அரசியல் நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

அரசியல் ஆதங்கங்கள்


                                 அரசியல் ஆதங்கங்கள்
                                ----------------------------------


எனக்குப் புரியாத ஒன்று இந்த பணமில்லாப் பரிவர்த்தனை என்று சொல்லப்படுவது . 56 அங்குல மார்புடைய பிரதம மந்திரி  அவருடைக மார்பை தட்டிக் கொண்டு காய்களை நன்றாகவே நகர்த்துகிறார் இவர் கூறும் காசில்லாப் பரிவர்தனை ஒரு சராசரி இந்தியனுக்கு விளங்க, அவனுக்கு ஓரளவாவது இந்த நுட்பங்கள் தெரிய, அதிகம் படிப்பறிவில்லவர்கள் புரிந்து கொள்ள இன்னும்  பல நாட்களாகும் இல்லை மாதங்களாகும் முன்னேறிய நாடுகளில் கூட முழுவதுமாக இந்த காஷ்லெஸ் ட்ரான்ஸாக்‌ஷன்ஸ்  புழக்கத்தில் இல்லை. அதிகப் பணம் கொடுக்க வேண்டிய இடங்களில் இது நடக்கலாம்  தினசரி  வாழ்க்கையில் எண்ணிப்பார்க்க முடியாத ஒன்று.  பிரதமரின்  பழைய பண விலக்கலை சாதாரணன மனிதன்  ஏற்றுக் கொண்டாலும் அது ஊழலையும் கருப்புப்பணத்தையும் கள்ளப் பணத்தையும்  ஒழிக்க என்று கூறும்போது  அதற்கு எதிராகக் கூற மாட்டார்கள் என்பது தெரிந்ததுதானே பழைய ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்தபோது இன்னும் முன் எச்சரிக்கையுடன்  இருந்திருக்கவேண்டும் 86% பணப்புழக்கத்தில் இருந்த இந்த நோட்டுகள்  வங்கிகளில் செலுத்தப்பட்டால் அதற்கு  ஈடாக புதிய நோட்டுகள் மக்களுக்கு  எளிதில் கிடைக்கும் படி ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் இப்போதெல்லாம்2000 ரூபாய் நோட்டுகளே வங்கிகளில் கொடுக்கிறார்கள் 500 ரூபாய் நோட்டுகளை நான்  இன்னும் காணவில்லை.  மனதோடு உறவாடும்  நம் பிரதமர்  அவர் நாட்டில் கருப்புப் பணத்தையும்  கள்ள பணத்தையும்  ஒழித்து விட்டதாக மார் தட்டிக் கொள்கிறார் எல்லோரும் இப்போது சுபிட்சமாக இருக்கிறார்கள்அவர் வாக்களித்திருந்த அச்சே தின்  வந்து விட்டது கள்ப்பணமும் கருப்புப் பணமும் ஒழிந்து விட்டது என்னதவம் செய்தமோ மோடி நம் பிரதமராக வரவும்   தொடரவும்....!    
எனக்கு நான் பள்ளியில் படித்த நக்கீரரின்  அகப்பொருளுரை  நினைவுக்கு வருகிறது  அந்தக் காலத்தில் பாண்டிய நாடு பன்னீரியாண்டு வர்கடஞ்சென்றது அரசன் தன் சிட்டரை எல்லாம் அழைத்து  யான் உங்களை எல்லாம் புறந்தரகில்லேன்  நீவீர் உமக்கறிந்தவாறு சென்று புக்கின்  நாடு நாடாயின ஞான்று  என்னை உள்ளி வம்மின்  “ என்றானாம் அது போல் நம் மதிப்புக்குரிய பிரதமர் நம்மை சரியாகப் புரந்தரவல்லாது இருக்கிறார்  ஆனால் பாண்டியனின்  மன வளம் சிறிதும்  இல்லை அவருக்குப் பின்பாட்டுப்பாட பீஜேபி மந்திரிகள் இருக்கிறார்களே யார் எப்படிப் போனால் என்ன அவர்களுக்கு பெரும் பானமை இருக்கிறது  இன்னும் மூன்றாண்டுகளுக்கு அவர்களை யாரும் அசைக்க முடியாது திடீர் திடீரென்று அவருக்கு ஞானோதயம் ஏற்படுகிறது இப்போது மத்திய மாநில அரசுகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது ஒன்றாகும்  ஆதியில் அப்படித்தானே இருந்தது அதிகார ஆசையில்  மாநில அரசுகள் கலைந்து நடுவிலேயே தேர்தல்கள் வந்தன.  அது மாதிரி இப்போதும் நடக்காது என்பது என்ன உத்தரவாதம் அது போகட்டும் 
 
