விட்ட கதை மனம் தொட்ட கதை
----------------------------------------------
இது
பதிவுலக வாசகர்களே என்ன
நினைக்கிறீர்கள் என்னும் கதையின் தொடர்ச்சி பார்க்க
”
“அக்கா நான் என்புருஷனுடன் பேசுவதே இரவில் மட்டும்தான் ஆனால் இந்த மாமியார்க்காரி அதையும்தடுக்கிறாள் என்ன ராத்திரி நேரத்தில் குசுகுசு என்று என்று அதட்டுகிறாள் கனவனுடன் சேரவே விட மாட்டேன் என்கிறாள் எதற்கு உயிரோடுஇருக்க வேண்டும் போல் இருக்கிறது அக்கா”
வாசகர்கள் கதையைத் தொடரலாமே
“அக்கா நான் என்புருஷனுடன் பேசுவதே இரவில் மட்டும்தான் ஆனால் இந்த மாமியார்க்காரி அதையும்தடுக்கிறாள் என்ன ராத்திரி நேரத்தில் குசுகுசு என்று என்று அதட்டுகிறாள் கனவனுடன் சேரவே விட மாட்டேன் என்கிறாள் எதற்கு உயிரோடுஇருக்க வேண்டும் போல் இருக்கிறது அக்கா”
வாசகர்கள் கதையைத் தொடரலாமே
என்று முடிந்திருந்தது
நீ உன் கணவனுடன் சேர்ந்து
இருந்ததே இல்லையா.?
ஏன் இல்லாமல் அக்கா அதனால்தானே எனக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள்.””
“ அப்போது விஷயம் இன்னும்
சுலபமாக முடியுமேமனைவியிடம் சுகம் கண்ட
கணவன்மார்களை ஈர்ப்பது எளிது”
‘ஆனால் இந்த மாமியார்க்காரிதானே நந்தி மாதிரி குறுக்கே …..”
மாலதி "பேசாம தனிக்குடித்தனம் போயிடு.. சரியாப்போயிடும்" என்றாள்.
"அவங்க எங்க போவாங்கக்கா? அவங்களும் ஒண்டியாத்தானே இருப்பாங்க?"
"முதியோர் இல்லத்துல சேர்த்துடறேன்னு சொல்லு"
" சரியா வருமாக்கா?"
"ஒரு பயமுறுத்தல்தானே? வரலாம்... வராமலும் போகலாம்...
"அவங்க எங்க போவாங்கக்கா? அவங்களும் ஒண்டியாத்தானே இருப்பாங்க?"
"முதியோர் இல்லத்துல சேர்த்துடறேன்னு சொல்லு"
" சரியா வருமாக்கா?"
"ஒரு பயமுறுத்தல்தானே? வரலாம்... வராமலும் போகலாம்...
எனக்கு
நம்பிக்கை இல்லை அக்கா அவளது ஈரமனம் மாலதியை என்னவோ செய்தது
கண்ணீர்
கசிந்தபடி நின்ற கல்யாணியின் மருமகளை (சுகன்யாவை) பார்க்கவே மாலதிக்கு பரிதாபமாக இருந்தது
அன்றிரவே நடந்த விஷயத்தை மாலதி தன் கணவரிடம் கூற , அதற் அவர் தன் மேலதிகாரியிடம் சொ ல்லி கல்யாணியின் மகனுக்கு (ஸ்ரீகாந்த்துக்கு) பெங்களூரு கிளைக்கு மாற்றல் வாங்கி தருவதாகவும் இப்படி செய்வதால் மாலதிக்கும் கல்யாணிக்கும் அவளது மருமகளுக்கும் நல்ல விடிவு கிடைக்கும் என்றும் நம்பினார் .
மறுநாள் வழக்கம் போல கல்யாணி மாலதி வீட்டு கதவை தட்டினாள் (வந்துட்டியா திரும்ப வந்துட்டியா? ) கதவை திறந்த மாலதி பேச்சுக்கு சிரித்து வரவேற்றாள் .
