Wednesday, January 8, 2014

தேவன் மகா தேவன்...

                                           தேவன் மகா தேவன் ( சிறு கதை)
                     ( dash board-ல் தெரியாததால் மீண்டும் )

VINGHIP   POTTIYA  HIRUTHAYAMUMAI   ஆங்கில  எழுத்துக்களில் எழுதப்பட்ட மலையாள  கடிதத்தின்  ஆரம்பம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது
.
பழைய கடிதங்களைப் பாதுகாத்து அதைப் படித்து அந்தக் கடிதங்களின் பின்னணிகளை நினைத்து , அந்தப் பழைய வாழ்க்கையில் சில மணி நேரம் வாழ்வது வாசுவின் பொழுது  போக்கு .இந்தக் கடிதத்தை எழுதிய  தேவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது  வாசுவுக்கு.  தேவனும் வாசுவும் பழகிய நாட்கள்  என்னவோ கொஞ்சம்தான்.இரண்டு  மாதத்துக்கும் சற்று ஏறத்தாழத்தான் இருக்கும். இருந்தாலும் அந்த நாட்கள் .....ஐம்பது வருடங்களுக்குப் பிறகு இரண்டு மாத நட்பை ஞாபகப்படுத்திப் பார்க்க முடியுமா.. ?ஏன்  முடியாமல் ..? பழைய கடிதங்களைப   பாதுகாத்து  வைத்திருக்கிறானே ... ஆனால் தேவனோ  ...?
பெங்களூரில்  வேலைக்குச் சேர்ந்த  அந்தக் காலத்தில் தங்க நேர்ந்த அந்த லாட்ஜில் "த்ரீ மஸ்கிடீர்ஸ் "என்று தங்களைத் தாங்களே கூறிக்கொண்டனர்  வாசுவும் தேவனும் சந்துருவும் , இதில் சந்துரு எல்லோரையும் விட மூத்தவன். ஏதோ ஒரு கம்பனியில்  குமாஸ்தாவாக  இருந்தான். தேவன் வேலை தேடி  கேரளத்திலிருந்து  வந்தவன். வாசு  அப்போதுதான்  ஒரு தொழிலகத்தில்  பயிற்சியாளனாகச சேர்ந்திருந்தான் . மற்றவரை விட  இளையவன்.

”’இப்போது தேவன் என்ன செய்து கொண்டிருப்பான்..? எப்படி இருப்பான்..பார்க்க வேண்டும்   போல் தோன்றுகிறதே..! " எண்ணியதை  சொல்லில் கூறி செயலில் காட்டாவிட்டால்  வாசுவுக்கு  தலை  வெடித்துவிடும்போல்  தோன்றியது.
"
இந்த பழைய குப்பைகளையெல்லாம்  மாய்ந்து  மாய்ந்து படிப்பதில் அப்படி என்னசுகமோ"--வாசுவின்மனைவி  தங்கம் அவன் நினைவுகளைக் கலைத்தாள்

"
இந்தக் கடிதத்தைப்  படித்துப்  பாரேன் தங்கம் .முடிகிறதா  புரிகிறதா  சொல். "
"
உங்களுக்குத்தான்  வேறு வேலை இல்லை என்றால் .. சரி  சரி ..காட்டுங்கள்   VINGHIP   POTTIYA  ...ஐயே .என்ன இது..?இங்கிலீஷில்  இங்கிலீஷுமல்லாமல்  எனக்குமுடியலைப்பா...... "
"
இங்கே  கொண்டா .நான் படித்துக்காட்டுகிரேன்-----விங்கிப  பொட்டிய ஹிருதயமுமாய்  நிங்களை  விட்டுப் போரேண்டி  வன்னதில் எனிக்கி  கூடுதல்  விஷமிச்சு====.தேவனுக்குத  தமிழ்  தெரியாது.எனிக்கி மலையாளம்  கொறச்சு  அறியும்.அதனால்தான் இந்த முறை                       

தேவனைப்  பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது தங்கம். அவன் இந்த விலாசத்தில் இருப்பானா.. ? போய்ப்  பார்க்கலாம்... நீயும் வாயேன் ".

"
அவ்வளவு  தூரம்  பணம்  செலவு  செய்து  போய  அவர்  அங்கே  இல்லாவிட்டால்  எல்லாம்  விரயமாகும்."

