Tuesday, July 23, 2019

பாடல்களுக்கு இடையே பறவைக் குரல்கள்


தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
மரகதத் தோரணம்அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள்கவிபாட
செவ்விள நீரின்கண் திறந்து 
செம்மாதுளையின்மணி வாய் பிளந்து
முளைவிடும் தண்டில்கோலமிட்டு மூவருலா வந்த காலங்கள் போலே
தங்கரதம் வந்தது
மாங்கனிக் கன்னத்தில்தேனூற சிறு மைவிழிக்கிண்ணத்தில்மீன் ஆட
தேன் தரும் போதைகள்போராட
தேவியின்பொன் மேனி தள்ளாட ஆட
இருவரும்:- தங்கரதம் வந்தது

THANGA RATHAM VANTHATHU VEETHIYILEY - movie: Kalai Kovil (கலைக்கோயில்)



 இரு பாடல்களுக்கு நடுவே 
பறவைகளின் குரல் கேட்க கீழி ருக்கும் சுட்டியைச் ச்சொடுக்குங்கள்
This is absolutely amazing ! 
Enlarge the pictures & touch the birds, you can listen their tunes 🦜🦜🦜
Just enlarge the frame to see the birds clearly.

Touch ( *only !*, don’t press to long) any bird and you'll hear its call.

https://coneixelriu.museudelter.cat/ocells.php

Enjoy ! 🦜🦜🦜


இணையத்தில்   பிடித்த பாட்டைதேடுவது வழக்கம் அப்படித்தேடும்பாடல்களில்  பிடித்தது பாலமுரளி கிருஷ்ணவின் பாடல்கள்இரண்டு பிடித்த பாடல்களைப் பகிர்கிறேன்   அநேகமாக பலரும் கேட்ட மற்றும்பலருக்கும் பிடித்த பாடல்களே  பாடல்வரிகள் உதவலாம்   

ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா 
நான் பாட இன்றொரு நாள் போதுமா 
நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா
புது நாதமா சங்கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா  

ராகமா சுக ராகமா

கானமா தேவ கானமா 
என் கலைகிந்த திரு நாடு சமமாகுமா
என் கலைகிந்த திரு நாடு சமமாகுமா 
நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா

குழலென்றும் 
யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் 
அழியாத கலையென்று எனை பாடுவார்
எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் 
அழியாத கலையென்று எனை பாடுவார்
எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ 
எழுந்தோடி வருவாரன்றோ...எழுந்தோடி...தோடி...இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ 
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ....தர்பாரில் எவரும் உண்டோ.... 
எனக்கிணையாக  தர்பாரில் எவரும் உண்டோ 
கலையாத மோகன சுவை நானன்றோ மோகன சுவை நானன்றோ 
மோகனம்....
கலையாத மோகன சுவை நானன்றோ
கானடா .....என் பாட்டு தேனடா 
இசை தெய்வம் நானடா   








                                                 ...







   
        






27 comments:

  1. நன்றி ஐயா
    இதோ இணைப்பிற்குச் செல்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. சென்று பார்த்தீர்களா

      Delete
  2. இரண்டாவது காணொளிப்பாடல் அற்புதம் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. என் ரசனை பலரோடு ஒத்துப்போவது மகிழ்ச்சியே

      Delete
  3. இருபாடல்களும் பலமுறை கேட்டுள்ளேன்...

    பறவைகளின் குரல் - WhatsApp-இல் ஒருமுறை வந்தது...

    ReplyDelete
    Replies
    1. பலமுறை கேட்டு ரசிக்கும் படல்களே அவை பறவைகளின் குரல் எனக்கு வாட்ஸாப்பில் வந்ததே யான்பெற்றபேறு பெருக இவ்வையகம்

      Delete
  4. ஒரு நாள் போதுமா..எத்தனை முறை கேட்டாலும் இன்பமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் ரசிக்கும் பாடல்தான் சார்

      Delete
  5. இரண்டு பாடல்களும் கேட்டுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. கேட்டுள்ள பாடல்களை இன்னும் ரசிக்க முடியும்

      Delete
  6. பறவைகளின் குரல் ஃபேஸ்புக்கில் வந்திருக்கிறது. இந்தப் பாடல்கள் எல்லாம் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு வாட்ஸாப்பில் வந்தது ரசித்தீர்கள்தானே

      Delete
  7. உங்களுக்கும் இப்படிப் பழைய பாடல்வரிகளைத் தேடும் வழக்கமுண்டா!

    பாலமுரளியின் அந்தப் பாடல் கேட்க ஆனந்தமானது. கூடவே, டி ஆர் மகாலிங்கம் பாடிய ‘இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை.. நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை..’ எனும் பாடலும் நினைவுக்கு வருகிறது. திருவிளையாடல், பாடல்களினால் ரசிகர்களை மீண்டும் மீண்டும் ஈர்த்த படம். கண்ணதாசன் /கே வி மகாதேவன் காம்பினேஷன்! எப்போது கேட்டாலும் சலிக்காத வரிகள், இசை, குரல்கள் .. திறமையான நடிப்பும் கலந்த கலைக்கலவை அது.

    இப்போதும் வருகின்றனவே படங்கள். நினைத்தாலே புளிக்கும்..