வழக்கம் போல கல்யாணி மருமகளின் குறை கூற மாலதி இடைமறித்து கல்யாணியின் மகனுக்கு மாற்றல் கிடைக்க போவதாக கூறினாள்
இதை கேட்டதும் கல்யாணியின் முகம் கருத்து போனது காரணம் தெரிந்த மாலதி மனதுக்குள் சிரித்துக்கொண்டாள் காரணம் பெங்களூரு கிளையின் தலைமை அதிகாரி, தன் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரிடமும் அன்பும் பாசமும் வைத்திருப்பவர் அதே நேரம் நாளொரு கேள்வியும் மண்டையை பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு சித்ரவதை செய்யும் ஒரு பிரகிருதி அவரது தொல்லைகள் தாங்காமல் வாலண்டியரிங் ரிடைர்மெண்ட் வாங்கியவ ர் கல்யாணி அன்றுமுதல் கல்யாணியின் புலம்பல் காணாமல் போயிற்று கல்யாணியின் மருமகளும் காரணம் புரியாமல் திகைத்தாள் சில நாட்கள் மாலதி கல்யாணியையும் மருமகளையும் கோவிலில் சேர்ந்தே பார்த்தாள்
அன்றிரவே நடந்த விஷயத்தை மாலதி தன் கணவரிடம் கூற , அதற் அவர் தன் மேலதிகாரியிடம் சொ ல்லி கல்யாணியின் மகனுக்கு (ஸ்ரீகாந்த்துக்கு) பெங்களூரு கிளைக்கு மாற்றல் வாங்கி தருவதாகவும் இப்படி செய்வதால் மாலதிக்கும் கல்யாணிக்கும் அவளது மருமகளுக்கும் நல்ல விடிவு கிடைக்கும் என்றும் நம்பினார் .
மறுநாள் வழக்கம் போல கல்யாணி மாலதி வீட்டு கதவை தட்டினாள் (வந்துட்டியா திரும்ப வந்துட்டியா? ) கதவை திறந்த மாலதி பேச்சுக்கு சிரித்து வரவேற்றாள் .
வழக்கம் போல கல்யாணி மருமகளின் குறை கூற மாலதி இடைமறித்து கல்யாணியின் மகனுக்கு மாற்றல் கிடைக்க போவதாக கூறினாள்
இதை கேட்டதும் கல்யாணியின் முகம் கருத்து போனது காரணம் தெரிந்த மாலதி மனதுக்குள் சிரித்துக்கொண்டாள் காரணம் பெங்களூரு கிளையின் தலைமை அதிகாரி, தன் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரிடமும் அன்பும் பாசமும் வைத்திருப்பவர் அதே நேரம் நாளொரு கேள்வியும் மண்டையை பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு சித்ரவதை செய்யும் ஒரு பிரகிருதி அவரது தொல்லைகள் தாங்காமல் வாலண்டியரிங் ரிடைர்மெண்ட் வாங்கியவ ர் கல்யாணி அன்றுமுதல் கல்யாணியின் புலம்பல் காணாமல் போயிற்று கல்யாணியின் மருமகளும் காரணம் புரியாமல் திகைத்தாள் சில நாட்கள் மாலதி கல்யாணியையும் மருமகளையும் கோவிலில் சேர்ந்தே பார்த்தாள்
சில நாட்களுக்குப் பின் பழைய குருடி கதவைத் திறடி
என்பதுபோல் வழக்கு தொடர ஆரம்பித்தது
உன் மாமியார் இரவில் உன் புருஷனுடன் பேச விடாமல்
ஒட்டுக் கேட்கிறாள் என்கிறாயே பேசாமல் உன்மாமியாரின் ஹியரிங் எய்டின் பாட்டரியைப் பிடுங்கி எடுத்து விடு
ஒட்டுக்கேட்க முடியாதே
அவருக்குச் சரியான பாம்புச் செவி ஹியரிங் எய்டே இல்லையே’
இல்லாவிட்டால் ஒன்று செய்யேன் பேசாமல் உன்
மாமியாரின் நாக்கை அறுத்து விடு
’’பிரச்சனைக்கு முடிவு கேட்டு வந்தால் கொலைபாதகம் செய்யச்
சொல்கிறீர்களே’’’
’ மாலதிக்கு இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு
காணும் ஆசை வந்தது
முதல்ல மருமகளை கையில பிடிச்சு இழுத்துக்கொண்டுபோய் மாமியார் முன் நிறுத்தி விட்டு.. இருவருக்கும் என்ன பிரச்சனை என்பதனை மாலதி நேரிடையாகவே கேட்டா..
இருவரும் வாதங்களும் சுமார் 2 மணி நேரங்கள் நீடித்தன.. அப்போதே இருவருக்கும் தெரிந்தது தம் குற்றச்சாட்டுக்கள் உப்புச் சப்பில்லாதவை என..
இருவரும் வாதங்களும் சுமார் 2 மணி நேரங்கள் நீடித்தன.. அப்போதே இருவருக்கும் தெரிந்தது தம் குற்றச்சாட்டுக்கள் உப்புச் சப்பில்லாதவை என..
’இனிமெல் உங்கள் சண்டையை சமாளிக்க நான் இருக்க மாட்டேன் என்கணவருக்கு மாற்றல் ஆகி விட்டது
இருவரும் சேர்ந்து இருப்பது அவரவர்
சாமர்த்தியம் என்று மாலதி கூறி விட்டாள்’ அதுதான் நிஜமும் கூட
ஆண்டுகள் பல ஓடி விட்டன ஒரு நாள் சுகன்யாவின் கணவன் வேறு ஒரு பெண்ணுடனும் கையில் ஒரு குழந்தையுடனும் போவதை ஒரு ரயில் நிலையத்தில் பார்த்தாள் மாலதி
‘என்னங்க அங்கே போவது உங்களிடம்பணி புரிந்து
வந்தவர்தானே சுகன்யாவின் கணவர் ஸ்ரீகாந்த் மாதிரி இருக்கிறதே”
ஓ உன்னிடம்
சொல்ல மறந்து விட்டேன் போல் இருக்கிறது அது சுகன்யாவின் கணவன் தான்
ஆனால் கூடப் போவது அவனது இரண்டாம்
மனைவி “
ஐயையோ அப்போ அப்போ சுகன்யா
அவள் தற்கொலை செய்து
கொண்டாளாம் தனக்கே நெருப்பு வைத்துக் கொண்டு அவள் கணவனுக்குஎந்த கேள்வியும்வரக்
கூடாதுஎன்று அந்த விஷயத்தை போலீசுக்குப்பணம் கொடுத்து அமுக்கி விட்டார்கள் பாவம்
அவனது மூத்த பெண்…..”
என்னதான் ஆனாலும் தற்கொலை செய்யத் தூண்டும்அளவுக்கு மாமியார்
கொடுமையா என்று பரிதாபப் பட்டாள்மாலதி
( என்ன வாசகர்களே உங்களிடம் கதையை முடிக்கச்சொல்லிக்
கேட்டிருந்தேன் ஒரு உண்மை சம்பவத்தின் முடிவு தெரிந்திருந்தது காரணங்கள் சரியாகத் தெரிந்திருக்கவில்லை தெரிந்த அளவு கூறி முடிக்கக் கேட்டிருந்தேன் நீங்கள் சொல்லி இருந்த
முடிவுகளை ஒதுக்காமல் இந்தக் கதையைமுடித்து
இருக்கிறேன் பின்னால் வந்த பின்னூட்டமொன்றில் சுகன்யா ஸ்ரீகாந்த் என்று பெயர் கொடுத்திருந்தார் பானுமதி வெங்கடேசன் )