" ஏன்  விரயமாக  வேண்டும் .? நமக்கும் பொழுது  சற்று  மாறுதலாகப்  போகும். ஏற்பாடு செய்கிறேன்.ரெடியாக இரு. "
பெருங்கோட்டுகா வழி திருச்சூர்  என்று  விலாசமிருக்கிறது. எப்படியும் திருச்சூர்  போய  அங்கிருந்து  விசாரித்துப்  போய்க்  கொள்ளலாம். திருச்சூருக்கு  டிக்கெட் புக்  செய்ய வேண்டும்  என்று  எண்ணியவாறே   வாசு  ரெயில்வே   ஸ்டேஷனுக்குப  புறப்பட்டுச் சென்றான்.

"
நீளமாய கழுத்துள்ளபெண்கள் சந்தமாய் இருக்கும்....அறியோ  வாசு. ?"தேவனின்  குரல் இப்போதும்கேட்கிறது.

"
வேலை  தேடி  ஊர்  விட்டு  ஊர் வந்து  பெண்களின்  கழுத்தைப்  பற்றி ஆராய்ச்சி  செய்யாதே.முதலில் வேலை."

 "
ஆமாம், இவன்  பேசற  பாஷை  யாருக்கும்  புரியாது. இவனுக்கெல்லாம்  எவன்  வேலை  கொடுப்பான் ", சந்துருவுக்கு  தேவன் சொல்வது   புரியாததால்  வரும் கோபத்தில் சபிப்பான்.

"
அது  எந்தா.. ஆரும்   பணி  தரில்லே..இன்னால்   வேண்டா. ..சந்துரு  எனிக்கி  வேண்டி  ஒன்னும் செய்யண்டா.  ஞான   எங்கனே  எங்கிலும்   ஜீவிக்கும் ".
எப்படியாவதுபிழைத்துக்கொள்வேன் என்று சொன்னதேவனுக்கு  அதை நிரூபிக்க   வேண்டிய நிர்பந்தம்கூடிய  சீக்கிரத்திலேயே  ஏற்பட்டது. ஊரிலிருந்து  செலவுக்குப்  பணம்  வரவில்லை.லாட்ஜில்  நெருக்கினார்கள். இல்லை என்றால்  காலி  செய்யச்  சொன்னார்கள்.
தேவனும்  வேறு  வழி இல்லாமல்  அவனுடையப்  பெட்டியை  வாசுவிடம்   கொடுத்து   பத்திரமாக  வைத்துக்கொள்ளும்படியும் , பணம்  கிடைத்ததும்  அதைத்  திரும்பப் பெற்றுக்கொண்டு போவதாகவும் கூறினான்.

"
தேவா, உனக்கு  நன்றாகத்தெரியும், எங்களுடைய நிலை. சந்துருவின்  பின்னால்  அவன் சம்பாதிப்பதைக் கொண்டு  வாழ   ஒரு பட்டாளமே   இருக்கிறது. எனக்கோ  பயிற்சி  நேரத்தில் ரூபாய்  முப்பதுதான்  ஒரு  மாதத்துக்குக்  கிடைப்பது. ..இதில் என்னதான் செய்ய முடியும்..?"

"
ஏய்ய் வாசுவிஷமிக்கண்டா.. எனிக்கி  அறியும். .என்டே  சமயம்  இங்கனேயுண்டு .எந்து செய்யாம்..?"

அடுத்தநாள்   தேவனின் பெட்டியைப்  பறிமுதல்  செய்ய , லாட்ஜ்  முதலாளி  முயன்றதும் வாசு  அதைக்  கொடுக்காமல்  தகராறு  எழுந்து, போலீஸ்  ஸ்டேஷன்  வரை  தகராறு  போனதும் வேறு கதை.

ரயிலில்  இடம்  பிடித்து   அமர்ந்து, பயணம்  செய்யும்போது அந்த  வாலிப   நாட்களே  வந்தது  போலவும்  நிகழ்ச்சிகள்  எல்லாம்  நேற்று   நடந்தது  போலவும்   வாசுவுக்குத் தோன்றியது.

"
தங்கம் , உன்னைக்  காதலித்துக்  கலியாணம்  செய்து   கொள்ளும்   முன்பே   எனக்கு   ஒரு    காதலி   இருந்தாள்   தெரியுமா  உனக்கு,?"

"நீங்கள்   ஆயிரம்   பெண்களைப்   பார்த்திருப்பீர்கள் எல்லோரையும்   மனசால்   காதலிக்கவும்  செய்திருப்பீர்கள். ஆனால்  யாராவது  உங்களை  காதலித்து  இருக்கிறார்களா.?"

 "
என்னைக்  காதலிக்க  எந்தப்  பெண்ணுக்குத்தான்  கசக்கும்.? ஆனால்  நான்  சொல்லும் இந்தக்காதல் தேவனால் தடம் புரண்டு  விட்டது..நாங்கள்  தங்கியிருந்த   லாட்ஜுக்கு  அருகே  ஒரு பால்  கடை   இருந்தது. அங்கு  பால்  வாங்க  ஒரு பெண்   தினமும்  வருவாள். நாங்கள்  இரவு   உண்ட  பிறகு  சில நாட்களில்  பால்  அருந்த அங்குசெல்வோம். அவளை அங்கு   அடிக்கடி   பார்ப்போம் .ஹூம் .!  பார்த்தால்   எனக்கு உடம்பு  ஒரு  மாதிரியாய்  படபடக்கும் , நாக்கு  வறண்டு   பேச்சு  சரியாக  வராது. இதெல்லாம்   காதலின்   வெளிப்பாடுகள்   என்று தேவன்   விளக்கம் சொல்லுவான்நானும் அதை  நம்ப   ஆரம்பித்தேன். ஆனால்   அவளிடம்   எப்படிப்   பேசுவது, எங்கு   பேசுவதுஅவள்  பேசுவாளா   ஒன்றும்  புரியவில்லை. தேவன்   இதற்கு  ஒரு  வழி  செய்வதாகக்   கூறி   அபயமளித்தான்.

வாசு  கதைபோல்  விவரிக்க   தங்கத்துக்கும்    சற்றே   உற்சாகம்  பற்றிக்கொண்டது.
"
ஆமாம்.அப்போது உங்களுக்கு என்ன வயசிருக்கும்,?"

"
பதினேழு பதினெட்டு இருக்கலாம்"

"
அடப்பாவி.!பிஞ்சிலேயே  பழுத்த  கேசா.?"

"
இல்லை தங்கம்,.உலகத்தையே   புதிசாகப்   பார்க்கும்   வயசு.  எல்லாவற்றையும்   சோதனை செய்து பார்க்கும் வயசு.யாரையும்உடனே நம்பும்  வயசு. சந்தர்பபங்கள்   அமைந்திருந்தால் , யார்  கண்டது, ..ஒரு சமயம்  பிஞ்சிலேயே  பழுத்திருக்கலாம்"

"அதுசரி.அந்தப்பெண்ணுக்குஎவ்வளவு வயசிருக்கும் என்ன பேர் ஏதாவது   தெரியுமா”?

"
அவளுக்கு  பதினெட்டு  இருபது வயசிருக்கலாம். பெயர்  தெரியாது..ஆனால்  என்   மனசுக்குள்   நான்  அவளுக்கு   வைத்த பெயர்   அகிலா. எனக்கு  எல்லாமே  இந்த   அகிலமேஅவள்தான் என்று  தோன்றும்
. "
"
சீ..! நீங்கள் இப்படிப்பட்டவர் என்று தெரிந்திருந்தால்....."

"ஏன்என்னைக் காதலித்து இருக்கமாட்டாயா?கலியாணம் செய்து இருக்க  மாட்டாயா”?

இப்போது அதைப்பற்றி நினைப்பது டூ  லேட்தவிர்க்க முடியாததை   அனுபவிக்கதானேவேண்டும்இருந்தாலும் இப்போது நோ ரிக்ரேட்ஸ் .வருத்தமேதும் இல்லை.
 "
"
எனக்கு  அதுவும்  தெரியும். தேவனைப்  பற்றி  சொல்லிக்கொண்டிருந்தேன் . எப்படயாவது  அந்தப்  பெண்ணைப்  பற்றிய  செய்திகளை  சேகரிக்கப போவதாகக்  கூறினான். வேலை  இல்லாதவனுக்கு  நல்ல வேலை  என்று சந்துரு  கிண்டல்  பேசினான். அடுத்த  நாள் பயிற்சி  முடிந்து  அறைக்குத்  திரும்பும்போது  தேவன்  அங்கு  பொறுமையில்லாமல்    எனக்காகக்   காத்திருப்பது   தெரிந்தது.வாசு ..ஆ  பெண்ணின்டே  ஸ்தலம் அறிஞ்சு என்று  கூவினான். பிறகு  அந்த  வீட்டையும்  காட்டினான். வீடு  தெரிந்தவுடன் அந்தப்  பெண்ணைப்  பார்க்காவிட்டால்  தலை  தெறித்து விடும்  போல்  தோன்றும்.அந்த  வீட்டின்  முன்பாக அங்குமிங்கும்  அடிக்கடி  நடப்பேன்வீட்டு  முன்னால்  ஷூவுக்கு  லேஸ்  கட்டும்  சாக்கில்  உள்ளே  ஆராய்ந்து  பார்ப்பேன்.ஆனால்என்  கண்ணில்  மட்டும்  அவள் தென்பட  மாட்டாள். தேவன்என்னைத் தமாஷ் செய்கிறான் என்று அவனிடம்  கோபித்துக்  கொண்டேன். தேவன் சொன்னான் நான்அங்குபோகும்  நேரத்தில்  அவள்  எங்கோ  தட்டெழுத்துப்  பயிலச்செல்கிறாளோஎன்னவோஎன்று. அதன் பிறகு  அடுத்துள்ள  தட்டெழுத்துப்  பயில்விக்கும்  இடங்களுக்கு  முன்பு  நின்று  நோட்டம்  விட   ரம்பித்தேன். அவள் என்கண்களில்படவேஇல்லை. பிறகுதான் அது  நடந்தது."என்றஒரு  சஸ்பென்ஸ்  கொடுத்து  நிறுத்தினான்  வாசு.
"என்ன  பெரிய சஸ்பென்ஸ்...ஒரு நாள் அவளைப்  பார்த்தீர்கள் , பல்  இளித்தீர்கள்   அவள்  உங்களைக் கண்டு   கொள்ளவே இல்லை .பிறகு  சேச்சே ...இந்தப் பழம்  புளிக்கும் என்று வந்து விட்டீர்கள்..அவ்வளவுதானே "  என்று கிண்டல் செய்தாள்   தங்கம்.

"
அதுதான்  இல்லை. அவளுடைய  பெயரை  அறிந்து   வருகிறேன்  என்று  சொன்ன  தேவன் , அவர்கள்  வீட்டின்  அருகே  விளையாடிக்  கொண்டிருந்த  ஒரு   சிறுவனைக்  கூப்பிட்டு ,நிறைய  மிட்டாய்களைக்  கொடுத்து   அந்தச் சேச்சியின்  பெயரைக்கேட்டுவா--என்று  அனுப்பி   இருக்கிறான். அந்தப்  பையன்  வீட்டிற்குள்  சென்றசற்று நேரத்தில்  அந்தப்  பெண்  வெளியே  வந்திருக்கிறாள் .அந்தப்  பையன்  தூரத்தில்  இருந்த  தேவனைக்  காட்டி  ஏதோ சொல்ல , அந்தப் பெண்  உள்ளே சென்று  மறுபடியும்  வெளியே  வந்தபோது, பெரிய  மீசை  வைத்த  இரண்டு  ஆட்களும்  கூட  இருந்தனர். தூரத்தில்   நின்று  பார்த்துக்  கொண்டிருந்த  தேவன்   மெல்லநழுவப்பார்க்க  ஓடி வந்து அவனைபிடித்து
நன்றாக தர்ம அடி கொடுத்து அனுப்பிஇருக்கிறார்கள்பாவம்,தேவன்.......  முகமெல்லாம்  வீங்கி  உதடு  காயப்பட்டு  ரத்தம்  தெரிய  வந்ததை  நிறையப்  பேர்   பார்த்திருக்கிறார்கள்அவமானமாக இருந்தது,என்று சொல்லிச்சொல்லி   மாய்ந்தான்  பாவம், என் காதலுக்காக  அடி  வாங்கினான் " --என்று  பெருமூச்சுடன்  கூறி நிறுத்தினான்
  வாசு.
 "
அவர்  உங்களைக்  காட்டிக்  கொடுத்து , உங்களையும்  அவர்கள் புடைக்கவில்லையா .?'

