Saturday, January 14, 2012

தையலே.. தைப் பெண்ணே...


               பொங்கல் வாழ்த்துக்கள்.
               ----------------------------------

          மார்கழிப் பனி விலக
          பாவையர் நோன்பு முற்ற,
          தையலே தைப் பெண்ணே
          உன் வரவால் வழி பிறக்க

          முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
          கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
          புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
          பொங்கலாக்கிப் படைத்திடவே

          பகலவனும் பாதை மாறிப்
          பயணம் செய்யத் துவங்கும்
          இந்நாளில் பொங்கும் மங்களம்
          எங்கும் தங்க வணங்குகிறோம்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
----------------------------------------------------------.
                             

8 comments:

  1. அழகான வார்த்தைகளில்
    அருமையான
    கவிப் பா.......... வாழ்த்து

    ReplyDelete
  2. நல்லதொரு கவிதைக்கு எனது அன்பான வாழ்த்துகள்.

    இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. செட்டான, சிக்கனமான, அழகான கவிதைங்க..

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

    பொங்கும் மங்களம்
    எங்கும் தங்கட்டும்!

    ReplyDelete
  4. பகலவனும் பாதை மாறிப்
    பயணம் செய்யத் துவங்கும்
    இந்நாளில் பொங்கும் மங்களம்
    எங்கும் தங்க வணங்குகிறோம்


    தங்களுக்கும்
    இனிய இல்லத்தாருக்கும்
    இனிய பொங்கல் வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. பொங்கலை அழகான கவிதை மூலமா சொல்லி இருக்கீங்க. நல்லா இருக்கு பொங்கல் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. தனித்தனியே பொங்கல் வாழ்த்துக்கள் பறிமாறிக்கும்பொது சிலர் விட்டுப் போகலாம். அதுதான் பதிவில அனைவருக்கும் வாழ்த்து எழுதினேன். வருகை தந்தவருக்கும் இதைப் படித்தவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete