வாழ்க்கையைப்
புரிய வைத்த நிகழ்வுகள் (800)
என்னை
நானே ஒரு ஆணாக வாலிபனாக உணர வைக்க சில
சம்பவங்கள் துணை நின்றன ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒரு அறிவைக் கொடுக்கிறது அவற்றில் ஒரு சில சம்பவங்களைப் பகிர்கிறேன்
பள்ளி
இறுதி முடிக்கும்போது நான் பதினாறு வயது
கூடத் தாண்டவில்லை. என்னுள் நான் ஏதோ சாதிக்கப் பிறந்தவன் என்ற எண்ணம் இருந்தது
ஆனால் என் உருவமோ ஒரு பாலகனுடையதாய் இருந்தது
என் தந்தையார் மிகுந்த சிரமங்களுடன்
குடும்பப் பொறுப்பைத் தாங்கிக் கொண்டிருந்தார் எனக்கு அவருக்கு உதவவும்
அவரது பாரத்தைத் தாங்குவதில் உதவவும்
எண்ணம் வலுத்தது அவரை நச்சரித்து எனக்கு ஏதாவது வேலை வாங்கித் தர
வற்புறுத்திக் கொண்டிருந்தேன் கோவையில்
அவரது நண்பர் ஒருவரிடம் எஸ் எஸ் எல் சி படித்தமகன் இருக்கிறான் அவனுக்கு அவர் நடத்திக்
கொண்டிருந்த ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலை தர முடியுமா என்று கேட்க
அவரும் என்னை அனுப்பச் சொன்னார் வெல்லிங்டனிலிருந்து கோவை போனேன் அவரது அலுவலகம்சென்று அவரைப் பார்த்து என்னை
அறிமுகப்படுத்திக் கொண்டேன் அவர் என்னை ஏற
இறங்க ஒரு பார்வை பார்த்து மகாதேவன்
தனக்கு ஒரு மகன் இருக்கிறான் வேலை ஏதாவது போட்டுத் தரும்படி கேட்டபோது ஒரு
வளர்ந்த மகனை எதிர்பார்த்தேன் நீ ஒரு
குழந்தை உனக்கு இங்கு எந்த வேலையும் தரும்படியாய் இல்லை என்றார் எனக்கு அழுகை
அழுகையாய் வந்தது என்னைப் போய் ஒரு குழந்தை என்கிறாரே என்னும் நினைப்பே வருத்தியது என்னை அவர்
ஊருக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்
அதன் பின் பெங்களூருக்கு என் மாமா வீட்டுக்கு
வந்தேன் என் அக்காவின் மாமனார் என்னை ஒரு
வேலையில் அமர்த்துவதாகக் கூறினார் அந்த
அனுபவம் பற்றி “பூர்வ ஜென்ம கடன்“ என்னும்
பதிவில் எழுதி இருக்கிறேன் பார்க்க
அந்த
அனுபவத்துக்குப் பின் மீண்டும் வெல்லிங்டன்
வந்தேன் மீண்டும் அப்பாவை நச்சரிக்க அவர்
என்னை கூனூரில் இருந்த மைசூர் லாட்ஜ்
முதலாளி அவருக்கு அவர் ஹோட்டலைப் பார்த்துக் கொள்ள ஆங்கிலம்பேசும் ஒருவர்
வேண்டும் என்று சொல்லி இருந்தாராம் அவரைப் பார்க்கச் சொன்னார் அந்த ஹோட்டல்
கூனூர் ரயில்வே நிலையத்துக்கு நேர் மேலே இருந்ததுகிருஷ்ண போத்தி என்பது முதலாளி
பெயர் என்னை வேலையில் சேர்த்துக் கொண்டார் காலை ஆறு மணி முதல் இரவு பத்துமணிவரை
வேலை கல்லா பார்த்துக் கொள்ள வேண்டும் தங்கும் அறைகளில் இருப்பவர் சௌகரியங்களைக்
கவனித்துக் கொள்ள வேண்டும் அன்றாட வரவுகளை
இரண்டு வித லெட்ஜர்களில் மெயின்டெயின் செய்ய வேண்டும் ஒன்று சரியான கணக்கு மற்றது இன்கம் டாக்ஸ்
காரர்களுக்கானது சுமார் 20%வரவே அதில் காட்டப்பட வேண்டும் அந்த ஹோட்டலில்
மாதாந்திரமாகத் தங்குபவரும் உண்டு தினம் வருவோரின் பெட் ஷீட்டுகளை மாற்றி சலவை
செய்ததை இடவேண்டும் ரூமுக்கு வரும் பெரிய மனிதர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்அப்போது
மது விலக்கு அமலில் இருந்தது அறையில் யாரும் குடிக்கக் கூடாது என்பது ரூல் ஆனால் வரும் பெரியமனிதர்கள் யாரும்
மதிக்காத ரூல் இது பற்றி நான்
முதலாளியிடம் சொன்னபோது கண்டும் காணாமல் இருக்க புத்திமதி கூறினார் அதே மாதிரி இந்த
