திங்கள், 17 செப்டம்பர், 2012

முருகா...நீ அப்பாவியா.?


                                  முருகா ....நீ அப்பாவியா.?
                                  --------------------------------



ஈசானம், தத்புருஷம், வாமனம்,
அகோரம், சத்யோஜாதம், அதோமுகம்-எனும்
ஈசனின் ஆறுமுக நுதல் கண்களீன்
தீப்பொறிகளாய் வெளியான ஆறுமுகனே
எனை ஆளும் ஐயனே, உனைக் குறித்து
எனக்கொரு ஐயம் எழுகிறது.

அஞ்சு முகம் தோறும், ஆறுமுகம் காட்டி,
அஞ்சாதே என வேலுடன் அபயமளிப்பவனே,
கனி கொணர்ந்த நாரதன் ஈசனே ஞாலம் என ஓத
விரும்ப ,அது உணர்ந்த ஆனைமுகன், அம்மை
அப்பனை வலம் வந்து கனி கொண்டான்.
நீயோ மயிலேறி பூவுலகை வலம் வந்து ,
கனிகிட்டாக் கோபத்தில் மலையேறி நின்றனை.
பரமனுக்கே ப்ரணவப் பொருளுரைத்திய
தகப்பன்சாமி நீயென்ன அப்பாவியா.?

ஈசன் சக்தியல்லால் வேறெதாலும் அழிக்கமுடியாத
சூரன், ஆணவம் மிகக் கொண்டு இந்திராதி தேவர்களுடன்
ஈரேழு உலகையும் கட்டுக்குள் வைக்க, அவனை அடக்கி
தேவர்கள் விடுதலை பெற அத்தனின் சக்திகள் அத்தனையும்
பெற்று , அருள் அன்னையின் சக்தி வேலையும் பெற்று,
போரில் அண்டமும் ஆகாசமாய் ஆர்பரித்து மரமாய் நின்ற
சூரனைசக்திவேலால் இரு பிள வாக்கினை.. அழித்தவனை
சேவலாய் மயிலாய் ஆட்கொண்ட நீயென்ன அப்பாவியா.?

மாயை உபதேசம் கொண்டு ஈசனிடம் வரம் பெற்ற சூரனை
ஆட்கொண்ட சரவணா, பரிசிலாக இந்திரன் தன் மகள்
கரம் பிடித்துக் கொடுக்க, அதனை மனமுவந்து ஏற்ற நீ அப்பாவியா
இல்லை சரவணப் பொய்கையில் உன் கரம் பிடிக்கத் தவம்
செய்த அவள்தான் இவள் என்றுணர்ந்து மணந்த மணவாளா,
ஏதுமறியாப் அப்பாவியாக இருக்கும் என் நாவில் வந்தமர்ந்து
ஆட்டுவிக்கும் நீ நிச்சயமாக அப்பாவி  அல்ல. 


முருகனைப் பற்றிய என் முந்தைய பதிவுகள்.

1.) முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும்.   http://gmbat1649.blogspot.in/2011/03/blog-post_14.html

2 .) எனக்கென்ன செய்தாய் நீ                          http://gmbat1649.blogspot.in/2012/02/blog-post_03.html. 


சனி, 15 செப்டம்பர், 2012

வாழ்ந்தே தீருவேன்.... .( 2 )

                     
                                    வாழ்ந்தே தீருவேன்....( 2  )


A PLAY BY G.M. BALASUBRAMANIAM.

காட்சி- 3.
பாத்திரங்கள்.- ரங்கதுரை, ராஜு, மாலா, மோஹன்.
இடம்:- ரங்கதுரை பங்களா. 

( திரை உயரும்போது ரங்கதுரை செய்தித் தாள் படித்துக் கொண்டு இருக்கிறார். ராஜு ஒரு புத்தகம் படித்துக் கொண்டு இருக்கிறான். )

ராஜு:- அப்பா, எவ்வளவு அழகாய் எழுதி இருக்கிறார் தெரியுமா இந்த ஆசிரியர். சமுதாயம் மாறுவது தனி மனிதனின் முயற்சியாலா , அல்லது கூட்டுறவாலா என்று கேள்வி கேட்டு பதிலளிக்கிறார். படிக்கிறேன் .கேளுங்களேன். ( படிக்கிறான்.)கூட்டுறவு என்பதே தனி மனிதனின் முயற்சியின் அடிப்படையில் எழுந்ததுதானே. ஒவ்வொருவனும் சமுதாயத்தின் சீர்கேட்டை உணர்ந்து அதற்கு நிவர்த்தி தேடும்போது , தேடும் பாதையாகக் கூட்டுறவு உருவாகிறது. ஒவ்வொருவனுக்கும் உள்ள கடமைகளை தன்னைச் சார்ந்தவர்கள் அதனால் பாதிக்கப் படுகிறார்கள் என்ற உணர்வில் செய்தால் அது நன்மையாகத்தான் முடியும். ஆக இந்த உணர்வோடு செய்யப்படும் தனி மனிதனின் முயற்சியால்தான் சமுதாயம் வளர்கிறது. அல்லதுகூட்டுறவு  முயற்சி என்பது பல தனிப்பட்ட மனிதர்கள், தங்களது பல தனிப்பட்ட கருத்துக்களை ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுத்து,, அடுத்தவர்களை வாழவைப்பதோடு தாங்களும் வாழவேண்டும் என்ற கொள்கையில் எழுவதால், சீர்கேடுகள் நிறைந்த சமுதாயம் சீர்திருத்தப் பெறும். பலரது கூட்டுறவால் விளையும் பலனும் அதிகமாகும். நான் எனது என்ற அகங்கார எண்ணம் மாய்ந்து நாம் நமது என்ற பரந்த எண்ணம் விரியும். அதனால் சோம்பல் ஒழியும். கட்டுப்பாடு அதிகரிக்கும். விட்டுக் கொடுத்து வாழும் சமூகத்தில் அன்பே மலரும். போட்டி பொறாமை குறையும். எல்லோருமொரு குலம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். என்ற நிலையை ஏற்படுத்தும். உலகில் கூட்டுறவில்தான் பொதுஜன சமதர்மம் சிறப்பாக நிலை பெறும்.

ரங்க :-இது என்ன ராஜு. ! ஒரே கேள்விக்கு இரண்டு DIAGONALLY  OPPOSITE  பதில்களா.?

ராஜு:- அவசரப் படாதீங்கப்பா. இரண்டிலும் தெரிந்து எடுத்த பதிலையும் கூறுகிறார் ஆசிரியர். “தனி மனிதன் வளர்ந்தான் என்றால் சமூகம் வளர்ந்தது என்ற நிலை சரியாகத் தோன்றினாலும் எல்லோரும் ஒரே காலத்தில் ஒரே நிலைக்கு மேன்மையடைவது என்பது இயலாத காரியமாதலால் அவ்வளவு சரியெனக் கொள்ள முடியாது. ஆனால் தனிமனிதனின் கட்டுப்பட்ட வளர்ச்சி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்குமாதலால் கூட்டுறவே சிறந்தது.