  இன்றைக்கு கண்டுபிடிக்கப்படும் கருப்புப் பணம் எங்கிருந்தது என்று தெரியாமலா இத்தனை நாள் இருந்தார்கள்  இவர்களை வேட்டையாடத் தடை செய்தது என்ன என்னவோ இந்தப்பணமெல்லாம்  இப்போதுதான் பதுக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்டது போல் ஒரு ஜோடனை.  த ஹிந்து ஆங்கில நாளிதழில்  இருந்த இருக்கும்  நிலைகளை விரிவாகக் காட்டி இருகிறார்கள் மோடியின் இந்த அதிரடி அறிவிப்புக்குப் பின்   பல இடங்களில் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது தெரிகிறது பெருவாரியான ஹிந்துக்கள் வசிக்கும்  நமது நாட்டில் காவிகள்  கை ஓங்கி இருப்பது தெரிகிறது சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற  பெருமை அடைந்த பலரது பெயர்களை கண்டெடுத்து வெளியிட இருந்த தகவலை அரசின் கைத்தடிகள்  நிறுத்தி இருக்கிறார்களாம்  காரணம் அதில் பலரும் இஸ்லாமியர்களாம்       கட்சி அரசியலைத் தாண்டி குறுகிய எண்ணங்களைத் தாண்டி நினைக்கவோ செயல்படவோ இவர்கள் தயாராய் இல்லை. விஷயம்  தெரிந்தவர்களின்  கூற்றும் ஒதுக்கப்படுகிறது பல முறைகேடுகள் நடந்தேறுகின்றன இவர்களுக்குத் துணை போக இவர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் இவர்கள் கைப்பாவையாகி விடுகிறாகள்  இது மாநில மற்றும்  மத்திய அரசின்  செயல்பாடுகளில் தெரிகிறது
க்ள்ளப்பணமும் கருப்புப் பணமும் படைத்தவர்கள் ஒரு சதவீதம் பேர் இருப்பார்களாஅவர்களை இனம் கண்டுகொள்ள 99% பேர் துன்பத்துக்கு உள்ளாகிறார்கள் எலியைப் பிடிக்க மலையைக் கெல்லுவது போல  
எடுக்கப்பட்ட முடிவுகள் கடைகோடியில் இருப்பவனைக் காயப்படுத்துகிறது என்பது தெரிந்தும் ஒப்புக்கொள்ள தயக்கம் காட்டும் இவர் ஏதோ மோடி வித்தை மாதிரி புதிய கருத்துகளை ஒவ்வொரு நாளும் சொல்லி வருகிறார்/ மீடியாக்களும் தங்கள் டி ஆர் பி ரேட்டிங்கை உயர்த்த பொது நலம்  கருதாமல் பீப்பீ ஊதுகிறார்கள். சாதாரண மனிதனுக்கு இந்த புள்ளிவிவரங்கள் தெரியாது ஆனால் பட்டறிவு உண்டு மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு கோபமில்லை என்னும் பொருளல்ல பொதுவாகவே நாம் இந்தியர்கள் சாத்வீக குணம்  உடையவர்கள் ஆனால் ஒருநாள் பொறுத்தது போதுமென்று பொங்கி எழுவோம்  அப்படி ஏதும்  நடக்கும்  முன்  நிலைமைகள் சீர்செய்யப்பட்டால் எல்லோருக்கும்  நல்லது              
          
