எண்ணங்கள் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணங்கள் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

எழுதியது நானா........

              எழுதிய்து நானா...
                ---------------------

இந்தப் பதிவை என் எழுத்துக்களின்ஒரு சுய மதிப்பீடு என்று
கூறலாம்..நான் எழுதியவற்றை பிறர் படித்து அவரவர் ஏதோ
அபிப்பிராயம் கொண்டிருக்கலாம்.இருந்தாலும் என் எழுத்து
பற்றிய என் கணிப்பு இது.

என் உறவினர் பலருக்குத் தமிழ் எழுதப் படிக்கத்தெரியாது
என்ற நிலையில் நான் சென்ற வீட்டின் உறவினர் ஒருவருக்கு
தமிழ் எழுதப் படிக்கத் தெரியும் என்று அறிந்தபோது மகிழ்வுடன்
நான் வலையில் தமிழில் பதிவிடுகிறேன் என்றும்,நான்
சாதாரணன் ராமாயணம் என்ற ஒரு பதிவு ஒரே வாக்கியத்தில்
எழுதி இருக்கிறேன் என்றும் கூறிப் படித்துப் பார்க்கச் சொன்னேன்.
“ ஒரே வாக்கியத்தில் ராமாயணமா.. எங்கே சொல்லு பார்க்கலாம்”
என்றார். அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை உறைத்தது.நான்
எழுதியது எனக்கு நினைவிருக்கவில்லை.வீட்டிற்கு வந்து
படித்துப் பார்த்தேன்.அது எனக்கே ஒரு பெருமித உணர்வைக்
கொடுத்தது.ஆர்வத்தால் உந்தப் பட்டு சில நாட்கள் அதற்காக
மெனக்கெட்டு எழுதியது.இப்போது அது மாதிரி எழுத முடியுமா
என்பது சந்தேகமே.அப்போதுதான் இன்னுமொன்று புரிந்தது.என்
நண்பன் ஒருவன் என் பதிவுகள் சிலவற்றைப் படித்துவிட்டு
இதையெல்லாம் நீ எழுதினாயா, இல்லை உன்னுள் இருந்து
ஏதாவது குறளி எழுத வைக்கிறதா என்று கேட்டான். சில
பதிவுகளைப் படிக்கும்போது எனக்கே அம்மாதிரி தோன்றுவது
உண்டு.இதெல்லாம் நான் எழுதியதா,இன்னொரு முறை இதைப்
போல் எழுத முடியுமா என்றும் தோன்றுகிறது.

எனக்குச் சில ஆதங்கங்கள் இளவயதிலிருந்தே உண்டு. எதுவும்
செய்ய முடியாத கையாலாகாத்தனத்தினால் மனம் வருந்தியதும்
உண்டு.அதற்கு சில வடிகால்கள் வேண்டும். எழுதுவதன் மூலம்
சிலவற்றை வெளிப் படுத்துகிறேன்.என் பதிவுகள் பல தலைப்பு
களில் இருக்கும். முக்கியமாக மக்களின் ஏற்ற தாழ்வு பற்றிய
சிந்தனைகள் அவற்றுக்கான காரணங்களைக் காண முயல்வதும்
ஆக இருக்கும். இது சற்றுக் கூடுதலாக இருக்கும்போது
தேடுதலாக வெளிப்படும்.

என்னைப் போல் வயதானவர்களுக்கு அந்தக் காலத்தையும் இந்த
காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது.எதையும்
எதிர்மறையாகச் சிந்திக்கும் பலரைப் பார்க்கிறேன்.என்னைப்
பொருத்தவரை நம் வளர்ச்சி நிச்சயமாக இருக்கிறது.ஆனால்
எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும்போது அளவீடு எதிர்மறை
யாக இருக்கிறது.

நான் இதுவரை எழுதும்போது என் கருத்துக்களைக் கூறி, மற்றவர்
அதிலிருந்து மாறுபட்டு இருக்கலாம் என்றும் சொல்லி
இருக்கிறேன். எது எப்படி இருந்தாலும் கருத்துக்களும் வேறுபாடு
களும் உணர்த்தப் பட்டால்தான் தெரிய வருகிறது.வலையில்
அதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் அது அங்ஙனம்
நடைபெறுகிறதா என்றால் சந்தேகமே.

