வெள்ளி, 6 அக்டோபர், 2017

யயாதியாகவா


                                         யயாதியாகவா
                                        -------------------------

அது என்னவோ தெரியவில்லை காரணம் தெரியாமல் சில  கதைகள் நினைவைச் சுற்றிச் சுற்றி வருகிறது அப்படி என்  நினைவைச் சுற்றும்கதைதான் யயாதியின்  கதை  மொட்டையாக யயாதியின்  கதை என்றால்  எல்லோருக்கும் விளங்குமா விளங்காதவர்களுக்கு யயாதியின் கதைச் சுருக்கம்
யயாதி அத்தினா புரததைத் தலைநகராகக் கொண்டு குரு நாட்டை ஆண்டு  வந்த அந்தக்காலத்து சந்திர குல அரசன்  அவன் அசுர குல ஆச்சாரியரான சுக்கிரச்சாரியாரின்  மகள் தேவயானியை மணம் செய்து கொண்டவன் அப்படிச் சொல்வதைவிட மணம்செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான்  இந்த தேவயானியின் வேலைக்காரியாய் இருக்க நேர்ந்த    விருசபர்வன் எனும் அசுரகுல அரசனின் மகள் சர்மிஷ்டையை ( இவள் தேவயானியின்  தோழியுமாவாள்) இரண்டாம் திருமணம் செய்கிறான் 
யயாதிக்கு தேவயானியின் மூலம் யது துர்வசு என்று இரண்டு குழந்ததைகளும்   சர்மிஷ்டை மூலம்  துருயு  அனு மற்றும் புரு என்று மூன்று குழந்தைகளும்  பிறக்கின்றன
தன்  மகளுக்குத் துரோகம்  செய்ததை, ( இரண்டாம் மனைவிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தபின்…….? )  உணர்ந்த  சுக்கிராச்சாரியார்  யயாதியை அவரது இளமை நீங்கி ஒழிய சபிக்கிறார்  இதில் யயாதிக்கு மன வருத்தம்  அதிகமிருந்தாலும் சபித்த ஆச்சாரியாரிடம் சாப விமோசனம் கேட்கிறார்  அவரது மூப்பை யாராவது வாங்கிக் கொண்டு தனது இளமையை யாராவது தர முன்வந்தால் யயாதிக்கு இளமை திரும்பும்  என்றார் தேவயானி மூலம்பிறந்த மகன்களில் யாரும்  முன்வரவில்லை  இவரும்  இவரது பங்குக்கு அவர்களுக்கு அத்தினாபுர அரசும் கிடையாது என்கிறார் சர்மிஷ்டையின்  மகன்களில் மூத்த இருவரும் யயாதியின் வேண்டுகோளுக்கு இணங்கவில்ல கடைசி மகன் புரு ஒப்புக்கொண்டு தனது இளமையைத் தியாகம் செய்து மூப்பை ஏற்றுக் கொள்கிறான்  இளமையை மீண்டும் பெற்ற யயாதி தன் இரு மனைவிகளுடன்  இன்பமாக இருக்கத்  தொடங்கினான் பிறகு சில காலம்  சென்றபின் இளமை நிலையில்லாதது என்று உணர்ந்து தன் மகன் புருவுக்கு  மீண்டும் இளமையைக் கொடுத்து தனது மூப்பை ஏற்கிறான்   ( யயாதியின்  கதையைமிகவும் சுருக்கி இருக்கிறேன் )
 அது சரி யயாதிக்கும் இந்தப் பதிவுக்கும்  என்ன சம்பந்தம் என்னும் கேள்வி எழுகிறதல்லவா
சில நேரங்களில் எனக்கும்யயாதிபோல் இளமை திரும்பாதா என்ற எண்ணம் வருவதுண்டு யயாதிக்கு இன்பங்களைத் துய்க்க  விடாமல் தடுத்த மூப்பைக் களைய ஆசை. எனக்கு நான்விருப்பப் பட்டதைச் செய்ய விடாமல் தடுக்கும்  என் மூப்பின் மேல் வருத்தம்  யயாதி உலகியல் இன்பத்துக்காக மூப்பை வெறுத்தான் எனக்கு அம்மாதிரி இல்லை ஏதாவது செய்து மீண்டும் உடல் வலிமை பெற்று நினைத்ததை செய்ய முடியுமா என்னும்  எண்ணம் நான் ஒரு வேளை இதன் காரணமாகத்தானோ ஏனோசெய்யாத குற்றம் என்னும் பதிவில் என் இயலாமைகளை (அது எனது மட்டுமல்ல என்பதையும்  சொல்ல வேண்டும்
 ஒரு சமயம்  இம்மாதிரி எண்ணங்கள் வயதானவர் எல்லோருக்கும் இருக்கிறதா தெரியவில்லை மூத்த பதிவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிரலாம் வயோதிகத்தால் செய்ய முடியாத வை செய்ய நினைக்கும் போது இம்மாதிரி எண்ணங்கள் வருகிறதோ. ஆனால் நான் யயாதி மாதிரி என் வயோதிகத்தை யார் மீதும் திணிக்க விரும்பவில்லை.வயதாவதும்  அதனால் உடல் சோர்வதும் இயற்கையின்  நியதி என்றும் அறிவேன் அதை உணர்ந்ததாலேயேமுதுமை ஒரு வரம்  என்றும் எழுதி ஆறுதல் அடைந்திருக்கிறேன் ஒரே தலைப்பிலிருபக்க வாதங்களையும் அறிய இவ்விரண்டு பதிவுகளும் உதவுகின்றன (சுட்டிகளைப் பார்க்கவும்  )

