Saturday, October 23, 2010

PATHIVARKALUKKU ORU VAENDUKOL.

                    பதிவர்களுக்கு   ஒரு  வேண்டுகோள்
                    ------------------------------------------------------
வலைப்பூக்களில்  எழுதப்படும்  எல்லாப்   பதிவுகளையும்
படிக்க  முடிவதில்லை. சில  தலைப்புகளைப்  பார்த்து  அதனால்
ஈர்க்கப்பட்டு  சில பதிவுகளைப்  படிக்கிறோம் .படிப்பவர்
கவனத்தை  ஈர்க்கும்  தலைப்புகளில்  எழுதப்பட்டிருக்கும்
பதிவுகள்  பதிவர்களின்  எண்ணங்களைப்  பிரதிபலிப்பதாக
கொள்ளலாம். பதிவர்கள்  தங்களுடைய  கருத்துகளுக்கு
எழுத்துருவம்  கொடுக்கும்போது  அவை  மற்றவர்களின்
மீதுள்ள வெறுப்பின்  வெளிப்பாடாகவோ ,மற்றவர்களின் மனதை   காயப்படுத்தும்
விதமாகவோ  இருக்க  வேண்டாமே ..! மாறு பட்ட கருத்துகள்  உலவ வருவது
சகஜமே.  கருத்துகளுடன்  முரண்படலாம்;  நம் கருத்துகளை   ஏற்காதவர்களை
இகழ  வேண்டாமே...! இகழ்ச்சிகளை  வெளிப்படுத்தவே  கருத்துகளைப்  பதிவு
செய்வதையும்   தவிர்க்கலாமே...!

சில  பதிவுகளைப்   படிக்கும்போது எவ்வளவு  குரோத  உணர்ச்சிகள்  எவ்வளவு கசப்பு
எண்ணங்கள் எவ்வளவு விரோத  மனப்பான்மை இருந்தால்  எழுத்துகள் இவ்வளவு  ஆக்ரோஷமாக  வெளிப்படும் என்பதை  நினைத்தால் வருத்தமாகவே  உள்ளது.

யாரும்  இவ்வுலகில்  விருப்பப்பட்டு  விதைக்கப்படவில்லை. பிறப்பொக்கும்  என்பது
சான்றோர்  வாக்கு .சகோதரத்துவமும்  நல்லிணக்கமும்  நடைமுறையில்  கொண்டு
வர எழுதுபவர்கள்   முயற்சிக்க  வேண்டும். நல்லது  எது, அல்லாதது எது, என்று
பகுத்தறியும்  அறிவு  வேண்டும். நல்லவை  அல்லாதவற்றை  முறைப்படுத்த  முயற்சி
செய்ய அறிவும்  சக்தியும்  வேண்டும்; அதுவும்  முடியவில்லை  என்றால்  இருப்பதை
ஏற்று அதற்கேற்ப வாழும்  மனநிலையை  வளர்க்க வேண்டும்.

ஜாதி ,இனம் ,மொழி , போன்றவை  உணர்ச்சிகளைத் தூண்டும்  விஷயங்கள்.. இவற்றைப்  பற்றி  எழுதும்போது  சம நிலையோடு , காய்தல் , உவத்தல்  அகற்றி
ஆய்தல்  செய்ய வேண்டும். காய்தல் மூலம் நல்லவைகள்  அறியப்படாமல்  போகலாம்
உவத்தலினால் மாற்றுக்  கருத்துகள்  வெளிப்படாமல்  போகலாம்

ஜாதியைப்  பற்றி  எழுதும் சில  பதிவுகளில்  பிராமணர்  மற்றும்  பிராமணர் அல்லாதவர்   என்று இரண்டே  ஜாதிகள்  இருப்பதுபோல  ஒரு மாயத்  தோற்றத்தைக்
காண  முடிகிறது. .வர்ணாசிரம  வழக்கப்படியான  பிரிவுகளை  பிறப்பால்  மட்டுமே
அடையாளம்  காட்டி  பேதப்படுத்துவது  இந்தக் காலத்தில்  முடியாத  காரியம்;  கூறப்
போனால் அறியாமையின்  விளைவேயாகும் .

பகுத்தறிவு  என்ற போர்வையில்  பிரித்தறிவதையே  அணுகு  முறையாகக்கொள்ளல்
தவறு.  எழுதுபவர்  எழுதுவதை  எல்லோரும்  ஏற்றுக்கொள்கிறார்களா  என்று ஒரு
கணம்  சிந்திக்கவேண்டும். மாற்றுக் கருத்துகளை  பிறர்  மனம்  புண்படாத  வகையில்
எழுதுவதே  நலம்  பயக்கும். அவரவர்க்கு  அவரவர்  நம்பிக்கை.

எழுதுபவர்களைப்  பற்றியும் அவர்களின்  பதிவுகளைப் பற்றியும் குறிப்பிட்டு  இங்கு
எழுதவில்லை. எழுதுகிறவர்களுக்கும்  படிக்கிறவர்களுக்கும்  புரிந்தால் சரி.
               ------------ --------------------------------------------- --------------------------------------------





  


















               

3 comments:

  1. //! இகழ்ச்சிகளை வெளிப்படுத்தவே கருத்துகளைப் பதிவு
    செய்வதையும் தவிர்க்கலாமே...!//

    nalla sinthanai ... vaalththukkal.

    ReplyDelete
  2. அன்புள்ள GMB அவர்களே,

    உங்கள் ஆதங்கம் புரிகிறது. காலம் பின்னோக்கி போகும் என்று நம்புகிறீர்களா? எனக்கு அந்த நம்பிக்கை இல்லை.

    ReplyDelete
  3. thank you very much for your thoughtful comments

    ReplyDelete