ரங்க:- இவ்வளவு சிறப்பாக எழுதும் ஆசிரியர் யார் ராஜு.?

ராஜு:- அவர்தாம்ப்பா திரு. ஜி.எம்.பாலசுப்பிரமணியம் “ நினைவில் நீ “ என்ற நாவலில் எழுதி இருக்கிறார். ( மாலா வருகிறாள். )மாலா, நீ ஏன் இவ்வளவு லேட். ?

மாலா:- ( வந்து கொண்டே ) உஷ் ஷ்... ...வாங்க மோஹன்அப்பா....நான் உங்களிடம் சொல்லியிருந்தேனே என் நண்பர் என்று ... அவர்தாம்ப்பா இவர்.. Mr. Mohan… மோஹன் இவர்தான் என் தந்தை. இவர் என் அண்ணா ராஜு.

மோஹன்:- Pleased to meet you ,sir….!

ரங்க:- Please take your seat.

மாலா:- உட்கார்ந்து பேசிட்டிருங்க... நான் சாப்பாட்டிற்கு அரேஞ்ச்  செய்யறேன். ( போகிறாள். )

ரங்க:- மிஸ்டர்........ம்ம்   மோஹன் நீங்க இப்ப என்ன செய்திட்டு இருக்கீங்க.?

மோஹன்:- நான் ஒரு FREELANCE WRITER. கவிய்ஜைகளும் கதைகளும் எழுதுவேன்

ராஜு:- அதாவது நிரந்தர வருவாய் ஏதும் இல்லாத பிழைப்பு.  AND YOU WILL BE LIVING IN
  A WORLD OF IMAGINATION ALWAYS.

மோஹன்:- OH.! NO..! பிழைப்புக்காக நான் எழுதலியே. வெறும் பொழுது போக்குக்காகத்தான்....மேலும் நான் சம்பாதிச்சுத்தான் சாப்பிடணும்னு இல்லை. சொத்து இருக்கு... இருந்து சாப்பிட்டா இன்னும் இரண்டு தலைமுறைக்குத் தாங்கும்.

ரங்க:- இருந்தாலும் உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்களே.

மோஹன்:- YES…!  I AGREE WITH YOU. . . ! என் தகுதிக்கு ஏற்றபடி ஏதாவது உத்தியோகம் கிடச்சா நான் ஏத்துக்கத் தயார்.

மாலா:- ( வந்து கொண்டே ) டாடி.., நம்ம கம்பனியிலேயே மிஸ்டர். மோஹனுக்கு அவர் தகுதிக்கு ஏற்றபடி உத்தியோகம் கொடுத்தால் அவர் ஆட்சேபிக்கவா போகிறார். என்ன மோஹன்  நான் சொல்றது சரிதானே.

ராஜு: - ஆனால்...மாலா...

மாலா:- நீங்க சும்மா இருங்கண்ணா....மோஹனைப் போல ஆற்றலுள்ளவர்கள் உங்களுக்கு எங்கே கிடைப்பாங்க.?

ராஜு:- MR. MOHAN, WHAT IS YOUR QUALIFICATION ?


மோஹன்:- I AM A GRADUATE…. ARTS


ராஜு:- YOU ARE NOT AN ENGINEER.?

மோஹன்:- நோ...! ஸோ வாட்...?

ரங்க:- அது சரி... மிஸ்டர் மோஹன் உங்களுக்கு இந்த மாதிரி தொழிற்சாலைகளில் வேலை பார்த்த அனுபவம் ஏதாவது உண்டா.?


மோஹன்:- தொழிற்சாலை அனுபவம் என்ன சார் பிரமாதம். மனிதர்களைப் புரிந்துகொண்டு கவிதைகள் புனையறவன் நான். மனிதன் என்னும் பாட புத்தகத்தில் எனக்கு மிகுந்த அனுபவம் உண்டு.

ரங்க:- தென் யூ ஷுட் பீ ஐடியல் ஃபர் அவர் பர்சனல் செக்‌ஷன். உங்களை எங்கள் நிறுவனத்தின் பர்சனல் மேனேஜராகப் போடுகிறேன். நாலையிலிருந்தே வேலைக்கு வந்து விடுங்கள்.

ராஜு.:-அப்பா.... ! யூ டோல்ட் மீ.. ஐ ஆம் த பாஸ்.  !

ரங்க:- இருந்தாலும் என்ன.... நான் சொல்லி நீ மறுக்கவா போகிறாய். ?

மாலா:- தாங்க் யூ டாடி.!

மோஹன்:- தாங்க் யூ சார். அப்பொ நான் வரட்டுமா...!

மாலா:- அதுக்குள்ளாகவா... டின்னர் ஏற்பாடு செய்திருக்கேன். யாருக்காகவாம். (உள்ளே போகிறாள். )

ராஜு:- ஓ... எல்லாம் திட்டமிட்டபடிதான் நடக்கிறதா... நடக்கட்டும்.. நடக்கட்டும்.
..

                                                          ( திரை ).. 




காட்சி.._ 4.



இடம்:- ஆஃபீஸ்  அறை.

பாத்திரங்கள்.:- ரங்கதுரை, ராஜு, மோஹன், சேகர், ஆஃபீஸ் பாய், ,மற்றும் சிலர்.


ரங்க:- THIS IS YOUR MANAGER’S SEAT Mr. MOHAN. நம்ம தொழிற்சாலையில் சுமார் ஆயிரம் பேர் வேலை பாக்கிறாங்க. இன்னிக்கி நான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கேன்னா அதுக்கு இந்தப் பாட்டாளிப் பெருமக்களின் பேருழைப்புதான் காரணம். அவங்களை நாம் சகோதரர் போல பாவிச்சு நடத்தணும். அவங்களுடைய கஷ்டங்களை தொடச்சு , அவங்களை ஊக்குவிச்சு ஆதரிச்சா நாம உயருவோம். இந்தத் தொழிற்சாலை வளரும், அவங்களும் வளம் பெறுவாங்க. உற்பத்தித் துறையை ராஜு நிர்வகிக்கட்டும். தொழிற்சாலையின் மனித வளப் பிரிவை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

ராஜு:- மோஹன் தொழிலாளர்களிடம் நம் மதிப்பை உணர்த்த, அவன் அன்பை நாம் பெற, அவனை நம்முள் ஒருவனாகக் கருத வேண்டும். அவனை மனிதனாக மதிக்க வேண்டும். எந்திரமாக எண்ணக் கூடாது.

