இறுதிப் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இறுதிப் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 பிப்ரவரி, 2016

தொடர் பயணம் நாகர் கோவில் -2


                               தொடர் பயணம் நாகர் கோவில் -2
                                --------------------------------------------------
சுற்றுலாவின் கடைசி நாள் நாகர் கோவிலிலிருந்து திருச்செந்தூர் செல்லத் திட்டம். காலையில் எழுந்ததும் ஒரு புறம் மகிழ்ச்சி, ஒரு புறம் இன்றுடன் சுற்றுலா முடியப் போவது எண்ணி சற்றே வருத்தம் காலையில் காஃபி குடித்து பின் திருச் செந்தூர் நோக்கிப் புறப்பட்டோம் சற்றே நீண்ட பயணம் முதலில் செந்தூர் சென்றதும் காலை உணவு உண்டு பின் சுவாமி தரிசனம்செய்யக் குறை ஏதும் இல்லை. ஆங்காங்குதான் அதற்கான ஆட்கள் இருக்கிறார்களே சிறப்பு தரிசனம் என்று ஆளுக்கு ரூபாய் நூறு என்றும் அழைத்துச் செல்ல அவருக்கு ரூபாய் நானூறு என்று மொத்தமாக ரூபாய் 1500-/ கை மாறியது அதிக சிரமம் இல்லாமல் முருகனை அருகில் இருந்து கண்டோம்  அங்கிருந்து பஞ்ச லிங்க தரிசனம்  நான் சில முறை செந்தூர் சென்றிருந்தாலும் இந்த பஞ்ச லிங்க தரிசனம் இதுவே முதல் தடவை  குனிந்து பணிவாகச் செல்ல என்றே இருந்த வழி.  அங்கே ஒருவர் தெய்வத்தின் முன்னால்  நின்று கொண்டு கதறி அழுது கொண்டிருந்தார்  அவருக்கு என்ன குறையோ  மனம் விட்டுக் குறைகளைக் கூறி மனப் பாரத்தைக் குறைத்துக் கொண்டிருந்தார் அதில் ஒரு மன சமாதானம் பாரம் குறைக்க இதுவும் வழிதான்  சக மனிதனிடம் சொல்லிக் குறை பட்டுக் கொண்டால்  நிம்மதி கிடைப்பதில்லைஅவனும் காது கொடுத்துக் கேட்பது சந்தேகம்  கடவுளிடம்  கொட்டித் தீர்த்தால் ஒரு நிம்மதி.
திருச்செந்தூர் கோவில் முகப்பு 
தரிசனம் முடிந்து வெளியே வரும்போது முருகனின் படம் தருகிறார்கள் ஆனால் அதுவும் ரூபாய் பத்து கொடுப்பவருக்கு மட்டுமே  என் மனைவிக்குக் கிடைத்தது எனக்கில்லை வெளியே பிரசாதமாகப் பஞ்சாமிர்தம் வாங்கிக் கொள்கிறார்கள்   நாங்கள் முன்பு சென்றிருந்த போது கோவிலின் பின்புறம் வள்ளிக்குகை பார்த்திருக்கிறோம்  அது பற்றி நான் சொன்னபோது சுற்றிப் போய்ப் பார்க்க யாரும்  ஆவல் காட்ட வில்லை.  செந்தூர்க் கடலோரத்தில் சிறிது நேரம் செலவழித்தோம் கடல் அலைகள் வந்து போகுமிடம் சிலர் கரையோரத்தில் பள்ளம் பறிக்கிறார்கள் அந்தப் பள்ளத்தில் சிப்பிகள் வந்து விழ வாய்ப்புண்டாம்
கடலில் குளித்தபின் நல்ல நீரில் நீராட என்றே அங்கே  நாழிக் கிணறு என்று இருக்கிறது அதற்கும் ஏகப்பட்ட கூட்டம் எங்களில் யாரும் கடலில் குளிக்க வில்லையாதலால்  நாழிக்கிணறை  நாட வேண்டிய அவசியமிருக்கவில்லை. அங்கே என்ன எதிர்பார்க்கலாம் என்று கூறியதே அனைவருக்கும் போதுமானதாக இருந்தது. 


நாழிக் கிணறு காண ஆவலில்லாமல் ( போகும் வழியில் )


செந்தூர்க் கோவில் முன் 
       
  
சுற்றுலா இனிதே முடிந்த மகிழ்ச்சியா
   
                                            செந்தூர்க் கடலோரம்  ஒரு காணொளி


                                            திருச்செந்தூர் கடல் ஒரு காட்சி


மேய்ப்பனுக்கு நன்றி  காணொளி

/உஷ் …! அப்பாடா …! ஒருவழியாய் தொடர் பயணமும் சுற்றுலாவும் முடிவுக்கு வருகிறது.  26-ம் தேதி காலை கன்னியாகுமரி பெங்களூரு எக்ஸ்பிரெசில் ஊர் திரும்புவோம்  25-ம் தேதி இரவு உணவு முடிந்தபின் குழுவில் இருந்தவர்களுக்கு  எப்படியாவது என் மச்சினன் மேய்ப்பனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்னும் எண்ணம் எழுந்தது.  ஒவ்வொருவரிடமும் பயணம் பற்றிய அவர்களது கருத்தை ஒரு சிறிய தாளில் எழுதக் கேட்டார்கள்  அவற்றைச் சுருட்டி ஒரு மாலைபோல் செய்தார்கள் பெண்கள் எல்லோரும் சுடிதார் உடையில் ஒரு அறையில்அனைவரையும் வரச் சொன்னார்கள்பிறகு மச்சினனுக்கு அந்த மாலையை இட்டு அதில் எழுதி இருந்த வாசகங்களைப் படித்துக் காட்ட அவன் மகிழ்ச்சியில் திண்டாடிப்போனான் எனக்கும் என்னாலும் ஒரு நெடிய பயணத்தை மேற்கொண்டு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது ஊக்கமளித்தது
 மறுநாள் காலை பத்து மணி அளவில் ரயில் ஏறி மறுநாள் 27-ம் தேதி ஊர்வந்து சேர்ந்தோம்  இப்பதிவுகளின் மூலம் மீண்டுமொருமுறை பயணப்பட்ட உணர்வுடன்முடிக்கிறேன்
சுடிதார் உடையில் பெண்கள்
உடுப்பி கிருஷ்ணா ஹோட்டலில் ஒரு படம் நூறு யானைகளுக்கும் மேல் அணிவகுப்பு 
ஒரு அலங்கார மீன்தொட்டி

                                   ( முற்றும் )