Wednesday, November 23, 2011

கணவன் ..விற்பனைக்கு.

                                           கணவன் விற்பனைக்கு...
                                          ----------------------------------

(எனக்கு ஒரு மின்னஞ்சல்  வந்தது.  யான் பெற்ற பேறு பெருக இவ்வையகம்.
 தமிழ் படுத்தி இருக்கிறேன்.)


நியூ யார்க்கில் புதிதாக ஒரு விற்பனையகம் தொடங்கப் பட்டது
அங்கு கணவர்கள் விற்பனைக்கு என்று அறிவிக்கப்பட்ட பலகை
யில் கணவரைத் தேர்ந்தெடுக்க சில விவரங்கள் இருந்தது.

நீங்கள் ஒரு முறைதான் கடைக்கு வருகை தரலாம். 


ஆறு மாடிகள் உள்ள இக்கட்டிடத்தில் கணவர்களின் தகுதிகள்
ஒவ்வொரு மாடியின் நுழைவாயிலில் எழுதப்பட்டு இருக்கும். 
அங்கிருந்து ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.அல்லது
அடுத்த மாடிக்குச் சென்று அங்கிருந்து தேர்ந்தெடுக்கலாம். ஒரு 
மாடியிலோ அல்லது அடுத்த மாடியிலோ கணவரை வாங்கலாம்.
ஆனால் ஒரு விதி.! ஒரு தளத்தை விட்டு வெளியே வந்தால் 
மீண்டும் அத்தளத்துக்கு வர அனுமதி கிடையாது 


ஒரு பெண் கணவனை வாங்க அக்கடைக்குச் சென்றார். முதல் 
தளத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது


தளம்..1.:-இதிலுள்ள ஆண்கள் பணியிலிருப்பவர்கள். கடவுளை 
                   நேசிப்பவர்கள். (இதை விட்டு அடுத்த தளம் சென்றாள்)

தளம் 2:- இதிலுள்ள ஆண்கள் பணியிலிருப்பவர்கள் கடவுளை 
                  நேசிப்பவர்கள். குழந்தைகளிடம் அன்பாயிருப்பார்கள் 
                  (இதையும் விட்டு அடுத்த மாடிக்குச் சென்றாள். )


தளம் 3:-இதிலிருக்கும் ஆண்கள் பணியிலிருப்பவர்கள்.கடவுளை 
                 நேசிப்பவர்கள் குழந்தைகளிடம் அன்பாயிருப்பார்கள்.
                 அழகாயிருப்பார்கள். 


”வாவ்.  மேலே பார்க்கலாம் . எப்படி என்று “ என நினைத்துக்
கொண்டே நான்காவது மாடிக்கு வருகிறாள்.

தளம் 4:-இதிலுள்ள ஆண்கள் பணியிலிருப்பவர்கள்.கடவுளை 
                நேசிப்பவர்கள்.குழந்தைகளிடம் அன்புள்ளவர்கள்.
                வசீகரிக்கும் ஆணழகர்கள். வீட்டுப் பணிகளில் உதவி
                செய்வார்கள்.


ஆர்வம் மேலிட அடுத்த தளத்தில் என்ன சிறப்பு என்றறிய
ஐந்தாவது மாடிக்கு வருகிறாள். விழிகள் விரியப் படிக்கிறாள்.


தளம் 5:-இதிலுள்ள ஆண்கள் பணியில் இருப்பவர்கள். கடவுள் 
                 பக்தி உள்ளவர்கள். குழந்தைகளிடம் பிரியமாய் இருப்
                 பவர்கள். வசீகரிக்கும் ஆணழகர்கள் விட்டு வேலை
                 களில் ஒத்தாசை செய்பவர்கள். சிறந்த காதலர்களாக
                 இருக்கும் தகுதி பெற்றவர்கள். 


அடுத்த மாடியில் இன்னும் சிறந்த கணவன் கிடைக்கலாம் ,
என்னும் எதிர்பார்ப்புடன் ஆறாவது தளத்துக்குச் செல்கிறாள்.
அங்கே....


தளம் 6:-நீங்கள் இத்தளத்துக்கு வரும் 4,363,012-ஆவது நபர். 
                இந்தத் தளத்தில் கணவர்கள் விற்பனைக்கு இல்லை
                பெண்களை திருப்தி செய்ய முடியாது என்று நிரூபிக்
                கவே இந்த மாடி.


                கணவர்களை விற்பனை செய்யும் கடைக்கு நீங்கள் 
                வருகை புரிந்ததற்கு நன்றி. படிகளில் இறங்கும் போது
                கவனமாயிருங்கள். இது நல்ல நாளாயிருக்கட்டும்.
                 ------------------------------------------------------------------------------- 


  
                   

11 comments:

  1. ஆஹா நல்ல காமெடிதான் திருப்தி இல்லாத மனதுதான் எதையுமே தேர்வு செய்யமுடியாமல் போகுதோ.

    ReplyDelete
  2. ஆஹா.பேராசை பெரும் நஷ்டமாகிப் போச்சே
    இர்ண்டாவது மூன்றாவது மாடியோடு
    நின்று இருக்கலாம்தான்
    ஆனால் ஒவ்வொரு மாடியிலும் ஒவ்வொரு
    பிள்ஸ் பாய்ண்டாக கூடிகொண்டு போகும்போது
    யாருக்குத்தான் மனசு கேட்கும்
    மனம் கவர்ந்த அருமையான் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இதைப்படித்து முடித்ததும் நானும் அவளுடன் ஆறு மாடிக்கு ஏறி இறங்கிய களைப்பு ஏற்பட்டது.

    ஆறாவது மாடியில் இன்னும் என்ன பெட்டராக இருக்கக்கூடும் என்ற ஆவல் தான் காரணம்.

    நல்ல நகைச்சுவையான, அதே சமயம் சிலரின் திருப்தியற்ற போக்கைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த பதிவு. பகிர்வுக்கு நன்றி, சார்.

    vgk

    ReplyDelete
  4. பெண்களை திருப்தி செய்ய முடியாது என்று நிரூபிக்கவே இந்த மாடி.

    இது நல்ல நாளாயிருக்கட்டும்./

    மிகுந்த அனுபவசாலிபோல இருக்கிறது..
    உய்த்துணர்ந்து மொழிந்துள்ளாரே!

    அருமையாய் அனுபவப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  5. ஆகா வடை போச்சே -- கதை தான்.
    பேராசை பெரு நஷ்டம்.

    ReplyDelete
  6. இந்த கதையா ஏற்கனவே படித்தது போலவே இருக்கிறது.. பிரம்மையோ ??

    ReplyDelete
  7. எதிலும் திருப்தி பெறாதவர் இப்படித்தான் இறுதியில் ரிசல்ட்டை சந்திப்பார்களோ..

    ReplyDelete
  8. பெண்களை ஒரு போதும் திருப்திப்படுத்த முடியாது....ஒரு வாசகமானாலும் திருவாசகம் ஐயா. தொடரட்டும் உங்கள் சீரிய பணி.

    ReplyDelete
  9. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். "கணவன் ..விற்பனைக்கு."- நன்றாக இருந்தது. தங்களின் பல பதிவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி அய்யா...நம்ம தளத்தில்:
    "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

    ReplyDelete