மோஹன்:- அவனும் தன்னை தொழிலாளி என்ற முறையில்தான் எண்ணவேண்டும். சுருங்கச் சொன்னால் அவனுக்கு அவனுடைய இடத்தை அவன் உணரச்செய்ய வேண்டும்.

ரங்க:-  IN A WAY , YES..!அதுவும் ஒரு விதத்தில் சரிதான். ஆனால் அந்த உணர்ச்சி ஆக்க பூர்வமான வழிக்கு அடிகோலும் வகையில் உணர்த்தப் பட வேண்டும்.

ராஜு:- THAT IS.. .. YOU MUST HAVE A POSITIVE APPROACH TO PROBLEMS. பெரும்பாலான இடங்களில் நிகழும் சங்கடங்கள். தொழிலாளர்களின் குறைகள் குறைக்கப் படாமல் இருப்பதால் ஏற்படுவது ஆகும்.

மோஹன்:- நாம் ஒன்றை மறந்து விடக் கூடாது. தொழிலாளி என்றால் கூடவே அவனுக்குப் பிரச்சனையும் இருக்கும். அவையெல்லாம் நாம் நிவர்த்தி செய்ய நினைத்தால் தொழிற்சாலையையே இழுத்து மூட வேண்டி வரும்.

ரங்க: -NO.. அப்படி நினைப்பது பெஸிமிஸ்டிக் வியூ. பரஸ்பர நம்பிக்கை இல்லாமையால் ஏற்படுவது.
ஆஃபீஸ் பையன்.:- சார் உங்களைக் காண தொழிலாளர் சிலர் வந்திருக்காங்க.

ரங்க: வரச் சொல். ( சேகரும் இன்னும் சிலரும் வருகின்றனர்.)

சேகர்:- வணக்கம் சார். !

ரங்க: - வணக்கம். என்னப்பா சேகர், என்ன சமாச்சாரம்.?

சேகர்: நாங்க பிறகு வரோம் சார். நீங்க ஏதோ முக்கிய பிரச்சனையில் இருக்கீங்க போலிருக்கு.

ரங்க:- OH.! NO..! இருப்பா சேகர். இவர்தான் நன் தொழிற்சாலையின் புதிய பெர்சனல் மேனேஜர். மிஸ்டர்.மோஹன். .. மோஹன் இவர்தான் சேகர் நம்முடைய தொழிற்சாலைத் தொழிலாளிகளின் தேர்ந்தெடுக்கப் படாமல் ஏற்றுக் கொள்ளப் பட்ட தலைவன்.

ராஜு:- வேலையில் நிபுணன்.

மோஹன்:- ஓ ..! அப்படியா....!

தொழி-!:- தேர்ந்தெடுக்கப்படாத தலைவன் என்ற முறையை மாற்றி, திரு. சேகரைத் தேர்ந்தெடுத்துத் தலைவனாக ஆக்கியிருக்கிறோம்.

தொழி.2:- ஆமாம் சார்.... தொழிலாளர் யூனியன் ஸ்தாபித்து அதற்கு சேகரைத் தலைவராக்கி உங்களிடம் அங்கீகாரம் பெறவும் வந்திருக்கிறோம்.

ராஜு:- கங்கிராஜுலேஷன்ஸ்  அண்ட் பெஸ்ட் ஆஃப் லக் சேகர்

சேகர்.:- தாங்க் யூ சார். !

மோஹன்.:- சற்று முன்புதான் பேசிக் கொண்டிருந்தோம். தொழிலாளி என்றால் சங்கம் குறை இவைகள் கூடவே வரும் என்று. இவற்றை எல்லாம் நாம் ஆதரிக்கக் கூடாது சார்.

ரங்க: என் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களைப் பற்றி எனக்குத் தெரியும் மிஸ்டர் மோஹன். பெயரில்லாமல் ஏற்கனவே இயங்கி வந்திருக்குமொரு அமைப்பை சரியான பாதையில் கட்டுக் கோப்பாக கொண்டு செல்ல விரும்புகிறார்கள். இதில் தவறு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் எந்த ஒரு விவகாரத்தையும் தனிப்பட்ட நபர்களிடம் பேசித் தீர்ப்பதை விட , ஒரு அமைப்பிடம் வைத்துக் கொள்வது இரு சாராருக்கும் நல்லதுதானே. கவலைப் படாதே சேகர். உங்கள் யூனியனுக்கு என் மனப் பூர்வமான அங்கீகாரம் ஆதரவு எல்லாம் உண்டு. போய் வாருங்கள்.

சேகர்:- ரொம்ப நன்றி சார். உங்களுக்கு எங்களிடம் இருக்கும் இந்த நம்பிக்கைக்கு, எந்தவித குந்தகமும் நேராமல் நடந்து கொள்வோம். வணக்கம் சார் . வருகிறோம். (போகிறார்கள் )

ராஜு :- அப்பாடா...! எங்கே நீங்கள் மறுத்து விடுவீர்களோன்னு பயந்து கொண்டிருந்தேன். தற்போது அவர்களுக்குக் குறைகள் என்று ஏதும் இல்லாவிட்டாலும்... யார் கண்டது ... நாளைக்கே வரலாமில்லையா... ஏதோ ஒரு இண்ட்யூஷன்  ஒரு சக்திதான் அவர்களை இயக்கி இருக்க வேண்டும்.

மோஹன்:- IT IS NOT BY INTUITION BUT BY INSTIGATION , THEY ACT.  எந்த சக்தியாலும் இயக்கப் படவில்லை. வேண்டுமென்றே யாராலோ தூண்டி விடப் பட்டிருக்கிறார்கள்.
( ராஜுவை முறைக்கிறான் )

                                                                          ( திரை ).  :-






  





























வியாழன், 13 செப்டம்பர், 2012

மந்திர வழிபாடுகள்.


                                            மந்திர வழிபாடுகள்.
                                            --------------------------


ஓம் தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
 தியோ யோனஹ் ப்ரசோதயாத்

நான் என்னுடைய பதினாறாம் வயதில் பள்ளியிறுதிப் பரீட்சை எழுதி முடித்திருந்த நேரம். அந்த வயதுக்கே உரிய எதையும் சோதித்துப் பார்க்க வேண்டும் என்னும் ஆர்வத்துடன் ஆன்மீக விஷயங்களில் கவனத்தைச் செலுத்தினேன். அப்போது நாங்கள் வெல்லிங்டன் ( நீலகிரி ) வட்டக் குடியிருப்புகளில் குடி இருந்தோம்.விவேகாநந்தர் ராமகிருஷ்ண பரமஹம்சர், நாராயண குரு ஆகியோர் எழுதி இருந்த பல புத்தகங்கள் படித்தேன்.சுவாமி சிவானந்த சரஸ்வதி எழுதி இருந்தபடி தியானம் செய்யப் பழகினேன். அந்தக் குளிர் பிரதேசத்தில் விடியற்காலையில் எழுந்து குளிர் நீரில் குளித்து ஒரு தனி அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து : “ ஓம்  ,ஓம் “ என்று உரக்க உச்சாடனம் செய்வேன். ஏனோ தெரியவில்லை. என்னுள் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சில நாட்களுக்குப் பிறகு அந்த பரிசோதனைகளை நிறுத்தி விட்டேன். இருந்தாலும் ஆழ்மனதில் நான் எதையோ கற்றுக் கொள்ள முயன்று தோற்றுவிட்டதாக ஒரு எண்ணம். மனம் ஒன்றிய ஈடுபாடில்லாமல் முயன்றதனால் இருக்கலாம்.   