எப்பவுமே என்னை ஒரு மாதிரியாக நினைக்கும் நண்பர்கள் கருத்துகளைப் பகிரலாமே       

திங்கள், 2 அக்டோபர், 2017

கற்றது கடுகளவு


                                         கற்றது கடுகளவு
                                         ----------------------------
ஒவ்வொரு முறையும் எழுத நினைக்கும் போது  என் எழுத்துகள் ஏதாவது செய்தியைச் சொல்கிறதா என்று யோசிப்பேன்  ஒரு பதிவின்மறு மொழியாக  என் பதிவுகள் எல்லாம்  என்  சொந்த சிந்தனையில்  எழுந்தாலும் அதனுள்ளிருக்கும்  செய்திகள் பலவும் பகிர்ந்து கொள்வதே  விநாயகர் அகவலுக்கு பொருள் எழுதினேன்   அருணகிரியாரின்  பல்லுடைக்கும் பாட்டுக்கும்   பொருள் தேடி எழுதினேன்  அந்தவகையில் இதோ இன்னொன்று
 .?தென்னாற்காடு மாவட்டத்தில் சனியூர் என்ற இடத்தில் பிறந்த வில்லிபுத்தூரார் தமிழில் மகா பாரதம் இயற்றினார். வைணவ குலத்தவரான இவரை வக்க பாகை எனும் இடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் ஆதரித்து வந்தான். வில்லிபுத்தூரார் புலவர்களிடையே போட்டி வைத்து வென்றவர் தோற்றவர் காதை அறுக்க வேண்டும் என்ற முடிவுக்கு உட்படுத்தப் பட்டு பலருடைய காதுகளை அறுத்து பிரசித்தி பெற்றிருந்தார். அவருடைய புலமையே அவருக்கு ஆணவம்  வரக் காரணமாக இருந்தது அவ்வூரில் புலவர்கள் பலரும் காது அறு பட்டுக் கிடந்தனர்
இதனைக் கேள்விப்பட்ட அருணகிரிநாதர் இதற்கு முடிவு கட்ட வில்லிபுத்தூராருடன் போட்டியில் கலந்து கொண்டார். ஆரம்பத்திலேயே
முத்தை திரு பத்தித் திருநகைஎன்ற பல்லுடைக்கும் பாடலை முருகன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடியவரிடம்  வில்லிப் புத்தூரார் தோல்வியடைந்தார். அருணகிரிநாதர் வில்லிப் புத்தூராரை மன்னித்து காதறு படலத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
ஆனல் அந்தப் பாடல்தான் என்ன  தெரிய வேண்டாமா. முருகனின்  அருள் பெற்றவரின்  பாடலுக்கு பொருள் தெரியாமல் வில்லிபுத்தூரார்  தொல்வியை சந்தித்து அகம்பாவம்  ஒழியப் பண்ணிய  பாடல்தான்  என்ன  , வாசகர்களே முயன்று பார்க்கிறீர்களா  முதலில் படிக்க முடிய வேண்டும் பின்   பொருள் புரிய வேண்டும் எனக்கு மட்டும் தெரிந்ததா என்ன. இல்லையே இணைய உதவி நாடினேன்   பாடல் இதோ கீழே

திதத் தத்தத் தித்தததிதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!