கதை கவிதை கட்டுரை எதிலும் ஏதாவது கருத்திருக்க வேண்டும்
என்று நம்புகிறவன் நான். மேலும் நான் எழுதும்போது, அந்தக்
கருத்து என் உள்ளத்தைப் பிரதிபலிப்பதாக இருப்பது ஆச்சரியம்
இல்லை.குறிப்பாகக் கதைகள் எழுதும்போது நிகழ்வுகளை
சொல்லிப் போகையில் ஆங்காங்கே என் கருத்துக்களும்
ஊடுருவி நிற்கும். அதைத் தெரியப் படுத்தவே கதை, கவிதை
கட்டுரை என்று நினைப்பவன் நான். ஏதாவது ஒரு கருத்து பற்றி
எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தால் பேனா பிடிப்பேன்.
பிறகு வந்து விழும் எழுத்துக்களும் கருத்துக்களும் உள்ளத்தில்
இருந்து வருவதே. இப்போது நான் எழுதுவதும் ஒரு உந்துதலால்
நிகழ்வதே. எல்லோருடைய உள்ளங்களிலும் சில கருத்துக்கள்
இருக்கலாம்.மற்றவருக்கு இது இப்படி இருந்திருக்கலாம் இது
இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணம் வரலாம்.ஆனால்
என் எழுத்தில் வருவது என் எண்ணங்கள்தானே.

இதுவும் நான் எழுதுவதா இல்லை என்னுள் இருந்து ஏதாவது
குறளி எழுத வைக்கிறதா தெரிய வில்லை. ஆனால் ஒன்று ,
எனக்கு எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது.அதைப் புரிந்து
படிப்பதற்கு வாசகர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையும்
இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------

சனி, 31 டிசம்பர், 2011

எண்ணச் சிதறல்கள்

                                          எண்ணச் சிதறல்கள்.
                                          -----------------------------
         ( இது 2011-ம் ஆண்டின் கடைசிப் பதிவு. ஒரு
           மாறுதலுக்காக சற்றே வித்தியாசமாக )    


            அண்மையில் ஒரு பதிவு படித்தேன். அதில் அத்வைதம்,
துவைதம், விசிஷ்டாத்வைதம் போன்ற விஷயங்களை எடுத்து
அலசியிருந்தார். அந்தப் பதிவர். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மா
வுக்குமுள்ள சமன்பாடுகள் குறித்த அலசல். அதைப் பற்றி நான்
எதுவும் எழுதப் பொவதில்லை. அடிக்கடி எழும் இந்த ஜீவன்
ஆத்மாபோன்றவற்றின் பொருள் விளங்காமலேயெ அல்லது,
விளங்கிக் கொள்ளும் புத்தி இல்லாமலேயே காலம் கழிந்து
விடுகிறது. இன்று நேற்று எழுந்த கேள்விகள் அல்ல இவை.
இருந்தும் அனைவரும் புரிந்து கொள்ளும் ,அல்லது ஒப்புக்
கொள்ளும் விளக்கங்கள் இருக்கிறதா.? இல்லை என்று சொல்
வதைவிடத் தெரியவில்லை என்று சொல்வதே சரியாகும். தினம்
இறந்து ,தினம் பிழைக்கும் நாம் இருக்கிறோம் என்று சொல்வதே
உயிர் என்று ஒன்று இருப்பதால்தானே. அதுதான் என்ன.?எளிதாக
சொன்னால் காற்று எனலாமா.? அதுவும் தவறாக இருக்கும்.
பிராணவாயு ( ஆக்சிஜன் ) என்பது கூடுதல் சரியாக இருக்கும்.
மூச்சுக் காற்று உடலுக்குள்ளேயும் உடலை விட்டு வெளியும்
சென்று கொண்டிருந்தால் உயிருடன் இருக்கிறோம் என்று
புரிகிறது.ஐம்புலன்களின் செயல் இழந்து விட்டாலும் மூச்சுக்
காற்று வந்து போய்க் கொண்டிருந்தால் உயிருடன் இருக்கிறோம்
என்று உணர்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தில் வாயு மண்டலத்தில்
இருக்கும் அநேக வாயுக்களில் பிராணவாயு மட்டுமே உயிருக்கு
உத்தரவாதம் அளிக்கிறது. இந்தப் பிராண வாயுவை மின்சாரத்
துக்குஒப்பானதாக எடுத்துக் கொள்ளலாம். வாஷிங் மெஷின்,
ஃப்ரிட்ஜ்,ஹீட்டர், லேத், பல்ப், போன்றவை மின்சாரம் என்ற
சக்தி செலுத்தப் பட்டால் வேலை செய்கிறது. அதேபோல இந்த
உடல் என்னும் மெஷினும் பிராணவாயு செலுத்தப் பட்டால்தான்
இயங்கும்.கேள்வி அதுவல்ல. உயிர்தான் ஆத்மாவா.? உயிர் உள்ள
உடலில் வந்து போகும் பிராணவாயுதான் ஜீவாத்மாவா.?பிரபஞ்சத்
தில் ஊடுருவி இருக்கும் வாயுமண்டலத்திலுள்ள பிராணவாயு
தான் பரமாத்மவா?ஜீவாத்மாவால் இயங்குவது இந்த உடல் என்பது
போல பரமாத்மாவால் இயங்குவதுதான் இந்த பிரபஞ்சமா.? இப்படி
எண்ணிக் கொண்டால் இந்த ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும்
உள்ளசமன்பாடு, ஒரு FINITE NUMBER-ஆ எது.எப்படியாயினும்
இரண்டையும் இயக்குவது என்ன, யார்.?மீண்டும் BACK TO SQUARE
ONE.  இதைத்தானே நான் ஒருமுறை எழுதியிருந்தேன்.,
அறியாமை இருளிலிருப்பதே சுகம் என்று.

