காரண காரியங்கள் தெரியுமா.?
-------------------------------------------
ஒரு மாற்றத்துக்கு இப்பதிவில்
நான் சில பழக்க வழக்கங்களை முன் வைக்கிறேன். இந்தக் கேள்விகளுக்கு என்று பதில்கள்
நிச்சயம் இருக்கும். அறிந்தவர் பகிர்ந்து கொள்வதால் அதைப் பற்றிய சில
விவாதங்களுக்கு வழிவகுக்கலாம் இதில் கேட்கப் பட்டிருக்கும் கேள்விகள் நடைமுறையில்
இருக்கும் பழக்கங்களிலிருந்தும் நம்பிக்கைகளிலிருந்தும் உருவானது. இப்போது
கேள்விகளுக்கு வருவோம்
கே. 1) வாயில் நிலைப்படிகளில் உட்காரக்கூடாது.
சரியா .?
கே.2) கர்ப்பிணிப் பெண் வயிற்றில் சலனம்
அதிகமிருந்தால் பிறக்கப் போவது பெண்குழந்தையாய் இருக்கும். சரியா.?
கே.3)கிருகப் பிரவேசம் நடத்தும்போது வாயிலில்
மாவிலைத் தோரணங்கள் கட்டுகிறார்கள். ஏன்.?
கே. 4) படுத்து எழும்போது வலது
புறமாகவே திரும்பி எழ வேண்டும். சரியா. ஏன்.?
கே. 5) முங்கிக் குளித்த பின்
உடலில் எண்ணை தேய்க்கலாமா.?
கே. 6) காலணி இல்லாமல் நடப்பது
உகந்ததா.?
கே. 7) எண்ணைக் குளியல் ஏன்
எடுக்க வேண்டும். ?
கே. 8)பெற்றோரின் காலில் விழுந்து
வணங்குதல் தேவையா.?
கே. 9) விபூதி தரிப்பது ஏன்?
கே. 10) ஹிந்துக் கோவில்களில்
அர்ச்சகர் அல்லது பூசாரியின் கால்களைப் பிடிப்பது
அனுமதி இல்லை.ஏன்.?