அப்போது நான் வளர்ந்த சூழ்நிலையிலும் சமூக நடப்புகளிலும் கவனம் சென்றது. அன்று சிந்திக்கத் துவங்கி இது நாள்வரை பல கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொள்ள முடியவில்லை. தெரிந்த மாதிரி எண்ணவும் முடியவில்லை. அதில் ஒன்றுதான் இந்த மந்திரங்களும் வழிபாட்டு முறைகளும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் தெரிகிறது. கேள்விகள் நான் எழுப்புவது எனக்குத் தெளிவு கிடைக்கத்தானே தவிர மற்றவர்களின் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கவோ குறை கூறவோ அல்ல.

இப்பதிவின் தொடக்கத்தில் எனக்குத் தெரிந்த அளவில் காயத்ரி மந்திரத்தை எழுதி இருக்கிறேன். இதன் பொருள் மறைந்த தலைவர் திரு.சி என். அண்ணாதுரை கூறியதை எழுதி வைத்திருந்தேன். அதன்படி “ இருக்கு வேதம் பத்து மண்டிலம் , விசுவாமித்திரரால் தொகுக்கப் பட்ட மூன்றாவது மண்டிலத்தில் மிகச் சிறந்ததாகக் கருதப் படுவது காயத்திரி மந்திரம் . இதன் பொருள், ‘அன்பினாற் செய்யப்படுமெம் வேள்வி முறைகளை நடைபெறுவிக்குந் தெய்வத் தன்மையுடைய  சாவித்திரியின் விழையத்தக்க ஒளியை நாம் வழிபடுகின்றோம் என்பதாகும்

சிறந்த மந்திரம் எனக் கருதப் படும் காயத்திரியில் ஞாயிறின் வழிபாடே காணப் படுகிறது. பிற்காலத்தில் இந்த மந்திரத்தில் வரும் வார்த்தைகளுக்கான பொருள் என்னவென்று கண்டு கொண்டது. கீழே.

யோ = எவர்,   ந = நம்முடைய,    தத் = அப்படிப்பட்ட,    தியோ = புத்தியை,

ப்ரசோதயாத் = தூண்டுகிறாரோ,     தேவஸ்ய = ஒளிமிக்கவராக,  

ஸவிது = உலகைப் படைத்த,   வரேண்யம் = மிகவும் உயர்ந்ததான,

பர்கோ = சக்தியை,   தீமஹி = தியானிக்கிறோம்.

( குறையாகவோ தவறாகவோ எதாவது இருந்தால் சுட்டிக் காட்டவும். )

ஆலயங்களுக்குச் செல்கிறோம். நாம் பிரார்த்தனை செய்கிறோம் , செய்விக்கிறோம். அநேகமாக ஆலயங்களில் மந்திரங்களாக உச்சரிக்கப் படுவது , பெரும்பாலும் அந்த ஆண்டவனின் திரு நாமங்கள் தான். அதிலும் சில வரைமுறைகள் வைத்துக் கூறுகிறார்கள். அர்ச்சனைகள் செய்யும்போது செய்பவரின் பெயர் நட்சத்திரம் கோத்திரம் போன்றவை கூறப்பட்டு எல்லாநலங்களும் கோரப் பட்டு பின் ஆண்டவனின் திரு நாமங்கள் சொல்லப் படுகின்றன. ஆண்டவனின் திருநாமங்கள்தான் மந்திரங்களா. ?

இன்னொன்றும் கேள்விப்பட்டேன், மந்திரங்கள் உச்சரிக்கப் படும் போது எழும் ஒலி அதிர்வுகளே அந்த மந்திரத்துக்கு சான்னித்தியம் தருவதாகவும் உச்சரிப்பு குருவிடம் இருந்துதான் கற்பிக்கப் பட வேண்டும் எனக் கட்டுப் பாடுகள் இருப்பதாகவும் சில இடங்களில் படித்தேன். அதனால்தான் இரு பிறப்பாளராகக் கருதப் படும் முப்புரி நூல் அணிந்தவரே காயத்திரி மற்றும் மந்திரங்கள்  சொல்லலாம் எனும் விதி என்றும் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது..

ஒலி அதிர்வு ஏற்படுத்தும் மந்திரம் என நான் நினைப்பது  “ ஓம் “ எனும் ஓங்காரச் சொல்லே. நாங்கள் ஒரு முறை திருவண்ணாமலைக்குச் சென்றோம். வழிபாடு முடிந்தபிறகு மலை மேல் ரமணர் வாழ்ந்த இடம் நோக்கிச் சென்றோம். அப்போது இந்த ஒம் என்ற சொல் எழுப்பும் அதிர்வுகளை உணர்ந்தேன். ஓம் என்ற ஒலி மலை முகடு முழுவதும் அதிர்வது போல் உணர்ந்தேன்.பெயரும் உருவமில்லா பரமனுக்கு ஆயிரம் நாமங்கள் சொல்லி வழிபடும்போது ஒவ்வொரு நாமத்துக்கு முன் ஓம் என்று சேர்த்துச் சொல்வது அந்தப் பெயர்களுக்கு சான்னித்தியம் கிடைக்க வைக்கும் வழியோ என்னவோ.

இந்தவயதில் இந்த ஆராய்ச்சியெல்லாம் தேவையா எனும் எண்ணம் எழுந்தாலும் இந்தப் பாழும் அறிவு என்று நாம் நினைப்பது சும்மா இருக்க விடுவதில்லையே. எதையும் தெரிந்து கொள்ள வயது எனக்குத் தடையாக இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தெளிவு செய்ய விரும்புவோர் பின்னூட்டம் எழுதலாம். கணினி இருப்பதன் பலனை அனைவரும் துய்ப்போமே.  
                                                    -----------------------------------------------------------------       ,                                                            

                 .               









செவ்வாய், 11 செப்டம்பர், 2012

வாழ்ந்தே தீருவேன். ....


