Thursday, February 23, 2012

பேரனின் தங்கிலீஷ் கவிதை.?


                                     தங்கிலீஷில் பேரன் எழுதியது 
                                     ------------------------------------------
Iruvaraiyum  paarththaal kamal sridevi poola irukku.natippil alla.
Aaanaal avvalavu kaathal poruththam theriyuthu;
Avvalavu praem,ishtam,kaathal,love, pyaar
Ellaamae orae arththamthaanae. !
Ivarkal kaathal patri solla naan patikkanum Phd;
Iruvar kaathalilum unmai irukkirathu. 
Aqua guard thanni poola pyuraa irukkum.
Ivarkalaip paarththaal enakku poraamai. 
Aen enraal ennaip paarththu en paeran ippati ellaam solvaanaa. ?
Chansae illai.aen enraal naan innum kaathalikkavae illaiyae.!
Ivarkal santaiyaip paarththaal orae borethaan.no entertainment.
Angkaeyum love thaan therikirathu.
singkham poonaiyaaka mutiyumaa. ?oru unmai theriyumaa.?
Engka veettu singkaththai kutti paappaa 
Maathiriyaakkiya  perumai engka paattikkuththaan saerum.
Ivarkal chemistry paarththaal world physics aachchariyam illai.

Ippo naan T.R u 
ivangka rendu paerum sema pair -u
Enakkuth tharaangka  too much care u
Athaip petraal kitaikkum kick u
appuram ethukkadaa bar u
Hai tantanakkaa  tanakkunakka...!  

தங்கிலீஷ் படிக்கக் கஷ்டமாக இருந்தால் அதுவே தமிழில்
--------------------------------------------------------------------------------
இருவரையும் பார்த்தால் கமல் ஸ்ரீதேவி போல இருக்கு
நடிப்பில் அல்ல. .
ஆனால் அவ்வளவு காதல் பொருத்தம் தெரியுது.
அவ்வளவு ப்ரேம், இஷ்டம், காதல், லவ், ப்யார்
எல்லாமே ஒரே அர்த்தம்தானே. 
இவர்கள் காதல் பற்றிச் சொல்ல நான் படிக்கணும் Phd; 
இருவர் காதலிலும் உண்மை இருக்கிறது
அக்குவா கார்ட் தண்ணி போல ப்யூரா இருக்கும்.
இவர்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமை
ஏன் என்றால் என்னைப் பார்த்து என் பேரன் இப்படிச் சொல்வானா?
சான்ஸே இல்லை, ஏன் என்றால் நான் இன்னும் காதலிக்வே
இல்லையே.!
இவர்கள் சண்டையைப் பார்த்தால் ஒரே போர்தான்.
நோ எண்டர்டைன்மெண்ட். அங்கேயும் லவ் தான் தெரிகிறது. 
சிங்கம் பூனையாக முடியுமா?ஒரு உண்மை தெரியுமா.?
எங்க வீட்டு சிங்கத்தை குட்டிப் பாப்பா 
மாதிரியாக்கிய பெருமை எங்க பாட்டிக்குத்தான் சேரும்.
இவர்கள் கெமிஸ்ட்ரி பார்த்தால் வேர்ல்ட் ஃபிஸிக்ஸ்
ஆச்சரியம் இல்லை.
                       இப்போ நான் டீயாரு

இவங்க ரெண்டு பேரும் செம பெயரு
எனக்குத் தராங்க டூ மச் கேரு
அதைப் பெற்றால் கிடைக்கும் கிக்கு 
அப்புறம் எதுக்கடா பாரு?
ஹாய் ட ண்டணக்கா டணக்குணக்கா.
டண்டணக்கா, டணக்குணக்கா. !
---------------------------------------------
 . 

11 comments:

  1. பாலு சார்! இப்போ நீங்க் பேரனா இருந்தா உங்க பேரனைப் போலத்தான் இருப்பீங்க. அது போல அவன் இப்போ தாத்தாவாயிருந்தா உங்களை மாதிரித்தான் இருப்பான்.

    நல்ல தாத்தா பாட்டி இன்ஃப்ளூயன்ஸ்ஸோட வளர்ற பேரன்கள் ஒரு போதும் சோடை போவதில்லை.என் பக்கத்து உதாரணம் தஞ்சாவூர்க்கவிராயர்.

    உங்கள் செல்லப் பேராண்டிக்கு செல்லமாய் ஒரு கன்னத்து முத்தம்.

    ReplyDelete
  2. அடடே...நல்லாத்தான் இருக்கு

    ReplyDelete
  3. தங்கள் பெயரை உடையவனை பெயரன் எனச் சொல்வார்கள்
    அதுவே பேரன் ஆனதாகச் சொல்வார்கள்
    அது கூட சரியில்லை
    தாத்தவின் மறு உருவே பேரன்
    தங்கள் விசயத்தில் அது சரியாகவே இருக்கிறது
    உள்ளத்தில் உள்ளது கவிதை
    அதை வார்த்தைகளைத் தேடாமல்
    அப்படியே அள்ளிக் கொடுப்பவனே கவிஞன்
    ஒரு கவிஞரை பேரனாகப் பெற்றமைக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தலைமுறை இடைவெளி தாண்டிய அழகான கவிதை. வளரும் தலைமுறைக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருப்பதற்கு தங்களுக்கும் தங்கள் துணைவியாருக்கும் பாராட்டுகள்! தாத்தா பாட்டியின் வாழ்க்கையை இவ்வளவு தூரம் கருத்தூன்றிக் கவனித்து அதைக் கவிதையிலும் பாராட்டிய பேரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. பெயர் சொல்லும் பெயரனின்
    தலைமுறைதாண்டிய வியப்பான பகிர்வுகள் அருமை.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. adada peran anbin veLippaadu arumai...

    kalakkal pic gmb sir...both of u look so perfectly made for each other.

    ReplyDelete
  7. அழகுப் பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  8. உங்க பேரனிடம் இந்தப்பதிவை படிக்கசொல்லுங்க அவர்முகத்தில் சந்தோஷம் அபிரிமிதமாகப்பார்க்கலாம்.

    ReplyDelete
  9. பேரன் தாத்தாவை செம குசியில் கமல் சிரிதேவி ஜோடி போல என்று அனுபவித்து சொல்லியிருக்கும் விதம் உண்மையில் தெரிகின்றது தாத்தா பாட்டியின் அன்பை உணர்ந்தவன் என்று .வாழ்த்துக்கள் பேரனுக்கு சார்.

    ReplyDelete
  10. //இவர்கள் சண்டையைப் பார்த்தால் ஒரே போர்தான்.
    நோ எண்டர்டைன்மெண்ட். அங்கேயும் லவ் தான் தெரிகிறது.
    சிங்கம் பூனையாக முடியுமா?ஒரு உண்மை தெரியுமா.?
    எங்க வீட்டு சிங்கத்தை குட்டிப் பாப்பா
    மாதிரியாக்கிய பெருமை எங்க பாட்டிக்குத்தான் சேரும்.//
    Super!!!

    ReplyDelete
  11. ஆகா!
    lion tamer பாட்டிக்கு வணக்கங்கள்.

    ReplyDelete