Friday, June 13, 2014

சுபாஷிதம் அல்லது நன்மொழிகள்


                                  சுபாஷிதம் அல்லது நன்மொழிகள்.
                                  -----------------------------------------------  


பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கலாம்? தலைப்பின் மூலம் வாசகர்களைக் கவர முடியுமா? வாசகர்களைக் கவர்வதா நோக்கம்? உனக்குத் தெரிந்ததை உன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள். அனுபவங்களைப் படிக்கும் போது சிறு கதை படிப்பது போல் இருந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் பாதகமில்லை. பத்து கட்டளைகள் என்று தலைப்பிட்டால் இவன் யார் நமக்குக் கட்டளையிட என்று பதிவைச் சீந்தாமலே போகலாம் பத்து அறிவுரைகள் என்று தலைப்பிட்டாலும் எழுதுபவன் உயர்ந்த நிலையில் இருக்கும் தோற்றமளிக்கும்  இருந்தாலும் ஒரு தலைப்பு வேண்டுமே. நான் கற்றவற்றையும் என் மக்களுக்குக் கற்பிக்க முயன்றதையும் கூறும் இப்பதிவு சுபாஷிதம் அல்லது நன்மொழிகள் என்று இருந்தால் தவறாய் இருக்காது என்று நம்புகிறேன்

நம்மைச் சுற்றிலும் எண்ணற்ற நிகழ்வுகள் நடக்கின்றன, சிலவற்றை அடியோடு மாற்ற வேண்டும் போல் இருக்கும் . மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும் ஆனால் மாற்றக் கூடியவற்றை மாற்றும் உறுதி வேண்டும். மாற்ற முடியாதது எது மாற்றக் கூடியது எது என்று பிரித்து அறிந்து கொள்ளும் திறன் வேண்டும்                                                                 
நாம் பேசும் வார்த்தைகளில் நமக்குக் கட்டுப்பாடு வேண்டும்.பேசாத வார்த்தைகளுக்கு நாம் எஜமான் . பேசிய வார்த்தைகளுக்கு நாம் அடிமை. பேசப்பட்ட வார்த்தைகளை மீட்டு எடுக்க முடியாது ஆனால் நடப்பது என்னவென்றால் அதிகமாகத் தவறுதலாகத் திறக்கப் படுவது வாயே..
             
இன்றென்பது நேற்றைய திட்டமிடப்படாத நாளை .நாளை என்ற ஒன்றே நிச்சயமில்லை என்றும் இன்றையப் பொழுதை நலமாகச் செலவிட வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டாலும் திட்டமிடப்படாத வாழ்க்கை சுவைக்காது. நல்லதே நடக்கும் என்ற எண்ணமே திட்டமிடுதலின் ஆதாரம் என் தந்தை எனக்குக் கூறிய அறிவுரை நல்லது நடக்கும் என்று நம்பு. அல்லது நடந்தாலும் ஏற்கத் தயாராய் இரு Hope for the best and be prepared for the worst ஆகவே எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும் .திட்டமிட்டதைச் செய்ய வேண்டும்

வாழ்வில் குறிக்கோள் என்று ஒன்று இருக்கவேண்டும் அந்தக் குறிக்கோளும் உயர்ந்ததாக இருத்தல் வேண்டும் என் மக்களிடம் நான் கூறுவது உன் குறிக்கோள் நட்சத்திரத்தை எட்டுவதாக இருக்கட்டும் முயற்சி செய்யும்போது குறைந்த பட்சம் மர உச்சியையாவது அடையலாம் உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவிருந்தாகுமா என்றுஒரு சொல் வழக்கில் உண்டு, அது நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளத்தான் வழிவகுக்கும்  பருந்துகள் மிக உயரத்தில் பறக்கின்றன ஏன் என்றால் அவை தம்மால் முடியும் என்று நம்புகின்றன.