 ( பல நாட்களுக்கு முன்  நான் போட்ட நாடகங்கள்  என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அவற்றில் ஒன்றை பதிவாக  இ ட்டால் ர்ன்ன என்று தோன்றிய்து. உடனே செயல் படுத்துகிறேன். ”உன் தொடர் நாவலுக்கு கிடைத்த வரவேற்பு தெரிந்தும் இதைப் பதிவிட உனக்கு அசாத்திய துணிச்சல்தான்.” யாரோ முணுமுணுப்பது கேட்கிறது நான்  போட்ட நாடகங்கள் பதிவுச் சுட்டி இதோ. http://gmbat1649.blogspot.in/2011/06/blog-post_09.html  ) . 


                                                     
 வாழ்ந்தே தீருவேன்.
 ------------------

(  A  PLAY  BY  G.M.BALASUBRAMANIAM )

காட்சி 1

இடம்- ரங்கதுரையின் பங்களா.
பாத்திரங்கள்- ரங்கதுரை, ராஜு, மாலா.

( திரை உயரும்போது, சுவர்க் கடிகாரம் ஒன்பதடித்து ஓய்கிறது. ரங்கதுரை ஒரு மேசை அருகே உட்கார்ந்து டைரி எழுதிக் கொண்டிருக்கிறார். மணி அடித்து ஓய்ந்ததும் எழுதுவதை நிறுத்திவிட்டு சற்று நேரம் கடிகாரத்தையும் காலண்டரையும் நோக்குகிறார்.அவர் மனதில் தோன்றும் எண்ணன்ங்கள்..Time and tide waits for no man. பகல் இரவாகிறது. இரவு பகலாகிறது. காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. நேற்று இன்றாவதில்லை, இன்று நாளையாவதில்லை. மாறுபட்டுவரும் வாழ்க்கை நியதிகள் காலத்துடன் போட்டியிடுகின்றனவா.? ஹூம் ! இருபத்தைந்து ஆண்டுகள்....எல்லாம் நேற்று நடந்ததுபோல் தோன்றுகிறது. இதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்து வந்திருக்கிறது. இனியும் நல்ல படியாய் நடக்க ஆண்டவன் துணைதான் அவசியம்.டைரியை எடுத்து மேசையில் வைத்துப் பூட்டுகிறார். பிறகு உள்பக்கம் பார்த்துக் கூப்பிடுகிறார்.)
ராஜு, ...ராஜு... ..!



ராஜு:_ ( உள்ளிருந்து குரல் கொடுக்கிறான்.)இதோ வந்திட்டேம்ப்பா. !

ரங்க:- ( தனக்குத்தானே ) ராஜுவும் வளர்ந்து பொறுப்புகளை ஏற்கத் துவங்கிவிட்டான்மாலாவுக்கும் கூடிய சீக்கிரத்திலேயே ஒரு கல்யாணம் செஞ்சு வச்சிட்டா அப்புறம் நிம்மதியா இருக்கலாம்.

ராஜு:- ( வந்துகொண்டே )கூபுட்டீங்களாப்பா. ..

ரங்க:- ஆமா ராஜு. ...உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்னுதான் கூப்பிட்டேன். எனக்கும் வயசாயிடுத்து. இந்தக் கம்பனி பொறுப்பை உங்கிட்ட ஒப்படச்சிட்டு, மாலாவுக்கும் ஒரு கலியாணத்தைப் பண்ணி வச்சா நான் நிம்மதியா இருக்கலாம் பாரு.!

ராஜு:- இப்பமட்டும் நீங்க நிம்மதியா  இல்லையா அப்பா. ?

ரங்க :- அதுக்கில்லை ராஜு... காலா காலத்துல செய்ய வேண்டிய காரியங்களை செய்யறது என் கடமை இல்லையா .?

மாலா:_ ( வந்து கொண்டே ) அதையேதான் நானும் சொல்றேன்.மணி ஒன்பதடிச்சாச்சு. . காலா காலத்துல செய்ய வேண்டிய காரியங்களில் சாப்பிடறது ஒண்ணு. அந்தக் கடமையெ  மறக்கலாமா. ....!

ரங்க:- இதோ வந்துட்டேம்மா.

ராஜு:- அப்பா... JUST A MINUTE.  Modern Engineering  Works ல ஒரு டெண்டர் கால் ஃபார் பண்ணி யிருக்காங்க. நான் கொடுக்கிற  கொட்டேஷன்ஸ் எல்லாம் நீங்க ஒரு க்ளான்ஸ் பார்த்து  அப்ரூவ் பண்ணினா அவங்களுக்கு சீக்கிரமே அனுப்பிடலாம்.

ரங்க:- LOOK ராஜு! Hereafterwards you are the boss.  இந்த மாதிரி விஷயங்களிலெல்லாம் நீயே முடிவெடுக்கணும். நான் ஒதுங்கிக்கிறேன்.

மாலா:- அடாடாடா  ...பொழுது விடிஞ்சு பொழுது சாயறவரைக்கும் இதுதானா பேச்சு.. 
கொட்டேஷன்ஸ் , டெண்டர் , குடும்ப விஷயமா சொந்த விஷயமா எதுவுமே பேச முடியறதில்லை

ரங்க:- என்னம்மா... நீ  பாட்டுக்கு ஏதோ முணுமுணூக்கிற

மாலா:- இல்லையேப்பா... வந்து.....நான் ஒண்ணு கேப்பேன்.. கோவிச்சுக்காம ‘ உம்நு சொல்றீங்களா.

ரங்க:- என்னம்மா பீடிகை எல்லாம் பலமாயிருக்கு. என்ன...ம்... சொல்லும்மா...

மாலா:- அப்பா... எங்க காலேஜ் ஆண்டு விழால ஒரு நாடகம் நடத்தப் போறாங்க. என்னை ஹீரோயினா நடிக்கக் கூப்பிடறாங்கப்பா... நான் சேரலாமாப்பா..!

ரங்க:- இதுக்கெல்லாம் எங்கிட்டப் பெர்மிஷன் கேக்கணுமாம்மா. உனக்கு சேரணும்னு இருந்தா ‘ஜாம். ஜாம்நு சேர்ந்துக்கோ.

மாலா:-அப்பான்னா அப்பாதான்.  தாங்யூ டாடி. ( உள்ளே ஓடுகிறாள் ).

ராஜு:- அப்பா.! இப்படி செல்லம் கொடுத்துத்தான் மாலா கெட்டுக் குட்டிச் சுவராகறா.

ரங்க: -அவ நாடகத்துல நடிக்கிறது தப்புனு சொல்றயா ராஜு. ..

ராஜு:- நிச்சயமா... சந்தேகமில்லாம தப்புத்தான். நாடகம்னா ஆண் பெண் எல்லாம் சேர்ந்து நடிப்பாங்க.. இவ ஹீரோயின்னா  ஹீரோ யாரோ...?

ரங்க:- ஆணும் பெண்ணும் சரி சமம்னு நினக்கிற இந்தக் காலத்து ஆள் நீயா இதெல்லாம் தப்புன்னு நினைக்கிறெ.

ராஜு:- ஆணும் பெண்ணும் சமம்னு நினைக்கிறவந்தாம்பா நான். இருந்தாலும் பருவ காலத்து விகற்ப உணச்சி இல்லாம பழகற ஒரு சமுதாயமா நாம இன்னும் மாறலையே அடுத்த பெண்ணை தாயாகவோ சகோதரியாகவோ பாவிக்கும் பக்குவம் இன்னும் இந்த சமுதாயத்தில் மலரலையே. என்ன இருந்தாலும் இங்க ஒரு பெண் சாதாரண வாழ்க்கையை சாதாரண முறையில் சாதாரணமாக வாழாதவரை, இந்த சாமானுய சமுதாயம் அவளை ஒரு சாதாரணப் பெண்ணாக ஏற்றுக் கொள்வதில்லையே.

ரங்க:- அடுத்தவர்கள் எப்படி யிருந்தால் நமக்கென்ன ராஜு.! மேலும் சமுதாயங்கறது நம்மைப் போல் நாலு பேர் சேர்ந்து உருவாக்கறதுதானே. நாம் மாற ஆரம்பிச்சா இந்த சமுதாயம் தானா மாறுது.

மாலா:- ( உள்ளிருந்து ) சாப்பாடு ஆறி அவலாகிறது. உங்க டிஸ்கஷன்களையெல்லாம் சாப்பாட்டுக்குப் பிறகு வெச்சுக்கலாமே.

ரங்க:- இதோ வந்திட்டேம்மா. !

                                                                                  (திரை ) 



காட்சி- 2
------
இடம்:- பூங்கா.
--------------
பாத்திரங்கள்-  மாலா, மோஹன்.
( திரை உயரும்போது, மோஹன் மாலாவுக்காகக் காத்திருக்கிறான். .மாலா வந்ததும் ,சற்று விறைப்பாக , கோபித்த பாவனையில் நிற்கிறான்.)

மாலா:- ( நாடக பாணியில் ) அன்பர் சற்றே கோபமாக இருக்கிறார்போலும். எங்கே, அங்கே சென்று கோபத்தின் காரணத்தை அறிந்து வருவோம். அன்பே....ஆ ஆ ஆ ...கொழுந்துவிட்டு எரியும் கோபத்தின் காரணம் ....?அருகேயே செல்ல முடியவில்லையே.......!

மோஹன்:- கோபமல்ல பெண்ணே... விரகதாபம்.

மாலா:- ரொம்ப ஆபத்தாச்சே அது.

மோஹன்:- அதன் காரணகர்த்தாவே நீதானெ. அது சரி. ! இன்னிக்கு நீ ரொம்ப லேட். இனிமே இப்படி லேட்டானா உன்னைத் தேடி நான் உங்க வீட்டுக்கே வந்திடுவேன்.

மாலா: - ஐயையோ ... அப்படி எதுவும் செய்யாதீங்க. தகுந்த சமயத்தில ,தக்க தருணத்தில நானே உங்கள என் அப்பாகிட்ட அறிமுகப் படுத்தறேன்.

மோஹன்.:- ஏன் மாலா... எனக்கு இப்ப உங்க அப்பாவைப் பார்த்து பெண் கேட்கத் தகுதி இல்லைங்கிறதால தானே நீயும் என்னை அறிமுகப் படுத்தத் தயங்கறே.எனக்கு ஒரு வேலை இல்லை, நானே எனக்கு ஒரு பாரமா இருக்கும்போது, காதல் ஒரு கேடா... கல்யாணம் ஒரு தேவையா....?

மாலா:- என்ன மோஹன் என்னென்னவோ பேசறீங்க. ..

மோஹன்:- மாலா ... நன் ஒரு நல்ல பொசிஷனுக்கு வரத்தான் போறேன். நீயும் பார்க்கத்தான் போறே. என்னைப் பார்த்தா ..ஏன்.. உன் அப்பாவுக்கே எனக்கு ஒரு நல்ல வேலை கொடுக்கணும்னு தோணுமே...!

மாலா:- ஆ   ஹா..  ! எனக்கு எப்படி அந்த யோசனையே தோணாமப் போச்சு. . மோஹன் நீங்க இப்பச் சொன்னீங்களே அதே மாதிரி எங்கப்பா கம்பனியிலேயே ஒரு நல்ல வேலை வாங்கித்தர நானாச்சு. நான் சொல்ல வேண்டியதுதான். ..உடனே எங்கப்பா என் ஆசையை நிறை வேற்றுவார்.

மோஹன்:- உண்மையாகவா மாலா... ஆனால் அதுல ஒரு பிரச்சனை இருக்கு. நான் தன்மானமுள்ளவன். எந்த வேலையும் என் தகுதிக்காக கொடுப்பதாகவே இருக்க வேண்டும். உனக்காகவோ இல்லை வேறு யாருக்காகவோ வேலை கிடைப்பதானால் வேண்டாம். அதையும் உங்கப்பாகிட்ட முதலிலேயே சொல்லிடு.

மாலா:- அந்தப் பிரச்சனையை எங்கிட்ட விட்டுடுங்க. ஆமாம் மோஹன். உங்களுக்கு என் மேல் அன்பிருக்கு அல்லவா..?

மோஹன்:- என்ன கேள்வி இது. இதை சொல்லித்தான் தெரிஞ்சுக்கணுமா ...

மாலா:- சில விஷயங்கள சொல்லாமலேயே புரிஞ்சுக்க முடிஞ்சாலும் , சொல்லிக் கேட்பதிலும் ஒரு தனி இன்பம் இருக்கு தெரியுமா...?

மோஹன்:- அப்படியா... அது என்ன இன்பம்...

மாலா:- அதுதான் சொல்ல முடியாதது. உணர்ந்து கொள்ள மட்டும்தான் முடியும்.

மோஹன்: - என்ன மாலா புதிர் போடறே. அந்த உணர்ச்சி எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியக் கூடாதா?

மாலா:- ஏன் தெரியக் கூடாது..? இப்பச் சொல்லுங்க..

மோஹன்:- என்னன்னு. ..

மாலா:- என் மேல அன்பு இருக்கான்னு...

மோஹன்:- அதுதான் சொன்னேனே.... இருக்குன்னு.

மாலா:- அப்படியில்லீங்க.. இப்படி... போங்க மோஹன் எனக்கு வெக்கமா இருக்கு...

மோஹன்:- மலா...! நான் உன்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறேன் தெரியுமா....எந்தன் உயிருக்குயிர் ..நீ நாடும் அன்பு நான்... என் கண்ணின் மணி நீ ..உந்தன் கருத்தின் ஒளி நான்... நற்பண்ணின் சுவை நீ .. உன் பாவின் நயம் நான்... என் எண்ணின் பொருள் நீ  உன் எண்ணம் சொல்லாதது ஏன்.... மாலா..!

