வயது, முதுமை , -சில விளக்கங்கள்.
---------------------------------------------------
மனம் நினைத்ததைச் செய்ய உடல் ஒத்துழைக்க வில்லை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடேசெய்யாத குற்றம் எனும் பதிவும் ஏன் ஏன் என்ற பதிவும்.திண்டுக்கல் தனபாலனுக்கு, எனக்கு மனதளவில் வயோதிகம் ஞாபகத்துக்கு வந்துவிட்டதோ என்ற சந்தேகம். முதுமை எனக்கு ஒரு பொருட்டே அல்ல. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இது மீள்பதிவாகிறது என்றால், மனதோடு உடலின் ஒத்துழைப்பு குறைகிறது என்றே பொருள். கோமதி அரசு, முதுமையை நான் சாபம் என்று எண்ணுகிறேனோ என்று கேட்கிறார் .இல்லை . தண்டனையோ என்பதுதான் என் கேள்வி. முதுமை பற்றிய எனது இன்னொரு பதிவும் நீங்கள் படித்தால் புரியும். உண்மையில் என் வாழ்விலேயே நான் மகிழ்வாயிருப்பதாகக் கருதுவது இப்போதுதான். இந்தியர்களின் சராசரி வயதையும் தாண்டி வாழ்க்கையை மிகவும் சுதந்திரமாக அனுபவிக்கிறேன். கிடைத்த அனுபவங்கள் ஏராளம். . பல செய்திகளை ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்
ஏன் என்று பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. எல்லாம் தெரிந்ததுபோல்
நினைக்கவும் முடியவில்லை. வலைத்தளம் ஒரு வரம். நினைப்பதை பகிர முடிகிறது. நான்
சொல்ல வருவது சில சமயங்களில் சென்றடைகிறதா என்ற சந்தேகம் வரும். அதைப்
பற்றியெல்லாம் இப்போது அதிகம் கவலை கொள்வதில்லை.
இதில் எங்கெல்லாம் தன்னிலையில் நான் என்று கூறுகிறேனோ
அது என்னொத்த வயதுடையோருக்கும் பொருந்தும்.என்று நம்புகிறேன்
இப்போது நான் மீள் பதிவுடும் முதுமையின் பரிசு
எல்லோருக்கும் பொருந்துமா , தெரியவில்லை. முதுமையின் பரிசு என்னவென்றறிய சொடுக்குங்கள் இங்கே