இரட்டைக் கணக்கையும் கண்டுகொள்ளாமல்
இருக்கச் சொன்னார் கோவை போன்ற பெரிய ஊர்களில் இருந்து சிலர் வருவார்கள் உடன் வருவது யாரோ பெண்மணியாக இருக்கும் நான் அவர்கள்
மனைவி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்
மாதாந்திர
வாடகையில் தங்குபவர்கள் என்னோடு அன்போடு பழகினார்கள் மேனேஜர் என்று மதிப்புடன்
விளிப்பார்கள் ஒரிரு நாள் தங்க வந்திருந்தவர்களின் மனைவிகளை மாதாந்திர வாடகையில் தங்குபவர் சில நேரங்களில்
சீண்டுவார்கள் போல் இருந்தது அந்தப் பெண்மணி ஒருத்தி என்னிடம் புகார் கொடுத்தாள்
நான் ரெகுலராக இருப்பவர்களிடன்
விசாரித்தேன் அதற்கு அவர்கள்
வந்திருந்தோர் கணவன் மனைவி அல்ல விலைமாதர்கள் என்றனர் நான்
எப்படி இருந்தாலும் அவர்கள்
சீண்டுவது தவறு என்று கூறினேன் அவர்கள் எனக்குச் சில பாடங்கள் எடுத்தனர் அறையில்
இருக்கும் பெட்ஷீட்களை மாற்றும்போதுஅவற்றில் கறைகள் இருக்கும் அது பற்றியும் என் நண்பர்களால் விளக்கப்பட்டேன் எனக்கு என்னவோ
சட்ட விரோதமாய் ரூம் போடுவதும் அங்கு குடிப்பதும்
இரட்டை வரவேடுகள் வைத்திப்பதும் உறுத்திக் கொண்டே இருந்தது முதலாளியிடம் எனக்கு அது சரியாகத் தோன்றவில்லை
என்றேன்
அது அப்படித்தான் இருக்கும் என்றும் நான் கண்டுகொள்ளக் கூடாது
என்றும் கூறினார் அதன் பின் ஒரு நாள் நான் வேலையை விடப் போகிறேன்
என்றேன் அதற்கு அவர் என் தந்தையிடம் சொல்வேன்
என்று மிரட்டினார் நான் எந்த
முன் அறிவிப்பும் கொடுக்காமல்
வேலையை விட்டேன் அது
பற்றியும் விலாவாரியாக வேலை
தேடுபடலமென்னும் பதிவு எழுதி இருக்கிறேன் விவரம் வேண்டுபவர்கள் இங்கே பார்க்கவும்
சில நாட்களில் எனக்கு எச் ஏ எல் நிறுவனத்தில் பயிற்சிப்
பணியாளனாக வேலை கிடைத்தது பிறகு என்னை அம்பர்நாத் பயிற்சிப்பள்ளிக்கு அனுப்பினார்கள். ஓராண்டுகாலத்துக்குப் பின்
என் தம்பிகளையும் தாயாரையும் பார்க்க பாலக்காடு வந்தேன் அங்கும் சில மறக்க முடியாத அனுபவங்கள் இருந்தன.
என் தம்பி ஒருவன்
முதுகில் பெரிய கட்டிகள் வந்திருந்தது
அதற்கு மருந்தாக ஒரு எண்ணை ஒலவக்கோட் ஜங்ஷன் அருகே கிடைப்பதாய்க் கூறக்கேட்டு ஒரு வாடகை
சைக்கிளில் அந்த இடம் தேடிச் சென்றேன் ஏதோ
வயல் வரப்புகள் தாண்டி அந்த இடம் இருப்பதாய் அறிந்தேன் அப்போது ஒருவர் எனக்கு வழிகாட்டுவதாகக் கூறி
என்னை அழைத்துச் சென்றார் நான் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு அவருடன் சென்றேன்
ஓரிடத்தில் என்னை ஒரு வீட்டின் முன்
நிறுத்தி நான் என்ன
எதிர்பார்க்கிறேனோ அதுபோல் சரக்குகள் (பெண்கள்) இருப்பார்களென்று கூறினார் அப்போதே
ஏதோ விபரீதம் என்று என் உள்மனசு சொல்லியது நான்
அவ்விடம் விட்டு அகல முயன்றபோது
அவன் என் சைக்கிளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு என்னை அங்கு கூட்டி வந்ததற்கு
பணம் கேட்டான் நான் ஏன் எதற்கு என்று
கேட்டதும் அவன் உனக்கு …………….இல்லையா என்று கேட்டான் எனக்கு அப்போதுதான் கொஞ்சம் விளங்கிற்று அவன் பிடியிலிருந்து மீண்டு சைக்கிள் ஏறி வந்து
விட்டேன் நான் அப்போது வளர்ந்து வருவதைத் தெரிந்து கொண்டேன்
மைசூர் லாட்ஜில் நான் பணியில் இருந்தபோது எடுத்தபடம் Add caption |
![]() |
அன்றைய மைசூர் லாட்ஜ் இப்போது |