  

            

 

திங்கள், 18 ஏப்ரல், 2016

அரசியல் ஒரு சிறு அலசல்


                           அரசியல் ஒரு சிறு அலசல்
                          --------------------------------------------
அரசியல் பற்றி எழுதக் கூடாது என்றிருந்தேன் ஆனால் நடக்கும் நிகழ்வுகளைக்காணும் போது எழுதாமல் இருக்க முடியவில்லை
நம்மை நாம் ஒரு ஜனநாயக அரசு என்று கூறிக் கொள்கிறோம் அதாவது பெரும்பான்மையான மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகளால் நம் ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்லிக் கொள்கிறோம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்றாலும்  எல்லோரும் அரசாள முடியாது குறிப்பிட்ட கொள்கை உடையவர்கள் ஒன்று சேர்ந்து கட்சி எனும்  பெயரில் போட்டியிட, பாவம், நாமும் நம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறோம் இதிலென்ன தவறு.?நல்லது தானே …!ஆனால் கட்சி என்று சொல்லும் போது ஒரு கட்டுக் கோப்பான கொள்கையும் இருக்க வேண்டும்  நாடு சுதந்திரம்  அடையும் முன்பு அயலானை அகற்றுவதே குறிக்கோளாக இருந்தது நாட்டை அடிமைத் தளையிலிருந்து மீட்டால்  விடுதலை அடைந்த நாடு இன்னவாறு இருக்க வேண்டும் என்னும் ஏகோபித்த கருத்து உருவாகி இருந்தது நம்மை ஆண்ட பிரதிநிதிகள் சுயநலமற்று இருந்தனர்  இருந்தாலும் பிரதி நிதிகளைத் தேர்ந்தெடுக்கும்  முறையைச் செவ்வனே செய்யவில்லையோ என்று தோன்றுகிறது
  நம்மால் தேர்ந்தெடுக்கப் படுபவர் மக்களில் பெரும்பானமையினரின் ஆதரவு பெற்றவராக இருக்க வேண்டும்  . ஆனால் இப்போது இருக்கும் நடைமுறையில் இது சாத்தியமாகத் தோன்றவில்லை. ஓட்டுப்போடும் உரிமை உள்ளவர்களில் 60 சதவிகிதம் பேர் ஓட்டுப் போடுவதாக வைத்துக் கொள்வோம் போட்டிக்கு நான்கு கட்சிகளோ  கூட்டணிகளோ இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம் அறுபது சத வீத ஓட்டுக்கள் 
நான்கு அணிகளுக்கும்  அளிக்கப் படுகிறது அளித்த ஓட்டுகளில் அதிகம் ஒட்டு பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுகிறார்  அதாவது அளிக்கப் பட்டுள்ள ஓட்டுகளில்அதிகம் ஓட்டுகளைப் பெற்றவர் வெற்றி பெறுகிறார். ஆனால் இவர் ஓட்டுப்போடாத 40 சதவிகித்ததோரால் ஏற்றுக் கொள்ளப் பட்டவரா ? எங்கேயோ தவறு தெரியவில்லையா?விழுந்த ஓட்டுகளில் 40 சதம் வாங்கி இருந்தாலும் இவரது ஓட்டு எண்ணிக்கை மற்றவர்களதை விட அதிகமாக இருந்தால் வெற்றி பெறுகிறார் இதையே கணக்குப் போட்டுப்பார்த்தால் இவரை இருக்கும் மொத்த ஓட்டாளர்களில் 24 சதவிகிதம்  பேரே தேர்ந்தெடுக்கின்றனர் மற்ற 76 சதவீதம் ஓட்டாளர்கள் இவரைத் தேர்ந்தெடுக்கவில்லை இதைத்தான் நான் தேர்ந்தெடுக்கும் முறையே சரியில்லையோ என்றேன்
 சரி இதற்குத் தீர்வுதான் என்ன ?ஒன்று தேர்ந்தெடுக்கப்படுபவர் இருக்கும்  மொத்த ஓட்டாளர்களின் 50 சதவிகிதம் பேருடைய ஆதரவாவது பெற்றிருக்க வேண்டும்  என்னும் சட்டம் வர வேண்டும்இல்லை என்றால் அதற்கு ஏற்றபடி சட்டங்கள்திருத்தப்பட வேண்டும்  இப்போது இருக்கும் நிலையில் தேர்வு செய்து வெற்றி பெறுபவரை விடவெற்றி பெற்றவரை அங்கீகரிக்காதவர்களே அதிகம்
 தமிழ் நாட்டில் இன்றிருக்கும் நிலையில்  போட்டி போடுபவர் யாரையுமே தேர்வு செய்ய மக்கள் விரும்புவதில்லை. மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களும் சரியான மாற்றம் செய்ய முடியாததால் இருப்பவரில் யாருக்கோ ஓட்டுப் போடுகிறார்கள்
 எந்தக் கட்சிக்குமே ஒரு கொள்கை கிடையாது திமுக அதிமுக இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் மற்றபடி கூட்டு சேர்ந்திருப்பவர்கள் மக்களின்  அதிருப்தியில் குளிர் காய விரும்புகிறார்கள் ஒரு பாரம் பரியம் மிகுந்த அகில இந்தியக் கட்சியாக இருந்த காங்கிர்சும்  முகவரி தெரியாமல் போய் இருக்கிறது

