வீடும் வருமானமும்
----------------------------------
எனக்கு சொந்த வீடு
கட்டுவதில் அக்கறையே இருக்கவில்லை.
எல்லாம் அந்தந்த நேரத்து எண்ணங்களால் இருந்த
கருத்தே காரணம் நானொரு பப்லிக்
செக்டார் கம்பனியில் வேலையில் இருந்தேன்
வேலையில் இருந்தவரைஇருப்பிடம் பற்றி கவலை இருக்கவில்லை அவர்களாகவே இருக்க
இருப்பிடமோ அல்லது அதற்கான வாடகைப்பணமோ தந்துவிடுவார்கள் எனக்கு அதுபோதும் என்றி
ருந்தது மேலும் ஓய்வு பெற்றபின்
என்னாகும் என்னும்கேள்வி
எழுந்ததும் எனக்கு அதற்கு
ஒருபதிலுமிருந்தது
அப்போதெல்லாம் ஒரு இந்தியனின் சராசரி வயது 60
வாக்கில் இருந்தது ஓய்வு பெற்றபின் வீடு என்பதுஒரு சொற்பகால தேவையாய் இருக்கும்
என்று எண்ணினேன் அப்படியெ இருந்திருந்தால்
அது எவ்வளவு தவறாய் இருந்திருக்கும் இப்போது எனக்கு 81 வயதாகிறது ஒரு நண்பனின் அறி வுறுத்தலில் ஒரு சொந்த வீடு கட்டினேன் அது தான் இன்று
எனக்கு சோறுபோடுகிறது பென்ஷன் ஏதும் இல்லாத வேலை எந்த வருவாயும் இல்லாமல் இருபது
ஆண்டுகளுக்கு மேலாகிறதுவாடகைக்கு ஒரு மேல் தளத்தை விட்டு அதில் வரும்வாடகையே
வருமானம் எனக்கு யார் கையையும்
எதிர்பார்க்க பிடிக்காது fiercely
independent மக்களிடம் பணம் ஏதும்கோரி பெறுவது பிடிக்காது இந்தநிலையில் வீட்டுக்கு
வாடகைக்கு ஆளில்லையென்றால் ……….. இதுவரைஅப்படி நேரவில்லை ஆனால்கடந்த இரண்டு மாதமாக வாடகைக்கு ஆளில்லை சுருஙகச்சொன்னால் எனக்கு வருவாய் இல்லை
வீடு வாடகைக்கு என்று போர்ட் மாட்டி இருந்தேன் என்வீடு அமைந்திருப்பது ஒரு மெயின் சாலையில் செண்ட்ரல்லி லொகேட்டட் மெட்ரோ வசதி ஒன்றரை கி மீட்டருக்குள் வீட்டை சுற்றி எல்லாப் பொருளும்கிடைக்கு பொது
வாகவே வாடகைக்கு என்று போர்ட்
மாட்டினால் ஒரு வாரத்துக்குள் குடி
வந்துவிடும் ஆனால் இம்முறை பலரும்வந்தாலும்பெரும்பாலோர்க்கு வீடு பெரிதாய் இருந்தது
வாடகைக்கு கேட்டு வருபவர்களின் எண்ணிக்கைக்கு குறைச்சல் இல்லை ஆனால் குறை இருக்கிறது வாடகைக்கு குடி வைப்பவர்களைப் பற்றி பெரும் பாலும் நமக்கு தெரியாதுஆனால் சில கண்டிஷன்கள் என்மனைவிக்கு உண்டு முஸ்லிம் களுக்கு
வீடு கொடுக்க என் மனைவி விரும்புவதில்லை அது ஏனோ ஒரு வேளை என் மனைவியும் ஹிந்துத்தவா கொள்கைஉடையவரோ ஓரிரு முஸ்லிம் கள் வந்துபோயினர்
ஒரு கிறுத்துவ ஃபாமிலியும் வந்தது அவர்களுக்கும் இல்லை என்று சொல்லி விட்டாள்
என்மனைவி அவர்களையும் என்மனைவி நிராகரித்து விட்டாள் வாரந்தோறும் அவர்கள்குழுவாக கூடி தொழுகை
நடதுவார்களாம்நம்வீட்டில் கூட விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்நடந்ததே என்று சொன்னால் அது எப்போதோ ஒருமுறைதானே என்கிறாள்
பேசிலர்களுக்கு
கட்டயம்வீடு இல்லை அவர்களை
கட்டுப்படுத்துவது சிரமம் சோமபானம்
அருந்தி கலாட்டா செய்தால்………….என்று பல கேள்விகள்
பெண்கள் படிப்பவர்கள்
என்று வந்தால் யோசிக்கலாம் என்றாள் காலேஜ்
போகும்
மூன்றுபெண்கள் வந்து வீடு கேட்டார்கள்
நான் அவர்களை என்பேத்திகள்போல் நினைத்தேன் ஆனால் வாடகைக்கும்
அட்வான்சுக்கும் யார் பொறுப்பேற்பார்கள்,
எப்படி என்று அறியத்தோன்றியது பெரியவர்கள்யாரையாவது கூட்டி வந்தால் பேசலாம்
என்றேன் ஒருபெண்ணின் பெற்றொர்
மைசூரிலிருப்பதாகவும் அவர் வந்து பேசுவார் என்றும் சொல்லஎனக்கு அப்பாடா
என்றிருந்தது ஒரு பெண்ணின் பெற்றொர் வந்தனர் மூன்று பெண்களுக்கும் சேர்ந்து அவர் அட்வான்ஸ் தருவார்
என்றும்ஒரு வழியாகப் பேசி முடிந்தது இதில் ஒருபெண் விடுமுறையில் ஜாம்ஷெட்பூர்
சென்றுள்ளதாகவும் மற்ற இருபெண்களுக்கும் விடு முறை வருமென்றும் இன்னும் ஒருமாதம் கழிந்து வரலாமா என்றும்
கேட்டனர் வீட்டைக் காலியாக
வைக்கமுடியாது என்றும் உடனே வருவதாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் உடன் வந்ததாகவே எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறினேன்அது அவர்களுக்கு உடன்பாடாய் இல்லை ஆக வீடு இன்னும்கொடுக்கப்படாது போயிற்று
ஒரு மாலை வீடுபார்க்க இருவர் வந்தனர் வீடு யாருக்கு என்று கேட்டேன் அவர்களில் ஒருவர் தனக்கு என்றார் வீட்டில் எத்தனை பேரிருப்பார்கள் என்று கேட்டேன் அவர் பெருமிதமாக அவரும் அவரது இரு மனைவிகளும் குழந்தைகளும் மொத்தம் பத்துபேர் என்றார் அத்தனை பேருக்கு வீடு போதாது என்று அனுப்பிவிட்டேன் வடக்கிலிருந்து சிலர் பீஹாரிகள் என்றுகூறிவந்தனர் அவர்கள்வீட்டைச் சுத்தமாக வைக்க மாட்டார்கள் என்று என் மனவி மறுத்து விட்டாள் தரகர் மூலம்வாடகைக்கு விட எனக்கு விருப்பமில்லை மொத்தத்தில்வீட்டுக்கு சரியான பார்ட்டி கிடைப்பதில்
பிரச்சனைகள் இருந்தது சிலர் இரவு எட்டு
மணிக்கு மேல் தொலை பேசியில் அழைத்து கேட்பார்கள் சின்னவீடாக தேடுவதாகக்
கூறுவார்கள் சிலர் பகலில்
வந்துவீடுபார்க்கவேண்டுமென்று கூறி
வீட்டைப்பார்த்து வாடகை அட்வான்ஸ் சொசோன்னதும்பேசாமல் போய்விடுவார்கள்
வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் செய்து பார் என்பதோடு வீட் டை வாடகைக்கு விட்டுப்பார்
என்றும்சொல்லத் தோன்றுகிறது
கடை சியாகஒரு பார்ட்டி எல்லாம் சரியாக
வரும் போல் இருக்கிறது ஆனால் அவர்களிடம்
ஒரு நாய் இருக்கிறதாம் எதையாவதுவிட்டுக்
கொடுத்தால்தான் வீட்டுக்குகுடி வரும்போல்
இருக்கிறது மேலும் நாயால் தொந்தரவு கூடாது
என்றுசொல்லி இருக்கிறேன் அவர்களுக்குஎல்லாம் சரியாக இருக்கிறது கன்னடக் காரர்கள் இதுஆஷாட மாதம் என்றும் அது முடிந்தபின் தான் குடி வருவார்கள் என்றும் சொல்லி ஒரு டோக்கன்
அட்வான்சும் கொடுத்து ரிசர்வ் செய்திருக்கிறார்கள் எனக்குமட்டும் இதெல்லாம் புரிவதில்லை
![]() |
வீட்டின் முகப்பு |
![]() |
மாடி வீட்டுக்குச் செல்லும் வழியும் என்நடைக்களமும் |