       முடிவு காணமுடியாத,அல்லது முடிவு காணத் தெரியாத
எண்ணங்களை விட்டு விடு மனமே.அதெப்படி விட முடியும்.?
அநாதி காலந்தொட்டு கற்பிக்கப் பட்டும், நம்பப் பட்டும் வருகிற
விஷயங்கள் எல்லாம் மனதுக்கு ஒப்புவதில்லையே.கேள்வி
கேட்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதவர் மத்தியில்
சந்தேகமே வரக் கூடாது.!
                             **********************************

      இந்த அவதாரக் கதைகளை எடுத்துக் கொள்வோம். அவதாரங்
களைக் கதைகள் என்று சொல்லுவது ஆட்சேபிக்கப்படலாம்.
என்ன செய்ய. ..கதைகளையும் கற்பனைகளையும் உண்மை
என்று நம்ப இந்தப் பாழாய்ப் போன புத்தி மறுக்கிறதே. இந்தக்
கதைகள் கற்பனைகள் என்று ஒரேயடியாய் ஒதுக்கி விட்டு அதில்
கூறப்பட்டிருக்கும் கருத்துக்களையும் போதனைகளயும் தள்ளி
விடுவதும் சரியல்ல. மனம் ஒப்புவதை ஏற்போம்.இல்லாததை
ரசித்து விட்டு விடுவோம். நம்புபவர்கள் மனம் புண் படுதத
வேண்டாமே.

      “பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
        தர்ம ஸம்ஸ்தாபனார்த்தய ஸம்பவாமி யுகே யுகே “

என்று பகவான் கீதையில் கூறியிருக்கிறார். உலகில் எப்போது
எப்போது அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போது அப்போது
அவதாரம் எடுத்து தர்மத்தை நிலை நாட்டுவேன் என்கிறார். இது
கிருஷ்ணாவதாரத்தில் தெரியப் படுத்தியது. இதை
அடிப்படையாய் வைத்து மற்ற அவதாரங்களை அலசினால்
அவற்றை ஏற்பது எனக்குக் கஷ்டமாயிருக்கிறது. நான்முகனின்
ஆணவத்தை அடக்க மச்சாவதரம்;ஆணவத்தால் வலிமை
இழ்ந்த தேவேந்திரனுக்கு செல்வம் சிறப்புடன் கூடிய வலிமை
பெற்றுத்தர ,அமுதமெடுக்க, திருப்பாற்கடலைக் கடைய மந்தார
மலை நிலை பிறழாமல் இருக்க எடுத்த ஆமை அவதாரம்;
வைகுண்டக் காவலர்கள் ஜயன், விஜயன் ஆகியோர்,ஆணவம்
கொண்டு சனகாதி முனிவர்களால் சபிக்கப்பட அவர்களை
மீண்டும் ஆட்கொள்ள எடுக்கப்பட்ட அவதாரங்களே பன்றி
மற்றும் நரசிம்மாவதாரம்.;கோயில் விளக்கு அணையாமல்
இருக்கத் திரி தூண்டிக் கொண்டிருந்த எலிக்கு மூவுலகும் ஆள
சிவனார் கொடுத்த வரத்தின் பயனாய் பலிச்சக்கரவர்த்தியாகப்
பிறந்து மூவுலகை ஆண்டவனின் கர்வம் அடக்க எடுத்த வாமன
அவதாரம்;தந்தை சொல் கேட்டுத் தாயை வெட்டிதந்தையின்
காமதேனு பசுவுக்காக அவரைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க
இருபத்தொரு தலைமுறை அரசர்களை அழித்த பரசுராம அவ
தாரம்;மனைவியைக் கவர்ந்து சென்ற ராவணனைக் கொன்ற
ராமாவதாரம்;உழவுத் தொழிலின் மேன்மையை உணர்த்தக்
கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலராம அவதாரம்;பூமியின்
பாரத்தைக் குறைக்கவும் ( எப்படி.? கௌரவ பாண்டவர் போரில்
கணக்கற்றவர்களின் இறப்பாலா.?) சிலபல அரக்கர்களைக்
கொல்லவும் எடுத்த கிருஷ்ணாவதாரம் போன்றவற்றில் எல்லாம்
கடவுளை எங்கே காணமுடிகிறது.?கதைகளில் சொல்லப்பட்டுள்ள
சிலபல கருத்துக்கள் மனசுக்கு இதம் தரலாம். உதாரணத்துக்கு
சிறுவன் பிரகலாதனின் நம்பிக்கையை வலியுறுத்தும் நரசிம்மாவ
தாரக் கதை, தந்தை சொல் தட்டாத ராமன், நண்பனுக்கு உதவும்
ராமன், அநிதியை எதிர்க்கும் ராமன், என்று நல்ல குணங்களை
உணர்த்திச் செல்லும் ராமாயணக் கதை, பிறக்கும்போதே தான்
கடவுளின் அவதாரம் என்றுணர்ந்துஅதற்கேற்பச் செயல் புரியும்
கிருஷ்ணாவதாரக் கதை இவற்றிலிருந்து, வாழ்க்கைக்குப் பலன்
தரும் பல கருத்துக்கள் கொள்ளப்பட வேண்டியவையே தவிர
இவர்கள் எல்லோரும் அதர்மத்தை அடக்க வந்த கடவுளின் அவ
தாரங்கள் என்பது எனக்கு ஏற்றுக் கொள்வது இயலாததாய்
இருக்கிறது. அனைத்து கதைகளிலும் ஆங்காங்கே தெளிக்கப்
பட்டிருக்கும் நல்ல விஷயங்களை முடிந்த வரை பின்பற்ற
முயலுவோம். கதைகளைக் கதைகளாகவே உணர வேண்டும்.
நம்பிக்கை விளைவிக்கும் ,வாழ்வுக்கு ஆதாரமாயிருக்கும்
கருத்துக்களை உள் வாங்குவோம். மற்றவற்றைப் பதராக உதறு
வோம். எனக்குத் தெரியும், அறிந்தோ அறியாமலோ கேள்வி
கேட்காமல் பழக்கப் படுத்திவிட்ட உணர்வுகளை ஆராயத்தொடங்
கினால் எதிர்ப்புகள் பலமாய் இருக்கும் நான் என் எண்ணங்களைக்
கூறுகிறேன். இதை இன்னொரு கோணத்தில் அணுகுகிறேன்
அவ்வளவுதான்.வேறொன்றுமில்லை.
                                             *********************

