எழுதிய்து நானா...
---------------------
இந்தப் பதிவை என் எழுத்துக்களின்ஒரு சுய மதிப்பீடு என்று
கூறலாம்..நான் எழுதியவற்றை பிறர் படித்து அவரவர் ஏதோ
அபிப்பிராயம் கொண்டிருக்கலாம்.இருந்தாலும் என் எழுத்து
பற்றிய என் கணிப்பு இது.
என் உறவினர் பலருக்குத் தமிழ் எழுதப் படிக்கத்தெரியாது
என்ற நிலையில் நான் சென்ற வீட்டின் உறவினர் ஒருவருக்கு
தமிழ் எழுதப் படிக்கத் தெரியும் என்று அறிந்தபோது மகிழ்வுடன்
நான் வலையில் தமிழில் பதிவிடுகிறேன் என்றும்,நான்
சாதாரணன் ராமாயணம் என்ற ஒரு பதிவு ஒரே வாக்கியத்தில்
எழுதி இருக்கிறேன் என்றும் கூறிப் படித்துப் பார்க்கச் சொன்னேன்.
“ ஒரே வாக்கியத்தில் ராமாயணமா.. எங்கே சொல்லு பார்க்கலாம்”
என்றார். அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை உறைத்தது.நான்
எழுதியது எனக்கு நினைவிருக்கவில்லை.வீட்டிற்கு வந்து
படித்துப் பார்த்தேன்.அது எனக்கே ஒரு பெருமித உணர்வைக்
கொடுத்தது.ஆர்வத்தால் உந்தப் பட்டு சில நாட்கள் அதற்காக
மெனக்கெட்டு எழுதியது.இப்போது அது மாதிரி எழுத முடியுமா
என்பது சந்தேகமே.அப்போதுதான் இன்னுமொன்று புரிந்தது.என்
நண்பன் ஒருவன் என் பதிவுகள் சிலவற்றைப் படித்துவிட்டு
இதையெல்லாம் நீ எழுதினாயா, இல்லை உன்னுள் இருந்து
ஏதாவது குறளி எழுத வைக்கிறதா என்று கேட்டான். சில
பதிவுகளைப் படிக்கும்போது எனக்கே அம்மாதிரி தோன்றுவது
உண்டு.இதெல்லாம் நான் எழுதியதா,இன்னொரு முறை இதைப்
போல் எழுத முடியுமா என்றும் தோன்றுகிறது.
எனக்குச் சில ஆதங்கங்கள் இளவயதிலிருந்தே உண்டு. எதுவும்
செய்ய முடியாத கையாலாகாத்தனத்தினால் மனம் வருந்தியதும்
உண்டு.அதற்கு சில வடிகால்கள் வேண்டும். எழுதுவதன் மூலம்
சிலவற்றை வெளிப் படுத்துகிறேன்.என் பதிவுகள் பல தலைப்பு
களில் இருக்கும். முக்கியமாக மக்களின் ஏற்ற தாழ்வு பற்றிய
சிந்தனைகள் அவற்றுக்கான காரணங்களைக் காண முயல்வதும்
ஆக இருக்கும். இது சற்றுக் கூடுதலாக இருக்கும்போது
தேடுதலாக வெளிப்படும்.
என்னைப் போல் வயதானவர்களுக்கு அந்தக் காலத்தையும் இந்த
காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது.எதையும்
எதிர்மறையாகச் சிந்திக்கும் பலரைப் பார்க்கிறேன்.என்னைப்
பொருத்தவரை நம் வளர்ச்சி நிச்சயமாக இருக்கிறது.ஆனால்
எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும்போது அளவீடு எதிர்மறை
யாக இருக்கிறது.
