நோலன்ச் இஸ் ஃப்ரீ
--------------------------------
அண்மையில் எழுதுவதற்குமனம் ஒன்றுவதில்லை ஏன் என்று ஆராயும் போது பல காரணங்கள் தெரிய வருகிறது
நான்பெரும்பாலும் எழுதுவது என் எண்ணங்களைத்தான் அவை வெகுஜன எண்ணங்களோடு ஒத்துப் போவதில்லை நான் எழுதுவது பிறரைக் கவர அல்ல இருந்தாலும்
அவை எவ்வாறு வரவேற்கப் படுகின்றன என்பதைஅறியும்
ஆவலும் உண்டு ஆனால் துரதிர்ஷ்டவசமாக வலைத்தளங்களில் எழுதுபவற்றை வாசிப்பவர்கள்நரிவலம் போனால் என்ன இடம்போனாலென்ன என்றே இருக்கின்றனர் வித்தியாசமான முயற்சிகள் கண்டு கொள்ளப்படுவதில்லை
இதைப்
போக்கும் முயற்சியாகவே சில பதிவுகளை மீள்பதிவாக்கி அதன் முக்கியசேதிகளையும்சொல்லி[ப்பார்த்தேன்இருந்தும்
நான் நினைத்த படி ஏதும்நடக்கவில்லை அப்போதுதான்
தெரிந்தது வாசகர்கள் எழுதவும் கருத்து பதிக்கவும் சில இன்சென்டிவ்ஸ்இருக்க வேண்டும்
ஒரு தீர்க்க தரிசியும் நினைவுக்கு வந்தார்
பதிவுகளை ஊன்றிப்படிக்கவும் கருத்துகளை அலசல்
முறையில் வெளியிடவும் அவர் செய்த உத்தி இப்போதுநினைத்தால்
வியப்பாய் இருக்கிறது நோ லன்ச் இஸ் ஃப்ரீ என்னும் சொல்லுக்கு அர்த்தம்புரிந்தது ஒரு
கதையை யோ கட்டுரையையோ மீள் பதிவாக்கும் போதே தெரியும் சிலர் அவற்றைப்படித்திருக்கலாம் ஆனால் பின்னூட்டக்கருத்தாக அதுவே வெளிவரும்போது
நான் நினைத்தது நடக்க வில்லை என்றுநன்கு தெரிகிறது என் ஏமாற்றங்களை நான்மறைத்துக் கொண்டு மறு மொழி இடுகிறேன்
என்னை நான் அடையாளப் படுத்திக் கொள்வதே என் கருத்துகளாலும் எழுத்துகளாலும் தான் ஆனால் நான் பதிவில் சொல்லும் சில விஷயங்களை வைத்துக் கொண்டு சிலர் எனக்கு முத்திரை
பதிப்பிக்கிறார்கள் நான் எதற்கும் எதிரி அல்ல ஆனால் எதையும்
அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப் பாவம்
கொண்டவனும் அல்ல இத்தனையு ம் நான் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை இதற்குத்தான் நான் பதிவர்களைசந்திப்பதில் ஆர்வம் காட்டுவதன் காரணம்
தெரியும் முகம்
தெரியா விட்டால் ஏற்படும் சங்கடங்கள் தவறகப்புரிவதாலும் இருக்கும் இவற்றை நான் எழுதுவதாலாவது சிலர் சிந்திக்கலாம் என்பதையே காட்டும்