       எதை எழுதும் போதும் தன்னிலைப் படுத்தாமல் பொதுவாக
எழுத முடிவதில்லை. எண்ணங்களைக் கடத்தவே எழுதுகிறோம்.
எழுதப்படும் எண்ணங்கள் பலரிடம் சென்றடைந்தால் மகிழ்ச்சியே.
பலரிடம் சென்றடைகிறதா, அதன் தாக்கம் என்ன என்று அறிய
வரும் பின்னூட்டங்களை அளவு கோலாகக் கொள்ளலாமா. ?அது
சரியென்று தோன்றவில்லை. பதிவர்களில் பலர், ஒருவருக்கு
நாம் பின்னூட்டம் எழுதினால் அவர்கள் நம் பதிவுக்கு வருகிறார்
கள். பின்னூட்டங்களின் எண்ணிக்கையில் பலவிதமுண்டு. ஒரு
பதிவுக்கு ஒருவரே ஏழெட்டு பின்னூட்ட மிடுவதை காண்கிறேன்.
சில சமயங்களில் பின்னூட்டங்கள் பதிவைவிட நீளமாகிப் போய்
விடுகிறது. அநேகமாக எல்லோரும் பாராட்டியே எழுதுகிறார்கள்
மீறிப் போய் யாராவது விமரிசனமாக எழுதினால் அது விரும்பப்
படுவதில்லை. விமரிசனம் எனும் போது எழுத்துத்தான் விமரி
சிக்கப்பட வேண்டுமே தவிர எழுதுபவரல்ல. ஒரு சிலர் சளி பிடிக்
கும் அளவுக்குப் பாராட்டில் குளிப்பாட்டுகிறார்கள் அந்தக் காலப்
பரிசில் வேண்டும் புலவர்கள் நினைவு வருகிறது. ஒரு சிலர்
பதிவிடும்போது என்ன சொல்ல வருகிறார் என்று புரிவதில்லை.
சில ABSTRACT எண்ணங்கள் சென்றடைவதில் சிரமமிருக்கிறது.
புரிந்தால் என்ன, புரியாவிட்டால்தான் என்ன.. இருக்கவே இருக்
கிறது டெம்ப்ளேட் காமெண்ட்ஸ். என்னை பொறுத்தவரை நான்
எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடாக இருக்க வேண்டும்
என்று எண்ணுவதில்லை. சிந்தனையைக் கிளறினாலேயே நான்
எழுதுவதன் பலனை அடைந்ததாக எண்ணுகிறேன். யாருடையப்
பதிவையும் யாரும் கட்டாயப் படுத்திப் படிக்க வைக்க முடியாது.
எழுத்துக்கள் வாசகரை ஈர்த்து வர வேண்டும்.என்னுடைய மெயில்
பெட்டியில் வந்து சேரும் பதிவுகள் பற்றிய தகவல்கள்
எண்ணிக்கை என்னைத் திக்கு முக்காடச் செய்கிறது. எழுத்தால்
ஈர்க்கப்பட்டு நான் படிக்க விரும்பினால் அவர் பதிவின் தொடர்
பாள்னாகிறேன். அவர் எழுதும் பதிவுகள் உடனுக்குடன் தெரியும்.
சில நேரங்களில் சிலரது பதிவுக்கு நான் இடும் பின்னூட்டம்
எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறது என்று தெரிய மீண்டும் அவர்கள்
வலைக்குச் செல்வேன். மற்ற பதிவர்களும் அப்படித்தான் என்று
எண்ணுகிறேன். சில காமெண்டுகளுக்கு எவ்வாறு REACT  செய்வது
என்று தெரிவதில்லை. முன்பே ஒரு முறை எழுதி இருக்கிறேன்.
பதிவுகளில் நான் ஒரு I ALSO RUN  என்னும் ரகம்தான் என்று
          -----------------------------------------------------------

நிச்சயமாக இப்படித்தான் நடக்கும் என்று ஏதும் கூற முடியாத
இரண்டு விஷயங்களுக்குப் போராட்டங்கள் நடக்கின்றன.
ஒன்று--கூடங்குளம் அணு உலை. இரண்டு--முல்லைப் பெரியாறு
அணை.அணு உலையினால் அசம்பாவிதங்கள் நடக்கலாம்.
அதனால் அழிவை எதிர்நோக்கும் நிலை இருக்கிறது என்றும்
அதனால் அது செயல்படுத்தப்படக் கூடாது என்றும் கருத்துக்கள்
வெளியாகின்றன. அதேபோல முல்லைப் பெரியாறு அணை
வலுவிழந்து வருகிறது என்றும், நில அதிர்வுகளால் அணை
உடைய வாய்ப்பு உள்ளது என்றும் ,அதனால் அதில் நீர் சேமிக்
காமல் புது அணை கட்ட வேண்டும் என்றும் போராட்டங்கள்
நடக்கின்றன. இந்த இரண்டு கருத்துக்களுக்குமே பயமே அடிப்
படை. இது இப்படி இருக்கும்போது பயத்தால் அணு உலையை
எதிர்த்துப் போராடுபவர்கள், ஏன் அணையால் ஏற்படும் பயத்தை
யும் உணர்வுகளையும் எதிர்கொள்ளத் தயங்கு கிறார்கள் என்று
புரிவதில்லை.
-----------------------------------------------------------------------

