Sunday, November 17, 2019

பல்லுடைக்க ஒரு பாடல்



                                               பல்லுடைக்க  ஒரு பாடல்
                                             ========================


பல்லுடைக்கும்  பாடல்கள்
---------------------------------------------
திதத் தத்தத் தித்தததிதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!
( நன்றி:- விக்கிப் பீடியா. )
தென்னாற்காடு மாவட்டத்தில் சனியூர் என்ற இடத்தில் பிறந்த வில்லிபுத்தூரார் தமிழில் மகா பாரதம் இயற்றினார். வைணவ குலத்தவரான இவரை வக்க பாகை எனும் இடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் ஆதரித்து வந்தான். வில்லிபுத்தூரார் புலவர்களிடையே போட்டி வைத்து வென்றவர் தோற்றவர் காதை அறுக்க வேண்டும் என்ற முடிவுக்கு உட்படுத்தப் பட்டு பலருடைய காதுகளை அறுத்து பிரசித்தி பெற்றிருந்தார்.
இதனைக் கேள்விப்பட்ட அருணகிரிநாதர் இதற்கு முடிவு கட்ட வில்லிபுத்தூராருடன் போட்டியில் கலந்து கொண்டார்.

திதத்த ததித்த: திதத்த ததித்த என்னும் தாள வாக்கியங்களை,
திதி: தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,
தாதை: உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,
தாத: மறை கிழவோனாகிய பிரம்மனும்,
துத்தி: புள்ளிகள் உடைய படம் விளங்கும்,
தத்தி: பாம்பாகிய ஆதிசேசனின்,
தா: முதுகாகிய இடத்தையும்,
தித: இருந்த இடத்திலேயே நிலைபெற்று,
தத்து: அலை வீசுகின்ற,
அத்தி: சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசற்தலமாகக் கொண்டு),
ததி: ஆயர்பாடியில் தயிர்,
தித்தித்ததே: மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு,
து: அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்),
துதித்து: போற்றி வணங்குகின்ற,
இதத்து: போரின்ப சொரூபியாகிய,
ஆதி: மூலப்பொருளே,
தத்தத்து: தந்தங்களை உடைய,
அத்தி: யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,
தத்தை: கிளி போன்ற தேவயானையின்,
தாத: தாசனே,
திதே துதை: பல தீமைகள் நிறைந்ததும்,
தாது: ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,
அதத்து உதி: மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,
தத்து அத்து: பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)
அத்தி தித்தி: எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு),
தீ: அக்னியினால்,
தீ: தகிக்கப்படும்,
திதி: அந்த அந்திம நாளில்,
துதி தீ: உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,
தொத்ததே: உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.


சுருக்கமாக “ நடராஜமூர்த்தியாகிய சிவ பெருமானும், பிரம்மனும், இடைச் சோலையில் தயிர் உண்டு, பாற்கடலையும் ஆதிகேசனையும் பாயலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆநந்த மூலப் பொருளே,தேவயானையின் தாசனே,ஜனன மரணத்துக்கு இடமாய்,சப்த தாதுக்கள் நிறைந்த இந்த பொல்லாத உடம்பை தீயினால் தகிக்கப் படும்போது உன்னை துதித்துவந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும் “ என்பதே ஆகும்.
முத்தை திரு பத்தித் திருநகைஎன்ற பல்லுடைக்கும் பாடலை முருகன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடியவரிடம்  வில்லிப் புத்தூரார் தோல்வியடைந்தார். அருணகிரிநாதர் வில்லிப் புத்தூராரை மன்னித்து காதறு படலத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
அருணகிரிநாதர் வாதில் வென்ற பாடலும் பொருளும் பதவுரையும் தான் இப்பதிவின் முதலில் கண்டது.


இப்போதைய பாடல் ரசிக்கலாம் 









18 comments:

  1. தெரிந்த விஷயம், உங்கள் நடையில். இப்போதைய பாடலைப் பின்னர் கேட்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குத் தெரியட விஷயமே இல்லையோ என்று ஆச்சரியப்படுவது உண்டு பதிவில் ரசிக்க கூடியதே கணொளிதான்

      Delete
    2. வில்லிபுத்தூராரையும் அருணகிரியையும் பற்றிப் படித்தவர்களுக்குத் தெரியாமல் போகாது ஐயா! பலருக்கும் தெரிந்திருக்கும். யாரும் சொல்லவில்லை. நான் சொல்லிவிட்டேன். மற்றபடி காணொளியை இப்போது தான் பார்க்க முடிந்தது. நல்ல திறமையான இளைஞன். எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகள்.

      Delete
    3. மறுமுறை வந்து கணொளியை ரசித்ததற்கு நன்றி மேம்

      Delete
  2. போட்டியைப்பற்றி மட்டும் சொல்லி விட்டு முடிவை விட்டு விட்டீர்களே!

    எனக்கு 'ஆண் கவியை வெல்லவந்த பெண்கவியே வருக' பாடலும் நினைவுக்கு வருகிறது!

    காணொளி சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. போட்டியின் முடிவில் அருணகிரியார் வென்றார் அதோடு விலிப்புத்தூராரின் காதறு படலத்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது

      Delete
    2. //அருணகிரிநாதர் வில்லிப் புத்தூராரை மன்னித்து காதறு படலத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.//ஸ்ரீராம் கவனிக்கவில்லை போல! :))))

      Delete
    3. சில நேரங்களில் அவ்வாறு நிகழலாம்

      Delete
  3. அற்புதமான திறமைசாலியை காணொளியில் காண வைத்தமைக்கு நன்றி ஐயா.

    எழுத்து நாக்கை சுழுக்கெடுத்து விட்டது.

    ReplyDelete
  4. அதை சரி செய்யத்தானே காணொளி

    ReplyDelete
  5. பதிவின் கொசுறு அது

    ReplyDelete
  6. அருமையான காணொலி... நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. பழந்தமிழை விட இன்றைய காமெடி தான் ரசிக்கப்படுகிறது

      Delete
  7. காணொளி பற்றிய கருத்துமட்டும்தானா சார்

    ReplyDelete
  8. மெய்யாகவே பல்லுடைக்கும் பாடல்தான் .

    ReplyDelete
  9. எனக்கு தமிழ் தெரியாது என்னும் எண்ணம் வலுவடைகிறது வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete