இடை வேளையில்
-----------------------------
-----------------------------
இத்துடன்
இரண்டு படங்கள் வெளியிடுகிறேன் முன்பு
போல் இருந்தால் இப்படங்களை கண்ணாடி ஓவியங்களாக்கி இருப்பேன் இப்போதும் ஒன்றும்
குறைந்து விடவில்லை. எனக்குத் தெரிந்தே பதிவுலகில் நன்கு ஓவியம் வரைபவர்கள் உண்டு, இதையே அவர்கள் ஓவியமாக்க
முயற்சிக்கலாமே
கீழே காணப்படுவது காணொளி. பதிவுலகில் பலரும்
காணொளிகளைத் தாண்டிச் சென்றுவிடுகிறார்கள் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இதை அவசியம் பாருங்கள் ஒரு வேளை ஏற்கனவே
பார்த்திருக்கலாம் ஒரு குழந்தையிடம் எப்படி அணுகக் கூடாது என்பது புரியும் மேலும்
சில குழந்தைகளின் அடமும் விளங்கலாம்
என்
வீட்டுச்சின்ன தோட்டத்து மலர்களைநான்
பார்த்துப் பார்த்து பரவசமாகிறேன்
அழகான ரோஜா ஆனால் ரோஜா என்றால் அது பற்றி நினைக்கும் போது வரும் வண்ணமா இது.
என்வீட்டுத்தோட்டத்தில்
நிறைய செடிகள் இருந்தாலும் இது வரை பூத்தது ஓரிரு முறைதான் நான்சொல்வது இந்த நிஷாகந்தியை விடியற்காலையில்
மலரும் இந்த மலரை விரிந்துஇருக்கும் போது விழித்திருந்துபுகைப்படமெடுக்க முடியுமோ தெரியவில்லை மலராதமொட்டாக
இந்தநிஷாகந்தி அல்லது பிரம்மகமலம் உங்கள் பார்வைக்கு
தெச்சி
செடியில் மலர்களைப் பார்ப்பதே அழகு என்
வீட்டுச் செடியில் பூத்த மலர்கள்
இதுவும்
ஒரு எக்சோடிக் வகை பூ. கீதா மதிவாணனிதை லாப்ஸ்டர் க்ளாஸ் என்று சொன்ன நினைவு. வீட்டைப் பராமரிக்கும் போது நிறையவே செடிகள்
பாழாகி விட்டன. மிஞ்சியதில் சில பூக்கள் இப்போது