                   மாறுதலுக்கு இப்படியும் ஒரு சிறுகதை
                       ------------------------------------------------
தினமும் நான் செல்லும் பஸ்ஸிலேயே வருகிறான். நான்
இறங்கும் நிறுத்தத்தில் அவனும் இறங்குகிறான். என்னையே
பார்த்துக் கொண்டு வருகிறானோ.?நான் பார்த்தால் வேறு
பக்கம் பார்க்கிறான். இது இப்படியே தொடர்ந்தால் நல்லதற்கல்ல.
வீட்டில் சொல்லலாமா ? வேண்டாமா.?

நான் அவனுக்குத் தெரியாமல் கண்காணித்ததில் அவன் வேலை
செய்யுமிடம் நான் பணிபுரியும் கட்டிடத்தின் மேல் மாடியில்
இருந்தது. அவன் வீடு எங்கள் தெருவில் எங்கள் வீட்டுக்கு
மூன்றாம் வீடு.

ஒரேதெருவில் குடியிருந்தும் ,இரே கட்டிடத்தில் பணி புரிந்தும்
ஒருவரை ஒருவர் தெரியாமல் இருந்திருக்கிறோம். !!!1!!1
---------------------------------------------------------------------------

ஒரு ஜோக் படித்தேன்.ஆங்கிலத்தில் இருந்தது. தமிழாக்கினால்
சுவை போய்விடும் .அதனால் அதனை அப்படியே தருகிறேன்.
இது ஒரு "A" ஜோக். ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.


Do you speak English.?
Yes.
Name.?
Abdul al-Rhasib.
Sex.?
Three to five times a week.
No, no, - I mean , male or female.?
Yes, male female, and sometimes camel.
Holy cow.!
Yes. cow,sheep,animals in general. 
But, is it not hostile.?
Horse style, doggy style, any style.
Oh, dear.!
NO, no , deer runs too fast. 
-----------------------------------------------------


புனித தாமஸ் கேரளாவுக்கு வந்தார். அவர் ஏசு நீரின் மேல் 
நடந்தார் என்றார்.

யாரும் நம்பவில்லை.

அவர் மேலும் சொன்னார்.”ஏசு நீரை வைன்( wine ) ஆக மாற்றினார்.”

பாதி கோட்டயம் கிருஸ்தவர்களாக மாறியது. !
---------------------------------------------------------------

( எல்லோருக்கும் என் புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்.)
                                    ================













செவ்வாய், 1 நவம்பர், 2011

பசி......

                                             பசி...
                                         ---------

       அன்றொரு நாள் சாலையில் ஒரு சிறுவன் அழுது கொண்டு
இருந்தான்.என் பேரனிடம் அவன் அழுவதன் காரணம் தெரியுமா
என்று கேட்டேன்.பசியாயிருக்கும் என்றான்.பசி என்றால் என்ன
என்று தெரியுமா என்று கேட்டேன்.வயிறு காலியாயிருக்கும்
போது சாப்பிட வேண்டும் என்று தோன்றும் உணர்வே பசி
என்றான்.

       பசியைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. நாம்
உணவு உண்ணும்போது அதை செரிக்கச் செய்ய,வாயில் உமிழ்
நீர் முதல், குடலில் செல்லும்போது சுரக்கப்படும் திரவங்கள்
வரை, உடல் உற்பத்தி செய்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில்
உண்ணும் பழக்கத்தினால்,அந்த நேரத்தில் அவற்றைச் செரிக்க
இந்த திரவங்கள் அந்த நேரத்தில் சுரக்கத் தயாராய் இருக்கும்.
உணவு உள்ளே சென்றால் சுரக்கப்படும் திரவங்களுக்குப் பணி.
உணவைச் செரிக்க வைப்பது. உணவு செல்லாவிட்டால்
சுரக்கப்படும் திரவங்கள் தனது வெளிப்பாடைக் காட்டும். குடலை
லேசாக அரிக்கும். அந்த உணர்வைப் பசி என்று கொள்ளலாமா.?
அந்த நேரத்தில் உணவு உட்கொண்டால் செரிமானம் சரியாக
நடக்கும். நேரத்துக்கு உணவு உட்கொள்ளாவிட்டால் சுரக்கப்படும்
திரவங்கள் தன் கைவரிசையைக் காட்ட ஆரம்பிக்க குடல் புண்
போன்ற வியாதிகள் வர வாய்ப்பு அதிகம்.