    ReplyDelete
    Replies
    1. அடிக்கடி நினைவுக்கு வரும்பாடல்களை கேட்க தேடுவது உண்டு

      Delete
  8. உம்...அந்தக் காலத்து மனிதர்களின் ரசனையே தனிதான்...!

    ReplyDelete
    Replies
    1. எல்லா காலத்து மனிதர்களும் ரசிக்கும் பாடல்கள்தான் சார் வெகு நாட்களாக நீங்கள் வருவது அரிதாயிருக்கிறது

      Delete
  9. நான் இன்று வரையிலும் பழைய பாடல்களை மகள்களிடம் பாடிக் காட்டுவதுண்டு. காதை பொத்திக் கொண்டு ஓடுகின்றார்கள். அந்தப் பாடல்கள் வரிகளோடு பாட முடிகின்றது. புதிய பாடல் வரிகள் மண்டையில் ஏறுவதே இல்லை. இந்தப் பாடலை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது பல ஆச்சரியங்களை கவனித்துள்ளேன். பழைய படங்கள் பெரும்பாலும் ஒரே ஷாட்டில் தொடர்ந்து மூன்று நிமிடங்கள் வரைக்கும் கேமரா கோணம் மாறாமல் நடிகரின் மொத்த நடிப்பையும் உள்வாங்கும். இப்போது அப்படி அல்ல. ஒரு பெரிய காட்சி என்பது இரண்டரை நிமிடம் தான் என்று வரையறை வைத்துளார்கள். அதற்குள் பத்து விதமான ஷாட்கள். மாறிவிட்டது. எல்லாமே.

    ReplyDelete
    Replies
    1. /பழைய பாடல்களை மகள்களிடம் பாடிக் காட்டுவதுண்டு. காதை பொத்திக் கொண்டு ஓடுகின்றார்கள்./ எனக்கும் பாடல்களைப் பாடும் வழக்கம் இருந்ததுபொதுவாக பிள்ளைகள் பெற்றோர்பாடலைரசிப்பது இல்லை சினிமாத்துறை மிகவும் மாறி விட்டது இப்போது பாகவதர் காலப் படங்கள் நகர்வது மிகவும் மெல்ல இந்தக் காலம் அவசரக்காலம்

      Delete
  10. இரண்டுமே நல்ல பாடல்கள். பாலமுரளியின் குரலில் அது அற்புதமான பாடல்.

    ReplyDelete
  11. ஒரு நாள் போதுமா? (பால முரளி கிருஷணா)
    இசைத்தமிழ நீ செய்த அரும் சாதனை..(டி ஆர் மஹாலிங்கம்)
    பாட்டும் நானே (டி எம் எஸ்)

    மூனு பாடல்களும் அடுத்தடுத்து வரும். ஒரு நாள் போதுமாதான் பெஸ்ட்..

    திருவிளையாடல் என்னும் படைப்பு, எ பி நாகராஜனின் சிறப்பான தமிழ்த் தொண்டு னு சொல்லுவேன். :)

    ReplyDelete
    Replies
    1. நல்ல பாடல்கள் எங்கும் ரசிக்கப்படும்

      Delete
  12. ***This is absolutely amazing ! **

    100% agreed! It is indeed! I am a bird lover! :) Thanks Sir

    ReplyDelete
    Replies
    1. பறவைகள் பற்றிய செய்திகளை வெகு சாதாரணமாக வாட்ஸாப்பில் வந்தது எறு கடப்பவர்கள்மத்தியில்ஒரு பறவைப்பிரியரை ஆர்னிதாலஜிஸ்ட் என்று சொல்லலாமா காண்பதில் மகிழ்ச்சி

      Delete
  13. பாடல்கள் பிடித்த பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன்.
    பறவைகள் ஒலிகளை முன்பு கேட்டு இருக்கிறேன்.
    இங்கும் கேட்டு மகிழ்ந்தேன்.

    என் அப்பாவிற்கு பிடித்த பாடல்கள் இரண்டும்.
    ஒரு நாள் போதுமா பாடல் மிகவும் பிடிக்கும் அப்பாவிற்கு.
    எனக்கும் மிகவும் பிடிக்கும்.

    இதில் நடிக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் பாத்திரங்கள் அறிந்து அழகாய் முகபாவங்கல் காட்டி ந்டித்து இருப்பார்கள்.

    ReplyDelete
  14. பறவைகளின் ஒலி உங்களை நினைத்தேபதிவிட்டது பாடல்கள் நல்லபாவத்தோடு நடிக்கப்பட்டும் படமாக்கப் பட்டும் இருக்கின்றன

    ReplyDelete
  15. மிகவும் பிடித்த பாடல்கள் சார். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள்.

    பறவைகளின் ஒலி எனக்கும் வந்தது நீங்களும் எனக்கு அனுப்பியிருந்தீங்க வாட்சப்பில். மிகவும் ரசித்த விஷயம் பறவைகளின் குரல்...

    கீதா

    ReplyDelete
  16. பாட்ல்களைக்கேட்கும்போது அதில் ஒன்ற நமக்கும் தெரிந்த பாடலாய் இருக்க வேண்டும்பலரும் கேட்டிராதபாடலை இணைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை மேலும் பகிர்ந்தபாடல்கள் பெயர் பெற்றவை

    ReplyDelete