என்னதான் திட்டமிட்டாலும் தன் திறமையில் நம்பிக்கை வைத்தாலும் கடின உழைப்பின்றி அவை சாத்தியமாகாது கடின உழைப்புக்கு மாற்று இல்லை மனிதன் ஒரு தனித்தீவாக இயங்க முடியாது அடுத்தவன் என்று ஒருவன் எப்போதும் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளரை தன் முதலாளி போன்று நினைக்க வேண்டும் என்பார்கள். நம்மை அடுத்தவன் எவ்வாறு நடத்தவேண்டும் என்று விரும்புகிறோமோ, அதேபோல் அடுதவரையும் நாம் நடத்த் வேண்டும் தன்னை தனக்கு மேலிருப்பவன் எவ்வாறு நடத்த வேண்டும் என்று விரும்புகிறோமோ அதேபோல் நமக்குக் கீழ் இருப்பவரையும் நாம் பாவிக்க வேண்டும்
எதுவும் செய்யாது இருப்பவர்கள் செய்யும் பணியில் அவர்களை அர்ப்பணித்துக் கொண்டால் சும்மா இருப்பது என்ற ஒன்றே இருக்காது. செய்யும்பணியின் மேல் காதல் கொள்ள வேண்டும் செய்யும் பணி எதுவாயிருந்தாலும் அதில் முதன்மையாக இருக்க விரும்பவேண்டும் தோட்டி வேலை செய்தாலும் தோட்டிகளில் சிறந்தவனாய் இருக்க வேண்டும்
இருந்த நாட்களை விட வர இருக்கும் நாட்களை சிறப்பாக்கிக் கொள்ளலாம் என்னுடைய மேற்கூறிய நன்மொழிகளின்படி நடந்தால் என்று கூறிக் கொள்கிறேன்
என்னை இப்பதிவை எழுதத் தூண்டிய வாசகங்களை உங்களுடன் பகிர்கிறேன்

1) Give us the serenity, to accept what can not be changed, courage to change that which should be changed, and wisdom to know one from the other
.
2.) Nothing is opened more often by mistake than the mouth
3.) Today is the tomorrow you didn’t plan for yesterday.

4.) Plan your work and work your plan

5.) Aim at the stars then atleast you can reach the tree top

6.) They fly high because they think they can

7.) There is no substitute for hard work

8.) What a man dislikes in his superiors, let him not display in his treatment to his inferiors  
      
9.)   Work is the refuge of people who have nothing better to do

10.)  In those days , he was wiser than he is now;;he used to frequently take my advice






     


31 comments:

  1. அன்பு ஐயா.

    வணக்கம். மிகவும் அழகான அருமையான அனுபவப் பதிவு.

    //என்னை இப்பதிவை எழுதத் தூண்டிய வாசகங்களை உங்களுடன் பகிர்கிறேன்//

    இத்துடன், எனக்கு தெரிந்த ஒரு வாக்கியதையும் கூறுகிறேன்.

    "SPEAK ONLY WHEN YOUR WORDS ARE BETTER THAN YOUR SILENCE"...

    பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  2. முதலாவதைப் படிக்கும்போது பாலும் பழமும் பாடல் வரிகளான 'சொல்லாத சொல்லுக்கு விலையேதும்' என்கிற கவிஞரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

    ReplyDelete
  3. அதிகமாக தவறுதலாகத் திறக்கப்படுவது வாயே.... மிகமிகச் சரியான வார்த்தைகள். அனைத்துமே ரசிக்க வைதததுடன் மனதில் கொள்ள வேண்டியவைகளாகவும் இருக்கின்ற்ன. மிகப் பயனுள்ள பகிர்வு ஐயா. ந்ன்றி.

    ReplyDelete
  4. பத்தாவது அறிவுரை என்னைக் கவர்ந்தது. ஒட்டுமொத்த மனித மனத்தின் பிரதிபலிப்பு.

    ReplyDelete
  5. நன்மொழிகள் தலைப்பில் உங்களை பதிவெழுத தூண்டிய வாசகங்களை விட உங்கள் வாசகங்கள் அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அருமையான வாசகங்கள்... சொல்லப்பட்ட அனைத்திற்குமே குறள்கள் உண்டு ஐயா...

    ReplyDelete
  7. அருமையான வாசகங்கள் ஐயா
    நன்றி

    ReplyDelete

  8. @ இல.விக்னேஷ்
    வருகைக்கு நன்றி. கொசுறாக இன்னொன்று. He is a great poet when he is silent...!

    ReplyDelete

  9. @ ஸ்ரீராம்
    அது இரண்டாவது என்றிருக்க வேண்டுமோ. . முதலாவது மாற்றங்கள் குறித்தது. வருகைக்கு நன்றி

    ReplyDelete

  10. @ பால கணேஷ்.
    ஒருமுறை விஜய் டீவி நீயாநானாவில் வார்த்தைகள் என்னும் தலைப்பில் ஒரு நிகழ்ச்சி இருந்தது. என்னை அதே தலைப்பில் பதிவு எழுத வைத்தது. அதில் வார்த்தைகளின் வெளிப்பாடு குறித்து எழுதி இருந்தேன் .வருகைக்கு நன்றி