        ஆகவே நேரத்துக்கு உண்பது அவசியமாகிறது.பசிக்கும்
நேரத்தில் உணவு கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
பசிக்கு உணவு கிடைக்காதபோது இருப்பது பட்டினி எனப்படும்.

         சிலர் வேண்டுமென்றேஉபவாசம் என்ற பெயரில் பட்டினி
கிடப்பார்கள்.அவர்களும் ஒரு விதத்தில் கொடுத்து வைத்தோரே.
ஏனென்றால் அது அவர்களாகவே மேற்கொள்வது.அதிலும் சிலர்
உபவாசம் என்னும் பெயரில் பல காரங்களாக பல ஆகாரங்கள் 
சாப்பிடுவதும் உண்டு. ஆனால் நம் நாட்டில் பசிக்கு உணவு
கிடைக்காமல் அரைப் பட்டினி,முழுப் பட்டினி, கொலைப் பட்டினி
என்று இருப்பவர்கள் ஏராளம். இவர்களை வறுமைக் கோடு
என்ற ஒன்றை உருவகப் படுத்தி அதற்குக் கீழே இருப்பவர்கள்
மேலே இருப்பவர்கள் என்று ஏதேதோ கூறுகிறார்கள்.

        ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை
அழித்திடுவோம்”என்று பாரதி பாடினான். அன்று.அப்படிச் செய்
வதாயிருந்தால் இந்த ஜகம் என்றோ அழிக்கப்பட்டு அழிந்து
இருக்கவேண்டும். கூடவே அவனே “வாய்ச் சொல்லில் வீரரடி”
என்றுமல்லவா பாடிச் சென்றிருக்கிறான்.( புத்திசாலிதான் )

       ஆதங்கங்களில் எழும் எழுத்துக்களும் உணர்வுகளும் செயல்
படுத்த முடியாதபோது ஒரு கையாலாகாத்தனம் தோன்றுகிறது.

       நாளும் பாடுபட்டு உழைத்தும் இந்த ஒரு சாண் வயிற்றுக்கு
உணவு கொடுக்க முடியவில்லை என்றால் யாரை நோவது.?
பசித்திருப்பவன் முன் கடவுளே உணவு ரூபத்தில்தான் வர
வேண்டும். சில இடங்களில் இருப்பவனுக்கு சாப்பிடத் தடை.
இல்லாதவனுக்கு சாப்பாடு கிடைப் பதில் முடை.

       லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து பட்டினி கிடப்பதைப்
பறை சாற்றிக் கொண்டு, புகழ் தேடும் பாவி மனிதர்களுக்கு
இல்லாதவனின் கொடுமை எங்கே தெரிகிறது.?

        சில நேரங்களில் இந்தப் பூவுலகில் இருப்பது எல்லோருக்கும்
பொதுவாக இருக்கும்போது, இருப்பதை அனைவருக்கும் பங்கு
போட்டுக் கொடுக்கும் சித்தாந்தம் ஏதாவது நடைமுறைக்கு
வந்தால் நலமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

       பசியில் ஏழையின் பசி ஒருவகை.அவனுக்கு அது பழக்கப்பட்டு
வருகிறது.பணக்காரனின் பசி வேறு வகை.உடல் நலனுக்காகத்
திணிக்கப்படுவதுநடுவில் இருக்கும் மத்தியதரத்தினரின் பசிதான்
கொடுமையானது. கேட்டுப் பெறாதது; இரந்துண்ணவும் முடியாது.
ஒளவையார் பாடல் நினைவுக்கு வருகிறது. “ ஒரு நாள் உணவை
ஒழியென்றால் ஒழியாய்; இரு நாளைக்கு ஏலென்றால் ஏலாய்.
இடும்பைகூர் வயிறே ,உன்னோடு வாழ்தல் அரிது “என்ன
பிரயோசனம். வாழ்ந்துதானே ஆக வேண்டும்.சிலப்பதிகாரத்தில்
வரும் அட்சய பாத்திரம் எங்காவது கிடைக்குமா.?கிடைக்கா
விட்டால்தான் என்ன... இருப்பவன் ஒவ்வொருவனும் இல்லாத
ஒருவனுக்கு தினமும் ஒரு வேளை உணவாவது அளிக்கலாமே.
கொடுப்பதில் இன்பம் இருக்கிறது என்றும் உணர்ந்து கொள்ளலாம்

கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித்தானா
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
கொடுத்துத்தான் ரட்சித்தானா
அல்லைத்தான் சொல்லித்தான் யாரைத்தான்
நோவத்தான் ஐயோவெங்கும்
பல்லைத்தான் காட்டத்தான் பதுமற்றான்
புவியிற்தான் பண்ணினானே.
(இது பழங்காலப் புலவர் ஒருவரின் புலம்பல் )

      என்னென்னவோ நினைத்து என்னென்னவோ எழுதி விட்டேன்.
இன்னதுதான் எழுத வேண்டும் என்று ஒன்றுமில்லையே. எப்படி
இருப்பினும் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளேனே.!
---------------------------------------------------------------------------------  















சனி, 6 ஆகஸ்ட், 2011

மொழியின் அழுகை...

மொழியின் அழுகை......!
-------------------------------

கைபேசிகள்( செல் ஃபோன்கள் )புழக்கத்தில் இருப்பதும் ,
அவற்றின் உபயோகங்களும் பாதிப்புகளும் ஆராய்ந்து
அவை சாபமா வரமா என்று கேள்வி கேட்கப்பட்டு ஒரு
பதிவில் எழுதப்பட்டு இருந்தது.கணினியின் சில சேவை
களை கற்றுக்கொண்டு உபயோகிக்க முயலும்போது இந்த
கேள்வி நினைவுக்கு வந்தது. கைபேசியில் குறுஞ் செய்தி
அனுப்ப இக்கால இளைஞர்கள் உபயோகிக்கும் ஆங்கிலம்
என் போன்றோருக்கு படித்து அறிய முடியாததாய் உள்ளது.
குறுஞ் செய்தி ஏதோ அவசரத்துக்கு அனுப்பப்படுகிறது
என்பது சரியல்ல. கணினியில் சாட்டிங் போல கைபேசியில்
குறுஞ் செய்தி உபயோகப்படுத்தப் படுகிறது. நவ இந்தியப்
பிரதிநிதிகளின் கைகள் எப்போதும் குறு குறு வென்று
இருக்கும்போல் தோன்றுகிறது.

யாரோ எதையோ எழுதட்டும் ,நமக்கென்ன என்று இருந்து
விடலாம்.ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பு ஒரு மொழிக்கே
உண்டாகிறது காணும்போது திகைப்பாய் இருக்கிறது.

ஆங்கில வழிக் கல்வியிலும், கான்வெண்டிலும் படிக்கும்
சிறுவர் சிறுமிகள் ,எந்த மொழியிலும் குறைந்த பட்ச
தேர்ச்சியாவது பெறுவதில்லை. தாய் மொழியும் ,பிராந்திய
மொழியும் இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும்
போது, முன்னிலையில் பயிற்றுவிக்கப்படும் ஆங்கிலத்தில்
தேர்ச்சி பெற்று இருப்பது எதிர்பார்க்கப்படுவது. ஆனால்
நாம் இப்போது பார்ப்பது ஆங்கிலமே அல்ல. இவர்களாக
ஆங்கில எழுத்துக்களை உபயோகித்து, இவர்கள் உச்சரிப்
பிற்கு ஏற்றார்போல் ஏதேதோ எழுதுகிறார்கள். குறுஞ்
செய்தியாம்..!எதையாவது சொல்லப்போனால் தலைமுறை
இடைவெளி என்கிறார்கள்,நான் என் முந்தைய பதிவு
ஒன்றில் குறிப்பிட்டிருந்ததுபோல, உண்மை நிலையை
முதலில் அறிந்து கொண்டு பிறகு அதை நம் இஷ்டப்படி
திரிக்கலாம்.மொழியை முதலில் சரியாகக் கற்றுக்கொண்டு
பிறகு அதை மெல்லக் கொல்லுங்கள்.

" al of a sden u strt 2 lyk sm 1 dat  u wanna c dem evriday"

இது ஒரு சின்ன மாதிரிதான்.ஆங்கில மொழிக்கு அழ
முடிந்தால் கைபேசியிலும் கணினியிலும் குறுஞ் செய்தி
களாலும் மற்ற பிரயோகங்களாலும் அனுபவிக்கும்
சித்திர வதைகளினால் ரத்தக் கண்ணீரே சிந்தும்.
----------------------------------------------------------------------