 இதற்கு அந்த முத்தைத் திரு பத்தி என்னும் பல்லுடைக்கும் பாடலே மேல் என்று தோன்றுகிறது

திதத்த ததித்த திதத்த ததித்த எனும் தாள வாக்கியங்களை தன்னுடைய நடனத்தின் மூலம் வெளிப்படுத்துகின்ற உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,மறை கிழவோனாகிய பிரம்மனும்,புள்ளிகள் உடைய படம் விளங்கும் பாம்பாகிய ஆதிகேசனின் முதுகாகிய இடத்தையும்,இருந்த இடத்திலேயே நிலைபெற்று அலை வீசுகின்ற,சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் ( தன்னுடைய வாசற்தலமாகக் கொண்டு ) ஆயர்பாடியில் தயிர் மிகவும் இனிப்பாய் இருக்கிறதெ என்று சொல்லிக் கொண்டு,அதை மிகவும் வாங்கி உண்ட ( திருமால் ) போற்றி வணங்குகின்ற பேரின்ப சொரூபியாகிய மூலப் பொருளே தந்தங்களை உடைய யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட ,கிளி போன்ற தேவயானையின் தாசனே பல தீமைகள் நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பபட்டதும்,மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும் ,பல ஆபத்துகள் நிறைந்ததும் ( ஆகிய ) எலும்பை மூடியிருக்கும் தோல்பை ( இந்த உடம்பு )அக்னியினால் தகிக்கப் படும் அந்த அந்திம நாளில்,உன்னை இவ்வளவு நாட்களாகத் துதித்து வந்த என்னுடைய புத்தி உன்னுடன் ஐக்கிய மாகிவிட வெண்டும்.

சுருக்கமாக “ நடராஜமூர்த்தியாகிய சிவ பெருமானும், பிரம்மனும், இடைச் சோலையில் தயிர் உண்டு, பாற்கடலையும் ஆதிகேசனையும் பாயலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆநந்த மூலப் பொருளே,தேவயானையின் தாசனே,ஜனன மரணத்துக்கு இடமாய்,சப்த தாதுக்கள் நிறைந்த இந்த பொல்லாத உடம்பை தீயினால் தகிக்கப் படும்போது உன்னை துதித்துவந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும் “ என்பதே ஆகும்.

(எல்லாப் புகழும்  இணையத்துக்கே )









வெள்ளி, 29 செப்டம்பர், 2017

ஆயுத பூஜை நினிவுகளில் சில


                                                ஆயுதபுஜை நினைவுகள்சில
                                                 ----------------------------------------------
இன்றுதானே ஆயுத பூஜை என்றானால்  என்ன..... இன்றும்  என்றும்போல ஒரு நாள் அதுவும் விடுமுறைநாள் தி தமிழ் இளங்கோ அவர்கள் அவர்கள் அவரது ஆயுதபூஜை நினைவுகளைப்பதிவாக்கி இருக்கிறார் எனக்கும் பணிக்கால ஆயுத பூஜை நினைவுகள் சில வந்தது அதிலும் குறிப்பாக நான் பயிற்சி முடிந்து முதலில் பணியில் இருந்த எச் ஏ எல் ஏரோ எஞ்சின்  டிவிஷனில் நடந்த முதல் ஆயுத பூஜை (1959ம் வருடம் ) மங்காமல் நினைவுக்கு வருகிறது அப்போது எஞ்சின் டிவிஷன்  துவங்கி இருந்த நேரம்  ப்ரிஸ்டல் சிடெலி BRISTOL SYDELLY ஆங்கிலக் கம்பனியுடன்  ஆன கூட்டு முயற்சி  நிறையவே ஆங்கிலேயர்கள் இருந்தனர் எச் ஏ எல் லில் அப்போதெல்லாம் ஆயுத பூஜையை  தொழிலாளிகள் தங்கள் திறமைகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை எக்சிபிட் செய்வதில் பெருமை கொள்வார்கள் அதற்கான செலவுகளை நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் எஞ்சின் டிவிஷன் புதிதாக தொடங்கப்பட்டதால் அன்றைய தினத்தை வெகுவாக அலங்கரித்து பூஜை செய்வதோடு நிறுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது  விழா நடவடிக்கைகளை எஞ்சின்  டிவிஷனில் செய்ய ஒரு குழு நிர்ணயிக்கப்பட்டு அதன் தலைவனாக என்னை நியமித்தார்கள்
பூஜைக்கு வேண்டிய பொருட்களையும்   கடவுள் படங்களுக்குச் சார்த்த வேண்டிய மாலைகள்  மற்றும்தின்பண்டங்களாக பொரி கடலை போன்றவையும்  வாங்க முடிவு செய்யப்பட்டது நன்கு தீட்டப்பட்ட அழகு படங்கள் லட்சுமி  சரஸ்வதி பார்வதி போன்ற படங்கள்பெரிதாகக் கொண்டுவரப்பட்டன ஒரு மேடை போடப்பட்டு பணிசெய்யும்  ஆயுதங்கள் சிலவற்றையும்வைக்க முடிவெடுக்கப்பட்டது  அப்போது எங்கள் மேலாளர் மாலைகள் வாங்கும் போது  கூடவே ஐந்தாறு மாலைகளையும்  சேர்த்து வாங்கச் சொன்னார்  எனக்கு ஏன்  இந்த அதிகப்படியான மாலைகள் என்று தெரியவில்லை கேட்டேன்  வந்திருக்கும் ஆங்கில அதிகாரிகளை கௌரவிக்கவே  இந்த அதிகப்படியான   மாலைகள் என்றார்  எனக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை 
தொழிலாளிகள் தாங்கள் வணங்கும் ஆய்தங்களையும்  கடவுள்படங்களையும்   மாலை இட்டு வணங்கலாம் ஆனால் வெள்ளை அதிகாரிகளுக்கு மாலை போடுவது ஏற்றுக் கொள்ள முடியாது என்றேன் சொன்னதைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன்   எனக்கு சரியில்லை என்று தோன்றியதால் பூஜைக் குழுவின்  பொறுப்பில்  இருக்க முடியாது என்று கூறினேன்  மேலும்  வரவு செலவுக் கணக்குகளுக்கு நான்  பொறுப்பானதால் மாலைகள் வாங்க  இயலாது என்றும் கூறினேன் 
 மேலாள்ருக்குக் கோபம்வந்தது எப்படியும் ஆங்கில அதிகாரிகளுக்கு மாலைகள் போட வேண்டும்  என்றார் அதுவே அவர்களுக்கு நம்  மேல் பிரியம் வரவழைக்கும் என்றார்  நான்  மறுதளித்து விட்டதால் அவரே அவரது செலவில் மாலைகள் வாங்கி வந்தார்  அந்த முதல் விழாவை நாங்கள் புறக்கணித்தோம்  என்றுசொல்ல வேண்டியதில்லை இந்த தாழ்வு மனப்பான்மை எனக்குப் பிடிக்க வில்லை அவர்களுக்கு இதன் பின்  இருக்கும் பக்தியும் சிரத்தையும்  தெரியாது மாலைகளை அணிந்துகொண்டு நாள் முழுவதும் வலைய வந்தனர் ஏதோ தமாஷ் போல் கருதினார்கள்
அதன்  பிறகு வந்த ஆயுத பூஜைகள் ஏரோ எஞ்சின் டிவிஷனில் ஆங்காங்கே அவரவர் நம்பிக்கைப் பிரகாரம் கொண்டாடப்பட்டது  எச் ஏ எல் மெயின் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தங்கள் திறமையைக் கொண்டு உருவாக்கிய பொருட்களுடன் ஒரு எக்சிபிஷன்  போல் நடத்துவார்கள் ஒரு க்யூபுக்குள் க்யூப் அதற்குள் ஒரு க்யூப் என்று ஒரு லேத் மெஷினைக் கொண்டே உருவாக்குவதைப் பார்த்து  ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்
பி எச் இ எல் லில் அன்று எல்லோருக்கும்  தொழிற்சாலைக்கு வரும் உரிமை உண்டு  ஒவ்வொரு பகுதிக்கும்சென்று எத்தனை பொரி கடலை இனிப்புப் பொட்டலங்கள் பெற்றோம் என்று காட்டிப் பெருமைப்படுவார்கள்  விஜயவாடாவில் இதே ஆயுதப் பூஜையை காண்ட்ராக்டர்கள் அன்று கொண்டாடுவதில்லை  விஸ்வ கர்மா பூஜை என்று வேறு ஒரு நாளில் கொண்டாடுவார்கள்
என் நினைவுகளை மீட்டெடுக்க உதவிய திரு தி தமிழ் இளங்கோவின் பதிவுக்கு நன்றி 
நான் பிரதிலிபிக்கு ஐந்து கவிதைகள் அனுப்பி இருக்கிறேன்  கவிதை  மழை போட்டிக்காக  நேரமிருந்தால் படித்துக் கருத்துக்  கூற வேண்டுகிறேன் september 30ம் தேதி  / http://tamil.pratilipi.com/event/kavidhai-thiruvizha/ சுட்டியில் பதிவிடுவதாகக் கூறி இருக்கிறார்கள்




 

   

வியாழன், 28 செப்டம்பர், 2017

நவராத்திரி விழா


                                                     நவராத்திரி விழா
                                                     ----------------------------
நவராத்திரி விழா களை கட்டிக் கொண்டிருக்கிறது தேவியின்  உருவமாக நாளுக்கு ஒரு பெயருடன் அன்னையை வணங்குகிறர்கள் பலரது பதிவுகளைப் படிக்கும்  போது இன்ன நாளுக்கு இன்ன பெயர் கொண்டவள் தேவி  , அவளை வணங்கும் முறைகளும்  கூறு கிறார்கள் ஆனால் எனக்கு அது எல்லாம்  உடன் பாடு இல்லை. இருந்தாலும் ஆண்டாண்டுகாலமாக  வண்ங்கி வருபவர்களின் மனம்  புண்படாதவாறு அதே சமயம்  கடவுளை  எந்த பெயரில் அழைத்தாலும்  அன்னையின்  சொரூபமாக  வணங்குவதே சரியாகும்   என்று தோன்றியதால் நானும்  விழாக்காலத்துக்கு  ஏற்பஒரு துதி பாடலை எழுதி இருக்கிறேன் ஒவ்வொரு ஆண்டும்  வீட்டில் கொலு வைப்பது என்மனைவியின்  வழக்கம்  ஆனால் அவளுக்கும் வயதாகி வருகிறதல்லவா சென்ற இரு ஆண்டுகளாககொலு வைப்பது நின்று விட்டாலும்   தினமும்  தவறாது  லலிதா சஹஸ்ர நாமத்துடன்  பூஜை செய்வது தொடர்கிறது

ணு அண்டம் பேரண்டம் அனைத்தையும்
இயக்கும் சக்தியே உன்னை நான் வணங்குகிறேன்.
உருவமும் பெயரும் ஏதுமில்லா உன்னை என்ன சொல்லி
போற்றுவேன் .மலையத் துவசன் பெற்ற பெரு வாழ்வென்பேனா-
புவி மடந்தை- நாமருவிய கலை மடந்தை- ஜெய மடந்தை என்பேனா-
சர்வசக்தி பொருந்திய  சர்வாங்க சுந்தரி என்பேனா--நான்
அவலத்தில் அழுந்தும்போது என் நாவினில் வந்தமரும்
முருகனும் நீயே,- கண்ணனும் நீயே- ஏனையோர் துதிக்கும்
எல்லா நாமங்களும் கொண்டவளும் நீயல்லவா- நீ என்
அப்பனல்லவா, அம்மையல்லவா, கண் துஞ்சாது எனைக்
காக்கும் தாரமல்லவா.- யாதுமாகி நிற்கும் தேவியே
கலை மகளே, அலை மகளே, மலைமகளே
உயிருள்ள,உயிரற்ற, அனைத்திலும் இருப்பவளே,
எனை ஈன்ற தாயின் தாயே- எல்லாம் நீயே
உனை நான் வணங்குகிறேன் .! காத்தருள்வாய் சக்தியே


