Friday, August 10, 2012

நம்மில் சிலர்.....!


                                          நம்மில் சிலர்.......!..?.
                                         ------------------------


ஒருவன் ஒரு புதிய ரெஃப்ரிஜெரேடர் வாங்கினான். அவனுடைய பழைய ஃப்ரிட்ஜை வீட்டின் முன்னால் இருந்த காலி இடத்தில் வைத்து, “நல்ல நிலையில் உள்ளது. தேவை உள்ளவர் இனாமாக எடுத்துப் போகலாம் என்று ஒரு அட்டையில் எழுதி அருகே தொங்க விட்டிருந்தான். இரண்டு மூன்று நாட்களாகியும் அதை யாரும் எடுத்துப் போகவில்லை. அடுத்த நாள்ஃப்ரிட்ஜ் விற்பனைக்கு. நல்ல கண்டிஷன். விலை ரூ.200-/
என்று அட்டையை மாற்றி எழுதினான். அதற்கு மறுநாள் ஃப்ரிட்ஜ் திருட்டுப் போயிருந்தது.!
                             --------------------

ஒரு நாள் நண்பர்களுடன் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒருவன் “அதோ ,அந்த செத்த பறவையைப் பார் “ என்று கத்தினான். அநேகமாக அனைவரும் வானத்தை நோக்கி “ எங்கே “ என்று கேட்டனர்.!
                                                        --------------------------
       
குடி போக ஒரு வீடு வாடகைக்குத் தேடிக் கொண்டிருந்தான் நண்பன் ஒருவன். வீட்டு ப்ரோக்கரிடம் வடக்கு திசை எது ?காலையில் எழுந்திருக்கும்போது சூரியக்கதிர் முகத்தில் அடிக்காமல் இருக்க வேண்டும் “ என்றான்.சற்று நேரம் கழிந்து அவன் மனைவி “ சூரியன் வடக்கில் உதிக்கிறதா “ என்று கேட்டாள். சூரியன் கிழக்கில்தான் உதித்துக் கொண்டிருக்கிறது “என்று பதில் சொன்னான் நண்பன். இப்போதெல்லாம் நடக்கும் நிகழ்வுகளை நான் கண்டு கொள்வதில்லை “ என்று கூறினாள் நண்பனின் மனைவி.!
                           ---------------------------

இக்கட்டான நிலையில் காரில் அகப்பட்டுக் கொண்டால் இருக்கை பெல்டை அறுத்து விடுவிக்கும் கருவி ஒன்று என் சகோதரியின் காரில் உள்ளது. அவள் அதை பத்திரமாக காரில் பெட்டியில் பூட்டி வைத்திருக்கிறாள்,!
                                                                         --------------------------------------------------------
         
விமானம் இறங்கி வெளியே வரும்போது என் லக்கெஜ் கன்வேயரில் வரவில்லை. LOST LUGGAGE ஆஃபிஸுக்குச் சென்று புகார் கொடுத்தேன். அங்கிருந்த பெண்மணி ஆறுதலாக ‘சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறீர்கள். சொல்லுங்கள். நீங்கள் வரவேண்டிய விமானம் வந்துவிட்டதா?”  என்று கேட்டாளே பார்க்கலாம்.!
                                                       ---------------------

ஒரு PIZZA பார்லரில் பணியில் இருந்தபோது ஒருவர் தனியாக வந்து ஒரு PIZZA  ஆர்டர் செய்தார்.கடை சிப்பந்தி அதை நான்கு துண்டுகளாக நறுக்கவா இல்லை ஆறு துண்டுகளாக நறுக்கவா என்று கேட்டார். வந்தவர் சற்று யோசித்து நான்கு துண்டுகளாகவே நறுக்குங்கள். ஆறு துண்டுகளும் சாப்பிடும் அளவுக்கு எனக்குப் பசி இல்லைஎன்றார்.!
                                                                         --------------------------------------

இது நான்சி பெலோசி என்னும் பிரபலம் பற்றிய உண்மைக் கதை என்று சொல்லப் படுகிறது. ஒரு முறை ஒரு கூட்டத்தில் பேச ஒரு பிரபல மனநிலை மருத்துவர் வந்திருந்தார். அவரிடம் நான்சி “ சாதாரணமாய்த் தெரியும் ஒருவர் மன நிலை பாதிக்கப் பட்டவரா என்று எப்படிக் கண்டு பிடிப்பீர்கள் ?என்று கேட்டாராம். ஒரு சுலபமான கேள்வி கேட்போம். அவர் கூறும் பதிலில் அவரைப் பற்றித் தெரிந்துவிடும் “என்றார்.
“ என்ன மாதிரியான கேள்வி.?
“ காப்டன் குக் மூன்று முறை உலகை சுற்றி வலம் வந்தார். அதில் ஒரு முறை அவர் உயிர் விட்டார் எந்த முறை.?
வேறு மாதிரியான கேள்வி கேட்க மாட்டீர்களா. நான் சரித்திரத்தில் கொஞ்சம் வீக் “
என்று கூறினாராம் நான்சி பலோசி.!
                                              -------------------------------

