சில பிரகிருதிகள்
----------------------------
நாம் நம் வாழ்வில் பல ரகமான மனிதர்களை சந்திக்கிறோம் அவர்களில் சிலரைப் பற்றிய ஒரு அறிமுகம்
இது இன்னும் தொடரலாம்
“அப்பா, உங்களைப் பார்க்க விரும்புவதாகஒருவர் இவரிடம்
சொல்லியிருக்கிறார்.தயாராக இருங்கள். காதில் ரத்தம் வரும்
அளவுக்குப் பேசியே அறுத்திடுவார்”, என் மருமகள் என்னை
ஏற்கெனவே தயார்படுத்தி இருந்தாள்.நானும் அறுபடக் காத்து
இருந்தேன். வந்தவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும். என் மகன்
என்னைப் பற்றி அவரிடம் பல தடவைப் பேசியிருக்க வேண்டும்.
அவரும் என்னைப் பார்க்க விருப்பம் தெரிவித்து வந்திருந்தார்.
நன்கு படித்த மனிதர்;நல்ல வசதி உள்ளவர். தொழிற்சாலையில்
பணி புரிந்து தன் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்துக்
கொண்டவர் என்றும், அவர் இல்லையென்றால் அத்தொழிற்
சாலையே விலாசம் இல்லாமல் போயிருக்கும் என்றும், தன்னால்
பல குடும்பங்கள் வாழ்வதாகவும், அதிலிருந்து தனக்கு எதுவும்
பலனாகக் கிடைக்கவில்லை என்றும் சொல்லிப் போனார்.
இப்போது ஏதோ சில லட்சங்கள் வருமானம் இருப்பதாகவும்,
இரண்டு மூன்று பங்களாக்கள் தனக்கு இருப்பதாகவும் அவர்
சொல்லக் கேட்டுக் கொண்டேன். அவர் ஒரு ஆசாரமான குடும்
பத்தில் இருந்து வருவதாகவும், வாழ்வில் எல்லாம் இருந்தும்
நிம்மதி இல்லையென்றும் புலம்பித் தீர்த்தார். அவருக்கு அவரது
சஞ்சலங்களைக் கொட்டித் தீர்க்க நான் ஒரு WAILING WALL-ஆக
என்னை எண்ணிக் கொண்டேன். எல்லாவற்றையும் கேட்டுக்
கொண்ட நான்,தெரியாத்தனமாக அவர் குடும்பம் பற்றிக் கேட்டு
விட்டேன்.
“ நான் இப்போது தனியாகத்தான் இருக்கிறேன்”- என்றார்.
நான்:-” பெற்றோர், மனைவி மக்கள் என்று....... ”
அவர்:-”வயதான அம்மா இருக்கிறாள்;மனைவி இருக்கிறாள்; ஒரு
மகன் இருக்கிறான்.”
நான்:- ” இவ்வளவு பேர் இருந்தும் தனியாக இருக்கிறேன்
என்கிறீர்களே.”
அவர் :-”என் அம்மா என்னுடன் இருக்கிறாள். என் மகன் அவன்
அம்மாவுடன் இருக்கிறான்.”
நான்:- “புரியவில்லை.”
அவர்:-” நான் செய்த ஒரே தவறு,கொஞ்சம் வயசு வித்தியாசத்தில்
வேற்று மதப் பெண்ணைக் காதலித்துக் கலியாணம்
செய்து கொண்டதுதான். மகன் பிறந்ததும் ,அவளுக்கு
நான் என் அம்மாவை விட்டு அவளுடனேயே இருக்க
வேண்டும் என்று விருப்பம்.அதற்காக அம்மாவை விட்டுக்
கொடுக்க முடியுமா.? நீ வேண்டுமானால் உன் மகனுடன்
இருந்துகொள் என்று கூறிவிட்டேன்”
நான்:- ”பேசித் தீர்க்க வேண்டிய விஷயம். அவசரப்பட்டு முடிவு
எடுத்து விட்டீர்களோ.?”
அவர்:-”அவளுக்கு நான் எப்படியும் அவளுடன் வருவேன் என்று
நம்பிக்கை. எனக்கு என் அம்மா முக்கியம். விட்டுக்
கொடுக்க முடியாது. அப்படி இப்படி என்று பதினெட்டு
வருடங்கள் ஓடிவிட்டது.
நான்: ”பலத்தைக் காட்டி பயமுறுத்தும் நாடுகளே பரஸ்பரம்
பேசித் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கும்போது ,பேசாமலே
பிரச்சனை தீரும் என்று எப்படி எண்ணுகிறீர்கள்.?”
அவர்:-”நான் எப்பேர்ப்பட்ட மனிதன். எப்படி விட்டுக் கொடுப்பது..
ஒரு சின்ன சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி, எந்த
பலனையும் எதிர்பாராமல்,எத்தனை பேரை வாழ
வைத்திருக்கிறேன். “
நான்:- ”பலனில்லாமலா இருந்த இடத்திலிருந்து லட்சங்களுக்கு
மேல் வரும்படியும், சொத்துக்களுக்கு சொந்தக்காரராய்
இருப்பதும்? உங்கள் நிலைக்கு எத்தனையோ பேரின்
உழைப்பும் ஒரு முக்கிய காரணம் அல்லவா,?”
அவர்:- “என்ன.. நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் போலப் பெசுகிறீர்கள் ?”
நான்:- “உள்ளதைச் சொன்னேன். நான் எனது என்று நாம் அதிகம்
நினைக்கும்போது, புரிதல் குறைகிறது. EGO வளர்கிறது.
பிரச்சனைகள் முடிவு பெறுவதில்லை. உங்கள் மகனிடம்
பேசினீர்களா.?”
அவர்:-“அவன் அம்மாவைவிட மோசம் சொன்ன பேச்சைக் கேட்க
மாட்டான். ஊதாரித்தனமாக செலவு செய்வான். எல்லாம்
அவள் கொடுக்கும் இடம். “
நான்:-”உங்கள் மனைவி என்ன செய்கிறார்கள் ?”
அவர்:-”அவள் ஒரு டாக்டர். எல்லோருடைய பிணிக்கும் மருந்து
கொடுப்பவள்.அவளுக்குள்ள வியாதியே தெரியாதவள். “
பேசப் பேச மனிதர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வசம் இழந்து
கொண்டிருந்தார். இந்தப் பேச்சு முற்றுப் பெற வாய்ப்பில்லை
என்று தோன்றியபோது “எல்லாம் நல்ல படியாக முடியும் மனசை
தளர விடாதீர்கள். தைரியமாக இருங்கள் “,என்று ஒருவாறு
தேற்றி அனுப்பினேன்.
கொடுப்பவள்.அவளுக்குள்ள வியாதியே தெரியாதவள். “
பேசப் பேச மனிதர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வசம் இழந்து
கொண்டிருந்தார். இந்தப் பேச்சு முற்றுப் பெற வாய்ப்பில்லை
என்று தோன்றியபோது “எல்லாம் நல்ல படியாக முடியும் மனசை
தளர விடாதீர்கள். தைரியமாக இருங்கள் “,என்று ஒருவாறு
தேற்றி அனுப்பினேன்.