நான் இதுவரை எழுதும்போது என் கருத்துக்களைக் கூறி, மற்றவர்
அதிலிருந்து மாறுபட்டு இருக்கலாம் என்றும் சொல்லி
இருக்கிறேன். எது எப்படி இருந்தாலும் கருத்துக்களும் வேறுபாடு
களும் உணர்த்தப் பட்டால்தான் தெரிய வருகிறது.வலையில்
அதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் அது அங்ஙனம்
நடைபெறுகிறதா என்றால் சந்தேகமே.
கதை கவிதை கட்டுரை எதிலும் ஏதாவது கருத்திருக்க வேண்டும்
என்று நம்புகிறவன் நான். மேலும் நான் எழுதும்போது, அந்தக்
கருத்து என் உள்ளத்தைப் பிரதிபலிப்பதாக இருப்பது ஆச்சரியம்
இல்லை.குறிப்பாகக் கதைகள் எழுதும்போது நிகழ்வுகளை
சொல்லிப் போகையில் ஆங்காங்கே என் கருத்துக்களும்
ஊடுருவி நிற்கும். அதைத் தெரியப் படுத்தவே கதை, கவிதை
கட்டுரை என்று நினைப்பவன் நான். ஏதாவது ஒரு கருத்து பற்றி
எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தால் பேனா பிடிப்பேன்.
பிறகு வந்து விழும் எழுத்துக்களும் கருத்துக்களும் உள்ளத்தில்
இருந்து வருவதே. இப்போது நான் எழுதுவதும் ஒரு உந்துதலால்
நிகழ்வதே. எல்லோருடைய உள்ளங்களிலும் சில கருத்துக்கள்
இருக்கலாம்.மற்றவருக்கு இது இப்படி இருந்திருக்கலாம் இது
இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணம் வரலாம்.ஆனால்
என் எழுத்தில் வருவது என் எண்ணங்கள்தானே.
இதுவும் நான் எழுதுவதா இல்லை என்னுள் இருந்து ஏதாவது
குறளி எழுத வைக்கிறதா தெரிய வில்லை. ஆனால் ஒன்று ,
எனக்கு எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது.அதைப் புரிந்து
படிப்பதற்கு வாசகர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையும்
இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------
---------------------
இந்தப் பதிவை என் எழுத்துக்களின்ஒரு சுய மதிப்பீடு என்று
கூறலாம்..நான் எழுதியவற்றை பிறர் படித்து அவரவர் ஏதோ
அபிப்பிராயம் கொண்டிருக்கலாம்.இருந்தாலும் என் எழுத்து
பற்றிய என் கணிப்பு இது.
என் உறவினர் பலருக்குத் தமிழ் எழுதப் படிக்கத்தெரியாது
என்ற நிலையில் நான் சென்ற வீட்டின் உறவினர் ஒருவருக்கு
தமிழ் எழுதப் படிக்கத் தெரியும் என்று அறிந்தபோது மகிழ்வுடன்
நான் வலையில் தமிழில் பதிவிடுகிறேன் என்றும்,நான்
சாதாரணன் ராமாயணம் என்ற ஒரு பதிவு ஒரே வாக்கியத்தில்
எழுதி இருக்கிறேன் என்றும் கூறிப் படித்துப் பார்க்கச் சொன்னேன்.
“ ஒரே வாக்கியத்தில் ராமாயணமா.. எங்கே சொல்லு பார்க்கலாம்”
என்றார். அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை உறைத்தது.நான்
எழுதியது எனக்கு நினைவிருக்கவில்லை.வீட்டிற்கு வந்து
படித்துப் பார்த்தேன்.அது எனக்கே ஒரு பெருமித உணர்வைக்
கொடுத்தது.ஆர்வத்தால் உந்தப் பட்டு சில நாட்கள் அதற்காக
மெனக்கெட்டு எழுதியது.இப்போது அது மாதிரி எழுத முடியுமா
என்பது சந்தேகமே.அப்போதுதான் இன்னுமொன்று புரிந்தது.என்
நண்பன் ஒருவன் என் பதிவுகள் சிலவற்றைப் படித்துவிட்டு
இதையெல்லாம் நீ எழுதினாயா, இல்லை உன்னுள் இருந்து
ஏதாவது குறளி எழுத வைக்கிறதா என்று கேட்டான். சில
பதிவுகளைப் படிக்கும்போது எனக்கே அம்மாதிரி தோன்றுவது
உண்டு.இதெல்லாம் நான் எழுதியதா,இன்னொரு முறை இதைப்
போல் எழுத முடியுமா என்றும் தோன்றுகிறது.
எனக்குச் சில ஆதங்கங்கள் இளவயதிலிருந்தே உண்டு. எதுவும்
செய்ய முடியாத கையாலாகாத்தனத்தினால் மனம் வருந்தியதும்
உண்டு.அதற்கு சில வடிகால்கள் வேண்டும். எழுதுவதன் மூலம்
சிலவற்றை வெளிப் படுத்துகிறேன்.என் பதிவுகள் பல தலைப்பு
களில் இருக்கும். முக்கியமாக மக்களின் ஏற்ற தாழ்வு பற்றிய
சிந்தனைகள் அவற்றுக்கான காரணங்களைக் காண முயல்வதும்
ஆக இருக்கும். இது சற்றுக் கூடுதலாக இருக்கும்போது
தேடுதலாக வெளிப்படும்.
என்னைப் போல் வயதானவர்களுக்கு அந்தக் காலத்தையும் இந்த
காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது.எதையும்
எதிர்மறையாகச் சிந்திக்கும் பலரைப் பார்க்கிறேன்.என்னைப்
பொருத்தவரை நம் வளர்ச்சி நிச்சயமாக இருக்கிறது.ஆனால்
எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும்போது அளவீடு எதிர்மறை
யாக இருக்கிறது.
நான் இதுவரை எழுதும்போது என் கருத்துக்களைக் கூறி, மற்றவர்
அதிலிருந்து மாறுபட்டு இருக்கலாம் என்றும் சொல்லி
இருக்கிறேன். எது எப்படி இருந்தாலும் கருத்துக்களும் வேறுபாடு
களும் உணர்த்தப் பட்டால்தான் தெரிய வருகிறது.வலையில்
அதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் அது அங்ஙனம்
நடைபெறுகிறதா என்றால் சந்தேகமே.
கதை கவிதை கட்டுரை எதிலும் ஏதாவது கருத்திருக்க வேண்டும்
என்று நம்புகிறவன் நான். மேலும் நான் எழுதும்போது, அந்தக்
கருத்து என் உள்ளத்தைப் பிரதிபலிப்பதாக இருப்பது ஆச்சரியம்
இல்லை.குறிப்பாகக் கதைகள் எழுதும்போது நிகழ்வுகளை
சொல்லிப் போகையில் ஆங்காங்கே என் கருத்துக்களும்
ஊடுருவி நிற்கும். அதைத் தெரியப் படுத்தவே கதை, கவிதை
கட்டுரை என்று நினைப்பவன் நான். ஏதாவது ஒரு கருத்து பற்றி
எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தால் பேனா பிடிப்பேன்.
பிறகு வந்து விழும் எழுத்துக்களும் கருத்துக்களும் உள்ளத்தில்
இருந்து வருவதே. இப்போது நான் எழுதுவதும் ஒரு உந்துதலால்
நிகழ்வதே. எல்லோருடைய உள்ளங்களிலும் சில கருத்துக்கள்
இருக்கலாம்.மற்றவருக்கு இது இப்படி இருந்திருக்கலாம் இது
இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணம் வரலாம்.ஆனால்
என் எழுத்தில் வருவது என் எண்ணங்கள்தானே.
இதுவும் நான் எழுதுவதா இல்லை என்னுள் இருந்து ஏதாவது
குறளி எழுத வைக்கிறதா தெரிய வில்லை. ஆனால் ஒன்று ,
எனக்கு எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது.அதைப் புரிந்து
படிப்பதற்கு வாசகர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையும்
இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------