முன்பு வைத்த கொலுவின்  ஒரு படம்


 இந்தப் பாடலின் வரிகளை சுப்புத்தாத்தாவின்   குரலில் கேட்கலாமே 



ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

சொல்லற சும்மா இரு


                 சொல்லற சும்மா இரு
                -----------------------------------


  
அருணகிரி நாதருக்கு முருகன் உபதேசித்ததாகச் சொல்லப்படுவதே பதிவின்  தலைப்பு. இருந்தாலும்  சில அடிப்படை குணங்களை ஏன்  களைய வேண்டும்  என்றும்  தோன்றுகிறது  விஜய் டிவியில்  முருகன் தமிழ்க் கடவுள் என்னும் தொடர் வரப் போகிறதாம் கடவுளில் தமிழ்க் கடவுள் இங்கிலீஷ் கடவுள் என்றெல்லாம்  உண்டா  என்ன. பதிவு  அதைப் பற்றியதும் அல்ல. முருகனை எனக்கும் பிடிக்கும்  சிலகுணங்களாக சொல்லப்படுவதும்  பிடிக்கும் எனக்கும் முருகனுக்கும்  இருப்பதாக நான்  நினைக்கும் சில சமன்பாடுகளைக் குறித்து எழுதியும்  இருக்கிறேன்  பார்க்க

முருகனின் சொற்படி ஏதும் பேசாமல் சமாதி நிலையில் ஆழ்ந்திருந்த அருணகிரிநாதரை முருகன்நம் புகழ் பாடுகஎனவும் ஏதுமறியாதவன் என்ன பாடுவேன், எப்படிப் பாடுவேன் என்று கேட்கமுத்தைத் தருஎன்று அடியெடுத்துக் கொடுக்க எழுந்த முதல் பாடலே
நாக்கைப் புரட்டும்   முத்தித் தரு பத்தித் திருநகை  எனத் துவங்கும் பாடல் முருகனின்  இப்பாடல் பொருள் தெரிந்தோ தெரியாமலோ மிகவும்  ரசித்துப் பாடப் படுகிறது இதன்  பொருள் எனக்குத் தெரியவில்லை வழக்கம்  போல இணையத்தின்  துணை நாடி பொருள் அறிந்தேன்   யான்  பெற்ற இன்பம்  இப்பதிவுலகும் பெறட்டுமே என்பதே நோக்கம்  முருகன்  சொன்ன படி சொல்லற சும்மா இரு என்றபடி இருக்க முடியவில்லை பதிவும் தேற வேண்டுமே  அதுவும் உபயோகமாக இருந்தால் நல்லதுதானே முதன் முதலில் முருகனடியெடுத்துக் கொடுக்க அருண கிரியார் எப்படி நாக்கைப் புரட்டும் இம்மாதிரிப் பாடலைப்பாட முடிந்தது என்னும் சந்தேகமும்  கூடவே வருகிறது
பாடலின்  வரிகளும் அதன்  பொருளும்
முத்தைத் தரு பத்தித் திரு நகை
அத்திக்கிறை சத்திச் சரவண்
முத்திக்கொரு வித்துக் குருபர                      எனவோதும்

முக்கட் பரமற்குச் சுருதியின்

முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமு வர்க்கத்தமரரும்.........................அடிபேண

பத்துத்தலை தத்தக் கணைதொடு

ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு, 
பட்டப்பகல் வட்டத் திகிரியில்...........................இரவாக

பத்தற்கிர தத்தைக் கடவிய

பச்சைப்புயல் மெச்சத் தருபொருள் 
பட்சத்தொடு ரட்சித்தருள்வதும் .........................ஒரு நாளே

 தித்தித்தெய ஒத்தப் பரிபுர, 
நிர்த்தப் பதம் வைத்துப் பயிரவி
திக்கொடகந டிக்கக் கழுகொடு.............................கழுதாட

திக்குப் பரி அட்டப் பயிரவர்

தொக்குத்தொகு தொக்குத்தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் த்ரிகடக........................................எனவோத

கொத்துப்பறை கொட்டக் களமிசை

குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென..............................முது கூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை

வெட்டிப் பலியிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல.................................பெருமாளே

எனக்கு இப்பாடலைப் படிக்கவே சிரமமாய் இருக்கிறது சொலவதில் வெட்கம்  ஏதும் இல்லை பொருள் தெரிந்து படித்தால் மகிழ்ச்சியும் கூடுமல்லவா  முதலில் சில அருஞ்சொற்கள்