மாலா:- அடேயப்பா.... காதற்கவிதையே பாடிடுவீங்க போலிருக்கே.

மோஹன்:- காதலில் கட்டுண்டிருக்கும்போது, சாதாரணமானவனும் கவிதை மட்டுமா பாடுவான்  விண்ணையுஞ் சாடுவான்... பண்ணையும் பாடுவான். ஆரம்பிக்கட்டுமா.

மாலா:- விண்ணைச் சாடவா.... பண்ணைப் பாடவா...

மோஹன்:- பாடத்தான்...

மாலா:- ஐயையோ இப்ப வேண்டாம். எனக்குப் பயம்மா இருக்கு. இன்னொரு நாள் பாடுவீங்களாம் நானும் பொறுமையாக் காதைப் பொத்திட்டுக் கேட்பேனாம்....

மோஹன்:- காதைப் பொத்திட்டுக் கேட்பியா... YOU SILLY GIRL..!

மாலா:- DON’T FORGET.நாளைக்கு சாயங்காலம் உங்களை என் தந்தையிடம் அறிமுகப் படுத்துவென். அதற்கு முன்னே வழக்கம்போல் இங்கே சந்திப்போம். TA..TA…!

                                        ( திரை ):
                                                                                                    ( தொடரும்.)
     ,                                                            


...



















           








 

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

இதோ ஒரு அகவல் !


                                     இதோ ஒரு அகவல். !
                                     -----------------------------

          பொருள் தெரிந்து பாட என்ற தலைப்பில் அருணகிரி நாதரின் “ முத்தைத்தரு பத்தித் திருநகை எனும் பாடலை எனக்குத் தெரிந்த அளவு விளக்கிக் கூறியிருந்தேன். அதை அடுத்து பலரும் அனுதினம் ஓதும் ஔவையின் வினாயகர் அகவல் குறித்து எழுதலாம் என்றிருந்தேன். இணையத்தில் ஒரு சுற்று வலம் வந்தபோது, அது குறித்து பலரும் பல கோணங்களில் விளக்கியும் வியாக்கியானம் செய்தும் எழுதி இருப்பது கண்டேன். அதைவிட சிறப்பாகவோ, அல்லது அந்த அளவுக்காகவோ என்னால் எழுத முடியும் என்று தோன்ற வில்லை. ஆகவே அந்த எண்ணத்தை தூர ஒதுக்கிவிட்டேன். இருந்தாலும் வினாயகன் குறித்து ஏதாவது எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. அதன் விளைவே கீழ் வரும் பாடல். முதலில் படியுங்கள். பின் அடியில் இருக்கும் கேள்விக்கு பதில் தெரிகிறதா என்று பாருங்கள்.


பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்;
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்;
மண்மீதுள்ள  மக்கள் ,பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவுமென் வினையா லிடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புட னிணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானாகாசத்து  நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக,துன்பமு மிடிமையு நோவுஞ்
சாவு நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்,
இன்புற்று வாழ்க என்பேன்.!இதனை நீ
திருச்செவிக் கொண்டு திருவுள மிரங்கி
‘ அங்ஙனே யாகுக ‘ என்பாய் ஐயனே!
இந்நாள், இப்பொழு தெனக் கிவ்வரத்தினை
அருள்வாய்; ஆதிமூலமே! அநந்த
சக்தி குமாரனே! சந்திர மவுலீ!
நித்தியப் பொருளே சரணம்
சரணம் சரணம் சரண மிங்குனக்கே 

இந்தப் பாடல் எழுதியது யார் என்று தெரிகிறதா,?

(எழுது பொருள் படிக்கும்போது நானாயிருக்கலாமோ என்னும் சந்தேகம் வருகிறதா. ?)


பின்னூட்டங்கள் பார்த்து பின் பதில் தருகிறேன்.  
----------------------------------------------- .  இனி ஒரு சில ஜோக்குகள்.

பள்ளி சோதனைக்காக மாநிலக் கல்வி அதிகாரி வருகை தரும் நேரம் .ஒரு வட இந்தியப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ஆங்கிலப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.வெகு மும்முரமாகப் பாடம் நடத்திக் கொண்டிருந்தவர் அதிகாரி வருவதை கவனிக்கவில்லை. வந்த அதிகாரியும் ஆசிரியர் பாடம் எடுப்பதைக் கவனிக்கத் துவங்கினார்.
ஆசிரியர் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். “, கத்தே கே பீச்சே கத்தே, கத்தே கே பீச்சே மை, மேரே பீச்சே தேஷ்,.

கவனித்துக் கொண்டிருந்த அதிகாரிக்கு சந்தேகம் வந்து ஆசிரியரிடம் அவர் என்ன கற்பிக்கிறாரென்று கேட்டார்.. ஆசிரியர் உற்சாகமாகி கடினமான ஆங்கில வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சொல்லிக் கொடுக்கிறேன் என்றார். எந்தக் கடின வார்த்தை , எப்படி அவர் சொல்வது ஸ்பெல்லிங் ஆகும் என்று அதிகாரி வினவினார்
ஆசிரியர் விளக்கமாக கூறினார் “ ஹிந்தியில் கத்தே என்றால் ஆங்கிலத்தில் ASS ஆகும் கத்தே கே பீச்சே கத்தே என்றால்  ASSASS.,கத்தேகே பீச்சே மை என்றால் ASSASS –க்குப் பின் ,I ,மேரே பீச்சே தேஷ் என்றால் –I குப்பின்-NATION   ஆகும். . அந்தந்த வார்த்தைகளை சரியாக எழுதினால் ASSASSINATION   என்னும் ஆங்கில வார்த்தையின் ஸ்பெல்லிங் சரியாக வரும் “
( என்ன மாதிரியான உத்திகள் ஐயா.!)
             -------------------------

 கேள்வி;- ஒருவன் பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுகிறான். இன்னொருவன் முதல் மாடியிலிருந்து கீழே விழுகிறான். என்ன வித்தியாசம்.?
பதில்:-பத்தாவது மாடியில் இருந்து விழுபவன் இறக்கலாம். முதல் மாடியிலிருந்து விழுபவன் காயங்களுடன் பிழைக்கலாம்.
சரியான விடை:- பத்தாவது மாடியில் இருந்து விழுபவன் விழும்போது “ ஆஆஆஆஆ
என்று அலறி விழுந்ததும் நிறுத்துவான். முதல் மாடியில் இருந்து விழுபவன் விழுந்தபிறகு “ஆஆஆஆஆஆஎன்று அலறுவான்.
                 ---------------------------------------

            ,                                                            




” 

வியாழன், 6 செப்டம்பர், 2012

இது எப்படி இருக்கு.?


