாக
மார் தட்டிக் கொள்கிறார் எல்லோரும் இப்போது சுபிட்சமாக இருக்கிறார்கள்அவர் வாக்களித்திருந்த அச்சே தின் வந்து விட்டது கள்ளப்பணமும் கருப்புப் பணமும் ஒழிந்து விட்டது என்னதவம் செய்தமோ மோடி நம் பிரதமராக வரவும் தொடரவும்....!
எனக்கு
நான் பள்ளியில் படித்த நக்கீரரின்
அகப்பொருளுரை நினைவுக்கு
வருகிறது அந்தக் காலத்தில் பாண்டிய நாடு
பன்னீரியாண்டு வர்கடஞ்சென்றது அரசன் தன் சிட்டரை எல்லாம் அழைத்து யான் உங்களை எல்லாம் புறந்தரகில்லேன் நீவீர் உமக்கறிந்தவாறு சென்று புக்கின் நாடு நாடாயின ஞான்று என்னை உள்ளி வம்மின் “ என்றானாம் அது போல் நம் மதிப்புக்குரிய
பிரதமர் நம்மை சரியாகப் புரந்தரவல்லாது இருக்கிறார் ஆனால் பாண்டியனின் மன வளம் சிறிதும் இல்லை அவருக்குப் பின்பாட்டுப்பாட பீஜேபி மந்திரிகள்
இருக்கிறார்களே யார் எப்படிப் போனால் என்ன அவர்களுக்கு பெரும் பானமை
இருக்கிறது இன்னும் மூன்றாண்டுகளுக்கு
அவர்களை யாரும் அசைக்க முடியாது திடீர் திடீரென்று அவருக்கு ஞானோதயம் ஏற்படுகிறது
இப்போது மத்திய மாநில அரசுகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது
ஒன்றாகும் ஆதியில் அப்படித்தானே இருந்தது
அதிகார ஆசையில் மாநில அரசுகள் கலைந்து
நடுவிலேயே தேர்தல்கள் வந்தன. அது மாதிரி
இப்போதும் நடக்காது என்பது என்ன உத்தரவாதம் அது போகட்டும்
“
இன்றைக்கு கண்டுபிடிக்கப்படும் கருப்புப் பணம்
எங்கிருந்தது என்று தெரியாமலா இத்தனை நாள் இருந்தார்கள் இவர்களை வேட்டையாடத் தடை செய்தது என்ன என்னவோ
இந்தப்பணமெல்லாம் இப்போதுதான் பதுக்கப்பட்டு
கண்டெடுக்கப்பட்டது போல் ஒரு ஜோடனை. த ஹிந்து ஆங்கில நாளிதழில்
இருந்த இருக்கும் நிலைகளை
விரிவாகக் காட்டி இருகிறார்கள் மோடியின் இந்த அதிரடி அறிவிப்புக்குப் பின் பல இடங்களில் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம்
என்பது தெரிகிறது பெருவாரியான ஹிந்துக்கள் வசிக்கும் நமது நாட்டில் காவிகள் கை ஓங்கி இருப்பது தெரிகிறது சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற பெருமை அடைந்த பலரது பெயர்களை கண்டெடுத்து வெளியிட இருந்த தகவலை அரசின் கைத்தடிகள் நிறுத்தி இருக்கிறார்களாம் காரணம் அதில் பலரும் இஸ்லாமியர்களாம் கட்சி அரசியலைத்
தாண்டி குறுகிய எண்ணங்களைத் தாண்டி நினைக்கவோ செயல்படவோ இவர்கள் தயாராய் இல்லை.
விஷயம் தெரிந்தவர்களின் கூற்றும் ஒதுக்கப்படுகிறது பல முறைகேடுகள்
நடந்தேறுகின்றன இவர்களுக்குத் துணை போக இவர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளும்
இவர்கள் கைப்பாவையாகி விடுகிறாகள் இது
மாநில மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளில் தெரிகிறது
க்ள்ளப்பணமும் கருப்புப் பணமும் படைத்தவர்கள் ஒரு சதவீதம் பேர் இருப்பார்களாஅவர்களை இனம் கண்டுகொள்ள 99% பேர் துன்பத்துக்கு உள்ளாகிறார்கள் எலியைப் பிடிக்க மலையைக் கெல்லுவது போல
க்ள்ளப்பணமும் கருப்புப் பணமும் படைத்தவர்கள் ஒரு சதவீதம் பேர் இருப்பார்களாஅவர்களை இனம் கண்டுகொள்ள 99% பேர் துன்பத்துக்கு உள்ளாகிறார்கள் எலியைப் பிடிக்க மலையைக் கெல்லுவது போல
எடுக்கப்பட்ட
முடிவுகள் கடைகோடியில் இருப்பவனைக் காயப்படுத்துகிறது என்பது தெரிந்தும்
ஒப்புக்கொள்ள தயக்கம் காட்டும் இவர் ஏதோ மோடி வித்தை மாதிரி புதிய கருத்துகளை
ஒவ்வொரு நாளும் சொல்லி வருகிறார்/ மீடியாக்களும் தங்கள் டி ஆர் பி ரேட்டிங்கை
உயர்த்த பொது நலம் கருதாமல் பீப்பீ
ஊதுகிறார்கள். சாதாரண மனிதனுக்கு இந்த புள்ளிவிவரங்கள் தெரியாது ஆனால் பட்டறிவு
உண்டு மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு கோபமில்லை என்னும்
பொருளல்ல பொதுவாகவே நாம் இந்தியர்கள் சாத்வீக குணம் உடையவர்கள் ஆனால் ஒருநாள் பொறுத்தது போதுமென்று
பொங்கி எழுவோம் அப்படி ஏதும் நடக்கும்
முன் நிலைமைகள் சீர்செய்யப்பட்டால்
எல்லோருக்கும் நல்லது