அத்திக்கிறை = தெய்வயானை அம்மைக்குத் தலைவர்
சுருதி = வேதம்;
ஒற்றைக்கிரி = ஒப்பற்ற மந்தரமலை. ;
திகிரி = சக்கரம்;
பச்சைப் புயல் = பச்சை மாமலை போல் மேனி கொண்ட திருமால்.
பரிபுர = சிலம்புகள் அணிந்த
கழுது = பேய்கள்;
சித்ரப் பவுரி= அழகிய கூத்து;
கொத்துப் பறை = கூட்டமாகப் பல பறை வாத்தியங்கள்;
முது கூகை = கிழக் கோட்டான்.;
கொட்பு = சுழலுதல்;
அவுணர் = அரக்கர்;
குலகிரி =கிரௌஞ்ச மலை
பொரவல = போர் செய்ய வல்ல
பெருமாளே = பெருமை மிகுந்தவரே.

பதவுரை

முத்தினைப் போல் ஒளிர்விடும் சிரிப்பினை உடைய தெய்வயானை அம்மையின் தலைவரே, அன்னை உமையவள் ஈன்றிட்ட சக்திவேல் ஏந்தும் சரவணபவ எனும் ஆறுமுக, முத்தி எனும் வீடு பெற வித்தாய் இருப்பவனே, தகப்பனுக்கே உபசரித்த குருவான பெருங் கடவுளே,/-

 என்றெல்லாம் உனை துதிக்கும் முக்கண்ணன் சிவபெருமானுக்கும் முந்தைய வேதத்தின்  முழுப் பொருளும் அடங்கும் ஓம் எனும் மந்திரத்தை உபதேசித்து, திருமால் பிரமன் முதலான முப்பத்து  முக்கோடி தேவரும் அடிபணிய ,/


- திக்குக்கு ஒரு தலை என்று பத்துத் தலை சிதற அம்பெய்தி அரக்கரை அழித்து, மந்தர மலை கொண்டு பாற்கடல் கடைந்து , சக்கரத்தால் சிலகணம் சூரியனை மறைத்து இரவாக்கி (ஜயத்திரனைக் கொல்ல வழிவகுத்த )/-


 பக்தனுக்குத் தேரோட்டிய,மரகதம் எனும் பச்சை மணி ஒத்திட்ட , அன்பர்க்குப் புயல்வேகத்தில் வந்தருளும் பச்சை மாமணி வண்ணனும் மெச்சுகின்ற பரம்பொருளே எனைப் பரிவுடனே ரட்சித்து அருள் புரியும் நாளும் உண்டோ என இறைஞ்சுகிறேனே. 

தித்தித்தெய் எனும் தாளத்துக்கு ஒப்ப சிலம்பொலி எழும்ப நர்த்தனம் செய்யும் பத்ரகாளி எல்லாதிக்கும் சுழன்றாட பிணங்கொத்தக் காத்திருக்கும் கழுகுகளுடன் பிணந்தின்னிப் பேய்களும் ஆட /-

 எட்டுத் திக்கிலிருந்தும் இவ்வுலகைக் காத்திடும் அட்ட பயிரவர் எனும் எண்மரும் இவ்வாட்டத்துக்கு ஏற்ப  த்ரிகடக என தாளமிடக்/


- கூடவே தாரை தமுக்கு எனும் பல வகை தாள வாத்தியங்களும் அதேகதியில் முழங்கிடவும், பலகாலம் வாழ்ந்திருந்த கிழக் கோட்டான்களும் குக்குக்குகு குக்குக்குகுகுகு ,குத்திப் புதை புக்குப் பிடி என்று குழறி வட்டமிட்டு எழ,/


-சிவனாரின் வரம் பெற்றவன் எனும் இணக்கத்தை மறந்து அசுரர்களை வெட்டிக் குவித்து அவுண குலத்துக்கு இசைவாய் நின்ற குலகிரி ( க்ரௌஞ்ச மலை.)யையும் வேலாலே குத்திப் பொடி செய்து அறவழியில் நின்றன்று போர் செய்த பெருமைக்கு உரியவரே

என்ன நண்பர்களே பதிவு நன்றா? பிடித்திருந்ததா. மனதில் பட்டதை எழுதுங்கள் .