ஒருவன் காரில் ட்ரைவ் செய்து கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ட்ராஃப்ஃபிக் கேமரா மின்னியது. அதிக வேகத்துக்காக இருக்கும் என்று எண்ணிய அவன் சற்றுக் குறைந்த வேகத்துடன் அதே இடத்தை மறுபடியும் கடந்தான். இப்போதும் கேமரா மின்னிப் படம் எடுத்தது. இன்னும் குறைந்த வேகத்தில் மூன்றாம் முறை யும் சென்றான். அப்போதும் கேமரா மின்னிப் படம் எடுத்தது. குழப்பமாகி நத்தை வேகத்தில் நான்காம் முறை அந்த இடத்தைக் கடந்தான். இப்போதும் கேமரா மின்னிப் படம் எடுத்தது. ஐந்தாம் முறை சிரித்துக் கொண்டே மெதுவாக அவன் அந்த இடத்தைக் கடந்து சென்றான். இரண்டு வாரம் கழிந்து அவனுக்கு சீட் பெல்ட் போடாமல்  ஐந்து முறை வண்டி ஓட்டியதற்காக அபராதம் கட்ட நோட்டீஸ் வந்திருந்தது.!

( எனக்கு வந்த மின் அஞ்சலில் இருந்து தமிழாக்கம் செய்தது. )              





13 comments:

  1. சுவாரஸ்யமான துணுக்குகள்...

    ReplyDelete
  2. அனைத்தும் சுவாரஸ்யமானவை!

    ReplyDelete
  3. நம்மில் சிலர்.....!"வேடிக்கைனவர்கள் !!

    ReplyDelete
  4. படிக்காத துணுக்குகள்...

    ரசித்தேன்... சிரித்தேன்... நன்றி ஐயா...

    ReplyDelete
  5. துண்க்கு தோரணம் அழகாய் இருக்கிறது.

    நல்ல நிலையில் உள்ளது. தேவை உள்ளவர் இனாமாக எடுத்துப் போகலாம் ”என்று ஒரு அட்டையில் எழுதி அருகே தொங்க விட்டிருந்தான். இரண்டு மூன்று நாட்களாகியும் அதை யாரும் எடுத்துப் போகவில்லை. அடுத்த நாள்” ஃப்ரிட்ஜ் விற்பனைக்கு. நல்ல கண்டிஷன். விலை ரூ.200-/ என்று அட்டையை மாற்றி எழுதினான். அதற்கு மறுநாள் ஃப்ரிட்ஜ் திருட்டுப் போயிருந்தது.! ...

    இலவசமாய் எடுத்து போக விரும்பவில்லை. மறு நாள்
    திருடி சென்றவர் சும்மா கிடைக்கும் எதற்கும் மதிப்பு இருக்காது என்று தெரிந்தவர் போலும். அவர் திருடி சென்றது ரூபாய் 200 மதிப்பு உள்ளது அல்லவா!

    ReplyDelete
  6. எல்லாமே அருமையான துணுக்குகள்
    நீங்கள் தலைப்பிட்டிருப்பது கூடச் சரிதான்
    கொஞ்சம் கவனக் குறைவாகப் பேசும்போது
    நாமே கூட இப்படிப் பலசமயம் பேசிவிட நேர்வதுண்டு
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சின்னச் சின்ன செய்திகள். துணுக்குகளாய் மலர்ந்துள்ளன.

    ReplyDelete
  8. பிசகி இருக்கிறதே? (ஒரு வேளை என் கணினியிலா?)

    நேன்சி பத்தி இப்படிச் சொல்லிட்டீங்களே? குக் ஆவியா சுத்தியிருக்கலாமானு அவர் ஜாடையா கேட்டிருக்காருங்க.

    ReplyDelete
  9. ஒவ்வொன்றும் ஒரு சுவையில் துணுக்குப் பகிர்வுகள் அனைத்தும் அசத்தல். நாமோ, நம்மில் சிலரோ இதைப் போன்ற சந்தர்ப்பங்களைக் கடந்தே வந்திருப்போம் என்னும் எண்ணத்தைத் தோற்றுவிப்பது உண்மை. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  10. யாம் பெற்ற இன்பம் எல்லோரும் பெற எழுதியது.கலாநேசன்,வரலாற்று சுவடுகள்,லக்ஷ்மி,இராஜராஜேஸ்வரி,திண்டுக்கல் தனபாலன், கோமதி அரசு, ரமணி, நண்டு@நொரண்டு, தமிழ்.தி. இளங்கோ, அப்பாதுரை, கீதமஞ்சரி அனைவருக்கும் நன்றி. பிசகு ஏதுமில்லை அப்பாதுரை சார்.எனக்கு வந்த அஞ்சலிலின்னும் உறுதியாகவே நான்சி பற்றி இருந்தது. நான் கொஞ்சம் டைல்யூட் செய்தேன்,

    ReplyDelete
  11. கல்கண்டு இதழ் படித்த உணர்வு.சிரிக்க,சிந்திக்க வைத்த துணுக்குகள்.

    ReplyDelete