    ReplyDelete

  11. @ டாக்டர் கந்தசாமி.
    நம் போன்றோரின் புலம்பலே அதுதானே.வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  12. @ வே.நடனசபாபதி
    வாசகங்களைமட்டும் எழுதி விட்டிருக்கலாம். என் பங்குக்கு என்று அதை விளக்கி எழுதினேன். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  13. @ திண்டுக்கல் தனபாலன்
    நன் மொழிகள் பல இடங்களில் பலராலும் கையாளப் படுவது. தமிழின் முன்னோடி நூலான திருக்குற்ளில் இருப்பதை பகிர்ந்திருந்தால் பலரும் பயன் பெற்றிருப்பார்கள் அல்லவா.?வருகைக்கு நன்றி

    ReplyDelete

  14. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  15. வழக்கம்போலவே அருமையான கருத்துக்களை தாங்கி வரும் பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. அருமையான கருத்துக்கள். பல சமயங்களில் வாயைத் திறக்காமல் இருந்தாலும் திறக்கவேண்டிய நேரத்தில் திறக்கவில்லை எனில் அதுவும் சரியில்லை தான். :) இப்படிப் பலரைப் பார்த்த அனுபவம் தான்!

    ReplyDelete

  17. @ டி.பி.ஆர்.ஜோசப்
    வழக்கம் போலவே பாராட்டி எழுதும் பின்னூட்டத்துக்கு நன்றி சார்.

    ReplyDelete

  18. @ கீதா சாம்பசிவம்
    திறக்க வேண்டிய நேரத்தில் திறக்காமல் தவறாக அதிகமாகத் திறப்பது வாயே. அனுபவங்களின் வெளிப்பாடே நன் மொழிகள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  19. ஒவ்வொரு பொன்மொழியும் ஒரு முக்கியமான கருத்தை முன்வைக்கிறது. இவ்வாறான பழமொழிகளில் சிலவற்றை வாழ்வில் கடைபிடிக்க பிடிக்கவேண்டியது அவசியம். நன்றி.

    ReplyDelete

  20. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    ஒவ்வொரு பொன்மொழியுமனுபவங்களின் விளைவே/சிலவற்றைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்/சிலவற்றை..?
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  21. அருமையான பதிவு
    அனுபவங்களில் கண்டு உணர்ந்ததை மிகச் சுருக்கி
    அனைவருக்கும் பயன்படும்படியாக
    இப்படி ஒரு பதிவை உங்களிடம்
    வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்தேன்
    பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete

  22. @ ரமணி
    வருகைக்கும் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  23. அன்புள்ள எழுபதுவயது மின்னலே..

    வணக்கம்.

    நீண்ட நாட்களாகிவிட்டனவா அதனால் கொஞ்சம் விரிவாகப் பேசலாம் என்றுதான்.

    உண்மையில் பொறாமையாக இருக்கிறது. இந்த வயதில் ஒரு மின்னலைப் போல இயங்குகிறீர்கள் (என் கண் பட்டுவிடப்போகிறது. அம்மாவிடம் சொல்லி சுற்றிப்போடச் சொல்லுங்கள்)

    இளமை. பளிச். நொடியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுப் போவது மின்னலின் இயல்பு. உங்களின் பதிவுகளும் அப்படித்தான். ஒவ்வொன்றும் ஒரு தரத்தோடு இயங்
    ககின்றன. பொறுமையாக இத்தனை வரிகள் எழுதுகிறீரகள். ஒன்றுகூட அலுப்புகூட்டவில்லை.

    மாறுபட்ட பதிவுகள். நீங்கள் உங்கள் இளம் வயதிலிருந்தே இப்படியொரு வலைப்பக்கத்தைத் திறந்திருந்தால் எண்ணற்ற தமிழின்
    பக்கங்கள் கிடைத்திருக்கும். எத்தனை அனுபவம். பிரமிப்பாக உள்ளது. அதைவிட அதனைக் கூர்ந்து கவனத்தில் மனஏட்டில் எழுதிப் பாதுகாத்து நினைவாற்றலோடு ஐயா
    எழுதுங்கள் ஐயா. எத்தனையோ சோம்பேறி இளைஞர்களை உசுப்பிவிடும் புயல்காற்று நீங்கள்.
    நிறையக் கற்றுக்கொள்ளலாம் உங்கள் பதிவுகளைக் காணும்போது. எழுதுங்கள்.எழுதிக்கொண்டேயிருங்கள்.ஆற்றலாக இருக்கிறது உங்கள் எழுத்து. எளிமையாக இருக்கிறது. அருகிருந்து ஒரு குழந்தைக்கு சோறு ஊட்டுவதைப்போல எங்களுக்குச் சொல்கிறிர்கள். ஒரு அன்பு பெருகி
    நிற்கிறது உங்கள் பதிவை நான் உள்வாங்கும்போது. எனக்கு மனதுக்குள் ஒரு பரவசம் நிறைகிறது. மரியாதை தெரிகிறது. எனக்குள் நான் பதிய வேண்டிய நிகழ்வுகளைத் தொகுத்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒரு பொறுப்புணர்ச்சியை அதிகப்படுத்துகிறேன். காரணம் உங்களின் பதிவுகள்.