"அந்தமட்டில் தேவனுக்குநன்றி சொல்லவேண்டும்
 "
திருச்சூர்  சென்று  அங்கு  ஒரு  ஹோட்டலில்  தங்கி , ஒரு நாள் இருந்து  பிறகு ,
பெருங்கோட்டுக்கா  என்ற இடம்  எங்கு  இருக்கிறது  என்று  விசாரித்து  அங்கு  சென்றால்..... வாசுவிற்கு  முதலில்  ஒன்றுமே  புரிய வில்லை. அந்த  இடத்தில் ஒரே  கூட்டமாக  இருந்தது. அது  ஒரு ஆசிரமாம். அதன்  தலைவர்  பிரம்ம  தேவ  சுவாமிகள்  அன்று  காலையில்தான்  இந்த பூத  உடலை விட்டு உயிர்  நீத்தாராம்.  அவருக்குமரியாதைசெய்ய கூட்டம் கூட்டமாக மக்கள்  சென்று  கொண்டிருந்தனர்.  வாசுவுக்கு   சற்றே  ஏமாற்றமாக  இருந்தது.  சரி  வந்ததுதான்  வந்தோம்  அந்த ச்வாமிகளையாவது  வணங்கி செல்லலாம்  என்று  அருகே  சென்றால்......
 
வயதான  தேவன்தான்  பிரம்மதேவ  சுவாமிகள்.  அருகில்  இருந்தது  யார்..? வயதான  தோற்றத்தில்  அகிலாவா..?   வாசுவின்  அகிலாவா...?!






16 comments:

  1. ஹாஹாஹா! நல்லா இருக்கு கதை. :)))))

    ReplyDelete
  2. தேவன், மஹாதேவன்னு படிச்சதும் எழுத்தாளர் தேவன் பத்தி ஏதோனு நினைச்சுட்டேன். அப்புறமாத் தான் தெரிஞ்சது இது வேறேனு! :))))

    ReplyDelete
  3. புனாவில் என் கணவர் வேலைக்குச் சேர்ந்தப்போ தங்கின இடத்தில் இவரையும் சேர்த்து இன்னும் இரண்டு பேர் சென்னையிலிருந்து வேலைக்குச் சேர்ந்திருக்காங்க. அவங்க மூணு பேரையும் த்ரீ மஸ்கிடீர்ஸ் னு தான் ஆஃபீஸிலே அழைப்பாங்களாம். சொல்லி இருக்கார். அந்த நினைப்பும் வந்தது.

    ReplyDelete
  4. மீள் பதிவோ...படித்த ஞாபகமாய் இருக்கிறது.

    ReplyDelete
  5. எதிர்ப்பார்க்காத முடிவு...! ஹா...ஹா...

    ReplyDelete
  6. வயதான தேவன்தான் பிரம்மதேவ சுவாமிகள்.அருகில் இருந்தது யார்..? வயதான தோற்றத்தில் அகிலாவா..? வாசுவின் அகிலாவா...?! !!!

    ஆச்சரியம் தரும் நிறைவு...!!

    ReplyDelete
  7. நான் கதையைப் பாதி படித்து வரும்போதே நினைத்தேன்.

    புறப்படுபவர் அந்த பழைய நண்பரின் இறுதிச்சடங்கில் தான் கலந்து கொள்வார் என.

    ஏனெனில் இதே போன்று மூன்று நண்பர்கள் கதை ஒன்று படித்துள்ளேன்.

    -=-=-=-

    அவர்கள் மூவரும் ஐம்பது ஆண்டுகளுக்குப்பின் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பதாகப் பேசிக்கொண்டு சிறு வயதில் பிரிந்து விடுவார்கள்.

    இருவர் மட்டுமே அங்கு சொன்னபடி கூடுவார்கள்.

    மூன்றாவது நபரும் அங்கு சற்று தாமதமாக வருவார் -

    ஆனால் கழுத்தில் மாலையுடன் - பிணமாக.

    -=-=-=-

    இந்தத்தங்களின் கதையில் வயதான தோற்றத்தில் அகிலாவும் அங்கு இருந்தது தான் எனக்கு சற்றே ஆச்சர்யமாக இருந்தது.

    எப்படியோ கஷ்டப்பட்டு இந்தக் கதையை நான் இப்போது படித்து முடித்து விட்டேன்.

    தங்களின் ஸ்பெஷல் அழைப்பிற்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி, ஐயா.

