ஒரு சிறு கதை
----------------------
பல
genre களில் சிறுகதை எழுதி இருக்கிறேன் படித்து
ரசிக்கலாம் கீதா மதிவாணனின் மொழி பெயர்ப்பிலும் இம்மாதிரி ஒரு கதை இருந்தது.
ஆனால் இச்சிறுகதைஅதற்கு முன்பே பதிவானது
இங்கு ஒரு நிகழ்வே கதையாய்
அவர் அலுவலகப் பணி நிமித்தமாக வந்திருந்தார்.விருந்தினர் விடுதி என்று ஏதும் தனியாக இல்லாததால் ஆபீசில் ஒரு அறையையே விருந்தினர் விடுதியாகப் பயன்படுத்த்னர் பணி நடக்கும் இடத்துக்குப்போக வரவும் போக்குவரவு வசதிக்கும் அந்த இடமே சரியாக இருக்கும் என்பதாலவரைஅங்கே தங்க வைத்தனர்
வந்தவர் வேலை எல்லாம் முடித்து வந்து மாலையில் ஒரு திரைப்படமும் பார்த்துஇரவு பதினோரு மணி யளவில் அறை வந்தவர் சற்று நேரத்தில் உறங்கி விட்டார் அவருக்கு திடீரென ஜல் ஜலங் என்று சப்தம் கேட்டு கண்முழிப்பு வந்தது உடல் எல்லாம் வியர்க்க ஆரம்பித்தது நாக்கு வரண்டு விட்டதுஎழுந்து சென்று தண்ணீர் எடுத்துக் குடிக்கவும் முடியாமல் பயத்தால் போய் விட்டது
சிறிதுநேரத்தில்
எல்லாம் பிரமையாய் இருக்கும் என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு உறங்க எத்தனித்தார் சற்று நேரத்தில் மறு படியும் ஜல் ஜலங்
என்ற சப்தம் கேட்டது. அவருக்கு பயத்தில் நெஞ்சே வாய்க்குள் வந்துவிட்டதுபோல் இருந்ததுஇருட்டில்பயம்
அதிகரிக்கவே கஷ்டப்பட்டு எழுந்து விளக்கைப்
போட்டார் ஃபானின் வேகத்தைக் கூட்டினார் மனம்
ஒருநிலைப்பட மறுத்தது என்ன என்னவோஎண்ணங்கள் கந்தர் சஷ்டி கவசம்சப்தமாகச் சொல்லப் பார்த்தார் வாயசைந்ததே தவிர வார்த்தைகள்வெளி வர வில்லை
ஒர் பேயோ பிசாசோ வாழும் இடத்தில் தங்க வைத்து விட்டார்களே என்று அந்த நிர்வாகிகள் மீது கோபம்கோபமாய் வந்தது
ஆஃபீசுக்கு ஒரு வாட்ச்மேன் கூட கிடையாது இந்தநேரத்தில் யாரிடம் போவதுஎங்கே செல்வது
என்றெல்லாம் எண்ணிக்கொண்டு எல்லோரையும் ஒரு
வழியாய்த் திட்டித் தீர்த்தார் காலையில் வெளிச்சம் படர ஆரம்பித்தது முதலில் இந்த இடத்தைவிட்டு எங்காவது செல்ல வேண்டும் என்று தன்னுடைய பெட்டியைத்
தன் உடைமைகளால்நிரப்பி வெளியே கிளம்பினார்
வெளியே வந்தவர் எதிரில் ஒரு லம்பாடிப்பெண் மாடிக்குப் போகும் படிக்கட்டுகள் கீழே இருக்கும் இடத்தில் இருந்து எழுந்து வந்தாள் அவள் நடக்கும் போது அவள் கை அசைவிலும் கால் அசைவிலும் ஜல் ஜலங் என்று சப்தம் கேட்டது
-------------------------------------------------------------------------