மதுவிலக்கு அமலில் இருந்தபோது ஒன்றிரண்டு தலைமுறையினருக்கு மதுவின் பழக்கமே இருக்கவில்லை.1970களின்  கடைசியில் மது விலக்கை நீக்கினார்கள் அதன் மூலம் தங்கள் பைகளை நிரப்பத் தொடங்கினார்கள் இன்னும் சிறிது காலத்தில் அரசே மது விற்பனையைக் கைகொண்டு கஜானாவையும் தங்கள் பைகளையும் நிரப்பினார்கள் அண்மையில் மது விலக்குக்கு ஆதரவாக பெண்மணிகள் இறங்கிய போது கட்சிகள் மது விலக்குக் கொள்கையை மீண்டும் அமல் படுத்தலாமா என்று பரிசீலிக்கத்  தொடங்கி விட்டார்கள் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வைக்கப் படும் மதுவிலக்கை நீக்கியதால் ஆதாயம் பெற்றவர்கள் மாற்றுக் கருத்துக்கு செவி சாய்ப்பார்களா என்பதே சந்தேகம் 
 மக்களின் நிலைதான் பரிதாபமானது இருக்கும்  கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்லது என்று தேர்வு செய்ய வேண்டும் இப்போது இருக்கும் நிலையில் அரசியல் வாதிகள் எல்லோருமே அரசியல் வியாதிகளாக இருப்பதே அவலம்
 ேர்ல் நத்ுவு என்பு அருக்கு அிகம் செலு வைக்கிறு இந்நிலையில் அவ்வப்பாவு மிலத்ில் ாவேர்ல் நந்து கொண்டே இருக்கிறுஇை நீக்கத்ிய அருக்கும்  மாநில அருக்கம்  ஒரே நேரத்ில் ேர்ல் வைப்பு சிந்திக்கேண்டியந்தாண்டு காலம் அரு நப்பு என்பிரிநிிகள்  ெரும்பான் ாக்குகள் அாவஐம்பு சத்ுக்கும் மேல் வங்கியர்காக இரந்தால், சத்ியக் கூறுகள் அிகம் அற்கேற்ப ந்தட்ட ிரத்ங்கள் கொண்டுவுவும் பிசீலிக்கேண்டிய
ாசர்கள் பித்ு அவர்கள் மேலானத்க்கை எழுவு மிகுக்கியம்   .