                                              இது எப்படி இருக்கு. ?
                                              ---------------------------


இரண்டு நண்பர்கள்.ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டவர்கள். எல்லா காரியங்களும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று ஏற்கனவே விதியால் தீர்மானிக்கப் பட்டு எல்லாம் அதன்படிதான் நடக்கிறது என்று நம்புபவன் ஒருவன். இல்லை விதி என்று ஏதும் கிடையாது. நம்மால் முடியாத பல செயல்களுக்கு விதியைக் குறை கூறி தப்பித்துக் கொள்ளும் மனோபாவமே விதியைத் துணைக்கழைக்கும், விதிமேல் பழி போடும் என்று நம்புபவன் ஒருவன்.

இருவரும் சாலை வழியே நடந்து சென்று கொண்டிருக்கும் போது,அவர்கள் கண் முன்னே ஒரு விபத்து நிகழ்கிறது. மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவன் சாலையை கடக்க முயன்று கொண்டிருந்த ஒருவர் மேல் இடித்து விடுகிறான். அடிபட்டவர் கீழே விழுந்து ரத்தக் காயங்களுடன் மயக்கமாகி விழுகிறார். சாலையில் சென்று கொண்டிருந்த பலரும் கூட்டம் கூடி வேடிக்கை பார்க்கத் துவங்குகிறார்கள். நம் இரு நண்பர்களில் எல்லாம் விதிப்படி நடக்கும் என்பவனும் வேடிக்கை பார்க்கத் துவங்குகிறான். ஆனால் மற்றவன் பதறிப் போய் அடிபட்டு விழுந்து கிடப்பவனுக்கு முதல் உதவி செய்து, ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவில் அவனை ஏற்றிக் கொண்டு போய் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறான். அடிபட்டு விழுந்தவன் பாக்கெட்டில் இருந்து கிடைத்த விலாசத்திலிருந்து அவனது உறவினர்களுக்கு செய்தி அனுப்பி அவர்கள் வரும் வரைக் காத்திருந்து அவனது உதவி மேலும் தேவைப் பட்டால் கூப்பிடும் படியும் கூறிவிட்டு விடை பெறுகிறான்

எல்லாம் முடிந்து வெளியே வந்ததும் அவனது நண்பனை மிகவும் கடிந்து கொண்டான். சரியான நேரத்தில் என் உதவி கிடைத்ததால் விபத்துக்குள்ளானவன் பிழைத்துக் கொண்டான். கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் நீ நடந்து கொண்டது சரியில்லை.

“ உன்னால் பிழைத்துக் கொண்டான் என்று எண்ணுகிறாயா.?

“ நிச்சயமாக. என்னால் என்று சொல்வதை விட சமயத்தில் கிடைத்த உதவியால் என்று கூறலாம்.

எல்லாம் தலைவிதிப்படிதான் நடக்கும். அவனுக்கு விபத்து நேரவேண்டும் என்பது விதி. எல்லோரும் வேடிக்கை பார்க்கும்போது நீ அவனுக்கு உதவி செய்யவேண்டும் என்பதும் விதி. அதைவிட்டு விட்டு உன்னால் தான் அவன் பிழைத்துக் கொண்டான் என்று உன்னை எண்ண வைப்பதும் விதி “

இது எப்படி இருக்கு.?உங்கள் கருத்து என்ன.?
-----------------------------------------

அடுத்து ஒரு “ A “ ஜோக்
-----------------------.

வசதி உள்ள அமெரிக்கன் ஒருவன் வார இறுதி நாட்களை அருகில் இருக்கும் தீவுக்குச் சென்று GOLF விளையாடி பொழுதை கழிப்பான். ஒரு நாள் அவனுடன் விளையாட அங்கிருந்த பூர்வ குடியினரில் சிலரை அழைத்திருந்தான். GOLF விளையாட்டில் மைதானத்தில் இருக்கும் குழிக்குள் பந்து விழும்படி அடிக்க வேண்டும். ஒரு முறை இவன் அடித்த பந்து ஒரு குழிக்குள் விழ இவனுடன் ஆடிய சிலர் “ போரே...போரே “ என்று கத்தினார்கள். இவன் அதை சட்டை செய்யாமல் தொடர்ந்து ஆடினான்.

ஆட்டம் முடிந்த அன்று மாலை அவன் அறையில்  மது, உணவு அருந்தி , ஒரு பூர்வ குடி மாதுடன் பொழுதை கழித்தான் அவனும் அவளும் இன்பமாக இருக்கும்போது அவள் திடீர் என்று “ போரே போரே : என்று கூவினாள். மதுவின் மயக்கத்தில் இருந்த அவன் சற்றே தலை தூக்கி பிறகு உறங்கிப் போனான்.

மறு நாள் GOLF  ஆட்டம் ஆடும்போது அவனுக்கு மைதானத்தில் சிலர் போரே போரே என்று கத்தியதும் இரவு அவனது அறையில் அந்த பூர்வ குடிப் பெண் போரே போரே என்று கத்தியதும் நினைவுக்கு வந்தது. அருகில் இருந்த நண்பர்களிடம்  “ போரே போரே என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டான்.அதற்கு அவர்கள் பூர்வ குடி மொழியில் “ போரே “ என்றால் தவறான குழி “ என்று அர்த்தம் என்றனர்.!.

இது எப்படி இருக்கு. ?
----------------- 

   அறிந்தவை தெரிந்தவை சில பல.

1.)      ஆங்கில மொழியில் ‘ I AM’ எனும் வாக்கியம்தான் மிகச் சிறிய முழுமையான வாக்கியம்..
2.)      THE QUICK BROWN FOX JUMPS OVER THE LAZY DOG” எனும் இந்த வாக்கியத்தில் ஆங்கிலத்தில் உள்ள எல்லா எழுத்துக்களும் இடம் பெற்றிருக்கிறது.
3.)      LETHOLOGICA “ எனும் வார்த்தை தெரிந்த வார்த்தை நினைவுக்கு வராமல் இருக்கும் நிலையைக் குறிக்கும்.
4.)      “ TYPEWRITER “ எனும் வார்த்தைதான் தட்டச்சில் ஒரெ வரிசையில் இருக்கும் எழுத்துக்களிலிருந்து உருவாக்க முடிந்த நீள வார்த்தை.
5.)      விலங்குகளில் குதிக்க முடியத ஒரே விலங்கு யானை.
6.) முதலையால் அதன் நாக்கை நீட்ட முடியாது. .அதன் உணவை சுவைத்து சாப்பிடமுடியாது (CHEW)
7.)      மனித உறுப்புகளில் எண்ணைப் பசை ஒட்டாத உறுப்பு நாக்கு.
8.)      பட்டாம்பூச்சிகள் கால்களினால் சுவைக்கின்றனவாம்
9.)      கண்களை மூடிக்கொண்டு தும்ம முடியாது.
10)      உடலில் அதிக பலமுள்ள தசை நாக்கு என்கிறார்கள்
-----------------------------------------------------