    அன்புடன் VGK

    ReplyDelete

  8. @ கீதா சாம்பசிவம்
    வருகை தந்து கதை படித்து ”நல்லா இருக்கு கதை” என்று பாராட்டியதற்கு நன்றி.துப்பறியும் சாம்பு எழுதிய தேவனைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

    @ ஸ்ரீராம்
    மீள் பதிவோ படித்த ஞாபகமாய் இருக்கிறது. ஒரு ஷொட்டுக் கொடுத்துக் கொள்ளுங்கள். இதே கதையை இன்னொரு விதமாய் எழுதி இருந்தேன். அது படித்த நினைவாய் இருக்கலாம். வருகைக்கு நன்றி

    @ திண்டுக்கல் தனபாலன்
    எதிர்பாராத முடிவு- இதே கதையை இன்னொரு விதமாக “கதை கட்டுரை” என்னும் தலைப்பில் வித்தியாசமாக எழுதி இருந்தேன். அது ஒரு விழிப்புணர்வு கதை. இன்னுமொரு வித்தியாசமான முடிவுடன். வருகைக்கு நன்றி.

    @ இராஜராஜேஸ்வரி
    “ ஆச்சரியம் தரும் நிறைவு “ பாராட்டுக்கு நன்றி.

    @ கோபு சார்
    ” எப்படியோ கஷ்டப்பட்டுஇந்தக் கதையை இப்போது படித்து முடித்துவிட்டேன்”கஷ்டம் படிப்பதில் கண் பிரச்சனையாலா அல்லது கதையின் போக்காலா? தெரியவில்லையே.”வயதான தோற்றத்தில் தேவனையே சாகடிக்காமல் வேறு ஒரு முடிவுடன் எழ்திய கதையும் உண்டு. வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  9. எதிர்பாராத முடிவு. அதிலும் ஒரு கொக்கி - சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. இன்னொரு கதைக்கான விதை.

    நிறைய வரிகள் மிகவும் ரசிக்கும்படி.

    விங்கிப் பொட்டின ஹ்ருதயமுமாய் - இதற்கு அர்த்தம் தெரிந்தால் யாரிடமாவது அடிவாங்காமல் சொல்ல வசதியாக இருக்கும். கேட்கவே ஸ்ருங்காரமாக இருக்கிறது. விங்கிப் பொட்டின ஹ்ருதயமுமாய் - almost music.

    உங்கள் சிறந்த கதைகளில் ஒன்று. இன்னும் வளர்த்திருக்கலாம்.

    ReplyDelete

  10. @ அப்பாதுரை
    விம்மி உடைந்த உள்ளத்துடன் என்று பொருள் கொள்ளலாம்/ வேறு ஒரு முடிவுடன் இக்கதையை ஒரு விழிப்புணர்வுக் கதையாக “ கதை கட்டுரை “ என்று எழுதி வெளியிட்டிருக்கிறேன். பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  11. பிய்த்து உதறிவிட்டீர்கள் ஐயா! இந்தக் கதையைப் படிப்பவர்கள் உங்கள் வயது நாற்பதுக்குமேல் சொல்லமாட்டார்கள்! இன்னும் என்னென்ன காதல் அனுபவங்கள் உண்டோ எல்லாவற்றையும் அவிழ்த்து விடுங்கள்! அடுத்த புத்தகம் போடவேண்டாமா?

    ReplyDelete
  12. கதை சுப்பர் பாலு சார். எதிர் பாராத திருப்பம் இறுதியில் . சாமியார் கதை மிகவும் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  13. வணக்கம்
    ஐயா
    ஆரம்பம் முதல் முடிவு வரை கதைநன்றாக உள்ளது மதை கவர்ந்துள்ளது. வாழ்த்துக்கள் ஐயா.


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. நல்ல கதை
    சொல்லிச் சென்ற விதமும்
    சட்டென முடித்த விதமும்
    முத்தாய்ப்பான வரிகளும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

  15. @ செல்லப்பா யஞஸ்வாமி
    என் வயதுக்கும் இந்தக் கதைக்கும் என்ன முடிச்சு தெரியவில்லை.கற்பனையில் வருவதெல்லாம் காதல் அனுபவங்கள் ஆகுமா.?வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி

    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    சாமியார் கதை சுவாரசியம்.ஆதியில் ஆசாமி பின் பாதியில் சாமியார் ஆன கதை சொல்லவில்லையே.பாராட்டுக்கு நன்றி.

    @ ரூபன்
    வருகைதந்து பாராட்டியதற்கு நன்றி.

    @ ரமணி.
    இந்த யுக்தி ரசிக்கப் படுகிறது என்று தெரிகிறது. வருகைக்கும் வாழ்த்துகும் நன்றி.

    ReplyDelete
  16. கதை நேர்த்தியாக அமைந்துள்ளது பாராட்டுக்கள்.

    ReplyDelete