    இனி முடிந்தவரை தொடர்ந்து இயங்குவேன்.

    வாழ்க வளத்துடன்.
    எழுதுங்கள் இந்த சமூகம் விழிப்பும் விவேகமும் பெறட்டும்.

    நன்றிகள் பல

    மறுபடியும வருவேன்.

    ReplyDelete
  24. பதிவெழுதத் தூண்டிய வாசகங்களும் அவை தங்கள் வாழ்நாளில் பயன்பட்ட, அவற்றை தாங்கள் பயன்படுத்திய வாழ்க்கை அனுபவங்களும் சிந்தனைத் தூண்டல்கள். நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது தங்களுடைய ஒவ்வொரு பதிவின் மூலமும். மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete

  25. @ ஹரணி
    பேஷ் பேஷ் என்ற உங்கள் புகழ் வார்த்தைகளைப் படிக்கும் போது “நான் இதை ,இதைத்தான் எதிர்பார்த்தேன் “என்று சொன்னால் தவறாகாது. பலமுறை சொல்லி இருக்கிறேன் தங்களைப் போன்றோரின் பின்னூட்டங்களே என்னை எழுத வைக்கிறது ஒவ்வொரு பதிவும் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதும் என் நோக்கம். இந்தமாதிரிய பின்னூட்டங்கள் நான் இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்னும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உற்சாக மூட்டும் கருத்துரைகளுக்கு நன்றி, நன்றி நன்றி ஐயா.

    ReplyDelete

  26. @ கீதமஞ்சரி
    என் பதிவு சிந்தனைகளைத் தூண்டுகிறது என்பது கேட்க மகிழ்ச்சி. தொடர்ந்து வந்து ஊக்கமூட்ட வேண்டுகிறேன் நன்றி மேடம்

    ReplyDelete
  27. ஐயா இது ஒரு அருமையான மனதில் பதிய வைக்க வேண்டிய ஒரு பதிவு ஐயா! நாவடக்கம் என்பதும், அவை அடக்கம் என்பதும் மிக மிக அவசியம் இவை எல்லாம் personality development க்கு அவசியமான ஒன்று! தங்களின் இந்தப் பதிவு எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்தன...எங்களைப் போன்ற சிறியவர்களுக்குத் தங்களைப் போன்ற பெரியவர்கள், அனுபவஸ்தர்கள் சொல்லும் அறிவுரைகள் எங்களை வழி நடத்திச் செல்ல மிகவும் உதவுகின்றன ஐயா!

    மிக்க மிக்க நன்றி ஐயா தங்களின் பகிர்வுக்கு!

    ReplyDelete
  28. உங்கள் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தவை உங்கள் அனுபவ மொழிகள்தான். ஏனெனில் ஏதேனும் பிரச்சினை வரும்போது, இரவினில் தூக்கம் இல்லாது இருக்கும்போது உங்களைப் போன்றவர்களது அனுபவங்களை கூகிளில் தேடிப் பிடித்து படிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த பதிவும் ஒரு வழிகாட்டல்.

    ஆரம்ப பத்தியில் நீங்கள் சொன்ன

    // பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கலாம்?//

    என்ற கருத்துக்கள் இன்றைய வலைப் பதிவரின் மனநிலைமையினை நன்கு சொல்கின்றன.

    ReplyDelete

  29. @ தி.தமிழ் இளங்கோ
    வலையில் எழுதுவது ஒரு வரப்பிரசாதமனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடிகிறதே. அந்த அனுபவ மொழிகள் இதம் தருபவையாக இருப்பது கேட்க மகிழ்ச்சி இளங்கோ சார்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  30. நல்லதே நடக்கும் என்ற எண்ணமே திட்டமிடுதலின் ஆதாரம் என் தந்தை எனக்குக்//

    நல்ல அறிவுரை.
    உங்கள் அனுபவ எழுத்துக்கள் எல்லோருக்கும் பயன்படும்.

    ReplyDelete

  31. @ கோமதி அரசு
    அனுபவ வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளேன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete